Tuesday, January 18, 2011

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

போன வருஷம் இந்நேரம் பொங்கல் பட ரீலீஸ்ல எந்த படம் டாப்னு
பதிவு போட்டிருந்தேன். ஆனா இந்த வருஷ பொங்கலுக்கு ஒரு படம்
தான் பார்த்தேன் ஆடுகளம் தான் அது. சிறுத்தை தான் மிஸ் ஆயிருச்சு.
ஆடுகளம் படம் சூப்பர் தான். என்ன ரெண்டாவது பாதி தான் கொஞ்சம்
போர் ஆச்சு... துரோகம், விசுவாசம்னு நல்லா இருந்தது. அந்த போலீஸ்
கேரக்டர் தான் வில்லன்னு நினைச்சேன் ஆனா இன்டெர்வல்க்கு அப்புறம்
மாறிடுச்சு. இந்த படத்திலும் கிஷோர் கேரக்டர் எனக்கு பிடிச்சு இருந்தது.
கிஷோர் குரலே நல்லா தானே இருக்கும் ஏன் சமுத்ரகனி குரல் கொடுத்தார்னு தெரியல....!!




பொங்கல்க்கு முன்னாடி ஒரு நாலு நாள் ஊருக்க போயிட்டு வந்தேன்...
உடன்குடி பக்கத்தில் இருக்கிற தண்டுபத்து தான் சொந்த ஊரு. அப்புறம்
அப்படியே உவரி தாண்டி சாமிதோப்பு அப்புறம் கன்னியாகுமரினு ஒரு
ரவுண்ட் அடிச்சுட்டு வந்தேன்...



மாட்டு பொங்கலுக்கு queensland போனோம். மொத்தம் இருபது பேர்க்கு
மேல இருந்தோம். செம கூட்டம். 350 கொடுத்து மூணு ரைட் தான் போனோம்.
ஒரு ஒரு ரைட்க்கும் ரெண்டு மணி நேரம் மேல காக்க வேண்டியது இருந்தது.பஞ்சு மிட்டாய் வாங்க கூட அரை மணி நேரம் ஆச்சுனா பாருங்க...
எங்க வீட்டம்மா centrox அப்படின்னு ஒரு ரைட் சூப்பர்ஆ இருக்கும்னு
சொன்னாங்க. பெரிய லைன்ல நின்னு அதை பார்த்தாலே தலை சுத்திச்சு..
இருந்தாலும் ஒரு கெத்தோட போனேன்... போய்ட்டு வந்த பிறகு ஒரு அரை
மணி நேரம் செம தலை சுத்தல்...




ஒகேனக்கல் ப்ளான் தீடிர்னு அன்னைக்கு தான் பிக்ஸ் பண்ணோம்...
காலையில் சாரி நைட் மூணு மணிக்கு எழுந்துரிச்சு நாலு மணிக்கு
கிளம்பினோம். நாங்க, அக்கா ,அண்ணா , மச்சான் , குட்டீஸ் மொத்தம்
மூணு கார்ல போனோம்.நான் என் காரை கிருஷ்ணகிரி வரைக்கும்
ஓட்டினேன் அப்புறம் எங்க அண்ணன் ஒகேனக்கல் வரைக்கும் ஓட்டினார்.
பத்து மணிக்கு சேர்ந்தோம்.


அங்கே போன பிறகு பரிசல்க்கு பேசி ரவுண்ட் அடித்தோம்..ஒரு இடத்தில்
குளிக்க நிறுத்தினார்கள். மணல் தீவு என்ற இடம் இப்போது தண்ணியில்
இருப்பதாக பரிசல்காரர் தெரிவித்தார். இந்த இடம் நான் ஒண்டிக்கட்டையா
இருக்கும் போது தெரியாம போச்சேனு பீல் பண்ணேன்...அப்புறம் காசு
கொடுத்து அடி வாங்கினோம் அட அதாங்க மசாஜ்னு சொல்வாங்களே
அது தான். என்னா அடி ஒரு ஒரு அடியும் இடி மாதிரி ல இருந்தது...
வீட்ல பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு அந்த கோவத்தை எங்க
மேல காட்டிடாரோனு பீல் பண்ணேன்.அப்புறம் அங்கே பரிசல்லயே கடைகள் இருக்கு...எல்லாமே அங்கையே கிடைக்கும் கொஞ்சம் விலை அதிகமா...



3.30 க்கு சென்னைக்கு கிளம்ப தயாரானோம். நாங்க ஒகேனக்கல்ல சாப்பிடல..
நேரா 6.30 ஆம்பூர் வந்து ஸ்டார் பிரியாணியில் சாப்பிட்டோம்...மசாலாலாம்
அரைச்சு போட்டிருந்தாங்க...நல்லாவே இருந்தது. குடும்பத்தோட சூப்பர்
ட்ரிப் போயிட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்....



ஜெட்லி... (சரவணா...)