Tuesday, September 1, 2009

சென்னை டூ ஆத்தூர்

சென்னை டூ ஆத்தூர் - பயண குறிப்பு

ஆஸ்திரேலியா நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்
அவர்களின் அண்ணன் திருமணத்திற்கு வழக்கம் போல்
ஒரு நாள் முன்னாடியே சென்றோம்.பத்து பேர் போவதாக
இருந்த பயணம் நாள் நெருங்க நெருங்க நாலு பேர் ஆனது
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் எனக்கு எதிர்பாராத
அதிர்ச்சி கந்தசாமி படத்தை இரண்டாவது தடவை என்னை

கட்டாயப்படுத்தி பார்க்க வைத்தார்கள்.

ஆல் இன் ஆல் என்று அன்புடன் அழைக்கப்படும் அருணாசலம்
அவர்கள் என்னை இந்த படத்திற்கு கண்டிப்பாக வந்து ஆக வேண்டும் என்று என்னை இழுத்து கொண்டு போய் விட்டார்.
(காரணம்: இந்த படம் மட்டும் தான் லேட் ஆக முடியும் ,
அப்புறம் கிளம்பினால், காலையில் ஆறு மணிக்கு தலைவாசல் சேர கரெக்ட் ஆக இருக்கும் என்பது தான்
)

"மச்சி நீங்க படம் பார்த்துட்டு வாங்க, நான் தியேட்டர்
வெளியில் படுத்துக்கிறேன்" என்று நான் கூறினாலும்
நண்பர்கள் கேட்பதாக இல்லை. ஆல் இன் ஆல் கூறிய
இன்னொரு காரணம் ஸ்ரேயாக்குகாக பத்து வாட்டி கூட பார்க்கலாம் என்றார்.


அருமை நண்பர் ஜீத் அவர்கள் வழக்கம் போல் ஒரு சரம் சூப்பர் பாக்கை வாங்கி ஸ்டாக் செய்து கொண்டார். அன்பு நண்பர் கார்த்தி

முக்கா பாண்ட் போட்டு கொண்டு வந்து சேர்ந்தார், கார்த்தி
தடவை கந்தசாமி படம் பார்ப்பதால் அமைதியாக படம் பார்த்து ரசித்தார்.
எனக்கு முதல் பாடல் வந்த உடன் உச்சா செல்ல எழுந்து
நடந்தேன், என் செருப்பு வழுக்கியது. ஜீத்தை அப்போது தான்

கவனித்தேன் பின்பு தான் புரிந்தது செருப்பு வழுக்கியதற்கு
காரணம் ஜீத்தின் வாய்ஜாலம் என்று.

மெலடி தியேட்டரில் ஒட்டப்பட்ட ஒரு ஸ்டிலில் சந்தானம்
விக்ரம் உடன் நின்று கொண்டு இருப்பது போல் விளம்பரம்
இருந்தது, அப்பதான் நினைத்தேன் சந்தானம் இருந்திருந்தால்
படம் ஓரளவுக்கு நல்லா இருந்துருக்குமே என்று....




படம் இனிதே 1.15 மணிக்கு முடிந்தது, ஆல் இன் ஆல் அவர்கள்
கார் ஓட்ட நாங்கள் மூவரும் ஏறி அமர்ந்து அடுத்து வண்டி நின்ற
இடம் திண்டிவனம் ஹை வேய்ஸ் இல் உள்ள கடையில் தான்.
ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டு கிளம்பினோம்.

காலையில் 6.45 மணிக்கெல்லாம் தலைவாசல் வந்து விட்டோம்.
எங்களை வரவேற்க ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா காத்து கொண்டு
இருந்தார். பாலா அவர்களின் வாயில் தமிழை விட ஆங்கிலம்
தான் அதிகமாக விளையாடியது.சும்மா ஒரு


கார்த்தி: எங்க மச்சான் உங்க வீடு இருக்கு?


பாலா: இங்க இருந்து ஒரு two minutes தான் மச்சி...

பாலா வீட்டுக்கு போனவுடன் டீ கொடுத்தார்கள், நண்பர் கார்த்தி
அவர்களின் வாய் புண்ணாகி போனதால் அவர் tender cocanut தான்
தனக்கு வேண்டும் என்று பாலாவின் பண்ணையில் உள்ள மரத்தில்
இருந்து ரெண்டு மூன்று இளநீரை அடித்து தாக்கினார்.
அருணாச்சலத்தின் காரை விடிந்த உடன் பார்த்த போது ஜீத் உட்கார்ந்த சைடு வெள்ளை காரின் நிறம் சிகப்பாய் போனது அதற்கு
காரணம் சூப்பர்.


