Saturday, April 17, 2010

ஆத்தா, நான் செயினை பிடிச்சி இழுத்துட்டேன்

"டேய் ஹரி, என்னாடா இவ்வளவு கூட்டம் நிக்குது?" கேட்டான் பாலா


"நாம போகப்போறது திருவனந்தபுரம்-கவுஹாத்தி எக்ஸ்ப்ரஸ், இதெல்லாம் கொல்கொத்தா போகிற கூட்டமா இருக்கும், அதோ ட்ரைன் வந்திடுச்சி பாரு" என்றபடி பையை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டேன்


"டேய், கோச் நம்பர் S7 தானே?" கேட்டான் ப்ரசன்னா


"என்னடா இது? சார்டையும் காணும், போர்டையும் காணும்?" மீண்டும் கேட்டான்


"அதெல்லாம் அந்த பக்கம் இருக்கும்னு நினைக்கிறேன், அதோ பாரு, சாக்பீஸ்ல எழுதி இருக்காங்க, S1, S2, S3" இது நான்


"என்னடா மொத்த ட்ரைனும் ஒரே அழுக்கா இருக்கு, கூட்டம் வேற நிரம்பி வழியுது?" மீண்டும் பாலா


"அதெல்லாம் வெயிட்டிங் லிஸ்டா இருக்கும்டா, நம்ம கம்பார்ட்மெண்ட் காலியா இருக்கும் பாரு" என்ற என்னை அவன் பார்த்த பார்வை சொல்லிக் கொள்ளும்படி இல்லை


"அதுதாண்டா S7, ஓடு"


"ஹலோ, கொஞ்சம் வேகமா ஏறுங்க, ட்ரைன் கிளம்பிடப் போகுது"


"கியா?"


"யோவ் வேகமா ஏறு, ஜல்தி, அந்தர் ஜாவ்"எப்படியோ, அடித்துப்பிடித்து உள்ளே ஏறி விட்டோம்,


"டேய், சீட் நம்பர் என்ன?"


"49, 52, 54 அப்புறம் 18, 19, 22, இதோ இருக்கு பாரு"


"என்னடா, பத்து பேரு உக்காந்திருக்காங்க?"


"ஹலோ, கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா? இது எங்க சீட்டு"


"இங்க வந்து உக்காருப்பா, இவிட ஸ்தலம் உண்டு"


"நாங்க உட்காருவது இருக்கட்டும், உங்க சீட் நம்பர் என்ன?"


"அதெல்லாம் எதுக்கு? உங்க சீட்டுல உக்காருங்க"


"அதை நாங்க பாத்துக்கறோம், உங்க சீட்டு நம்பர் சொல்லுங்க"


"அதெல்லாம் இல்லப்பா, இதோ டிடிஆர் சைன் பண்ணி கொடுத்துருக்கார் பாரு"


"அவரு ஃபைன் கட்டினதுக்கு தான் சைன் பண்ணிக் கொடுத்துருக்கார், சீட்டு குடுக்கல"


"அதெல்லாம் தெரியாது, நான் எர்ணகுளம் வரை உக்காந்து தான் வருவேன்"


உட்கார்ந்திருந்த பத்து பேரில் ஐந்து பேரை எழுப்பி விட்ட பின்னும் எழுந்திருக்காமல் அடம் பிடித்த மலையாள குண்டர் ஒருவருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல் அது


"ஹரி, டிக்கெட் குடு, டிடிஆர் வர்றார்" கேட்டான் ப்ரசன்னா


"சார், இந்தாங்க எங்க டிக்கெட்டு" வாங்கி, கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு நகரத் தொடங்கினார்


"ஹலோ சார், ஒரு நிமிஷம், எங்க சீட்டு எங்க இருக்கு?"


"இப்போ கொடுத்தேனே, 18, 19, 22, அதோ இருக்கு பாருங்க"


"அது இருக்கு, ஆனா அதுல நாலு பேரு உக்காந்து இருக்காங்களே, கொஞ்சம் கிளியர் பண்ணிக் குடுத்துட்டுப் போங்க"


"என்னால இதுதான் சார் பண்ண முடியும், உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க" சொல்லியபடியே நின்றிருந்த கூட்டத்தில் ஒவ்வொருவரிடமும் ஃபைன் (??) வாங்கியபடியே நகர்ந்து போனார் அவர்



"டேய் ப்ரசன்னா, இங்க வந்து உக்காரு, எர்ணாகுளம் வரை தானே, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், பாலா, அங்க அவுங்க மூணு பேரும் என்ன பண்ணாறாங்கன்னு பார்த்துட்டு வரலாம் வா" என்று கூட்டிக்கொண்டு போனேன், அங்கே நிலைமை இன்னும் மோசம், பத்து பேரும், ஆளுயர ட்ரம் ஒன்றும், ஆளவந்தார் கொலை வழக்கில் வருவது போன்று இரு ட்ரங்கு பெட்டிகளும் எங்களை வரவேற்றன


"அங்கிள், தினேஷு, கார்த்தி, எங்க இருக்கீங்க?"


