Monday, August 31, 2009

ஷிஞ்சுகு இன்சிடென்ட்- விமர்சனம்.

ஷிஞ்சுகு இன்சிடென்ட் (Shinjuku Incident) - விமர்சனம்.

நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என் புனை பெயர் ஜெட்லி
என்றாலும் எனக்கு பிடித்தது ஜாக்கிசான் தான். ரொம்ப நாள்
கழித்து ஜாக்கி படம் வெளிவருவதால் வெள்ளியன்றே பார்க்க
வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் நண்பர்கள் சதி செய்து
என்னை கந்தசாமி படத்தை ரெண்டாவது தடவை பார்க்க
வைத்து விட்டார்கள்.

சீனாவில் இருந்து திருட்டு தனமாக ஜப்பான் வருபுவர்களை
பற்றி தான் கதை.ஜப்பான் கேங் லீடர்கள் நடத்தும் வன்முறைகள்,
மற்றும் சீனாவில் இருந்து வந்தவர்களை கிள்ளு கீரைகளாக
நினைத்து அடித்து உதைக்கிறார்கள். இடையில் ஜாக்கி ஜப்பான்
கேங் லீடர் ஒருவரை காப்பாற்றி ஜாக்கியும் ஷிஞ்சுகு என்ற
இடத்தில் கேங் லீடர் ஆகிறார்.

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பதே கதையும் கரு.
பணம் இல்லாத போது ஜப்பானில் ஒன்றாக இருந்த சீனர்கள்,
பணம் வந்தவுடன் தவறான வழிகளில் ஈடுபட்டு தங்களை
அழித்து கொள்கிறார்கள்.

பேப்பரில் விளம்பரத்தில் ஜாக்கி நடித்த மாறுப்பட்ட படம் என்ற
போதே எனக்கு சில விஷயங்கள் புரிந்தது.படத்தில் வன்முறை
காட்சிகள் அதிகம் இருந்தாலும் ஜாக்கி ஸ்டைல் பைட் மிஸ்ஸிங்.
அதுவும் ஏன் என்று புரிந்தது, படத்தில் ஜாக்கி வேடம் ஒரு
சராசரி மனிதன் வேடம் ஆதலால் martial பைட் எதிர்பார்க்க முடியாது.
நாம் எப்படி நம்மை தற்காத்து கொள்ள கட்டையும் கம்பையும்
விசுருமோ அது போல் தான் ஜாக்கி இந்த படத்தில் செய்கிறார்.

ஜாக்கி இந்த படத்தில் சிரிக்கிறார்,உணர்ச்சி வசபடுகிறார், சேரன்
மாதிரி அழுகிறார்.படம் அவ்வளவாக போர் அடிக்கவில்லை,
ஆனால் இன்டெர்வல் டைம் அனைவரும் என்னப்பா ஒரு பைட் கூட
இல்லை என்று முணுமுணுத்தார்கள்.இது ஒரு நல்ல ட்ராமா, த்ரில்லர்
வகையை சேர்ந்த படம்.சும்மா ஒரு வாட்டி பாக்கலாம் ஜாக்கிசானுக்காக....

புடிச்சா ஒட்டு போடுங்க அப்பதான் பலதரப்பட்ட மக்களை போய் சேரும்.

உங்கள்
ஜெட்லி.

Thursday, August 27, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....???(27.8.09)

நேற்று தினகரன் பேப்பரில் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ....

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தமிழில் முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பெண் ஒருவரை நான்கு ஊழியர்கள்
அசிங்கமாக பேசி தாக்க முயன்றனர்.அந்த நான்கு ஊழியர்களும்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.என்ன கொடுமை சார் இது...?
தமிழ் நாட்டுல தமிழ்ல எழுதுன அடிக்க வராங்க,
அதுவும் வேறு ஊரில் இருந்து பிழைக்க வந்தவர்கள்.

சரி அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, அதுக்கு ஏன் திட்டனும்,

தாக்க முயற்சி பண்ணனும்??..
தமிழ் நாட்டுல தமிழில் எழுதினால் தப்பா?

இப்படி தான் கொஞ்சம் காலம் முன்னாடி மணியார்டர்

விண்ணப்பத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தி
மட்டுமே உள்ள விண்ணப்பத்தை விற்றார்கள்...
வர வர தமிழன் கிள்ளு கிரையாக போய் கொண்டு
இருக்கிறான். தமிழ் நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை.
வேற என்னத்த சொல்ல......


*******************************************

இனிமே என்னை மொக்கை படத்துக்கு கூப்பிட்ட
ஒதை உழும்... ஜாக்கிரதை!!!

******************************************************

வாமனன் படத்துக்கு மலேசியா கூட்டு போறாங்கோ,
ஆறுமனமே படத்துக்கு துபாய் கூட்டு போறாங்கோ,
கந்தசாமி படத்துக்கு பாரிஸ் கூட்டு போறோங்கோ......

இப்படியே போன படம் பார்க்கும் நபர்களுக்கு நெறைய
பரிசு தருவாங்க போல......இந்த மாதிரி படத்தை
பார்ப்பவர்களுக்கு தியாக செம்மல் விருது வழங்க வேண்டும்.

என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அந்த டாக் படம்
பிடித்திருந்தால் மட்டுமே டிக்கெட் காசு தருவான்....
அது போல் மேல உள்ள பரிசுக்கு பதில் படம் திருப்தி
தரவில்லை என்றால் காசை திருப்பி கொடுக்குற மாதிரி
திட்டம் வகுத்தால் நல்லா இருக்கும்.....

நீங்க என்ன நினைக்கிறிங்க???

*************************
புடிச்சா ஒட்டு போடுங்க
உங்கள்
ஜெட்லி

Wednesday, August 26, 2009

கற்றது தமிழ் ரீமிக்ஸ்....

கற்றது தமிழ் ரீமிக்ஸ் ....




எனக்கு கற்றது தமிழ் படம் ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த
பாட்டு எதற்கும் நிகர் இல்லை, இந்த பாட்டை நான் ரீமிக்ஸ்
செய்வது சும்மா ஒரு ஜாலிக்கு தான் யாரும் கோபித்து கொள்ள
வேண்டாம்.,,,

முன்னுரை:

பிரபாவுக்கு ஆனந்தி தான் சரக்கு ஸ்பான்சர், தீடிர்னு ஆனந்தி
ஊருக்கு போனதுனாலே பிரபாவுக்கு யாரும் ஓசியில் சரக்கு
வாங்கி கொடுக்குல.....இதோ சாங்....

ஒரிஜினல் வீடியோ இங்கே.........



என் வாழ்க்கையில் நான் காசு கொடுத்து சரக்கு வாங்கினது
மூணே மூணு தடவை....

பிரபா நீ என்னை தேடி இருப்பனு தெரியும்,
நானும் அம்மாவும் பாண்டில இருக்கிற ஒன்னு விட்ட மாமா
வீட்ல இருக்கோம், நீ இங்கே வந்து சரக்கு அடிக்க ஏத்த நேரம்
வரும் போது சொல்றேன்....

நேரத்துக்கு சரக்கு அடி
சரக்குல நெறைய தண்ணி உத்து
வாரத்துல மூணு வாட்டிக்கு மேல (சரக்கு)அடிக்காதே
சைடு டிஷ் கம்மியா சாப்பிடு
போதையில ரோட்ல படுக்காத....

சரக்கே எங்கே இருக்கிறாய்
அடிக்கவே என்னை அழைக்கிறாய்
பாண்டி வைன் ஷாப் தேடி வருகிறேன் மப்பே.....

அடி என் பூமி தொடங்கும் இடம் எது ராயல் stag தானே....
அடி என் பாதை இருக்கும் இடம் டாஸ்மாக் தானே....

