Tuesday, May 22, 2012

ப்ளாட் படும் பாடு....!!


ப்ளாட் படும் பாடு....!!
 
ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை
நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட்டு 
புடவையோடு கை சேர்த்து வரவேற்கிறார். சென்னைல ப்ளாட் வாங்கறது ரொம்ப
கஷ்டமான விஷயம் காரணம் ஒரு சதுர அடி 5000 மேல எங்கையோ போயிருச்சு.... 
ஆனா நாங்க சென்னை நகர்ல ஒரு சதுரடி   155 க்கு தரோம்...!!
 
நம்ம சென்னை நகர் தாம்பரத்தில் இருந்து வெறும் ரெண்டு மணி நேரத்தில
வந்துடும்...சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் திண்டிவனத்தில் இருந்து அம்பது
கிலோமீட்டர் மட்டுமே.... நம்ம டூபாக்கூர் கம்பெனி இது வரைக்கும் போட்ட நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மனைமேளாவில் காசு போட்ட அனைவருக்கும் நன்றி... 
இது எங்களின் நாற்பது ஒன்னாவது மனை பிரிவு,,, 
 
 
ஆறு மணி சீரியல்ல வர்ற கிழவர் வந்து..ஏன் இந்த மனையை வாங்கனும்னு 
சொல்ல வாராரு...எல்லாரும் சௌக்கியமா...?? சென்னைல மனை வாங்குறது எல்லாருக்கும் ஒரு கனவு..அதுக்கு தான் நம்ம டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் ..சென்னைக்கு பக்கத்திலே சென்னை  நகர் னு மனை பிரிவு போட்டு இருக்காங்க....இந்த இடம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பல  லட்சத்துக்கு போகும்னு சொல்றாங்க....
 
சரி மொதல்ல ஏன் இங்க மனையை வாங்கணும்....
 
1 .  நாம ஒரு இடத்துக்கு புதுசா போன முதல்ல நமக்கு வர பிரச்சனை தண்ணீ 
பிரச்சனை தாங்க....சென்னைல  எந்த டாஸ்மாக்ல பார்த்தாலும் நைட் ஏழு மணி 
மேல ஒரே கூட்டம்...அந்த கூட்டதில அடிச்சு பிடிச்சு ஒரு குவாட்டர் வாங்கறதுகுள்ள 
தாவு தீந்துறும்...அதுவே   நம்ம சென்னை  நகர்ல  இருந்து ரெண்டு கிலோ மீட்டர்  தள்ளி 
இருக்குற டாஸ்மாக் கடைல நைட் ஒன்பதரை மணிக்கு போன  ஈ காக்கா கூட   இருக்காது... ப்ரீயா போய்ட்டு அழகா சாப்பிட்டு வரலாம்....மனுஷனுக்கு நிம்மதி தான் முக்கியம். அது நம்ம சென்னை நகர்ல நிறையாவே  இருக்கு.குறிப்பா சொல்லனும்னா அந்த பார்ல இருக்குற சைட் டிஷ் போட்டி ,ரொம்ப அருமையா இருக்கும்....
 
2 . மனுஷனுக்கு தேவையான முக்கியமான இடம் நம்ம மனை மேலயே அமைஞ்சு இருக்கு.. ஆமாங்க சுடுகாடு தான் அது. நம்ம ப்ரோமொடர்ஸ் சுடுக்காட்டு நிலத்தோட  பாதியில் தான்  மனையை அமைச்சு இருக்காங்க ... அதே மாதிரி 6X6  அடியும் அவங்களே ப்ரீயா தோண்டியும் வச்சி இருக்காங்க..உங்களுக்கு எப்ப வேணும்னாலும் போய் படுத்துக்கலாம் என்பதே பெரிய சிறப்பு....!!
 
3 .  சின்ன பசங்க ரோட் ல விளையாடினாலும் நீங்க பயப்பட வேண்டாம் ஏன்னா இந்த பக்கம் ஒரு வண்டியும் வராது ,போகாது ....ரோடு இருந்தா தானே அந்த பிரச்சனையே....!!

##################################################################################

இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் : டி.வி.யில் தினமும் மனை விளம்பரத்தை பார்த்து கடுப்பாகி  போன சங்கம் என்பதை தெரிவித்து கொல்கிறோம்.

