Wednesday, April 29, 2009

சூர்யாவின் ஆதவன்

ஆதவன் கதை.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் , அப்பா, மகன் மற்றும் வாரணம் ஆயிரம் படத்துக்கு 20 கிலோ குறைத்து +2 மாணவனாக நடித்த சூர்யா இந்த படத்தில் இன்னும் 20 கிலோ குறைத்து L.K.G படிக்கும் மாணவனாக நடிக்கிறார்.



காட்சி 1:
சன் டி.வி முக்கிய செய்திகள் சுஜாதா பாபு அவர்கள் வாசித்து கொண்டு இருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே மிச்சர்(mixture) தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் சரக்கு விற்பனை சரிந்து அரசுக்கு பெரும் நஷ்டம் உண்டாகிறது. மிச்சர் போடுபவர்களை சில சமூக விரோதிகள் கடத்தி கொண்டு போய்விடுவதால் நாட்டில் முன் ஒருபோது இல்லாத அளவுக்கு மிச்சர் தட்டுபாடு ஆகியுள்ளது.

குடிமகனின் பேட்டி:" என்னங்க பண்ண சொல்றிங்க என்னதான் நெறைய சைடு டிஷ் இருந்தாலும் ஒரு கட்டிங் உட்டு மிச்சர் சாப்பிடற சுகமே தனிங்க..ஆனா இப்ப பாருங்க மிச்சர் 100 கிராம் 100 ரூபாய் விக்கிறாங்க நாங்கல்லாம் ஏழை பாழைங்க அவ்ளோ காசுக்கு எங்க போறது... இதுக்கெல்லாம் ஒருத்தன் பொறந்து வருவான்".
அப்போது ஒரு கிழவன் பொறந்துட்டான் அப்படின்னு சொல்லிட்டு போவார். அந்த கிழவனை உற்று நோக்கினால் அவர் தான் சூர்யா.


*********************************************************************************

காட்சி 2:
(இடம்: சென்னை துறைமுகம்)
சூரியன் கிழக்கு திசையில் இருந்து எழும்புகிறது அப்போது நமது நாயகன் சூர்யா கோட்டு சூட்டு போட்டு கொண்டு கழுத்தில் ஒரு சிகப்பு நிற ரிப்பனை கட்டிக்கொண்டு சூரியனில் இருந்து குதிப்பது போல் வருகிறார். அவர் தான் ஆதவன், துறைமுகத்தில் உள்ள CONTAINERil எல்லாம் ஏதோ தேடுகிறார், அதற்குள் வில்லன் ஆட்கள் ஆதவனை கண்டுகொள்கிறார்கள். உடனே ஒரு பைட், ரைட் கால CONTAINER மேல வெச்சி LEFT கையால் வில்லன் கோஸ்டியை துவம்சம் செய்கிறார் ஆதவன்.நமது .அப்புறம் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் ஏறி சும்மா சும்மா பறந்து பறந்து அடிக்கிறார்,அப்புறம் ஒரு ஆளுக்கு சூர்யாவின் பஞ்ச் மிஸ்ஸாகி CONTAINER மேல் பட்டு CONTAINER saro அடுத்து ஒரு ஒரு CONTAINER ஆக தான் தேடி வந்த பொருளை தேடுகிறார். கடைசியில் ஒரு CONTAINERil தான் தேடி வந்த பொருள் கிடைக்கிறது. அந்த CONTAINERil 1000 டன் மிச்சர் இருக்கிறது. அதை ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கு சென்று குடிமகன்களிடம் ப்ரீயாக குடுக்கிறார். கொஞ்சம் மிச்சரை எடுத்து தன்
பாக்கெட்டில் போட்டு கொள்கிறார்.உடனே ஒரு தத்துவ பாட்டு.

நாயகி நயன்தாரா துறைமுகம் பக்கத்தில் கருவாடு விற்கும் ஆயாவாக வருகிறார் ஐயோ சாரி ஆயாவின் மகளாக வருகிறார். இந்த படத்தில் நயன் SINGLE பீஸ் இல் வந்து கடலில் குளிப்பது போன்று கிளுகிளுப்பான காட்சிகள் வருகின்றன.


துறைமுகத்தில் எந்த கப்பல்ல எப்ப சரக்கு எத்துராங்கன்னு நயன் சூர்யாவிடம் சொல்வார். வடிவேலு அப்போ அப்போ வந்து "வில்லு
உடஞ்சிபோச்சே" என்று சொல்வார்(போக்கிரியில் வடை போச்சே அது மாதிரி பி .கு: " நான் விஜயை கிண்டல் பண்ணவில்லை")
***********************************************************************************
காட்சி 2:
இடம் : ஆதவனின் வீடு

நைட் வீட்டுக்கு வரும் ஆதவனிடம் அப்பா சூர்யா சோக பாட்டை படுகிறார்.......
வில்லன் படத்தில் வரும் ஆடியில் காத்து அடிச்சா சோக பாட்டு மாதிரி

காலையில சரக்கு அடிச்சா
தொட்டுக்க மிச்சர் இல்ல
கொமடிகிட்டு வாந்தி வருது அன்பு மகனே.........

உடனே தன் பாக்கெட்டில் உள்ள மிச்சரை அப்பாவிடம் கொடுக்கிறார் .

********************************************************************************

காட்சி 3:

இடம் : துறைமுகம் பக்கத்தில் உள்ள ஏரியா


தான் ஏன் மிச்சர் பொட்டலங்களை திருடுகிறேன் என்று நயந்தாரா
கேட்காமலயே ஆதவன் தன் FLASHBACKi கூறுகிறார்.

FLASHBACK:

ஆதவன் அப்போது L.K.G படித்து கொண்டு இருந்தான்(அதுவும் சூர்யாதான்) ஆதவனின் அப்பா சூர்யா வேலையை விட்டு தினம்தோறும் வீட்டுக்கு வரும்போது அரை கிலோ மிச்சர் வாங்கி கொண்டு வருவார். ஆதவன் சாப்பிட்டு வைத்த மீதி மிச்சரில் அப்பா சூர்யா சரக்குக்கு சைடு டிஷாக சாப்பிடவது வழக்கம். ஒரு நாள் அப்பா சூர்யா டாஸ்மாக் பாரில் சரக்கு அடித்து கொண்டு இருக்கும் போது வில்லன் சுமன் பக்கத்தில் கட்டிங் சாப்பிட்டு கொண்டு இருந்தார், சுமன் சூர்யாவிடம் கொஞ்சம் மிச்சர் கேட்கிறார். ஆனால் சூர்யா அது தனக்கே பத்தாது என்று சுமனை
கேவலபடுத்துகிறார். இந்த அவமானத்தை தாங்காமல் சுமன் சூர்யாவின் மிச்சர் பொட்டலத்தை வாங்கி கிழே கொட்டுகிறார். "இனிமே இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் மிச்சர் கிடைக்காத படி செய்றேன்" என்று சுமன் கர்ஜிக்கிறார். அப்போதிலிருந்து சுமன் மிச்சர் போடுபவர்களை கடத்தி
கொன்றுவிடுகிறார் அல்லது தனது கூடாரத்தில் அடைத்து மிச்சர் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தனது மிச்சர் பொட்டலத்தை கிழே கொட்டிய சுமனை பழிவாங்க வேண்டும் என்று L.K.G படிக்கும் ஆதவனுக்கு அனைத்து சண்டைகளையும் கற்று தருகிறார்.மேலும் L.K.G படிக்கும் ஆதவன் தன் அப்பா மிச்சர் இல்லாமல் சரக்கு அடிப்பதை பார்த்து மனம் வெம்புகிறார். எப்படியாவது தான் பெரியவன் ஆகியதும் தன் அப்பாவுக்கு தினமும் சரக்குக்கு சைடு டிஷ் ஆக மிச்சர் பொட்டலம் தருவேன் என்று சபதம் போடுகிறார்.