பார்க்கும் டாஸ்மாக் கடை யாவையும் பாவை முகம் வருமே,
சரக்கு ஒரிஜினல்ஆ டுப்ளிகட்ஆ என்று தெரிவதில்லை
அதை கண்டு சொல்ல யாருக்கும் தூணிவில்லை....
நீ வாங்கி கொடுத்த சரக்கு இன்னும் மனதில் மறையவில்லை
அதில் மிதந்தேன் நானும் ஒரு படகாக.......(சரக்கே)

உன்னோடு நானும் சரக்கடிக்கும் வேளை
இது நீளாதோ.... teachers scotch rate போலவே
கதை பேசி கொண்டு வா வைன் ஷாப் போவோம்
சைட் டிஷ் தீர்ந்தாலும் உன் சரக்கு மட்டும் போதும்

இந்த half அடிச்ச போதை இன்னைக்கு போதாத
இனி நம்மூர் டாஸ்மாக் முழுவதம் அழகாய் மாறதா????

முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

*********************************************

ஆனந்தியை பாண்டியில் உள்ள வைன்ஷாப் கடை பக்கத்தில்
பார்த்த உடன்....

பிரபா: ஆனந்தி இங்க தான் ராயல் stag புல் கிடைக்குதாம், அதான்
அப்படியே உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்....

ஆனந்தி: நான் வரலைனா என்ன பண்ணி இருப்ப...?

பிரபா: என்ன ரெண்டு புல் ராயல் stag வாங்கிட்டு அடுத்த பஸ்ல
கிளம்பி இருப்பேன், இப்ப தான் உன்னை பார்த்துட்டேனே நீதான் ஸ்பான்சர்....

ஆனந்தி: நிஜமாத்தான் சொல்றியா?...

*************************************************

ஏழை... சரக்கு.... டாஸ்மாகில் இருக்கிற அறுபது ரூபாய்
மொக்கை சரக்கு....
(சரக்கு அடித்த பின்)
மண்ணில் விழுந்து ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் சரக்கு பாட்டில் போல...
இதோ இதோ இந்த பயணத்திலே
இந்த half பாட்டில் போதும் கண்மணி
வேறு என்ன நானும் கேப்பேன்
சரக்கு காலியானாலும் தண்ணி ஊத்தி
பாட்டில் கழுவி குடிப்பேன்...
இந்த மப்பு இப்படியே தான் தொடராதா
என் தணியாத போதை இன்றுடன் தீராதா...


முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

பிரபா : ஆனந்தி ஆனந்தி சரக்கு காலி ஆயிடுச்சு,
இன்னொரு குவாட்டர் சொல்லேன்....

புடிச்சா ஒட்டு போடுங்க.....
உங்கள்
ஜெட்லி.

Tuesday, August 25, 2009

அடுத்த தலைமுறையின் எமன்

அடுத்த தலைமுறையின் எமன்.


நமக்கு அடுத்து வரப்போகும் தலைமுறைகளுக்கு நாமேஅழிவை தேடி தரும் செயல் தான் பிளாஸ்டிக் பொருட்களை
உபயோகிப்பது. நம் அன்றாட வாழ்க்கையின் ஒன்றாகி விட்ட
பிளாஸ்டிக் என்னும் பொருளை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல.
நான் இதை எழுதுவதற்கு காரணம் இதை படித்த நம் சக
பதிவர்கள் மற்றும் என் நண்பர்கள் பத்து பேரவாது சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.

பிளாஸ்டிக்கை, அதாவது மனிதன் தயாரித்த செயற் பிளாஸ்டிக்
1855 ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வித மாற்றங்களுக்கு பிறகு நாம் முக்கியமாக உபயோகிக்கும் கேரி
பேக் வடிவமைக்கப்பட்டது.


நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகி விட்டது
கேரி பேக்.கடைக்கு போனால் ஒரு பாக்கெட் பால் வாங்குனா
கூட கேரி பேக் கேக்குறோம்,துணி கடைக்கு போன ஒரு ஒரு
மாடிக்கும் மூணு நாலு கேரி பேக் தருகிறார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் நாம் கேரி பேகை குப்பை தொட்டியில் வீசி எறிகிறோம்
அல்லது ரோட்டில் தூக்கி போடுகிறோம்.அந்த பிளாஸ்டிக் பேக் மக்காது என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அதை வைத்து
என்ன பண்ணுவது என்று தூக்கி எறிகிறோம். அந்த பிளாஸ்டிக்
பேக் அனைத்தும் மக்கமால் மண்ணோடு மண்ணாக அப்படியே
இருக்கும். மழை வந்தால் தண்ணீர் உள்ளே போகாமல் பிளாஸ்டிக்
பேக்கால் தடுக்க பட்டு தடுக்க பட்டு இப்போதே நாம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம்.


காலம் தவறி பெய்யும் மழை யாருக்கும் உதவாது, முக்கியமா விவசாயம் பண்றவங்க ரொம்ப கஷ்ட படுவாங்க. போன வாரம்
திருவண்ணாமலை சென்ற போது பாக்கம் என்ற ஊரில் பாதி
விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்று விட்டார்கள் எல்லா ஊரிலும் இதே கதி தான். இதற்கு நான் பிளாஸ்டிக் மட்டுமே
காரணம் என்று சொல்லவில்லை பிளாஸ்டிக்கும் ஒரு காரணம்,
அதை உபயோகிக்கும் நாமும் ஒரு முக்கிய காரணம்.

சரி இவ்ளோ பேசுறியே ஜெட்லி, நீ சொல்ற மாதிரி தூணி
கடைக்கு அல்லது மளிகை கடைக்கு போன எல்லாத்தையும்
கையுல எடுத்துட்டு வர முடியுமா? என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது. தூணி கடையில் கூட அந்த கட்டை பேக் கொடுப்பார்கள்
அதை வாங்கி கொள்ளலாம், ஆனால் மளிகை கடையில் ஒவ்வொரு பொருளும் பிளாஸ்டிக் பையால் தான் கட்டப்பட்டு அதை ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையில் தருவார்கள். மளிகை கடை வைத்திருப்பவன் என்ற முறையில் எனக்கே தெரியும் நாங்கள் செய்வது தவறு என்று, ஆனா என்ன பண்றது பத்து வருஷம்
முன்னாடி அரிசி, பருப்பெல்லாம் பேப்பரில் கட்டி தான் கொடுப்போம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் தான் "என்னங்க இன்னும்
பேப்பரில் கட்டிட்டு இருக்கீங்க?" என்று எங்களை மாற வைத்தார்கள்.


அப்புறம் இந்த கேரி பேக் தான் பேரும் பிரச்சனை, சின்ன பிஞ்சு குழந்தைகள் கூட ஒரு பால் அல்லது இட்லி மாவு வாங்கினால்
கூட கேரி பேக் வேண்டும் என்பார்கள் அவர்களிடம் கையில்
எடுத்து போக சொன்னால் அதெல்லாம் முடியாது எனக்கு மாவு
வேணாம் என்பார்கள். எனக்கு தெரிந்து ஒரு மூணு நாலு பேர் மட்டுமே பிளாஸ்டிக் பை வேண்டாம் என்பார்கள். கையில் எடுத்து
கொண்டு போய் விடுவார்கள் அல்லது வீட்டில் உள்ள பழைய
பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து வாங்கி போவார்கள்.
அதிலும் ஒரு பெரியவர் என்னிடம் "யாருக்கும் பிளாஸ்டிக் பேக்
கொடுக்காதிங்க, நீங்க மொதல்ல நிறுத்துங்க" என்பார்.

நான் கேரி பேக் கொடுப்பதை நிறுத்தினால் என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தால்,ஏதோ வருபவர்களிடம் முடிஞ்ச வரைக்கும்
பிளாஸ்டிக் பையை யூஸ் பண்ணாதிங்க என்று சொல்வதோடு சரி. சில பேர் எதிர் கேள்வி வேறு கேட்பார்கள் "அப்புறம் எப்படி இதெல்லாம் எடுத்துட்டு போறது" என்று. அவர்கள் கேட்பதிலும் தப்பு இல்லை.இவ்ளோ வருஷம் பழகியாச்சு நிறுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.


