Friday, April 17, 2009

நானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்


சினிமா, இந்த மூன்றுஎழுத்து மந்திர சொல் நம் அனைவரது வாழ்விலும் நீங்காத ஒரு இடம் உண்டு. நமக்கான ஒரு பொழுதுபோக்குஆக இல்லாமல் சில படங்கள் நல்ல கருத்தையும் சொல்வதுண்டு. எந்த ஒரு விசயம்னாலும் அதற்கு எதிர்வினையும் உண்டு ஏன் என்றால் திரைப்படங்களை பார்த்து வன்முறையில் ஈடுபடுவோரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை சினிமாவை விட சிறந்த பொழுதுபோக்கு எதுவுமில்லை,முக்கியமா ஒரு விஷயம் அது நாம எந்த படத்துக்கு போறம்னு அத பொறுத்து இருக்கு,இல்லன தலைவலி தான்.

என்னோட சில நண்பர்களிடம் அருந்ததி படம் பார்த்ததாக கூறினேன் நண்பர்களில் பாதி பேர் "ஏன்டா அந்த படத்துக்கு போன" என்று என்னை எதிர் கேள்வி கேட்டார்கள் "நீ இன்னும் படத்துக்கு போறதா உடலையானு" கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நாம டைம்பாஸ்க்கு படத்துக்கு போறோம் எதுக்கு அதை போய் அவர்களிடம் சொல்லி ,ஒரு வேலை நம்ம ஊருல ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படம் மட்டும் தான் பார்க்கணும் போலன்னு நினைத்தேன். அருந்ததி படம் ஓரளவுக்கு சில காட்சிகள் மொக்கையாக இருந்தது தான் ஒத்துக்குறேன் ஆனா அந்த மாதிரி ஒரு படம் தமிழில் வந்ததில்லை அதை டப் செய்து தமிழுக்கு வரும் பொது அதை பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.

நான் பி.சி.ஏ. படிக்கும் பொது நேரிய மொக்க படம் பார்த்து இருக்கேன் அதை எல்லாம் வெளிய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கும். சில படங்கள் பாட்டுகாக சில படங்கள் கேமராகாக சில படங்கள் நடிகர்களுக்காக ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றம். "சூரி"நு ஒரு படம் விக்னேஷ்,பார்த்திபன் நடிச்சது டைரக்டர் வந்து ஷங்கர் உதவியாளர், அப்புறம் படத்துல ஒரு பெண்களுக்கு எதிர ஒரு பாட்டு. கண்டிப்பா இந்த படம் பாக்கனும்னு நான் முடிவு பண்ணினேன், வூட்லண்ட்ஸ் திரைஅரங்கில் படம் ரிலீஸ் ரிசர்வ் செய்தோமா என்று நினைவில் இல்லை. இதெல்ல வேற என் நண்பர்கள் சிலர் மருகம்மால் படத்துக்கு வந்தனர் படம் பாத்து நொந்தனர். சூரி மாதிரி பல படங்களை நான் நம்பி பாத்துஉள்ளேன். சரி நான் பார்ப்பது இந்த மாதிரி மொக்கை படம் மட்டும் தான? இல்லை நானும் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை முதல் நாள் பார்ப்பேன். ஏன் ரஜினி கமல் விஜய் அஜித்(ஐயோ) போன்றவர்கள் மொக்கை படத்தை நமக்கு தந்தது இல்லையா? பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் , குசேலன், குருவி, வில்லு. அஜித் படத்த பத்தி சொல்லவே வேணாம். ஆனா இப்பவும் நல்ல தரமான படங்கள் வந்து கொண்டு இருக்கிறது வெண்ணிலா கபடி, பொம்மலாட்டம்(இது நேரடி படமாக இருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்கும்), யாவரும் நலம், நான் கடவுள் போன்று நேரிய படங்கள் வருகின்றன.

எதுக்காக இதெல்லாம் சொல்லி நான் மொக்கை போட்றன்னு நீங்க கேக்கலாம். நான் முடிஞ்ச வரைக்கும் படம் ரிலீஸ் ஆனா ஒரு வாரத்துக்குள் பார்த்து விடுவேன் ஏன் என்றால் படம் பார்ப்பது எனக்கு பிடிக்கும் அதுக்குன்னு மொக்கைநு தெரிஞ்ச நான் போகமாட்டேன். எப்படி அடுத்தவர்கள் கிரிக்கெட் மேட்ச் தொலைகாட்சியில் கண்டு ரசிபார்கோல அது போல் நான் சினிமாவை பார்த்து ரசிக்கிறேன். நான் சினிமா பார்ப்பதை குறை கூறுபவர்களுக்கு (நண்பர்கள், என் வீட்டில் உள்ளவர்கள் ) ஒன்றை மட்டும் சொல்ல ஆசை படுகிறேன் " சினிமா என் முக்கியமான பொழுதுபோக்கு, நான் சினிமா பார்பதனால் யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லை. மொக்கை படம் பார்க்கிறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு".





2 comments:

Sri said...

machi romba correcta sonna....namakku enna pidikkumo adhai seyyarathula thappe illa....
naanum arundhathi paarthen. nalla padam thaan adhu..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்