கிளைமாக்ஸ்:

இந்த தடவை CONTAINER எல்லாம் சரக்கு கப்பல்ல ஏத்தி வண்டி கிளம்பிடிச்சு..ஆதவன் இந்த தடவை கொஞ்சம் லேட் ஆக வந்துட்டார், வந்ததும் அங்கே இங்கே என்று பார்க்கிறார் உடனே பீச் மணலில் நிறுத்தி இருக்கும் கட்டுமரத்தில் ஏறுகிறார். கட்டுமரத்தால் அந்த சரக்கு கப்பலை
பின் தொடருகிறார், ஆதவன் அவசரத்தில் துடுப்பு எடுக்காம கட்டுமரத்தை கடலில் இறக்கிவிட்டார், அதனால் கட்டுமரத்தில் படுத்து தன் இரு கையை துடுப்பாய் பயன்படுத்துகிறார்.சரக்கு கப்பல் ஆதவன் கண் முன்னால் போய் கொண்டிருக்கிறது தீடிரென்று ஆதவனக்கு ஒரு யோசனை வருகிறது அதாவது நிலாவின் திசை அறிந்து கப்பலை பின் தொடர்வது என்று ஆதவன் வானத்தில் டார்ச் அடிக்கிறார் ஆனா பாருங்க ஆதவனோட கெட்ட நேரம் அன்னிக்கு அமாவாசை ஆகி போச்சு. ஒரு பத்து நிமிஷமா ஆதவன் நிலாவா தேடுகிறார் அவர் தேடுற சமயத்தில மிச்சர் ஏத்துகிட்டு போற சரக்கு கப்பல் அவர் கண்ணில் இருந்து மறைந்து வெகு தூரம் போய்விட்டது.
அப்போது அந்த வழியாக வந்த STAR CRUISER பிரமாண்ட கப்பல் போகிறது, உடனே கட்டுமரத்தில் இருக்கும் கயிறை தூக்கி CRUISER கப்பலில் உள்ள பால்கனி கம்பியில் போடுகிறார். அந்த கயிர் நன்றாக தன்னை கப்பலுடன் இணைத்து கொள்கிறது. CRUISER கப்பல் வேகம் எடுத்து கிளம்புகிறது CRUISER பின்னாடி சூர்யா SURFING செய்வது போல் கட்டுமரத்தில் செல்கிறார்,அப்போது சில டால்பின்கள் சூர்யாவை முத்தமிட்டு செல்கின்றன. இந்த SURFING காட்சியை நாம் ஆறு விதமான ஷாட் களில் காண்கிறோம். அப்புறம் சிறிது தூரத்தில் ஒரு ராட்சஸ சுறா இருப்பதை கண்டு கொள்ளும் சூர்யா, சுறாவை technical ஆக ஏமாற்றுகிறார்.ஆதாவது LEFTil திரும்புவது போல் கை காட்டி RIGHTil திரும்பி நேராக போய்விடுகிறார்.

CRUISER கப்பல் மூலமாக ஆதவன் மிச்சர் சரக்கு கப்பலை அடைந்து எதிரிகளை பந்தாடி திரும்பவும் தமிழ்நாட்டுக்கு குடிமக்களுக்கு மிச்சர்களை கிடைக்க செய்கிறார்.
சுபம்.
உங்களுக்கு பிடிச்சிதுன்ன கண்டிப்பா TAMISHil ஒட்டு போடுங்க.


Tuesday, April 28, 2009

மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.



இந்தியா டுடே மே 6 இதழில் வந்த சுவாரசியமான செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஷீராஸ் ஹாசன் எனும் நபரால் நடத்தப் படும் "Millions of Milkshake (MoM)" என்னும் கடை உள்ளது. இந்த கடை அமெரிக்கா முழுவதும் மிகப் பிரபலமானது, இங்கு எண்ணற்ற வகையில் மில்க் ஷேக் (துபாய் ஷேக் அல்ல) வகைகள் விற்கப்படுகின்றன. இதன் விசேஷம் என்னவென்றால் ஹாலிவுட் மற்றும் மிக பிரபலமானவர்களின் பெயரில் மில்க் ஷேக் விற்கப் படுகிறது. இப்படி ஒபாமா, பாரிஸ் ஹில்டன், மைலீ சைரஸ், டேவிட் பெக்கம் ஆகியவர்களின் பெயரில் விற்கப்படுகிறது.

இந்த வகையில் நம் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி, குலுக்கல் நாயகி, ஜாக்கி சாண் புகழ் மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு புதிய மில்க் ஷேக் பானத்தை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதாவது ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் பால் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி குலுக்கு குலுக்கி தருவர். இதன் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட அம்மணி ஷேக் (Shake) என்றவுடன் எதோ குலுக்கல் நிகழ்ச்சி என்று அதற்குரிய பிரத்யேக ஆடையுடன் கலந்துக் கொண்டதை கீழே பாருங்கள். அந்த கடையில் இதற்கு முன்பு நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் எந்தவொரு ஹாலிவுட் நடிகையும் இது போன்று இந்த அளவுக்கு தங்கள் அழகை வெளிப்படுத்தவில்லை (அவர்கள் இணையத்தளம் சென்று பார்த்தேன்) ஆனால் கலாசாரம் அபசாரம் என்று பேசும் நம் நாட்டில் இருந்து சென்ற இவரோ இப்படி, ஐயோ ஐயோ.







நீங்கள் தமிழனா???

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!


2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!



3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை

அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க....!


4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!



5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!



6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு.....!



7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து

எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.


8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!



9... ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் ைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]



10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!



11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!



12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!



13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ... லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி...!



14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே> மாட்டாங்க.. அடுத்த

பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க...!


15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!



16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்...!



17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ
வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]


18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க..
ஒன்னு உலக தொலைக் காட்சி வரலாற்றில் ஏதாவது மொக்கை படத்தை பாத்து அழுவீங்க இல்லைனா தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!


19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க...

மேலே கூறிய அனைத்தும் உங்களுக்கு பொருந்தினால் நீங்கள் தமிழனாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்.



20.இதற்கும் மேலாக, எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிற நல்லவரா இருந்தால் கண்டிப்பா நீங்க தமிழனே தானுங்கோ

.








Monday, April 27, 2009

பொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)

வணக்கம் நண்பர்களே கலைஞரின் பொன்னர் சங்கர் புத்தகம் படித்தேன், சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றையே கேள்விப் பட்ட நமக்கு அவர்களன்றி இன்னும் சில வீரத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு சான்றாக விளங்கியது இந்த வரலாற்றுக் காவியம்.

கலைஞர் எழுதியதில் நான் படித்த முதல் புத்தகம் இது தான், ஒரு எழுத்தாளராக அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். முதலில் நிறைய கவிதை நடையாக தான் இருக்கும் என்று எண்ணி படிக்க தயங்கினேன் (நமக்கு அதெல்லாம் புரியாதே!!!!!!!!!!!) ஆனால் அவ்வாறு இல்லாமல் அனைவரும் படிக்கும் வகையில் மிக எளிய நடையில் தந்திருக்கிறார்.

கதை முழுவதும் கொங்குச் சீமையிலே நடைபெறுகிறது, கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் வேட்டுவ குலமக்களின் வாழ்கையை மிக அழகாக பிரதிபலிக்கிறது. அவர்கள் வாழ்கை முறை, உயர்ந்த பண்பு அவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்பற்றும் மரபு கட்டிக் காத்த குல பெருமை எல்லாம் மிக சிறப்பாகவும் இயல்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கதையில் கலைஞர் என்னவோ அந்த காலத்துக்கே நம்மை அழைத்து போக முனையவில்லை, கல்கி கதைகளில் அவர் நம்மையே அங்கு கூட்டி செல்வார் ஆனால் அப்படி ஒரு உணர்வு எனக்கு இதை படிக்கும் பொழுது ஏனோ ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் பொழுது ஏதோ ஒரு திடுக்கிடும் திருப்பம் நமக்கு காத்திருக்கிறது அது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அதுவே கதையை வேகமாக படிக்க தூண்டும் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பதவி வெறி, பண வெறி, குரோதம், சூழ்ச்சி, ஆகியவற்றால் இரு குடும்பங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையால் ஏற்படும் இழப்புகள் ஏமாற்றங்கள் அழியும் சாம்ராஜியங்கள், இதை சுற்றி தான் கதை நகர்கிறது. பொன்னர் சங்கர் இருவரும் வீரத்திற்கும் தீரத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காடு.

நல்ல கதை அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி.

தமிழ்நாட்டின் ஒ(சா)பாமா J.K.ரித்தீஸ்

இந்தியாவின் ஒ(சா)பாமா எங்கள் அண்ணன் J.K.ரித்தீஸ்


வாக்குறுதி:

எங்கள் அண்ணன் வீரத்தளபதி எம்.பி ஆனால் வீட்டுக்கு ஒரு 2 wheeler மற்றும் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும்.

பொதுஜனம்: ஹ்ம்ம் இல்ல பத்தாது...வீட்டுக்கு ஒரு டிராக்டர் வேணும்.
____________________________________________________________
வாக்குறுதி:

எங்கள் அண்ணன் அள்ளித்தரும் கண்ணன் ரித்தீஸ் அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் ஒரு ஆளுக்கு 2500 வழங்கப்படும்.

பொதுஜனம்: அய்ய் அஸ்கு மதுரையுல ஒருத்தர்க்கு 5000 தராங்களாம்.

____________________________________________________________

வாக்குறுதி:

வாழும் வள்ளல் பாரியின் வழி வந்த J.K.ரித்தீஸ் அவர்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் தினமும் பிரியாணியும் சரக்கும் தரப்படும்.