************************************************************

சரவணா....

 
 

Wednesday, May 16, 2012

உலகப்பட வரிசையில்


mike testing....1...2...2...2..2..3....



Tuesday, May 11, 2010

உலகப்பட வரிசையில் குருசிஷ்யன் !!

குருசிஷ்யன் - சைட் பார்வை


"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."

இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது
ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில்
எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.


இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.


அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)



சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க....
அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...



இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!


சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!

சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில்
வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு
படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு
சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில்
யூஸ் பண்ணாதீங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!

# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....


# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.


# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :
இதுக்குதான் வேலை முடிஞ்சவுடன் அவசரமா போக கூடாது!!

படத்தை தலைவர் கவுண்டர் பார்த்து இருந்தா என்ன
சொல்லிருப்பார்.....


"படமாடா இது, என்னாமா டகால்டி காட்றானுங்க,...காவியம்டோய் !! இதுக்கு தான் நான் அந்த சூப்பர் பாக்கு மண்டையன் நடிச்ச படத்தை பார்க்குறது இல்லை.... சும்மா வீட்ல இருந்தவனை கூட்டிட்டு வந்து...தலைவலி கொடுத்துட்டாங்க....."


குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!

சுந்தர்.சி ரசிகர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் கவலை
கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...கூடிய விரைவிலே நம்மை மகிழ்விக்க வாடா படம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்!!

Saturday, March 31, 2012

3 - குற்றம் நடந்தது என்ன...????

3 - குற்றம் நடந்தது என்ன...????

மூணு படம் டிஸ்கசன் அப்போ என்ன நடந்திருக்கும்....!!

ஐஸ்வரியா : முதல் பாதி படத்தில நீங்க செம ஜாலியா வரீங்க... இன்டெர்வல்க்கு
அப்புறம் நீங்க சைக்கோ ஆயிடுறீங்க........

தனுஷ் : இப்ப தான் மயக்கம் என்ன படத்தில சைக்கோ சீன் ஒண்ணு எடுத்தாங்....க....

ஐஸ்வரியா: அதுல நீங்க மேல இருந்து கிழே விழுவீங்க..இதுல தானாவே ஆயிடுவிங்க ...
அப்புறம் சுந்தர் எப்பவுமே படம் பூரா உங்க கூட வருவார்...

தனுஷ் : ஹையோ...மயக்கம் என்ன ல கூட என் கூடவே தான் வருவான்...

ஐஸ்வரியா : ஷட் அப்... அதுல நீங்க சாகமாட்டீங்க...ஆனா நம்ம படத்துல செத்து போய்டுவிங்க...

தனுஷ் : (மனசுக்குள்) நான் மட்டுமா படம் பார்க்க வர்ரவனும் தானே....!!


ஒய் தீஸ் கொலைவெறி.......!!!

Sunday, January 15, 2012

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!


நண்பன் - டப்பிங் பண்ணி இருக்கலாம்...!!

வசனம் கூட மாத்தம்மா ஏன் ஷங்கர் இப்படி ஒரு படத்தை எடுத்தார்....னு தெரியல...திருக்குறள் வசனம் தவிர... விஜய் ஓகே...கடுப்பு அடிக்கல...



வேட்டை - கோட்டை விட்டுட்டாங்களே....!!


ஐயோ டபுள் ஹீரோ சப்ஜெக்ட்...லிங்கு சாமி டைரக்ட் பண்றாரு...யுவன் இசை னு போய் தியேட்டர் ல உட்கார்ந்தா....ஐயோ ஐயோ... என்னத்த சொல்றது... மேடி தவிர வேற யாரையும் புடிக்கல.. மீதி பிட் எல்லாம் பேஸ்புக் ல பார்த்துக்குங்க....!!

சரவணா...(ஜெட்லி...)

Friday, December 16, 2011

மௌனகுரு.... பேசப்படுவாரா...?

மௌனகுரு.... பேசப்படுவாரா...?



இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய் டி.வி.டில கூட பார்த்தது இல்ல...ஆனா மௌனகுரு ட்ரைலர் நல்லா இருந்தது... அதுவும் இல்லாம மகேஷ் முத்துசாமி கேமரா...தமன் இசைனு தெரியும் ஆனா பாட்டை கேட்குற வாய்ப்பு கிடைக்கல... சரி நாம தியேட்டருக்கு போவோம்...

