Tuesday, May 22, 2012

ப்ளாட் படும் பாடு....!!


ப்ளாட் படும் பாடு....!!
 
ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை
நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட்டு 
புடவையோடு கை சேர்த்து வரவேற்கிறார். சென்னைல ப்ளாட் வாங்கறது ரொம்ப
கஷ்டமான விஷயம் காரணம் ஒரு சதுர அடி 5000 மேல எங்கையோ போயிருச்சு.... 
ஆனா நாங்க சென்னை நகர்ல ஒரு சதுரடி   155 க்கு தரோம்...!!
 
நம்ம சென்னை நகர் தாம்பரத்தில் இருந்து வெறும் ரெண்டு மணி நேரத்தில
வந்துடும்...சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் திண்டிவனத்தில் இருந்து அம்பது
கிலோமீட்டர் மட்டுமே.... நம்ம டூபாக்கூர் கம்பெனி இது வரைக்கும் போட்ட நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மனைமேளாவில் காசு போட்ட அனைவருக்கும் நன்றி... 
இது எங்களின் நாற்பது ஒன்னாவது மனை பிரிவு,,, 
 
 
ஆறு மணி சீரியல்ல வர்ற கிழவர் வந்து..ஏன் இந்த மனையை வாங்கனும்னு 
சொல்ல வாராரு...எல்லாரும் சௌக்கியமா...?? சென்னைல மனை வாங்குறது எல்லாருக்கும் ஒரு கனவு..அதுக்கு தான் நம்ம டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் ..சென்னைக்கு பக்கத்திலே சென்னை  நகர் னு மனை பிரிவு போட்டு இருக்காங்க....இந்த இடம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பல  லட்சத்துக்கு போகும்னு சொல்றாங்க....
 
சரி மொதல்ல ஏன் இங்க மனையை வாங்கணும்....
 
1 .  நாம ஒரு இடத்துக்கு புதுசா போன முதல்ல நமக்கு வர பிரச்சனை தண்ணீ 
பிரச்சனை தாங்க....சென்னைல  எந்த டாஸ்மாக்ல பார்த்தாலும் நைட் ஏழு மணி 
மேல ஒரே கூட்டம்...அந்த கூட்டதில அடிச்சு பிடிச்சு ஒரு குவாட்டர் வாங்கறதுகுள்ள 
தாவு தீந்துறும்...அதுவே   நம்ம சென்னை  நகர்ல  இருந்து ரெண்டு கிலோ மீட்டர்  தள்ளி 
இருக்குற டாஸ்மாக் கடைல நைட் ஒன்பதரை மணிக்கு போன  ஈ காக்கா கூட   இருக்காது... ப்ரீயா போய்ட்டு அழகா சாப்பிட்டு வரலாம்....மனுஷனுக்கு நிம்மதி தான் முக்கியம். அது நம்ம சென்னை நகர்ல நிறையாவே  இருக்கு.குறிப்பா சொல்லனும்னா அந்த பார்ல இருக்குற சைட் டிஷ் போட்டி ,ரொம்ப அருமையா இருக்கும்....
 
2 . மனுஷனுக்கு தேவையான முக்கியமான இடம் நம்ம மனை மேலயே அமைஞ்சு இருக்கு.. ஆமாங்க சுடுகாடு தான் அது. நம்ம ப்ரோமொடர்ஸ் சுடுக்காட்டு நிலத்தோட  பாதியில் தான்  மனையை அமைச்சு இருக்காங்க ... அதே மாதிரி 6X6  அடியும் அவங்களே ப்ரீயா தோண்டியும் வச்சி இருக்காங்க..உங்களுக்கு எப்ப வேணும்னாலும் போய் படுத்துக்கலாம் என்பதே பெரிய சிறப்பு....!!
 
3 .  சின்ன பசங்க ரோட் ல விளையாடினாலும் நீங்க பயப்பட வேண்டாம் ஏன்னா இந்த பக்கம் ஒரு வண்டியும் வராது ,போகாது ....ரோடு இருந்தா தானே அந்த பிரச்சனையே....!!

##################################################################################

இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் : டி.வி.யில் தினமும் மனை விளம்பரத்தை பார்த்து கடுப்பாகி  போன சங்கம் என்பதை தெரிவித்து கொல்கிறோம்.

************************************************************

சரவணா....

 
 

3 comments:

Stephen T Paul said...

real estate oda ippothaya nilai ithu thaan.... correct ah sonnenga...

Stephen T Paul said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)