Friday, July 30, 2010

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....


மன்னிக்க வேண்டுகிறேன் :


ஒரு பதிவில் அவளின் உணர்ச்சிகள் என்ற படத்தில் மௌலி
இருக்கிறார் என்று தவறாக பதிந்து விட்டேன்... பார்ப்பதற்கு
அவர் போலவே இருந்ததால் தவறாக கூறிவிட்டேன்....
இதனால் நான் படம் பார்த்துட்டு தான் பதிவு போடுறேன்னு
நினைக்காதிங்க.... இன்னைக்கு பேப்பரில் அந்த மனிதரின்
படம் தெளிவாக தெரிகிறது.... அப்புறம் இது ஒரு ஹிந்தி
படம் டப்பிங் ஆக இருக்கும் என்பது என் கணிப்பு....
இந்த படம் பார்த்தவர்கள் அவர்களின் பொன்னான கருத்தை

இங்கே பகிர்ந்து கொள்ளலாம்...!!



சால்ட்:

சால்ட் படம் பார்த்து அஞ்சு நாள் மேல ஆச்சுனாலும்....நானும்
அந்த படத்தை பார்த்தேன் அப்படின்னு உங்களுக்கு தெரிவிக்கவே
இந்த டைட்டில். அதுசரி...சால்டில் என்ன ஸ்பெஷல் அப்படின்னு
கேட்டா, வேற யாரு நம்ம ஏஞ்சலின ஜோலி தான்.அது தவிர
படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்திலே வர்ற உதட்டு முத்தமும்
ஸ்பெஷல்னு சொல்லலாம்.


சால்ட் என்ன கதை அப்படின்னு பார்த்தா நமக்கு தெரிஞ்சு எல்லா
ஹாலிவுட் ஹீரோக்களும் நடித்த அதே சி.ஐ.ஏ கதை தான் சால்ட்டும்.
என்ன இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அவ்வளவுதான்.
ஏஞ்சலின ஜோலி பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.... ஆக்சன் காட்சியில் நல்லாவே பண்றாங்க.

\


ஒரு நண்பர் இன்னும் 80 ஆண்டுகள் கழித்து கூட நம் தமிழ்
சினிமாவில் ஏஞ்சலின ஜோலி மாதிரி ஆக்சன் காட்சியில்
நடிக்க எந்த நடிகையும் வர மாட்டார் என்று போட்டிருந்தார்.
இப்ப நான் சொல்றேங்க சால்ட் பட ஏஞ்சலின ஜோலியை
விட நம்ம அக்கா சிநேகா, பவானி ஐ.பி.எஸ் படத்தில்
ஆக்சன் காட்சியில் மீஞ்சுவார் என்று நம்புவோம்!!


********************

மர்யாத ராமண்ணா (தெலுங்கு)



இது வரைக்கும் தமிழ், ஆங்கில டப்பிங், ஆங்கில படங்களே
அப்புறம் அட்டு மலையாள படங்களை மட்டும் பார்த்து
கொண்டிருந்த நான், வேதம் படத்திற்கு பின் மீண்டும் அதே
காசினோ தியேட்டரில் போய் இந்த படத்தை பார்த்தேன்.
இந்த படம் நல்லா இருக்கு என்று பார்க்க சொல்லி
கதையும் சொல்லி...பார்த்தாச்சா...சீக்கரம் பாருங்க என்று
நண்பர் வெண்டைக்கா யுவராஜ் பரிந்துரை செய்தார்.


ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்து இருக்கிறார். காமெடியன்
தானே என்னத்த பெருசா கிழிக்க போறார் என்று போய் பார்த்தால்...
என்னாமா டான்ஸ் ஆடுறாரு, என்னாமா ரியாக்சன் கொடுக்கிறார்
சுனில். பல காட்சிகளில் வசனம் இல்லாமலே சிரிப்பையும்
பரிதாபத்தையும் வரவைக்கிறார் இந்த ஹீரோ. கதாநாயகி
சலோனி கூட சூப்பர்ஆ இருந்தாங்க. தமிழ்ல நடிச்சா நல்லா
இருக்கும்.


கதைனு பார்த்தீங்கனா கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான்.
அதாவது வில்லன் வந்து எதிரியே அவங்க வீட்டுக்கு வந்தாலும்
நல்லா உபசரிச்சு சாப்பாடு போட்டு கை துடைக்க துண்டு
கொடுத்து நல்ல மரியாதை கொடுப்பாங்க...ஆனா வீட்டு
வாசல் தாண்டினவுடன் அவங்களை காலி பண்ணீடுவாங்க...
இதை தெரியாம அப்போ தான் நம்ம சுனில் பூர்விக சொத்து
விக்க அந்த ஊருக்கு போறார்...வில்லன் கும்பல்க்கு சுனீலை
பழி பல வருஷமா காத்துகிட்டு இருக்காங்க...சுனில் அது
தெரியாம அவங்க வீட்டுக்குள் விருந்தாளியை போய்டுறார்...
அப்புறம் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.


இந்த படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் 1930 களில் வந்த ஒரு
படத்தின் காப்பி என்றும்,இல்ல... நம்ம கௌதம் வாசுதேவ்
மேனன் ஸ்டைலில் சொல்லனும்னா "INSPIRATION" னு
சொல்றாங்க.... ஆனா இந்த படத்தில் ஆந்திரா வாசனை
அப்படியே அடிக்கிறது கண்டிப்பாக ராஜாமௌலி சீன்
பை சீன் உள்ஜட்டி கூட மாற்றாமல் எடுத்திருக்க மாட்டார்
என்று நம்புவோம். நன்றாக உழைத்து இருக்கிறார் என்று
தெரிகிறது.


இப்ப நான் ஏன் பழைய இங்கிலீஷ் படங்களை தேடி போய்
டோர்ரென்ட் அல்லது பர்மா பஜாரில் போய் வாங்கி பார்ப்பதில்லை
என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். எப்படியும் நம்ம ஆளுங்க
அதை தமிழ் தெலுங்கு படத்தில் கொண்டு வந்து விடுவார்கள்
என்ற நம்பிக்கை தான் காரணம்.

பேக் டூ ராமண்ணா...!!

உங்களுக்கு ரெண்டு ஹவர் டைம் பாஸ் கியாரண்டி தருகிறார்
மர்யாத ராமண்ணா. மொழியே தெரியாமலே படம் சுவாரிசியமாக
போகிறது. படத்தில் டச்சிங் சீன்களும் இருக்கின்றன. நான்
கடைசி காட்சியில் எங்கே நாயகி வில்லன்களிடம் பேசியே
நல்லவங்கள் ஆக்கிடுவங்களோனு பயந்தேன்...நல்ல வேளை
அப்படி இல்லாம படம் நன்றாக முடிந்தது. சுனில் ட்ரெயின்இல்
அடிக்கும் கூத்து செம....!!ஆனால் சுனில்க்கு ஒபெநிங் சீன்
கொஞ்சம் ஓவர் தான்....! படத்தில் லாஜிக் கூட பார்க்க கூடாது...

கண்டிப்பா இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வார்கள் என்று
நம்புகிறேன்... தெலுங்ம்மாயி...தெலுங்ம்மாயி....சும்மா இந்த
படத்தில் வர்ற பாட்டை பாட ட்ரை பண்ணேன்ங்க...நீங்க
பயப்படாதீங்க....!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# காசினோ, சென்னையின் பழைய தியேட்டர். இன்னும் அப்படியே
தான் இருக்கு. பால்கனிக்கும் கிழேயும் ஒரே ரேட் தான். அம்பது
ரூபாய். நம்ம மெலோடி போல. பால்கனி மட்டும் புல் ஆச்சு.

# படம் ஆரம்பிக்கும் முன் டான் சீனு என்ற புது படத்தின் ட்ரைலர்
போட்டார்கள்... ரவி தேஜாவும், ஷ்ரியாவும் நடிக்கிறார்கள்...
நல்ல மசாலா படமா வரும்னு நினைக்கிறேன்...

# ஒரு ஜோடி படம் பார்க்க வந்து முதல் பாட்டிலே எந்திருச்சு
போய்ட்டாங்க....ஏன் அவங்களுக்கு படம் பிடிக்கலையா இல்ல
தியேட்டரில் இருந்த கூட்டம் பிடிக்கலையானு பார்க்கிங் டிக்கெட்
கொடுத்தவருக்கே வெளிச்சம்.


# இடைவெளியின் போது பவன் கல்யாண் நடித்த, ஏ.ஆர்.ஆர்.
இசை அமைத்த, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய கோமரம் புலி
ட்ரைலர் போட்டார்கள் தியேட்டரில் செம கத்து, விசில்...
இருந்த நூறு பெருக்கே இப்படி விசிலா என்று வியந்தேன்...!!


இந்த இடுகை பல பேரை சேர உங்கள் வாக்கினை செலுத்துங்கள்...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Wednesday, July 28, 2010

சினிமா பேசுவோம்!!!

சினிமா பேசுவோம்!!!

சும்மா அரட்டை அடிப்போம்....சினிமா பத்தி ஏதாவது
பேசுவோம்....


நமக்கு பொழுது போவனும் அதுக்காக தான் நாம படத்துக்கு போறோம், வெளியே சுத்த போறோம்...வேற என்னலாமோ பண்றோம். சில பேருக்கு சினிமானாலே அலர்ஜியா இருக்கலாம்...சில பேருக்கு வெளியே சுத்துருது அலர்ஜியா இருக்கலாம்...நாம அவங்களை பத்தி பேச வேணாம்,அவங்களுக்கு பிடிக்கலைனா நாம ஏன் போய் கட்டாய படுத்திக்கிட்டு... அதனால அவங்களை விட்டுருவோம்....!!


அதுக்காக சினிமா பார்க்கறவன் எல்லாம் முட்டாள்னு சொல்றாங்க
பாருங்க அவங்களை விட முடியாது. யாரோ ஒருத்தர் நம்மை
பார்த்து வாரம் ஆனா போது சினிமாவுக்கு போயிருவாண்ட என்று
சொன்னால் சில பேருக்கு கோபம் வரலாம். ஆனா எனக்கு வராது...
காரணம் ஒருத்தர் சொன்னது தான் " வாரம் ஆனா சினிமாவுக்கு
போனமா படத்தை என்ஜாய் பண்ணினோமா...நம்மாளா யாருக்கும்
எந்த தொந்தரவும் இல்ல...". ஆனா அவனும் படத்துக்கு போகாம
நம்மையும் நோண்டிக்கிட்டு அடுத்தவனையும் நோண்டிக்கிட்டு இருக்கறவங்களை என்ன சொல்றது...??!!


அதே மாதிரி படத்தை பற்றி கருத்து சொல்றது....என் நண்பன்
எந்த படத்தை பார்த்தாலும் பார்க்காத மாதிரி அந்த படத்தின்
கருத்தை கேட்பான்... உதராணமாக பையா படம் வந்தப்ப கேட்டான்...
"நான் அதை டைம்பாஸ் படம்...ஓகே" என்றேன். உடனே நண்பன்
"என்னடா கதையே இல்லை அதை போய் நல்லா இருக்குனு"
நக்கல் அடித்தான். உடனே நான் "அங்காடி தெரு பார்த்தியா"
என்று கேட்டேன். "இன்னும் இல்லை...அழுவாச்சி படமாமே அது"
என்றான் சிரித்து கொண்டே. "ஆமாண்டா.. கதை உள்ள படத்தை
போய் பார்க்காதீங்க....ஆனா பொழுது போற படத்தை பத்தி
சொன்னால் மட்டும் கிண்டல் பண்ணுங்க..." என்று கொஞ்சம்
சீரியஸ்ஆகவே சொன்னேன்.

