வாங்க பொங்குவோம்...!!
என் அன்பான வலையுலக நண்பர்களே, புதுசா வலையுலகில் வந்த சில நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு உதவியா இருக்க வாய்ப்பிருக்கு....
சில மாதங்களாக ப்ளாக் படித்து வரும் என் நண்பன் பல பேர்
பொங்குவதை பார்த்து நீ எப்ப மச்சி பொங்க போறேன்னு கேட்டான்.
அதனால நாமும் பொங்குவோம் என்று முடிவெடுத்து...இதோ உங்கள்
பார்வைக்கு ...
ஹாசினி பேசும் படம்...
தெரியதனாமா ஹாசினி விமர்சனம் பண்ற பேசும் படத்தை ஜெயா டி.வி.யில்
முடியும் போது பார்த்து விட்டேன்...எப்பா நம்மளை விட படத்தை இப்படி
கிழி கிழினு கிழிகிறாங்க....நான் பார்த்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின்
விமர்சனத்தை. இப்படியெல்லாம் கூட விமர்சனம் பண்ணலாமானு என்னை
யோசிக்க வச்சிட்டிங்கா மக்கா....அதனால தான் விமர்சனத்துக்கே விமர்சனம்.
உதாரணம் : படத்தில் ஆர்யா நயன்தாராவை சூப்பர் பிகர்னு சொல்றது
உலக மகா தப்பாம்... தனிப்பட்ட முறையில் சொல்ற மாதிரி இருக்குதாம்...
இனிமே இப்படி யாரும் படம் எடுக்க கூடாதாம்..இயக்குனரும் வசனகர்த்தாவும் திருந்தனுமாம்...அது மட்டும் இல்லாம படம் பார்க்கிற நாமும் திருந்தனுமாம்!! இதில என்ன காமெடினா இவங்க தான் பூனைக்கு மணி கட்டுரங்கலாம் அதை அவங்களே சொல்லிக்கிறாங்க.... நல்லா கட்ராங்கையா மணி...!!
இதோ அந்த வீடியோ...
இதுக்கு மேலையும் பொங்கலைனா எப்படி... இவங்க நியாய தராசுனு சொல்லி அடிக்கிற கூத்து இருக்கே செம காமெடி...நம்ம வெகு ஜன மக்கள் ரசித்த அனைத்தையும் மொக்கை என்று கூறுவதை என்னவென்று சொல்வது.
சுஹாசினி ராவணன் படத்தின் வசனகர்த்தா என்று நினைக்கிறேன்...
அந்த படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் துக்கத்தையும் பாஸ்
படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் சந்தோசத்தையும் பார்த்த
காரணத்தால் நானும் பொங்க உரிமை இருக்கு என்று இங்கே சொல்லி
கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்....
படம் பார்த்து ரசிச்சவங்க எல்லாம் முட்டாள் நான் தான் அறிவாளினு
சுஹாசினி மேடம் சொல்ற மாதிரி இருக்குது. அப்புறம் இந்தம்மா வசனம்
பேசிக்கிட்டே இருக்காங்க அதையெல்லாம் கம்மி பண்ணனும்னு சொல்லி
இருக்காங்க... எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் போல இருக்கு அது
இது தான் "எப்படி உங்க படத்தில் வசனம் காதுல விழாம இருந்ததே
அது மாதிரியா.."னு கேட்கணும். நல்ல வேளை சந்தானத்தை மட்டும்
விட்டு வச்சாங்க....ஓர்குட் நண்பர் குமரன் கிட்ட இதை பத்தி நான்
சாட்டில் கேட்ட போது அவர் "ஒரு வேளை உதயநிதி ஸ்டாலின் படம்
என்பதால் இப்படி சொல்றாங்க போல" என்றார்... இருக்கலாம் யாருக்கு
தெரியும்.
பாஸ் படம் ஒரு டைம் பாஸ் படம் நோ லாஜிக் அப்படின்னு சின்ன
குழந்தைய கேட்டா கூட சொல்லிடும் ஆனா அது சுகாசினி மேடத்துக்கு
தெரியாம போச்சு..ஏதோ சீரியஸ்ஆன படத்துக்கு சொல்ற மாதிரி செம
காமெடி பண்ணி இருக்காங்க சுஹாசினி மேடம்.ஒரு வேளை பாஸ் படம் ராவணன்வோட நல்ல ஒடரதுனால வயிதெரிச்சல்ஆ இருக்குமோ??
மொதல்ல இவங்க உலக படம் எடுக்கறதை நிறுத்திட்டு நல்ல தமிழ் படம்
எடுத்தா என்னை மாதிரி பாமரனுக்கு வசதியா இருக்கும் அதாவது படத்தை புரிஞ்சிக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன். எனக்கு
இதுவரைக்கும் ராவணன் படத்தில் விக்ரம் கேரக்டர் சத்தியமா புரியலைங்க...
அப்புறம் இன்னொரு காமெடி வேற சொல்லிகிறாங்க...அந்த மாமா
மாமா உன் பொண்ண கொடு மாமா பாட்டில் ஏன் மாமா வந்தார்?னு
அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டு இருக்காங்க...மாமா பாட்டில் மாமா
வராமா ஆயாவா வருவாங்க... என்ன கொடுமை கேள்வி இது..,,,
ஆக மொத்தத்தில் எனக்கு டி.வியை உடைக்கணும் போல் இருந்தது...
ஆனா உடைக்கல ஏன்னா அது கலைஞர் கொடுத்த டி.வி.இல்ல...
இன்னும் நிறைய விஷயத்துக்கு பொங்கணும் நண்பர்களே...
* ஜெனீலியா அவர்கள் டி.வி பேக் விளம்பரத்தில் ஒரு ஜட்டி போட்டு
கிஸ் அடிக்கும் போது அவர் பேக் மூலம் ரூம் கேமராவை மறைக்கிறார்...
இந்த விளம்பரத்தால் நம்ம சமூகம் சீரழிந்து போகும்...இந்த மாதிரி எல்லாரும் பண்ணா scandal videos என்பதே இல்லாம போய் விடும் வாய்ப்பு இருக்கிறது...
அதனால் எல்லாரும் பொங்குங்க...!!
http://www.youtube.com/watch?v=uQTLpeQ28XQ
* முந்தாநேத்து மெஸ்இல் சாப்பிடும் போதும் இட்லிக்கு கெட்டி சட்னி
இல்லன்னு சொல்லிட்டான்...அதனால கெட்டி சட்னி தராத அந்த பையனுக்கு
எதிரா கண்டிப்பா பொங்கியே ஆகணும்..
*எந்திரன் படத்துக்கு என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு சத்யம்,
எஸ்கேப், அபிராமி போன்ற தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட்
கிடைக்குமா...?? கண்டிப்பா கிடைக்காது அனைத்து பண்பலை
அலைவரிசையும் மொத்தமா டிக்கெட் வாங்கி ஒரு ஈத்து போன
கேள்வியை கேட்டு அது மூலமா ஒரு அமௌன்ட் சம்பாதிச்சு
டிக்கெட்டை கொடுப்பாங்க.... ஹ்ம்...நான் அதே தியாகராஜாவில்
டிக்கெட் எடுத்து போலீஸ் கிட்ட அடியும் வாங்கி தான் படத்துக்கு
போகணும்னு போல..... இதுக்காக யாராவது பொங்குங்க மக்கா...
இது மாதிரி பொங்கரதுக்கு உங்களுக்கு டிப்ஸ் தர நான் ரெடி...
சும்மா ஜாலியா பொங்குங்க...
ஜெட்லி...(சரவணா)