"65-70"
"அது அந்த கடைசில இருக்கு, கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க, ட்ரைன் கிளம்பினப்புறம் போகலாம், இவங்க இப்போதைக்கு வழி விட மாட்டாங்க, பாலா, பர்த்தை இறக்கி விடு" அவர்களை உக்கார வைத்துவிட்டு மீண்டும் அந்தப் பக்கம் போனேன், முந்தைய கூபேயில் இன்னொரு சபரிமலை கோஷ்டி,
"என்ன சாமி, இவ்வளவு கூட்டமா இருக்கு" கேட்டேன் நான்
"அட, நீங்க வேற சாமி, நாங்க போகும்போது இதே வண்டிதான், இதைவிட அதிகமா கூட்டம் இருந்தது, நீங்க எந்த வண்டில போனீங்க?"
"நாங்க போகும் போது கொல்லம் ஸ்பெஷல்ல போனோம், எந்த பிரச்சனையும் இல்லை"
"நல்லவேளை தப்பிச்சீங்க"
எங்கள் சீட்டில் போய் உக்கார்ந்தேன், ஒரு வழியாகக் கிளம்பியது வண்டி, ஒரு பத்து நிமிடம் கழிந்தது, அங்கே இருந்து வேகமாக வந்தான் பாலா,
"ஹரி இது வேலைக்காவது"
"என்னாச்சி?"
"அடுத்த கம்பார்ட்மென்டலருந்து கும்பல் கும்பலா வர்றாங்க, உக்காந்திருக்கேன், ஒருத்தன் வந்து மடில உக்கர்றான், இன்னொருத்தன் காலுக்கு கீழ பொட்டிய வைக்கிறான், நிக்க கூட இடமில்ல"
"என்ன பண்ணலாம்கிற, டிடிஆரை காணும், ஆர்பிஎப்ஐயும் காணும்"
"அதெல்லாம் நம்பி பிரயோஜனமில்ல, இரு வர்றேன்" சொல்லிவிட்டு நேரே பக்கத்து கூபேக்கு சென்றான்,
"சாமி, திரிசூர் வந்தவுடனே செயின புடிச்சி இழுக்கப் போறேன், போலீஸ் வந்தா பேசணும், வருவீங்களா?"
"அதுக்கெதுக்கு திரிசூர் வரை போகணும், இங்கேயே இழுங்க சாமி, நாங்க பத்து பேர் இருக்கோம், நீங்க ஆறு பேரா? போதுமே, யார் வந்தாலும் பேசலாம்" என்றார் அவர்
"பிரசன்னா. அந்த செயின இழுடா" என்றான், அவன் ஆனமட்டும் முயன்றும் அது அசைந்து கொடுக்கவில்லை,
"சரி அதை விடு, அந்த கூபெல ஒண்ணு இருக்கு" என்றபடியே போய் செயினை இழுத்தான் பாலா, எர்ணாகுளம் - திரிசூர் இடையே நடுக்காட்டில் நின்றது வண்டி, இறங்கி ஓடி வந்தார் கார்டு, எங்கள் பெட்டி அருகே வந்து மேலும் கீழும் பார்த்தார்,
"ஹலோ, இங்க வாங்க, நாங்க தான் இழுத்தோம்" ஜன்னலில் கையை நீட்டிக் கத்தினோம்
"எதுக்காக இழுத்தீங்க"
"எதுவா இருந்தாலும் உள்ள ஏறி வந்து பேசுங்க" என்றான் பிரசன்னா
நிரம்பி வழிந்து கொண்டிருந்த கம்பார்ட்மெண்டை பார்த்தவர், புரிந்து கொண்டார்,
"சரி, திரிசூர் வந்ததும் சரி பண்ண ஏற்பாடு பண்றேன், கொஞ்சம் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க" என்று சொல்லிச் சென்றார் கார்டு,
நானும் பாலாவும் ஒவ்வொரு சீட்டிலும் இருந்தவர்களிடம் (முன்பதிவு செய்தவர்களிடம் மட்டும்), நிலைமையை விளக்கிச் சொன்னோம், பக்கத்து பெட்டிகளில் நிலைமையை பார்க்கலாம் என்று போனால், அங்கே எந்த சீட்டிலும் முன்பதிவாளர்கள் இருந்த மாதிரி தெரியவில்லை, "சரிதான் நாம் தான் தனியா பிரச்சனைய பேஸ் பண்ணியாகணுமா, பாத்துக்கலாம்" என்றபடியே திரும்பி வந்தோம்.