"இதோ இருக்கோம்பா" ட்ரம்முக்கு பின்னாலிருந்து குரல் வந்தது, எட்டிப்பார்த்தபோது, மாடிப்படி மாது போல் சுருட்டி மடக்கிக் கொண்டு, உக்கார்ந்திருந்தனர் மூன்று பேரும்.


"என்னாச்சி அங்கிள்? இப்படி உக்காந்திருக்கீங்க? அவுங்கள எழுப்பி விட வேண்டியது தானே?"


"பாவம்பா, உக்காந்துட்டு போகட்டும்"



"உக்காந்துட்டு போகட்டுமா? சென்னை வரைக்குமா? இதெல்லாம் சரிப்படாது, நீங்க அங்க போய் லோயர் பர்த்துல உக்காருங்க, நாங்க இங்க பாத்துக்கறோம், கார்த்தி, நீயும் அவர் கூட போ, டேய் தினேஷு, நமக்கு என்ன பர்த்துடா?"


"ரெண்டு அப்பர், ஒரு மிடில்"


"சரி, நீ அந்த அப்பர்ல ஏறிப்படு, பாலா வா, இந்த மிடில் பர்த்தைப் போடுவோம், ஹலோ, கொஞ்சம் எந்திரிங்க, நான் பர்த்து போடணும்"


"எதுக்கு எந்திரிக்கணும்? ரூல்ஸ் படி, ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னாடி மிடில் பர்த்து போடக்கூடாது, தெரியுமா?"


"உங்க சீட் நம்பர் என்ன சார்?"


"சீட் நம்பர் இல்லை, ஜெனரல் டிக்கெட்டு தான்"


"ரூல்ஸ் படி நீங்க இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்கவே கூடாது, வெளீல குதிச்சிடறீங்களா?"


"சரி ரூல்ஸ் வேண்டாம், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கில்ல, அவுங்க இடத்திலிருந்து யோசிச்சி பாருப்பா"


"நான் அவங்க இடத்திலிருந்து யோசிச்சா, என் பிரச்சனையை யாரு பாக்குறது? நான் நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு சென்னைல இறங்கி, ஆறரை மணிக்கு ஆபீஸ் போகணும், நீ கூட வருவியா? சொல்லுயா?"


"இல்லப்பா, நான் எதுவும் பேசலை, சபரிமலைக்கு போயிட்டு வரும்போது இப்படி பேசறியே, போய் என்ன பிரயொஜனம்?"


"யோவ், டிக்கெட் எடுக்காம ட்ரைன்ல ஏறி உக்காந்து வர்றவனுக்கு இடம் குடுக்குறதுக்கும், நான் சபரிமலைக்கு போய்ட்டு வர்றதுக்கும் என்ன சம்பந்தம்? உனக்கு ரொம்ப ஆத்திரமா இருந்தா, போய் டிடிஆர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணு, புதுசா நாலு ட்ரைன் விடச் சொல்லு"


இது பர்த்தைப் போட்டுப் படுத்த பாலாவுக்கும், இன்னொரு மலையாள குண்டருக்கும் நடுவேயான உரையாடல்.


இப்படியே, வெயிலும் வேர்வையும், சண்டையும் கூச்சலுமாக எர்ணாகுளம் வந்து சேர்ந்தது வண்டி, எர்ணாகுளத்தில் நின்ற வண்டியில், ஏற்கனவே இருப்பவர்கள் போதாதென்று, இன்னும் ஐம்பது பேர் பெரிய பெரிய பெட்டிகளுடன் ஏறி வந்தனர்,


"யோவ், வழி விடுங்கையா, குழந்தையை நசுக்காதீங்க, உள்ளே போக விடுங்க, லக்கேஜை வழியிலருந்து எடுங்க, அம்மா பார்த்து ஏறுங்க" இரண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி வந்தது ஒரு முஸ்லிம் குடும்பம்,


"உங்க பார்த்து நம்பர் என்ன சார்?"


