Friday, July 31, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

சிந்தனை செய் --- நான் செய்யலையே???

நடிகரும் இயக்குனரும் ஆன யுவன் தான் படத்தின் நாயகன்.
அசப்பில் நடிகர் ரஞ்சித்தை போல் உள்ளார். யுவன்,சபி,நிதிஷ்,
பாலா மற்றும் செஷாந்த் ஐவரும் சிறுவயதில் ஒன்றாக பள்ளியில்
மிடில் பெஞ்சில் அமர்ந்த மாணவர்கள். படத்தின் ஆரம்பத்திலே
மிடில் பெஞ்ச் மாணவர்கள் எதுக்கும் லாயக்கில்லை என்று
கூறும் அறிமுக காட்சிகள் நன்று.இந்த படத்தில் நட்பின் அருமையை கூறவில்லை துரோகத்தை பற்றி கூறுகின்றனர்.

யுவனும் பாலாவும் விபச்சார விடுதிக்கு சென்று பணம்

இல்லாமல் செக் கொடுப்பது செம காமெடி, மேலும் போலீஸ்
ஸ்டேஷனில் மயில்சாமி மற்ற மூவரும் மாட்டி அடிவாங்குவது
அதை விட சூப்பர் காமெடி.சபியும் நிதிஷும் இடைவெளி
காட்சிக்கு முன் தான் வருகிறார்கள்.முதல் பதினைந்து
நிமிடம் திரைக்கதை கொஞ்சம் குழம்பினாலும் அப்புறம் தெளிவாகி விடுகிறது.

தனக்கு பிடித்ததை மட்டும் செய்யும் புதுமுக நாயகி மதுஷர்மா,
நாயகியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் பெருசாக மன்னிக்கவும் புதுசாக ஒன்னும் இல்லை. கல்யாணமான அடுத்த நாளே நீ
எனக்கு வேண்டாம் என்று சொல்வதெல்லாம் ஓவர். நல்ல
வேலை முதல் பாதியில் அவர்களின் காதல் காட்சியை
சீக்கிரம் முடித்து விட்டார்கள்.

படத்தின் இசை சுமார் ரகம் தான், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது,
அதை விட எடிட்டிங் அருமை.ஹீரோ யுவன் எப்போதும் கஞ்சா
அடித்தது போல திரிகிறார். காதல் தண்டபாணி அவரை

சந்திக்கும் முதல் காட்சிகள் அனைத்தும் நாடகம் பார்ப்பது
போல் இருந்தது.படத்தின் முதல் பாதி அதுவும் இன்டெர்வல்
பிளாக் இடத்தில் நல்ல முடிச்சு. முதல் பாதி உண்மையான ஜெட் வேகம்.

பப்ஸ் சாப்பிட்டு சீட்ல வந்து ஆவலா உக்காந்தா, ரெண்டாம்
பாதி முழுவதும் யூகிக்க முடிந்த திரைக்கதை.ஜஸ்ட் லைக் தட்
அவர்கள் பாங்கில் கொள்ளை அடிப்பது நம்பும் படி இல்லை,

ஆனா அதை வைத்து தான் கதையே. கொள்ளையடித்த பணத்தை
பங்கு போடும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
யுவன் ஏன் அப்படி செய்கிறார் என்பதுக்கு வலுவான காரணம்
இல்லை.

ஆக மொத்தத்தில் முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி????
இரண்டாம் பாதியில் வன்முறை கொஞ்சம் அதிகம் தான்.
ஒன்னுமே இல்லாத யுவனை ஒரே மாதத்தில் காதல் செய்து
கல்யாணம் செய்வது பிறகு விரட்டுவது திரும்பவும் சேர்வது
எதுவும் நம்பும் படி இல்லை.கருத்தெல்லாம் வேற சொல்றாரு
யுவன்.படத்தின் முதல் பாதிக்காக ஒரு தபா பாக்கலாம்ப்பா....... போறதுக்கு முன்னாடி எதுக்கும் நீங்களும் சிந்தனை செய்யுங்க.....


திரைக்கதையில் சொதப்பல்:

முதல் காட்சிக்கு அப்புறம் யுவனும் தண்டபாணியும் சந்திக்க
மாட்டர்கள், மேல உள்ள கலக்குறான் பாட்டில் தீடிரென்று காதல் தண்டபாணி தோன்றுவார், ஆனால் படத்தின் கடைசியில் நான் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சே, நீ இன்னும் உயிரோடவா இருக்க அன்னிக்கே நீ தற்கொலை பண்ணி செத்து இருப்பன்னு நினைச்சேன் என்று யுவனை பார்த்து கூறுவார்.பாட்டுக்கு மட்டும் ஏன் வந்தார். தண்டபாணி என்ன ரகசியவா?? , குத்து டான்ஸ் போடுறதுக்கு.இல்லனா தனியா விளம்பரத்துக்கு மட்டும் அந்த பாட்டை உபயோக படுத்தி இருக்கணும்.

ஜெட்லி பஞ்ச்:

முதல் பாதி ஸ்பீட்ஆ போன வண்டி , இரண்டாம் பாதி பஞ்சர் ஆச்சு..........

நீங்கள் படித்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.

நன்றி
indiaglitz

உங்கள்
ஜெட்லி

7 comments:

butterfly Surya said...

ம். ரைட்டு.. நெக்ஸ்ட்..

நையாண்டி நைனா said...

ok.. polaam right.

வால்பையன் said...

டிக்கெட் ஓசியில கிடைச்சதா?

ஜெட்லி... said...

நன்றி வண்ணத்துபூச்சியார் மற்றும் நைனா...

ஜெட்லி... said...

@ vaal

என்னை ஓசி டிக்கெட்லே போனியான்னு கேக்குறிங்க...
என்னை மாதிரி சில பேரால்தான் தமிழ் சினிமா வாழுது
வால்....

Kolipaiyan said...

Grete Escape from IT. Good alert!!

Unknown said...

this movie is 1000 times better than the other movies like antony yaar???? ayindham padai...aru maname ...etc etc... good effort by yuvan...