எர்ணாகுளத்தில் ஏறிய இன்னொரு குடும்பம் எங்கள் கூபெயின் மற்ற இருக்கைகளை பதிவு செய்திருந்தனர், அவர்களிடம் சென்று செயின் இழுக்கப்பட்ட விஷயத்தை சொன்னபோது, அதில் இருந்த பெரியவர் சொன்னார்
"அதெல்லாம் எதுக்குப்பா, இங்க எதுவும் பிரச்சனை பண்ண வேண்டாம், அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடுவோம், சென்னைல போய் கமிஷனரை பாத்து புகர் குடுக்கலாம்" என்றார்
"இருக்கிற கூட்டத்துல மூச்சு திணறி சென்னை போறதுக்குள்ள செத்துப் போயிடுவோமான்னு பயமா இருக்கு, நீங்க இப்படி சொல்றீங்க, ஆமா கமிஷனர் இதுக்கு என்ன பண்ண முடியும்?" என்ற பதில் சொல்லாமல், அவருடைய இருக்கைகளில் உக்கார்ந்திருந்தவர்களை எழுப்பும் வேலையை பார்க்கச் சென்றார்
அப்போது வந்தார் IRCTC யின் கடமை தவறா ஊழியர், "சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, எக் மசாலா" என்றபடியே கூட்டத்தில் நடுவே நின்று மெனுவை ஒப்பித்தார்,
"ஹலோ, என்ன பண்றீங்க?"
"டின்னருக்கு ஆர்டர் எடுக்கறேன்"
"ஆர்டரா, அவுங்களை அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுவாங்க, நீங்க அன்-ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டல தான் கொண்டுபோய் குடுக்கணும்" என்றதை மதிக்காமல் எழுதிக்கொண்டார் "S7 Seat 26 - Parotta + Egg masala"
திரிசூர் வந்தது, வண்டி நின்றது, இன்னும் ஒரு நூறு பேர் ஏறினார்கள், நான் செயினை கையில் பிடித்து நின்றிருந்தேன், சரியாக வண்டி நகரத் தொடங்கியவுடன் இழுத்தேன், இரண்டு டிடிஆர்கள், நான்கு ரயில்வே காவலர்கள் அவசரமாக ஓடி வந்தனர், வந்தவர்கள் வாசலில் நின்றிருந்தவர்களை மட்டும் விலக்கி விட்டு கை காட்டினர், வண்டி நகரத் தொடங்கியது, நான் மீண்டும் இழுத்தேன்,
"யாரது திரும்ப இழுத்தது?" என்றபடியே உள்ளே ஏறி வந்தனர்,
"நாங்க தான் சார்" என்றபடியே முன்னே சென்றோம்
"எதுக்காக இழுத்தீங்க?" என்றார்
"வேணும்னு இழுக்கலை, கூட்டத்தில நிக்க முடியாம பேலன்சுக்கு புடிச்சேன் அது செயினா போச்சி" என்றேன்
"என்ன விளையாடுறீங்களா?"
"பின்ன என்ன சார், இவ்வளவு கூட்டத்துல எப்படி சென்னை போய் சேர்றது? முதல்ல வந்த டிடிஆர் எங்களை என்ன வேணும்னா பண்ணிக்க சொல்லிட்டு போயிட்டாரு, அதுதான் எங்களால முடிஞ்சத பண்ணினோம்" என்றான் பிரசன்னா. அதன் பின் எதுவும் பேசாமல் எல்லாரையும் இறக்கி விட்டனர்,
"ஜல்தி, ஜல்தி, ஜல்தி"
"உங்க சீட் நம்பர் என்ன?"
