Friday, December 11, 2009

காலத்தை மீறிய கனவு

தன் வாழ்நாளில் வராத சுதந்திரத்தை கனவில் கண்டு பள்ளு பாடிய ரௌத்திர கவிஞனின் பிறந்த தினம் இன்று



உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலமென்ன, தனிநாடே கிடைக்கும் என்ற இன்றைய சூழலில், ஒரு நூறாண்டுகளுக்கு முன்பே, எங்கள் மகாகவி எழுதிய இரு கவிதைகள் இதோ,

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?"


"வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்."

9 comments:

Chitra said...

பாரதிக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

நாளை ரஜினி பிறந்த நாளுக்காக இன்றே வாழ்த்து சொல்வோர் மத்தியில் மாக கவிக்காக பதிவு போட்டமைக்காக பாராட்டுக்கள்..,

VENNILLA said...

Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

பூங்குன்றன்.வே said...

மகாகவி பாரதியாருக்கும்,நல்ல பதிவை போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

அரிய படங்களுடன் ஒரு அருமையான நினைவு கூறல்.


வாழ்த்துக்கள்

Raghu said...

//நாளை ரஜினி பிறந்த நாளுக்காக இன்றே வாழ்த்து சொல்வோர் மத்தியில் மாக கவிக்காக பதிவு போட்டமைக்காக பாராட்டுக்கள்//

ரிப்பீட்டேய்!

Anonymous said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? தெலுங்கானா அமைத்தது தவறு என்றா? அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.

சங்கர் said...

//inertcatalyst said...
என்ன சொல்ல வருகிறீர்கள்? தெலுங்கானா அமைத்தது தவறு என்றா? அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.//

தெலுங்கானா பற்றி நான் எதுவும் சொல்லவில்லை, தனி திருநெல்வேலி மாநிலம் அமைக்க கோரி அடுத்தவாரம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றிருக்கிறேன், அது பற்றித்தான்கூறினேன்

Anonymous said...

தாரளமாக இருங்கள். யாரும் கவலைப்படபோவதில்லை. தமிழர்களுக்கு தான் 3 மணி நேர உண்ணாவிரதம் என்பது பழக்கமானதாயிற்றே.