Monday, October 31, 2011

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???





அட சுறாக்கு அப்புறம் தள படத்தை பார்க்க கூடாது அப்படின்னு உறுதியா இருந்தேன்...ஆனா இன்னைக்கு ரெம்பா வெட்டியா இருந்தேன் அதனால நம்ம ஆஸ்தான தியேட்டர் பைலட்க்கு போய் வேலாயுதம் படத்தை பார்த்துட்டேன்....

ஏழாம் அறிவு படத்தை நான் மொக்கைனு சொன்னதுக்கு சில பல பேரு ஏதோ
எனக்கு படம் புரியல அவங்களுக்கு எல்லாம் நல்லா விளங்கடிச்சு அப்படின்னு
நினைச்சுட்டாங்க....அட ஏழாம் அறிவுல புரிய என்ன இருக்கு...அந்த ரெண்டு
நிமிஷ ட்ரைலர் பார்த்தாலே படத்தோட மொத்த கதை, திரைக்கதை, எடிட்டிங்
எல்லாமே புரியுமே...இது தெரியாம அவங்க மொக்கைனு சொல்றவங்களை
வெளுத்து வாங்குறாங்க.... இதுல வேற யுடியுப் ல வேற வந்து அந்த படத்துக்கு
வக்காலத்து வாங்குறாங்க....நான் இப்போ வரைக்கும் ஆயிரத்தில் ஒருவன்
படத்துக்கு சொம்பு தூக்குறேன்..தூக்குவேன்... ஆனா ஏழாம் அறிவு செம மொக்கை
தான்... முருகதாஸ் எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர் பார்க்குரிங்களோ அவ்ளோ
மேல மேல மேல இருக்கும்னு சொன்னாரோ அந்த அளவுக்கு படம் செம மொக்கையா போச்சு.....!!!



வேலாயுதத்துக்கு வருவோம்.... ஹ்ம்... தெலுங்கு ஆசாத் படத்தை ஜெமினி டி.வியில சில காட்சிகள் பார்த்ததா நினைவு... சவுந்தர்யா, ஷில்பா ஷெட்டினு படம் களை கட்டும்.தமிழ்ல விஜய் கரெக்ட் சாய்ஸ் தான். விஜய்க்கு ஒண்ணும் அவ்வளவா பன்ச் அடிச்சு டிஞ்சர் ஆக்குற வசனம்லாம் இல்லை...அதனால் விஜய் ரசிகர் இல்லாதவங்களுக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை.


அஸ்ஸாசின் கேம் டிரஸ் போட்டது எரிச்சலா இருந்தாலும் படம் பார்க்கும் போது
ஒண்ணும் பெரிசா தெர்ல. ஆனா ஜெனீலியா கூட மாயம் செய்தாயோ பாட்டுக்கு
அவர் ஹேர் ஸ்டைல் ரசிக்க முடியல....ஹன்சிகா ஊறுகாய்...சந்தானம் காமெடி
ஓகே...

ஆஹோ ஓஹ்ஹோ னு சொல்லாம வந்த வேலாயுதம் கண்டிப்பா ஒரு டைம்பாஸ் படம். சுறா படத்துக்கு பத்து மடங்கு தேவலாம். வழக்கமா வர்ற விஜய் மசாலா படம் தான் என்றாலும் கொடுத்த அம்பது ரூபாய்க்கு கண்டிப்பா வொர்த்....

ஆனா கடைசியில் தள வோட மூஞ்சு மைதானத்தில் தெரிவது கொஞ்சம் ஓவர்
தான்... அதை பார்த்து வெளியே ஓடி வந்தவன்...திருவெல்லிக்கேணி பிரியாணி
கடையில் தான் வண்டி நிறுத்தினேன்...என்ன ஆச்சரியம் கடைசி ஹாப் பிரியாணி
மட்டும் தான் இருந்தது...டக்குனு டோக்கன் கொடுத்து வாங்கிட்டேன்...அதுக்கும்
வேலாயுதம் தான் காரணம்...இல்லனா 9.30 மணிக்கெல்லாம் பிரியாணி காலி
ஆகுமா....!!


வாழ்க வேலாயுதம்....!!

ஜெட்லி...(சரவணா...)



ஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)



இது ஒரு மீள் பதிவு ஆனால் பூனை படங்கள் புதுசு....
கிட்டதட்ட ரெண்டு வருடங்கள் ஆக போகுது இந்த பதிவு எழுதி..
உங்களுக்கும் இது போல் உதவிகள் செய்யணும்னு ஆசை
இருந்தா... தேவிதாஸ் ஐயா அவர்களை தொடர்பு கொள்ளலாம்...
cell : 9380961428


படிக்க கிளிக்கவும்

ஜாய் ஆப் பீடிங்









ஜெட்லி...(சரவணா...)

Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ரெண்டு நாள் முன்னாடி என்னோட FaceBook அப்டேட் இது....

//என்ன கொடுமை சார் இது...ஏழாம் அறிவுக்கு மொதல்ல தீபாவளி அன்னைக்கு ஸ்பெஷல் ஷோனு சொன்னாங்க...அதையும் புக் பண்ணேன்...அப்புறம் 25 தேதி ஸ்பெஷல் ஷோனு
சொன்னாங்க..அதுக்கும் நைட் ஷோ புக் பண்ணேன்....இப்ப என்னடானா ரெண்டு மணிக்கே படத்தை போடுறாங்களாம்.... அதுக்கு பேசாம நாளைக்கு படத்தை ரீலீஸ் பண்ணத்தான் என்ன???//


படம் பார்த்த அப்புறம் தான் புரியுது ஏன் படத்தை ஒரு ஒரு ஷோவா
முன்னாடியே விட்டங்கான்னு....கொய்யலா வெளியே உண்மை
தெரிஞ்சா தீபாவளி அன்னைக்கு மட்டும் தான் படம் ஓடும்னு
முன்னாடியே ரீலீஸ் பண்ணிட்டானுவோ....கதை என்னன்னா
ட்ரைலர் பார்த்தீங்க ல அதே எடிட்டிங் தான் படத்தோட முழு
திரைக்கதையும்...இப்படி ஒரு படத்தை முருகதாஸ் கிட்ட இருந்து
நினைச்சு கூட பார்க்கல...