நான் எனக்கு பிடிக்காத படங்களை பலருக்கோ சிலருக்கோ பிடித்து
இருந்தால் நான் அந்த பலர் சிலர் பற்றி விமர்சிப்பதில்லை.படத்தை பற்றி மட்டுமே பேசுவேன். உங்க டேஸ்ட் வேற என் டேஸ்ட் வேற... உங்களுக்கு பிடிச்சு இருந்தா சந்தோசம் தான் என்றும் எனக்கு ஏதாவது டவுட் இருந்தா கேட்டுப்பேன் அவ்வளவு தான். ஆனா ஒரு சிலர் தங்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றால் படத்தை பற்றி திட்டுவது மட்டும் அல்லாமல் படம் நல்லா இருக்கு என்று சொன்னவனையும் சேர்த்து திட்டுவார்கள் கலாய்ப்பார்கள். அதில் என்ன திருப்தி அவர்களுக்கு என்று
தெரியவில்லை....!!


சரி...நம்ம தமிழ் சினிமா எப்படி போகுது....ஆரோக்யமா போகுதா
இல்ல வீக்ஆ போகுதானுலாம் பார்க்க எனக்கு தெரியாது. இந்த
ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்லா இருக்கு சூப்பர்னு
சொல்ற மாதிரி சில படங்களை மட்டுமே சொல்ல முடியும்
என்பது மட்டுமே உண்மை. வேலுபிரபாகரின் காதல் கதைக்கு
முன் , பின் என்று தமிழ் சினிமாவை பார்த்தால் இப்போ

வர்ற படங்களில் அட்டு காட்சிகள் வைத்து விளம்பரம்
செய்து துட்டு பார்க்கிறார்கள். புதிதாக சாந்தி என்று ஏதோ
ஒரு அட்டு படம் வேற வர போது போல.... அதற்கு ஏற்ற
மாதிரி வூட்லாண்ட்ஸ், கோபிகிருஷ்ணா தியேட்டர்கள்
இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தருகின்றன. ஏற்கனவே
சொன்ன மாதிரி அவளின் உணர்ச்சிகள் என்று ஒரு அட்டு
படம் வருகிறது....!! (படத்தோட பேர் மட்டும் தான் நல்லா
இருக்கும்....)


முக்கியமா இவ்வளவு நேரம் மொக்கை போட்டதே இதுக்கு தான்... நேற்று பேப்பரில் வந்த செய்தி இது...

" சென்னை சினிமா தியேட்டரில் நடனமாடி ரகளை.....
படம் பார்க்க விடாமல் தொல்லை கொடுத்த 4 மாணவர்கள்
உள்பட 6 பேர் கைது"


இது எந்த தியேட்டர்ல நடந்ததுனு சொன்ன நம்ப மாட்டீங்க...
சத்யம் சினிமாஸ்இல் தான் இந்த சம்பவம் நடந்தது.
சத்யம் மாதிரி தியேட்டர்களில் போனாலே ஒரு ரேன்ஜ்...
விசில் அடிக்க தோணினா கூட அடிக்க யோசிப்போம்...
ஆனா இப்படி ஆறு பேரு தண்ணியை போட்டுட்டு நல்லா
கூத்து அடிச்சு இருக்காங்க...இதெல்லாம் எங்க ஏரியா
தியேட்டரில் சகஜம்ங்க.. ஆனா இப்ப எல்லாம் இந்த மாதிரி
டான்ஸ் ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க....


சினிமா பார்க்கும் போது எப்படி கமெண்ட் வருதுனு நான்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பா ஒரு மொக்கை
படத்துக்கு கமெண்ட் மட்டுமே ஒரு சிறு இன்பம். பல நேரங்களில்
படத்தை விட வரும் கமெண்ட்கள் நன்றாக இருக்கும்.ஆனா
அதுவே நல்ல படத்துக்கு கமெண்ட் அடிக்கும் போது தான்
நமக்கு தொந்தரவு ஆயிடுது. துணை கமிஷ்னர் வாழ்க...!
அவர் தான் இந்த தொந்தரவு நடந்தப்ப படம் பார்த்துட்டு
இருந்தாராம். நல்ல வேளை அவர் முதல் நாள் கணபதிராமில்
சிங்கம் பார்க்க வரல, வந்து இருந்தார்னா இந்நேரம் பாதி பேர்
உள்ளே தான் இருந்து இருக்கணும்....!!


அடுத்து....இன்னைக்கு....

பட தயாரிப்பாளரிடம் 25 ஆயிரம் லஞ்சம்...
சென்னையில் சினிமா தணிக்கை அதிகாரி கைது..!!


நான் நினைச்சேன்ங்க....தணிக்கை குழுவில் ஏதோ உள்ளடி வேலை
நடக்குதுனு. எல்லாம் துரோகம் நடந்தது என்ன?? படத்தை
பத்தி தான். அந்த படத்துக்கு 'ஏ' தர சான்றிதழ் கொடுத்திருக்கும் போதே நினைச்சேன். ஒரு படத்தை ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி அதை பார்த்து மக்களுக்கு எது எல்லாம் தேவை, தேவையில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது...எவ்ளோ பெரிய வேலை இது.... அதை சிறப்ப செய்வாங்கனு பார்த்தா இங்கயும் லஞ்சமா.... மக்களே இதில் இருந்து என்ன கருத்து நாம கத்துக்கணும்னா....இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!


இந்த போஸ்ட் மொக்கையா, மரண மொக்கையா என்று
நீங்களே முடிவு செய்து...ஒரு முடிவுக்கு வாங்க....

ஜெட்லி...(சரவணா...)

Monday, July 26, 2010

மேதை - ஒரு இசை பயணம்!!

மேதை - ஒரு இசை பயணம்!!



மேதை இசை கானம் இல்ல இசை வெள்ளம் இல்லை இசை சுனாமினு
கூட சொல்லலாம்...நம்ம தினா அவ்வளவு அருமையா மியூசிக் போட்டு
இருக்காரு...!!இந்த அளவுக்கு இந்த டைமில் இப்படி மியூசிக் போட நம்ம
எஸ்.ஏ.ராஜ்குமாரால் மட்டுமே முடியும் என்று நினைத்த போது...
என்னாலையும் முடியும் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.


மேதையா.... கொக்கா??

உள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்,நீங்க நினைக்கிறதை கிழே நானே சொல்லிடுறேன்.....

" டேய் நீ மொக்கைனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு மொக்கையா
இருப்பேன்னு நினைக்கிலைடா....."
னு தப்பா நினைக்க கூடாது....

எந்திரனுக்கு ஒரே போட்டி மேதை தான்.

இப்போ சவால் விடுறேன்ங்க முடிஞ்சா ஷங்கர் எங்கள் மக்கள்
நாயகன் ராமராஜனின் மேதை படம் வரும் போது எந்திரன்
படத்தை ரீலீஸ் பண்ண சொல்லுங்க.... அப்புறம் தெரியும்
எங்கள் டவுசர் பாண்டி பவர்!!

ராமராஜனுக்கு சிறப்பு விருது:

'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா' விருது :

எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தைரியமாக பேட்டி கொடுத்ததால்
அவருக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

(எனக்கும் ராமராஜனுக்கும் ஒரே ஒற்றுமை... நானும் ஹிந்து
பேப்பரில் படம் மட்டும் தான் பார்ப்பேன்!!)



மியூசிக் ஸ்டார்ட்ஸ்....


அன்னை ஒரு குழந்தை :

இந்த பாடலை பாடியவர் நம்ம ஜேசுதாஸ்... அன்னைக்கு இந்த பாட்டு சமர்ப்பணம். எனக்கு ஒரு டவுட் இருக்கு கடைசியில் கேட்குறேன்....


எப்போதும் எல்லாருக்கும் :


பாட்டு ஸ்டார்டிங்கே செம பீட்...எஸ்.பி.பி குரல் இந்த பாட்டுக்கு மிக பெரிய பலம். இந்த பாட்டை கேட்டாலே நாடி, நரம்பு , துரும்பு எல்லாமே ஆடிடும்னு நம்புறேன்....

சாம்பிள் வரி...

" புதுசாக தொறந்தாச்சு உனக்கு ஒரு பாதை
அதை போட்டு தந்தானே அவன் தான் மேதை.."


என் உயிர் தங்கங்களே :


இந்த பாடலை பாடியவர் உன்னி மேனன்...நல்ல கருத்துள்ள
சமுதாய பாடல். அனைவரும் கேட்க வேண்டிய பாடல்.


நிலவுக்கு பிறந்தவள் இவளோ :


ஹரிஷ் பாடியுள்ளார். டூயட் பாட்டு. இந்த கண் கொல்லா காட்சியை
பார்க்க இப்பவே என் கண்கள் துடிக்கிறது. தலைவர் ஏங்கே எல்லாம்
மோப்பம் புடிக்க போறாரோ....


தும்பிக்கை தொப்பை :


என்னையா கரக்காட்டகாரன் பாட்டை ரீமிக்ஸ் பண்ணிட்டாங்கல..
என்று யோசிக்கும் போதே....பாட்டு வேறு திசை நோக்கி போகிறது..
இந்த பாட்டை கேட்டாலே...வேறு ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...



இன்னும் ரெண்டு பாட்டு இருக்குங்க.....இதுக்கு மேல என்னால
முடியல... வேணும்னா நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கிங்க....
ஆனா ஒண்ணு இந்த பாட்டு ஆடியோ சி.டி. வாங்க கடைக்கு
போனா கடைக்காரன் ரியாக்சன் என்னவாக இருக்கும்னு நினைச்சு
பாருங்க... கடைக்காரர் வாங்குனா மூணு சி.டி.யில் முதல் சி.டி.யும்
கடைசி சி.டி.யும் வாங்குற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்கனு
மட்டும் சொல்ல முடியும்... சி.டி வாங்குனா மாலை மரியாதை
கூட பண்ணலாம் பண்ணுவாங்க... பீ கேர்புல்!! நான் இந்த சி.டி.யை
வாங்கனதா நினைச்சா அது உங்க தப்பு. ஆனா எப்போ மேதை
பாட்டு என் சிஸ்டம்இல் வந்ததோ அன்னைலியிருந்தே சிஸ்டம்
மக்கர் பண்ண ஆரம்பிச்சு...இன்னைக்கு நான் இணைய கடையில் இருந்து
மக்கள் நலன் கருதி போஸ்ட் பண்றேன்..என்பது குறிப்பிடதக்கது.





என் டவுட் இதுதான்ங்க இந்த பாட்டு எல்லாம் இருபது வருஷம் முன்னாடி
வர வேண்டியது...தெரியாம லேட் ரீலீஸ் பண்ணீட்டாங்க,,, இருந்தாலும் நாம
படத்துக்கு போறோம்...அது அம்பத்தூர்ல ரீலீஸ் ஆனாலும் சரி திருவள்ளூர்ல
ரீலீஸ் ஆனாலும் சரி...முதல் நாள் முதல் ஷோ போறோம்...!


***************************************


வாடா படம் மீட்பு போராட்ட குழுவின் முக்கிய அறிவிப்பு :

எங்கள் சூப்பர் பாக்கு அண்ணன் சுந்தர்.சி நடித்த வாடா படத்தை
முடக்க பல சக்திகள் முயன்று வருகின்றன. அந்த சக்திகளை
முறியடிக்க மந்தைவெளி மூத்திர சந்தில் கூடிய விரைவில் மாபெரும்
போராட்டம் நடக்க இருக்கிறது...அனைவரும் திறந்து சாரி திரண்டு வாரீர்,,,,!!