பொதுஜனம்: அவ்ளோதான இது பத்தாது..இன்னும் வேணும்.
_____________________________________________________________



வாக்குறுதி:


எங்கள் அண்ணனை நீங்கள் வெற்றி பெற செய்யா விட்டால் நம் ஊரில் உள்ள கேபிள் டி.வியில் தமிழ்நாட்டின் அர்னோல்ட் ரித்தீஸ் அவர்களின் படம் தொடர்ந்து ஒளிபரப்ப படும்.

பொதுஜனம்: அய்யோஅய்யோ...நாங்கெல்லாம் அவருக்கே ஒட்டு போட்டுர்ரோம்...எங்களுக்கு ஒண்ணும் வேணாம், அவரு படத்தல மட்டும் நடிக்காம இருக்க சொல்லுங்க.!

இந்த இடுகை வெறும் கற்பனை மட்டுமே... சிரியிங்கள் முடிந்தால் சிந்தியிங்கள்
மறக்காம TAMILISHil வாக்கு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Sunday, April 26, 2009

பொடிமாஸ்..........

***************************************************************************************

எப்போதோ படித்தது:


ஒரு வீட்டில் கணவன் ரெண்டு சைக்கிள் tube உடன் உள்ளே நுழைகிறார்.

மனைவி: என்னங்க கையுல?

கணவன்: ஒரு சைக்கிள் கடையுல சைக்கிள் tube ஒண்ணு வாங்கன ஒண்ணு இலவசம்
அதான் வாங்கிட்டு வந்தேன்.

மனைவி: ஏங்க நீங்க என்ன பைத்தியிம்மா, நம்ம கிட்டதான் சைக்கிள் இல்லையே.

கணவன்: நீ கூடத்தான் நேத்து ரெண்டு பிரா வாங்கின நான் எதாவது கேட்டனா!!!!
***************************************************************************************
எப்போதோ படித்தது:

ரோட்டில் இருவர் சண்டை போட்டு கொண்டுஇருந்தனர், அவர்களுக்கு
பக்கத்தில் ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான் இதை கண்ட ஒரு வழிப்போக்கன்.

அந்த சிறுவனிடம் சென்று

வழிப்போக்கன்: ஏன்ப்பா அழுவுற?

சிறுவன்: எங்கப்பா சண்டை போட்டுட்டு இருக்காரு.....

வழிப்போக்கன்: இந்த ரெண்டு பேர்ல யாரு உங்க அப்பா?

சிறுவன்: அதுக்காகத்தான் சண்டையே நடக்குது.

***************************************************************************************
சமீபத்தில் ரசித்த பாடல் குளிர்100 degree படத்தில் Bobo Sashi அவர்கள்
இசை அமைத்த மனசெல்லாம் பாடல், இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாட்டை கேட்டால் அனைவருக்கும் தங்கள் நண்பனின் நினைவுகள் வந்து போகும்..... டைம் இருந்த கேட்டு பாருங்க .....

***************************************************************************************
கந்தசாமி ரசிகன்

டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டில்க்கு ரெண்டு அல்லது மூணு ரூபாய் அதிகமாக வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்...ஒரு கடையில் ஒரு நாள் சராசரியாக 5000 பாட்டில் விற்றால் 15,000 ரூபாய் லாபம் பார்க்கிறார்கள்... ...இதில் போலீஸ்க்கும் சரி பங்கு போய்விடும்.
இந்த மாதிரி சின்ன சின்ன ஊழலை நம்மால் நிறுத்த முடியவில்லை. 69 ரூபாய் கொடுத்தால் தான் குளிருட்டியா ஸ்ட்ராங் பீர் கிடைக்கும் இல்லையேல் ஸ்டாக் இல்லை சில் இல்லை என்பார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.


இதையெல்லாம் தட்டி கேட்க வருவாரா நம்ம கந்தசாமி.........

Friday, April 24, 2009

இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்!

வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு
போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."


ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"


கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."


ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."


ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."

விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."


வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"


தங்கபாலு : "வேணா... வலிக்குது...அழுதுருவேன்..!"


சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"


அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"


மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"


மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"


லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."


பிரணாப் முகர்ஜி : "முடியல..."


திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."


சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"


கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."


ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"


விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"


மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சனம்.

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சனம்.

கு.பூ.கொ.பு இந்த படத்துக்கு நான் முதல் நாள் முதல் காட்சி சென்று வந்து சூட்டோட சுட உங்களுக்காக இந்த விமர்சனத்தை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மகிழ்ச்சி என்னவென்று முடிவுரையில் சொல்கிறேன்.
இந்த படத்தின் நாயகனாக ராமகிருஷ்ணன் அறிமுகம் ஆகியுள்ளார், இவர் ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நம்ம ஸ்ரீகாந்தின் நண்பர்களில் ஒருவராக வருவார். கதாநாயகி பெயர் சரிவர தெரியவில்லை, அப்புறம் படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே புதுசு.
இசை நம்ம யுவன்(அதை நம்பி தானே படத்துக்கு போனேன்).



ரைட் கதைக்கு வருவோம் ஒரு கடலோர கிராமம் முட்டம் அங்கு ஒரு பஸ்ஸில் இருந்து ஒரு பெண் இறங்கி புதுசாக அந்த கிராமத்துக்கு தன் பாட்டியுடுன் குடியிருக்க வருகிறார்கள். அங்கு படிக்கும் பள்ளியில் தான் ஹீரோவும் படிக்கிறார் , அப்புறம் என்ன காதல் தான். ஆனா இவங்க காதல் செய்யும் காட்சிகளில் சில காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது, மிச்ச காட்சிகள் மொக்கை தாங்கலடா சாமி!.....ஹீரோவின் அம்மாக்கு இந்த லவ் தெரிஞ்சு கதாநாயகியை கேவலப்படுத்தி ஊரை விட்டு துரத்தி விடுகிறார் .ஆகையால் சந்தர்ப்ப வசத்தால் கதாநாயகி வேறு ஒருவனக்கு திருமணம் செய்து வைக்க படுகிறார். கதாநாயகியின் புருஷனாக வரும் தர்மன் அசல் நம்ம கஞ்ச கருப்பை நினைவு படுத்துகிறார். அவனுக்கெல்லாம் வேற ஒரு பாட்டு சுத்தமா அந்த s.p.b. வாய்ஸ் நான் தர்மண்ட பாட்டு செட் ஆகவில்லை.
அப்புறம் என்ன நடக்கும் நம்ம ஹீரோ இன்னும் கதாநாயகியை நினைத்து குடித்து, தாடி வளர்த்து, உலகத்தில் உள்ள காதலிகளை திட்டி, அப்புறம் நம்ம பழைய காதலிக்கு உதவி செய்து....... என்னால முடியலங்க படம் FULLa FEELINGSga .....ஒரே செண்டிமெண்ட் போட்டு தாக்குறாங்க.
அதுவும் படம் ஆமையை விட கொஞ்சம் SLOWva போதுங்க. காமெடி ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை. படம் முழுக்க செண்டிமெண்ட் தான். அப்புறம் கதை எந்த காலகட்டத்தில் நடக்குதுன்னு சரியாய் தெரியில ஏன்னா காட்சிகளில் F.M.ரேடியோவில் ஒரே பழைய பாட்டாக ஓடி கொண்டிரிக்கிறது, சட்டேன்று தர்மன் கேரக்டர் கமல் தசாவதாரம் படத்தின் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்கிறார். நான் இதுவரை பார்த்த மொக்கை படங்கள் வரிசையில் கு.பூ.கொ.பு. படமும் இடம் பிடித்துவிட்டது.


நான் ஏன் இந்த விமர்சனத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்பது உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கறேன்
இப்போ இருக்கற சினிமா ட்ரெண்டுக்கு எத்த மாதிரி ஒரு கிராமம், ஒரு காதல் ஜோடி, கதாநாயகனுக்கு தாடி, ஒரு கோவில் திருவிழா என்று இருந்தால் சுப்ரமணியபுரம்,கபடி குழு படங்களின் வெற்றி மாதிரி நம்ம படமும் வெற்றி அடையுணும்னு நினைச்சு கிராமத்து படம் எடுப்பவர்களுக்கு குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் நல்ல பாடமாக அமையும்...........நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்லை படம் எடுத்தவன் தப்பு.



