Thursday, June 18, 2009

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

நீங்கள் என்றைகாவது நரிகுறவர்கள் வாழும் இடங்களுக்கு
போய் இருக்கிங்களா?


எங்கள் வீட்டின் பக்கத்தில் சுமார் இருநூறு நரிகுறவர்கள்
வசிக்கும் நகர் உள்ளது. சிறுவயதில் அவர்கள் இருப்பிடம்
தேடி நானும் நண்பர்களும் ஒரு தடவை சென்றோம்,
அவர்களிடம் இல்லாத பொருளே இருக்காது என்று கேள்விப்பட்டு,

விலையும் குறைவாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி போய் கொண்டிருந்தோம்.அவர்களிடம்
பந்து, கோலி அல்லது சின்ன மோட்டார்(பேர் நினைவில் இல்லை)
எதுவும் அவர்களிடம் கிடைக்கும்.எல்லாமே பழைய பொருள்தான்
சிலவை மட்டும் புதிதாக இருக்கும்.


நானும் என் நண்பர்களும் பந்து வாங்க சென்றோம் ஏன்
என்றால் அவர்களிடம் மட்டும் டென்னிஸ் பந்து ஐந்து
ரூபாய்க்கு கிடைக்கும். முதன்முதலில் எங்களை வரவேற்றது
ஒரு பழைய பேப்பர் கடை அவர் நம்ம தமிழ் ஆளு தான்,

நரிகுறவர்கள் தாங்கள் சேகரித்த அனைத்து பழைய
பொருள்களும் இவரிடம் தான் கடைசியில் வந்து சேரும்
என்று அவர் கடையை பார்த்தாலே தெரிந்துவிடும். ஆமாம்
மலை போல் அவரிடம் பொருள்கள் குவிந்து இருந்தன.



என் இட கையின் பக்கம் ஒரு நரிக்குறவர் சமைத்து கொண்டு
இருந்தார், நான் சும்மா என்னடா செய்யறார் என்று பார்த்தேன்.
ஒரு பூனையின் தோலை உறித்து அதை அடுப்பில் போடுவதற்கு

மசாலா தடவி கொண்டு இருந்தார். பூனையை கூட சாப்பிடுவாங்களா?
என்று அன்று தான் எனக்கு தெரியும். எங்கள் பகுதியிலும் அடிக்கடி பூனை திருடு போகும் ரகசியம் எனக்கு பன்னிரண்டு வயதில் தான் புரிந்தது.


கொஞ்ச தூரம் போயிருப்போம் எனக்கு வேறு ஏதோ தேசத்தில்

இருப்பது போன்ற உணர்வு. அப்போ அப்போ வந்த வழியை திரும்பி
பார்த்து கொண்டே நடந்தேன், கூட வந்த நண்பர்கள் டென்னிஸ் பால்
இருக்கிறதா என்று விசாரித்து வந்தார்கள். இன்னொரு நரிக்குறவன்
தன் துப்பாக்கிக்கு ரவையை அடைத்து கொண்டு இருந்தான். ஒருவன் ஏதோ புரியாத மொழியில் கத்தி கொண்டே எங்களை கடந்து சென்றான்.


கண்டிப்பா அவர்கள் குளித்து பல நாள் ஆகிருக்கும், ஆண்கள்
பெண்கள் இருவருக்குமே தண்ணி என்றாலே அலர்ஜி போல,
ஆனால் சரக்கு தண்ணி ரெண்டு பேருக்குமே ஒத்துக்கும்.
எங்கள் ஏரியாகாரர்கள் குறவர்களை பற்றி கூறும் போது
அவர்கள் நம்மை விட பணக்காரர்கள், வங்கியில் லட்சம்
லட்சமா பணம் இருக்கும் ஆனா அவுங்க இப்படிதான்
இருப்பாங்க என்று கூறுவார்கள்.

நாங்க ஒரு குறவனிடம் டென்னிஸ் பால் இருக்கிறதா
என்று கேட்டோம் ஹ்ம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அடுத்து அடுத்து நகர்ந்து கொண்டே போனோம்.
சின்ன சின்ன பசங்க எல்லாம் குரங்கு கூட விளையாடி கிட்டு இருக்கிறத கொஞ்ச நேரம் பார்த்து ரசித்தோம்.

அதன் பின் ஒரு குறத்தியிடம் சென்று டென்னிஸ் பால்
இருக்கிறதா? என்று கேட்டோம்.அதற்கு அவள் என்கிட்டே
இந்த பால் தான் இருக்கு என்று தான் மாராப்பை காட்டினாள்.


என்ன கொடுமை சார் இது!இப்படியும் இருக்காங்களே என்று தலையில் அடித்து கொண்டு டென்னிஸ் பால் வாங்கமலயே
வீடு வந்து சேர்ந்தோம்.இன்று வரை அது ஒரு கசப்பான
அனுபவமாகவே என் வாழ்வில் இருந்து வருகிறது ....

உங்கள்

ஜெட்லி

2 comments:

சித்து said...

நீ தெளிவா பந்துன்னு கேட்ருக்கணும் மச்சி :)

லோகு said...

பதிவுக்கும், படங்களுக்கும் சம்பந்தம் இல்லை..

வன்மையாக கண்டிக்கிறேன்...