Wednesday, April 22, 2009

பள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.

எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓட்டுனர் இன்று ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டார், எதற்கு என்று நான் கேட்டதற்கு நாலாம் வகுப்பு படிக்கும் அவரது பெண் குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் கட்ட வேண்டும் என்றார். என்னடா இது விடுமுறை நேரத்தில் என்ன அது என்று நான் கேட்கவே ஒரு அணு குண்டையே தூக்கி போட்டார், அந்த குழந்தை ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அவளை அடுத்த வகுப்புக்கு அனுப்ப அந்த ஆசிரியை மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார் என்றும் கூறினார்!!!!!!!!!!!!!!!!!!! முதலில் இவரை கூப்பிட்டு உங்கள் பெண் ஒழுங்காக படிப்பதில்லை அதனால் அவள் பாஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் பள்ளியை விட்டே அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அவர் ஏதாவது பெரிய மனசு பண்ணுங்க பாவம் சின்ன பொண்ணு என்று கூறவே அவர் பெரிய மனசை காட்டிவிட்டார் போலும். இத்தனைக்கும் அந்த சிறுமி எனக்கு நன்றாக தெரியும், நல்ல சுட்டிப் பெண் நன்கு படிக்கவும் செய்வாள். ஆனால் அவளை அடிக்கடி நாடகம், விளையாட்டு என்று அனுப்பியுள்ளார் இதே ஆசிரியை, எனக்கென்னவோ அவர் அனைத்தையும் திட்டமிட்டே செய்துள்ளார் என்று தெரிகிறது. பிறகு அவர் தன் நிலைமையை எடுத்து கூறி தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார் பிறகு அரசியல் வாதிகள் குதிரை பேரம் பேசுவது போல் பேசி இறுதியாக ஆயிரத்துக்கு முடிவாகியுள்ளது. இதில் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல் என்னவென்றால் இதே ஆசிரியை டியூஷன் வந்து சேறு என்று அடிக்கடி கூறியுள்ளார் அந்த சிறுமியிடம், அவர்கள் அனுப்பாததால் தன் கைவரிசையை காடியுள்ளார்.

ஏற்கனவே இந்த பீஸ் அந்த பீஸ் என்று நம் பாகெட்டை காலி செய்து பிறகு பான்டையும் கலட்டி விடுகின்றனர் இதில் இப்படி நூதன முறையில் வேறு திருட்டு நடக்கிறது. இவர்களுக்கு வசதியாக நம் அரசாங்கம் இதில் நாங்கள் தலையிட இயலாது என்று கூறி விட்டது, பிறகு இவர்கள் ஆட்டத்தை பற்றி கேட்க வேண்டுமா என்ன?? அந்த பள்ளி ஒரு மந்திரியுடையது என்று கடைசியாக அவர் கூறினார், இப்பொழுது புரிகிறதா எங்கிருந்து இந்த பழக்கமும் தைரியமும் வந்தது என்று?? இந்த பொழப்புக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாமே. அரசாங்கத்தாலேயே செய்ய முடியாத ஒன்றை நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும்?? இப்படி வெட்டியாக ஒரு பதிவு எழுதலாம், பிறகு வாயையும் இன்ன பிற இடங்களையும் மூடிக் கொண்டு அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டியது தான். 

1 comment:

On7June said...

This was really a nice article and an eyeopener for several people. Something has to be done from our side to eradicate these.