" டேய் ஒரு டாஸ்மாக்ல ஜில் பீர் இல்லனா அஞ்சு டாஸ்மாக்ல
தேடி பார்க்குறோம்,அங்கயும் இல்லனா பாருக்கு போய் குடிக்குறோம்
அது மாதிரி தான்டா வாழ்க்கையும் புதுசா புதுசா தேடனும் அப்பதான் வாழ்க்கை புதுசா இருக்கும்....."
இந்த மாதிரி தாங்க நம்ம சூர்யாவும் சிங்கம் படத்தில் கேப் விடாம வசனம் பேசுறார். சிங்கம் சூர்யாக்கும் வேல் சூர்யாக்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஒண்ணு மீசை இன்னொன்னு போலீஸ் டிரஸ். மற்றபடி வேலில் பார்த்த சூர்யாவை பார்த்த மாதிரி தான் இருந்தது...
(மேலே உள்ள படத்துக்கும் விமர்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...அது ரசிகர் மன்ற பேனர்....)
சென்னையில் பெரிய தாதாவாக பிரகாஷ்ராஜ் ஆள்கடத்தல்,
மற்றும் புதிதாய் பில்டிங் கட்டுபவர்களை மிரட்டி பணம் பறிப்பது
தான் வேலை. தூத்துக்குடி நல்லூரில் நம்ம சூர்யா எஸ்.ஐ.
அவரின் சொந்த ஊர் அது. பிரகாஷ்ராஜ் சென்னையில் நடக்கும்
ஒரு கேஸ் நிபந்தனை ஜாமீன் விஷயமாக நல்லூரில் வந்து
கையெழுத்து போட வேண்டுமாம். அங்கே சூர்யாவுக்கும்
பிரகாஸ்ராஜ்க்கும் மோதல் ஸ்டார்ட் ஆகிறது. உடனே பிரகாஷ்
தன் பவர் மூலம் சூர்யாவை தன் கோட்டையான சென்னைக்கு
மாற்றுகிறார்.....பின்பு என்ன என்பதே கதை திரைக்கதை அனைத்துமே..
சிங்கம் படம் ட்ரைலர் டி.வி.யில் பார்த்தவுடன் மற்றும் ரேடியோவில்
கேட்டவுடன் முடிவுபண்ணிவிட்டேன்....அது படத்துக்கு போகும் போது
மெடிக்கல் கடையில ரெண்டு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிட்டு போனும்
என்பது தான். டி.வி.யில் பார்க்கும் போதே காது ஜவ்வு கொஞ்சம்
லைட்டா கிழிஞ்ச மாதிரி தான் இருந்தது......
அனுஷ்கா பத்தி கண்டிப்பா சொல்லணும்ங்க...சும்மா பிச்சு உதறாங்க..
அதுவும் அவங்க வசனம் ஒண்ணும் ஒண்ணும் செம...அதே போல்
தந்தை நாசரிடம் லைசன்ஸ் காமெடி சூப்பர்.....
சாம்பிள்:
அனுஷ்கா தங்கச்சி : சிங்கம் உன்னை பார்த்து ஜொள்ளு விடுறாரா??
அனுஷ்கா : நாம jewel காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணோம்
அதனால ஜொள்ளு விடுறாரு...
அது மட்டும் இல்லாமல் சூர்யா சென்னை வந்தவுடன் தான்
ராஜினாமா செய்து ஊருக்கு போக போவதாக கூறும் போது
பள்ளமான பீச் மணலில் நின்று கொண்டு சூர்யா கிட்ட ஒரு
அஞ்சு நிமிஷம் மொக்கை போடுவாங்க பாருங்க...அதில் இருந்து
சூர்யா வில்லன்களை வேட்டையாட கிளம்பி விடுவார்....