"65-70"


"அது அந்த கடைசில இருக்கு, கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க, ட்ரைன் கிளம்பினப்புறம் போகலாம், இவங்க இப்போதைக்கு வழி விட மாட்டாங்க, பாலா, பர்த்தை இறக்கி விடு" அவர்களை உக்கார வைத்துவிட்டு மீண்டும் அந்தப் பக்கம் போனேன், முந்தைய கூபேயில் இன்னொரு சபரிமலை கோஷ்டி,


"என்ன சாமி, இவ்வளவு கூட்டமா இருக்கு" கேட்டேன் நான்


"அட, நீங்க வேற சாமி, நாங்க போகும்போது இதே வண்டிதான், இதைவிட அதிகமா கூட்டம் இருந்தது, நீங்க எந்த வண்டில போனீங்க?"


"நாங்க போகும் போது கொல்லம் ஸ்பெஷல்ல போனோம், எந்த பிரச்சனையும் இல்லை"


"நல்லவேளை தப்பிச்சீங்க"


எங்கள் சீட்டில் போய் உக்கார்ந்தேன், ஒரு வழியாகக் கிளம்பியது வண்டி, ஒரு பத்து நிமிடம் கழிந்தது, அங்கே இருந்து வேகமாக வந்தான் பாலா,


"ஹரி இது வேலைக்காவது"


"என்னாச்சி?"


"அடுத்த கம்பார்ட்மென்டலருந்து கும்பல் கும்பலா வர்றாங்க, உக்காந்திருக்கேன், ஒருத்தன் வந்து மடில உக்கர்றான், இன்னொருத்தன் காலுக்கு கீழ பொட்டிய வைக்கிறான், நிக்க கூட இடமில்ல"


"என்ன பண்ணலாம்கிற, டிடிஆரை காணும், ஆர்பிஎப்ஐயும் காணும்"


"அதெல்லாம் நம்பி பிரயோஜனமில்ல, இரு வர்றேன்" சொல்லிவிட்டு நேரே பக்கத்து கூபேக்கு சென்றான்,


"சாமி, திரிசூர் வந்தவுடனே செயின புடிச்சி இழுக்கப் போறேன், போலீஸ் வந்தா பேசணும், வருவீங்களா?"


"அதுக்கெதுக்கு திரிசூர் வரை போகணும், இங்கேயே இழுங்க சாமி, நாங்க பத்து பேர் இருக்கோம், நீங்க ஆறு பேரா? போதுமே, யார் வந்தாலும் பேசலாம்" என்றார் அவர்


"பிரசன்னா. அந்த செயின இழுடா" என்றான், அவன் ஆனமட்டும் முயன்றும் அது அசைந்து கொடுக்கவில்லை,


"சரி அதை விடு, அந்த கூபெல ஒண்ணு இருக்கு" என்றபடியே போய் செயினை இழுத்தான் பாலா, எர்ணாகுளம் - திரிசூர் இடையே நடுக்காட்டில் நின்றது வண்டி, இறங்கி ஓடி வந்தார் கார்டு, எங்கள் பெட்டி அருகே வந்து மேலும் கீழும் பார்த்தார்,


"ஹலோ, இங்க வாங்க, நாங்க தான் இழுத்தோம்" ஜன்னலில் கையை நீட்டிக் கத்தினோம்


"எதுக்காக இழுத்தீங்க"


"எதுவா இருந்தாலும் உள்ள ஏறி வந்து பேசுங்க" என்றான் பிரசன்னா


நிரம்பி வழிந்து கொண்டிருந்த கம்பார்ட்மெண்டை பார்த்தவர், புரிந்து கொண்டார்,


"சரி, திரிசூர் வந்ததும் சரி பண்ண ஏற்பாடு பண்றேன், கொஞ்சம் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க" என்று சொல்லிச் சென்றார் கார்டு,


நானும் பாலாவும் ஒவ்வொரு சீட்டிலும் இருந்தவர்களிடம் (முன்பதிவு செய்தவர்களிடம் மட்டும்), நிலைமையை விளக்கிச் சொன்னோம், பக்கத்து பெட்டிகளில் நிலைமையை பார்க்கலாம் என்று போனால், அங்கே எந்த சீட்டிலும் முன்பதிவாளர்கள் இருந்த மாதிரி தெரியவில்லை, "சரிதான் நாம் தான் தனியா பிரச்சனைய பேஸ் பண்ணியாகணுமா, பாத்துக்கலாம்" என்றபடியே திரும்பி வந்தோம்.


