Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழா 2010 - நாள் 1

அஞ்சு மணிக்கு, ஐயா வந்து ரிப்பன் வெட்டி திறந்து, பொற்கிழி வாங்கிக்க, ச்சீ ச்சீ, கொடுக்க போறாருன்னு அழைப்பிதழ்ல போட்டிருந்ததால், ஆறு மணிக்கு தான் வீட்டை விட்டே கிளம்பினேன். ஒழுங்கா தெரிஞ்ச வழியில போகாம, கொஞ்சம் சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சு, கத்திப்பாராவில் திரும்பாம நூறடி சாலையில் போயிட்டேன். போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, எந்த இடத்தில் திரும்பி, எந்த சாலையில் போகணுங்கிறது தெரியாதுன்னு. ஒரு வழியா போனவருடம் கடைசி நாளில் அவசரமாய் சென்ற வழி நினைவுக்கு வர, சாமியார் மடம் போற சாலையில் திரும்புவதாக நினைச்சு மாம்பலம் போற சாலையிலேயே திரும்பினேன். அப்புறம் உஸ்மான் சாலை சுரங்கபாதை மகாலிங்கபுரம், லயோலா கல்லூரின்னு சுத்தி ஏழேகாலோட போய் சேர்ந்தேன். நான் போனப்போ, விழாவெல்லாம் முடிஞ்சு எல்லாம் கிளம்பி போயிட்டாங்க, நல்லவேளை தப்பிச்சேன்.(இதுவரை ஆற்றிய இலக்கிய பணியை(!) பாராட்டி எனக்கும் பொற்கிழி ஏதாவது குடுத்துட்டாங்கன்ன என்ன பண்றது, அது கூட பரவாயில்ல, தலைவரை பாராட்டி கவிதை, கிவிதை பாடச்சொன்னாங்கன்னா).

பள்ளி வளாக வாசலிலிருந்து, அரங்க நுழைவாயில் வரை காணப்படும் பதிப்பகங்களின் விளம்பரப் பலகைகள் அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தன. முதல் நாள் என்பதால் நுழைவு கட்டணம் இல்லாமலேயே உள்ளே விட்டுட்டாங்க. பல ஸ்டால்களில் அப்போதுதான் கடைசிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்ததன. ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் கைவசம் இருந்ததால், காலச்சுவடு ஸ்டால் எங்கிருக்குன்னு சந்தை அலுவலகத்தில் விசாரித்து சென்றேன்.

நானே சொந்தமா படிச்சு கவரப்பட்டு தொடர ஆரம்பிச்ச எழுத்தாளர்கள், புதுமைபித்தன் (தமிழ் துணைப்பாட தொகுதியில் இருந்த காஞ்சனை, செவ்வாய் தோஷம்), கல்கி (அதிர்ஷ்டவசமாய் கைக்கு கிடைத்த பொன்னியின் செல்வனின் மூன்றாம் பாகம்), சுஜாதா (கற்றதும் பெற்றதும்), எஸ்ரா (துணையெழுத்து), கசீ சிவக்குமார் (கானல்தெரு), மத்தபடி இதுவரை வாசிச்சது எல்லாம் யாராவது பரிந்துரைத்தது தான். இந்த வருட விருப்பப் புத்தக பட்டியல் உபயம், எஸ்ராவின், கதாவிலாசம். ஐம்பது எழுத்தாளர்களை அவர்களின் சிறந்த நூல்களை பற்றிய குறிப்புகளோடு அறிமுகம் செய்யும் இந்த கட்டுரை தொகுப்பில் என்னை கவர்ந்த பட்டியல்இது,




கிருஷ்ண பருந்து - ஆ மாதவன் - தமிழினி - Rs 65
அம்மா வந்தாள் - தி.ஜா - ஐந்திணை - *
என் பெயர் ராமசேஷன் - ஆதவன் - ??
கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் -  கிழக்கு - Rs 60 **
நித்ய கன்னி - எம்வி வெங்கட்ராம் - காலச்சுவடு - Rs 100
ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் - கிழக்கு - Rs 70 **
கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு - Rs 80 **
ஜி நாகராஜன் படைப்புகள் - காலச்சுவடு - Rs 450 **
அபிதா - லாச ராமாமிருதம் - கிழக்கு - Rs 75 (காலச்சுவடு - Rs 80) **
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு - காலச்சுவடு - Rs 140
மதினிமார்களின் கதை - கோணங்கி - ??
பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன் - காலச்சுவடு - Rs 225
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 450 **
சுந்தர ராமசாமி சிறுகதைகள் - காலச்சுவடு - Rs 575 **
காடு - ஜெயமோகன் - தமிழினி - Rs 260 **
ரப்பர் - ஜெயமோகன் - ??
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - காலச்சுவடு - Rs 250
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - ??

இது தவிர நீண்ட நாள் விருப்பமான சில புத்தகங்கள்,

கன்னி - பிரான்சிஸ் கிருபா - தமிழினி - Rs 260 **
வியாசர் விருந்து
- ராஜாஜி - வானதி - Rs 80 **

தலைவர் சுஜாதாவின் பரிந்துரை

வாசவேச்வரம் - கிருத்திகா - காலச்சுவடு - Rs 140 **
பொய்த்தேவு
- கநா சுப்ரமணியம் - Rs 150
தற்கால தமிழகராதி
- க்ரியா - *

காலச்சுவடுக்கு வழி விசாரித்து நேரே செல்லாமல் வழியில், கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்ததால், வாங்கிய இரு புத்தகங்கள்,

குண சித்தர்கள் - கசீ சிவக்குமார் - கிழக்கு - Rs 125 **
கிச்சு கிச்சு - ஜே எஸ் ராகவன் - கிழக்கு - Rs 60 **

இந்த பட்டியலில் இல்லாத, இன்றைய விசிட்டில் கண்ணை உறுத்திய புத்தகங்கள்,

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் (தமிழில்:திஜர) - காலச்சுவடு - Rs 125
சிலிர்ப்பு (சிறு கதைகள்)- தி ஜா - காலச்சுவடு - Rs 250
வாடிவாசல் - சிசு செல்லப்பா - காலச்சுவடு - Rs 40
துப்பறியும் சாம்பு (முழு தொகுப்பு) - தேவன் - கிழக்கு - Rs 300 (அம்மாவுக்காக)
குருதிப்புனல் - இ.பா. -கிழக்கு - Rs 150
விக்கிரமாதித்தன் கதைகள் - பூம்புகார் - பரதன் (தொகுப்பு) - Rs 80

மேலே உள்ள பட்டியலில் மீதமிருக்கும் புத்தகங்களை, இனிவரும் நாட்களில் வாங்க வேண்டும். அதற்குள் கண்ணில் படுவது எத்தனை வாங்கப்போகிறேனோ தெரியவில்லை. ஹ்ம்ம்ம்.

கிழக்கு பதிப்பகத்தில் டெபிட் கார்டு இயந்தரம் காலைவாரிவிட்டதால், மீண்டும் சட்டையை கழற்றி கொடுக்கும் நிலைக்கு ஆளானேன், அப்புறம் மேல், கீழ், உள், வெளி அத்தனை பாக்கெட்டுகளில்லும் தோண்டியெடுத்து கொடுத்து வந்ததால், ஐந்து ரூபாய்க்கு கடலை மட்டும் வாங்கிக் கொறித்தபடி வெளிவந்தேன்

பின்குறிப்பு :

காலச்சுவடு பதிப்பகத்தில், மூன்று புத்தகம் வாங்கினால் ஒரு புத்தகம் அன்பளிக்கிறார்கள் (மூன்றில் எது விலை குறைவோ அது), மூன்றுக்கு மேல் வாங்க எண்ணியிருப்பவர்கள் கொஞ்சம் யோசித்து முடிவெடுத்தால் நல்லது.

மேலே உள்ளவற்றில் சில புத்தகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டிருக்கலாம். விபரம் ஏதேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

நீங்கள் ரசித்த புத்தகங்களையும் தெரியப்படுத்தினால், பட்டியலில் இணைத்துக்கொள்வேன்.

** - இன்று வாங்கினேன்
* - விலை தெரியவில்லை
?? - தேட வேண்டும்
 


நன்றி
சங்கர்

Wednesday, December 30, 2009

புத்தகத்திருவிழாவுக்கு போன கதை

பலரும் 2009 குறித்த அவரவர் பார்வைகளை பதிவுசெய்து கொண்டிருக்கின்றார்கள், அந்த வரிசையில் இது என்னுடைய பார்வை. இந்த ஆண்டில்தான், வெகுநாள் விருப்பமான, சில நல்ல புத்தகங்கள்  (மோகமுள், விஷ்ணுபுரம் உட்பட) படித்து முடித்தேன். இந்த ஆண்டில தான் ஒரு பெரிய சாதனையும் செய்தேன், ஒண்ணுமில்லீங்க, ஒண்ணுக்கு ரெண்டா ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன் (சும்மா ஒரு விளம்பரம்)

கல்லூரி படிப்பிற்காக 2001லேயே சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்ட போதும், முதல் முதலாய் புத்தக சந்தைக்கு சென்றது 2005-ல் தான், அன்றைய பொருளாதார நிலைமையால, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு "ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்" மட்டும் வாங்கிட்டு வந்தேன். அடுத்து வந்த வருடங்களில் சம்பளமும் கூட ஆரம்பிச்சது, வாங்கும் புத்தகங்களும் அதிகமானது. ஆனாலும் 2008 வரை, மனசு விரும்பும் அளவு வாங்க பர்சு இடம் கொடுக்கவில்லை. 2008-ல் தான் சென்ற இடமெல்லாம் புத்தகம் வாங்க ஆரம்பித்தேன். இந்த பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாய் முத்திப்போய், கடந்த புத்தக சந்தையில் போட்ட பட்ஜெட் எகிறி, கிட்டதட்ட, போட்டிருந்த சட்டையை கழற்றி கொடுக்குமளவு வாங்கினேன் (நன்றி, தலைவர் சுஜாதா).



இதுவரை புத்தக திருவிழாவிலும், மற்ற இடங்களிலும் வாங்கிய புத்தகப்பட்டியல் இதோ, விருப்பபட்டால் நீங்களும் வாங்கலாம்,

மோகமுள் - தி ஜானகிராமன் - ஐந்திணை - Rs 330
இந்த அற்புத நாவலில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்நாடக இசைக் கச்சேரியை நிச்சயமாய் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கேட்பது கூட என்னால் முடியாத காரியம், ஆனால் நாவலை வாசிக்கும்போது உடலில் ஏற்படும் சிலிர்ப்பும், மனதில் உண்டாகும் நிறைவும், அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று.

மரப்பசு - தி ஜானகிராமன் - ஐந்திணை - Rs 80
மீண்டும் தி.ஜா., மீண்டும் இசை, இன்னுமொரு அற்புதம். சராசரி மனதிற்கு அதிர்ச்சி தரும் கதைக்கரு,

ஜேஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 150
படிக்கும்போது மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு இன்னும் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். **"இந்நூல் இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் நாம் மக்கள் கற்றுத் தேறும் பொற்காலத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவாயிலாகும்" என்று சுந்தர ராமசாமியே கூறாமல் இருந்திருந்தால் நாம் அதை சொல்லியிருக்க முடியும்**

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 150
ஜேஜே அளவுக்கு என்னை கவரவில்லை என்றாலும், சுராவின் மொழி நடைக்காகவே படிக்கலாம்.

சாயாவனம் - சா கந்தசாமி - காலச்சுவடு - Rs 150
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தூதனில் நாடகமாக பார்த்ததிலிருந்து மனதின் அடியாழத்தில் படிந்து விட்ட நாவல்.  நான் வாங்கியது ஒரு பழைய புத்தகக் கடையில், முப்பது ரூபாய்க்கு (மாணவர் பதிப்பு, கவிதா பப்ளிகேஷன்)

கானல் தெரு - கசீ சிவகுமார் - ஸ்ரீ விஜயம்/சந்தியா பதிப்பகம் - Rs 50
கல்கியில் தொடராய் வெளிவந்த கசீ சிவக்குமாரின் குறுநாவல். புத்தகமாய் வெளிவந்த விஷயம் தெரியாமல் கடந்த இரண்டு புத்தக சந்தைகளில் தேடி கடைசியில், பதிப்பகத்திலேயே நேரடியாய் சென்று வாங்கிய கதை குறித்து தனியாய் பதிவெழுதுகிறேன்

என்றும் நன்மைகள் - கசீ சிவகுமார் - கிழக்கு பதிப்பகம் - Rs 60
கானல் தெருவில் சுற்றிய மயக்கத்திலிருந்து தெளியாமலே வாங்கிய சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பிலுள்ள "முச்சந்தியா ராகம்" குறித்தும் ஒரு பதிவெழுத எண்ணம்.

கள்ளிக்காட்டு  இதிகாசம் - வைரமுத்து - திருமகள் நிலையம் - Rs 110
நண்பன் நடராஜ் பரிசாய் தந்தது. வைரமுத்துவின் கவிதைகளின் மேல் ஈடுபாடு எதுவுமின்றி இருந்த (இருக்கும்) எனக்கு, அவரது புதியதொரு பரிமாணத்தை காட்டிய கதை. பேய தேவரின் மேல்விழுந்த சுவற்றின் கணம் இன்னும் மனதில் உள்ளது.

