Monday, June 1, 2009

சுய'இன்பம்' காண்பது தவறா?

சுய 'இன்பம்' காண்பது தவறா?

இந்த கேள்வியை நான் சிவராஜ் சித்த வைத்தியர் கிட்ட கேட்டு இருந்தா அவர் அதை கண்டிப்பா தவறு என்று தான் சொல்வார். அவரின் டி.வி. நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அதை தவறு என்று தான் சொல்வார்கள்.ஆனா நீங்க நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எனக்கு தெரியும்ங்க.இது வேற வகையான இன்பம்ங்க ,வாங்க நமக்கு எது இன்பம்னு தெரிஞ்சிக்கலாம்.


இன்பத்தை பல வகையாக பிரிக்கலாம்ங்க:

# சில பேருக்கு அலுவலக வேலை செய்வதே இன்பம்.

(உதாரணம்: கணிபொறியாளர், இவர் வேலை

செய்யலனாலும் செய்ய வச்சிருவாங்க)



# சில பேருக்கு அலுவலக வேலை செய்யாமல் இருப்பதே இன்பம்.


(இதுக்கெல்லாம் உதாரணம் தேவையா? கண்டிப்பா நம்ம வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்).



# சில பேருக்கு காதலி அல்லது காதலன் கூட இருக்கும் போது இன்பமா இருக்கும்.

(சும்மா இருக்கும் போது தாங்க!)



# சில பேருக்கு காதலியை அல்லது காதலனை மாற்றி கொண்டே இருப்பது இன்பமா இருக்கும்.

(இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க, ஈ.சி.ஆர் ரோட்ல வந்து ஒரு நாள் பாருங்க)


# சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).


# சில பேருக்கு ப்ளாக் படிப்பதில், எழுதவதில் இன்பம்.


# சில பேருக்கு பரபரப்பா ப்ளாக் டைட்டில் வைப்பதில் இன்பம்.

( ஹையோ! ஹையோ! என்ன பண்றது அப்பதானே வந்து பாக்குறாங்க)


# சில பேருக்கு சரக்கு அடித்து போதையில் பாதை மாறுவது இன்பம்.


# சில பேர் விதம் விதமா கைபேசியை மாற்றுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நண்பர் கௌரி மாசத்துக்கு இரண்டு கைபேசி மாற்றுவார்).

# பல பேருக்கு புகைப்பதில் , சில பேருக்கு இயலாதவர்களை பார்த்து நகைப்பதில் இன்பம்.

(நம்மால உதவி செய்ய முடியலன ஒதிங்கிரனும், அத உட்டுட்டு சிரிப்பாங்க).


# சில பேருக்கு புத்தகம் படிப்பதில் இன்பம், சில பேர் படித்த புத்தகத்தை பத்து தடவை படிப்பார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் சங்கர் தான் அந்த மனுஷன், உறுப்பினர்ன்னு தான் பேர் அய்யாவுக்கு ப்ளாக்க பாக்க கூட டைம் இல்ல)


# சில பேருக்கு அடுத்தவன் காலை வாரி விடுவதில் இன்பம்.

(பார்த்துங்க நீங்க வேலை செய்யுற இடத்திலேயே நிறைய பேர் இருப்பாங்க)


# சில பேர் பணத்தின் மூலம் நண்பர்களை பெருக்கி கொண்டு , உயிர் நட்பு என்று சொல்லி கொள்வதில் இன்பம்.



ச்சோ ச்சோ.... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார்த்திங்களா!
எப்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் ஒ,
அது மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமான
இன்பம்ங்க.


சில பேர் இருக்காங்க எப்பவும் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பாங்க,உதாரணத்துக்கு இப்போ ஒருத்தனுக்கு அலுவலக வேலை இன்பமாக இருக்கலாம் அதனால் அவன் அலுவலகமே கதி என்று இருப்பான், அவன் கிட்ட போய் நம்மாளு " டேய், ஏன்டா எப்பவும் வேலை வேலைன்னு ஆபீஸ்லயே இருக்க, உனக்கு என்ன தர போறாங்க" என்று மேதாவி தனமாக கேட்பதாய் எண்ணி கொள்வோரும் உண்டு.இது போல் பல உதாரணம் சொல்லலாம்.


அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடிக்கலனா விட்டுருங்க அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் இன்பத்தில் மூக்கை நுழைப்பது நியாயம் இல்லாத ஒரு ஈன செயல். உங்களால் அடுத்தவனுக்கு இன்பம் தான் கொடுக்க முடியலை தயவு செய்து துன்பத்தை கொடுக்காதிங்க.


உங்கள்
ஜெட்லி

24 comments:

மயாதி said...

சிலபேருக்கு இப்படி தலைப்பு போட்டு ஏமாற்றுவதில் இன்பம்...(he he heee)

நல்லாருக்கு

ஜியா said...

நல்லா இருவே!!

லோகு said...

உன்னைஎல்லா சித்த வைத்தியர் கிட்ட டிரீட்மென்ட்டுக்கு அனுப்பனுமய்யா..

ஜெட்லி... said...

அப்படியெல்லாம் இல்ல மயாதி....
சும்மா புதுசா ட்ரை பண்ணலாம்னு தான்

ஜெட்லி... said...

ஜியா தங்கள் வருகைக்கு நன்றி

ஜெட்லி... said...

ஏன் லோகு எனக்கு இந்த மாதிரி தண்டனை.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழ்ர்ஸ்

கடைக்குட்டி said...

இப்போ ஜெட்லியும் சித்துவும் மட்டும் எழுதுறீகளா?? செரி செரி..

இப்டி கலாய்சுட்டியே தல...

தலைப்ப பாத்துட்டு என்னவோ ஏதோன்னு பதறி வந்தேன்.. :-)

Suresh said...

தலைப்பை பார்த்தவுடன் தெரியும் ஏதோ கலாச்சி தான் சூப்பர் தலை

Suresh said...

நம்ம இனி இணையத்தில் ஒன்றாய் பயனிப்போம் அதான் தலைவா நான் இனி உங்க பாலோவர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..,

நாம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகலே..,

ஜெட்லி... said...

கடைக்குட்டி எல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு தான் இந்த மாதிரி விவகாரமான டைட்டில்.

ஜெட்லி... said...

மிக்க நன்றி சக்கரை சுரேஷ்.....

ஜெட்லி... said...

sureஷ் தலைவரே என்ன இப்படி சொல்லிடிங்க.....

ஜெட்லி... said...

உங்கள் வருகைக்கு நன்றி தீப்பெட்டி.

ரங்குடு said...

நீங்க போட்ட பட்டியலில் ஒன்றுமே 'சுய' இன்பம் இல்லை.

அடுத்தவர்கள் உதவியோ / நினைப்போ யின்றி சுயமாக இன்பமோ / துன்பமோ யாரும் காண முடியாது.

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணன் தல சுரேSH அவர்களுக்கு ஊசி குத்துவது இன்பம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ... இந்தப் பின்னூட்டம்தான் குழப்பம் கொடுக்கிறதா..,


ஃபிரீயா விடுங்க தல..,

ஜாலியான இடுகையாச்சேன்னு ஒரு தத்துவப் பாட்டுப் போட்டேன்.

விடுங்க ஃப்ரண்ட், பீ ஹேப்பி..

Suresh said...

பதிவு எல்லாம் பட்டாசு உங்களை பின் தொடர்வதில் பாலோவராக பெருமை கொள்கிறேன்

ஜெட்லி... said...

நன்றி சுரேஷ்... உங்கள் எண்ணத்தை காப்பாற்ற மேலும் உழைப்பேன்.

வால்பையன் said...

//சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).//

என்ன கலர் படம்னு சொல்லவேயில்லை!

cheena (சீனா) said...

கலக்குறீங்கப்பா

cheena (சீனா) said...

கலக்குறீங்கப்பா

kumar2saran said...

yennaiya climax'la nallavan aayita.

ivanga yeppavume ippadi thaan.. iyyooo.. iyyyoo..