எர்ணாகுளத்தில் ஏறிய இன்னொரு குடும்பம் எங்கள் கூபெயின் மற்ற இருக்கைகளை பதிவு செய்திருந்தனர், அவர்களிடம் சென்று செயின் இழுக்கப்பட்ட விஷயத்தை சொன்னபோது, அதில் இருந்த பெரியவர் சொன்னார்


"அதெல்லாம் எதுக்குப்பா, இங்க எதுவும் பிரச்சனை பண்ண வேண்டாம், அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடுவோம், சென்னைல போய் கமிஷனரை பாத்து புகர் குடுக்கலாம்" என்றார்


"இருக்கிற கூட்டத்துல மூச்சு திணறி சென்னை போறதுக்குள்ள செத்துப் போயிடுவோமான்னு பயமா இருக்கு, நீங்க இப்படி சொல்றீங்க, ஆமா கமிஷனர் இதுக்கு என்ன பண்ண முடியும்?" என்ற பதில் சொல்லாமல், அவருடைய இருக்கைகளில் உக்கார்ந்திருந்தவர்களை எழுப்பும் வேலையை பார்க்கச் சென்றார்


அப்போது வந்தார் IRCTC யின் கடமை தவறா ஊழியர், "சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, எக் மசாலா" என்றபடியே கூட்டத்தில் நடுவே நின்று மெனுவை ஒப்பித்தார்,


"ஹலோ, என்ன பண்றீங்க?"


"டின்னருக்கு ஆர்டர் எடுக்கறேன்"


"ஆர்டரா, அவுங்களை அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுவாங்க, நீங்க அன்-ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டல தான் கொண்டுபோய் குடுக்கணும்" என்றதை மதிக்காமல் எழுதிக்கொண்டார் "S7 Seat 26 - Parotta + Egg masala"


திரிசூர் வந்தது, வண்டி நின்றது, இன்னும் ஒரு நூறு பேர் ஏறினார்கள், நான் செயினை கையில் பிடித்து நின்றிருந்தேன், சரியாக வண்டி நகரத் தொடங்கியவுடன் இழுத்தேன், இரண்டு டிடிஆர்கள், நான்கு ரயில்வே காவலர்கள் அவசரமாக ஓடி வந்தனர், வந்தவர்கள் வாசலில் நின்றிருந்தவர்களை மட்டும் விலக்கி விட்டு கை காட்டினர், வண்டி நகரத் தொடங்கியது, நான் மீண்டும் இழுத்தேன்,


"யாரது திரும்ப இழுத்தது?" என்றபடியே உள்ளே ஏறி வந்தனர்,


"நாங்க தான் சார்" என்றபடியே முன்னே சென்றோம்


"எதுக்காக இழுத்தீங்க?" என்றார்


"வேணும்னு இழுக்கலை, கூட்டத்தில நிக்க முடியாம பேலன்சுக்கு புடிச்சேன் அது செயினா போச்சி" என்றேன்


"என்ன விளையாடுறீங்களா?"


"பின்ன என்ன சார், இவ்வளவு கூட்டத்துல எப்படி சென்னை போய் சேர்றது? முதல்ல வந்த டிடிஆர் எங்களை என்ன வேணும்னா பண்ணிக்க சொல்லிட்டு போயிட்டாரு, அதுதான் எங்களால முடிஞ்சத பண்ணினோம்" என்றான் பிரசன்னா. அதன் பின் எதுவும் பேசாமல் எல்லாரையும் இறக்கி விட்டனர்,


"ஜல்தி, ஜல்தி, ஜல்தி"


"உங்க சீட் நம்பர் என்ன?"


"க்யா?"


"ஆப்கா சீட் நம்பர்?"


"ஜெனரல் டிக்கெட்"


"அப்புறம் எதுக்கு நீ நின்னு நாட்டமை பண்ற? கீழ இறங்கு"


"சார், இங்க வந்து பாருங்க, டாய்லெட் உள்ளே நாலு பேரு இருக்காங்க"


"இந்த பேக் யாரோடது? இந்தப் பொட்டி?"


இடமே ஒரே கலவரமாக மாறிப்போனது, எல்லாரையும் இறக்கி விட படாதபாடுபட்டுகொண்டிருக்கும்போது "சார் கொஞ்சம் வழி விடுறீங்களா, கை கழுவிக்கிறேன்" என்றபடியே எச்சில் கையோடு வந்தார் ஒரு மலையாள குண்டர், வந்த ஆத்திரத்தில் அவரையும் பிடித்து வெளியே தள்ளி விடலாமா என்று தோன்றியது. (எங்கூர்ல மலையாளிகள் பத்தி ஒரு கதை சொல்லுவாங்க)


ஒரு வழியாக எல்லாரையும் இறக்கி விட்டு, இரண்டு புறமும் கதவை பூட்டிய பின் வண்டி கிளம்பியது, வந்து சேர்ந்தார் பழைய டிடிஆர்,


"என்ன சார் இப்படி பிரச்சனை பண்ணிட்டீங்க?"


"நீ ஒரு கவுர்மென்ட் சர்வெண்டு, நீயே, என்ன வேணும்னா பண்ணிக்குங்கனு சொல்லிட்டு போயிட்ட, அப்புறம் நாங்க என்ன தான் பண்றது?"