Thursday, April 23, 2009

சாரு நிவேதிதாவின் மூடுபனி சாலை புத்தக விமர்சனம்






மூடுபனி சாலை புத்தக விமர்சனம் :
எனக்கு பொதுவாக பயண கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் எழுதிய அனுபவங்களையாவது அறிந்து அதில் இருந்து நாம் எதாவது தெரிந்துகொள்வோம் என்ற ஒரு நாப்பாசை. ஒரு அனுபவ கட்டுரை என்பது படிக்கும் தன் வாசகர்களுக்கு எதாவது ஒரு வகையில் உருப்படியாக இருக்க வேண்டும்.நான் இந்த புத்தகத்தை வாங்கியதாக நண்பன் இலக்கியமிடம் கூறினேன் அவன் அதற்க்கு "அதுல என்ன இருக்க பொது எங்கே குடிச்சேன் யாரை *******ன்னு எழுத போறார் அதான் இருக்க போதுன்னு சொன்னான்". நான் இந்த புத்தகத்தில் படித்ததில் எதோ சில விஷயங்கள் மட்டுமே உருப்படியாக இருக்கிறது.மிச்சபடி சாரு அவர்கள் எங்கு குடித்தார் யார்குட குடித்தார் போன்ற விஷயங்கள் இருக்கிறது.
சாரு அவர்கள் கட்டுரையில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே தன் குடும்ப கதையையும் கொண்டு வந்து விடுகிறார்.நான் பொதுவாக சாரு அவர்களின் புத்தகத்தை அவ்வளவாக விரும்புவது இல்லை அவரின் zero degree என்ற நாவலை தான் நான் முதல் முதல் வாங்கிய சாரு சாரின் புத்தகம். அந்த புத்தகத்தை முதல் அத்தியாயத்தை படித்த உடன் வித்யாசமா எழுதிரிக்கிறார் என்று அடுத்த அடுத்த அத்தியாயத்தை படித்தேன் ஒரு சில அத்தியாயத்தை படித்த பிறகு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, ஆனால் அந்த நாவல் ஒரு மெகா ஹிட் ஆனா நாவல் ஏன் எனக்கு புரியவில்லை என்று யோசித்து சில தடவை படிக்க முயற்சி செய்தேன் ஆனால் திரும்பவும் எனக்கு போர் அடித்தது அந்த நாவலை தூக்கி அப்படியே ஓரம் வைத்துவிட்டேன்.
ஆனால் இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள சில விஷயங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, மேலும் அவர் இந்த புத்தகத்தில் சமூக சிந்தனைக்காக சில பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் இந்த புத்தகத்தில் தொடாத விசயமே இல்லை. பெரியார் பற்றி ஒரு அருமையான தகவலை கூறிருந்தார் அதாவது அவர் படித்த பெரியாரின் பயண கட்டுரையில் வெளியான பெரியாரின் அனுபவங்களை நமக்கு அளித்துள்ளார் பெரியார் அவர்கள் ரஷ்யாவில் உள்ள நிர்வாண சங்கத்தில் சென்று அங்கு நிர்வாண புகைப்படங்கள் எடுத்து கொண்டதையும், பெரியார் கூறிய சில நல்ல கருத்துகளை தொகுத்து நமக்கு ஒரு அத்தியாயத்தில் கொடுத்துள்ளார்.
அப்புறம் நம் சாமியார்களை பற்றி காரசாரமாக கருத்துக்களை அள்ளி தெளித்துள்ளார். உதரணமாக சங்கரசாரியாரை பற்றி அவர் கூறுகின்ற கருத்துகள் நெற்றியில் அடித்தது போல் உள்ளது.
ஆனா இவர் இந்த மாதிரி தேவை இல்லாத கணக்கெல்லாம் பண்ணிட்டு இருக்கார்ன்னு புரியுல. ஒரு அரசியல்வாதி தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை சந்திக்கிறார்கள் என்று ஒரு maths கிளாஸ் நடத்துறார் நீங்களே படிங்க " ஒரு அரசியல்வாதி ,தொழிலதிபர்கள், சினிமாகாரர்கள் தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை 'சந்திக்கிறார்கள்' என்று ஒரு கணக்கு கூறுகிறார் "வாரம் நான்கு என்று கொண்டால் மாதத்தில் 16 . வருடத்தில் 16x12=192......ஆகா இவர்கள் 40 வருடங்கள் 200x40=8000
பெண்களை 'சந்திக்கிறார்கள்'".
இந்த மாதிரி மொக்கை கணக்கெல்லாம் போட்டு பார்த்து நம்ம நேரத்தை வீணடிக்கிறார். மொத்தத்தில் நான் இந்த புத்தகத்தை படித்ததில் நல்ல கருத்துகளை கற்றதை விட பலான விஷயங்கள் தான் அதிகம். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.


கடையடைப்பு வடசென்னை நிலவரம்.

ஈழத்தில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று தமிழர்களின் தானைத் தலைவன் மு.கருணாநிதி அறிவித்துள்ள முழு கடையடைப்பு தொடங்கி இனிதே நடந்து கொண்டிருக்கிறது. பிரதான சாலைகளில் உள்ள பெட்டிக் கடை டீ கடை உணவகங்கள் உட்பட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, சின்ன சின்ன சந்துகளில் அங்கொன்று இங்கொன்றுமாக டீ கடைகளும் உணவகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன (நல்ல கூட்டம் நல்ல வருமானம்) காலை முதல் அணைத்து பகுதிகளிலும் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. நம் முதன்மை செயலர் கூறினார் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் பேருந்து மற்றும் ரயில் சேவை இயங்கும் என்று ஆனால் பேருந்து எங்கே ஓடுகின்றது என்று தெரியவில்லை, இதனால் ஷேர் ஆட்டோக்கள் ஏழு ரூபாய் வாங்கிய இடத்தில இன்று ஈழத் தமிழர்களுக்காக வெறும் 20-25 வரை வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மருந்து கடைகள் மற்றும் வங்கிகள் மட்டும் வழக்கம் போல் இயங்குகிறது, மற்ற அத்தியாவசிய கடைகள் ஏரியாவைப் பொருத்து இயங்குகிறது. நான் நேற்று இரவு சில கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசினேன், அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக தேர்தல் நேரம் ஆளுங்கட்சி எதற்கு வம்பு கடையை மூடிவிடுவோம் என்றே கூறினர்.

ஆனால் ஒரு சந்தேகம் முழு கடையடைப்பு என்றால் ஏன் TASMAC கடைகள் மூடப்படவில்லை?? உணவகம் கூட திறக்கவில்லை ஆனால் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இது ஏன் திறந்திருக்கணும்?? ஒரு வேலை கலைஞர் ஆட்சியில் மது அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டதோ?? அல்லது ஈழத் தமிழர்கள் படும் துயரத்தை மறப்பதற்காக அனைவரும் உணவு அருந்தாமல் சரக்கு அடிங்கடா முட்டாள் தமிழர்களே என்று கூறுகிறாரோ?? எனக்கு இந்த பகுத்தறிவு இல்ல பாருங்க அதனால தான் புரியல, யாராவது பகுத்தறிவாளர்கள் இதைப் பற்றி விளக்கினால் மகிழ்ச்சி.

சன் டிவியில் இன்று காலை பத்து மணிக்கே திருடா திருடி போட்டதாக கேள்விப்பட்டேன், அலுவலகத்தில் இருப்பதால் மத்த சேனல்கள் பற்றி சரிவர தகவல் இல்லை, ஆனால் கண்டிப்பாக சிறப்பு திரைப்படம் போட்டிருப்பார்கள். ஏன் இதற்கு விலக்கு?? உங்களுக்கு பொழுது போகலைனா கடையடைப்பா??

இன்னும் எத்தனை முறை தான் தந்தி அடிப்பாரோ (ஆனால் இந்த விஷயத்தில் தலைவர் அடித்த அந்தர் பல்டிகளை விட தந்திகள் குறைவு தான் என்று நினைகிறேன்) இவர் இப்படி செய்வதை விட திரு.பாஸ்கரன் சுப்ரமணியன் அவர்கள் தன் பதிவில் (http://bashkaran.blogspot.com/2009/04/2.html) கூறியது போல செய்யலாம் இப்பொழுது வருவது போல் விரக்தியும் எரிச்சலும் கோபமும் வராமல் நமக்கு சிரிப்பாவது வரும் .









என்ன கொடும கலைஞர் இது????????

THICK AS THIEVES(2009) ஒரு பார்வை.

THICK AS THIEVES--IMDB RATING 6.1/10.
நான் இன்று காலை தான் இந்த படத்தை பார்த்தேன் இந்த படத்திற்கு IMDB 6 புள்ளிகள் அளித்துள்ளது. நான் முக்கால்வாசி ACTION படங்கள் தான் பார்ப்பேன் ஆதனால் இதை இன்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து இப்போது இந்த படத்தின் விமர்சனத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த படத்தின் நாயகன் Antonio Banderas, நான் இவர் நடித்த DESPERADO
என்ற ACTION படத்துக்கு அடிமை, DESPERADO படத்தை பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போலாம். இவர் நடித்த MASK OF ZORRO படமும் மிக அருமையான ACTION படம்.
அப்புறம் இன்னொரு மாபெரும் நடிகர் MORGAN FREEMAN இவரை பற்றி உங்களுக்கு தெரியமால் இருக்காது, இவர் MILLION DOLLAR BABY என்ற படத்துக்கு சிறந்த குணசித்திர நடிகர் OSCAR அவரது வாங்கியவர்.இவர் WANTED படத்தில் வில்லன் ரோலில் அசத்துவார். கிட்டதட்ட இந்த படத்திலும் அவருக்கு அதே மாதிரி வேடம் தான்.