அப்புறம் ஏற்கனவே புக் செய்துள்ள லாட்ஜ்க்கு பாலா அவர்கள்
அழைத்து போனார் அந்த லாட்ஜ் ஆத்தூரில் உள்ளது. அங்கு
பாலாவின் உறவினர் கார்த்தி அவர்கள் எங்களுக்கு தங்க
உதவிகளை செய்து கொடுத்தார்.

காரில் செல்லும் போது வழியில் பஸ்கள் நின்று இருப்பதை
பார்த்து பாலா அவர்கள் "எப்படி டா இங்க இருக்கீங்க பிளடி
இண்டியா" என்றார். "நீ எப்படி 21 வயசு வரைக்கும் இங்க
இருந்தியோ அதே மாதிரி தான் மச்சி இருக்கோம்" என்றேன் நான்.
இன்னும் ஊர்களில் இரண்டு மணி நேரம் மின்சார நிறுத்தம்
அமலில் இருப்பது அன்று தான் எங்களுக்கு தெரிந்தது.

*****************************************

மதியம் நண்பர் கார்த்தி அவர்கள் சீட்டு கட்டு விளையாட அழைத்தார்.எனக்கு தூக்கம் வருது அப்புறம் விளையாடலாம்
என்றேன் அவர் கேக்காமல் "i want to see , who is the ass?"
என்றவாறு சீட்டை குலுக்கி போட்டார்.இந்த ஆங்கிலம்
எல்லாம் பாலாவை பார்த்த உடன் கார்த்தியையும் தொத்தி கொண்டது என்று எண்ண வேண்டாம். முதல் ass விளையாட்டில்
கார்த்தி தான் தோத்தார் அதற்கு அப்புறம் வாயையும் அதையும்
பொத்தி கொண்டு விளையாடினார்.ஒரு சமயத்தில் கார்த்தி
அவர்கள் நாலு ass களையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

ரம்மி விளையாட்டில் தான் கில்லி என்று கார்த்தி நிரூபித்தார்,
கார்த்திக்கு மட்டும் பாயிண்ட் ஏற வில்லை. ஜீத் அவர்கள்
மூணு 80 தொடர்ந்து கைப்பற்றி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

***********************************************

நைட் பொறித்த மீன் மற்றும் பொறித்த வேகாத சிக்கன் கால் தூண்டு போன்றவற்றை வாங்கி எங்களின் அன்றைய பொழுதை
முடித்தோம். காலையில் 4.30 மணிக்கே மூகூர்த்தம் என்பதால்
நாங்கள் மூணு மணிக்கே எழுந்து குளித்து கோவிலுக்கு கிளம்பி
விட்டோம்.

கோவிலில் அனைவரும் பொண்ணும் மாப்பிளையும் போட்டோ
எடுத்து கொண்டு இருந்தனர். பாலா அவர்கள் தன்னை போட்டோ
எடுக்குமாறு கூறியும் யாரும் பாலாவை போட்டோ எடுக்க
முன் வராததால் பாலா கொஞ்சம் டேமேஜ் ஆயிட்டார். அப்புறம்
நான் ஏதோ பார்த்து என்னோட 1.3 m.p கைபேசி கேமராவில் படம்
பிடித்தேன். இதோ உங்களுக்காக அந்த படம்.......


அப்புறம் ஒரு 6.30 மணிக்கு பாலா வீட்டுக்கு வந்த உடன்
டிபன் வர ரொம்ப லேட் ஆச்சு. ஒரு வழியாக டிபன் பந்தி போட
ஆரம்பிச்சாங்க. கார்த்தி அவர்கள் சின்ன பசங்க கூட பேசுற
மாதிரி அப்படியே சீட் புடிச்சிட்டார் ரைட் அப்படின்னு சொல்லி
நானும் கார்த்தி பக்கத்தில் ஒரு சீட்டை போட்டேன். கேசரி,
வடை, இட்லி , பொங்கல் என்று மாறி மாறி பரிமாறினார்கள்.
ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா அவர்கள் கையில் வெள்ளை சட்னியுடன் அலைந்து கொண்டு இருந்தார்....