***********************************
எப்போதும் எல்லோருக்கும் நல்லதை செய்...
தப்பாம நன்மை வரும் நம்பிக்கை வை....!!


ராமராஜன் கல் உடைக்கிறார் (ராக்ஸ்).

ஏதோ ஒரு குறிப்பு:

அடுத்து சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும் என்ற இடுகை
போடலாம் என்று இருந்தேன்...சிஸ்டம் பணால் ஆனதால் முடியாது
போல.... முடிந்தவரை சீக்கரம் சரி பார்க்கிறேன்!!

இந்த இடுகையை நீங்க லைக் பண்ணா உங்கள் கருத்தையும்
வாக்கையும் போடுங்க....இப்போதைக்கு மீ எஸ்கேப்....


ஜெட்லி...(சரவணா...)

Friday, July 23, 2010

தில்லாலங்கடி - பக்கத்துக்கு வீட்டு பார்வை.

தில்லாலங்கடி - கிக்கா இல்லையா...??




எப்படியா, இவ்ளோ பெரிய கூட்டத்தை மெய்ச்சி படம் எடுக்குறாங்கன்னு
இயக்குனர் ராஜா மேல் எனக்கு பொறாமை உண்டு. படத்துக்கு மிக
பெரிய ப்ளஸ் ஸ்டார் கேஸ்ட் தான். அப்புறம் என்ன.... கிக் திரைக்கதை
தான்.



கணபதிராம் தியேட்டர் முழுவதுமே கல்லூரி பசங்க தான்...அது
என்னமோ தெரியல சன் டி.வி படம்னாலே கூட்டம் வந்திருது.
கிக் படத்தை நான் தெலுங்கில் பார்க்கலைங்க...ஆனா இலியானா
வர்ற சீன் மற்றும் பாட்டை எல்லாம் பார்த்து இருக்கேங்க...
அந்த முதல் சீன்ல இலியானாவா தமன்னாவானு போட்டி வச்சா
இலியானாக்கு தான் முதல் இடம்...ஆனா தமன்னாவை பார்த்தும்
பெருமூச்சு விட்டது தியேட்டர் கூட்டம்.




ரவி...இளம் புயலாம்... ஏன் இப்படி அடைமொழி வச்சிக்கிட்டு இருக்கார்னு தெரியில. ரீமேக் நாயகன்னு கூட வைக்கலாம் காரணம்
சில பல காட்சிகளில் டான்ஸ்களில் ரவி தேஜாவை பார்த்த மாதிரி
தான் இருந்தது. ரவி என்ன கேரக்டர்னு தமன்னாவையும் குழப்பி
நம்மையும் குழம்ப வைக்கிறார்.


தமன்னா இந்த படத்தில் தாராள கொள்கையை கடைப்பிடித்திருக்கிறார்..
வழக்கமா தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் வரும் கதாநாயகி
வேடம் தான். தன் வேலையை சரியாக செய்து இருக்கிறார். கடைசியில்
காணாமலும் போய் விடுகிறார்.


வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்...தூக்கில் தொங்கி தன்
மகன் ஊஞ்சல் ஆடும் போதும், தமன்னாவுடன் அயன் அன்பே அன்பே
பாட்டிலும், போலீஸ் ஆக வரும் மன்சூர் அலிகான் பாம்ப் சீனும்
காமெடி சரவெடி. சந்தானம் பற்றி சொல்லவே வேணாம். இடைவெளிக்கு
அப்புறம் வந்தாலும் அவர் வரும் சீன் எல்லாமே காமெடி அதகளம்
தான். ஜான் விஜய், மயில் சாமி கூட்டணியும் ஜோர்..!!


ரவியின் அப்பாவாக பிரபு... இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா
என்று கேட்கும் அளவுக்கு பையனுடன் சேர்ந்து கூத்து அடிக்கிறார்...
பிரபுவும் ரவியும் போலீஸ் ஸ்டேஷன்இல் அடிக்கும் கூத்து நல்ல
ரகளை.அம்மாவாக சுஹாசினி...சும்மா வந்து போறாங்க... அப்புறம் இன்னொருத்தர் ஷாம், பெரிய கேரக்டர் ஆ ஊனு சொன்னாங்க...
இதை தான் நம்ம சரண்ராஜ் ஜென்டில்மேன் படத்திலே செய்தாலும்
ஷாம் செய்வது ஏதோ ஓகே தான்....!!


கேம் ஸ்டார்ட்ஸ் நௌ !!

GAME STARTS NOW இந்த வாக்கியத்தை படத்தில் இடைவெளிக்கு அப்புறம் எல்லாரும் பயன்ப்படுத்துவாங்க....அதையே நாமும்
யூஸ் பண்ணுவோம்....


படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா....படத்தோட
ஓடுற நேரம்..மூணு மணி நேரம் படமெல்லாம் ரொம்ப ஓவர்
சாமி... நடுவுல நிறைய மொக்கை சீன் வேற வருது....
அதுவும் இண்டர்வல் டைமில் ரவி மாஸ்க் போட்டு கொண்டு
அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சில் கொள்ளை அடிப்பது எல்லாம்
ரொம்பவே ஓவர்...!!


இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... நான் அதிமேதாவி,
என்னை யாரும் ஏமாத்த முடியாது, பூ சுத்த முடியாது அப்படின்னு
நினைக்கிறவங்க இந்த படத்தை தவிர்ப்பது நலம். ஏன்னா காதில்
கூடை கூடையாக பூ, காய் , மரம் என்று சுற்றுவார்கள்.ஆனா இதில் வரும் அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நாம் காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் ராபின்ஹூட் படங்களை தான் நினைவுப்படுத்தி சலிப்பையும் தருகிறது.


மற்றபடி ஒரு பொழுதுபோக்கு, டைம் பாஸ் படம் தான் இந்த தில்லாலங்கடி. சில பல காட்சிகள் போர் அடிக்கிறது. முக்கியமா படத்திற்கு யுவனின் பாடல்கள் பெரும் பின்னடைவு. பாட்டு வந்தாலே கடுப்பா இருக்கு. இந்த படத்தில் ரவிக்கு எதை பண்ணினாலும் கிக் வேணும் என்பார்... நமக்கும் கிக் வேணும்னா ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம். சும்மா ஒரு வாட்டி பார்க்கலாம்...அடுத்த ரவுண்ட் அடிச்சா மட்டை தான்.....!!



தில்லாலங்கடி - கிக் கொஞ்சம் கம்மி தான்!!


தியேட்டர் நொறுக்ஸ் :


# ஒரு காட்சியில் ரவி தமன்னாவிடம் "கருமம் புடிச்ச லவ்"
என்று சொல்வார்...

இங்கே நம்ம ஆட்கள் செம கைத்தட்டு... ஒருத்தர்
"சூப்பர் மாமே..." என்றார்.


# படத்தின் நடுவில் ரவி மற்றும் வடிவேலுவை அனிமேஷன்இல்
காட்டுவார்கள்...அதற்கு பின்சீட்காரர்...

" இதுக்கு நான் வீட்லயே..சுட்டி டி.வி. பார்த்து இருப்பேன்"
என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்.

# இண்டர்வல் அப்பவே பல பேர் "என்ன ரவி.... கடைசியில்
போலீஸ்ஆ வருவார்...அதானே நடக்கும்" என்று பேசிகொண்டே
கலைந்தனர்.



# கடைசியில் படம் முடிந்து பேர் போடும் போது... கட் சீனில்
இளைய தளபதி விஜயை கிளாப் அடித்து படம் ஆரம்பித்த
காட்சியை காட்டினார்கள்....தியேட்டரில் செம விசில்...!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்....


நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Thursday, July 22, 2010

கனவு வேட்டையும் போஸ்டர் வேட்டையும்!!!

கனவு வேட்டை:





கனவு வேட்டை (INCEPTION) படத்திற்கு கடந்த வெள்ளியே போய்
இருக்க வேண்டியது கூர்க் செல்ல வேண்டிய காரணத்தால் இன்று
தான் பார்த்தேன். பைலட் தியேட்டரில் இன்று தான் கனவு வேட்டை கடைசி நாள் என்பதால் சுமார் நுப்பது பேர் இருந்ததே அதிசியம். அதுவும் தியேட்டர்க்காரன் படம் முழுவதும் ஏ.சி. போட்டது மிக பெரிய அதிசியம்.



வேட்டை ஆரம்பம்டோய்.....!!


கனவு வேட்டை பற்றி ஒரு தமிழ் நாளிதழில் படித்த நினைவு...
கதாநாயகன் வேறு லியோநார்டா என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு
என்னுள் இருந்தது. படம் போட்டவுடனே அப்போ அப்போ கொஞ்சம்
சவுண்ட் கட் பண்ண ஆரம்பிச்சான் நம்ம ஆராதனா தியேட்டர்
மாதிரி. அதிலே எனக்கு கண்ணு சொக்க ஆரம்பிச்சுருச்சு... கண்
அசந்த நேரத்தில ரெண்டு மூணு கனவு வேற வந்திருச்சிங்க.
ஒரு வேளை இது தான் கனவு வேட்டையோ....??


படத்தில் நான் பார்த்த வரைக்கும் எனக்கு புரிஞ்சுது இது தாங்க..
நம்ம ஹீரோ ஒரு குழுவா அடுத்தவங்க கனவுக்குள் போய்
களவாடுராறு. சில சமயம் கனவுக்குள் போய் கனவுக்குள்ளயே
கனவுக்குள்ளும் போறாங்க. அதாவது நம்ம தமிழ் சினிமாலா
சில படத்தில் வருமே பிளாஷ்பேக் உள்ளயே பிளாஷ்பேக் அந்த
மாதிரி.... ஆனா இந்த கனவு வேட்டை வேற... ஆக மொத்தத்தில்
எனக்கும் ஒன்னுமே புரியலைன்னு சொல்ல முடியாது...ஏதோ
கொஞ்சம் புரிஞ்சுது...ஆனா புரியல....!! சரி ரைட் விடுவோம்..

***********************************

போஸ்டர் வேட்டை :


நானா தேடி போய் இப்படிப்பட்ட போஸ்டரை படம் பிடிக்கறது
இல்லைங்க...அப்படியே போகும் போதும் கண்ணில் பட்டா
எடுக்கறது உண்டு...நாம ரசிச்சதை மற்றவர்களும் ரசிக்கட்டுமே
என்ற ஒரே காரணம் தாங்க...

சின்ன தளபதி பரத்:



எங்கள் அண்ணன் சின்ன தளபதி பிறந்தநாள் போஸ்டரை
பார்த்ததும் அசந்துட்டேன்.... இப்படியெல்லாம் கூட காமெடி
பண்ணுவாங்களானு ஒரே சிரிப்பு...ஏற்கனவே facebook , ஓர்குட்
என்று இந்த போட்டோவை அப்டேட் பண்ணாலும்... அதை
பார்க்கதவங்களுக்கு இங்கே...... சின்ன தளபதியை யாரும்
நக்கல் பண்ண கூடாது...சொல்லிப்புட்டேன் ஆமாம்....



அவளின் உணர்ச்சிகள் :




இப்ப நம்ம தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் கஷ்ட காலம்னு நினைக்கிறேன்.... அட்டு படத்துக்கு தான் இப்போ விளம்பரம் அதிகமா வருது... அவளின் உணர்ச்சிகள் போறதுக்கு முன்னாடி அந்தரங்கம் பற்றி கொஞ்சம் பேசுவோம்....


உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை.எங்க பக்கத்துக்கு வுட்டு பொக்கை வாய் தாத்தா "நான் எப்போ அந்தரங்கம் படம் போவேன்" னு கேட்டு, நான் பார்த்துட்டு வந்து அவர்க்கிட்ட சீன் இருக்கா இல்லையானு சொன்ன பிறகு தான் அவர் போவேன்னு ஒத்தகாலில் நிக்குறார்.... நான் என்ன பண்றது சொல்லுங்க... எனக்கு என்னமோ அந்த படம் நல்லா இருக்காதுனு தான் தோணுது..... என் நண்பன் ஒருவன் சிவப்பு விளக்கு பார்த்து நொந்து விட்டான்..காரணம் கேட்டதற்கு படத்தில் சிவப்பு விளக்கை கூட காட்டவில்லையாம்.....!!


சரி அவளின் உணர்ச்சிகள் படத்துக்கு வருவோம்... இந்த படம்
போஸ்டர் பார்த்தவுடன் அடுத்த அட்டு படம் ரெடி ஆயிடுச்சு
டோய் என்று மகிழ்ந்தாலும். இந்த மாதிரி அட்டு படங்கள்
மக்கள் காசை வீணடிக்கிறது. இந்த மாதிரி படத்தால் மக்கள்
காசை ஒரு சில கும்பல்கள் நாமம் போட்டு விடுகிறார்கள்
என்பதே உண்மை.

காதலர் கட்சி :



கொஞ்ச நாள் முன்பு பெசன்ட் நகர் பீச்க்கு போகும் போது இந்த
போஸ்டர் கண்ணில்ப்பட்டது. சில வருடங்களுக்கு முன் இது
போல் ஒரு கட்சி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால்
இப்போது தான் அதன் தலைவரை பார்க்கிறேன். ஒரு தடவை
தேர்தலில் நின்றதாக கூட நினைவு...ஆனா எத்தனை ஓட்டு
வாங்கினார்னு தெரியலை...... ஆனா ஒண்ணு கடைசி வரி...
காதலர்களின் புரட்சி தலைவர் குமார்...ஹி ஹி...!!
யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.


இந்த இடுகை பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

Wednesday, July 21, 2010

கூர்க் - பயண அனுபவங்கள்.

கன்னட மண்ணில் சில நாட்கள்...

நான் கூர்க் போறது தீடிர்னு தான் முடிவாச்சு. நண்பர் ஜீத்தின் அழைப்பின் பேரில் மைசூர், கூர்க் செல்ல வெள்ளிக்கிழமை இரவு சென்ட்ரல் அடைந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடித்தோம். நான், ஜீத், பார்த்திபன், சுரேஷ், சிவசூரியன், கோபிகிருஷ்ணா, சண்முகம், ரமேஷ் என்று மொத்தம் எட்டு பேர் சென்றோம்.


ரெயிலில் போகும் போதே பயணம் களை கட்ட ஆரம்பித்து
விட்டது. ரெயில் பெங்களூர் அடைந்த போது குளிர தொடங்கி
விட்டதால் எங்களில் சிலருக்கு தூக்கம் கலைந்து விட்டது.
பின்பு மைசூர் வரை கொஞ்சம் நேரம் பேசி கொண்டும் மறுபடியும்
கொஞ்சம் நேரம் தூங்கி கொண்டும் போனோம். ரெயில் பயணத்தில்
மைசூர் செல்லும் வழியில் அருமையான இயற்கை காட்சிகளை
ரசித்தோம்.ஜீத் ஏற்கனவே ஹோட்டல் மற்றும் கார் புக் பண்ணிவிட்டதால்..நாங்கள் ஸ்டேஷன் இறங்கியவுடன் காரில் ஏறினோம்...



எங்கள் பிளான்...முதலில் கூர்க் பார்த்து விட்டு ரிட்டன் வரும்
போது மைசூர் பார்க்கலாம் என்பதே. அதனால் கூர்க் மடிகரி
நோக்கி வண்டி ஓடியது..நடுவில் மைசூரில் நலபாக் என்னும்
ஹோட்டலில் காலை உணவை முடித்தோம். வடை நன்றாக
இருந்தது. பொங்கல் தான் மோசம். நம்ம ஊரில் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கொடுக்கும் குழைகஞ்சி போல் இருந்தது. சாம்பாரோ என்னவோ இனிப்பா இருந்தது.


மடிகரி முன்னாடி ஒரு இடத்தில் தொங்கும் பாலத்தில் சென்று
அங்கே ஓடிய ஆறில் அனைவரும் குளியல் போட்டோம்.
ஆற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. கால் சரியாக
வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அடிப்படும். அங்கேயே
ஒரு மணி நேரம் மேல் செலவு செய்தோம். நண்பர் சண்முகம்
கடைசியில் ஸ்டில் எடுக்க ஆசைப்பட்டு கேமரா எடுக்க போகும்
போது ஜீத்தின் செல்போன் தவறி தெரியாமல் தண்ணீரில் விழுந்து விட்டது.. கொஞ்சம் நேரம் தேடி பார்த்தோம் கிடைக்கவில்லை..!!


மதியம் கூர்க் மடிகரி சென்று அடைந்தோம். அங்கே ஹில் ஸ்டேஷன் என்ற ஹோட்டல் தான் நண்பர் புக் செய்து இருந்தார். நான் கூர்க் போறதுக்கு முன்னாடியே நம்ம வீடுதிரும்பல் மோகன்குமார் அண்ணன் எழுதிய கூர்க் பதிவை மீண்டும் ஒரு முறை படித்தேன். ஹில் ஸ்டேஷன் ஹோட்டல் பற்றி அவர் எழுதி இருந்ததால் அங்கே நாங்கள் உணவை சாப்பிடவில்லை.
மற்றபடி ரூம் எல்லாம் ஓகே தான்,,,




அப்போ அப்போ மழை பெய்ததால் கொஞ்சம் சங்கடமா இருந்தது...
ராஜாஸ் சீட் என்ற இடத்தை பார்க்க போனோம்....அந்த காலத்தில்
ராஜா அங்கே உட்கார்ந்து தான் சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பாராம்...
நாங்கள் அங்கே போகும் போது வெறும் பனி தான் தெரிந்தது... ஆனால் இயற்கை காட்சிகள் செம...




அப்புறம் நைட் உடிப்பி ஹோட்டலில் பார்சல் வாங்கி வந்து கொஞ்சம் நேரம் சீட்டில் கழுதை விளையாடி படுத்து விட்டோம்.அடுத்த நாள் காலையில் டீ குடிக்க பக்கத்தில் உள்ள கடைக்கு போனோம்...அந்த குளிருக்கு டீ சூப்பர்ஆ இருந்தது...அப்போது அங்கே வந்த மீன் விற்கும் நபர் தானும் சென்னை காசிமேடு தான்...இங்கே வந்து பத்து வருடம் ஆகிறது என்று நன்றாக
பேசினார்.அப்புறம் தலைகாவேரி பார்க்க போனோம்.. அதை பார்க்க
போறதுக்குள் என் தலையெல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுச்சு...
தலைகாவேரி முன் ஒரு கோவிலுக்கு சென்று வழிப்பட்டோம்..




காவேரியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாம்...

காவேரியை சுத்தி மட்டும் காட்டறீங்க... ஆனா எங்க ஊருக்கு மட்டும் விட மாட்ரீங்க?? என்று டிரைவரிடம் கேள்வி கேட்டேன்... அதற்கு அவர் "உங்களுக்கு வேணும்னா ரெண்டு காலி பாட்டிலில் வேணும்னா எடுத்துட்டு போங்க..." என்ற சிரித்து கொண்டே சொன்னார்... என்ன பண்றது... சிரிக்க மட்டும் தான் எங்களாலும் முடிந்தது....!!



தலைகாவேரி சென்ற போது மழை தூறல்கள் மற்றும் பனி
இருந்ததால் உடம்பு நடுங்கிவிட்டது.நாங்க காவேரினு சொன்ன உடன் ஒரு குளியல் போட்டு விடலாம் என்று துண்டை எடுத்து வந்தோம். அங்கே பார்த்தால் ஒரு குளத்தில் தண்ணியை கட்டிவச்சு அது தான் தலை காவேரி என்று சொன்னார்கள். அப்புறம் ஒரு 400 படி இருக்கலாம் அதை ஏறி போய் பார்த்தால் ஏதோ தெரியும் என்றார்கள். அங்கே போய் பார்த்தால் முழுவதும் பனி தான்...ஆனா நம்மை சுத்தி பனி இருந்தா எப்படி இருக்கும்...செம,..
புதிய அனுபவம்...!! அப்போது நண்பர் சண்முகம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்..அப்போது என் கூட இருந்த சிவா " இவரு பெரிய பி.சி.ஸ்ரீராம்...சீக்கிரம் வாடா..." என்றார். உடனே அங்கே மேல வந்த வேறு ஒருவர் " ஏன் நிரவ் ஷா இல்லையா....." என்ற கேட்டபடியே சிரித்து
கொண்டே போனார்.


மடிகரி ஊரை பற்றி சொல்ல வேண்டும்....ஒரு விஷயத்தில் அவர்களை பாராட்டலாம் அது பிளாஸ்டிக் பை தடை விஷயத்தில்.எதை வாங்கினாலும் பேப்பரில் தான் மடித்து தருகிறார்கள்...பிளாஸ்டிக் யூஸ் பண்ணினால் 500 ரூபாய் அபராதமாம். அதே போல் தமிழர்களை கண்டால் பத்து சதவீதம் விலையை ஏற்றி விடுகின்றனர் சில கடைகளில்....எங்க டிரைவர் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் எம்.ஆர்.பி ரேட்க்கு வாங்கி தரேன் என்றாலும்... அவரை தொந்தரவு செய்ய விருப்பமில்லை. நண்பர் அரை லிட்டர் லிம்கா கேட்டதற்கு ஒரு கடைக்காரர் 35 ரூபாய் என்றார்...!!சிக்கன் ரைஸ்
வாங்கினால் அதில் சிக்கனை காணோம்...! டீ கடையில் நிக்கும் போது ஒரு நாய் வந்தது அதற்கு நம்மூர் மூணு ரூபாய் பன் வாங்கினால் அது அங்கே ஆறு ரூபாய்....!



நடுவில் சிவாவும் கோபியும் டிரைவரிடம் எப்படி கன்னடத்தில்
"ஐ லவ் யு" சொல்லுவது என்று கேட்டனர். அதற்கு அவரும்
ஏதோ ப்ரேமிச்தான் என்று ஏதோ சொன்னதாக நினைவு....
" வேணாம்..இங்கே யார் கிட்டயும் சொல்லிடாதீங்க....
கூப்பிட்டு வந்த என்னை தான் முதலில் அடிப்பாங்க...
நேத்தே பெரிய பிரச்சனை ஆச்சு.." என்றார் சீரியஸ் ஆக...

மைசூர்...!!



நாங்கள் திங்கள் காலை மைசூர் கிளம்ப ரெடி ஆனோம். டிரைவர்
மைசூர் போகும் முன் துபேர் காடு இருக்கிறது...யானைகள் இருக்கும்
என்றார். ஒருவர் படகில் செல்ல இருபது ரூபாய்..சுமார் ஒரு கிலோ
மீட்டர் ஆறு தான் இருக்கும் அதை கடந்து செல்ல வேண்டும்.
நாங்கள் போகும் போது யானையை குளிப்பாட்டி கொண்டு
இருந்தனர். யானை தீடிர் தீடிர் தும்பிக்கையால் தண்ணியை உறிந்து ஷவர் மாதிரி மக்கள் மீது அடித்தது. என்ன நான் கொஞ்சம் க்ளோஸ்சில் போகும் போது தண்ணி நிறைய அடிச்சதால நண்பர்கள் "டேய் அதுக்கிட்ட போய் என்னடா பண்ண" என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்...!!