படத்தின் கதை MORGAN FREEMAN ஒரு பழம்பெரும் கைதேர்ந்த திருடன். இவருக்கு ரஷ்யாவில் இருக்கும் ஒரு விலை மதிப்பில்லாத வைர பந்தை கொள்ளை அடிக்க புதிய ஆள் வேண்டும். அந்த புதிய ஆள் தான் நம்ம ஹீரோ. இதுவும் STEAL,BANK JOB, ITALIAN JOB போன்ற படங்களின் சாயல் தான். ஒரு வைர கிடங்கில் எப்படி இருவரும் சேர்ந்து கொள்ளைஅடிக்கிறார்கள் என்பதே கதை என்று நினைத்தால் கொள்ளையடித்து விட்டு நம்ம ஹீரோ மொர்கனிடம் நான் ஒரு POLICE என்று சொல்வார் அந்த காட்சியில் இருந்து படம் முழுதும் திருப்பங்கள் தான். ஆனா இந்த படம் என்னோவோ அவ்வளவு விறுவிறுப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.Antonia bandreas காதலியாக வரும் Radha mitchell தன் கவர்ச்சியால் நம்மை கிறங்க வைக்கிறார், மற்றபடி அவர் ஒண்ணும் உருப்படியாக செய்யவில்லை.

அவர்கள் இருவரும் திருட போகும் காட்சி அருமையாக இருந்தது. எனக்கு action படங்கள் மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த படத்தில் action அவ்வளவாக இல்லை என்பது மிக பெரிய குறை. முக்கியமா சொல்லனும்னா படத்துல இரண்டு சீன் இருக்கு,நம்ம அன்டோனியா பெட்ரூம் காட்சிகளில் பூந்து விளையாடிகிறார் . காலங்காத்தால கண்ணு கெட்டு போனது தான் மிச்சம். இந்த படம் கண்டிப்பா ANTONIA BANDREAS ரசிகர்களுக்கு மட்டுமே.

குடிதண்ணீரில் ஒரு பன்னியின் ஆட்டம்

நண்பர் நடராஜன் அனுப்பிய மின்னஞ்சல் செய்தி,

சென்னை மாநகராட்சி நம்மை குழாய் தண்ணீரையும் லாரி தண்ணீரையும் நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி பிரச்சாரம் செய்கிறது, ஆனால் கீழே உள்ள படத்தில் லாரியில் தண்ணீர் நிரப்பும் இந்த ஊழியர் செய்யும் அட்டூழியங்களை பாருங்களேன். இதற்கு பின் இந்தத் தண்ணீரை எப்படி குடிப்பது?? தனக்கு வேண்டும் என்றபொழுது மட்டும் மிகுந்த அக்கறையுடன் பிடித்துக் கொல்கிறது பாருங்கள் இந்த ஐந்து அறிவு ஜீவன். ஒரு நொடி கூட தோணாதா இவர்களுக்கு, தனக்கோ அல்லது தன் குழந்தைக்கோ இப்படிப் பட்ட தண்ணீர் யாராவது தந்தாள் எவ்வளவு கோபம் வருமென்று??



இடம்: வியசார்பாடி நீரேற்று நிலையம்
படங்கள்:லோகநாதன்
நன்றி:தினகரன் 18-04-2009

Wednesday, April 22, 2009

பள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.

எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓட்டுனர் இன்று ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டார், எதற்கு என்று நான் கேட்டதற்கு நாலாம் வகுப்பு படிக்கும் அவரது பெண் குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் கட்ட வேண்டும் என்றார். என்னடா இது விடுமுறை நேரத்தில் என்ன அது என்று நான் கேட்கவே ஒரு அணு குண்டையே தூக்கி போட்டார், அந்த குழந்தை ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அவளை அடுத்த வகுப்புக்கு அனுப்ப அந்த ஆசிரியை மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார் என்றும் கூறினார்!!!!!!!!!!!!!!!!!!! முதலில் இவரை கூப்பிட்டு உங்கள் பெண் ஒழுங்காக படிப்பதில்லை அதனால் அவள் பாஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் பள்ளியை விட்டே அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அவர் ஏதாவது பெரிய மனசு பண்ணுங்க பாவம் சின்ன பொண்ணு என்று கூறவே அவர் பெரிய மனசை காட்டிவிட்டார் போலும். இத்தனைக்கும் அந்த சிறுமி எனக்கு நன்றாக தெரியும், நல்ல சுட்டிப் பெண் நன்கு படிக்கவும் செய்வாள். ஆனால் அவளை அடிக்கடி நாடகம், விளையாட்டு என்று அனுப்பியுள்ளார் இதே ஆசிரியை, எனக்கென்னவோ அவர் அனைத்தையும் திட்டமிட்டே செய்துள்ளார் என்று தெரிகிறது. பிறகு அவர் தன் நிலைமையை எடுத்து கூறி தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார் பிறகு அரசியல் வாதிகள் குதிரை பேரம் பேசுவது போல் பேசி இறுதியாக ஆயிரத்துக்கு முடிவாகியுள்ளது. இதில் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல் என்னவென்றால் இதே ஆசிரியை டியூஷன் வந்து சேறு என்று அடிக்கடி கூறியுள்ளார் அந்த சிறுமியிடம், அவர்கள் அனுப்பாததால் தன் கைவரிசையை காடியுள்ளார்.

ஏற்கனவே இந்த பீஸ் அந்த பீஸ் என்று நம் பாகெட்டை காலி செய்து பிறகு பான்டையும் கலட்டி விடுகின்றனர் இதில் இப்படி நூதன முறையில் வேறு திருட்டு நடக்கிறது. இவர்களுக்கு வசதியாக நம் அரசாங்கம் இதில் நாங்கள் தலையிட இயலாது என்று கூறி விட்டது, பிறகு இவர்கள் ஆட்டத்தை பற்றி கேட்க வேண்டுமா என்ன?? அந்த பள்ளி ஒரு மந்திரியுடையது என்று கடைசியாக அவர் கூறினார், இப்பொழுது புரிகிறதா எங்கிருந்து இந்த பழக்கமும் தைரியமும் வந்தது என்று?? இந்த பொழப்புக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாமே. அரசாங்கத்தாலேயே செய்ய முடியாத ஒன்றை நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும்?? இப்படி வெட்டியாக ஒரு பதிவு எழுதலாம், பிறகு வாயையும் இன்ன பிற இடங்களையும் மூடிக் கொண்டு அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டியது தான். 

இந்திய மக்களின் அபிமான நட்சத்திரம்!


ஐபிஎன் லைவ் இணைய தளத்தில் (வெப் 18 குழும தளம் in.com) இப்போது நடைபெற்று வரும் ஓட்டெடுப்பு இது. இந்திய அளவில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம் யார் என்ற ஓட்டெடுப்பில் அமிதாப் உள்ளிட்ட 161 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்களில் முதலிடம்... சந்தேகமே இல்லாமல் நம்ம சூப்பர் ஸ்டாருக்குதான்.

இதுவரை 197817 வாக்குகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்தில் மட்டும் 9000 பேர் ரஜினியை தங்கள் விருப்ப நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிக்கு எதிராகப் பதிவாகியுள்ள வாக்குகள் 3288.

அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 133247. எதிர்ப்பு வாக்குகள் 239. அமிதாப்புக்கு மூன்றாவது இடம். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் 69268. எதிர்ப்பு வாக்குகள் 2527.

ஷாரூக்கானுக்கு ஐந்தாவது இடம். இவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகளை விட எதிராகக் கிடைத்துள்ள வாக்குகளே அதிகம். 52942 பேர் ஆதரித்தும் 71218 எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

கமல்ஹாசனுக்கு 3255 பேர்தான் வாக்களித்துள்ளனர். அவருக்கு எதிராக 615 பேர் வாக்களித்துள்ளனர். இவருக்கு கிடைத்துள்ள இடம் 29.

இந்தப் பட்டியலில் 10 வது இடத்திலிருக்கிறார் அஜீத் (ஆதரவு 43394 , எதிர்ப்பு 1219). சூர்யாவுக்கு 13வது இடம் (ஆதரவு 17930 , எதிர்ப்பு 725) .

இது ஒரு ஒப்பீடல்ல. முழுக்க முழுக்க ரசிகர்களின், நடுநிலை பார்வையாளர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பே இது.


உலகமெங்கிலும் உள்ள தமிழ், இந்தி திரைப்பட ரசிகர்களும் வாக்களித்திருப்பார்கள்.

நடிகர்கள் தவிர, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரிவினரில் மக்களின் அபிமானம் பெற்றவர்கள், எதிர்ப்பைப் பெற்றவர்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

நீங்கள் செய்யவேண்டியது.... கீழே உள்ள லிங்க்-ஐ சொடுக்கி உங்கள் வாக்குகளை செலுத்தவும்...