கூடிய விரைவில் நாங்களும் பேப்பர் பேக் உபயோகிக்க எல்லாம் முயற்சிகளும் எடுத்து வருகிறோம். பேப்பர் பேக் விலையும்
அதிகம் மற்றும் அதிக பொருள்கள் எடை தாங்குமா என்று
தெரியவில்லை. என்னால் முடிந்த வரை கடைக்கு வரும் மக்களிடம் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீமையை
எடுத்து கூறுவேன். நாமும் இனி முடிந்த வரை பிளாஸ்டிக்
பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்போம். நம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்லதை செய்வோம்.

எல்லா மக்களையும் சென்று அடைய முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை போடுங்க ஜி...

என்றும் அன்புடன்
ஜெட்லி.

Friday, August 21, 2009

கந்தசாமி - விமர்சனம்.

கந்தசாமி - விமர்சனம்.

நானும் நண்பரும் படத்தை மாயஜாலில் பார்ப்பது என்று முடிவு செய்து,
மாயஜாலை நோக்கி புறப்பட்டோம்.மதிய சாப்பாட்டு வேலை என்பதால்
வழக்கம் போல் மாயாஜால் முன்னாடி இருக்கும் ரேவதி ஹோட்டலில்
பரோட்டா மற்றும் வீச்சு சாப்பிட்டோம்.

படம் வழக்கம் போல் லேட் ஆகதான் போட்டார்கள், படம் பார்த்த பத்து
நிமிடத்திலேயே,வேகாதது பரோட்டா மட்டும் இல்லை கந்தசாமியும் தான்
என்று தெரிந்தது. இயக்கனர் சுசி அவர்களிடம் இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
ஒரு ஒரு காட்சிகளின் நீளமும் சற்று அதிகம் தான். என்னால் மூணு
மணி நேரம் உக்காந்து படத்தை பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.

நம் தமிழ் சினிமாவுக்கு வழக்கமான கதை தான் என்றாலும், படத்தில்
சில புதுமைகள் இல்லாமல் இல்லை.ஸ்ரேயாவுக்கு விக்ரம் ஒரு வரியில்
பதில் சொல்வது, கோழியாக வரும் கந்தசாமி எப்படி பறக்கிறார் என்று
லாஜிக் இடிக்காமல் சொல்லி இருக்கிறார் சுசி.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு
மிக அருமை. பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அதை பற்றி சொல்ல
தேவை இல்லை.

இருக்கிறவன் கிட்ட எடுத்து இல்லாதவன் கிட்ட கொடுக்கும் ராபின் ஹூட்
கதை தான் கந்தசாமி. ஆனால் உப்பு சப்பு இல்லாத காட்சிகளால் நம்மளை
நோக அடிக்கிறார் கந்தசாமி. ஹை டெக் என்ற ஒரு வார்த்தையை மட்டும்
எடுத்து திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் இந்த சாமி.
சண்டை போடுறவன் மெக்சிகோ நாட்டுல போட்ட எனக்கென்ன திரிசூலம்
மலையில சண்டை போட்ட எனக்கென்ன, என்னா ஒரு பில்ட் அப்.

கந்தசாமியிடம் இருந்து நம்மை மீட்பவர்கள் இருவர் ஒருவர் வடிவேலு,
இன்னொருவர் ஷ்ரேயா என்றால் மிகையல்ல.படத்தின் நீளம் நமக்கு
கண்டிப்பாக கொட்டாவி வர வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆக மொத்தம் WATCH AT UR OWN RISK.

போனஸ் செய்தி:

கந்தசாமி பார்த்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு ஒன்னும் இல்லங்க 40K.M ஸ்பீட்ல
தான் வந்தேன். எங்க இருந்து வந்தான் தெரியுல ஓவர் ஸ்பீட் அப்படின்னு
சொல்லி அம்பது ரூபாய் ஆட்டையை போட்டுட்டான். கந்தசாமி நல்லா
இல்லன்னு கூட எனக்கு வருத்தம் இல்லங்க, E.C.R. ரோட்ல 40K.M ஸ்பீட்ல
வந்தது தப்பாம்......?....

ஜெட்லி பஞ்ச்:

கந்தசாமி --- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சாமி.


இந்த விமர்சனம் பெரும் மக்களை சேர ஒட்டு போடவும்.

உங்கள்
ஜெட்லி.

Thursday, August 20, 2009

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-3.

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-3.




*******************************************

டேய் எவ்ளோ நேரம்டா... நீ மட்டும் பார்த்துட்டு இருப்பே...

*******************************************

பீர் கேன் கொஞ்சம் பெருசு.....

*******************************************
அப்படியே சாப்பிடுவேன்.....


*******************************************
நாங்க புதுசா டாஸ்மாக் ஆரம்பிக்க போறோம்....


*******************************************
அம்மா, இது உனக்கா இல்லை எனக்கா????



*******************************************
ஹை புதுசா ஒரு புல்லு...ஜாலி



*******************************************
இந்த படத்திற்கு எந்த வசனமும் தேவையில்லை....



*******************************************
புடிச்சா ஒட்டு போடுங்க....
உங்கள்
ஜெட்லி.

Monday, August 17, 2009

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

பொது அறிவு செய்திகள்.

ஜேட்லியின் முன்னுரை:

இந்த இடுகையை பொக்கிஷம் படம் பார்த்து புஸ்ஸாகி போன
நண்பர்களுக்கும் , டர்ராகி போன சகப்பதிவர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

*********************************************

புதுசா வர நடிகைங்க முதல்ல வரும் போது சில பேரு காட்டுவாங்க

சில பேரு காட்டமாட்டாங்க......,

முதல் படத்தில் காட்டலனா அடுத்த படத்துல காட்டுவாங்க.....

முதல் படத்தில் காட்டிடாங்கனா அடுத்து அடுத்து அவங்க
காட்டி எங்கயோ போய்டுவாங்க....

ஆனா கடைசி வரைக்கும் காட்டலனா வேலைக்கே ஆகாது
என்று ஒதுக்கி விடுவார்கள்.....

ஆமாம்,நான் நடிகைகள் திறமையை காட்டறது பத்தி பேசிட்டு இருக்கேன்,

நீங்க வேற எதுவும் தப்பா நினைக்கிலியே........
(தப்பா நினைத்தால் நான் பொறுப்பல்ல)

*************************************************

இன்னைக்கு காலையில கண்ணாடி பார்த்து முடி வாரும்
போது ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சு.வேற ஒன்னும் இல்லை,
முடி கொஞ்சம் அதிகமா கொட்டி போச்சு. அப்பதான் குப்புற
படுத்து யோசிச்சான் ஜெட்லி,தலையிலே முடி கொட்டறதுக்கு
பதில் நம் உடம்பில் வேற இடத்தில் முடி கொட்டுன நல்ல இருக்குமேனு..... நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க
நான் சொல்ல வந்தது தாடியை தான், ஏன் முகத்தில்
மட்டும் முடி கொட்ட மாட்டேங்கது?

தாடி கொட்டுன ரெண்டு நாளைக்கு ஒருக்கா ஷேவ்
பண்ற இம்சை இருக்காது இல்ல...........

