Showing posts with label பொடிமாஸ். Show all posts
Showing posts with label பொடிமாஸ். Show all posts

Monday, September 28, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....(28.9.09)


நேற்று பூஜை இருந்ததால் ஒரு ஆறு மணிக்கு பூஜை போட்டு
பதிவர் சந்திப்புக்கு கிளம்பி விடலாம் என்றும் பார்த்தால் செம மழை.மழையால் கடைசியில் எட்டு மணிக்கு தான் பூஜை
முடிந்தது.பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...

************************************

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

ஆயிரத்தில் ஒருவன் எப்போது வெளிவரும்?????

************************************************

ஒரு சில பேர் பழுத்த மரம் தான் கல்லடிப்படும் என்று நம்
முன்னோர்கள் கூறிய கருத்தை தப்பாக எடுத்து கொண்டுள்ளனர்....
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டும்
தான் " நம் முன்னோர்கள் பிஞ்சுல பழுத்தவங்களை பத்தி
சொல்லவில்லை".(கண்டிப்பா உள்க்குத்து இருக்கு!).

***********************************************

நண்பரிடம் போனில்...

நான்: மச்சி நாளைக்கு சிதம்பரம் கோவிலுக்கு போறேன்...

நண்பர்: என்னடா தீடிர்னு...

நான்: வேண்டுதல் மச்சி...

நண்பர்: என்ன வேண்டுதல் டா?...

நான்: சிதம்பரம் கோவிலுக்கு போறது தான்...

நண்பர்: சரிடா ...போய்ட்டு வா. நான் அப்புறம் பேசுறேன்.

********************************************

சமீபத்தில் படித்த செய்தி:

தூத்துக்குடியில் குடித்து விட்டு பணியாற்றிய
மதுவிலக்கு ஏட்டுகள் கைது....

***************************************

பொன்மொழிகள்

நீ துன்பப்பட வேண்டுமானால் உன்னை விட
பணக்காரியை மணந்து கொள்.

- மைக்லேட்.

என்னை பொறுத்தவரை மனித தன்மையை அடியோடு
ஒழித்து விட்ட ஆஸ்திகனை விட மனித தன்மையை
பத்திரமாக பாதுகாக்கும் நாஸ்திகனாக இருக்க ஆசைபடுகிறேன்.

- இங்கர்சால்.

************************************

உல்டா விளம்பரம்:(சென்னை சில்க்ஸ்)

எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும்
விஜய் மல்லையாவின் கிங்க்பிஷேர் ....
குடியா குடிப்போம்
சைட்டிஷை தள்ளுவோம்....
கடைசியில் வாந்தியும் எடுப்போம்!!


********************************************
மொக்கை மேட்டர் :

தென்னகத்தின் வருங்கால ஸ்பீல்பெர்க் போல எழுதி வரும்
ஒருவர் செம காமெடி இடுகை இட்டுள்ளார்......................
அவர் கூறவது "ஹரி ஒரு அடி முட்டாளான இயக்குனராம்,
சேவல் படத்தில் பிராமணர்கள் திருநெல்வேலி பாஷை
பேசுவார்களாம் அது கூட தெரியாம ஹரி படம் எடுத்து
இருக்குராம்"

(எனக்கு தெரிந்து என் பிராமண நண்பர்கள் இரண்டு பேர்
திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். அவர்கள் திருநெல்வேலி
பாஷை தான் பேசுவார்கள்)

சேவல் படத்தில பிராமணர் பாத்திரங்கள் அவர்கள் பாஷையை
பேசி இருந்தால் படம் வெற்றி அடைய ஒரு காரணமாக

இருந்திருக்கும் என்ற அரிய கண்டுபிடிப்பை நமக்கு கண்டுபிடித்து
கூறிய பதிவர் சக்திவேல் அவர்களின் பெயரை ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்வோம்.

************************************************
நன்றி

கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, August 3, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ்(3.8.09):
**********************

மல்லாக்க படுத்து யோசிச்சது:

டாஸ்மாக் தத்துவம்:

பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,

**********************
இன்றைய சிந்தனை:
(அல்லது)
ஜெட்லி தத்துவம் நெ.3444

அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்.