தி டர்மினல் - ஒரு பார்வை.

என்னடா இது ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படத்தை பற்றி எழுதுகிறேன் என்று யோசிக்கிறீங்களா?? ரொம்ப நல்ல இருந்துச்சு, நேத்து தான் பார்த்தேன் அதனால் தான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் ஒரு வித்தியாசமான ஆளுங்க, ET, Jurassic Park போன்ற Fiction படங்களில் ஒரு கலக்கு கலக்கி பிறகு Schindlers List என்னும் அருமையான ஒரு சரித்திர படத்தை அப்படியே மாறாமல் கண் முன்னே கொண்டு வந்தார். இவரே இந்த Terminal படத்தையும் இயக்கி உள்ளார், ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் எப்படி தான் இவரால் முடிகிறதோ. நம்மவர்கள் இவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது குறிப்பாக ஷங்கர்.

இவர் இப்படி என்றால் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் ஒரு சகாப்தம் என்று தான் சொல்ல வேண்டும். நம்மூரில் சொல்வது போல் கதாப்பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். மொழி  தெரியாத ஒரு நாட்டில் அவர் மாட்டிக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் செல்ல முடியாமல் ஒரு மனிதன் படும் துண்பங்கள் தான் படத்தின் கதை. அதை துண்பம் தெரியாமல் மிக சுவாரசியமாக சொல்லி இருப்பது தான் இயக்குநரின் சிறப்பு. 

ஒவ்வொரு முறையும் அந்த விமான நிலைய தலைமை அதிகாரியுடன் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு பிறகு அதில் சாமர்த்தியமாக அவர் தப்பிப்பது நல்ல விறுவிறுப்பு. ஒரு பயணி தன் தந்தைக்காக மருந்து எடுத்து செல்வதும் அதை இந்த அதிகாரி தடுப்பதும் அவர் அழுவும் பொழுது நம் கண்கள் பனிக்கின்றன பிறகு அவருக்காக டாம் பரிந்து பேசி காரியத்தை சாதிக்கும் பொழுது நம் இதயம் இனிக்கின்றது. இப்படி நிறைய சுவாரசியமான காட்சிகள் படம் முழுவதும் இருக்கின்றது. 

அனைவருடனும் இனிமையாக பழகி ஒரு தெரியாத நாட்டில் பல உள்ளங்களை கொள்ளை கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் வெளியேறுகிறார் எனும்பொழுது அந்த விமான நிலைய முனையத்தில் உள்ள அனைவரும் வந்து வழி அனுப்பி வைக்கும் காட்சி நெகிழ்ச்சியாக இருக்கிறது. படம் பார்த்து முடிக்கும் பொழுது ஏதோ ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது நமக்கு. தன் தந்தையின் ஒரு சிறிய ஆசையாய் நிறைவேற்ற அவர் படும் இன்னல்கள் தான் எத்தனை. அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும், இல்லையேல் ஏதோ ஒன்றை நீங்கள் இழக்கிறீர்கள்.


 

திருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா ??????????????????????

  
இது யார் மனதையும் புண் படுத்த எழுதப்பட்டது அல்ல புண் பட்ட ஒருவனின் குமுறல்கள்.

இயற்கை என்னும் படைப்பாளி செய்யும் சில தவறுகளால் உலகில் எத்தனை பிரச்சனைகள் எத்தனை தொல்லைகள் எந்தனை துன்பங்கள். எத்தனை கண்ணீர்கள் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை அனுதாபங்கள் எத்தனை எகத்தாளங்கள்??? யார் செய்த பிழைக்கு யாருக்கு தண்டனை?? பிறவியிலேயே ஆணாக பிறந்து பருவ மாற்றங்களால், சுரபிகளின் மாற்றங்களால் ஒருவர் தன்னையே பெண்ணாக பாவித்து கொண்டு பிறகு பெண்ணாகவே மாறுவதும் பிறகு அவர்கள் இந்த சமூகத்தில் படும் அவலங்களும் எத்தனை?? ஆனால் இதெல்லாம் அந்த காலம், நான் கூட இவர்களை பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொண்டதுண்டு,. தனக்கு வந்தால் தான் தெரியும் வாந்தியும் ............ என்று கூறக்கேட்டதுண்டு அதை நேற்று தான் அனுபவித்தேன். இவர்கள் மேல் நான் கொண்ட ஒரு வித அனுதாபம் இரு சம்பவங்களால் தொலைந்தது. இவர்களிடத்தில் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை, ஒன்று நம்மால் முடிந்தால் அவர்களுக்கு வேலை வழங்கலாம் அல்லது அவர்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் தலை தெறிக்க ஓட வேண்டும்.

காலம் இன்று எவ்வளவோ மாறி விட்டது, இன்று இவர்களைப் போன்றுள்ளவர்களுக்கு மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு வழங்க பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வருகின்றனர். ஆனால் இவ்வழியே நல்வழியே செல்ல விரும்பாத ஒரு பிரிவினர் செய்யும், செய்த அட்டூழியங்களை எனக்கு நேர்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் மும்பை செல்லும் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தோம் அப்பொழுது இரண்டு பேர் வந்தனர், அதில் ஒருவர் நேராக எங்கள் நடுவில் வந்து இடித்து கொண்டு மேலும் சில அனாவசிய Censor பிரச்சனைக்குரிய வார்த்தைகளும் செயல்களும் அங்கே அவர்களால் அரங்கேற்றப்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் வந்து நின்றவுடனேயே இருபது ரூபாய் குடுத்து விட்டோம் பத்தவில்லையாம் எட்டு பேர் சென்றோம் ஆளுக்கு இருபது கொடுக்கணுமாம். இதைப் போல் அன்று மட்டும் சுமார் பத்துக் குழுக்கள் வந்தன (இரண்டு நபர் மட்டும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்). இதில் எல்லை தகராறு வேறு. நாங்கள் அந்த பயணத்தின் பொழுது மட்டும் (சென்று வருவது சேர்த்து) செலவு செய்தது ஐநூறு ரூபாய்க்கு மேல். 

அடுத்தது நேற்று நடந்த மிகவும் கேவலமான சம்பவம். நாங்கள் எங்களது அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இரு நபர் நேரே உள்ளே வந்து விட்டனர், உற்சாக பானம் (அதாங்க சரக்கு) மிகுதியில் தட்டு தடுமாறி வார்த்தை குழறி அதிரடியாக நின்றனர். என்னவென்று கேட்டதற்கு ரூபா குடு என்றனர், பொதுவாக இவர்களுக்கு ஒரு ருபாய் தான் கொடுப்பார் அதுவும் கையில் கொடுக்க மாட்டார் மேஜையில் அந்த நாணயத்தை தட்டி விட்டு வைத்து விடுவர். ஆனால் நான் அவர்கள் கையில் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவ்வளவு தான் "என்ன இது?? ஒழுங்கா 101 ருபாய் குடு பாவப்பட்டவங்க நாங்க", நல்ல குடிக்க பணம் இருக்கு இவர்கள் பாவப் பட்டவர்களா?? பிறகு சேலை முந்தானைய வேற நீக்குகிறார்கள், பணம் கொடுத்த தான் போவேன் பாத்துக்கோன்னு மிரட்டல் வேறு. "பொட்டைங்க கிட்ட சாபம் வாங்காதடா ......" என்று வசைமாரி பொழிந்தார்கள். பிறகு எனக்கும் கோபம் வந்து நானும் எகிற ஆரம்பித்தேன் பிறகு சற்று அமைதி ஆகினர். பிறகு பத்து வாங்கிக் கொண்டு இன்னும் சில சாபங்களை பொழிந்து விட்டு சென்றனர். எங்கள் ஊழியர்கள் யாரும் அருகில் கூட வரவில்லை, கேட்டால் இவர்கள் சாபம் விட்டால் அவ்வளவு தானாம். இந்த ஒழுக்கம் கெட்ட மதுவில் மூழ்கிய இவர் கொடுக்கும் சாபம் என்ன செய்யப் போகிறது?? எதற்கு இவர்களுக்கு நாம் இந்த பத்து ருபாய் குடுக்க வேண்டும்?? எதற்கு இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்?? 