"நான் ஏற்கனவே நேத்தே கம்ப்ளையின்ட் கொடுத்திருந்தேன், அது தான் வந்தாங்க?"


"என்னது, நீ கம்ப்ளெயின்ட் குடுத்தியா? அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் வராம இப்போ வந்தாங்க? அதுவும் நேத்து குடுத்தா இன்னிக்கு வர்ராங்களா? மரியாதையா போயிடு" நிஜமாகவே கடுப்பாகிப்போனான் பிரசன்னா


அரைமணி நேரம் கழித்து மீண்டும் நின்றது வண்டி, இந்த முறை வேறு ஏதோ பெட்டியில் செயினை இழுத்திருக்கிறார்கள், இப்போது வண்டி பின்னோக்கி செல்லத் தொடங்கியது "என்னடா, திரும்பவும் கோட்டையத்துக்கே போகுதா வண்டி, நாம அடிக்கடி செயின் இழுக்குறோம்னு, ஏறின இடத்திலேயே இறக்கி விடப்போறங்களா?" பத்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் கிளம்பியது


அடுத்து வந்தது ஆலவாய், மீண்டும் ஐம்பது பேர், மீண்டும் செயின், மீண்டும் ரயில்வே போலீஸ், இந்த முறை இரண்டு பக்கத்து vestibule கதவுகளையும் மூடிவிட்டு சென்றுவிட்டார். நாலு மணியிலிருந்து கத்திக்கொண்டே வந்ததால், தாகம் எடுக்க தண்ணீரைத் தேடியபோது தான், ஒட்டுமொத்த கம்பார்ட்மென்டிலும் யாரிடமும் இல்லாதது தெரிந்தது. கோபத்தில் சாப்பாட்டுக்கும் ஆர்டர் கொடுக்காமல் விட்டது இப்போது உரைத்தது, சரி முகத்தையாவது கழுவலாம் என்று போனால் அங்கே குழாயில் காற்று தான் வந்தது. இரண்டு புறமும் மூடப்பட்ட ஷட்டர்களும் அதற்கு அந்தப்புரம் கேட்ட அவர்களின் கோபக்குரல்களும் ஏதோ கோத்ராவை ஞாபகப்படுத்த, மலை இறங்கிய களைப்பில் கண்ணை சுற்றும் தூக்கத்தையும் விரட்டி விட்டு உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் மூன்று பேரும்.


ஒரு வழியாய் பாலக்காடு வந்தது, இறங்கி ஓடிப்போய் எல்லாருக்கும் ஜன்னல் வழியே தண்ணீர் வாங்கிக் கொடுத்த குழப்பத்தில் கையிலிருந்து இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது மூன்று போலீஸ்காரர்கள் கம்பார்ட்மென்டில் ஏறினர். உதவி செய்ததற்கு நன்றி சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது "இதல்லாம் எங்களால ஒண்ணும் பண்ண முடியாதுங்க, நீங்க தான் உங்க பாதுகாப்புக்கு பொறுப்பு, இங்க நாம இறங்க சொல்லிட்டோம் ஆனா ஆந்திரா போயிட்டா அப்புறம் அவங்கள எதுவும் பண்ண முடியாது, ஆலவாய்க்கு முன்னாடி வண்டி நின்னுதே, அப்போ செயின் இழுத்தது நான்தான், S2 கூட்டத்தை என்னாலையே எதுவும் பண்ண முடியல, அது தான் செயின இழுத்தேன்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார். பாலக்காட்டில் வெஜிடபிள் பிரியாணி என்ற பெயரில் ஒரு வஸ்துவை வாங்கி பாதி சாப்பிட்டு முடியாமல் மீதியை வீசி எறிந்தோம்.


வாங்கிய தண்ணீரிலேயே கையை கழுவி விட்டு படுத்து தான் தெரியும், காட்பாடியில் யாரோ ஒருவர் வந்து கலை சுரண்டும் போது தான் விழிப்பு வந்தது. பார்த்தால் பெட்டி முழுவதும் ஆட்கள். "திரும்பவும் ஆரம்பதிலேருந்தா? நம்மால முடியாதுடா சாமி" என்று எழுந்து ஒடுக்கிக் கொண்டு அமர்ந்தோம்.


அரட்டை அடித்துக்கொண்டு வந்ததில் பெரம்பூர் வந்ததே தெரியவில்லை, பெரம்பூரில் சிக்னலில் நிற்கும்போதே இறங்கியவரிடம் "கமிஷனர் ஆப்பீஸ் இங்கே மாத்திட்டங்களா சார்?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.