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் (தமிழில்:கண. முத்தையா) - தமிழ்ப் புத்தகாலயம் - Rs 75 *
 கானல் தெருவில் வரும் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை ஒரு பழைய புத்தக கடையில் இரண்டு ரூபாய்க்கு கண்டெடுத்தேன். சற்றும் நெருடாத மொழிபெயர்ப்பு (ராகுல்ஜியை நம்பி கடந்த சந்தையில் வாங்கிய மொக்கைகள் மூன்று, ஊர் சுற்றி புராணம் (எஸ்ராவும் காரணம்), மனித சமுதாயம், ரிக் வேதகால ஆரியர்கள்).

காமக் கடும்புனல் - மகுடேஸ்வரன் - யுனைடெட் ரைட்டர்ஸ் - Rs 100
ஆணின் பார்வையிலேயே எழுதப்பட்டிருப்பினும், காமம் என்ற ஒரே பாடுபொருள் கொண்ட ரசிக்கும்படியான (சில நேரம் சங்கடப்படுத்தும்)  400 கவிதைகள்.

சத்திய சோதனை - காந்தி (தமிழில் : வேங்கடராஜுலு)நவஜீவன் பதிப்பகம் - Rs 30
அவருடைய கொள்கைகள் குறித்த முழு மன ஒப்புதல் இன்றுவரை இல்லை எனினும், அவற்றை அவர் செயல்படுத்திய விதம் பிரமிப்புக்குரியது. இன்னுமொரு சிறந்த மொழிபெயர்ப்பு

கோபல்ல கிராமம்  - கி.ராஜநாராயணன் - காலச்சுவடு - Rs 100
**தெலுங்கை தாய்மொழியாக கொண்டு, தென்னிந்தியாவின் ஆழத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்து, இந்த கலாச்சாரத்தில் ஒன்றி விட்ட ஒரு தனிப்பட்ட இனத்தவரின் கதை இது**

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் - அன்னம் - Rs 120
முதல் பாகத்தின் சுவாரசியம் சிறிதும் குறையாமல் தொடரும் இந்த புத்தகம்.

வாஷிங்டனில் திருமணம் - சாவி - நர்மதா பதிப்பகம் - Rs 60
அம்மாவின் ஆசைக்காக வாங்கிய புத்தகம் (விசிறி வாழையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், யாருக்கும் தெரிந்தால் சொல்லலாம்)

சுவாமியும் சிநேகிதர்களும் - ஆர்கே நாராயண் (தமிழில்:வி கிருஷ்ணசுவாமி) - விகடன் பிரசுரம் - Rs 90
மால்குடி டேஸ் பார்த்த ஞாபகத்தில் வாங்கினேன். சுவாரசியமான நடை.

தத்தக்கா புத்தக்கா - ஜேஎஸ் ராகவன் - கிழக்கு பதிப்பகம் - Rs 60
நிறைய ஆட்டோ சம்பவங்களுடன் ஒரு நான் ஸ்டாப் காமெடி எக்ஸ்பிரஸ்

அந்தரங்கம் இனிமையானது - டாக்டர் ஷாலினி - கனவுப்பட்டறை - Rs 80
குமுதத்தில் வெளிவந்த தொடரின் புத்தக வடிவம்.உடலில், மனதில் படரும் காமத்தை அறிவியல் கண்கொண்டு காண ஒரு வழி.

காதலின் துயரம் - கதே (தமிழில் : எம். கோபாலகிருஷ்ணன்) - தமிழினி - Rs 60
"Sorrows of young werther" என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய நாவலின் தமிழாக்கம். மீண்டுமொரு நல்ல மொழிபெயர்ப்பு.

எனது இந்தியா - ஜிம் கார்பெட் (தமிழில் : யுவன் சந்திரசேகர்)  - காலச்சுவடு - Rs 125
வேட்டை இலக்கியம் என்ற, தமிழில் அதிகம் காணப்படாத பிரிவில் வரும் நூல்.

ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா - உயிர்மை - Rs 150
இவ்வளவு எழுதிட்டு, தலைய பத்தி எழுதலைனா எப்புடி. ஒரு தடவை படிச்சி முடிச்சிட்டேன். இது நாவலா, கட்டுரையா சிறுகதை தொகுப்பா ஒண்ணும் புரியல. இன்னொரு தடவை படிச்சா தெளியும்னு நினைக்கிறேன்.

கதாவிலாசம் - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன் - Rs 150
நண்பர் சித்துகிட்ட சுட்டது. இந்த கட்டுரை தொகுப்பில் உள்ள எழுத்தளர்களை பற்றிய குறிப்புகள் தான் இந்த புத்தக சந்தையில் நான் வாங்க எண்ணியிருக்கும் புத்தக பட்டியலை தயார்செய்ய உதவியது.

துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன் - Rs 85
க்ரைம் நாவல்களில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்த என்னை கரைசேர்த்த கட்டுரை தொகுப்பு. (எஸ் ராவின் சமீபத்திய கட்டுரைகளை படிக்கும்போது, படித்ததையே மீண்டும் படிக்கும் உணர்வு வருவதை தவிர்க்க இயலவில்லை)

விஷ்ணுபுரம் - ஜெயமோகன் - கவிதா பதிப்பகம் - Rs 500
காலத்தின் அடுக்குகளில் முன்பின்னாய் பயணிப்பதாய் இந்த நாவல் குறித்த பார்வைகள் கூறும்போதும், எனக்கு அப்படி தோன்றவில்லை, (முடிந்தால் விரிவாய் பதிவிடுகிறேன், நான் வாங்கியது ரூ 250க்கு), **ஜெயமோகன் இதை ஒத்துக்கொள்வாரா எனத் தெரியவில்லை, விஷ்ணுபுரம் ஒரு காத்திக் வகை விஞ்ஞான நாவல் தான்**.

கற்றதும் பெற்றதும் (1-4) - சுஜாதா - விகடன் - Rs 365
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை - Rs 350
எந்த பக்கத்தை பிரித்து பார்த்தாலும் சுவாரசியம் நிச்சயம். கிட்டத்தட்ட நாற்பதாண்டு கால தமிழ் ரசனையின் காப்சூல் வடிவம் இது. இதுக்கு மேல தலய பத்தி எது சொன்னாலும் புதுசா இருக்காது.

விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா - உயிர்மை - Rs 275
இந்த தொகுப்பு குறித்த ஜெயமோகனின் கருத்துக்கள் சிலவற்றை நான் ஒப்புக்கொண்டாலும், தமிழின் முன்மாதிரி தொகுப்பு இது என்பதில் சந்தேகமில்லை.

வாங்க நினைத்துப் போன புத்தகங்களில் ஒன்றிரண்டு மட்டுமே வாங்கினேன், மற்றவை எல்லாம் தலைப்பு பார்த்து வாங்கி வந்தது. இந்த ஆண்டாவது நினைப்பது நடக்கிறதா என்று பார்க்கலாம்.

பின்குறிப்பு
* விலை சரியாக தெரியவில்லை
** இதெல்லாம் எங்கள் தலைவர் சுஜாதா சொன்னது

குறிப்பிடப்பட்ட விலைகள் நான் வாங்கிய போது இருந்தவை, தற்போது மாற்றம் ஏதும் இருக்கலாம்.

அடுத்த பதிவு - இந்த ஆண்டு சந்தையில் வாங்க எண்ணியிருக்கும் புத்தகங்கள்

புத்தக சந்தை குறித்த மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்க



நன்றி
சங்கர்

Monday, December 28, 2009

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்



இந்த ஆண்டு இதுவரை 125 நேரடி தமிழ் திரைப்படங்கள்
வெளியாகியுள்ளது.இதில் நான் பார்த்தது வெறும் 44 தமிழ்
படங்கள் மட்டுமே,அதாவது மூன்றில் ஒரு பங்கு.ஆனால்
அந்த 44 படத்தில் பல சூர மொக்கை படங்களை பார்த்துள்ளேன்
என்பது குறிப்பிடத்தக்கது.


மொக்கை படத்தை பற்றி தப்பா எடை போட்டுட கூடாது...
அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.


என்னை பொருத்த வரை மொக்கை படம் என்பது பொறுமையை
சோதிப்பதாக அமைய வேண்டும்...இன்றும் பலராலும் மொக்கை
படம் என்று அறியப்பட்டு வரும் குளிர் நூறு,மதுரை சம்பவம்(ஹீரோவை விட்டுடுங்க!!),சிந்தனை செய் போன்ற படங்கள் என்னை பொருத்தவரை நல்ல டைம் பாஸ் படம் ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் என்பேன்...... இந்த லிஸ்ட் நான் பார்த்த மொக்கை படங்களின் வரிசையே அப்புறம் எங்கப்பா அழகர் மலை,சிவகிரி,மரியாதை, ஆறுமுகம் படம்னு எல்லாம் கேக்க கூடாது நான் அந்த படங்களை பார்க்கவில்லை என்பது தான்
உண்மை(நம்புங்க!!).


10. குரு என் ஆளு - ஆளை உடு சாமி!!

நான் இந்த படத்தை ப்ளாக் எழுத வந்த பின்னர் தான் பார்த்தேன்
என்றாலும் இந்த படத்தை பற்றி விமர்சனம் வேற போட
வேண்டுமா என்று எண்ணி விமர்சனம் எழுதுவதை கைவிட்டு
விட்டேன்....விவேக் காமெடி செம மொக்கை.


9.இந்திர விழா: ஆண்டவா...

மொக்கை படமென்று தெரிந்தாலும் நமீதா இருக்கிறார் என்ற ஒரு காரணத்துக்காக தெரியாம தியேட்டருக்குள் போய்ட்டேன்...உள்ளே போன அங்கே விவேக் பெரிய மொக்கை போட்டாரு....

8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்: பறந்து போச்சே....

இந்த படத்தில் டைட்டில் மற்றும் பாடல்கள் மட்டும் தான் நன்றாக இருந்தது.....ஹீரோவை கண்டால் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


7.யோகி: போகி புகை...!

அமீரை நாங்கள் இயக்குனராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்...
படத்தை பற்றி வேறு எதுவும் சொல்ல விருப்பமில்லை...


6.மாசிலாமணி: மொக்கை மணி!!

அருமையான மொக்கை படம்... நகுலுக்கு முக பாவனைகள்
பயங்கரமா வருது.....அவரு சில காட்சிகளில் என்ன பீலிங்க்ஸ்
பண்ராருனே புரிய மாட்டிக்குது...(அதனாலதான் நான் இன்னும்
கந்தகோட்டை படம் பார்க்கவில்லை)


5. வாமணன்: கோமணம் கிளிஞ்சது!!

படத்தில் பெயர் மட்டும் தான் நல்லா இருந்தது...சந்தானம் காமெடி
ஒ.கே....மற்றபடி வாமணன் பற்றி சொல்வதருக்கு ஒன்னும்
இல்லை...

4.நான் அவனில்லை பார்ட்-2 : பார்ட்-3 வருமோ??

இந்த படத்தில் நான் என்ன எதிர்ப்பார்த்துட்டு போனேன்னோ அது
கொஞ்சம் கம்மி...மற்றபடி கதை திரைக்கதையெல்லாம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் அந்த கடைசி சீன்லா ஜீவன் போப் டிரஸ்இல் வருவது மகா கொடுமைடா சாமி.....


3.மதுரை டூ தேனி : பஸ்க்கு டையரை காணோம்...

வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹீரோ விஜயகாந்த் அளவுக்கு
பேசியே பிரச்சனையை தீர்ப்பதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே
ஓவர்....படத்தின் கதை ஆரம்பிக்கும் போது நான் தியேட்டரில் இல்லை....(படம் முடியும் போது தான் கதை ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டேன்).


இரண்டாவது இடத்தை பிடிக்க மூன்று படங்கள் அடித்து கொள்கின்றன...


2.அதே நேரம் அதே இடம் : அதே அடி அதே வலி!!

இந்த படத்தை அலசி அலசி சோர்வு அடைஞ்சாச்சு....கடவுள்கிட்ட
வேண்டி கொள்வது இது ஒன்று தான்...இனிமே அதே நேரம்
அதே இடம் போன்ற படங்களை வெளிவரமால் மக்களை காப்பாற்று..


2.முத்திரை-நல்லா குத்துனாங்கயா!!


எப்படி படம் எடுக்க கூடாது என்று இந்த படத்தை பார்த்தால்
கற்று கொள்ளலாம்...ரொம்ப பெரிய லாஜிக் ஓட்டையை உள்ளடக்கிய
படம் முத்திரை......


2.தோரணை - செம ரோதணை.

விஷாலிடம் இருந்து மொக்கை படத்தை எதிர்பார்த்தேன் ஆனால்
இது மரண மொக்கைடா சாமி...எதோ சந்தானம் இருந்ததால்
தப்பிச்சேன்....

லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்கள் முந்துகிறது...


1. வில்லு - செம டல்லு

இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....

1.கந்தசாமி: போதும்டா சாமி..

படத்தில் சில விஷயங்கள் புதுசாக இருந்தாலும் கதை பழசு என்பதாலும் சொன்ன விதத்தாலும் கந்தசாமி ஈர்க்கவில்லை.ஆனா ஒன்னு மட்டும் உண்மை இனிமே "என் பேரு மீனாகுமாரி" பாட்டில் வரும் முகேஷ் திவாரியின் pole ஆட்டத்தை எந்த நாயகனும் பீட் பண்ண முடியாது.....


1.சர்வம்: நாசம்!!