*******************************


குசேலன் புகழ் சோனாவின் நேரலை நிகழ்ச்சி சமீபத்தில் இசையருவியில் ஒளிப்பரப்பு ஆனது. வழக்கம் போல் கவர்ச்சி
உடையில் வந்தார் சோனா. சோனா கிட்ட சொல்ற மாதிரி
ஒன்னும் இல்ல இருந்தாலும் அவங்களுக்கு எல்லாமே கொஞ்சம்
ஓவர் தான், நான் அவங்க மேக்-அப் மற்றும் பேச்சை சொல்கிறேன். அப்புறம் நமக்கு ஒரு பொது அறிவு கேள்விக்கு பதில் கிடைத்தது
அது, சோனாவுக்கு வெட்க படுகிற காட்சியெல்லாம் நடிக்க கஷ்டமாம், அவர் சொல்லியதை நீங்களே படிங்க......

"actually எனக்கு வெட்கம் வராது, அதனாலே வெட்கப்படுற மாதிரி
சீன் வச்சா வெரி கஷ்டம்.... நெறைய டேக் போவும் நான் வெட்கப்படறது டூ கஷ்டம்
".......

ரொம்ப கஷ்டம், எனக்கு வராது என்பதை தமிழில் சொல்லாமல்
அக்கா என்னா பில்ட்-அப் கொடுக்குது..... டி.வியை அனைத்து கடைக்கு நடையை கட்டினேன்.

*****************************************************************

சில மாதங்கள் முன் மாக்கான் என்ற பட பூஜையை கே.டி.வியில்
ஒளிப்பரப்பு செய்தார்கள். அதன் நாயகி கீர்த்தி சாவ்லாவின் பேட்டி
இதோ.......

"இந்தே FILMலே எனக்கி நல்லா ரோலு இருக்குது, FILMலே
நானு டமில் பொண்ணா நடிக்குது நல்லா SCOPE இருக்குது.
இந்தே MOVIEலே நாமே பேசுற மாதிரி டமில் இல்லே இதுலே
நல்லே சுத்த டமில் பேசுற பொண்ணா வருது
".....

ஜெட்லி பஞ்ச்:

செத்தாண்டா தமிழன்.

****************************************

மல்லிகா ஒ மல்லிகா :



இது ஒரு போது அறிவு கேள்வி....மேல உள்ள படத்தை
முப்பது வினாடிகள் பார்க்கவும்.... பார்த்தாச்சா...(படத்தை save
பண்ணும் வேலையெல்லாம் வேண்டாம்)

கேள்வி: மல்லிகா மேடம் அணிந்துள்ள ஆடை போட்ட பின்
கிழிக்கப்பட்டதா? அல்லது கிழிந்த பின் போடப்பட்டதா?


சரியான பதில் சொல்றவங்களுக்கு மல்லிகா உபயோகித்த
கைக்குட்டை அனுப்பி வைக்கப்படும்.

புடிச்சா ஒட்டு போடுங்க முக்கியமா பதிலை போடுங்க....


நன்றியுடன்
ஜெட்லி.

Thursday, August 13, 2009

திரைப்பட உலகில் நம் சகபதிவர்கள் இருந்தால்.....

திரைப்பட உலகில் நம் சகபதிவர்கள் இருந்தால்.....

இது எங்களது நூறாவது பதிவு என்பதால் கொஞ்சம் வித்தியாசமா
இருக்க நினைத்து, நம் பதிவுலக நண்பர்கள் பற்றி என் பார்வையில் என்று எழுதியுள்ளேன். யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை
எல்லாம் காமெடிக்கு தான்.அனைத்து பதிவர்களிடமும் அனுமதி
வாங்கிய பின் தான் போடுகிறேன்...அனுமதி வாங்கியதை விட ஒரு வரி எக்ஸ்ட்ரா இருக்கும் அவ்வளவுதான்.

********************************************************************

வால்பையன்.

எங்கள் அண்ணன் நெப்போலியன் வால்பையன் அவர்கள்
திரைப்பட உலகில் நுழைந்திருந்தால் எந்நேரமும் அவருக்கு
8p.m தான். வால் ஒரு royal stag என்பது உங்களில் பல பேருக்கு
தெரிந்திருக்கும். வால் நமக்கு எப்போதும் ஒரு teacher தான்.

வாலின் படத்தை பார்த்தாலே அவர் எவ்வளவு பெரிய
பலசாலி என்று உங்களுக்கு தெரியும், தன் ஒற்றை கையால்
புகைவண்டியை நிறுத்தியவர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்!!
(இப்போது புகைப்படத்தை மேலும் வெட்டி புகைவண்டியை
மறைத்துவிட்டு தன் தன்னடக்கத்தை நிருபித்துள்ளார்).
ஹாலிவுட் படம் சூப்பர்மேன் மாதிரி இங்கு வால் நடித்தால்
அது வால்மேன்!!!!!

போனஸ் செய்தி:

படத்தில் ஒரு காட்சியில் வால் அவர்கள்,தன் ஆள்காட்டி விரலால்
ராக்கெட்டை நிறுத்துகிறார்.

வால் பஞ்ச் டயலாக்:

"யாரு மொதல்ல குவாட்டரை குடிக்கிறாங்கனு முக்கியமில்லை
கடைசி வரைக்கும் யாரு வாந்தி எடுக்காம குடிக்கிறாங்கான்றது தான் முக்கியம்."
********************************************************************
நர்சிம்:

நர்சிம் ஸ்டில்லை பார்த்தா இவரு ஏன் இன்னும் படஉலகில்
வரவில்லை என்று கேள்வி எழுகிறது. உள்ள வந்தார்னு வைங்க
கமல், அஜித் எல்லாம் காலி.

கமல் பாதி


அஜித் பாதி


கலந்த ஸ்மார்ட் மேன் தான் நர்சிம்.(இதாண்டா ஐஸ்!!)

போனஸ் செய்தி:


பில்லா படத்தில் சில காட்சிகளில் அஜித்துக்கு பதில் நர்சிம்
அவர்கள் டூப் போட்டதாக வதந்திகள் உண்டு....

நர்சிம் பஞ்ச்:

புயலடிச்சு பொழச்சவன் கூட இருக்கான்
ஆனா இந்த நர்சிம் கலாய்ச்சி,பொழச்சவன் யாரும் இல்லடா....

********************************************************************

கேபிள் சங்கர்:

பேரை கேட்டாலே சும்மா உதறது இல்ல.... கடந்த 35 வருடங்களாக நான் யூத் யூத் என்று கூறி கொள்ளும் அண்ணன் சங்கர் அவர்கள்
வில்லன் கேரக்டர்க்கு சூட் ஆவருன்னு மேல உள்ள படத்தை பார்த்தால் தெரிகிறது , ஆனால் அவரை ஜெயா டி.வி யில் பார்த்த போது டெல்லி கணேஷ் போல் ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு, அதாவது ஒரு அழகான நாயகிக்கு அப்பாவாக நடிக்கும் தகுதி.

படத்தில் நடிக்க கேபிள் சங்கரின் நிபந்தனைகள்:

# படத்தில் நாயகி மூன்று முறை அழும் காட்சி இருக்க வேண்டும்.
(அப்பதானே கேபிள் அண்ணே கட்டி பிடிச்சி தேத்துவாறு).

# அண்ணனுக்கு ஜோடியாக அதாவது நாயகிக்கு அம்மாவாக
சிம்ரன் அல்லது நதியா நடித்தால் கேபிள் அண்ணனின் கால்ஷீட்
ஊறுதி.

********************************************************************

கார்க்கி:

நம்ம இளைய தளபதி, புரட்சி தளபதி இருவருக்கும் சரியான போட்டி
நம்ம கார்க்கி மட்டும் தான். ச்சே என்ன மாதிரி ஒரு ஸ்டில் அவரு
கொடுத்து இருக்காரு. இவரு சினிமாவுல நடிக்கலைனா இழப்பு
கார்க்கிக்கு இல்ல, சினிமாவுக்கு தான்.என்கிட்டே பல 'C'கள் இருந்தா
இவரை வச்சி படம் எடுப்பேன், நான் இங்க சில 'H'க்கே தடுமாறும்
போது நான் என்ன பண்றது........

