Monday, July 20, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு!

இவங்க எப்போ திருந்துவாங்க.....

நேத்து காலையில பேப்பர் வாங்க போகும் போது ஒரு போஸ்டர் என் கண்ல பட்டுச்சு.வேற ஒன்னும் இல்லைங்க
நம்ம புரட்சி தளபதி(என்ன புரட்சி செய்தாரோ???) விஷால்
அவர்களின் தோரணை படம் 50வது நாள் வெற்றி போஸ்டர்
தான் அது.

அந்த போஸ்டர்ஆ பாக்குனுமே என்னமோ பெருசா சாதிச்ச
மாதிரி ஒரு ஸ்டில் குடுத்திரிக்கிறார்.ஒரு நிமிஷம், என்ன
சொன்னேன் பெருசா சாதிச்சிடாரான்னு கேட்டேன்ல.
கண்டிப்பா இது பெரிய சாதனை தான். தோரணை என்ன
மாதிரி படம்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
இந்த உலகத்துக்கே தெரியும்.அந்த மாதிரி படமெல்லாம்
50 நாள் ஓடுன கண்டிப்பா பெரிய சாதனை தான்.

அது சரி என் கேள்வியெல்லாம் இது ஒன்னு தான் மொக்கை
படம்னு உலகத்துக்கே தெரியும் அதை இரண்டு வாரம்
ஓட்டிட்டு விட வேண்டியது தானே. ஏன் அதை காசு
கொடுத்து ஒட்டி அப்புறம் ஒரு போஸ்டர் வேற அடிச்சு?.
இந்த இடத்தில் அஜித் பத்தி சொல்லி ஆகணும் அவர்
தன் படங்கள் மொக்கை ஆனால் காசு கொடுத்து ஓட
வைப்பதில்லை.அது போல் எல்லோரும் இருந்தால்
என்ன? இவங்கெல்லாம் எப்போ திருந்துவாங்க? என்று
ஏக்கத்துடன் இருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்...!!!!

***********************************

இரண்டு மாதங்களுக்கு முன்:

நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் "ஏன்டா நீ ப்ளாக்ல
சீரியஸ் ஆன விஷயமே எழுதமாட்டியா, சமுதாயத்தை
பத்தி இல்லன நம்மள சுத்தி நடக்குறத பத்தி" என்று
கேட்டார்.

"அதெல்லாம் எதுக்கு மச்சி, சும்மா ஜாலியா எழுதுனமோ
அவ்ளோதான்... ஆனா எனக்கும் ஒரு விஷயத்தை பத்தி
எழுதுனும்னு தோணுது..."என்றேன் நான்.

"என்ன"?

"நம்ம ஊர்ல இளைஞர்கள் நிறைய பேர் வேலைக்கு போகாம கொலை,கொள்ளை,வழிப்பறி....." நான் முடிக்கும்
முன்பே

"ப்ளாக் எழுதுறது!.." அப்படின்னு தீடிர்னு சொன்னான்,
அந்த சமயம் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியுல.
அப்போது நான் அதை சீரியஸ் ஆக எடுத்து கொண்டாலும்,
இப்போது அதையெல்லாம் ஒரு மேட்டர்ஆக எடுத்து
கொள்வதில்லை.(கேட்டு கேட்டு புளித்து விட்டது).


************************
புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....

உங்கள்
ஜெட்லி

1 comment:

. said...

ஆஹா! ரொம்ப நன்றிங்க...நான் சொல்ல நெனச்சத நீங்க சொல்லிபோட்டீங்க! நானும் இந்த படத்த பாத்துட்டு வெறுத்துப்போனது தான் மிச்சம்!வடிவேலு சொல்ற மாறி தான் சொல்லணும்ங்க...! விஷால் படமாச்சேனு( இதுக்கு முன்னாடி ரெண்டு படம் பாத்திருக்கேனுங்க!) நம்பி உக்காந்தேன்பா! பயபுள்ள என்னமா உசுர வாங்கிடுச்சு...