காமெடிக்கு விவேக் இருந்தாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்... அதுக்கு அனுஷ்கா பண்ற காமெடியே நன்றாக இருந்தது. பிரகாஷ் ராஜ் வழக்கமா வர்ற வில்லன் தான் கில்லி படத்தில் பார்த்த மாதிரி இருந்தது... ஆனா எல்லோருக்கும் சரி சமமா வசனத்தை பிரிச்சு கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி. குறிப்பா பிரகாஷ்ராஜ் பேசுற அந்த "கோழி முட்டை போடும் போது தான் எடுக்கணும்...அதுக்கு முன்னாடியே @$@$# நொண்டினா
கோழி செத்துடும்".
சூர்யா செம மாஸ் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் என் பயமெல்லாம் எங்கே இவரும் கூடிய விரைவில் விஜய்,விஷால் லிஸ்ட்இல் சேர்ந்து விடுவரோ என்பது தான். சூர்யா சிங்கம் தான் ஒத்துக்குறோம் அதுக்காக பறந்து அடிக்கும் போது சிங்கத்தை காட்டுவது, சிங்கம் போல் பிராண்டுவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.அதே போல் கோபம் வந்தால் கையில் நெருப்பு ஏறுவது( நெருப்பு தானே அது இல்லைனா சிங்கம் கலரா ???)
ப்ரியன் ஒளிப்பதிவு பற்றி சொல்லவே வேண்டாம், பக்கா.
ஒண்ணு ரெண்டு பாட்டு தான் கொஞ்சம் நல்லா இருந்தது.
படம் முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா போச்சு,ரெண்டாவது
பாதியும் வேகமா தான் போச்சு ஆனா எனக்கு கிளைமாக்ஸ்ல
கண்ணு சொருக ஆரம்பிச்சுருச்சு....அப்புறம் பல யூகிக்க முடிந்த
திருப்பங்கள் என்றாலும் ஓகே.சராசரி மசாலா படம் கொஞ்சம்
கண் எரிச்சல்.ஆனா நான் ஹரி கிட்ட இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தேன்..
சிங்கம் - ஜொலிக்கும் கவரிங் தங்கம்!!
தியேட்டர் நொறுக்ஸ் :
# நான் பார்த்த தியேட்டரில் சூர்யாவை விட அனுஷ்காக்கு அதிக
கைதட்டும் விசிலும்....
# படம் ஆரம்பிச்சுவுடன் முதல் பைட் எல்லாம் கொஞ்சம் ஓவர்ஆக
இருந்தது மற்றும் முதல் பாட்டு "நானே இந்திரன்" பத்தி சொல்லவே
வேணாம்.... பாட்டு பாதியில் ஓடி கொண்டிருக்கும் போதே கரண்ட்
கட் ஆகி போச்சு.... உடனே தியேட்டரில் நம்ம ஆளுங்க ஆள்
ஆளுக்கு கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....
* "அஞ்சு நிமிஷம் லைட் ஆப் பண்ணுவோம் வெளியே போறவங்க
போலாம்...."
* விஜய் ரசிகர்: "சுறா இன்ட்ரோ பாட்டே நல்லா இருக்கும்டா..
சுறா படத்தை போடுங்க..." என்று கத்தினார்..
கூட வந்த அவர் நண்பர்கள் "அய்யோயோ...சுறாவா"...
# jewel காணாம போச்சுன்னு சூர்யா வீட்டுக்கு அனுஷ்கா கம்ப்ளைன்ட்
பண்ண வருவாங்க....அப்போ அனுஷ்கா உயரத்துக்கு சூர்யா சரிசமமா நின்னுட்டு இருப்பார்....இதை பார்த்த முன்இருக்கை நண்பர்
" எங்கே சூர்யா உன் காலை காட்டு.." என்று கத்தினார்.
# "காதல் வந்தாலே பாட்டு ஆரம்பிக்கும் போது பின்இருக்கை
நபர் டைமிங்காக "வாடா மாப்பிள்ள..." என்று பாடியது தியேட்டரில்
அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
# அனுஷ்காவும் சூர்யாவும் கொஞ்ச நேரம் பேசினாலே இங்கே நம்ம
ஆளுங்க "சரி சரி டிரஸ் மாத்திக்கிட்டு பாட்டு போட்டு ஆடுங்க..." என்று நக்கல் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்.......
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
ஓட்டை குத்தவும்....