மதியம் மைசூர் வந்தவுடன் ஹோட்டல் சித்தார்த்தாவில் மீல்ஸ்
சாப்பிட்டோம். வந்த மூணு நாளில் சாப்பிட்ட ஹோட்டல்களில்
இங்கே மட்டும் தான் சாம்பார் ஓரளவுக்கு நன்றாக இருந்தது.
அதன் பின் ஜூ பார்க்க கிளம்பினோம். உள்ளே நுழைந்தவுடன்
ஒட்டகச்சிவங்கி ஒன்று அசையாமல் நின்று கொண்டு இருந்தது..
நான் அதை சிலை என்று நினைத்து.."ஏன்டா சிலையை போய்
போட்டோ எடுக்குற" சண்முகத்திடம் சொல்ல...அது வால்
அசைத்து வலம் வர ஆரம்பித்ததும் என் மூஞ்சில் அசடு வழிந்தது...!!




புலியை வெளியே விடாமல் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்... புலிகள் கூண்டுக்குள்ளேயே வீர நடை போட்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அது நடக்கும் போதும் "என்னை மட்டும் வெளியே விட்டு பாருங்கடா.." என்று கோபத்தில் நடப்பது போல் இருந்தது. வெள்ளைபுலி அனைவரையும் கவர்ந்தது...நல்ல பெருசு... நண்பர் சுரேஷ் அந்த புலி திரும்பி நிற்கும் போது " hey.. turn back " என்று போட்டோ எடுக்க புலியிடம் பேசினார்...
அது என்ன நினைச்சுதோ தெரியலை...தீடிர்னு திரும்பி நின்னு சுரேஷ் மீது உச்சா போய் விட்டது...!!




ஜூவில் போய் கொண்டிருந்த போதே மழை கொட்ட ஆரம்பித்து
விட்டது. கரண்ட் கம்பியில் இருந்து வந்த தீ பொறியை பார்த்து
கரடி செம ஓட்டம் எடுத்தது. நாங்கள் கொஞ்சமாக நனைந்த
பின் அங்கே இருந்த ஒரு பெட்டி கடையில் தஞ்சம் புகுந்தோம்.
மழை விட்டவுடன் திரும்பவும் ரவுண்ட் அடிக்க கிளம்பி அடுத்து
மைசூர் பேலஸ் பார்க்க சென்றோம்.



பேலஸ்சின் பிரமாண்டம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..
மெய் மறந்து சுத்தி பார்த்தேன் என்றால் அது பொய்.. ஆனால் பிரமித்தது மட்டும் உண்மை. பேலஸ் முடிந்தவுடன் டிரைவர் ஏதோ சாண்டல் பாக்டரிக்கு ஷாப்பிங் போலாம்னு சொன்னார். அங்கே போன அது ஒரு கடை...அதை பாக்டரி என்று ஏன் சொல்றாங்கனு தெரியலை...கண்டிப்பா அங்கே எதுவும் யாரும் வாங்க போறதில்லைனு... வேறு இடத்துக்கு போக சொன்னோம். ஷாப்பிங் சென்று ரெண்டு ரூபாய் வடை வாங்கி சாப்பிட்டோம். அப்புறம் அதே தள்ளுவண்டி கடையில் ரெயிலில் செல்ல இரவு உணவு இட்லி வாங்கி கொண்டோம்...மீண்டும் ரெயிலில் சீட் விளையாட ஆரம்பித்து அப்புறம் தூங்கி சென்னை வந்து சேர்ந்தோம்....!!


இது தான் நாங்க மைசூர் மற்றும் கூர்க் சென்று வந்த கதை...
இந்த இடுகை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் பொன்னான
வாக்கை குத்துங்கள்....!!


நன்றி

ஜெட்லி... (சரவணா...)

Tuesday, July 13, 2010

ஆனந்துபுரத்து வீட்டில் கமரூன் டியாஸ்!!

KNIGHT AND DAY , ஆனந்துபுரத்து வீடு ஒரு பார்வை.



"டேய் என்கிட்டே பி.வி.ஆர் ரெண்டு பிரஸ் பாஸ் இருக்குடா வா படத்துக்கு போயிட்டு வருவோம்"னு நண்பன் கூப்பிட்டான்.அங்கே போய் பார்த்தா எல்லா படமும் புல். தீடிர்னு பார்த்தா knight and day பத்து ரூபாய் டிக்கெட் தான்டா இருந்தது வாங்கிட்டேன்.. பாஸ்க்கு நாளைக்கு வேற படத்துக்கு புக்
பண்ணிக்கலாம் என்றான்...புக் பண்ண படம் தான் ஆனந்துபுரத்து வீடு!!

"டேய் பத்து ரூவா.... கட்டை சீட்டுடா ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாது...தலை வேற வலிக்கும்டா" என்று அவனிடம் சொல்லியபடி ஸ்க்ரீன் ஏழில் நுழைந்தால் எல்லாத்துக்கும் ஒரே சீட்.... எனக்கு ஒரே ஆச்சரியம்... இதுவே மாயாஜால்னா முதல் ரோ என்றாலும் இருநூறு
ரூபாய் தான் டிக்கெட் ரேட்.

KNIGHT AND DAY :


சரி படத்துக்கு வருவோம்... ஹாலிவுட் ஹீரோக்களில் எனக்கு
பிடித்தவர்களில் டாம் க்ருஸும் ஒருவர். சும்மா ஆக்சன் காட்சிகளில்
பூந்து விளையாடுவார் மனிதர். இது கிட்டதட்ட ஒரு ஜேம்ஸ் பான்ட்
படம் மாதிரி தான். டாம் நிகருக்கு டாமே!! கதைன்னு பார்த்தா
சிங்கள் லைன் தான்...ஆனா திரைக்கதை செம வேகம்....





கமரூன் டியாஸ் ஆன்டிக்கு கிழடு தட்டி போச்சுன்னு தான் சொல்லணும்.... ஆனா இந்த படத்தில் காமெடி செய்வதில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். பிகினி காட்சியில் வரும் போது அவர் டாமை பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு பின்னர் கிளைமாக்ஸ்இல் டாம் அதே கேள்வியை கேட்கும் காட்சி கிச்சு கிச்சு ரகம்.

ஒரு பையன் சார்ஜ் தீராத பாட்டரியை கண்டு பிடிக்கிறான்...
அதை வில்லன் கும்பலிடம் விற்க ஒரு ஏஜென்ட் நினைக்கிறார்...
ஆனால் அதை டாம் கைப்பற்றி என்ன பண்ணுகிறார் என்பதே
கதை.படத்தில் லாஜிக் பார்த்தால் சுத்தம்....எப்படி ஹீரோ ட்ரெயின்யில் இருந்து தப்பிக்கிறார்,வில்லன் கோட்டையில் எப்படி உள்ளே வருகிறார் என்று எல்லாம் கேட்க கூடாது. ஆனால் படம் விறு விறு ரகம்.

தியேட்டர் நொறுக்ஸ்:


# போனது பத்து ரூபாய் டிக்கெட் அதிலும் ஒரு சிறு பையன் வந்து
" PLEASE SHIFT UR SEAT, MY FREIND SIITTING THERE" என்று பிலா உட
ஆரம்பித்தான். அவன் நண்பன் சீட் இடைவெளி தள்ளி உட்கார்ந்திருந்தான்... எப்படியும் பக்கத்தில் உட்கார முடியாது...
பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் ஆங்கிலத்தில்..."அவன் அங்கே
உட்கார்ந்து இருக்கிறான்..எப்படியும் உங்களுக்குள் இடைவெளி
இருக்க போகிறது..எங்கே உட்கார்ந்தா என்ன??" என்று கேட்டார்..
அவன் " FIRST SHIFT UR SEAT.." என்று ஆர்டர் போட ஆரம்பித்தான்..
பக்கத்தில் உள்ள நண்பர் முடியாது என்றார்... அந்த பையன் அவன்
சீட்டில் போய் உட்கார்ந்தான்... பக்கத்தில் இருந்த நண்பரின் நண்பர்
"இங்கிலீஷ்ல பீட்டர் உட்டா சீட்டை விட்டுருவமோ...",,, என்றார்.

# பக்கத்தில் இருந்த நண்பர் அவர் நண்பரிடம் "என்னயா இது
எப்படி ஹீரோ தப்பிசார்னு காமிக்கவே இல்லைனு" அப்போ
அப்போ வருத்த பட்டார்.


******************************

ஆனந்துபுரத்து வீடு:

இந்த படத்தை பார்க்க எனக்கு பல தடங்கல்கள் வந்தது...முதல் நாள்
நைட் ஷோ போறது தான் முதல் பிளான்...ஆனா கணபதிராம்
தியேட்டர்ல நைட் ஷோ போடல... அப்புறம் பி.வி.ஆர்.ல புக்
பண்ணி படத்துக்கு போகும் போதும் பல தடங்கல்கள். செம ட்ராபிக்
படத்துக்கு பத்து நிமிஷம் லேட்ஆக தான் போனேன்...போகும் போது
முதல் பாட்டு ஓடி கொண்டி இருந்தது.



படத்தை பற்றி இருவிதமா கருத்துக்கள் வந்ததால் நாமே பார்த்து
முடிவு பண்ணி விடுவோம் என்று தான் போனேன். இந்த படத்தை பரப்பரப்பான திகில் படம்னு அவங்க விளம்பரம் செய்ஞ்சது முதல் தப்பு. சத்தியமா படத்தில் திகில் இல்லை என்பதே உண்மை...
இது ஒரு காமெடி படம் என்று சொன்னால் கூட நம்பலாம்..!!

என்ன கதை:


நந்தா கடன் தொல்லையால் ஊரில் இருக்கும் தன் அப்பா வீட்டுக்கு
வருகிறார். அப்பா அம்மா நந்தா சிறு வயதா இருக்கும் போதே கார்
விபத்தில் இருந்து விடுகிறார்கள். பையன் ஊருக்கு வந்தவுடன் ஆவியாய் வந்து பாசத்தை கொட்டுகிறார்கள்.....ஆனா ஒண்ணு
இந்த மாதிரி ஆவி மட்டும் எல்லார் வீட்டிலும் இருந்தா வேலைகாரங்க சம்பளம் மிச்சம்......!!


படத்தில் ஒரு இடத்தில் கூட திகிலோ பயமோ வரவில்லை
என்பது தான் உண்மை. சரி படம் மொக்கையா என்று கேட்டால்
அப்படி சொல்லி விட முடியாது. இது நமக்கு ஒரு வித்தியசமான
படமாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் சலிப்பு தான்
வருகிறது. எனக்கு ஒரே வருத்தம் தான் நந்தா நண்பரின் மனைவி பண பெட்டியை எடுத்து வரும்போதே ஆவி அந்த பெட்டியை
திறந்து காட்டி இருந்தால்...படம் பார்த்த அனைவருக்கும் அரை
மணி நேரம் மிச்சம் ஆகி இருக்கும்...!! அதை விட்டுட்டு திகில்னு சொல்லி சில காட்சிகள், நந்தா ஆவியை போக சொல்லுவது, வில்லன்
சேசிங்...என்று வைத்து நம் உயிரை வாங்குகிறது அந்த ஆவி...!!