சென்ற மாதம் நாளேடுகளில் பரபரப்பாக ஒரு செய்தி அடி பட்டது, கிழக்கு கடற்கரைச் சாலையை சேர்ந்த ஒரு பையனை புனே நகருக்கு கடத்தி உறுப்பு மாற்று சிகிச்சை செய்து புனேயில் பிட்சை மற்றும் பாலியல் தொழிலில் விட்டனராம் இவர்களை போன்ற திருநங்கைகள், இதற்கு ஒரு பரதேசி மருத்துவன் உடந்தை. இரண்டையும் வைத்து பார்த்தால் நான் கடவுள் படத்தில் பிட்சைக்காரர்கள் எப்படி உருவாக்கப்பட்டு பிட்சை எடுக்கிறார்களோ அதே போல் இந்த திருட்டுநங்கைகள் அப்பாவிகளை வைத்து இது போன்ற தொழிலில் விட்டு பிழைக்கின்றனரோ????????  இதற்கும் அரசியல் பின்னணி இருந்தால் நாம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

நண்பர்களே இதைப் போன்று அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் உண்டென்றால் அதை பகிர்ந்து கொள்க, மேலும் இது போன்ற நேரங்களில் எவ்வாறு நாம் நடந்து கொள்வது நமக்கு நல்லது என்று கூறுங்கள். நன்றி.

Tuesday, April 21, 2009

ரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது! - சூர்யா

அயன் பட பிரஸ் மீட்டில் நடிகர் சூர்யா நமது நிருபரிடம் கூறியது:

எல்லோரும் எம்ஜிஆர் அல்லது ரஜினியை தங்கள் ரோல்மாடலாக சொல்வார்கள். ஆனால் நீங்கள் அப்படி யாரையும் குறிப்பிடவில்லை. கமலிடமிருந்து, விக்ரமிடமிருந்து, தனுஷிடமிருந்து, ஆர்யாவிடமெருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொண்டதாகச் சொன்னீர்கள். எனில் எம்ஜிஆர் - ரஜினி போன்ற இமயங்கள் உங்களைக் கவரவில்லையா... இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவும் இல்லையா உங்களுக்கு?

(இந்தக் கேள்வியை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது!)

"ஓ... நீங்கள் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா... நல்லது... எனக்கு மட்டுமல்ல... சினிமாவுக்குள் வரும் எல்லாருக்குமே, எம்ஜிஆர், ரஜினி சார் உயரங்கள் மீது ஒரு கண் இருக்கும். காரணம் அவர்கள்தான் சினிமாவின் உச்சம்.

ஆனால், நான் வெளிப்படையாக சொல்லாமல் விட்டது, ரஜினியை இமிடேட் செய்து ஒருவரால் உயரத்துக்கு வந்துவிட முடியாது என்பதைத்தான்.

ரஜினியின் ஸ்டைல் அவருக்கு மட்டும் சொந்தமானது. அதை கற்றுக் கொள்ள முயற்சிப்பது சரியாகுமா...

அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு, நடை, உடை என எல்லாமே ஸ்டைல்தான். எனவே திரையில் அவரைப் பார்த்து கற்றுக் கொள்வது என்றால் அது காப்பியடிப்பதுதான். அதைச் செய்தால் யாரும் எடுபட மாட்டார்கள். ஒரு எம்ஜிஆர்தான்... ஒரு ரஜினிதான்.

ஆனால் திரைக்கு பின்னால் அவர்தான் சினிமாக்காரர்களுக்கு வழிகாட்டி. என் தந்தை அடிக்கடி ரஜினியின் கடந்த காலம், அவர் பட்ட கஷ்டங்கள், அவரது நிகழ்காலம்... அதில் அவர் கடைப்பிடிக்கும் எளிமை பற்றியெல்லாம் பேசுவார்.

நான் ஒருபோதும் அவரைக் திரையில் அவரைக் காப்பியடிக்க மாட்டேன். ஆனால் நிஜத்தில் அவரைப் போல சின்ஸியராக இருக்கவே விரும்புகிறேன் என்றார்.

Monday, April 20, 2009

அஜித்தின் அசல் ஒரு கற்பனை







வணக்கம் பதிவர்களே...நீங்கள் வேட்டைக்காரன் கதைக்கு தந்த ஆதரவு அஜித்தின் அசல் படத்துக்கும் தொடர வேண்டுகிறேன்.
நடிகர்கள்: அஜித், ஸ்ரீமன், சந்தானம், கவுண்டர்மணி

அசத்தலான அசல் கதை.

காட்சி 1:
(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)
Amsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.
அவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது  முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்
வில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று
கவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.

காட்சி 2:
சில நாட்களுக்கு முன்பு:
(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)
SRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி
அங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

காட்சி 3:
(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )

கேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.
அப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான்  நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்
உள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .

கவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்

கவுன்சிலர்: டேய் யாருடா  அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.

தல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.

கவுன்சிலர்: ஓ! முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP ?

தல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன?

கவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன  உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.

காட்சி 4:
( சந்தானம் உள்ளே நுழைகிறார்)

சந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல
நாலு வருஷம் முன்னாடி "SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு" சொன்னவர்டா.

கவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா?

(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)

சந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.

தல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள!!!!!! contract எனக்கு திரும்பி குடுக்கணும்.

சந்தானம்: மழை பெய்யல  தல

தல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது!!!!!!!!!!!!!!!.

இப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.
ஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி
அது ஒரு தனி TRACK.

காட்சி 5:
(இடம்: AMSTERDAM COURT)
தல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.

கவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன?

தல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க

நீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு?

தல: CITIZEN என்று உறுமுகிறார்.

நீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க?

தல: நோ நான் கலக்கலா MY LORD

கவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.

தல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL
சார்.

கவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam
narayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....

தல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்

கவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா?

தல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்

கவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....

தல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அசல் PHENOYILnu நீங்க சொல்விங்க.

கடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்
இருப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

தல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான். 

Sunday, April 19, 2009

கள்வனின் காதலி - ஒரு பார்வை

தலைப்பை பார்த்துவிட்டு நான் என்னமோ அந்த வெளங்காத படத்தை பற்றி தான் எழுதபோகிறேன் என்று தவறாக எண்ணி விட வேண்டாம், நேற்று அமரர் கல்கியின் படைப்பான கள்வனின் காதலி நூலை படித்தேன் அதை பற்றி விமர்சனமோ கருத்தோ கூறும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஞானி இல்லை, ஞான சூனியம் தான், இந்த பதிவில் கூட கண்டிப்பாக எவ்வளவோ எழுத்துப்பிழைகள் இருக்கும் அதை மன்னிப்பீர்களாக. 

நான் எப்பொழுதுமே கல்கி அவர்களின் காவியங்களுக்கு அடிமை, படிக்க ஆரம்பித்தால் வெறித்தனமாக வேறு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து படித்து முடித்த பின்பு தான் ஒரு திருப்தி ஏற்படும். அவர் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் ஆகிய படைப்புகளை படித்து சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் மிதந்துள்ளேன். இந்த மூன்று காவியங்களையும் படித்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வரும் வாரங்களில் மறுபடியும் தொடங்கப் போகிறேன். அதை நினைத்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நாள்:16-04-2009 
இடம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோவை விரைவு வண்டி C1 பெட்டி இருக்கை எண் 60. 

வழக்கமாக என் வியாபார விஷயமாக நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வியாழன் தோறும் இந்த ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு செல்வது வழக்கம், அன்றும் அதுபோல் தான் புறப்பட்டேன். ஆனால் அன்று நான் செல்ல போகும் இடம் எதுவென்று அறியாமல். சிறிது நேரம் காலைப்பனி போர்த்திய புற நகர் பகுதியின் அழகை ரசித்தவாரே அன்றைய நாளேடுகளை புரட்டிக்கொண்டு நடைமனிதன் அதாங்க walkman பாடல் கேட்டுக்கொண்டு ஒருவாரு நல்ல moodil இருந்தேன். அப்பொழுது தான் அருமை நண்பர் திரு.நட்டு என்ற நடராஜன் அவர்கள் வழங்கிய இந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. நண்பர் அவர்கள் இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், புராண கதைகள் இன்னும் தமிழ் மொழியில் என்ன பிற உண்டோ அதில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆளுமை உள்ளவராதளால் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிக்க தவறுவதில்லை அதுவும் அமரர் கல்கி அவர்கள் புத்தகம் என்றால் கேட்கவா வேண்டும்?? சரி என்று படிக்க ஆரம்பித்தேன், அவ்வளவு தான் ரயிலின் சத்தமோ சாய் சாய், இட்லிவடை போன்ற ரயிலில் வரும் அணைத்து சத்தங்களும் இல்லாமல் ஒரு புதிய உலகத்துக்கே என்னை அழைத்து சென்று விட்டார் கல்கி அவர்கள்.

கதையின் தொடக்கத்தில் அந்த சிறிய கிராமத்தையும் அதன் இயற்கை வளங்களையும் வர்ணிக்கும் பொழுது அவை அனைத்தையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். கல்கி அவர்களின் தனிச்சிறப்பு இது தான், அவர் நம்மை அந்த காலத்துக்கே அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடுவார். அவ்வளவு எழில் கொஞ்சும் கொள்ளிடக்கரையில் (இன்றோ மணல் கொள்ளையால் பாழ் பட்டு கிடக்கிறது) முத்தையன்  நுழையும் காட்சி அவனின் குணாதிசயத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. அவனுடைய வாழ்கையை பார்க்கும் பொழுது பணம் இல்லையேல் உனக்கு ஒன்றும் இல்லை என்பது அந்த காலத்திலும் இருந்ததை உணர முடிந்தது. அவன் கல்யாணியின் மேல் உரிமையுடன் கோபம் கொள்வதும் அவள் அழுவதும் பிறகு அவன் தங்கையை சீண்டுவதும் அவ்வளவு இயல்பாக இருந்தது. 