திருவான்மியூர் ஜெயந்தி தான் போனேன்...இதுக்கு முன்னாடி எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி நடிச்ச வாடா படத்தை பார்த்து பாதியில் ஓடிவந்தது தான், நான் கடைசியா ஜெயந்தில பார்த்த படம்னு வரலாறு சொல்லுது...!! சென்னை சிட்டில 25 ரூவாய்க்கு படம் பார்க்கறத நினைச்சா சந்தோசமா இருக்கு என்ன பண்றது அந்த தியேட்டருக்கு அவ்ளோ தான் வொர்த்....


மௌனகுரு...நாலு கெட்ட போலீஸ் ஒரு பணத்தை லம்பா விபத்து நடந்த காரில் இருந்து அடிக்கிறார்கள்...அதற்கு எவிடன்ஸ் இல்லைனு பார்த்தா இருக்கு...அருள் நிதி கல்லூரி படிக்கிறார்...சந்தர்ப்பவசத்தால் அந்த எவிடன்ஸ் விஷயத்தில் நாலு பேரிடமும் சிக்கி..என்கவுண்டர் என்று போய்...அப்படியே கீர் போட்டு படம் போகுது....

ரொம்ப நாள் ஆச்சு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் பார்த்து...அடுத்தது என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று நல்லா போச்சு மௌனகுரு... அருள்நிதி நல்லா தான் பண்ணி இருக்கார்..இனியா ஓகே...அவ்வளவா வேலை இல்லை... ஜான் விஜய் வில்லனாக வருகிறார்..மொக்கை காமெடிலாம் பண்ணாமா நல்லாவே பண்ணி இருக்கிறார்... முக்கியமா உமா ரியாஸ் பத்தி சொல்லணும் ஷி டன் ஏ குட் ஜாப்...!!

படத்தில சில பல விஷயங்கள் புதுசா இருந்தது... முக்கியமா சில ஷாட்ஸ் சூப்பர்ஆ இருந்தது... அதே மாதிரி பின்னணி இசை குறிப்பா அந்த ஓட்டேரி நரி அதாங்க ஆடுகளம் படத்துல தனுஷ் கூட வருவாரே... அவர் பூட்டு சாவியை மனநல காப்பகத்தில் திறக்கும் சீன் ..உண்மையிலே செம... படத்தில ரெண்டு பாட்டு தான் வருது அதனால பெரிசா ஒண்ணும் பிரச்சனை இல்லை...ஆனா இந்த தமன் அவர் ஸ்டைல் பாட்டை விட மாட்டாரு போலையே...!!

முக்கியமான விஷயம் வசனம்... ஷார்ப் வசனங்கள்...கடைசியில் எதிர்ப்பாராத ட்விஸ்ட்னு நல்லா தான் போச்சு... ஆஹோ ஓஹோ னு சொல்ல முடியலைனாலும் கண்டிப்பா நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்... தியேட்டர்ளையும் நல்ல ரெஸ்பான்ஸ்.. ...ஆங்கங்கே வசனங்களுக்கு கைத்தட்டுக்கள்.... !!

ஒஸ்தி பாத்து நாஸ்தி ஆனவங்களுக்கு மௌனகுரு
மருந்தாக இருக்க வாய்ப்பு இருக்கு....!!


மௌனகுரு - பேசப்படுவார்....!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# எங்க வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கு...11 மணிக்கு போனேன்..கேட் கூட திறக்கல..கூட்டம் சேர சேர தான் டிக்கெட் கொடுக்கவே ஆரம்பிச்சாங்க.... அந்த கூண்டு உள்ள போய் டிக்கெட் வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு...

# நான் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது...

# இன்டெர்வல் டைம் ல ஸ்க்ரீன் பக்கத்தில ஒரு வெள்ளை நாய் ஒடிச்சு...!
இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே தியேட்டர் எங்க
ஜெயந்தி தான்...! :))

# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச்சு...ஒரு தடவை
படம் தெரிஞ்சுது சவுண்ட் வரல...அடுத்த தடவ படம் தெரியல சவுண்ட்
வந்தது என்பது குறிப்பிடதக்கது....!!


ஜெட்லி...(சரவணா...)