Friday, November 25, 2011

மயக்கம் என்ன... ஒரு பார்வை..





மயக்கம் என்ன...

என்னமோ தெரியல மயக்கம் என்ன படம் எனக்கு பிடிச்சு இருக்கு... இதை ஏன் நான் முதல்லே சொல்றேன்னா தியேட்டர்ல அவ்வளவா ரெஸ்பான்ஸ் இல்ல..காரணம் காலேஜ் பசங்க... படம் கொஞ்சம் மெதுவா தான் போச்சி....கமெண்ட் பண்றேன்னு சொல்லி வண்டை வண்டையா வாயிலே இருந்து எடுத்து விடுறானுங்க....அதனால சத்தியமாஅவங்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு இல்ல... அவங்க எதிர்ப்பார்த்தது மாப்பிளை
மாதிரி படமா இருந்து இருக்குமோ..??

கார்த்திக்...அதாங்க நம்ம தனுஷ்... போட்டோகிராபர் ஆக வருகிறார்... அவங்க நண்பர் கூட்டம் அப்புறம் யாமினியாக நம்ம ரிச்சா... ரிச்சா உண்மையிலே ரிச்சாதான் இருக்காங்க...கதை இது தான் நண்பனின் காதலி ரிச்சா ஆனா ரிச்சா தனுஸ் மேல லவ்வு... கல்யாணம் பண்றாங்க... தனுஷ் எடுத்த போட்டோவை ஒருத்தன் லவட்டிட்டு அவார்ட் வாங்குறான்...அப்போ தனுஷ்க்கு ஒரு விபத்து...அதற்கு அப்புறம் அவர் கொஞ்சம் மனநிலை
பாதிக்கப்படுகிறார்... அதற்கு அப்புறம் நீங்க தியேட்டர் ல பாருங்க....


பிடிக்காதது.. காதல் என் காதல் பாட்டு வந்த இடம் பொருள் எனக்கு என்னமோ சரியா வரலை.... லிரிக்ஸ் கூட அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி இல்ல... அது ஒன்னியும் தான்.

பிடிச்சது....நிறைய இருக்கு.... போட்டோகிராபர் கேரக்டர்... தனுஷ் காட்டில் படம்
எடுக்கும் காட்சிகள்... படத்தில நிறைய இடத்தில பின்னணி இசை இல்லாமல்
வரும் காட்சிகள் நன்றாக இருந்தது. இண்டர்வலும் சரி படம் முடிஞ்சதும் சரி
அவங்க பேரு போட்டாத்தான் தெரியுது.....!!

தனுஷ் தனுஷ்....கார்த்திக்காக வாழ்ந்து இருக்கிறார் மனுஷன்.... அந்த டூபாகூர்
நாய் மாதிரி வேலை செய்ஞ்சு காட்டு என்று சொல்லும் காட்சியில் தனுஷ்
செம... ஏக்கம், சோகம், காதல், என்று மனிதர் பிரித்தும் பிரிக்காமலும் மேய்ந்து
இருக்கிறார்...


நண்பனின் காதலியை லவட்டிய பிறகு நண்பனின் அப்பா ரெண்டு பேருக்கும்
சரக்கு ஊற்றி கொடுத்து பிரச்சனையை தீர்ப்பது புதுசு..... ரிச்சா உண்மையிலே
செம ஆக்டிங் கொடுத்து இருக்காங்க...

எனக்கு ஏனோ இந்த படம் பிடிச்சு இருக்கு...இன்னும் நிறைய சொல்லணும்னு
ஆசை தான் ஆனா டைம் இல்ல....!!


ஜெட்லி...)சரவணா...

Monday, November 21, 2011

திருவான்மியூர் டூ கோவளம்....!!

திருவான்மியூர் டூ கோவளம்....!!






அட அது ஒண்ணும் இல்லைங்க...டிஜி கேமரா ஒண்ணு வாங்குனேன்... எங்க ஏரியாவை சுத்தி காக்க, பூனை தான் கண்ணுக்கு சிக்குது அதனால அப்படியே முட்டுக்காடு போயிட்டு கோவளம் வரைக்கும் சும்மா படம் எடுத்துட்டு திரும்பிட்டேன்....!! சில படங்கள் கொஞ்சம் சேக் ஆயிருக்கு...அதே மாதிரி ஜூம் பண்ண குவாலிட்டி கொஞ்சம் சரி இல்ல...இருந்தாலும்
போடுறேன்...










ஆபத்தான ஈ.சி.ஆர் பயணம்....








கடைசியா ரிட்டன் வரும் போது சோளிங்கநல்லூர் கட்டிங் முன்னாடி ஒரே கையேந்தி
பவனில் ஆப்பம் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தாச்சு.... அட ஆப்பத்தை பத்தி ஒண்ணும்
சொல்லலயேனு யாராவது கேட்டா என் பதில்...என் வாழ்க்கையில் இப்படி ஒரு
ஆபத்தை சாப்பிட்டதே இல்லைங்க...ஆப்பத்துக்கான ஒரு அறிகுறியும் அதில் இல்லை..!!
நெக்ஸ்ட் வேடதாங்கல் போலாம்னு ப்ளான் வச்சிருக்கேன்...பார்ப்போம்...!!


ஜெட்லி...(சரவணா...)