இப்படியாக நாலரை மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி ஏழரை மணியோடு சென்ட்ரல் வந்தது. சென்ட்ரலில் மொத்த கம்பார்ட்மெண்டும் காலியாக, காத்திருந்த கூட்டம் வந்து கும்மியது. நல்லவேளையாக அதிகம் தள்ளுமுள்ளு இல்லாமல் இறங்குவதற்கு முடிந்தது.


"டேய் ஹரி, நீதானே இந்த ட்ரைன்ல டிக்கெட் எடுத்தது, உன்னை தான் அடிக்கணும்"


"நான் என்னடா பண்ணுவேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பார்த்தாலும், இந்த வண்டில மட்டும் தான் டிக்கெட் கிடைச்சது, ஆனா சபரிமலையை ஏறி இறங்கினதை விட இந்த ட்ரைன் தான் சாகசம் அதிகமா இருந்தது"


"டேய் சதிஷு, ஏன்டா எதுவுமே பேசாம வர்ற?"


"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"


"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"


"வேணாம் பாலா, அடுத்த தடவை நாம அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து ஸ்லீப்பர் கிளாஸ்ல ஏறுறோம், டிக்கட் எடுத்தவங்களை புடிச்சி வெளில தள்றோம்"


பின்குறிப்பு
இதே பிரசன்னா தான் என்னை "ஏஜண்டு சொதப்பிட்டண்டா, டிக்கெட் கன்பர்ம் ஆகல, பேசாம ஒரு அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து வந்துடு" என்று கல்கத்தா அழைத்த அருமை நண்பன
சங்கர்

31 comments:

மதார் said...

//"டேய் சதிஷு, ஏன்டா எதுவுமே பேசாம வர்ற?"


"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"


"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"


"வேணாம் பாலா, அடுத்த தடவை நாம அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து ஸ்லீப்பர் கிளாஸ்ல ஏறுறோம், டிக்கட் எடுத்தவங்களை புடிச்சி வெளில தள்றோம்"//

சத்தியமா முடியலைங்க . சிரிச்சுகிட்டே இருக்கேன் . என்ன கொடுமை இது .

பனித்துளி சங்கர் said...

////"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"


"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"/////////


ஏலே பார்த்துல இப்ப எல்லாம் அதிகமா செயின புடிச்சு இழுத்தா குண்டர் சட்டத்துல போடுறாகலாம் .

vasu balaji said...

நேரம்டா. இதே சீட் நம்பரோட கன்ஃபர்ம்ட் டிக்கட் வெச்சிட்டு ஆளுங்க ஏறாம இருந்தாங்களேன்னு சாமி கும்பிடுறத விட்டுட்டு அலம்பல பாரு.

settaikkaran said...

கலக்கல், கடுப்பான அனுபவத்தையும் கலகலப்பா சொல்லியிருக்கீங்க! :-))

பிரபாகர் said...

அன்பு தம்பி சங்கர்,

இதுக்கெல்லாம் விடிவே இல்லையாங்கற மாதிரி கதறியிருக்கிறேன் நானும் ஒரு தடவை.

மறக்காம சதீஷுக்கு ஒரு தடவை செயின இழுக்க வாய்ப்பு கொடுங்க, அண்ணன் வேனும்னாலும் ஃபைன் கட்டறேன்.

நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது. நிறைய எழுதுங்கள்!


பிரபாகர்...

புலவன் புலிகேசி said...

சதீசை அங்கேயே எதாவது பொண்ணுக் கழுத்துல இருக்குற செயினை இழுக்க சொல்ல வேண்டியதுதான தல....

செம அனுபவம் போங்க

Raju said...

தல..இதெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா..?

ஒரு தடவைக்கே இப்பிடின்னா,
நாங்கள்ளாம் இந்த ”சுகத்தை” வருஷாவருஷம் அனுபவிக்கிறோம்.

Nathanjagk said...

​மொத்தப் பயணமும் ரயில்​​​வே​யையும் ஜனக்கும்ப​லையும் தர்மம்:விதிகள் என்ற விகிதத்தில் நகர்த்தி ​செல்கிறது.
தனித்துவமான அனுபவம்.

சுயவிசார​ணைக்கு ஏதுவானதாக இருக்கிறது பயணத்தில் வரும் ஒவ்வொரு மனுஷரும் - சாப்பாடு விற்கும் IRCTC Catering ஊழியர் உட்பட.

க.சீ.சிவக்குமார் ஒருமு​றை ட்​ரெயின் ​செயின் பிடித்து இழுத்திருக்கிறார் - ​ஜெனரல் கம்பார்ட்மண்டில்! ட்ரெயின் நின்றது. காரணம் ​கேட்டதற்கு கூட்டம் தாள​லே; இது ஜனநாயகப் படு​கொ​லை என்றிருக்கிறார். ரயில்​​வே ஸ்டேஷனின் 'ஸ்​டேஷனில்' ​வைத்துவிட்டார்களாம்.