*********************************
படித்தது:

GOD BE WITH YOU என்பதன் சுருக்கம் தான் நாம் இப்போது கூறும்
GOOD BYE.

*****************************************
பொன்மொழி:

அழகான பெண் ஒரு ஆபரணம், நல்ல பெண் ஒரு பொக்கிஷம்.

- ஸாடி.

***********************************
காதில் விழுந்த செய்தி:

திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டரை அடுத்த
மாதம் முதல் சத்யம் தியேட்டர் நிர்வாகம் லீசில் எடுக்க போகிறது.
இவளோ நாள் அம்பது ரூபாய்க்கு படம் பார்த்தேன், இனிமே என்ன
ரேட் வைக்க போறாங்களோ!!!!

***********************
இன்று ஒரு தகவல்:

குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி:

ஏதோ புதுசா பயோ பீர் அப்படின்னு ஒன்னு வருதாம், இதுல
பத்து விதமான மூலிகைகள் அடங்கி இருக்காம். அப்புறம்
முக்கியமான் விஷயம் இதுல்ல alcahol 5 முதல் 7 சதவிதம்
வரைக்கும் இருக்காம்......
என்ன இருந்தாலும் நம்ம சிங்கத்தின் தாகத்தை தணிக்கும்
zingaro போல வருமா????

*****************************************

படித்தது உண்மையா என்று தெரியவில்லை....

கியூபா நாடு முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தாடி வளர்த்து
கொண்டதற்கு ஒரு காரணம், அமெரிக்கா கியூபாவுக்கு பிளேடுகள்
ஏற்றுமதி செய்ய தடை விதித்தால்தான்...

******************************

இது ஏ ஜோக்கா??? கொஞ்சம் பெருசு(ஜோக்கை சொன்னேன்!!)


ஓர் புதுமண தம்பதிக்கு அன்று தான் முதல் இரவு.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் அம்மா காலை
சிற்றுண்டிக்காக முதல் மாடியில் இருக்கும் தன் மகனையும் அழைத்தாள். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தாங்க

உடனே அம்மா "சரி நாம சாப்பிடுவோம், அவுங்க வர
லேட் ஆகும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...."என்று
மாப்பிள்ளையின் தம்பி ஆரம்பித்தான்.

"நீ ஒன்னும் நினைக்கவேணாம்,ஒழுங்கா சாப்பிடு"
என்று அதட்டினாள் அம்மா.ஆனால் புதுமண தம்பதிகள்
காலை உணவுக்கு ரூமை விட்டு வெளிய வரவில்லை.

திரும்பவும் மதிய உணவுக்கு அம்மா தன் மகனை
சாப்பிட அழைத்தாள்.

திரும்பவும் அனைவரும் மகன் மருமகளுக்கு வெயிட்
பண்ணினார்கள்.நேரம் செல்லவே அனைவரையும் சாப்பிட
சொன்னாள் அம்மா.

"ஏன் இன்னும் வரலை?" என்று கேட்டவாரே சாப்பிட
ஆரம்பித்தாள் அம்மா.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...." என்று மாப்பிளையின்
தம்பி திரும்பவும் வாயை திறந்தான் .

"டேய் உனக்கு பத்து வயசு தான் ஆகுது, நீ ஒன்னும்
நினைக்க வேணாம். ஒழுங்கா சாப்பிடு" என்று மறுபடியும்
அதட்டினாள் அம்மா.

அவர்கள் மதிய சாப்பாடும் சாப்பிட வரவில்லை. இரவு வந்து
விட்டது. திரும்பவும் அதே கதை தான்.அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டாள், உடனே தம்பி "அம்மா நான் என்ன நினைக்கிறேனா"... என்றான்.

அம்மா கோபம் வந்து சொல்லி தொலை என்றாள்.

"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.
******************************


புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.

Monday, July 13, 2009

பொடிமாஸ்....(13.7.09)

பொடிமாஸ்....

