Sunday, April 19, 2009

கள்வனின் காதலி - ஒரு பார்வை

தலைப்பை பார்த்துவிட்டு நான் என்னமோ அந்த வெளங்காத படத்தை பற்றி தான் எழுதபோகிறேன் என்று தவறாக எண்ணி விட வேண்டாம், நேற்று அமரர் கல்கியின் படைப்பான கள்வனின் காதலி நூலை படித்தேன் அதை பற்றி விமர்சனமோ கருத்தோ கூறும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஞானி இல்லை, ஞான சூனியம் தான், இந்த பதிவில் கூட கண்டிப்பாக எவ்வளவோ எழுத்துப்பிழைகள் இருக்கும் அதை மன்னிப்பீர்களாக. 

நான் எப்பொழுதுமே கல்கி அவர்களின் காவியங்களுக்கு அடிமை, படிக்க ஆரம்பித்தால் வெறித்தனமாக வேறு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து படித்து முடித்த பின்பு தான் ஒரு திருப்தி ஏற்படும். அவர் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் ஆகிய படைப்புகளை படித்து சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் மிதந்துள்ளேன். இந்த மூன்று காவியங்களையும் படித்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வரும் வாரங்களில் மறுபடியும் தொடங்கப் போகிறேன். அதை நினைத்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நாள்:16-04-2009 
இடம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோவை விரைவு வண்டி C1 பெட்டி இருக்கை எண் 60. 

வழக்கமாக என் வியாபார விஷயமாக நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வியாழன் தோறும் இந்த ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு செல்வது வழக்கம், அன்றும் அதுபோல் தான் புறப்பட்டேன். ஆனால் அன்று நான் செல்ல போகும் இடம் எதுவென்று அறியாமல். சிறிது நேரம் காலைப்பனி போர்த்திய புற நகர் பகுதியின் அழகை ரசித்தவாரே அன்றைய நாளேடுகளை புரட்டிக்கொண்டு நடைமனிதன் அதாங்க walkman பாடல் கேட்டுக்கொண்டு ஒருவாரு நல்ல moodil இருந்தேன். அப்பொழுது தான் அருமை நண்பர் திரு.நட்டு என்ற நடராஜன் அவர்கள் வழங்கிய இந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. நண்பர் அவர்கள் இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், புராண கதைகள் இன்னும் தமிழ் மொழியில் என்ன பிற உண்டோ அதில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆளுமை உள்ளவராதளால் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிக்க தவறுவதில்லை அதுவும் அமரர் கல்கி அவர்கள் புத்தகம் என்றால் கேட்கவா வேண்டும்?? சரி என்று படிக்க ஆரம்பித்தேன், அவ்வளவு தான் ரயிலின் சத்தமோ சாய் சாய், இட்லிவடை போன்ற ரயிலில் வரும் அணைத்து சத்தங்களும் இல்லாமல் ஒரு புதிய உலகத்துக்கே என்னை அழைத்து சென்று விட்டார் கல்கி அவர்கள்.

கதையின் தொடக்கத்தில் அந்த சிறிய கிராமத்தையும் அதன் இயற்கை வளங்களையும் வர்ணிக்கும் பொழுது அவை அனைத்தையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். கல்கி அவர்களின் தனிச்சிறப்பு இது தான், அவர் நம்மை அந்த காலத்துக்கே அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடுவார். அவ்வளவு எழில் கொஞ்சும் கொள்ளிடக்கரையில் (இன்றோ மணல் கொள்ளையால் பாழ் பட்டு கிடக்கிறது) முத்தையன்  நுழையும் காட்சி அவனின் குணாதிசயத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. அவனுடைய வாழ்கையை பார்க்கும் பொழுது பணம் இல்லையேல் உனக்கு ஒன்றும் இல்லை என்பது அந்த காலத்திலும் இருந்ததை உணர முடிந்தது. அவன் கல்யாணியின் மேல் உரிமையுடன் கோபம் கொள்வதும் அவள் அழுவதும் பிறகு அவன் தங்கையை சீண்டுவதும் அவ்வளவு இயல்பாக இருந்தது. 