"க்யா?"
"ஆப்கா சீட் நம்பர்?"
"ஜெனரல் டிக்கெட்"
"அப்புறம் எதுக்கு நீ நின்னு நாட்டமை பண்ற? கீழ இறங்கு"
"சார், இங்க வந்து பாருங்க, டாய்லெட் உள்ளே நாலு பேரு இருக்காங்க"
"இந்த பேக் யாரோடது? இந்தப் பொட்டி?"
இடமே ஒரே கலவரமாக மாறிப்போனது, எல்லாரையும் இறக்கி விட படாதபாடுபட்டுகொண்டிருக்கும்போது "சார் கொஞ்சம் வழி விடுறீங்களா, கை கழுவிக்கிறேன்" என்றபடியே எச்சில் கையோடு வந்தார் ஒரு மலையாள குண்டர், வந்த ஆத்திரத்தில் அவரையும் பிடித்து வெளியே தள்ளி விடலாமா என்று தோன்றியது. (எங்கூர்ல மலையாளிகள் பத்தி ஒரு கதை சொல்லுவாங்க)
ஒரு வழியாக எல்லாரையும் இறக்கி விட்டு, இரண்டு புறமும் கதவை பூட்டிய பின் வண்டி கிளம்பியது, வந்து சேர்ந்தார் பழைய டிடிஆர்,
"என்ன சார் இப்படி பிரச்சனை பண்ணிட்டீங்க?"
"நீ ஒரு கவுர்மென்ட் சர்வெண்டு, நீயே, என்ன வேணும்னா பண்ணிக்குங்கனு சொல்லிட்டு போயிட்ட, அப்புறம் நாங்க என்ன தான் பண்றது?"
"நான் ஏற்கனவே நேத்தே கம்ப்ளையின்ட் கொடுத்திருந்தேன், அது தான் வந்தாங்க?"
"என்னது, நீ கம்ப்ளெயின்ட் குடுத்தியா? அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் வராம இப்போ வந்தாங்க? அதுவும் நேத்து குடுத்தா இன்னிக்கு வர்ராங்களா? மரியாதையா போயிடு" நிஜமாகவே கடுப்பாகிப்போனான் பிரசன்னா
அரைமணி நேரம் கழித்து மீண்டும் நின்றது வண்டி, இந்த முறை வேறு ஏதோ பெட்டியில் செயினை இழுத்திருக்கிறார்கள், இப்போது வண்டி பின்னோக்கி செல்லத் தொடங்கியது "என்னடா, திரும்பவும் கோட்டையத்துக்கே போகுதா வண்டி, நாம அடிக்கடி செயின் இழுக்குறோம்னு, ஏறின இடத்திலேயே இறக்கி விடப்போறங்களா?" பத்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் கிளம்பியது
அடுத்து வந்தது ஆலவாய், மீண்டும் ஐம்பது பேர், மீண்டும் செயின், மீண்டும் ரயில்வே போலீஸ், இந்த முறை இரண்டு பக்கத்து vestibule கதவுகளையும் மூடிவிட்டு சென்றுவிட்டார். நாலு மணியிலிருந்து கத்திக்கொண்டே வந்ததால், தாகம் எடுக்க தண்ணீரைத் தேடியபோது தான், ஒட்டுமொத்த கம்பார்ட்மென்டிலும் யாரிடமும் இல்லாதது தெரிந்தது. கோபத்தில் சாப்பாட்டுக்கும் ஆர்டர் கொடுக்காமல் விட்டது இப்போது உரைத்தது, சரி முகத்தையாவது கழுவலாம் என்று போனால் அங்கே குழாயில் காற்று தான் வந்தது. இரண்டு புறமும் மூடப்பட்ட ஷட்டர்களும் அதற்கு அந்தப்புரம் கேட்ட அவர்களின் கோபக்குரல்களும் ஏதோ கோத்ராவை ஞாபகப்படுத்த, மலை இறங்கிய களைப்பில் கண்ணை சுற்றும் தூக்கத்தையும் விரட்டி விட்டு உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் மூன்று பேரும்.