நீங்க ​கொடுத்து வச்சவங்க.. இழுத்து இழுத்து வி​ளையாண்டிருக்கீங்க!

//"வேணும்னு இழுக்கலை, கூட்டத்தில நிக்க முடியாம பேலன்சுக்கு புடிச்சேன் அது செயினா போச்சி"//
ரசித்​தேன்.

ஸ்ரீராம். said...

மொத்தமுமே உண்மை அனுபவமா, கற்பனை பாதியா தெரியவில்லை..ரசனையாக எழுதி இருக்கிறீர்கள்..."மறுபடி ஆரம்பத்திலிருந்தா...முடியாது சாமி..." ரசித்தேன். நல்ல வேளை... இரண்டு மாதம் முன்பு நான் குடும்பத்துடன் அதே ரெயிலில் சென்றபோது எனக்கு இந்த அனுபவம் ஏற்படவில்லை

சங்கர் said...

//மதார் said...
சத்தியமா முடியலைங்க . சிரிச்சுகிட்டே இருக்கேன் . என்ன கொடுமை இது//

நம்மூரு போற வண்டிலல்லாம் இந்த கொடுமை நடக்காது,

சங்கர் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஏலே பார்த்துல இப்ப எல்லாம் அதிகமா செயின புடிச்சு இழுத்தா குண்டர் சட்டத்துல போடுறாகலாம் //

நான் என்ன கூட வந்த பொண்ணுங்க செயினையா இழுத்தேன்

Chitra said...

ரொம்ப நாளாக, ஆளையே காணோம், ஷங்கர். அடிக்கடி வந்து உங்கள் "நகைச்சுவை" கதைகளை எடுத்து விடுங்க. நல்லா இருக்குங்க.

சங்கர் said...

// வானம்பாடிகள் said...
நேரம்டா. இதே சீட் நம்பரோட கன்ஃபர்ம்ட் டிக்கட் வெச்சிட்டு ஆளுங்க ஏறாம இருந்தாங்களேன்னு சாமி கும்பிடுறத விட்டுட்டு அலம்பல பாரு.//

அந்த கொடும வேற நடக்குமா, நல்லவேளை

சங்கர் said...

//சேட்டைக்காரன் said...
கலக்கல், கடுப்பான அனுபவத்தையும் கலகலப்பா சொல்லியிருக்கீங்க! :-))//

நன்றிங்க, என்னை விட நண்பர்கள் தான் ரொம்ப கடுப்பா இருந்தாங்க

சங்கர் said...

//பிரபாகர் said...
மறக்காம சதீஷுக்கு ஒரு தடவை செயின இழுக்க வாய்ப்பு கொடுங்க, அண்ணன் வேனும்னாலும் ஃபைன் கட்டறேன்//

வாங்கண்ணா, நாளைக்கே எலக்ட்ரிக் ட்ரைன்ல இழுக்க சொல்றேன் (ஆனா, அலாரம் மட்டும தான் அடிக்கும், வண்டி நிக்காது)

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
சதீசை அங்கேயே எதாவது பொண்ணுக் கழுத்துல இருக்குற செயினை இழுக்க சொல்ல வேண்டியதுதான தல....
//

கேஸ் மாறி போயிருக்கும் புலவரே:))))

சங்கர் said...

// ♠ ராஜு ♠ said...
தல..இதெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா..?
ஒரு தடவைக்கே இப்பிடின்னா,
நாங்கள்ளாம் இந்த ”சுகத்தை” வருஷாவருஷம் அனுபவிக்கிறோம்.//

நம்ம மாநில எல்லையை தாண்டிட்டாலே நிலைமை இதுதான்னு தெரியும், ஆனா, நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் வந்ததுக்கப்புறம் தான் தாங்க முடியல

சங்கர் said...

@ஜெகநாதன்

எனக்கும் நிறைய கேள்விகள் இருந்தது/இருக்கு, ஆனால், இரண்டு வயது குழந்தையோடு வந்த குடும்பத்துக்கு நேர்ந்த கதியும், அடம்பிடித்த மலையாள குண்டர்கள் சிலரும் தான் இழுத்து விளையாண்டதற்கு காரணம்

சங்கர் said...

// ஸ்ரீராம். said...