"ஹே chutney... poor indian white சட்னி" என்று பாலாவை கொஞ்ச
நேரம் ஓட்டினோம்.

ஒரு சமயத்தில் நான் கொஞ்சம் ஓவர்ஆக பேசிவிட பாலா
என்னை மேலும் கீழும் என்னை பார்க்க ஆரம்பித்தார்.
அந்த வேளையில் கார்த்தி இலையில் இருந்து ஜீத் அவர்கள்
வடையை திருடிவிட்டதாக ஒரு பஞ்சயாத்து நடந்தது.
ஒரு வழியாக சாப்பிட்டு கிளம்பும் முன் பாலாவிடம் சில
வார்த்தைகள் பேசினோம்....

நான்: உன் கல்யாணம் எப்படி மச்சி இங்கையா? இல்லை
ஆஸ்திரேலியாவிலா?ஆஸ்திரேலியாவில் கல்யாணம் வச்சா நீயே டிக்கெட் போட்டு கூப்டுவியா மச்சி?

பாலா: எங்க வச்சாலும் உங்களை கூப்பிட மாட்டேன் டா...

அருணாசலம்: டேய்! இதெல்லாம் கம்மி, என் கல்யாணத்தில
பண்ணாததா?.....இதுக்கே நீ டென்ஷன் ஆயிட்ட...

நான்: ஆஸ்திரேலியா வந்தா உங்க வீட்ல தங்கலாமா மச்சி?

பாலா வாயே திறக்கவில்லை...

நான் : என்னடா...

பாலா: ஒரு அரை நாள் தங்கலாம் மச்சி...

கார்த்தி: உன்னை வராதேன்னு சொல்றான் போதுமா..

விடை பெற்று கிளம்பினோம்...
*********************************************************

கார் மீண்டும் சென்னையை நோக்கி பறந்தது நான் ஒரு
குட்டி தூக்கம் போட்டேன். பிறகு ஜீத் அவர்களுக்கு வேலை
காரணமாக நேரிய போன் கால் வந்தது, ஜீத் அவர்கள்
credit card பணம் வசூல் செய்யும் டார்கெட் இன்னும்
முடிக்கவில்லை என்று டென்ஷன் ஆனார்,ரொம்ப கஷ்டமான
வேலை தான்.....

ஆல் இன் ஆல் அவர்களின் பணம் ஸ்டாக் மார்க்கெட்இல்
மாட்டி கொண்டதாக கூறினார்..

நான்: என்ன கம்பெனி ஸ்டாக் வாங்குன மச்சி...

ஆல் இன் ஆல்: rrs, raymonds .....

நான்: அப்போ நீயும் raymondsல ஒரு ஓனர் தானே

ஆல் இன் ஆல்: ஆமாண்டா

நான்: அப்போ நீ போன உனக்கு பாண்ட் பிட் ப்ரீயா?

ஆல் இன் ஆல்: ஜட்டி கூட தரமாட்டாங்க...

நான்: raymondsல ஜட்டி வரது இல்ல மச்சி.

கார்த்தி: talk me .... yae talk me என்று அருணாச்சலத்தை ஓட்டினார்.

இன்னும் நெறைய மொக்கைகள் போட்டு பேசிக்கொண்டு 11.30
மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். அருமையான பயணம்,
இந்த பயணத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை கற்று
கொண்டேன்(சும்மா ஒரு பில்ட் அப்).

நன்றி
ஜெட்லி

4 comments:

லோகு said...

நேர்ல பார்க்கற மாதிரி இருக்கு... படிக்க படிக்க தனியா சிரிச்சுட்டு இருந்தேன்.. சூப்பரா எழுதிருக்க மாப்பு..


நீ எடுத்த போட்டோ ரொம்ப சூப்பர்.. எதுக்கும் மணி ரத்னம் கிட்ட அனுப்பு.. அடுத்த படத்துக்கு சான்ஸ் கிடைக்கலாம்..

யோ வொய்ஸ் (யோகா) said...

வாசிச்சிட்டேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல..

சித்து said...

சூப்பர் மச்சி, நான் வர முடியாம போனது பெரிய வருத்தம் தான். அதை ஈடு கெட்ட அடுத்த மாதம் திருவண்ணாமலை பயணத்தில் பார்த்துக்கொள்ளலாம்.