Saturday, July 18, 2009

ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.

ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.
****************************************************
னேனேன்னே....னேனேன்னே... என்ற பின்னணி இசையுடன்
நாட்டாமை விஜயகுமார் வந்து ஆலமரத்தடியில் இறங்குகிறார்.

நாட்டாமை: என்னடா பிராது இன்னைக்கு?

கவுண்டர்மணி: அய்யா நம்ம ஊர் ஹோவர்ட்ஸ் ஸ்கூல்ல
இந்த பானை மண்டையன் ஹாரிபாட்டர் ஒரு பெண்ணை கெடுத்துட்டான்ங்க......

நாட்டாமை: யாரது கண்ணு ஹாரிபாட்டர்.


ஹாரிபாட்டர்: நான் தாங்க அய்யா... என் மந்திரத்தால உங்க உடம்புல உள்ள சந்தனத்தை எடுத்துருலாம் அய்யா.... என்று மந்திர குச்சியை எடுக்கிறான்.

நாட்டாமை(கோபமாகிறார்): டாய்...ஹாரிபாட்டர் கண்ணு, நான்
இந்த சந்தனத்தை பூச ஒரு மணி நேரம் ஆகும்.இதுக்கு என்புள்ள சரத்குமாரும் குஷ்பூவும் உதவி செய்வாங்க... அத நீ எடுக்க போறியா கண்ணு. உன் குச்சை உள்ள வை.

ஹாரிபாட்டர் டர்ராகிறார்......

நாட்டாமை: ஏன் தம்பி! உன் குச்சியை(மந்திர) வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..... நீ ஏன்டா அந்த புள்ளையை கெடுத்த?

ஹாரிபாட்டர்: அய்யா...நான் அவ ரூமுக்கு போனது உண்மை, ஆனா
எனக்கு முன்னாடி யாரோ அவளை கெடுத்துட்டாங்க......

நாட்டாமை: அப்போ நீ அவளை கெடுக்கத்தான் போன கண்ணு.

ஹாரிபாட்டர்: ஐயோ இல்லைங்க... பாடத்துல ஒரு டவுட் அதான் போனேன்...இது ஏதோ ஒரு தீயசக்தியோட வேலைன்னு
நினைக்கிறேன்.இதெக்கெல்லாம் காரணம் அந்த வோல்டிமொர்ட்
தான் அய்யா.

நாட்டாமை: உனக்காக யாரும் சாட்சி சொல்ல வருவாங்களா?....

ரோன்(பாட்டரின் நண்பன்): அய்யா நான் பார்த்தேங்க.....


நாட்டாமை: யாரு கண்ணு நீ...

ரோன்: நான் ஹாரிபாட்டர் நண்பங்க...

நாட்டாமை: செல்லாது கண்ணு.

ஹெர்மாயினி (பாட்டரின் தோழி): அய்யா நான் பார்த்தேங்க...

நாட்டாமை: நீ யாரு கண்ணு.

ஹெர்மாயினி: பாட்டர் என் பெஸ்ட் பிரண்டு....

நாட்டாமை: செல்லாது செல்லாது....

அப்போது அங்கே ஹோவர்ட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர்
டம்ப்ல்டோர் வருகிறார்.

கவுண்டர்மணி: நாட்டாமை அய்யா.. இந்த செம்மறி ஆட்டு மண்டையன் தான்ங்க டம்ப்ல்டோர்.

நாட்டாமை: என்னடா பேர் இது. டபுள்டோர், சிங்கள்டோர்ன்னு.


டம்ப்ல்டோர்: நாட்டாமை நியாயம் செத்து போச்சு, நீதி தொத்து போச்சு

ஹாரிபாட்டர் சின்ன பையன் அவன் இத செய்ஞ்சு இருக்க மாட்டான்.

கவுண்டமணி: சின்ன பையன் செய்யல, அப்ப பெரிய மனுஷன் நீ
செய்ஞ்சியா? என்று டம்ப்ல்டோரிடம் ஏறுகிறார்.

டம்ப்ல்டோர்: கெடுக்கப்பட்ட அந்த பெண்ணோட ரூம்ல சந்தன
வாசம் அடித்தது, அது மட்டும் இல்ல அவ உடம்பு மேலையும்
சந்தனம் இருக்கிறது. இதில் இருந்து யார் காரணம்னு தெரியுலேயே
நாட்டாமை.இது தீயசக்திகளின் வேலை. அவங்களை எதிர்க்கிற
நேரம் வந்துடிச்சு.

கவுண்டமணி: யோ..அப்ப நீ என்ன நாட்டாமைதான் இந்த
காரியத்தை செய்ஞ்சார் அப்படின்னு சொல்றியா....

அதற்குள் நாட்டாமை சுதாரித்து

என்னடா சொல்லிபோட்ட நீ...
உன்னை இந்த எட்டுப்பட்டி கிராமத்தை விட்டு
ஒதுக்கி வைக்கிறன்டா....
இனிமே சுத்துபட்டியிலே எந்த டாஸ்மாக்
கடைலயும் உனக்கு சரக்கு தர மாட்டங்கடா.
இதாண்டா இந்த நாட்டமை தீர்ப்பு.


பசுபதி வண்டியை உடுறா.....

நாட்டாமை(தனக்குள்): இனிமே இந்த மாதிரி தப்பு காரியம்
செய்யும் போது சந்தனத்தை தடவாம போனும்......

நாட்டாமை பாதம் பட்ட இந்த வெள்ளமாய் விளையுமடி
நம்ம நாட்டாமை கை அசைச்சா....................


அனைத்து மக்களுக்கும் போய் சேர tamilish யில் ஒட்டு போடவும்.

ஆக்கமும் எண்ணமும்.
உங்கள்
ஜெட்லி

4 comments:

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது எங்க நாட்டாமைக்கு எதிரான சதி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தேவன் மாயம் said...

நாட்டாமை!!
நம்ம பதிவுக்கு வாங்க!!