Thursday, August 27, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....???(27.8.09)

நேற்று தினகரன் பேப்பரில் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ....

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தமிழில் முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பெண் ஒருவரை நான்கு ஊழியர்கள்
அசிங்கமாக பேசி தாக்க முயன்றனர்.அந்த நான்கு ஊழியர்களும்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.என்ன கொடுமை சார் இது...?
தமிழ் நாட்டுல தமிழ்ல எழுதுன அடிக்க வராங்க,
அதுவும் வேறு ஊரில் இருந்து பிழைக்க வந்தவர்கள்.

சரி அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, அதுக்கு ஏன் திட்டனும்,

தாக்க முயற்சி பண்ணனும்??..
தமிழ் நாட்டுல தமிழில் எழுதினால் தப்பா?

இப்படி தான் கொஞ்சம் காலம் முன்னாடி மணியார்டர்

விண்ணப்பத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தி
மட்டுமே உள்ள விண்ணப்பத்தை விற்றார்கள்...
வர வர தமிழன் கிள்ளு கிரையாக போய் கொண்டு
இருக்கிறான். தமிழ் நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை.
வேற என்னத்த சொல்ல......


*******************************************

இனிமே என்னை மொக்கை படத்துக்கு கூப்பிட்ட
ஒதை உழும்... ஜாக்கிரதை!!!

******************************************************

வாமனன் படத்துக்கு மலேசியா கூட்டு போறாங்கோ,
ஆறுமனமே படத்துக்கு துபாய் கூட்டு போறாங்கோ,
கந்தசாமி படத்துக்கு பாரிஸ் கூட்டு போறோங்கோ......

இப்படியே போன படம் பார்க்கும் நபர்களுக்கு நெறைய
பரிசு தருவாங்க போல......இந்த மாதிரி படத்தை
பார்ப்பவர்களுக்கு தியாக செம்மல் விருது வழங்க வேண்டும்.

என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அந்த டாக் படம்
பிடித்திருந்தால் மட்டுமே டிக்கெட் காசு தருவான்....
அது போல் மேல உள்ள பரிசுக்கு பதில் படம் திருப்தி
தரவில்லை என்றால் காசை திருப்பி கொடுக்குற மாதிரி
திட்டம் வகுத்தால் நல்லா இருக்கும்.....

நீங்க என்ன நினைக்கிறிங்க???

*************************
புடிச்சா ஒட்டு போடுங்க
உங்கள்
ஜெட்லி

5 comments:

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

லோகு said...

தமிழன் எவ்ளோ அடுச்சாலும், தாங்குவான்னு நெனச்சுட்டானுங்களா.. தொலைச்சிடுவோம்..
பாரீஷ்க்கா.. கூட ஸ்ரேயாவையும் அனுப்புராங்கன்னா சொல்லு, நான் படம் பாக்குறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

//பரிசுக்கு பதில் படம் திருப்தி
தரவில்லை என்றால் காசை திருப்பி கொடுக்குற மாதிரி
திட்டம் வகுத்தால் நல்லா இருக்கும்.....//

நல்ல யோஜனை ஜி

வால்பையன் said...

/இனிமே என்னை மொக்கை படத்துக்கு கூப்பிட்ட
ஒதை உழும்... ஜாக்கிரதை!!!//

இனிமே மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதினாலும் இதே தான் தல!

Anbu said...

:-))