போனஸ் செய்தி:

இவருக்கு படத்துல பைட் சீன்லாம் இல்ல,வில்லனை மொக்கையை
போட்டு போட்டு திருத்தி விடுவார்.

படத்தில் கார்க்கியின் பஞ்ச் டயலாக்:

கார் கீ வச்சிரிக்கிற எல்லாரும் கார்க்கி ஆக முடியாது டா.....

********************************************************************
தல சுரேஷ்(பழனி):


மொதல்ல இவரை தான் நம்ம பேரரசு பழனி படத்துக்கு புக் பண்ணாரு,அப்புறம் சுரேஷ் அவர்களுக்கு டைம் கிடைக்காததால் நடிக்க முடியவில்லை. அவருடைய லூக்கை பாருங்கள், இவரு
இந்த வசனத்தை சொல்லி இருந்தா எப்படி இருக்கும்,

நீ வெட்டறதுக்கு நான் இளனி இல்லடா பழனி.!!!

போனஸ் செய்தி:

அடுத்து பேரரசு இயக்க போகும் திருத்தணியில் அண்ணன் சுரேஷ்
தான் ஹீரோ என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.... ஊருக்குள்ள பார்த்து
இருந்துக்குங்கப்பா......

********************************************************************
செந்தழல் ரவி:


ரவி ஜி செம டெர்ரர் ஆன ஆளு என்று அவரின் புகைப்படத்தை
பார்த்தால் தெரிகிறது. ரவி இம்சை கொடுப்பதில் பெரிய ஆள் என்பதாலும் ,கையில் க்ளவுஸ் அணிந்து இருப்பாதலும் இவருக்கு வில்லன் ரோல் தான் சூட் ஆகும் என்பது என் கணக்கு.
வெளிநாட்டில் வில்லன் இருப்பது போல் படம் இருந்தால்
இவர் தான் முதல் சாய்ஸ். ரவி படத்தின் பின்னே பாருங்கள்
உலக மேப் எல்லாம் தெரிகிறது. ஒரே இடத்தில் இருந்து உலகத்தை
கலக்கும் ஒசாமாவுக்கு அடுத்து நம்ம ரவி தான்.

போனஸ் செய்தி:

செந்தழல் ரவி அவர்கள் படத்தில் மூன்று கற்பழிப்பு காட்சிகள் இருந்தால் இலவசமாக நடித்து கொடுப்பதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.....

படத்தின் டைட்டில் கார்டு
ரேப் நாயகன்
செந்தழல் ரவி
கிழிக்கும்
ஜன்னல் வச்ச ஜாக்கெட். DTS RDX

********************************************************************
ஜாக்கி சேகர்:


மேல உள்ள படத்தை பார்த்தா உங்களுக்கு தோணும் எண்ணம்,
யாருப்பா இவரு முகத்தில் பால் வடியுது என்று கேட்க தூண்டும்
ஒரு ஸ்டில்..... ஆனால் சேகரின் இடுகைகள் முக்கியமா சாண்ட்விச்
அண்ட் நான்-வெஜ் பயங்கரமா இருக்கும்.அண்ணன் பாக்க தான்
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருப்பார், ஆனா ஆள்
ரொம்ப விவகரமானவர்.அதனால சேகர் அண்ணனுக்கு
ஆன்டி ஹீரோ கேரக்டர் தான் செட் ஆகும்.

சேகர் அண்ணனுக்கு:

aunty ஹீரோ இல்ல அண்ணே anti ஹீரோ.

சேகர் அண்ணனின் பஞ்ச் டயலாக்:

அதிகமா ஆன்டி கூட சுத்துற பையனும்,
அதிகமா பசங்க கூட சுத்துற ஆன்டியோட பொண்ணும்
விளங்கனதா சரித்தரமே இல்லை.....

********************************************************************
சித்து:

இவரு வேற யாரும் இல்ல நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் தான்,
கொஞ்ச காலம் எழுதாம இருந்தாரு இப்போ திரும்பி எழுத ஸ்டார்ட் பண்ணிட்டார். சித்து போட்டோவை பார்த்தால் தெரியவில்லையா??. சித்துவே பெரும் தொழிலதிபர், அவர் நினைத்தால் எந்திரன் போன்ற மெகா பட்ஜெட் படத்துக்கு தயாரிப்பு செய்யலாம்.

நாங்கள் ஏர்காடு சென்ற போதே அவருக்கு ஒரு கதை ரெடி
பண்ணி அவரே தயாரிப்பதாய் ஒத்துக்கொண்டார், ஆனால்
அந்த கதையை மெருகேத்த நாங்கள் பகோடா பாயிண்ட்
சென்ற போது அந்த கதை பிட்டு படம் ரேஞ்க்கு சென்றதால்
அதோடு கைவிடப்பட்டது. ஒரு நல்ல இயக்குனரை சித்து
தேடி கொண்டு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

சித்து கண்டிஷன்:

# படத்தில் குறைந்தபட்சம் மூணு ஹீரோயின்கள் இருக்க வேண்டும்.

# படத்தில் மழையில் ரெண்டு பாட்டாவது இருக்க வேண்டும்.

# வெளியூர் படபிடிப்பின் போது நாயகிகள் தன் அறையில் மட்டுமே
தங்க வேண்டும்.....

********************************************************************
ப்ரியமுடன் வஸந்த்:



வஸந்த் படத்தை பார்த்தால் பெரிய உட்டு புள்ளை ,மாதிரி தெரியுது, அதுவும் ரோலேக்ஸ் வாட்ச் கடை முன்னாடி ஸ்டில்
வேற கொடுக்கிறாரு...என்ன ஒரு மரியாதை.... பேசாம விஜயகாந்த்
நடிச்ச மரியாதை படத்தில் இவரு ஹீரோவா நடிச்சிரிக்கலாம்....

மரியாதை படத்தில் வரும் வசனம்:

மீன் பிடிக்கிறவன் சில நேரத்துக்கு தூங்கிகிட்டே வலை விரிப்பான்,
ஆனா முழிச்சிகிட்டு இருக்குற மீன் மாட்டிக்கும் அது விதிப்பா..


அதுவே வஸந்த் சொன்னா :

ப்ளாக் எழுதுறவன் சில நேரத்துக்கு தூங்கிகிட்டே எழுதுவான்,
ஆனா அவனுக்கு விசிட்டர்ஸ் அதிகமா வருவாங்க அதுக்கு பேரு
விதிப்பா...........

********************************************************************

தொடரும்....,,,


புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, தவறு ஏதும் இருந்தால் திட்டுங்கள் வாங்கி கொள்வான் இந்த ஜெட்லி.

உங்கள்
ஜெட்லி. :)

Wednesday, August 12, 2009

வேறென்ன.....??? பன்றி காய்ச்சல் தான்!!!!!!!.

இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது அவனவன் டாக்டர் மாதிரி வாயில் கவசம் மாட்டிகிட்டு சுத்துறதும் தாலிபன் தீவிரவாதி மாதிரி கண்ண மட்டும் காட்டிட்டு முகத்த பூரா மூடிட்டு பேட்டி குடுப்பதும் தெருவுல சுத்துறதும் பார்க்கவே வினோதமா இருக்கு. இந்த மாதிரி முன்னாடி Anthrax மற்றும் SARS பீதி அமெரிக்காவுல சுத்தீட்டு இருந்தானுங்க இப்ப இங்கயும் பயம் வந்துடுச்சு. இந்த பயம் ஏற்பட்டதுக்கு முக்கிய காரணம் மீடியா தான், நொடிக்கு ஒரு முறை அங்க வந்துடுச்சு இங்க வந்துடுச்சுன்னு நல்லா கிளப்புறாங்க பீதிய, இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி (CNN-IBN) மொத்தம் 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 536 பேர் இதுவரை குணமாகி Discharge செய்யப்பட்டுள்ளனர் அதாவது 55% மேலும் மொத்தம் 13 பேர் இறந்துவிட்டனர் அதாவது 1.35% (இதில் அதிகம் இறந்தது குழந்தைகள் என்பது மிகவும் வருத்தம்). இதைப் பற்றி ஏன் இவர்கள் கூறி மக்களை ஆறுதலும் அமைதியும் கொள்ள செய்யக் கூடாது??, எவ்வளவு பெரிய மாநகராட்சிகளிலும் இருப்பதோ அதிகபட்சம் 3 மருத்துவமனைகள் தான் (அதாவது நோயை கண்டறிய செய்யும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள்) நிலைமை இப்படி இருக்க சும்மா ஐஸ் சாப்பிட்டு வரும் தும்மல் தலைக்கு குளிததனால் வரும் தும்மல் அப்புறம் மூக்கு போடி போட்டதனால் வரும் தும்மல் இருமலுக்கு கூட நேரா அங்க போய் பரிசோதனை பண்ண சொன்ன எப்படி?? இப்படி செய்வதனால் உண்மையாக நோய் இருப்பவர்கள் கூட சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் இல்லையா?? அல்லது அங்கு செல்வதனால் நோய் தொற்றிக் கொண்டால்?? கொஞ்சம் அமைதியாக பதட்டம் இல்லாமல் யோசிச்சி செயல்பட வேண்டும்.

இது போன்ற நோய்கள் காலம் காலமாக வருவது உண்டு, ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் தாக்கம் பெரிதாகிறது. இதற்கு காரணம் VIRUS கிரிமிகள் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் நாம் அவ்வளவு நோஞ்சானாக மாறிவருகிறோம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. நம் உணவு முறை, வேலை செய்யும் முறை, உடல் உழைப்பின்மை, தூங்க நேரமின்மை. இப்படி பல காரணங்கள் உண்டு.

பொதுவாக எனக்கு தெரிந்த மருதுவர்களிடத்தில் பேசியதில் இது மிகவும் பயப்பட வேண்டிய நோய் இல்லை என்று கூறினர். வேகமாக பரவக் கூடியது தான் அதில் ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் இது யாரை தொற்றிக் கொள்ளும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தான். அதனால் தான் சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர், வேறு ஏதேனும் பெரிய நோய் உடையவர்களுக்கும் இது வேகமாக பரவுகிறது.



இந்த மாதிரி நேரத்தில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வர், ஒருவர் துளசி சாபிட்டால் வராது என்று கூறினார் எனக்கு என்னமோ சரிதான் என்று படுகிறது ஏனென்றால் துளசியில் பல்வேறு பயன்கள் உண்டு. சாப்பிட்டு தான் பாருங்களேன், ஆனால் மக்கள் போகிற வேகத்தை பார்த்தல் ஊரில் ஒரு துளசி செடி மிஞ்சாது போல.

நண்பன் ஒருவன் அனுப்பிய மினஞ்சல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் படித்து பாருங்கள், நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை
மன்னிக்கவும்.

Scientific Prevention of Swine Flue using Household Products

Inhale Clove Oil (Lavang) For 1 Second.
Chew 1 Clove In a Day
Eat Raw Garlic (Lasun), Onion, Ginger (Aale) (1 to 5gm)
Drink Hot Milk With 2gm of Turmeric
Consume Plenty Of Vit C Fruits-Lemon/Avala

Precautions for swine flu
1. Wash your hands frequently

Use the antibacterial soaps to cleanse your hands. Wash them often, at least 15 seconds and rinse with running water.

2. Get enough sleep

Try to get 8 hours of good sleep every night to keep your immune system in top flu-fighting shape.

3. Drink sufficient water

Drink 8 to10 glasses of water each day to flush toxins from your system and maintain good moisture and mucous production in your sinuses.

4. Boost your immune system

Keeping your body strong, nourished, and ready to fight infection is important in flu prevention. So stick with whole grains, colorful vegetables, and vitamin-rich fruits.

5. Keep informed

The government is taking necessary steps to prevent the pandemic and periodically release guidelines to keep the pandemic away. Please make sure to keep up to date on the information and act in a calm manner.

6. Avoid alcohol

Apart from being a mood depressant, alcohol is an immune suppressant that can actually decrease your resistance to viral infections like swine flu. So stay away from alcoholic drinks so that your immune system may be strong.

7. Be physically active

Moderate exercise can support the immune system by increasing circulation and oxygenating the body. For example brisk walking for 30-40 minutes 3-4 times a week will significantly perk up your immunity.

8. Keep away from sick people

Flu virus spreads when particles dispersed into the air through a cough or sneeze reach someone else’s nose. So if you have to be around someone who is sick, try to stay a few feet away from them and especially, avoid physical contact.

9. Know when to get help

Consult your doctor if you have a cough and fever and follow their instructions, including taking medicine as prescribed.

10. Avoid crowded areas

Try to avoid unnecessary trips outside.

நன்றி.
சித்து.

Tuesday, August 11, 2009

இரத்த தானம்.

இன்று எனது தூரத்து உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு காலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே தான் நான் WWW.INDIANBLOODDONORS.COM என்ற தளத்தில் சென்று இந்த வேண்டுகோள் வைத்தேன். நானும் இந்த தளத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு என்னுடைய B+ve இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தருபவர்களின் செல் என் தந்தனர், ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.பத்ரி நாராயணன் என்ற அன்பர் உடனே வந்து தானம் தருவதாக சம்மதம் தெரிவித்து நேரில் கிளம்பி வந்து விட்டார். அவர் தென்சென்னையில் ஒரு முன்னணி பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார், ஆனால் அவர் வந்தவுடன் இந்த மருத்துவர்கள் இன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் இரு தினங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர். இது என்ன நியாயம்??? ஒரு மனுஷன் வேலை வெட்டிய விட்டுபுட்டு மனிதாபிமானத்தோட வராரே இப்படி செஞ்சா அவரு மனசு எவ்வளவு சங்கடப்படும்?? இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................

இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.

நன்றி.
சித்து.

Monday, August 10, 2009

இது எங்க ஏரியா பார்ட்:2

இது எங்க ஏரியா பார்ட்:2

போன பகுதியில் எங்க திருவான்மியூர்
ஏரியாவில்
அமைந்துள்ள தியேட்டர் பற்றி சொன்னேன்,
இந்த வாரம் E.C.R ரோட்டில் உள்ள
தியேட்டர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரார்த்தனா மற்றும் ஆராதனா தியேட்டர்.

பிரார்த்தனா தென்னகத்தின் முதல் டிரைவ்-இன் தியேட்டர்.
இங்கே படம் பார்த்தால் தரையில் மெத்தை விரித்து கொண்டு
கூட பார்க்கலாம்(படத்தை சொன்னேன்!!).காருக்கு டிக்கெட்
அம்பது ரூபாய், ஒரு ஆளுக்கு 120 ரூபாய் கொஞ்சம் காஸ்ட்லி
தான்.நாம உன்னிப்பா படம் பார்த்துட்டு இருப்போம் தீடிர்னு
ஒரு நாய் உடால ஓடும் அதெல்லாம் நீங்க கண்டுக்கபிடாது.

சவுண்ட் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, ஓபன் தியேட்டர்
என்பதால் சவுண்ட் தரம் கம்மியாக தான் இருக்கும்.மிச்சபடி
நீங்க கார்ல உள்ள வந்துட்ட யாரும் உங்களை தொந்தரவு
செய்யமாட்டாங்க. நீங்க படம் பாக்கலாம் இல்லன என்ன

வேணா பண்ணலாம்.