கதைக்குள் புகாமல் மேலோட்டமாகவே கதாபாத்திரங்களையும் கதை சொன்ன விதத்தையும் மட்டும் நாம் பார்போம், இல்லையேல் இன்னும் இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு சுவாரசியம் போய்விடும். என் மனதை கவர்ந்த இரு நபர் அபிராமியும் சப் இன்ஸ்பெக்டர் சாஸ்த்ரிகளும் தான். அந்த காலத்தில் நம் மங்கையர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அபிராமி ஒரு சிறந்த எடுத்துகாட்டு. இசை ஞானம், குழந்தைத்தனம், பாசம், பெண்களுக்கே உரித்தான அணைத்து குணங்களையும் உள்ளடக்கிய அந்த பெண்ணை பார்க்கும் பொழுது ஆஹா இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் ஏற்படுகிறது. அடுத்ததாக சாஸ்த்ரிகள், அந்த காலத்தில் காவலர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினர் என்று நாம் தெரிந்து கொள்ள இவர் ஒருவரே போதும். முதலில் முத்தையன் ஒரு தவறும் செய்யவில்லை என்று தெரிந்த போது அவனுக்காக இறக்க படுவதும் பிறகு அவன் தவறு செய்யும் பொழுது அவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று அவர் படும் பாடு, பிறகு அவன் தவிக்கும் பொழுது அவன் மேல் இறக்கம் கொள்வதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.. 

அன்பினால் ஒருவன் வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் படுவான் என்பதை ஆசிரியர் மிக ஆழமாக கூறியுள்ளார் ஒரு சில காட்சிகள் நமக்கு கண்களில் நீர் வருகிறது முத்தய்யனை பார்த்து. ஆனால் எதற்கும் அஞ்சாமல் பாசத்துக்காக அவன் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை படும் வேதனைகள் தான் எத்தனை. தங்கைக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலை கொல்லி எறும்பாக அவதியுறுகிறான்.

புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நமக்குள் என்னவோ போல் ஒரு துக்கம் சூழ்ந்து கொள்கிறது, முதலில் ஆசிரியர் மீது எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது, ஆனால் யதார்த்தம் சற்று வலிக்கத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டேன். இறுதியில் ஆசிரியர் கூறும் விஷயங்கள் அணைத்து காலத்துக்கும் பொருந்துவதாக அமைவது அவரின் சிறப்பு. நான் புத்தகத்தை முடிப்பதற்கும் திரும்பி இன்னொரு ரயிலில் சென்னை திரும்புவதற்கும் சரியாக இருந்தது, இந்த பயணம் என்றும் போல் இல்லாமல் ஒரு புது இடத்துக்கு சென்று வந்ததைபோல் உணர்தேன் என்று நான் சொன்னால் அது மிகை ஆகாது. ஏனோ அன்று முழுவதும் அந்த யதார்த்தம் என்னை குத்திக் கொண்டே இருந்தது. 

சரி நண்பர்களே எனது இந்த அனுபவம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த முறை சந்திப்போம். நன்றி வணக்கம்.

6 comments:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//தலைப்பை பார்த்துவிட்டு நான் என்னமோ அந்த வெளங்காத படத்தை பற்றி தான் எழுதபோகிறேன் என்று தவறாக எண்ணி விட வேண்டாம், //

அட போங்க.. டைட்டில பாத்துட்டுதான் நான் வந்தேன் இப்படி ஏமாத்திபுட்டீங்க... :-)

’தியாக பூமி”யை சுற்றி திரிந்திருக்கிறேன் நானும். புதன் கிழமை வனொலியில் 8-8.30 வரை வரும். அது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பென்று நினைக்கிறேன்.

On7June said...

Never read Tamil novels, but heard a lot about this great writer "Kalki". I think i should give a try on his works. By the way a great review from the reader (Is this post from Shankar Narayanan?). Keep up the good work and continue your postings.

சித்து said...

கண்டிப்பா நீ படிக்கணும் நண்பா, இதை எழுதியது நான் தான். தொடர்ந்து உன்னுடைய ஊக்குவிப்பு இருந்தால் நிறைய எழுத ஆசை தான் எனக்கும்.

சித்து said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி நவநீதன். தொடர்ந்து வருக.

Sri said...

nice one chithu

Unknown said...

SIVA
very gooddddddddddddddddd....................................