நான் மிகவும் எதிர்பார்த்த படம்...ஆனால் பயங்கர மொக்கை
திரைக்கதை...கதையும் கூட....ஒளிப்பதிவெல்லாம் குறை
சொல்ல முடியாது....விஷ்ணுவர்தனிடம் இருந்து 2010 இல்
நல்ல சுவாரசியமான படத்தை எதிர்பார்க்கிறேன் ....


என்னப்பா பத்துக்கு மேல லிஸ்ட் இருக்குனு நினைக்கிறிங்களா....அட விடுங்க சார் நானே நிறைய படத்தை பத்தி எழுத மறுந்துட்டேன்...

டிஸ்கி: நான் பல மரண மொக்கை படங்களை பார்த்து மக்களை
காப்பாற்றியுள்ளேன் என்று கருதி எனக்கு யாராவது தியாக செம்மல் விருது தருவாங்கன்னு பார்த்தா வீடு திரும்பல் மோகன்குமார் அண்ணே எனக்கு சிறந்த வில்லன் விருது கொடுத்துட்டாரு.... என்ன கொடுமை சார் இது!!

(மொக்கை படத்தை மொக்கைனு தான் சொல்லமுடியும்,
அதே போல் நல்ல படத்தை நான் கிண்டல் அடிப்பதில்லை!)

'

நீங்கள் இந்த ஆண்டு பார்த்த சிறந்த மொக்கை படங்களை கமெண்ட்இல் பகிர்ந்து கொள்ளுங்கள்...முடிஞ்சா ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

நன்றி : indiaglitz

Saturday, December 26, 2009

அமி கொல்கொத்தா ஜாக்ச்சி

அஞ்சு வயசிலேயே ஒரு பெங்காலி பாட்டை முழுசா கத்துக்கிட்டு அர்த்தமும் தெரிந்து கொண்டபோதிலும், இதுவரை சென்னையை தாண்டி வடக்கே போனதில்லை, அதிகபட்சமாய் மாநிலத்தை விட்டு வெளியே போனது,  கேரளாவுக்கு தான். இந்த நிலையில் தான், வந்தது லீவு. மூணு நாள் லீவு போட்டுட்டா கிறித்துமஸ் முதல் புத்தாண்டு வரை 10 நாட்கள் லீவு கிடைக்குதுன்னு சொல்லி டிசம்பர்  28, 29, 30 லீவு போட்டாச்சு. நிறைய வேலை செஞ்சுட்டேன்னு சொல்லி டிசம்பர் 31 அவுங்களே லீவு குடுத்துட்டாங்க.

சனி, ஞாயிறு ரெண்டு நாள் அலுவலகம் போகாம இருந்தாலே மனசு கேட்கமாட்டேங்குதே, எப்படி பத்து நாளை ஓட்டுறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ தான், போன் பண்ணினான், நாடோடிகள் ஸ்டைலில கல்யாணம் பண்ணிக்கிட்டு கொல்கொத்தா ஓடிப்போன நண்பன் (சும்மா ஒரு பில்டப் தான், இரு வீட்டு சம்மதத்தோட நடந்த காதல் திருமணம்), ஒரு வாரம் இங்க வாடான்னு கூப்பிட்டான், ஏற்கனவே பொக்கிஷம் படம் முதல் நாள் பார்த்ததுல இருந்து கொல்கொத்தா மேல ஒரு தனி ஈர்ப்பு வந்திருந்தது, சரி நாமும் எத்தனை நாள் தான் ஊருக்கு போய் அல்வா சாப்பிடறது, ரசகுல்லாவும் சாப்பிட்டு பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இதெல்லாம் விட, உங்களுக்கெல்லாம் என் கவிதை கொடுமையிலிருந்து பத்து நாள் விடுதலை கொடுக்கலாம்ங்கற நல்லெண்ணமும், போயிட்டு வந்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரையை உங்களுக்கு தரவேண்டுமென்ற தணியாத இலக்கிய ஆர்வமும் முக்கிய காரணங்கள்.



சொந்த ஊர் நோக்கிய பன்னிரண்டு மணிநேர பயணங்களோ, சொந்தங்களை பார்க்கவோ,  சொந்தமாக்கி கொள்ள விரும்புபவளை பின்தொடரவோ மேற்கொள்ளும் மின்சார ரயில் பயணங்களோ, ரயில் பயணங்கள் என் விருப்பத்திற்கு உரியவையாகவே உள்ளன. ஊருக்கு செல்லும் செல்லும் பயணங்களின் பெரும்பகுதி தூக்கத்திலேயே கழிந்து விடுவதால், கொல்கொத்தா செல்லும் இந்த ஒன்றரை நாள் பயணத்தை மிக அதிகமாகவே எதிர்பார்த்திருந்தேன். மூன்று தலையணை புத்தகங்களையும் (படிக்கவும், தலைக்கு வைத்து படுக்கவும்) எடுத்து வைத்திருந்தேன்.இரவு ஒன்பது மணிக்கு புறப்படும் ரயிலை பிடிக்க ஆறரை மணிக்கே எக்மோருக்கு கிளம்பினேன்.

போகும் வழியெல்லாம், இந்தியாவின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றை பார்க்கப் போகிற, டிராம் வண்டியில் பயணிக்க போகிற, மனதில் நினைத்திருக்கும் நெடும் பயணங்களுக்கெல்லாம் தொடக்கமான நீண்ட பயணம் ஒன்றை செய்யப்போகிற சந்தோஷம் மனதில் நிரம்பி வழிந்தது. பக்கத்து இருக்கையில் ஒரு இளம் பெண், முகத்தில் சற்றே வங்காள சாயல் (?) தெரிந்தது, சக பயணியாய் இருக்குமோ என்ற எண்ணம் (நப்பாசை!) மனதில் தோன்றியது,  வண்டி தாம்பரம் தாண்டிய பிறகு தான், அது கடற்கரை - செங்கல்பட்டு துரித வண்டியென்றும், ஏழரை மணிக்கே எக்மோர் சென்று விடுமென்றும் தெரிந்தது. பையில் வைத்திருந்த பயண சீட்டை பிரித்து பார்த்த போது இன்னொன்றும் தெரிந்தது, வண்டி புறப்படும் நேரம் பத்தரை.

மின்சார ரயிலின் இருபுறமும் நகரும் சென்னை நகரமே புதிதாய், அழகாய் தெரிந்தது,வேக வேகமாய் கடந்து சென்ற ஸ்டேஷன்களில் காத்து நிற்கும் முகங்களை பார்த்தபோது, நெடும் பயணம் இங்கேயே தொடங்கிவிட்டது போல் தோன்றியது. கிண்டியிலும், மாம்பலத்திலும் நின்று புறப்பட்ட வண்டி சேத்துப்பட்டில் பத்து நிமிடம் சிக்னலுக்கு காத்து நின்ற பின் சரியாய் ஏழு நாற்பத்தைந்துக்கு எக்மோருக்குள் நுழைந்தது. இரண்டு பைகளையும் சுமந்தபடி, எக்மோர் எட்டாம் எண் பிளாட்பார்மை மிதித்தேன், இரண்டு நிமிடம் காத்திருந்து பின் படியேறி சென்றேன், நான்காவது பிளாட்பார்மில் இறங்கும்போது, "இன்னும் ஒருமணி நேரத்துல சொல்றேன்", "ரெண்டு மணிக்கு சொல்றேன்", "ஏழுமணிக்கு சொல்றேன்னு" காலையிலிருந்து சொல்லிக்கிட்டே இருந்த  நண்பனிடமிருந்து போன், "டேய், ஏஜெண்டு சொதப்பிட்டாண்டா, டிக்கெட் கன்பார்ம் ஆகலை, முடிஞ்சா ஓபன் டிக்கெட் எடுத்துட்டு வந்துடு, வர வழில கொஞ்சம் குளிரும், ஒரு அஞ்சு, ஆறு டிகிரி தான், போர்வை ஸ்வெட்டர் எல்லாம் இருக்கில்ல".

திட்ட தோன்றியதெல்லாம் மனதில் உள்ளே போட்டு புதைத்துவிட்டு, அருகில் இருந்த போர்ட்டரிடம் கேட்டேன், "அண்ணே, ஹௌரா மெயில்ல அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ல கூட்டம் எப்படி இருக்கும்" அவர் சொன்னார் "வெளியில நின்னே வேடிக்கை பார்க்க முடிகிற அளவு இருக்கும்". அப்படியே வந்த வழியிலேயே திரும்பி எட்டாவது பிளாட்பாரம் வந்தேன், அறிவிப்பு வந்தது,  "செங்கல்பட்டு செல்லும் துரித மின்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து செல்லும்", வடிவேலு மாதிரி "வந்த வண்டியிலேயே ஏத்தி அனுப்புறாங்களேன்னு" புலம்பிக்கிட்டே ஏறினேன். ஒன்பதரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

பின்குறிப்பு:

கொல்கொத்தா சென்று பயணக்கட்டுரை எழுத நினைத்தேன், எக்மோர் பயணக்கட்டுரைதான்   எழுத முடிந்தது, உங்கள் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்

அலுவலக தோழியிடம் கேட்டு வைத்த பெங்காலி தலைப்பின் அர்த்தம், "நான் கொல்கொத்தா போறேன்". பெங்காலி தெரிந்தவர்கள் யாராவது இருந்தா "அமி ஹீனாக்கி தேக்கி பிலாம்" மாதிரி  ஏதாவது உள்குத்து இருக்கன்னு சொல்லுங்க.

முதல் பத்தியில் சொன்ன அந்த பெங்காலி பாடல் இதோ, எல்லாரும் எழுந்து நின்னு படிங்க.






 
நன்றி
சங்கர்

Thursday, December 24, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்(24.12.08)
(பாதி உடான்ஸ்)

முக்கிய செய்திகள்:

"நமீதாவை பாவாடை தாவணியுடன் பார்க்க வேண்டும்" என்று
பாடலாசிரியர் சினேகன் பரபரப்பு பேச்சு.

சமீபத்தில் ஒரு பட விழாவில் பாடலாசிரியர் சினேகன் அவர்கள்
நமீதாவை பாவாடை தாவணியில் பார்க்க ஆசையாக இருக்கிறது
என்று கூறினார்.இதனால் நமீதா ரசிகர்கள் நெஞ்சில் பூகம்பம்
உண்டானது.அதை பற்றி ரசிகர் ஒருவர் நம்மிடம்

" என்னங்க இது அநியாயமா இருக்கு,நாங்களே நமீதா இன்னும்
கம்மியா டிரஸ் போடுவாங்களான்னு பார்த்துட்டு இருக்கோம்
சினேகன் என்னன்னா பாவாடை தாவணி போட சொல்றாரு.
இதை கண்டித்து விரைவில் உலகம் முழவதும் உள்ள நமீதா
தொண்டர் படை உண்ணாவிரதத்தில் குதிக்க உள்ளோம்.."
என்று அவர் அழுது கொண்டே கூறியது கல் நெஞ்சையும்
கரைத்து விடுவது போல் இருந்தது.

அந்த விழாவில் நமீதா வந்த உடை மற்றும் இன்னொரு
விழாவில் நமீதா.....



******************************************************

சிறப்பு பார்வை:

வேட்டைக்காரன் படம் சில முன்னணி தியேட்டர்களில் முன்
பதிவு மூலம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டிரிக்கிறது
என்ற செய்தி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதை பற்றி ஒரு சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!).


நம் சிறப்பு நிருபர் சமீபத்தில் கேட்ட F.M நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் ஆளுக்கு ரெண்டு
வேட்டைக்காரன் டிக்கெட் தரப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த கேள்வியை கேட்ட பின் நம் சிறப்பு நிருபர் இப்போது இருப்பது ராயபேட்டை அரசு மருத்துவமனையில்.

கேள்வி இது தான்,

வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் முதல்
வரி எது?

A. புலி உறுமுது

B. எலி உறுமுது.

(அப்புறம் ஏன் படம் புல் ஆகாது....)

இப்படி கேள்வி கேட்டு டிக்கெட் கொடுப்பதற்கு பதில் தியேட்டர்
வாசலில் இருந்து அனைவருக்கும் டிக்கெட் இலவசமாக தரலாம்
என்பது மக்களின் ஏகபோகமான கருத்தாக இருக்கிறது என்றால்
அது மிகையில்லை....

******************************************
வேலு பிரபாகரனின் புது படம்.

ஏற்கனவே காதல்(காம) கதை என்ற ஹிட்டு(அட்டு) படத்தை
நமக்கு அளித்த பிரபாகரன் அவர்கள் தன் அடுத்த படத்தின்
வேலையை துவக்கி விட்டார்.படத்திற்கு பெயர் கடவுளும்
காதலும் இயக்குனர் அவர்கள் இந்த படத்திலும் தன் கொள்கையை
நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை
காண இப்போதே ஆவலாய் இருக்கும் ஒருவரின்(நான் இல்லிங்கோ)
பேட்டி இதோ

" காதல் கதை ஒரு அற்புதமான படம்.ஒவ்வொரு மனுசனும்
பார்க்க வேண்டிய படம்.படம் புல்லா சீனை காட்டிட்டு கடைசி
ரீலில் வந்து இதெல்லாம் தப்பு ஒன்னும் இல்ல என்று இயக்குனர் பேசுவது ரொம்ப டச்சிங்கா இருந்தது.அடுத்த படத்தில் நாங்க இன்னும் நேரிய(சீனை) எதிர்ப்பார்க்கிறோம்.எங்கள் தேவையை பூர்த்தி செய்வாரா இயக்குனர்.....".