கடந்த சனிக்கிழமை நம்ம ப்ளாகை ஓபன் செய்ஞ்சா
எவனோ ஒருத்தன் ஹாக்(HACK) பண்ணி வச்சிரிக்கான்.
நான் கொஞ்ச நேரம் குப்புற படுத்து யோசிச்சேன்,
ஒன்னும் பிடிபடல.தீடிர்னு பார்த்தா இன்னைக்கு சரியாயிடிச்சு.
ஆனா சனிக்கிழமை வந்த 424 VISITORS என் மேல ரொம்ப
காண்டு ஆயிருப்பாங்க.... அது என் தவறில்லை, தொடர்ந்து
ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.


******************************

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்களில் ஹோ ஈஸா
மற்றும் உன்மேல ஆசைதான் பாடல் வேறு பாடல்களை
நினைவு படுத்தினாலும் கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.
செல்வராகவன் படத்தை பற்றி சொல்லவேண்டாம் அவரின்
சில படங்களில் வக்கிர காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன் பாட்டில் இருந்து சாம்பிள் பாடல் வரிகள்.....

# நான் படைப்பேன் உடைப்பேன் உன் போல கோடி செய்வேன்....

#ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி நீ உன்னை கொன்று என்னை
யாசி........

#என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா.....

என்ன இருந்தாலும் போங்க... முதல் நாள் படம் பாக்குறோம்.


***********************************
ஜெட்லியின் தத்துவம் :

# என்னதான் கலர் கலரா சாம்பு இருந்தாலும்
தலையில போட்ட அது வெள்ளையாதான் நுரை வரும்.

***********************************

ஜோக்:

ஒரு மருத்துவமனையில் நான்கு நர்ஸ்கள் பேசி கொண்டிரிந்தனர்.

முதல் நர்ஸ்: நம்ம டாக்டர் வர வர ரொம்ப டார்ச்சர் பண்ரார்ப்பா
சம்பளம் வேற ஒழுங்கா தரதில்ல. அதனால நான் அவரோட
ஸ்டேட்ஸ்கோப்ல ஒரு சின்ன ரிப்பேர் பண்ணி வச்சிட்டேன்.

இரண்டாம் நர்ஸ்: நான் அவரோட தெர்மாமீட்டர்ல தப்பு தப்ப
டிகிரி காட்ற மாதிரி மாத்திட்டேன்.

மூன்றாம் நர்ஸ்: நான் டாக்டர் டேபிள் டிராயர்யில் உள்ள
condomல ஊசி வச்சி ஓட்டை போட்டுடேன்.

நான்காம் நர்ஸ் மயங்கி விழுகிறார்.

****************************

கடந்த வாரம் நெருங்கிய நண்பனின் அறைக்கு சென்று
இருந்தேன்.சும்மா கொஞ்ச நேரம் ப்ளாக் பத்தி பேசினோம்.
நான் அவன் கிட்ட சும்மா கில்மாவா டைட்டில் சொல்லு
மச்சி என்றேன்.

உடனே அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"பிட்டு படம் பார்க்கும் போது நம் உடம்பில் மிகவும்
உணர்ச்சியுள்ள பகுதி எது
? என்றான்.

நான் "டேய் என்னடா கேள்வி இது" என்றேன்.

"உனக்கு தெரியுமா தெரியாதா" என்றான்.

"அடப்பாவி ஊருக்கே தெரியும்டா" என்றேன்.

"நீ ஏன் எப்பவும் தப்ப நினைக்கிற" என்று தொடர்ந்தான்.
"காது தான் மச்சான் பதில் அதுக்கு". அவனே விளக்கம்
வேற சொன்னான் "இப்போ வீட்ல பிட்டு படம் பார்த்தன்னு
வை, நீ யாரவது வந்துடுவாங்கோல என்ற பயத்தில் உன்
காது தான் பயங்கர உணர்ச்சியா இருக்கும்" என்றான்.

சே தப்பா நினைச்சிடேனே......(நீங்க???)