ஒரு வழியாய் பாலக்காடு வந்தது, இறங்கி ஓடிப்போய் எல்லாருக்கும் ஜன்னல் வழியே தண்ணீர் வாங்கிக் கொடுத்த குழப்பத்தில் கையிலிருந்து இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது மூன்று போலீஸ்காரர்கள் கம்பார்ட்மென்டில் ஏறினர். உதவி செய்ததற்கு நன்றி சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது "இதல்லாம் எங்களால ஒண்ணும் பண்ண முடியாதுங்க, நீங்க தான் உங்க பாதுகாப்புக்கு பொறுப்பு, இங்க நாம இறங்க சொல்லிட்டோம் ஆனா ஆந்திரா போயிட்டா அப்புறம் அவங்கள எதுவும் பண்ண முடியாது, ஆலவாய்க்கு முன்னாடி வண்டி நின்னுதே, அப்போ செயின் இழுத்தது நான்தான், S2 கூட்டத்தை என்னாலையே எதுவும் பண்ண முடியல, அது தான் செயின இழுத்தேன்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார். பாலக்காட்டில் வெஜிடபிள் பிரியாணி என்ற பெயரில் ஒரு வஸ்துவை வாங்கி பாதி சாப்பிட்டு முடியாமல் மீதியை வீசி எறிந்தோம்.
வாங்கிய தண்ணீரிலேயே கையை கழுவி விட்டு படுத்து தான் தெரியும், காட்பாடியில் யாரோ ஒருவர் வந்து கலை சுரண்டும் போது தான் விழிப்பு வந்தது. பார்த்தால் பெட்டி முழுவதும் ஆட்கள். "திரும்பவும் ஆரம்பதிலேருந்தா? நம்மால முடியாதுடா சாமி" என்று எழுந்து ஒடுக்கிக் கொண்டு அமர்ந்தோம்.
அரட்டை அடித்துக்கொண்டு வந்ததில் பெரம்பூர் வந்ததே தெரியவில்லை, பெரம்பூரில் சிக்னலில் நிற்கும்போதே இறங்கியவரிடம் "கமிஷனர் ஆப்பீஸ் இங்கே மாத்திட்டங்களா சார்?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இப்படியாக நாலரை மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி ஏழரை மணியோடு சென்ட்ரல் வந்தது. சென்ட்ரலில் மொத்த கம்பார்ட்மெண்டும் காலியாக, காத்திருந்த கூட்டம் வந்து கும்மியது. நல்லவேளையாக அதிகம் தள்ளுமுள்ளு இல்லாமல் இறங்குவதற்கு முடிந்தது.
"டேய் ஹரி, நீதானே இந்த ட்ரைன்ல டிக்கெட் எடுத்தது, உன்னை தான் அடிக்கணும்"
"நான் என்னடா பண்ணுவேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பார்த்தாலும், இந்த வண்டில மட்டும் தான் டிக்கெட் கிடைச்சது, ஆனா சபரிமலையை ஏறி இறங்கினதை விட இந்த ட்ரைன் தான் சாகசம் அதிகமா இருந்தது"
"டேய் சதிஷு, ஏன்டா எதுவுமே பேசாம வர்ற?"
"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"
"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"
"வேணாம் பாலா, அடுத்த தடவை நாம அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து ஸ்லீப்பர் கிளாஸ்ல ஏறுறோம், டிக்கட் எடுத்தவங்களை புடிச்சி வெளில தள்றோம்"
பின்குறிப்பு
இதே பிரசன்னா தான் என்னை "ஏஜண்டு சொதப்பிட்டண்டா, டிக்கெட் கன்பர்ம் ஆகல, பேசாம ஒரு அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து வந்துடு" என்று கல்கத்தா அழைத்த அருமை நண்பன சங்கர்