இந்த ரசிகரின் கேள்விக்கு விடை கிடைக்கும் நாள் வெகு
தொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

***********************************************************

நடிகை நீது சந்திரா பிரச்சாரம்:

நடிகை நீது சந்திரா(யாவரும் நலம் புகழ்) சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றுடன் கைகோர்த்து சைவ உணவின் அவசியத்தை வலியிறுத்தி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

(அம்மணியை பார்த்தா சைவ உணவு சாப்பிடுற மாதிரி தெரியலையே...சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு!!)

அம்மணி எங்களுடன் கைகோர்க்க ரெடியாக இருந்தால் நாங்கள்
அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள தயார் என்று
முனியாண்டி விலாஸ் நண்பர்கள் வட்டம் அறிக்கை விட்டுள்ளது
குறிப்பிடதக்கது.

******************************************************

மேலும் தங்களுக்கு இது போன்ற பொது அறிவு செய்திகளை வழங்க
குப்புற படுத்து யோசித்து கொண்டிருக்கும்

உங்கள்
ஜெட்லி சரண்.
நன்றி : indiaglitz

Tuesday, December 22, 2009

என் டர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைகள் - 2

உன் வீடில்லாத் தெரு





பாதாள சாக்கடைக்காய்

பள்ளம் தோண்டியிருக்கவில்லை

குடிநீர் வாரியக்காரர்கள்

குழி தோண்டவுமில்லை - நேற்று

கொட்டிய மழை நீர்

கட்டிக் கிடக்கவுமில்லை

என் வீடு செல்ல

இது சுருக்கு வழி - இருந்தும்

உன் வீடில்லா இத்தெருவில்

நுழையும் முன்

மனப்பலகை சொல்கிறது

'மாற்று வழியில் செல்க'


நன்றி

சங்கர்

Monday, December 21, 2009

சுஜாதாவிடம் ஒரு மன்னிப்பு

சுஜாதாவிடம் ஒரு மன்னிப்பு

ரொம்ப நாளைக்கு முன்னாடி நம்ம சுசியக்கா பதிவெழுத வந்த கதை எழுதக் கூப்பிட்டிருந்தாங்க. நீங்கல்லாம் இந்த பக்கம் வர்றது பெரிய விஷயம், வந்து பதிவுங்கிற பேர்ல நான் பண்ணுற கொடுமையெல்லாம்  படிக்கிறது அதவிட பெரிய விஷயம், இதுல நான் எழுத வந்த கதைய வேற சொல்லணுமான்னு யோசிச்சேன், ஆனா, எவ்வளவோ படிச்சிட்டீங்க இதப் படிக்க மாட்டீங்களான்னு  மனச தேத்திக்கிட்டு எழுதுறேன்.

என்னோட பேரு, சங்கரநாராயணன், சொந்த ஊரு, பரணி பாயும் தரணில, அம்பாசமுத்திரம் பக்கம் ரெங்கசமுத்திரம்ன்னு ஒரு குட்டி கிராமம், பள்ளி இறுதிவரை அங்க படிச்சிட்டு, கல்லூரிக் காலத்திலிருந்து இந்த மகா மாசனத்தில் குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். இப்போ பண்ணிக்கிட்டிருக்குற வேலை, MIS Excecutive ங்கற பேர்ல, அடுத்தவுங்க பண்ணுற வேலைய கணக்கு பாக்குறது.



இப்போ கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாம்,

ஊர்ல, மளிகைக்கடை, ஜவுளிக்கடை எல்லாம் சேர்த்து, மினி சரவணா ஸ்டோர் நடத்தி வந்த என் தாத்தா, பெட்ரோல் பங்க்ல புகுந்து கொள்ளையடிக்கிற இன்றைய திருடர்களுக்கு முன்னோடிகள் பண்ணின தொல்லையால, நான் பொறக்குறதுக்கு முந்தின வருஷமே கடையை மூடிட்டாலும், பண்ணின ஒரு நல்ல காரியம், கடைக்கு வந்துக்கிட்டுருந்த தினமலர, வீட்டுல போட சொன்னதுதான். நான் பொறந்த வருஷம் முதல் இலவச இணைப்பா  வர ஆரம்பிச்ச சிறுவர்மலர, எங்கப்பா நாலு வருஷமா சேர்த்து வச்சிருந்தாரு. நெல்லுல 'அ'னா எழுதிப்படிச்ச அடுத்த நிமிஷத்திலிருந்து  வாசிக்க ஆரம்பிச்ச நான், அஞ்சு வயசு முடியும்போது அத்தனை புத்தகத்தையும் வாசிச்சு முடிச்சிட்டேன், அதுக்கப்புறம், எங்க, யார் வீட்டுக்கு போனாலும் முதல்ல தேடுறது சிறுவர்மலர்தான்.

இப்படி ஆரம்பிச்ச வாசிப்பும் ரசனையும் படிப்படியா வளர்ந்தது, ஆனா படிகள் கொஞ்சம் மாறி மாறி இருந்தது, அதாவது சில நேரம் வயசுக்கு மீறின விஷயங்களும், சில நேரம் வயசுக்கு ஒவ்வாத விஷயங்களும் வாசிக்க கிடைத்தது. உதாரணத்துக்கு, அஞ்சு வயசுல ஆரம்பிச்ச சிறுவர்மலர், கல்லூரி இறுதி வரை உடன் வந்தது, அதேநேரத்துல, எட்டு வயசுல கைக்கு கிடைத்த, அட்டையோ, முடிவோ இல்லாத, எதுவும் புரியாமல் படித்த காதல் நாவலில் (இப்போ மட்டும் புரிஞ்சிடுச்சான்னு கேட்காதீங்க)   வரும் கதாநாயகன் தினகரனும், ஒரு மர்ம நாவலில் வரும் கருப்பு குதிரையும், இன்று வரை மனதை விட்டு விலகவில்லை. அடுத்தபடியா, மாயாவி காமிக்ஸ், ராஜேஷ்குமார், பிகேபி, சுபான்னு ரசனை வளர்ந்தப்போ தான் ஒரு சம்பவம் நடந்தது.

எஸ்வீ சேகரோட, 'காதுல பூ' நாடகத்துல, சினிமா டைரக்டர் ஒருத்தரோட பேசுவாரு,

எஸ்வீ : நீங்க சினிமாவுக்கு வரதுக்கு முந்தி என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?
டை:  விவசாயங்க,
எஸ்: விவசாயத்திலிருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?
டை:  ஒரு நாள் நான் நிலத்த ஆழமா உழுதுக்கிட்டிருந்தேங்க, அப்போ என் கலப்பைல ஏதோ ஒண்ணு சிக்கிக்கிச்சு, என்னன்னு எடுத்து  பார்த்தேன், பிலிம் ரோலு, கலை உலகமே என்ன தமிழ் படத்துக்கு வா வான்னு கூப்பிடுற மாதிரி இருந்தது, குபீர்னு பூந்திட்டேன்.

கிட்டத்தட்ட இதே மாதிரி, ஒரு நாள் பரண நோண்டிக்கிட்டிருந்தப்போ ஒரு புத்தக கட்டு கிடைச்சது, படிச்சு பார்த்தபிறகு தான் தெரிஞ்சது அது வெறும் புத்தகம் இல்ல புதையல்னு, ஆமாங்க, பொன்னியின் செல்வனோட, மூன்று மற்றும் நாலாவது பாகங்கள், உமாசந்திரனோட  முள்ளும் மலரும், ராஜாஜியோட வியாசர் விருந்து, இதெல்லாம் புதையல் தானுங்களே. இது போக எங்க ஊருல கேபிள் டிவி கிடையாது (இன்னிக்கு வரைக்கும்), அதனால்காணக்கிடைத்தது தூதன் மட்டுமே, அதுல கொஞ்சம் நல்ல கதைகள் நாடகமா வந்தது (சாம்பு, சாயாவனம், இன்னும் பல), அந்த நேரத்துல தான் கல்கில நாலாவது தடவையா பொன்னியின் செல்வன்  தொடர் வெளிவர ஆரம்பித்தது, கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஒரு இதழ் கூட விடாம வாங்கினேன், அப்போ ஆரம்பிச்ச வேட்டை, சுஜாதா, புதுமைபித்தன், எஸ்ரா, திஜா, சுரா, ஜெமோ, இன்னும் தொடருது.

கொசுவத்தி ஓவர்,


இப்படி விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டிருந்தாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் உறுதியா நம்பினேன், நான் ஒரு நல்ல ரசிகன் (மட்டுமே), நிச்சயமா எழுத வராது. இந்த ஆண்டு தொடக்கத்துல, நண்பர் அருண் திருமணத்துக்காக, காரைக்குடி போனோம். அப்போதான் நம்ம ஜேட்லியும், சித்துவும் பதிவுலகம்னு ஒரு வஸ்து இருக்கிறது பத்தியும், அதுல இருக்கும் பல பிஸ்துக்கள் பத்தியும் சொன்னாங்க. நாமும் ஒண்ணு ஆரம்பிக்க்கலாம்னாங்க, என்னோட பழைய நம்பிக்கை மீண்டும் குறுக்க வந்தது, இருந்தாலும் ஆரம்பிச்துக்கபுறம் பாத்துக்க்கலாம்னு சரின்னுட்டேன்.


சென்னைக்கு வந்த அடுத்த நாளே ஆரம்பிச்சுட்டாங்க, நானும் எழுதறேன, எழுதறேன்னே ஒரு ஆறு மாசம் ஓட்டிட்டேன், அப்போதான் நண்பர் ஜெட்லியோட இந்த பதிவுல நண்பர் சித்து  போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியே தீரணும்னு தோணினப்போதான் நான் முதல் பதிவ எழுதினேன். (இதற்காக  சித்து மீது யாரும் கோபப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்) அதுக்கப்புறம் நடந்துக்கிட்டிருகிறதுதான்  உங்களுக்கே தெரியுமே.

சரி, தலைப்புக்கு வருவோம், நம்ம சுசியக்கா பதிவுக்கு '(பாவ) மன்னிப்பு'ன்னு தலைப்பு வச்சிருந்தாங்க, ஆனா நான் அதெல்லாம் கேட்கப்போறதில்ல, இதெல்லாம் நாம ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்கிறது தானே. அப்புறம், என்னை மட்டுமில்ல, யாரு புதுசா வந்தாலும் முதல் ஆளா போய் வரவேற்று வாழ்த்து சொல்லும் அண்ணன்பிரபாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, மற்றும் எங்கள பின்தொடரும், வந்து போகும் எல்லாருக்கும் நன்றி. ஆனா, இவ்வளவு நாளா, அவர் எழுதினத இவ்வளவு  படிச்சதுக்கப்புறமும், எழுத்துங்ற  பேர்ல நான் பண்ணிக்கொண்டிருக்கும் கொடுமைகளையும், கவிதைங்கிற பேர்ல சமீபகாலமாய் செய்ய தொடங்கி இருக்கும் அக்கிரமங்களையும் மன்னிக்கும் படி, எல்லாம் வல்ல சுஜாதாவை வேண்டிக்கொள்கிறேன்.











பெரும்பாலானவர்கள் எழுதி முடிச்சிட்டதால, இந்த பதிவை படிக்கும், இதுவரை எழுதாத, யார் வேண்டுமானாலும் தொடரலாம் என அழைக்கிறேன்

நன்றி

சங்கர்

Saturday, December 19, 2009

12 Angry Men - (1957)

12 Angry Men - (1957)




வெறும் 12 நபர் ஒரு அறையில் அமர்ந்து விவாதம் செய்வதை வைத்து ஒரு ஒன்னரை மணி நேர சுவாரசியமான, "அட" சொல்ல வைக்கும் படம் எடுக்க முடியுமா?? அப்படி ஒரு படம் தான் "12 Angry Men".



அமெரிக்காவில் ஒரு கோர்ட் அறையில் ஒரு கொலை விசாரணை நடக்கிறது, அங்கு 12 நடுவர்கள் (Jury) விசாரணையை மேர்ப்பார்வையிடுகின்றனர். விசாரணை முடிந்து நீதிதிபதி அவர்களை தனி அறைக்கு சென்று விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி கருத்து தெரிவிக்க கேட்டுக்கொள்கிறார். இது நடப்பது வெறும் மூன்று நிமிடங்கள் தான், மீதி ஒரு மணி நேரம் முப்பத்திமூன்று நிமிடம் இந்த நடுவர்களிடையே நடக்கும் விவாதம் தான் படம். இதை என் தங்கை கூறும் பொழுது என்னடா இது மொக்கையா இருக்கும் போல என்று நினைத்தேன், ஆனா வாய்ப்பேஇல்ல சும்மா கலக்குறாங்க.



ஒரு 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு, அதை அவன் செய்தானா இல்லையா?? கோர்ட்டில் நடந்த விசாரணையை பார்த்த நடுவர்களில் பதினோரு பேர் ஆம் அவன் கொலை செய்தான் "Guilty" என்றும் ஒருவர் மட்டும் (Henry Fonda இவர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட) இல்லை "Not Guilty" என்றும் வோட்டு போடுகிறார். இந்த ஒருவரை மற்ற பதினோரு பேறும் சேர்ந்து மாற்ற முயல்கின்றனர், அதில் அவர்கள் வென்றார்களா அந்த பையன் உண்மையிலேயே கொலை செய்தானா இல்லையா என்பது தான் படம்.