************************************

கேட்டது:

நேற்று நண்பர்கள் ராமும் அருளும் போன் பண்ணி நீ இதை பத்தி
கண்டிப்பா எழுதி ஆகணும்டா என்றார்கள். மேட்டர் கிழே

சென்னை புரசைவாக்கம் சொர்ண சக்தி அபிராமி தியேட்டருக்கு சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் உள்ளே படம் பார்ப்பவர்களின் படத்தை வெளியே
பெரிய ஓடும் படமாக காட்டுகிறார்களாம். நண்பர்கள்
இருவரும் அனைத்து காதலர்களும் இதை தெரிந்து
கொள்ள வேண்டும் என்று நல் எண்ணத்தோடு என்னிடம் தெரிவித்தனர் அதை நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்
பார்த்து பண்ணுங்க....

(பி.கு:
என் நண்பர்கள் கூட வேறு யாரும் செல்லவில்லை
என்று நம்புவோம்
)

ஜெட்லி பார்வை:

கண்டிப்பா இது ஒரு நல்லா விஷயம்ன்னு நினைக்கிறேன்,
இந்த மாதிரி தங்களை ஒருத்தர் MONITOR பண்றாங்கன்னு
தெரிஞ்சா தியேட்டர் உள்ளே இருப்பவர்கள் எச்சில் தூப்பாமல்
இருப்பார்கள்.வேற எதுவும் சொல்வதற்கு இல்லை.

****************************


எதிர் பதிவு போடும் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

(சும்மா ஒரு பப்ளிசிட்டிக்குதாங்கோ)

சில பேர் பதிவுலகத்தில் எதிர்ப்பதிவு போடுவதே வேலையாக
திரிந்து கொண்டிரிக்கின்றனர். இனிமே யார் எதிர்ப்பதிவு போட்டாலும் அவர்களுக்கு ஞாபகங்கள் படத்தின் டிக்கெட்
அனுப்பி வைக்கப்படும்.அது மட்டும் இல்லாமல் தியேட்டரில்
DROP செய்ய INNOVA காரும் கூட இரு அடியாட்களும் அனுப்பப்படுவார்கள்.(படத்துக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால்,உங்கள் மேல் விழும் குத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல).இது தவிர எங்கள் அண்ணன் தங்க கம்பி
சாம் ஆண்டர்சன் நடித்த யாருக்கு யாரோ பட டிவிடி
உங்களுக்கு தினமும் போட்டு காட்டப்படும்.

***********************

புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.


Tuesday, June 23, 2009

பொடிமாஸ்.....

பொடிமாஸ்....


நல்ல ஜோக்

பெண் உதவியாளர்: "சார், உங்கள் மனைவி போன் செய்து இருக்கிறார்,உங்களை போனில் முத்தமிட வேண்டுமாம்."

மேனேஜர்:"வாங்கி வெச்சுக்க, அப்புறம் எனக்கு குடு".!!!!!

***************************
பொன்மொழிகள்:

படித்தது:

# மோசமானவர்கள்தான், மிகச்சிறந்த அறிவுரைகளை
அளிக்க முடியும்.

-பிலிப் பெய்லி.


# பெண்கள் நமக்கு சோதனையான காலத்தில் ஆறுதல்
அளிக்கிறார்கள்.பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு
ஆறுதலே தேவைப்படாது.

-டான் ஹெரால்ட்.

************************
அழகான காதல் படம்


(இதுக்கு பேர் தான் நண்பனின் காதலுக்கு உதவி செய்வதோ )

*************************

நான் எழுதியது:

நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
பூ போல் சிரித்தாள்
செல்லமாய் வெட்கப்பட்டாள்
என் உடம்பு சிலிர்த்தது
அவள் அருகில் சென்றேன்
பின்பு தான் புரிந்தது
அவள் ஹெட் போனில் யாருடுனோ பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........

***************************
டாஸ்மாக் பக்கங்கள்:

அவன் என்னை பாரில் பார்த்தான்
அவன் என்னை காரில் அழைத்து வந்தான்
அவன் என் மேலாடையை திறந்தான்
அவன் என்னை உதட்டில் வைத்தான்
கோபம் கொள்ளாதீர் , நான் ஒரு மது பாட்டில்.