சாயா சிங்....பத்தி சொல்ல ஒண்ணும் பெருசா இல்லை... ஆனா
அந்த சின்ன பையன் உண்மையில் கவர்கிறான். அப்புறம் வில்லனா
வர்ற அந்த ஆள் மோகன்ராம் குரல்னு நினைக்கிறேன்... வழக்கமா
கடந்த ஆறுபது வருஷமா வர்ற தமிழ் சினிமா வில்லன் தான்.
கடைசி நொடியில் எப்படியோ திருந்தி விடுகிறார். அப்புறம் நந்தாவின்
நண்பராக வரும் சீரியல் நடிகர் செம மொக்கை.... காமெடி பீஸ்....
அவர் மனைவியும் அவரும் கொஞ்சும் காட்சிகள் செம காமெடி...!!



நாகா,மர்மதேசம்,இந்திரா சௌந்தராஜன் என்று நம்பி போனவர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய இடி தான்.... எனக்கு தெரிஞ்சு என் கூட படம் பார்த்தவர்கள் பல காட்சியில் சிரித்து கொண்டு தான் பார்த்தனர். நானும் என் நண்பனும் சிரிச்சு ரசிச்சு பார்த்தோம்.... உங்களுக்கு பொழுதே போகலைனா இந்த
படத்துக்கு போலாம்....ஆனா திகில் படம்னு நீங்க நினைச்சு போன
நானோ இயக்குனரோ பொறுப்பல்ல !!


ஆனந்துபுரத்து வீடு : பழைய வீடு தான்,பாக்கறவங்க பாக்கலாம் !!


தியேட்டர் நொறுக்ஸ்:

# லோக்கல் தியேட்டர் போன தான் சீட் மேலே காலை போடுற
பிரச்சனைனு பார்த்தா இங்கயும் அதே பிரச்சனை... பின்னாடி இருந்த ஆன்டியிடம் காலை கொஞ்சம் மடக்கி வைங்க என்ற
பின்பு தான் நிம்மதி....!!

# சரி பின்னாடி இருந்து தான் தொந்தரவு வருது பார்த்தா....
முன்னாடி இருக்கிறவன் வேற படம் ஓட்டுறான்...என்னத்த
சொல்றது....

# நந்தாவின் நண்பராக வரும் சீரியல் நடிகர் தன் மனைவியை
கொஞ்சும் காட்சியில் தியேட்டரில் ஒரே கலகலப்பு....காரணம்
செம கேவலமா இருக்கும்....அவரின் மனைவி " I LOVE U
FOR THIS" என்று டிபன் கொண்டு வர போகும் கணவனிடம்
சொல்லும் போது தியேட்டரில் "ஐயோ" என்று செம சவுண்ட்....


இந்த விமர்சனம் பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...



ஜெட்லி...(சரவணா...)

Friday, July 9, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்!!

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ......



நான் படத்துக்கு போறது முன்னாடி என்ன லவ் ஸ்டோரி தானே...
பெருசா என்ன இருக்க போது வெள்ளைக்காரியை ஆர்யா லவ்
பண்ணுவார் ரெண்டு டூயட் இருக்கும் வெள்ளைக்காரங்க கூட
சண்டை இருக்கும் என்று நினைத்து கொண்டு தான் போனேன்....
ஆனால் படத்தில் வரும் ஜீவன்( நான் அவனில்லை ஜீவன் இல்லை!!) ,உயிரோட்டம் படம் உண்மையிலே சூப்பர் தான்.
முக்கியமா டைமிங் காமெடிகள்,சில காட்சிகள் பார்த்தால்
தலையில் ஜிவ்வ்னு ஏறுமே, அந்த மாதிரி பல காட்சிகளில்
படத்தில் இருக்கிறது.


முதலில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டனும்.
தொடர்ந்து நல்ல படங்கள் என்பதை விட வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்...தொடரட்டும் அவர்களது பணி. அப்புறம் நம்ம இயக்குனர் விஜய்...சான்ஸ்ஏ இல்லை..... ஒரு பீரியட் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்வது சாதாரண விஷயம் இல்லை... அதில் விஜய் வெற்றி கொட்டி கட்டி இருக்கிறார்.

என்ன சொல்றது...?

படம் லண்டனில் தொடங்குகிறது...வயதான ஏமி அவர்களுக்கு
1947 இல் ஆர்யா கொடுத்த தாலி ஒன்றை அவரிடம் சேர்க்க 2010
இல் சென்னை வருகிறார்...அப்படியே படம் பின்னோக்கி போகிறது..
அப்புறம் அப்படியே கடந்த காலமும் நிகழ் காலமும் மாறி மாறி
கதை போகிறது.... இதுக்கு மேல நீங்க தியேட்டர்ல பார்த்துக்குங்க...


செல்வகுமார், இவர் தான் இந்த படத்தின் ஹீரோ..அதாங்க ஆர்ட்
டைரக்டர். பழைய சென்னையை நம் முன் காட்டி இருக்கிறார்.
சில இடங்களில் கிராபிக்ஸ் தெரிந்தாலும் ஒண்ணும் பெருசா
பிரச்சனை இல்லை. அடுத்து நிரவ் ஷா, அவரை பத்தி நான்
சொல்ல வேண்டியது இல்லை... பக்கா பக்கா...!! ஜி.வி இசையில்
மேகமே, வாம்மா துரையம்மா, ஆருயிரே, காற்றிலே பாடல்கள்
சூப்பர். பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு இவரின் பின்னிணி இசை
நன்றாக இருக்கிறது.


மற்ற ஹீரோக்கள் எல்லாம் கத்தி, தூப்பாக்கினு தூக்கிட்டு அலையும் போது ஆர்யாவை இப்படி பார்ப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி. மல்யுத்த வீரனாக, ஏமியின் காதலனாக என்று அதிகம் பேசாமல் அசத்தி இருக்கிறார் மனுஷன். குறிப்பா ஏமி டெல்லி போய்ட்டாங்க என்றவுடன் அவர் கண்ணில் இருந்து வருமே கண்ணீர்..... செம...! ஆர்யா அண்ட் கோ இங்கிலீஷ் கற்று
கொள்ளும் காட்சியும் நல்ல காமெடி.

இங்கிலீஷ்காரி நாயகியா...ஏதோ வத்தல் தொத்தல்லை போடாமல்
கும்முன்னு ஒரு பெண்ணை போட்டு இருக்கிறார்கள். ஏமி, கொள்ளை
அழகு... பின்னாடி இருந்த ரோவில் ஏமியை திரையில் காட்டினாலே
பெருமூச்சு விட்டு கொண்டிருந்தனர். ஏமி நல்லாவும் நடிச்சு இருக்காங்க.... மறந்துட்டியா?? என்று ஆர்யா கற்று வந்த இங்கிலீஷை கேட்கும் போது செம பீலிங். அவங்க ஆர்யா கூட சேராம போனது எனக்கும் வருத்தமே...படத்தில்!!


நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், கிஷோர் இவர்கள் பிளாஷ்பேக்கில்
ஆர்யாவுடன் வருவார்கள்....சின்ன சின்ன காட்சிகள் என்றாலும்
வசனத்தில் நல்ல ஆழம் இருக்கிறது. பாஸ்கர் சுதந்திரம் கிடைச்சு என்ன ஆகபோகுது என்று பேசும் வசனம், பாலாசிங் நாசரிடம் மல்யுத்தம் வைத்து என்ன பண்ணுவது என்று நிறைய சொல்லி கொண்டே போகலாம் . லொள்ளு ஜீவா, பாலாஜி, குமாரவேல் என்று கிழவி ஏமியுடன் ஆர்யாவை தேடும் காட்சிகளில் வருவார்கள்.... ஜீவாவின் டைமிங் காமெடி வேலை செய்து இருக்கிறது.... பாலாஜி அந்த ஓவியர் காம்போ சூப்பர்...!! கொச்சின் ஹனீபா பத்தி சொல்ல மறந்துட்டேன்.....அவர் இடத்தை நிரப்ப யாரும் வர முடியாது...!!



அந்த வெள்ளைக்கார போலீஸ், பிளேன் பறந்தலே குண்டு போட
போறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், வாத்தியார்,
நம்ம வெண்ணிலா அப்பு குட்டி, ஆர்யாவும் ஏமியும் படகில்
உட்கார்ந்து பேசும் போது அதை பார்த்து கொண்டே போகும்
கிழவர் என்று சின்ன சின்ன விஷயத்திலும் விஜயின் உழைப்பு
தெரிகிறது....!!


படம் முதல் பாதி ஒன்றரை மணி நேரம் ஓடியது...நேரம் போனதே
தெரியவில்லை...ரெண்டாவது பாதி ஒரு மணி நேரம் மேல் ஓடியது,
சில இடங்கள் மட்டுமே வேகதடையாக இருந்தது. ஆனால் அந்த
காற்றிலே பாட்டுக்கு தியேட்டரில் செம கைதட்டு... கிளைமாக்ஸ் தான் எல்லாரும் நினைத்தது போலவே தான் வரும்...ஆனா அது தான் நல்ல முடிவு. நீண்ட நாள் கழித்து உணர்வுபூர்வமான காதல் படம் பார்த்த திருப்தி. சிரிக்க ரசிக்க மலைக்க கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டிய படம் மதராசபட்டினம்.


மதராசபட்டினம் - ரவுண்ட் அடிக்க கிளம்புங்க......!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# ஒரு காட்சியில் படகோட்டி ஒருவனது கையை பிடித்து
ஏமி படகில் ஏறுவார்...இதை கண்ட அந்த போலீஸ்துரை
படகோட்டி கையை மிதித்து கொண்டு படகில் ஏறுவார்...
இதை கண்ட நம் இளைய சமுதாயம்...

" டேய் நாதாரி....பொறம்போக்கு..."

" பொறாமை பிடிச்சவனே..."

என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள்..இன்னும் அசிங்கமா திட்டினாங்க அதையெல்லாம் பதிவு பண்ணா ப்ளாக் நாறிடும்.


# போலீஸ் நிலையத்தில் ஆர்யாவிடம் அந்த போலீஸ்துரை
" இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே..." என்று ஆர்யாவை மிரட்டுவார். அதற்கு ஆர்யா


" நானும் அதே தான் சொல்றேன்.." என்ற காட்சிக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.


# சென்ட்ரல் ஸ்டேஷன் காட்சியில் நம்மூர் போலீஸ் ஆர்யாவை
தூப்பாக்கி முனையில் பிடித்து வசனம் பேசி கொண்டிருப்பார்... அப்போது பின்னாடி இருந்த காலேஜ் பசங்க...

" நம்ம ஊரு போலீஸ் மச்சி...பத்து ரூபாய் கொடு விட்ட்ருவார் ..."

# பின்னாடி இருக்கையில் படம் பார்த்தவருக்கு இங்கிலீஷ் நாயகி
என்றதும் உதட்டு முத்தம் வரும் என்று நீண்ட நேரம் எதிர்ப்பார்த்தார்...ஆனா ஏமி ஒரு காட்சியில் சென்ட்ரல் மணி கூண்டில் படுத்து கொண்டிருக்கும் போது இங்கிலீஷ் பாடல் பாட ஆரம்பித்து விடுவார்...இதை கேட்ட நம்மாளு...

"என்ன இது சின்ன பிள்ள தனமா இருக்கு...கிளுகிளுப்பு வரும்னு
பார்த்தா பாடிக்கினு இருக்க..."

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டினை
போட்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்....

நன்றி

ஜெட்லி...(சரவணா)

Wednesday, July 7, 2010

கில்மானந்தாவின் அஜால் குஜால் சிந்தனைகள்

ஆனி 23 சிறப்பு கில்மா சிந்தனைகள்:


ஹோ...கில்மா ஜே ரவ....

பக்த கோடிகளே...நமது குரு கில்மானந்தா, டி.வி.யில் அனன்யா வரும் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தை பார்த்ததில் இருந்து தனது பெயரை அனன்யாதாசன் என்று மாற்றி கொள்ள சிந்தித்து வருகிறார் என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் !! இந்த தீவிர சிந்தனையிலும் அவர் நமக்கு அளித்த அருளுரைகள், தெளிவுரைகள் எல்லாம் உங்கள் பார்வைக்கு......

