Saturday, July 4, 2009

நண்பனின் காதல்.

நண்பனின் காதல்.(சிறுகதை)



என் நண்பன் முத்து உண்மையிலே மிக அருமையான நபர்,
நட்பு என்றால் என்ன என்று அந்த ஊருக்கு நாங்கள் தான் எடுத்துக்காட்டாக இருந்து வந்தோம்.ஒரே தட்டில் சாப்பிடுவது,
ஒரே க்ளாசில் சரக்கு அடிப்பது, முக்கியமாய் விட்டு கொடுத்து
செல்வது என்று எங்கள் நட்பு நன்றாக போய் கொண்டிரிந்த
சமயம், முத்து காதல் வயபட்டான். பக்கத்துக்கு ஊரில் தான்
டாவு கட்டும் பெண் இருப்பதாக என்னிடம் கூறினான்.

காதல் வந்தாலும் வந்தது பேனாவும் கையுமாக அலைந்தான்.

"என்னடே பேப்பர் பேனாவுமா சுத்துற" கேட்டேன்.

"இல்ல பங்காளி நம்ம ஆளுக்கு கவிதை கிறுக்கிட்டு இருக்கேன்"
என்றான்.

"நீயெல்லாம் கவிதை எழுதுரியா, மக்க செத்தாங்க போ"
என்று கிண்டல் அடித்து விட்டு படித்து காட்ட சொன்னேன்.

ஹ்ம் தொண்டையை சரி செய்து விட்டு முத்து தொடர்ந்தான்

"நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை என் நெஞ்சம் மறப்பதில்லை
அதனால் என் இதயம் சிறகடித்து பறப்பதில்லை
ஏன் என்றால் என் இதயம் என்னிடம் இல்லை"

"பின்னிட்ட போ, ஆமாம் இதை எங்கயோ படிச்ச மாதிரி
இருக்குடே" என்றேன்.

*************************************
கள் குடிக்க முத்துவும் நண்பனும் சென்றோம், முத்து போதை
ஏறியவுடன்

"பங்காளி இன்னொரு கவிதை இருக்கு கேக்குறியா" என்றான்.

சும்மாவே விடமாட்டான் இப்போ வேற போதை "ஹ்ம்ம் சொல்லுடே" என்றேன்

"டயரும் டியுபும் சேர்ந்தால் தான்
வீல் ஓடும்....
அது போல்
நானும் நீயும் சேர்ந்தால் தான்
என் வாழ்க்கை எனும் சக்கரம் ஓடும்."

க்க் என்று காரி தூப்பினேன், அவன் போதையில் கண்டு கொள்ளவில்லை.

***************************************
என்னிடம் அடிக்கடி பேசும்போதெல்லாம் தன் காதல் மேலும்
மேலும் இருகுவதாக கூறினான்.

"பங்காளி எனக்கு நீ தான் ஊரே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணி
வைக்கணும்டே, நான் நீ இருக்கிற நம்பிக்கையில் தான் பக்கத்துக்கு
ஊரு பொண்ணை லவ் பண்றேன்டே" என்றான்.

ஆஹா நம்மளை நம்பிட்டான் நாமதான் அவனை சேத்து வைக்கணும் என்று முடிவு பண்ணினேன்.

திரும்பவும் ஒரு கவிதை படிக்க ஆரம்பித்தான் கவிஞர் முத்து

"நான் ஒரு பித்தன்
உன் பின்னால் அலையும் சித்தன்
நீ ஒரு மல்கோவா
நாம் எப்போது போவோம் கோவா?..... "

என்னடே வர வர கேவலமா போகுது, நாம வேற நேத்து நாடோடிகள் படம் பார்த்தோம். எதுக்கும் அவன் காதலில்
ஸ்ட்ராங்காக இருக்கானானு பாப்போம்,அப்புறம் சேப்போம்.
என்று மனதில் நினைத்து விட்டு அன்று நடையை கட்டினேன்.
*********************

அன்று நான் நண்பர் கவிஞர் முத்து அவர்களின் கவிதை
என்று கிறுக்கிய புத்தகத்தை காண நேர்ந்தது, அதில் ஒரு
கவிதையை படித்த படித்த பின் புத்தகத்தை காரி தூப்பிவிட்டு, இனிமே அந்த நாய் சைடு தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

அந்த கவிதையை நீங்களே படிங்கள்........


நீ எனக்கு
நான் உனக்கு
நடுவில் உன்
புருஷன் ஏதற்கு?

(டிஸ்கி:இதெல்லாம் கவிதைன்னு வேற சொல்ல வேண்டியதா இருக்கு, கள்ள காதல் பண்றவன் கூட கவிதை எழுத ஆரம்பிச்சிடானே! )

****************************************
புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க, பிடிக்கிலனாலும்
ஒட்டு போடுங்க அதனால ஒன்னும் தப்பு இல்ல.


உங்கள்

ஜெட்லி

2 comments:

லோகு said...

சூப்பர் மாப்ள..

வரவர எல்லா ஏரியாலையும் கலக்கறீங்க.. வாழ்த்துக்கள்..

Vino said...

This is my very first visit to blog. The story is awesome / unexpected twist at the end. Enjoyed it.