கதைக்குள் புகாமல் மேலோட்டமாகவே கதாபாத்திரங்களையும் கதை சொன்ன விதத்தையும் மட்டும் நாம் பார்போம், இல்லையேல் இன்னும் இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு சுவாரசியம் போய்விடும். என் மனதை கவர்ந்த இரு நபர் அபிராமியும் சப் இன்ஸ்பெக்டர் சாஸ்த்ரிகளும் தான். அந்த காலத்தில் நம் மங்கையர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அபிராமி ஒரு சிறந்த எடுத்துகாட்டு. இசை ஞானம், குழந்தைத்தனம், பாசம், பெண்களுக்கே உரித்தான அணைத்து குணங்களையும் உள்ளடக்கிய அந்த பெண்ணை பார்க்கும் பொழுது ஆஹா இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் ஏற்படுகிறது. அடுத்ததாக சாஸ்த்ரிகள், அந்த காலத்தில் காவலர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினர் என்று நாம் தெரிந்து கொள்ள இவர் ஒருவரே போதும். முதலில் முத்தையன் ஒரு தவறும் செய்யவில்லை என்று தெரிந்த போது அவனுக்காக இறக்க படுவதும் பிறகு அவன் தவறு செய்யும் பொழுது அவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று அவர் படும் பாடு, பிறகு அவன் தவிக்கும் பொழுது அவன் மேல் இறக்கம் கொள்வதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.. 

அன்பினால் ஒருவன் வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் படுவான் என்பதை ஆசிரியர் மிக ஆழமாக கூறியுள்ளார் ஒரு சில காட்சிகள் நமக்கு கண்களில் நீர் வருகிறது முத்தய்யனை பார்த்து. ஆனால் எதற்கும் அஞ்சாமல் பாசத்துக்காக அவன் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை படும் வேதனைகள் தான் எத்தனை. தங்கைக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலை கொல்லி எறும்பாக அவதியுறுகிறான்.

புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நமக்குள் என்னவோ போல் ஒரு துக்கம் சூழ்ந்து கொள்கிறது, முதலில் ஆசிரியர் மீது எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது, ஆனால் யதார்த்தம் சற்று வலிக்கத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டேன். இறுதியில் ஆசிரியர் கூறும் விஷயங்கள் அணைத்து காலத்துக்கும் பொருந்துவதாக அமைவது அவரின் சிறப்பு. நான் புத்தகத்தை முடிப்பதற்கும் திரும்பி இன்னொரு ரயிலில் சென்னை திரும்புவதற்கும் சரியாக இருந்தது, இந்த பயணம் என்றும் போல் இல்லாமல் ஒரு புது இடத்துக்கு சென்று வந்ததைபோல் உணர்தேன் என்று நான் சொன்னால் அது மிகை ஆகாது. ஏனோ அன்று முழுவதும் அந்த யதார்த்தம் என்னை குத்திக் கொண்டே இருந்தது. 

சரி நண்பர்களே எனது இந்த அனுபவம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த முறை சந்திப்போம். நன்றி வணக்கம்.

Saturday, April 18, 2009

இளைய தளபதியின் வேட்டைக்காரன்




வணக்கம் நண்பர்களே விஜயின் வேட்டைக்காரன் படத்தின் இந்த காட்சிகள் என் சொந்த கற்பனையில் உருவானது எதாவது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

காட்சி 1:
(இடம்: சென்னை விமான நிலையம்)
விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிரிக்கிறது. தலைமை விமான நிலைய அதிகாரியாக S.P.B அவர்களும், டெல்லி கணேஷ் அவருக்கு உதவியாளராக பணிபுரிகிறார். தீடிர்யென்று விமான நிலையம் பதட்ட சூழ்நிலைக்கு செல்கிறது இதை கவனித்த S.P.B, டெல்லி கணேஷ் விறுவிறு என்று s.p.b அறைக்கு செல்கிறார்.

S.P.B: என்ன சார் problem, ஏன் இப்படி பதட்டம் ஆகுரிங்க?

கணேஷ்: சார் நம்ம மலேசியா போற flight ஏதோ terrorist கும்பல் hijack பண்ணிடாங்க?

S.P.B: oh my god! இப்ப என்ன பண்றது அந்த flightla 100 பேருக்கு மேல இருப்பாங்களே.

கணேஷ்: "நாம இனிமே என்ன பண்றது" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ரன்வேயில் ஒரு GLIDER விமானம் அனுமதி இல்லாமல் டேக் ஆப் ஆகிறது.

காட்சி 2:
(இடம்: GLIDER பறக்கும் பொழுது)

அப்படியே GLIDER விமானத்த SIDEla,CORNERla விதம் விதமா கேமரா மூலம் காட்டுகிறார்கள்.கடைசியில் 5 நிமிடம் அப்புறம் தலைவர் இளைய தளபதி விஜயின் புன்னகை முகத்தை காட்டுகிறார்கள். இப்பொழுது தளபதி HIJACK ஆன FLIGHTi பின்தொடர போகிறார். தன் glider ஒரே SECONDil பல அடிகள் மேல போகிறது. விஜயின் GLIDER விமானம் hijack ஆன FLIGHTi துரத்தி கொண்டு போகிறது. HIJACK ஆன விமானத்தில் சிலர் தளபதி வருவதை பார்கிறார்கள் உடனே சிலர் "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று விஜயை பார்த்து ஓலமிடுகிறார்கள். ஒரு சின்ன குழந்தை விஜயை பார்த்து "அங்கிள் எங்களை காப்பாத்துங்க"என்று சொன்ன உடனே நம் தளபதி வெறி கொண்டு தீவிரவாதிகளை வேட்டையாடா கிளம்புகிறார்.

GLIDER STEERINGil தன் வெள்ளி அருணாகயிறை கட்டி பின்னாடி ஒரு இடத்தில முடிச்சு போட்டு glider நேராக பறக்கும் படி செய்கிறார். இப்பொழுது FLIGHTkku நேர GLIDER வருகிறது உடனே நம் ஹீரோ GLIDER ரக்கையில் ஏறி விமானத்துக்கு தாவுகிறார்(இந்த கிராபிக்ஸ் காட்சியை முன்று முறை காட்டுவார்கள்). விமானத்தின் முன்னே சென்று கண்ணாடியை காலால் உடைத்து விமானத்தின் உள்ளே செல்கிறார். அங்கே நம் போண்டா மணியும் கஞ்சா கருப்பும் PILOTaga வண்டி ஒட்டி வருகிறார்கள். நேராக உள்ளே பூந்த விஜய் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

விஜய்: டேய் உங்களக்கு என்னடா வேணும்?

தீ.வாதி: நீங்க யாரு சார்?

விஜய்: அது அவங்களுக்கு தெரியும் என்று(படம் பார்க்கும் நம்மை காட்டுகிறார்)

தீ.வாதி : டேய் மொக்கை போடாதடா.... ரொம்ப overA SCENE போடுற.

விஜய்: ஏய் யார்ருகிட்ட பேசுற... நான் வேட்டைகாரண்ட இப்போ உங்களை எல்லாம் வேட்டை ஆட போற வேட்டைக்காரன். நீ GUNla சுட்டவனே பார்த்திருப்பே , MACHINEGUNla சுட்டவனே பார்த்திருப்பே, AK47la சுட்டவனே பார்த்திருப்பே , MAGNUMla சுட்டவனே பார்த்திருப்பே ஆன எங்களுக்கு எல்லாம் இது போதும் என்று உண்டிவில்லை எடுத்து காட்டுகிறார் தளபதி. background musicA HEI HEI ஹெஇன்னு சௌன்ட் வருது.

காட்சி 3:
(இடம் : விமானத்தினுள் சண்டை)

விஜய் தன்னை நோக்கி சுடும் தீவிரவாதிகளை தன் உண்டிவில்லால் அடித்து நொறுக்குகிறார், அந்த உண்டிவில்லில் இருந்து கல் புறப்படும் சீனை SLOWMOTIONla காட்றோம். எல்லா தீவிரவாதிகளையும் அடித்து அப்பளம் ஆக்குகிறார் விஜய். இதே flightIL நாயகி அனுஷ்காவும் இருக்கிறார் விஜயை லவ்வ ஆரம்பிக்கிறார்.

படம் முழுவதும் விஜய் வில்லன்களையும் மற்றும் நாயகி அனுஷ்காவையும் வேட்டையாடுகிறார்...........