கில்மானந்தாவின் பிட்மொழிகள் அல்லது ரீமிக்ஸ் பொன்மொழிகள்
அல்லது சிந்தனைகள்னு கூட வைத்து கொள்ளலாம் :

# டாஸ்மாக் முன்னாடி பித்த வாந்தி எடுத்தாலும்
உலகம் உன்னை குடிச்சிட்டு வாந்தி எடுக்கறான்னு தான் சொல்லும்!!!

# நயன்தாரா, த்ரிஷானு சொன்னா உதடுகள் ஒட்டாது
பாவனா, முமைத் கான்னு சொன்னா தான் உதடுகள் ஓட்டும்!!

# ஹாப்(half) அடிச்சவன் மட்டையாகாதான் வேணும்...
அதுக்கு அப்புறமும் ஆம்லேட் சாப்பிடுறவன் ஆப்பாயில் போட்டே
ஆகணும்...!!என்பதே உலக நியதி....

*******************



கில்மானந்தாவின் வாழ்க்கை தத்துவங்கள்:

# தலையிலே வழுக்கை விழுந்தா கவலைப்படுறோம்
அதுவே இளநீரில் வழுக்கை விழுந்தா சந்தோஷப்படுறோம்....!!

# நைஸ் தோசைக்கும் கல்தோசைக்கும் ஒரே கிண்ணம் மாவுதான்...
ஆனா அதை நாலு சுத்து எக்ஸ்ட்ரா சுத்துனதான் நமக்கு எக்ஸ்ட்ரா
காசு கிடைக்கும்...!!

# நம்ம வாழ்க்கையே ஒரு கட்டிங் தான்... தலையிலே முடி அதிகமான சலூனுக்கு போய் கட்டிங் பண்ண போறோம். டெய்லர் கிட்ட நாம வாங்குன துணியை கொடுத்தா அவர் கட்டிங் பண்ணி தைக்கிறார்,ரோட்ல போகும் போது போலீஸ்க்காரன் புடிச்சா அவருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்....
அப்படியே நைட் கடுப்பா இருந்தா டாஸ்மாக்கில் போய் கட்டிங்
சாப்பிட்டு வரலாம். கட்டிங்கை கேவலமா நினைக்க கூடாது, கட்டிங் போடுவதால் நாட்டில் சமுதாய ஒற்றுமை வளர்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது என்பது குறிப்பிட தக்கது.

*****************

கில்மானந்தாவின் குவாட்டர் கட்டிங் அடித்த பின் தந்த தெளிவுரை உங்கள் பார்வைக்கு:

மீண்டும் அதே கிரி படம் தான்.... பாடல் வேறு...

" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."
" டேய்.... டேய்.... டேய் கையை வச்சிக்கினு சும்மா இருடா..."

இந்த பாட்டில் பல பேர் டபுள் மீனிங் இருக்குனு சொல்கிறார்கள் அது சரிதான் பக்தர்களே.... நம் வாழ்க்கைக்கு தேவையான, பொக்கிஷமான டபுள் மீனிங் மட்டுமே இருக்கு.....

"டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."


அதவாது ரீமாசென் அர்ஜுனிடம் "டேய் நீ வச்சி இருக்கிற நம்பிக்கையை மட்டும் நம்பு... வேற யார் என்ன சொன்னாலும் சும்மா இரு" னு சொல்றாங்க அது தான் இந்த பாட்டின் முதல் வரி அர்த்தம்...மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.....வேணும்னா இன்னொரு அர்த்தம் கூட சொல்லலாம்... அது இசையமைப்பாளர் இமானை பார்த்து சொல்லுவதாக கூட இருக்கலாம்....
" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா....ஏன் ரீமிக்ஸ்னு
போட்டு மக்களை கொல்ற" அப்படின்னு வேணும்னா இன்னொரு அர்த்தம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு.....!!


****************************

கில்மா பன்ச்:

" தத்தியா இருந்தா நீ பட்டர்....
உஷாரா இருந்தா நீ பெட்டர்...!!"

****************************



விளம்பரம் :


கில்மானந்தாவின் அஜால் குஜால் அருளுரை, தெளிவுரை, விளக்கவுரை மற்றும் மூட்ஸ் உறை தற்போது டி.வி.டி.யிலும் கிடைக்கிறது...விலை வெறும் ஆயிரம் ரூபாய் தான்.!!


(பி.கு) நல்ல வெளிச்சத்தில் எடுத்த ரெண்டு புத்தம் புதிய பிட் இணைக்கப்பட்டுள்ளது.

இல்லை எங்களுக்கு பிட் படம் மட்டும் போதும் என்பவர்கள் 999 ரூபாய் டி.டி. அனுப்பினால் போதும்.... !!



கில்மானந்தாவுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
நீ கேளேன் ப்ளாக் மட்டுமே தலைமை அலுவலகம் என்பதை
தெரிவித்து கொள்கிறோம்...நீங்க பாட்டுக்கு கில்மானு கடை
பேர் போட்டிருக்குனு போனால் நாங்கள் பொறுப்பல்ல...!!

********************

எனக்கும் கில்மானந்தாவுக்கும் நடந்த சிறு உரையாடல்...

கில்மா : சிஷ்யா, இன்னும் நீ பௌர்ணமி நாகம் பார்க்கவில்லையா??

ஜெட்லி : இல்லை சாமி...அது தெலுங்கு படம் டப்பிங்..அதான் போகல.....

கில்மா : அடேய்... அதில் நம்ம முமைத்கான் நடித்துள்ளார்டா....

ஜெட்லி : அதுக்காக எல்லாம் போக முடியாது சாமி...

கில்மா : டேய் சொன்ன கேளு,எனக்கு ஒரு உதவி மட்டும் செய்.. முமைத்கான் இந்த படத்தில் பாம்பாக வருகிறாராம்....பாம்பு சட்டையை உரிக்குதா இல்லையானு மட்டும் பார்த்துட்டு வந்து சொல்லுப்பா.....!

********************************

அனைவரும் வருக...!!


கில்மானந்தாவின் தலைமையில் மஹாயாகம் நடக்க இருக்கிறது...
நாட்டு மக்களுக்காக நடக்கும் இந்த யாகத்தில் கலந்து
தீட்சை பெற அனைவரையும் கனத்த பர்சுடன் அழைக்கிறோம்...


தீட்சை வேண்டுபவர்கள் கனமான பர்சுடன் வரவேண்டும் இல்லையேல் கிரவுண்ட் உள்ளே அனுமதி கிடையாது!!

இத்தருணத்தில் மீண்டும் அனைவரும் ஒரு முறை கில்மா
மந்திரத்தை சொல்லுங்கள்...

ஹோ...கில்மா ஜே ரவ.... (ரவ பிடிக்கலைனா இட்லி,
பொங்கல் கூட சொல்லலாம்...)



இந்த வாழ்க்கை தத்துவங்கள், சிந்தனைகளை படித்து பல
பேர் பயனடைய உங்கள் பொன்னான வாக்கினை போடுமாறு
கேட்டு கொள்கிறோம்...


இப்படிக்கு தலைமை சிஷ்யன்

ஜெட்லி...(சரவணா...)







Friday, July 2, 2010

வெளுத்து கட்டு - எதிர் வீட்டு பார்வை.

வெளுத்து கட்டணும்டா அவன....




இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்து சத்தியமா நான் வெளுத்து கட்டு படத்துக்கு போகலங்க...ஏதோ எங்க ஏரியா தியேட்டரில் படம்
போகுதுன்னு போனேன்.... அங்க தான் நான் புரட்சி இயக்குனர்
சந்திரசேகரின் மாஸை பார்த்தேன்.... கிழே படத்தை பாருங்கள்....



ச்சே ச்சே...தப்பா கணக்கு போட்டுடாதிங்க.... கிட்ட தட்ட மூணு
ரோ புல் ஆச்சி. தியேட்டர் காரங்க வெளியே பேனர் வைக்காதது
தான் கூட்டம் வராததுக்கு காரணம்னு தப்பா நினைச்சு அவசரம் அவசரமா 11.30 மணிக்கு பேனர் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.... பாவம் என்ன பேனர் வச்சி என்ன ஆக போகுது... குவாட்டரும் பிரியாணியும் தரேன்னு சொன்னா கூட யாரும் வர்ற மாதிரி தெரியலை....!!


படத்தோட கதை, காட்சி, திரைக்கதை, என்று எந்த ஒரு தமிழ்
சினிமாவிலும் இது வரை வந்ததில்லை....ஆனா பல தமிழ்
சினிமாவில் வந்ததை சுட்டு போட்டு ஆறி போன தோசையை
கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமா பருத்திவீரன் படத்தை
சந்திரசேகர் நிறைய தடவை பார்த்து இருப்பார் போல...
முதல் பாதி முழுவதும் பருத்தி வீரன் பாதிப்பு தான்....!
இதையும் மீறி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க ஒரே
காரணம் ஏ.சி. மட்டுமே....!!

************************


முன்னாடி எல்லாம் நான் விமர்சனம் எழுதும் போது மொக்கை
படத்தை பார்த்தா ஒரு பன்ச் எழுதறது உண்டு....அது இது தான்
ஏகன் படத்தில் அஜித் சொல்லும் பன்சை நான் மாற்றி எழுதுவேன்...

"மொக்கை படம் பார்க்கறது என் தப்பு இல்லை....
அது படம் எடுத்தவன் தப்பு...."னு


ஆனா என் ஆர்குட் நண்பன் மதன் திரும்பவும் ஒரு பன்ச் வச்சார்
அது...

"மொக்கை படம் பார்க்கறது உன் தப்பில்ல...ஆனா மொக்கை
படம்னு தெரிஞ்சு போற பாரு அது தான் உன் தப்பு" னு

அந்த தப்பு தான் இப்ப திரும்பவும் நடந்திருக்கு!!

************************


முதல்ல தமிழ் சினிமாவில் ரெண்டு விஷயம் தடை பண்ணனும்...

# நாயகி சொன்னவுடன் கடலில்,அருவியில்,சாக்கடையில் குதிப்பது
அதன் பின் நாயகி அழுது புரண்டு நாயகனை தேடும் போது
அவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு மேல வர்றது....

# அப்புறம் நாயகி ஒரு மீசை, அல்லது ஒரு பேய் முகமூடி
போட்டு நாயகனிடம் காட்டும் போது அவர் சிரிப்பது அப்புறம்
அந்த மீசை,மூகமூடியை கழட்டியவுடன் நாயகியை பார்த்து
பயப்படுவது.....

தயவு செய்து யாரும் இப்படி இனிமே எடுக்காதிங்க நானும்
ரெண்டு வயசில் இருந்து இதை பார்த்துட்டு வரேன்...இந்த
ரெண்டு அற்புத காட்சிகளும் இந்த படத்திலும் இருக்கிறது
என்பது படத்துக்கு பெரிய பலம்.

யாரை வெளுத்துகட்டுறார்....

வெளுத்துகட்டு.... ஹீரோ பத்து வயசில் நாயகிக்கு தாலி
கட்டுறார்... இருபது வயசில் கோவில் கட்டுறார்... அப்புறம்
சென்னைக்கு வந்தவுடன் துணியை மாற்றி கட்டுகிறார்....
அவ்ளோ தான்.....