மொத்தமுமே உண்மை அனுபவமா, கற்பனை பாதியா தெரியவில்லை..ரசனையாக எழுதி இருக்கிறீர்கள்...//

முழுவதும் (உரையாடல்கள் உட்பட) நிஜம் தான், இன்னும் நிறைய இருக்கு, பதிவின் நீளமும், சபை நாகரிகமும் சேர்ந்து கத்திரி போட வேண்டியதாகி விட்டது

நன்றி

சங்கர் said...

@Chitra said...

யக்கா, இது கதையல்ல, நிஜம்

Unknown said...

கொடுமையான அனுபவமா இருக்கே..

தமிழ்நாடு தாண்டினா பல மாநிலங்கள்ல இதுதான் நிலைமைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

இப்போ அது மலையாளக்கரை வரைக்கும் வந்துடுச்சா??

ஒரு தடவை மதுரைல இருந்து பெங்களூருக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். விருதுநகர்லயே ஏற வேண்டிய நிலை. அதுனால விருதுநகர்ல இருந்து அன் ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிட்டு நின்னுட்டிருந்தேன்.

என் கூட டெய்லி பாஸில் பயணிக்கிற நிறைய பேர் இருந்தாங்க. அவங்க எல்லாம் ஒரு ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் ஏறுனாங்க. கேட்டா அந்த கம்பார்ட்மெண்ட் மதுரையில தான் ஃபில் ஆகும். அதுவரைக்கும் நாம போகலாம்னு சொன்னாங்க. நானும் அதே கோச்ல தான மதுரையில இருந்து நாம போகப் போறோம்னு ஏறிட்டேன். டி.டி.ஆர் வந்து என்னை மட்டும் திருமங்கலத்துல ஜெனரல் கம்பார்ட்மெண்டுக்குப் போகச் சொல்லிட்டார். கேட்டா அவங்க எல்லாம் பாஸ் வச்சிருக்காங்களாம், அவங்க வரலாமாம், நான் வரக்கூடாதாம். :((

Raghu said...

//நான் என்ன கூட வந்த பொண்ணுங்க செயினையா இழுத்தேன்//

ஓ, அந்த‌ ஆசை வேற‌ இருக்கா?..;)

Paleo God said...

:)

சாமியேய்ய்ய்ய்ய்ன்னு ரெண்டு கிலோ கற்பூரம் ஏத்தி கம்பார்ட்மெண்ட் பூரா காமிச்சிருந்தா ஒரு பயலும் உக்கார்ந்து இருக்க மாட்டான்.

--

கரப்பான் பூச்சி மொய்க்கலையேன்னு சந்தோஷப்படுங்கப்பு.

துபாய் ராஜா said...

கலக்கல் நடையில் காட்சிகள் கண்முன்..

சங்கர் said...

// முகிலன் said...

கொடுமையான அனுபவமா இருக்கே..

தமிழ்நாடு தாண்டினா பல மாநிலங்கள்ல இதுதான் நிலைமைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.//

அதுதான் எனக்கும் ஆச்சரியம்,

பெரிய வருத்தம் என்னன்னா, முதல்ல அடம்பிடிச்ச அந்த மலையாள குண்டர் எர்ணகுளம் வரை எழுந்திருக்கவே இல்லை

சங்கர் said...

// ர‌கு said...
ஓ, அந்த‌ ஆசை வேற‌ இருக்கா?..;)//

சாமி சரணம்

சங்கர் said...

//【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

சாமியேய்ய்ய்ய்ய்ன்னு ரெண்டு கிலோ கற்பூரம் ஏத்தி கம்பார்ட்மெண்ட் பூரா காமிச்சிருந்தா ஒரு பயலும் உக்கார்ந்து இருக்க மாட்டான்.//

அவனுக கொளுத்திருவானுகளோன்னு பயந்துக்கிட்டே பயணம் பண்ணின கதைய சொன்னா, நாங்களே கொளுத்திகிறதுக்கு ஐடியா சொல்றீங்களே

சங்கர் said...

// துபாய் ராஜா said...

கலக்கல் நடையில் காட்சிகள் கண்முன்..//

நன்றிண்ணா

CS. Mohan Kumar said...

ஆச்சரியம்.. ஒரு பெரிய பதிவு.. Welcome back சங்கர்

Vetirmagal said...

//"டேய் சதிஷு, ஏன்டா எதுவுமே பேசாம வர்ற?"
"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"
"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"//

அடுத்த வருசத்துக்கு முன்னே ரயிலவே 'புதிய எலக்ட்ரானிக் முறையில் ரயிலை நிறுத்த ' யோசிப்பதாக கேள்வி. ;-))

நகைச்சுவை பதிவு. ஆனாலும் டென்ஷன் பயணம்!

நன்றி.

கிணற்று தவளை said...

ennalla mudialla,sirichu sirichu kanla tani varudapa...
sema comedy....
i like this very much...
:)