இதற்குள் அந்த காலத்து அமெரிக்காவின் சமூக சிக்கல்கள், மக்களின் ஏற்ற தாழ்வுகள், மனிதர்களின் இன்னொரு முகம் என்று பல விஷயங்களை கூறுகின்றனர். படம் முழுவதும் இந்த நடுவர்களின் பெயர் என்னவென்று நமக்கு தெரியாது, படம் முடியும் பொழுது தான் இருவர் மட்டும் பெயர் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இங்கு நம்மூரிலோ அடை மொழி வடை மொழி புண்ணாக்கு என்று பல இத்தியாதிகள், எனக்கு தெரிந்து நான் பார்த்த ஒரு ஆங்கில சினிமாவில் கூட பெயரிலோ அல்லது நடிகர் பெயரிலோ எந்த ஒரு பில்ட்அப் இல்லை என்று தான் நம்மவர்கள் மாறுவார்களோ.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் பின்னணி இசை, ஒரு காட்சியில் Fan போடுவார்கள் அப்பொழுது இவர்கள் உரையாடலுக்கு நடுவில் அந்த சத்தம் மிக தெளிவாக அதே சமயம் இதை கெடுக்காத வகையில் ரொம்ப இயல்பாக இருக்கும். உரையாடல் தான் மொத்த படமுமே என்றாலும் அது மிக சாதாரண நடையில் தெளிவாக புரியும் படி ஆழமான வசனங்கள்.

Sidney Lumet இயக்கத்தில் Reginald rose கதை திரைக்கதையில் Henry Fonda தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம். பாருங்க உங்க கருத்தை கூறுங்க.

இன்னொரு உலக சினிமாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி

சித்து.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - அலசல்(பிற்சேர்க்கையுடன்)

வேட்டைக்காரன் - அலசல்(பிற்சேர்க்கையுடன்)

வில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்
வேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.




விஜய்யுடன் அனுஷ்கா,ஸ்ரீஹரி,சத்யன்,சாயாஜி சிண்டே,ஸ்ரீநாத்
மற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.
வேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக
துடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்
பாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்
முதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்
பண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.

விஜய் இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்
சேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!!) வருகிறார்.
அனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி
தான் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்
காமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட
அனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்
நல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ? என்று நீங்கள் கேட்டால்
இருங்க சொல்றேன்!!

படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.


ஜெட்லி சரண்

விஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க
போல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்
படத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு
கொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே
இறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்
பரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க!!

ரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல!
அந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல
வேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,
ரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.
அப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது
போல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.
விஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து
கவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.
அதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று
தெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்
பார்த்த நினைவு.

ஒரு நிமிஷம் இருங்க போன் வருது...

ஜெட்லி: சொல்லு முருகா...

முருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்??

ஜெட்லி: கேளு

முருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு
விஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா?

ஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்
வாராரு மச்சி....சரி வை நான் அப்புறம் பண்றேன்.


எதுல உட்டேன்..ரைட்,
(பிற்சேர்க்கை)
நான் ஒரு வேளை விஜய் ரசிகனாக இருந்தால்:

படம் செம மாஸ்.என்ன பைட் கொஞ்சம் கம்மி.
விஜய் டான்ஸ் நோ சான்ஸ்.விஜய் காமெடி எல்லாம்
சூப்பர்.அந்த காப்பு கையில் ஏறுரா சீன்லாம் கலக்கல்.

நான் ஒரு வேளை அஜித் ரசிகனாக இருந்தால்:

என்னயா படம் இது, கையாள குத்தி கல் எல்லாம்
உடைக்கிறாரு.அதுவும் அந்த அருவியில் இருந்து
குதிக்கிற சீன் செம காமெடி அதை விட காமெடி
விக் போட்டுட்டு ஒரு பாட்டுக்கு வர்றது.சாமிக்கிட்ட
மட்டும் சந்தாம பேசுவாராம் எனக்கு என்னமோ போன
படத்துல கொடுத்த ஆப்பு தான் சாந்தமா பேச வச்சிருக்குன்னு
தோணுது!!!

நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் என்பதால்:
இரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ சுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம் முடியல..
நான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து தடவை
மேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்
எங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்
போர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில
இடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.
சில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.

ஜெட்லி பஞ்ச்:

வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....


கொசுறு செய்தி:

மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க
நன்றாகவே இருந்தது.....


நன்றி
indiaglitz

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போட்டு பின்னூட்டம் போடுங்க மக்களே.

நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்

Wednesday, December 16, 2009

திகிலன் - செம திகில்ப்பா!!

திகிலன் - செம திகில்ப்பா!!

முன்னுரை:

என் குரு கில்மானந்தா கூறியது:

"மோட்சத்தை அடைய சிறந்த வழி மோட்சம் தியேட்டரில்
படம் பார்ப்பது தான்
"

என் குரு சொன்னது போலவே கடந்த திங்கள்கிழமை மோட்சம்
தியேட்டரில் திகிலன்(TWILIGHT-NEW MOON) படத்தை பார்த்தேன்.
ரொம்பவே திகிலாகவே இருந்தது, அய்யய படம் இல்லைங்க
பால்கனியில் என்னையும் சேர்த்து ஒரு பதினாலு பேரு தான்
இருந்தோம் அது தான் திகிலுக்கு காரணம்.

காதல் காட்சி படம். கிழே
ஜெட்லி சரண்.

நான் இந்த படத்தின் முதல் பாகத்தை பார்க்கவில்லை இருந்தாலும்
வாம்பைர்(VAMPIRE) படம் என்று விளம்பரம் இருந்ததால் ஒரு கில்மாவுக்காக போய்ட்டேன்.நான் சின்ன வயசில் ரெண்டு மூணு வம்பைர் படம் தியேட்டரில் பார்த்து இருக்கிறேன், சீன்கள்(காட்சியமைப்புகள்!!) எல்லாம் அருமையாக இருக்கும்.முக்கியமா நான் தேவி தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன் செம திகிலா(சீனா) இருக்கும்.ஆனா இந்த திகிலன் பெயரில் மட்டும் தான் திகில் இருக்கிறது.


இந்த மாதிரி அற்புதுமான கேவலமான சுவாரசியம் இல்லாத ஹாலிவுட் படத்தை ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன்.ஏதோ நரி வர காட்சிகள் மட்டும் ஓகே. நாங்கள் இதே மோட்சம் தியேட்டரில் பல டப்பிங் படங்கள் பார்த்து உள்ளோம்.அதில் ALIEN vs PREDATOR என்ற படம் மிக நன்றாக இருந்தது ஆனால் எங்களுக்கு வெறும் குரல் மட்டும் தான் கேட்டது காரணம் படத்தை அந்த அளவுக்கு இருட்டில் எடுத்து இருந்தனர்.


சரி திகலனுக்கு வருவோம், வம்பைர் படத்தில் பல் தான்
நமக்கு பயத்தை வரவழைக்கும் இந்த படத்தில் வம்பைர்
என்று சொல்லி கொள்பவர்களுக்கு பல்லையும் காணோம்
ஒன்னும் காணோம் மூஞ்சில மட்டும் சுண்ணாம்பு அடிச்சு
உட்ட மாதிரி ஜொலிக்கிது.படத்தில் எந்த ஒரு சீனிலும் திகில்
இல்லை குஜால்ஸ் சீனும் இல்லை அப்புறம் ஏன் இதுக்கு
திகிலன்னு பேரு வச்சி இருக்காங்க??.


இந்த படத்தில் எனக்கு பிடித்தது ரெண்டு விஷயம் மட்டும்
தான் ஒன்னு இண்டர்வல் ப்ளாக் அடுத்தது படம் முடிந்த
நேரம்!!.படம் புல்லா ஒரே கொட்டாவி ,சத்தம் பால்கனியில்
இருந்த பதினாலு பேரும் மாறி மாறி கொட்டாவி விட்டது
தான் மிச்சம்.


இண்டர்வல் நேரத்தில் புறாவின்


ஜெட்லி பஞ்ச்:

காதலர்கள் செல்ல ஒரு அற்புதமான படம் திகிலன்.

இந்த விமர்சனம் பிடிச்சு இருந்தா ஒட்டு போடுங்க முடிஞ்சா
பின்னூட்டமும் போடுங்க....

உங்கள்

Tuesday, December 15, 2009

என் டர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைகள்

ஒரு கவிதையில் இரு கவிதைகள்


முந்தைய இரவின்
முயக்கம் தீராத
காதல் திருமண ஜோடியின்
கண்களிலும் முகத்திலும்
வழியும் சிரிப்பு

சுற்றி நிற்கும்
ஆண் கூட்டத்தை
பொருட்படுத்தாது
பசி தீர்த்த அன்னையின்
முகம் பார்க்கும்
மழலை சிரிப்பு

கொட்டும் மழைக்காய்
அரைமணி ஒதுங்கிய
பெட்ரோல் பங்கிலும்
காணக்கிடைக்கின்றன
சில கவிதைகள்




ஆளுக்கு ஒரு உலகம்


அண்ணி வீட்டு கடிகாரம்
அரைமணி அதிகமாய் காட்டும்,
ஆசிரியராய் அவர் இருக்கும் - பள்ளி
ஆரம்பிக்கும் நேரமது

எதிர்வீட்டு கடிகாரம் எப்போதும்
இருபது நிமிடம் முன்செல்லும்,
ஆலை சங்கொலிக்கும் முன்,
அங்கிருக்க வேண்டுமென்கிறார் அவர்

இக்கவிதை (!!) வரிகளை மனதில் ஓட்டியபடி,
சைக்கிளை மெதுவாய் ஓட்டியதால்,
கிளம்பிய ரயிலை ஓடிவந்து
பிடிக்கும்போது தான் தோன்றியது

ஒவ்வொருவருக்கும்
உலகம் மட்டும் வெவ்வேறல்ல
அவை இயங்கும் நேரங்களும்
தனித்தனி என்று




எதிர்க்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன (இவை கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை), உண்மை கவிஞர்கள் இவற்றை திருத்தி எழுதினாலும் நலம்


நன்றி
சங்கர்

Monday, December 14, 2009

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்)

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்) : பார்ட் 3.


சிறு தகவல்:

அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நந்தனம் டர்ன்புல்
மேம்பாலத்தில் அண்ணாசாலை செல்பவர்கள் ஏறும்
போதும் கோட்டூர்புரத்தில் இறங்கும் போதும் பார்த்து
நிதானமாக மெதுவாக ஒட்டவும் காரணம் அங்கு வளைவு
கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது....





எலியட்ஸ் பீச் சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு சொர்க்கபூமி
என்றே சொல்ல வேண்டும்.எலியட்ஸ் பீச் அமைந்திருக்கும்
பெசன்ட் நகருக்கு பல சிறப்புக்கள் உள்ளன என்பது உங்களுக்கு
தெரியாதது அல்ல,அதனால் அதை பற்றி சொல்லி மொக்கை
போட விரும்பவில்லை என்பதால் நான் சந்தித்த,சுவைத்த,
பார்த்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.


பெசன்ட் பாஸ்ட் புட்:

எலியட்ஸ் பீச்சுக்கு வந்து இந்த பாஸ்ட் புட்டில் சுவைக்காத
நாக்கு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து.
நான் ப்ளஸ் ஒன் படிக்கும் காலத்தில் இருந்து இங்கே
சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.பல பேரை இந்த கடைக்கு
அறிமுகமும் படுத்தியுள்ளேன் காரணம் சுவை.வறுத்த
அரிசி(fried rice) ,பீப், சிக்கன் மஞ்சுரியன் அருமையாக இருக்கும்.

இப்போது இந்த பாஸ்ட் புட்டை சிறு ரெஸ்டாரென்ட் ஆக்கி உள்ளார்கள்.அவர்கள் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(தொழிலில்) நானும் ஒரு சிறு காரணம் அதே போல் நானும் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(உடம்பில்) அவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதருக்கில்லை.



ஓரிரு மாதங்கள் முன் சென்று இருந்தேன் பழைய மாஸ்டர்களை
காணோம்.சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
அதன் பின் அங்கு செல்லவில்லை.யாராவது சமீபத்தில் போய்
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா....

karl Schmidt நினைவு சின்னம்:





பல படங்களில் இந்த நினைவுச்சின்னத்தை பார்த்து இருப்போம்.
நான் ஏதோ காதல் நினைவு சின்னம் என்று நினைத்தேன் ஆனால் கடந்த வாரம் நெட்டில் மேய்ந்த போது தான் உண்மை தெரிந்தது. டட்ச் மாலுமி karl Schmidt அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை காப்பாற்ற போகும் போது தன் உயிரை இழந்தார் அதன் நினைவாக இந்த நினைவு சின்னம் கட்டப்பட்டது.


ஆனா இப்போ இந்த நினைவு சின்னம் இருக்குற நிலைமையை
பார்த்து அவர் எலும்பு கூடோடு கடலில் இருந்து எழும்பி வந்து
நம் அரசிடம் "தயவு செய்து இடித்து விடுங்கள்" என்று மனு
கொடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை!
கிழே படங்களை பார்க்கவும்..




இப்போதைக்கு நம்ம ஆளுங்க இதை ஒரு உச்சா போகும் இடமாக
மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.