படத்தில் ஒன்னுமே நல்லா இல்லையானு கேட்கலாம்....
சில காட்சிகள் கொஞ்சம் புதுசா இருந்தது...பல காட்சிகள் அரத
பழசா இருந்தது. புதுமுக கதிர் அருந்ததியை அருவி காட்சியில்
நன்றாக மோப்பம் பிடித்தார்.பாட்டி கூல்ட்ரிங்க்ஸ் சீன் நல்லா இருந்தது. ஒரு பையன் எம்.ஜி.ஆர் பாட்டை மாற்றி பாடுவது நன்றாக இருந்தது.... !!ஆனா இது எல்லாம் விட பட கடைசியில் தலைவலி வருது பாருங்க... முடியலைங்க...!

இந்த படத்தை பார்த்தா நம்ம ராஜ்கிரண் என்ன சொல்லி இருப்பார்னு பார்ப்போம்.....


" தக்காளி... ஒரு படத்துக்கு காசு கொடுத்து டிக்கெட் எடுத்தா
இருவுது படத்தை காட்டறாங்க.... இங்க பாரு வேட்டியே
மடிச்சேன்னு வை...தக்காளி..எலும்பை உருவி படையல்
போட்டுருவேன்....சோலையம்மா மசாலா ரெடி பண்ணி வை..!!"


ஜெட்லி பன்ச்:

வெளுத்துகட்டு - வெளுத்து கட்டிட்டாங்க படம் பார்த்தவங்களை!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# ஒருத்தர் நான் டிக்கெட் எடுத்துட்டு வரும் போது சிரிச்சார்...
ஒரு வேளை பட சம்பந்த ப்பட்ட ஆளா இருக்குமோனு டவுட்
வந்தது....படம் பார்த்த இருபது நிமிஷத்தில் அது கன்பார்ம்
ஆச்சி... அவர் ஒருத்தர் தான் படம் முழுவதும் கைதட்டி
ரசிச்சார்.....

# நாயகி நாயகனிடம் "நான் என்ன சொன்னாலும் உடனே
செய்வியா..." "என்ன புள்ள செய்யணும் இப்பவே சொல்லு"
படம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோகார நண்பர்...

"ஏம்மா பெட்ரோல் விலையை தம்பிகிட்ட சொல்லி குறைக்க
சொல்லுமா...."

# ஆட்டோகார நண்பர்கள் இந்த காவியத்தை பார்த்து விட்டு

" சவாரி போயிருந்தா 200 300 கிடைச்சுருக்கும்பா...."

இன்னொரு நண்பரை பார்த்து

" படம் சூப்பர்ஆ இருக்கும்னு கூட்டிட்டு வந்தாண்டா.... வெளியே
வாடா நீ தான் முதல் டெட் பாடி....."

என்று நண்பரை கலாய்க்க ஆரம்பித்தார்....

# இன்டெர்வல் அப்போ...ஒருத்தர்..."ஆப்பரேட்டர்... செகண்ட் ஹாப்
வேற ஏதாவது நல்ல படத்தை போடுங்க..." என்று கத்தினார்...
அனைவரது முகத்திலும் புன்னகை...


# இன்டெர்வல்க்கு பின் ஒரு காட்சியில் இரு பெண்கள் பிக்னி
உடையில் வருவார்கள்..அதை பார்த்தா பின் சீட்டுகாரர்
"அம்பது ரூபாய்க்கு இது போதும்டா ..." என்று டிக்கெட்
அமௌன்ட்டை கூறினார்.

# இனிமே டாக்டர்ங்க தூக்கம் வராத நோயாளிக்கு இந்த படத்தோட
டிக்கெட்டை கொடுத்து அனுப்ப வாய்ப்பு இருக்கு....சும்மா கண்ணு
சொருவுது....!!

# ஒரு மொக்கை சீனில் கலாய்க்க சிலர் கை தட்டினர்...நான்
உடனே விசில் அடித்தேன்...முன்னாடி இருந்தவர்..." தம்பி
சும்மா இருப்பா...ஏற்கனவே தலை வலிக்குது..நீ வேற...!" என்று
ரொம்ப டச்சிங்கா சொன்னார்.


# இன்டெர்வல் காட்சியில் நாயகனும் நாயகியும் மாறி மாறி
அழுவாங்க... " இந்த படத்தை பார்த்துட்டு நாங்க தான் அழுவனும்..."
என்று சொல்லிகொண்டே கதவை நோக்கி போனார்.

# ஒரு காட்சியில் வரும் வசனம்

"நல்ல வேலை நம்மை தேடி வராது...நாமதான் தேடி போனும்" என்று
நாயகன் ஒருவருக்கு அட்வைஸ் செய்வார்...இதை பார்த்த நம்ம
ஆளு....

" நல்ல படம் நம்மளை தேடி வராது...நாமதான் வேற தியேட்டர்
போனும்..." என்று டைமிங்காக அடித்து விளாசினார்.

# ஒரு ஷேர் ஆட்டோகாரர் படத்தின் இன்டெர்வல் நடுவே நண்பர்களிடம்

"நாம ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு 1500 பேர் சேர்ந்து ஒரு மாசத்தில் இதை விட நல்ல படம் எடுப்போம்டா"....

இன்டெர்வல் அப்போ நிறைய விளம்பரங்கள் வந்தது...

" சீக்கரம் படத்தை போடுங்கப்பா...."


" யோவ்...படத்தை விட இதுவே மேல்யா..." என்றார் அவரின்
நண்பர்.....

# படம் ரொம்ப லோ பட்ஜெட் போல.....ஒரு காட்சியில் ரோட்டில்
போறவர் ஷூட்டிங் பார்க்கும் ஆர்வத்தில் குறுக்கே வந்தாலும்
அவரை ஓரமாக இழுக்கும் காட்சி கூட பதிவாகி இருந்தது...
ஏன் டைரக்டர் சார்...சந்திரசேகர் சார் பிலிம் ரோல் கம்மியா
தான் கொடுத்தாரா??....


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கினை போடுமாறு கேட்டு கொள்கிறோம்....

ஜெட்லி...(சரவணா...)

Thursday, July 1, 2010

தமன் கல் உடைக்கிறார்(ராக்ஸ்) !!

அய்யனார் மற்றும் அரிது அரிது பாடல்கள் குறித்து ஒரு பார்வை.



முதல்ல தமன் பத்தி சொல்லணும்.... சிந்தனை செய் படத்தின் பாடல்களை நான் இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்குறேன்....
அதே போல் ஈரமும்.... முன்தினம் பார்த்தேனே நல்ல பாட்டு
தான் ஆனா படம் பார்த்த பிறகு பாடல்களை கேட்க தோன்றவில்லை.....!!

அய்யனார் : ஆதி, மீரா நந்தன்.



அய்யனார் கிராமத்து கதை. தமன் கிராமத்து கதைக்கு எப்படி
இசை அமைத்து இருப்பார் என்று ஒரு ஆர்வம் இருந்தது.
பாடல்கள் கேட்ட பின் தமன் அந்த ஆர்வத்தை எதிர்ப்பார்ப்பை
நிறைவாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.


குத்து குத்து - பாடல் : நா.முத்துக்குமார்.


உண்மையிலே பாட்டு செம குத்து.... முதல் தடவை கேட்கும் போதே
நம்மை அறியாமல் தாளம் போடும் வைக்கும் பாடல். அதே போல்
பாடல் வரிகளும் உண்மையிலே செம... ப்ருஸ் லீ மற்றும் வேல்முருகன் பாடியுள்ளனர்....

"குத்து குத்து கும்மாங்குத்து...சாம்பல் தானே மிச்ச சொத்து..."

என்ன ஒரு விஷயம்னா சில சமயம் கேட்கும் போது சிந்தனை
செய் படத்தில் வருமே அச்சமில்லை பாட்டு மாதிரி இருக்கும்....
இருந்துட்டு போட்டும் அது ஒண்ணும் பிரச்சனை இல்லை....


பனியே பனியே - தாமரை


இந்த பாட்டில் தொடர்ந்து ஒரு டியூன் வரும் அது நல்லா இருந்தது...
அப்புறம் பாட்டு வரி எனக்கு சரியா கேட்கலை.... ரஞ்சித் பாடி
இருக்காரு...எப்பவுமே தமன் ரஞ்சித் கூட்டணி களை கட்டும்...
ஆனா இந்த பாட்டு அப்படி இல்லன்னு தான் சொல்லணும்...


பச்சை கிளி - விவேகா

ராகுல் நம்பியார், உண்மையில் நல்ல வாய்ஸ்... தமன் இந்த பாட்டில்
எனக்கு கிராமத்து படத்துக்கும் பாட்டு போட தெரியும் என்று அடித்து
ஆடி இருக்கிறார். நல்ல பாட்டு நல்ல வரிகள்....கேட்க தூண்டும்
மற்றுமொரு பாடல்.


ஆத்தாடி ஆத்தாடி - நா.முத்துகுமார்.

அக்மார்க் தமன் பாட்டுனா இது தான். செம பீட். இந்த பீட் எங்கோ
கேட்டது போல் இருந்தாலும்...பாட்டின் வேகம் சூப்பர் பாஸ்ட்.
நவீன் பாடியுள்ளார். கண்டிப்பா இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில்
வர்ற வாய்ப்பு இருக்கு. அதே போல் வரிகளும் நோ சான்ஸ்.

" ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி...
உன்னைதேடி உன்னைதேடி திசை மாறி போனேன்டி...."


அய்யனார் - தீம் .


இதிலும் ஒரு பீட் வரும் தட தட தடனு நல்ல இருந்தது....


ஆக மொத்தத்தில் அய்யனார் பாட்டை கேட்டவுடன் படம் எப்படி
இருக்கும் என்ற ஆர்வமும் வந்து விட்டது.... நீங்களும் கேட்டு
பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்....!!


**********************

அரிது அரிது....


இந்த படம் முழுவதும் வெளிநாட்டில் எடுத்து இருப்பதாக
படித்த நினைவு. நாயகி நாயகன் இருவருமே புதுமுகங்கள்.
கண்டிப்பா பாடல்கள் மேற்க்கத்திய பாணியில்
தான் இருக்கும் என்று முதல் பாட்டை கேட்டேன்....

அழகாய் சிரித்தயாட... என்று வித்தியாசமா இருந்தது....
எப்படி சொல்றதுனு தெரியல... ஒரு ஹான்டிங்கா இருந்தது....

ஆனா அடுத்து அடுத்த பாடல்கள் ஒண்ணும் புரியலை...
ரசிக்கவும் முடியலை....சில பாடல்கள் என்ன பாடுருங்கானு
கூட தெரியலை.....படம் பார்க்கும் போது சப் டைட்டில்
போட்டால் நலம்......

இன்னொரு பாட்டு ஊ..லாலலி..னு...முதலில் சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்த சவுண்ட் வருமே அந்த மாதிரி ஸ்டார்ட் ஆச்சு...சரி நல்லா இருக்கும்னு நினைச்சா சுத்தம்.....!!


எனக்கு மேற்க்கத்திய இசை பிடிக்காதுனு இல்ல...நான் குளிர்
நூறு டிகிரி படத்தின் பாடல்களுக்கு ரசிகன்....ஆனா அரிது அரிது
படத்தின் பாடல்கள் சுத்தமாக ஈர்க்கவில்லை....ஒரு வேளை
கதை வெளிநாட்டில் நடப்பதால் தமன் இந்த மாதிரி போட்டு
இருக்காரோ என்னவோ.....

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் அரிது அரிது பாடல்களை
நான் இனிமே கேட்பது மிகவும் அரிது....!! தமன் அரிது அரிதுஇல்
கல் உடைக்கவில்லை!!


இந்த இடுகை பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்குகளை செலுத்துங்கள்....

ஜெட்லி...(சரவணா...)