கேலேரியில் உட்கார்ந்து பார்ப்பது சுத்த வேஸ்ட், டிக்கெட்

விலை அறுபது ரூபாய் தண்டம். பிளாஸ்டிக் நாற்காலி,
மொக்கை சவுண்ட் இது தான் கேலேரி. காரில் வந்து பார்ப்பதே
சால சிறந்தது, வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

ஆராதனா:

இந்த தியேட்டர் இது வரைக்கும் என் வாழ்வில் மர்மமாவே
இருக்கும் ஒரு புதிரான இடம். தியேட்டர் உள்ளே போன
கடைசியில் இருட்டாகவே இருக்கும் அந்த இடம் முழுவதும்
காதல் ஜோடிகள் தான்.

இங்கு இருக்கும் ஆபரேட்டர் கொஞ்சம் கல் நெஞ்சுகாரர், நான்
இது வரை பார்த்த படங்களில் ஒன்றிரண்டை தவிர அனைத்து படங்களையும் இருபது நிமிஷம் ஒருக்கா நிறுத்தி நிறுத்தி போடுவார்.

போனஸ் செய்தி:

ஒரு நாள் 11.30 படம்ன்னு டிக்கெட் எடுத்துட்டேன்,மணி

கரெக்ட்ஆ 11.30 ஆச்சு. செக்யூரிட்டி கிட்ட டிக்கெட் கொடுத்து
படம் போட்டாச்சா என்று கேட்டேன்.

அதற்கு அவர் " அதோ அங்கே லுங்கி கட்டிட்டு வெளியே
உட்கார்ந்து இருக்காரே அவர் தான் ஆபரேட்டர், அவர்
போய்த்தான் படம் போடுவார்" என்றார்

உள்ளே போய் உட்கார்ந்தேன் மணி 11.45 என்னடா இன்னும்
படம் போடல அப்படின்னு யோசிக்கும் போது ஆபரேட்டர்
உள்ளே வந்து சீட்இல் கொஞ்சம் நேரம் உட்கார்ந்தார். கொஞ்ச
நேரம் வெறும் ஸ்க்ரீனை மட்டும் பார்த்தார்.அப்புறம் ஒரு பத்து
நிமிஷம் கழிச்சு போய் படத்தை போட்டார். (என்ன ஒரு வில்லத்தனம்!!)

படத்தை ரசித்து பார்ப்பவர்கள் இங்கே வந்தால் கண்டிப்பாக
டென்ஷன் ஆவார்கள். படத்தை அடிக்கடி நிறுத்தி அல்லது

சவுண்ட் சரியில்லாமல் போடுவதை திருத்தி கொண்டால்
கோடி புண்ணியமாக போகும்.

காதலர்களுக்கு எச்சரிக்கை:

படம் ஓடிட்டு இருக்கும் போது தீடிரென்று செக்யூரிட்டி டார்ச்
லைட் அடித்து அப்போ அப்போ செக் பண்ணுவார்... அதனால
கொஞ்சம் காதலர்கள் உஷாராக இருப்பது நல்லது.

மாயாஜால்:

காதலர்களின் சொர்க்க பூமி என்று
சொல்லப்படும் மாயாஜாலில் இருப்பது
பத்து தியேட்டர்கள். ஸ்க்ரீன் ஆறுக்கு மேல் அனைத்தும் கொஞ்சம் புதியவை.
சீட்கள் எல்லாம் நல்ல இருக்கும்.படத்தை ரசித்து பார்க்கவேண்டும்
என்றால் மாயாஜால் தான் வர வேண்டும்.ஏன் என்றால் ஒரு
பத்து பேர் தான் படம் பார்ப்பாங்க,யாரும் யாரையும் தொந்தரவு
செய்ய மாட்டாங்க,கத்த மாட்டங்க, காதலர்கள் அவர்களின் வேலையில்
குறியுடன் இருப்பதால் படத்தை ரசித்து பார்க்கலாம்.


கிழே உணவாக தளம் இருக்கிறது இரண்டு பேருக்கு குறைந்தது
நானுறு ரூபாய் இருந்தால் அரை வயிறு சாப்பிடலாம். படத்துக்கே
இரண்டு பேரின் டிக்கெட் 240 வாங்கி விடுவதால் அரை வயிறு
தான் சாப்பிட முடியும்.


மிச்ச படி சவுண்ட், ஏ.சி எதையும் குறை சொல்ல முடியாது.
இன்டெர்வல் டைம் வெறும் அஞ்சு நிமிஷம் தான், இந்த ஒரு
விஷயம் மட்டும் தான் எனக்கு அவர்களை பிடித்ததற்கு காரணம்.
கந்தசாமி இங்கே தான் போலாம் என்று ப்ளானில் இருக்கிறேன்.
ஏன் என்றால் வேறு எங்கையும் எளிதாக டிக்கெட் கிடைக்காது.

போனஸ் செய்தி:

மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும்
விலையும் குறைவு சிக்கன் குழம்பும் சுவையாக இருக்கும்.
அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க......

இது எங்க ஏரியா பார்ட்:ஒன்று படிக்க கிளிக் செய்யவும்.


முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை கூட போடலாம்.

உங்கள்
ஜெட்லி

Saturday, August 8, 2009

பொது அறிவு செய்திகள்

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


ரொம்ப முக்கியமான ஆராய்ச்சியில் கடந்த ரெண்டு நாட்களாக
ஈடுபட்டு இருந்தேன்(நம்புங்க ஜி!!!), அதாவது அணில் கடிச்ச
பழத்தை மன்னிக்கவும் கமல் கூட நடிச்ச நடிகையோடு
தலைவர் ரஜினி ஜோடி சேருவதில்லை, அதாவது தனக்கு
முன் கமல் உடன் ஜோடி போட்ட நடிகையை ரஜினி

ஜோடியாக போடுவதில்லை.


உதாரணங்கள்:

சிநேகா, சிம்ரன், ஜோதிகா... இவர்கள் அனைவரும் உச்சத்தில் இருந்தபோதும் ரஜினி பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சந்திரமுகியில் கூட ஜோதிகா பிரபுவுக்கு தான் ஜோடி.

பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை
மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.

இன்னும் இந்த ஆராய்ச்சி முழுவதுமாக முடியவில்லை, முடிந்தவுடன் விரிவான அறிக்கையுடன் உங்களிடம் சமர்பிக்கிறேன் .முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்
வழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா?

*********************************
அடுத்த ஆராய்ச்சி....

போன வாரம் பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன்ங்க,...
உங்கள் பார்வைக்கு

பெண் கற்பழிப்பு.
கல்யாணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் கைது.

பெண்ணின் சம்மதம் இல்லமால் உறவு கொண்டால் அது
கற்பழிப்பு. மேல உள்ள செய்தியை படித்தால் எனக்கு ஒரே
குழப்பமா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு
வைத்து கொண்டது அந்த இருவரின் தப்பு. என்னால் இந்த
செய்தியில் ஒத்து கொள்ள முடியாதது காரணம் கற்பழிப்பு
என்ற
ஒன்று மட்டுமே......

ஏன் இதை கற்பழிப்பு என்று கூறுகிறார்கள்.
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.....

*****************************************
முடிஞ்சா ஒட்டு போடுங்க பாஸ், அப்படியே பின்னூட்டமும் போடுங்க.

ஆராய்ச்சி தொடரும்
ஜெட்லி.

Wednesday, August 5, 2009

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.


சென்னை அண்ணாசாலையில் உள்ள கெயிட்டி தியேட்டரை
ஒரு வழியாக இடித்து விட்டார்கள், அங்கே ஷாப்பிங் மால் வரபோகிறது என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். அந்த இடித்த
தியேட்டரை பார்க்கும் போது என் எண்ணத்தில் உதித்த சில
மலரும் நினைவுகள் உங்களுக்காக, நான் சொல்லும் செய்தி
மூலம் உங்களுக்கும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
மேலும் மலரும் என்று நம்புகிறேன்.