போனஸ் செய்தி:

நான் போட்டோ எடுக்கும் போது ஒருத்தர் அவசரமா பக்கத்தில்
வந்து நின்றார்..நாம படம் புடிக்கிறத கூட ஒருத்தன் வந்து
பார்க்குறனே என்று பீல் பண்ணி என் பாக்கெட்டில் செல்லை
வைத்தேன்..கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன்.
அப்போதான் தெரிஞ்சது அவனும் உச்சா போக தான்'
வந்திருக்கான் என்று.

காலையில் கிடைக்கும் மூலிகை ஜூஸ்,பிளானெட் யம்(planet yum),
முருகன் இட்லி ஷாப் என்று நிறைய இடங்கள் உள்ளன.
அதை எல்லாம் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.


முக்கிய அறிவிப்பு:

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பீச்சுக்கு போக நேர்ந்தால்
மணலில் உள்ள பஜ்ஜி கடை பக்கம் பார்க்காமல் போங்க இல்லனா
காலையிலேயே கண்ணு கேட்டு போய்டும்(லவ்வர்ஸ் தான்).
இதெல்லாம் நான் சொன்னா சில பேரு என்னை பார்த்து பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான் உனக்கென்ன என்பார்கள்.


ஜெட்லி கருத்து:

பகோடா சாப்பிடுங்க தப்பில்ல, அதுக்குன்னு இடம் நேரங்காலம்லாம் இருக்குனு தான் சொல்றேன்.

பழைய பாகங்களை படிக்கச் இங்கே கிளிக்அவும்

இது எங்க ஏரியாஅடர்த்தி பார்ட் 1

இது எங்க ஏரியா பார்ட் 2

நன்றி
உங்கள்

ஜெட்லி சரண்.

Saturday, December 12, 2009

கேபிளாருக்கு சமர்ப்பணம்

ஒரு வாரமா ஹிட்ஸும் கொறஞ்சு போச்சு, பின்னூட்டங்களையும் காணும், பிரபாகர், ராகவன் (நைஜீரியா) போன்ற நம்ம ரெகுலர் கஸ்டமர்கள் கூட கடைப்பக்கம் எட்டிப்பாக்கல, வாரத்துக்கு ஒரு பதிவு போடவே மேட்டர் கிடைக்காம திண்டாடிக்கிட்டிருந்த நானே ஒரே வாரத்துல, ஒரு டெரர் கதை உட்பட, மூணு பதிவு போட்டும், நிலைமையில் முன்னேற்றம் எதுவும் இல்ல, என்ன ஆச்சுன்னு யோசிச்சுக்கிட்டே நேத்து ப்ளாக் திறந்து பார்த்தா ஒரு பாலோயர் அவுட்டு.

இது என்னடா புது சோதனை, என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே வலை மேஞ்சிக்கிட்டு இருந்தப்போ கேபிள் அண்ணாதையோட இந்தப்பதிவு கண்ணில்பட்டது. அண்ணன், ஒரு கவிதையை எழுதி படிக்கறவங்கள தலைப்பு வைக்க சொல்லிட்டாரு, பாத்தா 60 பின்னூட்டம், சரி இதுவும் நல்லாருக்கேன்னு, நானும் கவிதை எழுத உக்காந்துட்டேன்.

இதோ அந்த கருமம், மன்னிக்கவும், கவிதை,

"கடித்த உன்னை,
அடித்த கையில்,
படிந்த ரத்தம்,
உனதா? எனதா?"

இதை எழுதினப்புறம் தான் யோசிச்சேன். நீங்கல்லாம் ப்ளாக் பக்கம் வருவதே பெரிய விஷயம், இது மாதிரி கவிதையெல்லாம் (அப்படின்னு ஒத்துக்குவீங்களா என்பது வேற விஷயம்) படிக்கிறது அதவிட பெரிய விஷயம், இதுல உங்களை தலைப்பு வேற வைக்கச்சொன்னா, அப்புறம் "புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை" கதை மாதிரி ஆகிடப் போகுதுன்னு தோன்றியதால், தலைப்பு இதோ,

"கொசுவிடம் ஒரு கேள்வி"


பின்குறிப்பு:

1. இதுவே என்னுடைய கடைசிக் கவிதையாய் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு, முதல் பரிசை எனக்கே கொடுத்துவிடலாம் என அமைப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்வதால், யாரும் இக்கவிதையை உரையாடல் போட்டிக்கு பரிந்துரைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

2. இந்த பதிவிற்கும் போதுமான வரவேற்பு கிடைக்காவிட்டால், தொடர்ந்து கவிதை எழுதுவதாய் முடிவுசெய்திருக்கிறேன், என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
சங்கர்

Friday, December 11, 2009

காலத்தை மீறிய கனவு

தன் வாழ்நாளில் வராத சுதந்திரத்தை கனவில் கண்டு பள்ளு பாடிய ரௌத்திர கவிஞனின் பிறந்த தினம் இன்று



உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலமென்ன, தனிநாடே கிடைக்கும் என்ற இன்றைய சூழலில், ஒரு நூறாண்டுகளுக்கு முன்பே, எங்கள் மகாகவி எழுதிய இரு கவிதைகள் இதோ,

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?"


"வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்."

Wednesday, December 9, 2009

தலைவர் வரார்

உச்சியில் சூரியன் எரிந்து கொண்டிருந்தது, வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே, காலியாய் கிடந்த நெடுஞ்சாலையில் நெளியும் கானலை பார்த்தபடியிருந்தேன். கடந்த ஒரு மணி நேரமாய் இந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன், முதுக்குக்கு பின்னே நீளும் சாலையில், ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கதறி அடங்கிவிட்ட ஒலிப்பான்களுடன் நிற்கும் வாகனங்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டு பதினைத்து நிமிடங்களாகிறது. ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. நூறடி தள்ளி நின்ற சக காவலர் நட்புடன் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார். பெயர்பட்டை 'மதியழகன்' என்றது.

என்னருகே வந்தவர் என் பெயரை பார்த்துவிட்டு பேசத்தொடங்கினார், "சொந்த ஊர் திருநெல்வேலியா?" என்றார், "எப்படி கண்டுபிடிச்சீங்க!" கேட்டேன் நான், "அதுதான் பேரும், முகமும் சொல்லுதே" என்று சிரித்தவர், மேலும் கேட்டார், "இப்போதான் சேர்ந்து இருக்கீங்களா?"
"இல்லை சார், இரண்டு வருடம் மணிமுத்தாறு காம்பில் (Camp), ரிசர்வில் இருந்தேன், இந்த மாதம் தான் இங்கே போஸ்டிங் ஆச்சு", இப்போது நான் கேட்டேன் "ஒரு மணி நேரம் ஆச்சு, இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி நிற்கணும் சார்?", பதில் சொல்லாமல் "இப்படி நிக்குறது இதுதான் முதல் தடவையா?" என்று கேட்டார், "ஆமாம் சார்" சொன்னேன் நான், "அது தான் இப்படி கேக்குறீங்க, இன்னிக்கு பரவாயில்லை, சில நாட்கள் நாலஞ்சு மணிநேரமெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கும்", என்றார், அவர் சகஜமாய் பேசத் தொடங்கியதை பார்த்து கேட்டேன், "நீங்க எந்த ஊர் சார், எத்தனை வருஷமா சர்வீஸ்ல இருக்கீங்க?", அவர் சொன்னார், "நான் சென்னைக்காரன் தான், சர்வீஸ் பத்து வருஷம் ஆச்சுப்பா, இப்பதான் எஸ்ஐ எக்ஸாம் எழுதியிருக்கேன், பார்க்கலாம்".

வரப்போகும் தலைவரின் ஊழல் ஜாதகம் மனதில் தோன்றி எரிச்சல் மண்டிக்கொண்டிருந்தலும், அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியாததால், தயக்கம் விலகாமல் பொதுப்படையாய் கேட்டேன், "இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இப்படி தலைவர் வரார், அமைச்சர் வரார்ன்னு காவல் நிக்கப் போறோம்", கேட்டது தான் தாமதம், "தலைவனா? இவனா? அப்போ காமராஜரையும் கக்கனையும் என்ன சொல்லுவீங்க? இவன் என்ன நாட்டுக்கு தியாகமா பண்ணினான்? இவன் மகனுக்கும் பேரனுக்கும் அவனோட பையனுக்கும் சேர்த்து இந்த நாட்டுல பாதிய வாங்கிட்டான், இப்போ மட்டுமென்ன இவன் மக்கள் சேவைக்கா போய்க்கிட்டிருக்கான்? ஆயிரம் கோடி ஊழலுக்கு ஆறு வருடமாய் நடக்கும் விசாரணைக்கு கோர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கான், நம்ம ஜனநாயகம் இப்படி இருக்கும் வரை இவன் கோர்ட்டுக்கு போறதுக்கென்ன, குளிக்கப் போறதுக்குக்கூட நம்மை காவலுக்கு நிற்க சொல்வாங்க" என்று பொரிந்து தள்ளிவிட்டார். "சரி சார் நாமதான் வாங்குற சம்பளதுக்காகவும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காகவும் இப்படி நிக்குறோம், ஆனா இந்த பொதுமக்கள் என்ன தப்பு செஞ்சாங்க? இவுங்களை எதுக்காக காக்க வைக்கணும்?" என்று கேட்டேன், "எல்லாம் ஒரு பாதுகாப்புக்க்காகதான், கொஞ்சம் நாள் ஆச்சுன்னா உங்களுக்கே புரியும்" என்று கூறி மையமாய் சிரித்தபடி அவருடைய இடம் நோக்கி நடந்து சென்றார்.

இன்னும் பத்து நிமிட காத்திருப்புக்கு பின், இருபது கார்கள் முன்னும் பின்னும் வர நடுநாயகமாய் வந்த காரில் அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி கடந்து சென்றார் தலைவர். ஊர்வலம் என்னைத் தாண்டி முந்நூறடி சென்றிருக்கும், கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கிருந்து வந்தான் என்றே புரியாதபடி ஒருவன், சரியாய் தலைவரின் வண்டியின் குறுக்கே பாய்ந்தான், வெடித்தான். அவனோடு சேர்ந்து தலைவரின் வண்டியும், உள்ளிருந்த அனைவரும் வெடித்துச்சிதற, அதிர்ச்சியில் ஒருநிமிடம் உறைந்த நான், சுதாரித்து அதை நோக்கி ஓடினேன், மதியழகனோ எனக்கு முன் மிக நிதானமாக நடந்து கொண்டிருந்தார். அவரருகே சென்ற நான் "வேகமா வாங்க" என்றேன், அப்போதும் அந்த புன்சிரிப்பை விடாத அவர் சொன்னார் "அவன் பண்ணின தப்புக்கு அவன் தண்டனை வாங்கிக்கிட்டான், அவனுக்கு காவலுக்கு போன தப்புக்காக நம்ம ஆளுங்க நாலு பேரும் உயிரவிட்டுட்டங்க, இந்த நாயோட பொதுமக்களையும் போக விட்டா இன்னும் எத்தனை பேர் செத்திருப்பாங்க? இப்போ புரியுதா தலைவர்கள் வரும்போது போக்குவரத்த ஏன் நிறுத்துறோம்ன்னு?"

நன்றி
சங்கர்

வழி சொல்பவனின் வலி.

வழி சொல்பவனின் வலி.


நம்ம ஊர்ல ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வழி தெரியாமல் தவிக்கின்றனர்(மப்பில் வீடு திரும்பாமல் இருப்பவர்களை பற்றி சொல்லவில்லை!).ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான தேடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தங்கள் உறவுகளையோ, நேர்முக தேர்வுக்கு செல்லும் பணி இடத்தையோ, பிரபல மருத்துவரையோ, பிரபல சாமியரையோ, கோயிலையோ,தியேட்டரையோ என்று மனிதர்கள் தினமும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இங்கு நான் பகிர்ந்து கொள்ள போவது சரியான வழி கேட்பவர்களுக்கு வழி சொல்பவனின் அவஸ்தைகளை(வலிகள்) மட்டுமே.



நம்ம ஊரில் எதுக்கெல்லாம் கூட்டம் சேருதோ இல்லையோ ரெண்டு விஷயத்துக்கு கூட்டம் கண்டிப்பா சேரும்.முதலில் விபத்து, அது என்னமோ தெரியலங்க டம்னு சவுண்ட் வந்தா போதும் எங்கே இருந்து வேடிக்கை பார்க்க ஆள் வராங்கனு தெரியாது.அப்படி ஒரு கூட்டம் கூடிடும் அடிபட்ட ஆள் சுவாசிக்க காத்து கூட விடமாட்டங்க.அந்த கூட்டத்திலும் ஒரு சிலர்
தண்ணீர் பாக்கெட்,சோடா வாங்கி கொடுக்கும் நல்உள்ளங்களும் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.



ரெண்டாவது வழி சொல்பவன், நம்ம ஊரில் வழி சொல்பவர்களுக்கு குறையில்லை.ரெண்டு விஷயங்கள் எப்போதுமே ப்ரீயா கிடைக்கும்
ஒன்று அறிவுரை மற்றொன்று வழி சொல்லுதல்.சில பேரு இளம்
பெண்களுக்கு மட்டும் வழி சொல்வார்கள்.சிலர் வழி தெரியாமல்
திணறுபவர்களுக்கு தேடி போய் வழி சொல்வார்கள்.பல இடங்களில் ஒரு கூட்டமாக இருந்து கொண்டு அவர்களுக்குள் விவாதித்து
தப்பான வழி சொல்பவர்கள் ஏராளம்,அவர்களை விட்டுவிடுவோம்.