போதி தர்மர் பத்தி இருபது நிமிஷம் சொல்றாங்க ...பல நூற்ற்றண்டுகள்
முன்னாடியே காஞ்சிபுரத்தில் இருந்து சைனா போய் அங்க மருந்து எல்லாம் கண்டுபிடிக்காரு, குங்பூ கத்து கொடுக்காரு...இதில இருந்து என்ன தெரியுது....
ஒண்ணும் தெரியலையா....சரி விடுங்க...!!அப்புறம் தீடிர்னு முத பாட்டு வருது....
இன்னொரு சூர்யா சர்கஸ்ல வேலை செய்யுறாரு...அங்க சுருதி வாராங்க...
சூர்யாக்கு பார்த்த உடனே லவ் ஆவுது...செல்போன் திருடுராறு...
ஹோட்டல்ல மொக்கை வாங்குறாருனு...முதல் பாதி படம் மொக்கையா போச்சு...

ச்சே...முருகதாஸ் எப்படி இப்படி ஒரு சுவாரசியம் இல்லாத திரைக்கதையை
பண்ணார்னு தெரியலையேப்பா....படம் எப்ப விடும் எப்ப போலாம்னு தான்
இருந்தது... ஏதோ சில சில காட்சிகள் ஓகே... அந்த சீனாக்காரன் வர்ற சீன்ஸ்
ஓகே...ஆனா சூர்யாவையும் ஸ்ருதியையும் சேஸ் பண்ணி கார்,பைக்
மூலமா கொலை பண்ண ட்ரை பண்றது ஏதோ சுட்டி டி.வி பார்த்த எபக்ட்
கொடுத்தது.....

தமிழன் தமிழன்னு சொன்னா போதுமா...அப்படியே மண்டைல நிக்குற மாதிரி
சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும்... ஆனா சில காட்சிகள் ஓகே...
சுருதி ஹாசன் தான் ஹீரோவா இல்ல அந்த சைனா க்காரன் ஹீரோவானு சில
டைம் கன்புசன் வருது... பாவம் சூர்யா ஆறு நாள் தண்ணீல ஊற போட்டுருறாங்க....

ஏழாம் அறிவு - எட்டாத அறிவு....!!

என்னடா இவன் இப்படியெல்லாம் எழுதுறானே....இவன் தமிழனே
இல்லன்னு சொன்னாலும் சொல்வாங்க ...க்கும்...கவுண்டர் ஸ்டைல
ஒண்ணும் மட்டும் சொல்ல ஆசைப்படுறேன்.... நான் தமிழ்ங்கோ நான்
தமிழ்ங்கோ பச்சை தமிழ்ங்கோ....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# ஆராதனா நைட் ஷோ போனேன்....அங்கே மட்டும் டிக்கெட் ரேட் கொஞ்சம் சீப்...எழுபது
ரூபாய்....இது மட்டும் தான் படம் பார்த்ததிலே கிடைச்ச ஒரே சந்தோசம்...

# முன் அந்தி சாரலே பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்....

# இன்டெர்வல் டைம்ல மூன்று ஆட்டோகார நண்பர்கள் பேசி கொண்டது...
டேய் போதி தர்மா?? அவரது நண்பர்...டேய் அவன் போதை தர்மர் டா..என்று
கூறியது செம டைமிங் காமெடி...

# இன்னொருவர் தன் நண்பருக்கு போன் மூலம் அப்டேட் கொடுத்தார் இப்படி....
"மாமா கஜினி அளவுக்கு கூட இல்லடா... செம மொக்கையா போது...பஸ்ட் இருபது
நிமிஷம் டிஸ்கவரி சானல் போட்டாங்க டா..அதுல போதி தர்மர் யார்னு ரெண்டு மூணு
சிலையை காமிச்சி"....என்று போனது....

# என் வரிசையிலும் முன் வரிசையிலும் கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் அஞ்சு அஞ்சாக பிரிந்து உட்கார்ந்து இருந்தனர்.... ரெண்டாவது பாதியில் வந்த ஒரு மொக்கை காட்சிக்கு முன் வரிசையில் இருந்த நண்பர் அவனின் நண்பனை திரும்பி பார்த்தார்..உடனே இவர்..."டேய் நாந்தாண்ட உன்னை பார்க்கணும்...சும்மா உட்கார்ந்து இருந்தவனை கடத்தி கூட்டு வந்துட்டு...லுக்கை பாரு..."என்றார்....

# விரைவில் எங்க பவருதர்மர் நடிக்கும் "எட்டாத அறிவு " படம் திரைக்கு
வந்து பிச்சுக்கிட்டு போகும்னு தென்சென்னை ரசிகர் மன்றம் சார்பா வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்...





# இன்று 225 நாள் காணும் எங்கள் லத்திக்கா படத்தை காண வருபவர்களுக்கு
பிரியாணி பொட்டலமும் பஞ்சும் வழங்கப்படும்...!!


ஜெட்லி...