ஐந்து வருடங்கள் முன்:

நானும் என் நண்பன் ராஜ்(பெயர் மாற்றபட்டுள்ளது) கெயிட்டி
தியேட்டரில் ஓடும் மலையாள படத்துக்கு போனோம். சிட்டி சென்டர் என்பதால் அவ்வளவாக பிட் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது.இடைவெளி நேரம் பொதுவாக இந்த மாதிரி தியேட்டரில்
முக்கா வாசி பேர் இடைவெளியுடன் போய் விடுவார்கள், ஆனால்
நாங்கள் தன்னம்பிக்கையுடன் அடுத்த பாதியையும் பார்க்க முடிவு
செய்தோம்.

அப்போது நண்பர் ராஜ் தனக்கு சிகரட் வேண்டும் என்று,தான்
கிளாசிக் மெந்தால்(classic menthol) மட்டும்தான் அடிப்பதாக கூறி
என்னை வாங்க சொன்னார். நான் "ஐயோ என்னால் முடியாது"
என்று மறுத்து விட்டேன் இந்த மாதிரி தியேட்டரில் பில்டர்
இருந்தாலே பெரிய விஷயம் என்று எனக்கு தெரிந்தது தான்
காரணம்.

நண்பர் ராஜ் கான்டீன் சென்று கேட்டார்.....

ராஜ்(தன்னம்பிக்கையுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால்
ஒன்னு கொடுங்க...

கான்டீன் ஆள் ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும்
சொல்லாமல் வேறு திசை திரும்பி விட்டார்.

ராஜ்(விடாமுயற்சியுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால் இருக்கா?

கான்டீன் நபர்: தம்பி பில்டர் மட்டும் தான் இருக்கு, இதுக்கே
இங்கே நாறுது.... மெந்தால் வேணுமா இவருக்கு....!!!


ராஜ்: சரி எது இருக்கோ கொடுங்க........(என்னை பார்த்து)என்ன நண்பா இது ஒரு மெந்தால் கூட இல்ல... ச்சே.

போனஸ் செய்தி:

கெயிட்டி தியேட்டரில் பிட் போடுவது குறைவு என்றாலும் என்றாவது ஒரு நாள் பிட் பார்ப்போம் என்று நாங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து சென்றது தனி கதை....

********************************************

கேட்க மறந்த கேள்வி:

நான் கல்லூரி படிக்கும் போது நடந்த சம்பவம்.

அன்று எங்கள் மேம் பாடம் நடத்தி கொண்டு இருக்கும்
போது சுற்று அறிக்கை வந்தது, அதாவது நாளைக்கு விடுமுறை
என்றும் வரும் சனிக்கிழமை அதற்காக கல்லூரி இருக்கும் என்று
மேம் அந்த அறிக்கையை வாசித்தார்.

என் பக்கத்தில் உள்ள நண்பன் "எதுக்கு மேம் நாளைக்கு லீவ்?"
என்று கேட்டான்.

"நாளைக்கு வரலட்சுமி விரதம் அதான் லீவ்" என்றார் எங்கள் மேம்.

உடனே நான் என் நண்பனின் காதில் "மேம் என்னைக்கு விரதம்
இருப்பாங்க அப்படின்னு கேளு மச்சான் நமக்கு இன்னொரு நாள்
லீவ் கிடைக்கும் இல்ல" என்றேன்.

"என்னடா உளர்றே?" என்றான் நண்பன்

"ஏன்டா வரலட்சுமி , விரதம் இருந்தா லீவ் விடுறாங்க, நம்ம
தீபலட்சுமி மேம், விரதம் இருந்தா லீவ் உடமாட்டங்களா?"
என்றேன்.

"இரு இப்பவே கேக்குறேன்" என்ற என் நண்பனின் வாயை கணினி
லேப் மார்க்கை நினைத்து பொத்தினேன்.

******************************************************

நீங்கள் படித்ததை அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


உங்கள்
ஜெட்லி

Monday, August 3, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ்(3.8.09):
**********************

மல்லாக்க படுத்து யோசிச்சது:

டாஸ்மாக் தத்துவம்:

பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,

**********************
இன்றைய சிந்தனை:
(அல்லது)
ஜெட்லி தத்துவம் நெ.3444

அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்.




*********************************
படித்தது:

GOD BE WITH YOU என்பதன் சுருக்கம் தான் நாம் இப்போது கூறும்
GOOD BYE.

*****************************************
பொன்மொழி:

அழகான பெண் ஒரு ஆபரணம், நல்ல பெண் ஒரு பொக்கிஷம்.

- ஸாடி.

***********************************
காதில் விழுந்த செய்தி:

திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டரை அடுத்த
மாதம் முதல் சத்யம் தியேட்டர் நிர்வாகம் லீசில் எடுக்க போகிறது.
இவளோ நாள் அம்பது ரூபாய்க்கு படம் பார்த்தேன், இனிமே என்ன
ரேட் வைக்க போறாங்களோ!!!!

***********************
இன்று ஒரு தகவல்:

குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி:

ஏதோ புதுசா பயோ பீர் அப்படின்னு ஒன்னு வருதாம், இதுல
பத்து விதமான மூலிகைகள் அடங்கி இருக்காம். அப்புறம்
முக்கியமான் விஷயம் இதுல்ல alcahol 5 முதல் 7 சதவிதம்
வரைக்கும் இருக்காம்......
என்ன இருந்தாலும் நம்ம சிங்கத்தின் தாகத்தை தணிக்கும்
zingaro போல வருமா????

*****************************************

படித்தது உண்மையா என்று தெரியவில்லை....

கியூபா நாடு முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தாடி வளர்த்து
கொண்டதற்கு ஒரு காரணம், அமெரிக்கா கியூபாவுக்கு பிளேடுகள்
ஏற்றுமதி செய்ய தடை விதித்தால்தான்...

******************************

இது ஏ ஜோக்கா??? கொஞ்சம் பெருசு(ஜோக்கை சொன்னேன்!!)


ஓர் புதுமண தம்பதிக்கு அன்று தான் முதல் இரவு.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் அம்மா காலை
சிற்றுண்டிக்காக முதல் மாடியில் இருக்கும் தன் மகனையும் அழைத்தாள். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தாங்க

உடனே அம்மா "சரி நாம சாப்பிடுவோம், அவுங்க வர
லேட் ஆகும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...."என்று
மாப்பிள்ளையின் தம்பி ஆரம்பித்தான்.

"நீ ஒன்னும் நினைக்கவேணாம்,ஒழுங்கா சாப்பிடு"
என்று அதட்டினாள் அம்மா.ஆனால் புதுமண தம்பதிகள்
காலை உணவுக்கு ரூமை விட்டு வெளிய வரவில்லை.

திரும்பவும் மதிய உணவுக்கு அம்மா தன் மகனை
சாப்பிட அழைத்தாள்.

திரும்பவும் அனைவரும் மகன் மருமகளுக்கு வெயிட்
பண்ணினார்கள்.நேரம் செல்லவே அனைவரையும் சாப்பிட
சொன்னாள் அம்மா.

"ஏன் இன்னும் வரலை?" என்று கேட்டவாரே சாப்பிட
ஆரம்பித்தாள் அம்மா.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...." என்று மாப்பிளையின்
தம்பி திரும்பவும் வாயை திறந்தான் .

"டேய் உனக்கு பத்து வயசு தான் ஆகுது, நீ ஒன்னும்
நினைக்க வேணாம். ஒழுங்கா சாப்பிடு" என்று மறுபடியும்
அதட்டினாள் அம்மா.

அவர்கள் மதிய சாப்பாடும் சாப்பிட வரவில்லை. இரவு வந்து
விட்டது. திரும்பவும் அதே கதை தான்.அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டாள், உடனே தம்பி "அம்மா நான் என்ன நினைக்கிறேனா"... என்றான்.

அம்மா கோபம் வந்து சொல்லி தொலை என்றாள்.

"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.
******************************


புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.