முதல் வலி :

சில சமயம் வழி மற்றும் ஒரு குறிப்பிட இடத்தை கேட்பவர்கள் நம்மை நொண்டி நொங்கு எடுத்து விடுவார்கள்.

இப்படித்தான் ஒருத்தர் " பரணி லாட்ஜ் எங்கே இருக்கு? " என்றார்.
"இதோ பக்கத்தில் தான் போங்க" என்றேன்.

அவர் "எவ்ளோ நேரம் ஆகும்"...."நடந்து போய் விடலாமா"...
"லெப்ட் சைட்ஆ ரைட் சைட்ஆ??"... என்று கேள்வியை
அடுக்கி கொண்டே போனார்.
ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சா லாட்ஜ் வந்துரும் அதுக்கு
டஜன் கேள்வி கேட்டு நம்மை டென்ஷன் ஆக்கி விடுவார்கள்.

***********************************************

நான் பொதுவாக யாரையும் தேடி போய் வழி சொல்வதில்லை.
அது வேலியில் போற ஓணானை பேன்ட்டுக்குள் விட்டதருக்கு
சமம்.(அப்போ நாங்கெல்லாம் தேடி போய் வழி சொல்றோமா??
என்று நீங்கள் கேட்பது புரிகிறது...சும்மா ஒரு ப்லோவில்
எழுதிட்டேன்..ப்ரீயா விடுங்க!!)

இப்படிதாங்க சுமார் ஏழு வருஷங்கள் முன்னாடி ஒருத்தர்
ரோடு ஓரத்தில் வழி தெரியாமல் பைக்கில் நின்னுட்டு
இருந்தார்.சொன்னா நம்பமாட்டிங்க அப்போல்லாம் தினமும்
நான் யாருக்காவது உதவி பண்ணலைனா எனக்கு தூக்கமே
வராது.அதனால நானே போய் அவரிடம்

"என்ன சார் எங்கே போகணும்" .

"அடையார் டிப்போ பெட்ரோல் பங்க் போகணும்,
வழி சரியா தெரியலை" என்றார்.

"இங்கிருந்து நேரா போன அடையார் டிப்போ தான் சார்
வரும்" என்று கூறினேன் நான்.

அப்போது தீடிர் என்று எங்கோ இருந்து இன்னொரு நபர்
வந்தார் "எங்கே , அடையார் டிப்போ தானே இதோ இந்த
எதிர் ரோட்டில் போங்க ப்ரீயா இருக்கும்" என்று தன்
பங்குக்கு உதவி செய்தார்.

ஒரு வேளை என்னை போல இவருக்கும் யாருக்காவது
உதவலனா தூக்கம் வராது போல என்று நினைத்த நேரத்தில்
வழி கேட்ட ஆள் கொஞ்சம் ஓவர்ஆ பேச ஆரம்பிச்சுட்டாரு.

"யோ அடையார் டிப்போவுக்கு வழி கேட்டா ஒருத்தன்
இப்படி போ இன்னொருத்தன் அப்படி போனு சொல்றிங்க...
என்னயா ஒரு மனுஷன் வழி கேட்ட ஒழுங்கா
சொல்றிங்களா..." என்று எகிற ஆரம்பித்தார்.

இவனுக்கெல்லாம் உதவி செய்னுமா என்று அங்கிருந்து எஸ்
ஆகி விட்டேன்.

இந்த வழி சொல்லும் வழியால் வந்த வலி நெஞ்சில் வடு
போல் இருந்ததால் அதன் பின்பு யாருக்கும் தேடி போய்
வழி சொல்வதில்லை.

*********************************************************

சில நாட்களுக்கு முன்பு :

மாருதி காரில் ஒரு நாலு பேர் கடை முன் வண்டியை நிறுத்தி
ஒருவர் வந்து பாபாலால் பவன் எப்படி போவது என்று கேட்டார்.

சிக்னல் லெப்ட் திரும்பி பெரிய கோவில் தாண்டியவுடன் திரும்பவும்
லெப்ட் எடுத்தால் அங்கே தான் பாபாலால் பவன் என்றேன்.

தேங்க்ஸ் என்று போய் காரில் அமர்ந்தார்.

ஒரு ரெண்டு நிமிடம் கழித்து இன்னொருவர் இறங்கி வந்து
"சார் இந்த பாபாலால் பவன் எங்கே இருக்கு?" என்றார்.

திரும்பவும் அதே வழியை சொன்னேன்.உடனே அவர்
"சிக்னல் லெப்ட் தான் போனுமா இல்ல அடுத்த வர லெப்ட்
திரும்பன வராதா" என்றார்.

"வரும் ஆனா கொஞ்சம் சுத்து" என்றேன்.

அதே காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்தான்
"சார் இந்த பாபாலால் பவன் எப்படி போனும்" என்றான்.

"போடாங்" இதற்கு மேல் அச்சில் ஏற்ற விருப்பமில்லை என்ற
காரணத்தால் வழி சொல்பவனின் வலியை புரிந்து வழி
கேட்பவர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்,

இது போல் உங்களுக்கும் வழி சொன்னதில் ஏதாவது
அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த இடுகை பிடிச்சு இருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க,
மற்றும் கமெண்ட் போட்டால் ஒரு பூஸ்ட் மாதிரி இருக்கும்.

நன்றி
ஜெட்லி சரண்.

Tuesday, December 8, 2009

ஒரு நாள் விடுப்பும் நான்கு டெஸ்ட் போட்டிகளும்




பத்து நாட்களுக்கு முன், கொஞ்சம் ஆணி அடிக்க வேண்டிய வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். அடிக்க வேண்டிய ஆணிகள் அனைத்தையும் முடித்ததால் ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணில்பட்டது நான்கு டெஸ்ட் போட்டிகள், அவை

NEO Cricket - இந்தியா - இலங்கை இரண்டாவது போட்டி (கான்பூர்)
STAR Cricket - ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டிஸ் முதல் போட்டி (பிரிஸ்பேன்)
TEN Sports - நியுசிலாந்து - பாகிஸ்தான் முதல் போட்டி (டுனெடின்)
NEO Sprots - ஹைதராபாத் - ஒரிசா ரஞ்சி போட்டி (ஹைதராபாத்)

இந்த நான்கு போட்டிகளையும் வெவ்வேறு அடிப்படைகளில் எப்படி வரிசைப்படுத்துவது என யோசித்துக்கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய சில கருத்துக்கள் இங்கே,


அணிகளின் பேட்டிங் தரத்தின் அடிப்படையில்

1. NEO Cricket - உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் பலரை கொண்டிருக்கும் இந்தியா - இலங்கை போட்டி முதலிடத்தை பெறுகிறது

2. STAR Cricket - Chris Gayle மட்டுமே நம்பி இருக்கும், வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் வரிசை, ஆட்டத்தின் தரத்தை கீழே இழுக்கும் போதும், புதுசா வருபவனும் கூட ஒரு அம்பதோ, நூறோ அடித்துவிட்டு போகும் ஆஸ்திரேலிய பேட்டிங் இப்போட்டிக்கு இரண்டாமிடத்தை தருகிறது.

3. TEN Sports - 'நாங்க அடிப்போம், ஆனா அடிக்கமாட்டோம்' அப்படின்னு இரண்டு அணிகளும் விளையாடுவதால் இந்த போட்டிக்கு மூன்றாவது இடம்தான்.

4. NEO Sports - எங்களில் யாரையும் தேசிய அணிக்காக தேர்ந்தெடுப்பதை பற்றி தேர்வாளர்கள் கனவிலும் கூட நினைத்து விடக்கூடாது என கங்கணம் கட்டி இரு அணிகளும் விளையாடுவதால், நான்காவது இடம்.


அணிகளின் பவுலிங் தரத்தின் அடிப்படையில்

1. STAR Cricket - மிட்செல் ஜான்சனின் புஜ வலிமைக்க்காகவே (அது கையா, உலக்கையா என்பது இன்னும் தொடரும் சந்தகம்) நான் இதற்கு முதலிடம் கொடுப்பேன்.

2. TEN Sports - 'சண்டை முன்னப்பின்ன இருந்தாலும் சத்தம் அதிகமா இருக்கும்' என்பதுபோல், மொக்கையா பேட்டிங் பண்ணினாலும் ஷேன் பான்ட், வெட்டோரி, ஆசிப், உமர் குல் அடங்கிய சிறந்த பந்துவீச்சு படையை இரு அணிகளும் வைத்திருக்கும் இப்போட்டி இரண்டாமிடம் பெறுகிறது.

3. NEO Cricket - என்னதான் ஜாகிர்கான் பார்முக்கு வந்துவிட்டார், முரளிதரன் கண்ணாடியில் கூட பந்தை திருப்புவார்னு சொன்னாலும், மொக்கை பவுலிங்குக்கு மூன்றாமிடம் தான்.

4. NEO Sports - இந்திய அணியில் இடமில்லாமல் அனுப்பபட்ட, 2003 உலககோப்பையில் விளையாடிய மொஹந்தி (ஞாபகம் இருக்கா?), மற்றும் ஒரு கிலோமீட்டர் ஓடிவந்து போட்டாலும் 120 KM தாண்டாத பல பாஸ்ட் (??) பவுலர்கள் விளையாடும் இப்போட்டி நான்காமிடம் பெறுகிறது.


ஆடுகளத்தின் தரத்தின் அடிப்படையில்



1. STAR Cricket - இருபது மீட்டர் தள்ளி நிற்கும் கீப்பருக்கே, இடுப்புயரம் பந்து செல்லும் அற்புதமான Swing மற்றும் Bounce கொண்ட நியுசிலாந்து மைதானத்திற்கே முதலிடம்

2. TEN Sports - நியுசிலாந்து மைதானதிற்கு கொஞ்சமும் குறைவில்லாதபோதும் கடைசி நாளில் காணமல் போன Bounce இந்த மைதானத்தை இரண்டாமிடத்திற்கு இழுக்கிறது

3. NEO Cricket - முக்கி முக்கி பந்து வீசினாலும் முட்டிக்கு மேல் எழும்பாத கான்பூர் மைதானம் மூன்றாமிடம் பெறுகிறது

4. NEO Sports - சர்வதேச போட்டியில் பந்தை உருட்டிவிளையாடிய சேப்பல் பயிற்சியாளராய் சிறிதுகாலம் இருந்த ஒரே காரணத்தினால் ஆடுகளங்களை எல்லாம் நலுங்கு உருட்டும் இடமாய் மாற்றிய BCCI யின் சாதனை இந்த போட்டியை நான்காமிடதிற்கு தள்ளுகிறது.

ஒளிப்பதிவு மற்றும் வர்ணனை

1. அட்டகாசமான ஒளிப்பதிவு, அருமையான வர்ணனை, அற்புதமான ஆங்கிலம் என்ற STAR Criket இன் தாரகமந்திரம் முதலிடம் பிடிக்க செய்கிறது.

2 & 3. ஸ்கொயர் லெகில் அடிக்கப்பட்ட பந்தை லாங் ஆனில் தேடும் காமெரா, என்ன சொல்ல வருகிறோம் என்பதில் ஒரு தெளிவில்லாமல் எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிக்கும் வர்ணனையாளர்கள், பெரும்பாலும் ஒருத்லைபட்சமாகவே அமையும் வர்ணனைகள் NEO Cricket மற்றும் TEN Sports இடையே 2 & 3 ஆம் இடங்களுக்கு கடும் போட்டியை உண்டாக்கினாலும், சுஜாதா சொல்வதுபோல், தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசி முதுகு வலியை அதிகமாக்கும் போட்டியில் வெல்லும் TEN Sports மூன்றாமிடம் பிடிக்கிறது.

4 . தண்டவாளத்தில் தலை வைத்தாலும் சரி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் சரி, (காமெடி பண்ணாதேன்னு நீங்க சொல்வது காதில் விழுகிறது), காங்கிரசுக்கு தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் சரி, (எந்த கோஷ்டிக்கு என்று அப்புறம் முடிவுசெய்யலாம்) நாங்கள் ஹிந்தியை மட்டும் தான் ஆட்சிமொழியாக கருதுவோம் எனும் தூர்தர்ஷனின் கொள்கையை அப்படியே பின்பற்றும் NEO Sports நான்காவது இடம் பெறுகிறது.

ஒரு தனிப்பட்ட வீரரின் அடிப்படையில்

1. என்றும் ஆட்டநாயகன், கிரிக்கெட்டில் எங்கள் தெய்வம், சச்சின் இருக்கும் ஒரே காரணத்தினால் NEO Cricket முதலிடம் பெறுகிறது.

2. ஒற்றை ஆளாய் நின்று அணியை வழிநடத்தி செல்லும் வெட்டோரியை எனக்கு பிடித்த காரணத்தால், எனக்கு பிடிக்காத அப்ரிடி இருந்தபோதும், TEN Sports இரண்டாமிடம் பெறுகிறது

3. இரு அணிவீரர்களில் யாரையும் பற்றி எனக்கு தெரியாது என்ற போதிலும் கீழே கூறியுள்ள காரணத்தினால் NEO Sports மூன்றாமிடம் பெறுகிறது.

4. கிரிஸ் கெயில், சந்தர்பால் போன்ற எனக்கு பிடித்த பல வீரர்கள் இருந்த போதிலும், நான் வெறுக்கும் ஒரே ஆட்டக்காரரான பாண்டிங் இருக்கும் ஒரே காரணத்தால், STAR Cricket கடைசி இடம்பெறுகிறது


நன்றி சங்கர்

Monday, December 7, 2009

பிடிக்கும் ஆனா பிடிக்காது!!

பிடிக்கும் ஆனா பிடிக்காது!!

அண்ணன் மோகன் குமார் அவர்களின் அழைப்பின் பேரில் எனக்கு
பிடித்தவை மற்றும் பிடிக்காதவை.

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்
.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

நடிகர்:

பிடித்தவர்: ரஜினி (அது என்னமோ தெரியல சின்ன வயசில்
இருந்தே ஒரு ஈர்ப்பு ),சசிகுமார்(நம்மில் ஒருவர் மாதிரி இருக்கிறார்)


பிடிக்காதவர் :தற்போது ராமகிருஷ்ணன்(கு.பூ.கொ.புறாவும் ஹீரோ.... ஓவர் பந்தா!!)...அப்புறம் நிறைய பேரு சிம்புவை
ஓவர் பந்தா அப்படின்னு சொல்வாங்க அது கரெக்ட் தான்,
இருந்தாலும் சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் இருக்கும்
ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருப்பவர் பந்தா பண்ணுவதில்
என்ன தப்பு??....

இயக்குனர்

பிடித்தவர்: அமீர்(மௌனம் பேசியதே), ராம் (கற்றது தமிழ்).

பிடிக்காதவர்:கே.பாலசந்தர்(அது என்னமோ தெரியல இவர் படம் என்றாலே எனக்கு ஆகவில்லை).

இசையமைப்பாளர்


பிடித்தவர்: யுவன் ஷங்கர் ராஜா, தமன்(ஈரம்),
சதீஷ் சக்ரவர்த்தி(லீலை). டைம் இருந்தா லீலை பாட்டை
கேட்டு பாருங்க, அதுவும் ஜில்லென்று ஒரு கலவரம்
செம...


பிடிக்காதவர்: எஸ்.ஏ.ராஜ்குமார்(காரணம்: லா லா லா தான்).

நடிகை

பிடித்தவர்: திறமையை காட்டும் அனைவரையுமே பிடிக்கும்...
(நடிப்பு திறமையை பத்தி தான் சொன்னேன்)

பிடிக்காதவர்: பத்மப்ரியா.

எழுத்தாளார்:

பிடித்தவர்: சுஜாதா, ராமகிருஷ்ணன்.

பிடிக்காதவர்: பிடிக்காதவங்க புக்கை இது வரைக்கும் படிச்சது இல்ல.


தொழிலதிபர்

பிடித்தவர் : ரங்கநாதன் (கெவின் கேர்)

பிடிக்காதவர்:அம்பானி சகோதரர்கள்....


வில்லன் நடிகர்

பிடித்தவர் : சம்பத் (இவருக்கு குரலே போதும்),கிஷோர்.

பிடிக்காதவர்: ஆசிஷ் வித்யார்த்தி...(ஆனால் இவரு காமெடி பண்ணிய மலைக்கோட்டை படம் எனக்கு பிடிக்கும்).

காமெடியன்

பிடித்தவர் : கவுண்டமணி , வடிவேலு

பிடிக்காதவர்: இப்போதைக்கு விவேக், கருணாஸ்.


அரசியல்வாதி :

பிடித்தவர்: சுப்ரமணிய சுவாமி.(இவர் அடிக்கிற காமெடி எல்லாம்
சூப்பர்)

பிடிக்காதவர்: ஊழல் பண்ணி மக்களின் வரி பணத்தை கொள்ளை
அடிக்கும் அனைவருமே.

இதற்கு மேல் யாரையும் மாட்டி விட விருப்பம் எனக்கு இல்லை...

நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, December 4, 2009

ரேணிகுண்டா - விமர்சனம்

ரேணிகுண்டா - விமர்சனம்

பன்னீர்செல்வம் இயக்கத்திலும் கணேஷ் ராகவேந்திர இசையிலும்
வெளிவந்திருக்கும் படம் தான் ரேணிகுண்டா.அஞ்சு புது பசங்க
ஒரு புது கதாநாயகி என்றாலும் கதை என்னமோ பழசுதான்,
ஆனால் அதை எடுத்த விதம் கொஞ்சம் புதுசு.படத்துக்கு பெரிய
பலம் ஒளிப்பதிவாளர் சக்தி,காட்சி அமைப்புகளில் மனுஷன்
மிரட்டுறார்.



நாலு பேர் பக்கா ரவுடி அவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் சேரும்
அப்பாவி.அதன் பின் அவன் வாழ்வில் வரும் பெண் அந்த பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் மற்றவர்கள்... திருந்தினார்களா??வாழ்ந்தார்களா??


ஜானி, இவர் தான் கதையின் நாயகன்.இயல்பாக நடித்து இருக்கிறார்.
படம் முழுவதும் அமைதியாக வரும் இவர் கடைசி காட்சிகளில்
கோபத்தை காட்டுகிறார்.நாயகி ஏதோ பத்தாவது படிக்கும் பெண்
போல இருக்கிறார்.நல்லா அழகா தான் இருக்கா,முகபாவத்தில்
நம்மை கவர்கிறார்.அதுவும் ஜானி மற்றும் அவர்கள் சகாவுடன்
கைதட்டி விளையாடும் சீன் அருமை.

டப்பாவாக வரும் பையன் தான் படத்தின் ரியல் ஹீரோ,மனுஷன்
சும்மா பிச்சு உதறுகிறான்.ஆரம்பத்தில் அவர் ஜெயிலில்
ஆரம்பிக்கும் லொள்ளு மற்றும் நக்கல் பேச்சுக்கள் கடைசி
வரை நம்மை சிரிக்க வைக்கிறது.ஒரு சீனில் கட்டை அவரை
விட நீளமாக இருக்கும் அதை எடுத்து அவனை போட போறேன்
என்று அவர் சீரியஸ்ஆக சொல்லும் போது நமக்கு அந்த கட்டையின்
நீளத்தை பார்த்தால் சிரிப்பு வந்து விடும்.இன்னொரு காட்சியில்
தெலுங்கில் கடலோர கவிதை "அட ஆத்தாடி" பாட்டை கேட்டு
அவர் செய்யும் சேட்டைகள் லக லக லக.....

கேங் தலைவனாக வரும் பையனும் மிக இயல்பாக நடித்து
இருக்கிறார்.ஜெயிலில் ஜானியை அடிக்கும் போலீஸ்காராரை
மிரட்டும் போது தியேட்டரில் செம கைதட்டு.மற்ற இருவருக்கும்
வாய்ப்பு அவ்வளவாக இல்லைஎன்றாலும் கொடுத்த வேலையை
சரியாக செய்து இருக்கிறார்கள்.

ஜானியின் அம்மா அப்பாவை தேவகோட்டையில் கார் ஏற்றி
கொல்லும் போது பொது மக்கள் யாரும் வந்து தட்டி கேட்கவில்லை
என்ற கோபத்தில் இருப்பார் ஜானி.ஆனால் ரேணிகுண்டாவில்
காதலியை பார்க்க ஓடும் போது ஒரு சின்ன சந்து உள்ள ஆட்டோ
இடித்து விடும் அப்போ அவரை பத்து பேர் வந்து தூக்கி
விடுவாங்க இதில் எதுவும் உள்குத்து இருக்கானு டைரக்டர் தான்
சொல்லணும்.

முதல் பாதி மின்னல் வேகம் ஆனால் காதல் காட்சிகள் கொஞ்சம்
அலுப்புட்ட வைக்கிறது.இரண்டாவது பாதியில் நாம் நினைக்கும்
சில காட்சிகள் திரையில் நடக்கும் முக்கியமா கிளைமாக்ஸ்.
படத்தில் வன்முறை அதிகம் அவர்கள் தலையில் அடி வாங்கும்
போது நம் தலையில் அடிப்பது போல் இருக்கிறது.தள்ளாகுளம்
மற்றும் மழை பாட்டு நன்று.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு கனத்த சோகத்துடன் வெளியே வந்தேன்...ச்சே கடைசியில் காதலர்களை சேர்த்து வச்சிருக்கலாமே என்றும் ஜானி மேல் பரிதாபமும் தோன்றியது.ஒரு வேளை இது தான் டைரக்டர்க்கு கிடைத்த வெற்றி போலும்.

ரேணிகுண்டாவுக்கு தரமான வெற்றி காத்திருக்கு....

இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடவும்.

நன்றி: cinesnacks.in

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, December 1, 2009

நான் அவன் தாங்க(இல்லை!!)

நான் அவன் தாங்க(இல்லை!!)


தியேட்டருக்கு கிளம்பும் முன்:

இலச்சி மலை மாரியாத்தா பல பேர் இந்த படத்தை
மொக்கைன்னு சொன்னாலும் உன்மேல பாரத்தை
போட்டு நான் அவன் இல்லை படத்துக்கு போறேன்,
பத்திரமா வீட்ல திருப்பி சேத்துரு தாயி!!

சூப்பர்ங்க, நான் படத்தை பத்தி சொல்லல படத்துக்கு
போறதுக்கு முன்னாடி வூட்லண்ட்ஸ் தியேட்டர்
பக்கத்தில் ஒரு வட நாட்டு சாட் கடை இருக்குது
அங்கே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிட்டேன்
சூப்பர் ஆக இருந்தது.

நான் அவன் இல்லை கதையென்ன?? அதே பழைய
கதைதான் என்றாலும் இதில் சுவாரசியம் கொஞ்சம்
கம்மி.இசைஅமைப்பாளர் இமான் பற்றி சொல்லியே
ஆக வேண்டும் இந்த அளவுக்கு படு மோசமாக இசை
அமைக்க யாருளும் முடியாது.அவர் பாட்டே ரீமிக்ஸ்
மாதிரி தான் இருக்கு இதில் வேறு பழைய பாடல்களை
ஏன் ரீமிக்ஸ் செய்து கெடுக்கிறார் என்று புரியாத
புதிராகவே உள்ளது.

ஜீவன், இந்த மாதிரி ஒரு நடிகர் நமக்கு கிடைத்தது
நாம் செய்த தவமே.என்னாமா நடிக்கிறாரு??
விக் மட்டும் கண்டுபிடிக்கில இவரால் தமிழ் சினிமாவில்
காலம் தள்ளியிருக்க முடியாது.லட்சுமி ராயை ஏமாற்றும்
காட்சிகளில் ஒரு விக் அணிந்து வருவார் பாருங்க நம்ம
ஊரு பிச்சைக்காரன் தோத்தான் போங்க!!.(தலை புல்லா
நம்ம நண்பர் ஜீத் சூப்பர் பாக்கை கொதப்பி துப்பின மாதிரி
இருக்கும்).மீசையை கிழே விட்டா தம்பி நேரா விட்டா
அண்ணன் உண்மையில் செம டலேன்ட் ஆனா பாருங்க
டைரக்டர் விக்கை மாத்தாம விட்டுடாரு.



அநேகமா ஜீவனோட எக்ஸ்ட்ரா,ஆர்டினரி நடிப்புக்கு
ஆஸ்கார் விருது வாங்கினாலும் அது அவரின் நடிப்பு
திறமைக்கு குறைவான விருதே. ஆனா ஒன்னு மட்டும்
நிச்சயம் ஜீவனுக்கு ஏதோ ஒரு இடத்தில் மச்சம்
இருக்குங்க இல்லனா சும்மாவா ஒரு ஒரு படத்துக்கும்
அஞ்சு கதாநாயகிகள் கூட டூயட் பாடுறாரு.

வியந்தேன், டைரக்டரின் திறமையை கண்டு அல்ல.
என் முன் இருக்கை ஆசாமிகள் செம போதை படம்
ஸ்டார்ட் பண்றதக்கு முன்னாடி ஓவர்ஆ கத்தினார்கள்.
ஒருத்தன் ஆப்பாயில் போட்ட பின் சுத்தமா சவுண்டை
காணோம்.சரக்கின் மகிமையை கண்டு வியந்தேன்.

இதை தான் என் குரு கில்மானந்த முன்னாடியே சொன்னார்

சரக்கினால் உள்ளே போன சைடுடிஷ்
உள்ளாறும் ஆறாதே ஆப்பாயில் போட்ட வடு.....



செல்வா, அநேகமா இவர் நான் அவனில்லை பாகம் மூன்று எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.என்ன கதையா??
நான் அவன் இல்லை,நான் அவன் இல்லைனு நாலு ரீல்
ஓட்டிடுவாரு மீதியை கில்மான்ஸ் காட்டி சுபம் போட்டு
விடுவார்.

நாலு கதாநாயகிகள் தாராளமாகவே தங்கள் திறமையை
வெளிபடுத்தியுள்ளனர்.ஆனால் நாலு பேருமே அடி
முட்டாளுங்க அதுவும் சாமியாரா ஒரு பொண்ணு வருது
பாருங்க முடியல!!

படத்தில் உச்ச பட்ச கொடுமையாக கிளைமாக்ஸ் இருக்கிறது.
அதில் ஜீவன் அணிந்து வரும் போப் மாதிரியான டிரஸ்
பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஜெட்லி பஞ்ச்:

நானே படத்தை பார்த்து பஞ்சர் ஆகி இருக்கேன்,
எங்கே இருந்து பஞ்ச் சொல்றது.


ஆனாலும் மொக்கை படத்தை பார்ப்பதில் ஒரு
சுகம் இருக்குங்க...


இந்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய ஒட்டு
போடுங்கள்....


நன்றி:indiaglitz

உங்கள்
ஜெட்லி சரண்.