*********************************

மாயாண்டி குடும்பத்தார் நமக்கு உணர்த்தும் பாடம்.

நண்பர் சுகுமார் இந்த படத்தை முதல் நாளே பார்த்து
விட்டார்.நான் அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்று
கிண்டல் அடித்தேன்,கடந்த வாரம் தான் இந்த படத்தை
நான் பார்க்க நேர்ந்தது.ச்சே, எப்படி இந்த படத்தை மிஸ்
பண்ணோம் என்று எனக்கு தோன்றியது. உண்மையில்
படம் மிக அருமையாக இருந்தது.பொன்வண்ணன்,சீமான்
மிகவும் இயல்பாக நடித்து இருந்தனர்,அவர்களை போல்
நமக்கு அண்ணன்கள் இல்லையே என்று தோன்றுமளவுக்கு
தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படித்தி இருந்தனர்.
படத்தில் ஒரு குறை என்றால் அது தருண் கோபி
காதல் காட்சிகள் தான் மிக கேவலமாக இருந்தன.படத்தின்
போது சில காட்சிகளில் என்னை அறியமால் என் கண்ணில் கண்ணீர் தூளிகள் எட்டி பார்த்தன. ஆனா, இந்த படத்தில்
இருப்பது போல் அண்ணன்மார்கள் இப்போது யாருமில்லை
சிலரை தவற.ஒரு ஆபாசமில்லாத குடும்ப படம்,அன்பு
மட்டுமே நிலையானது என்பதை கூற வந்துள்ள படம்
மாயாண்டி குடும்பத்தார்.


பிடித்தது:

படத்தில் சீமான் பேசும் வசனம்:

"இந்த காலத்துல கள்ள காதல் கூட நாலு பேருக்கு
தெரிஞ்சு செஞ்சுராயிங்க ..ஆனா கூட பிறந்த பிறப்புக்கு
ஒருத்தர்க்கும் தெரியாம தானே உதவ வேண்டி இருக்கு."
**********************************************

நன்றி: தினத்தந்தி

ஹென்றி வில்லியம் ஆலிங்கம்.(Henry William Allingham )


மேல உள்ள ஹென்றி தாத்தாவுக்கு போன ஜூன் ஆறாம்
தேதி தன் 113 வயதை அடைந்தார் . உலகத்தில் வாழும்
அதிக வயதானவரில் இவரும் ஒருவர், இந்த தாத்தா.
இவர் இரண்டு உலக போரிலும் பங்கெடுத்து கொண்டவர்.
சரி என்னடா மேட்டர் அப்படின்னு கேக்குறிங்களா?....

இவரின் வாழ்வின் ரகசியம் குறித்து கேட்டதற்கு:

மது, புகை பிடிப்பது, பெண் இந்த மூன்று பழக்கங்களும்
தான் இந்த வயது வரை தன்னை வாழ வைப்பதாக
அவர் கூறியுள்ளார்.


டிஸ்கி:குடி குடியை கெடுக்கும்,புகை பழக்கும் உடலுக்கு
கேடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது.

****************************

உங்கள்

ஜெட்லி

Tuesday, June 9, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....

************


படித்தது

சைவ ஜோக்:

ஒருவன்:"கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதுல என்ன
சௌகரியம்?"

இன்னொருவன்:"படுக்குற கட்டில்ல இருந்து ரெண்டு

பக்கமும் கிழே இறங்கலாம்".

************************
பார்த்தது:

இப்போலாம் புது விதமான பேஷன் நம்மூர் நடிகர் நடிகைகளிடம் தொற்றி கொண்டுள்ளது. அதாவது இப்போது நடிகர் நடிகைகள் அவர்கள் பிறந்த நாளை எதாவது ஒரு அநாதை இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சரி அவுங்க கொண்டாடருது நல்ல விஷயம் தான். ஆனா அதை அடுத்த நாள் காலையில் பேப்பரில் படம் பிடித்து போடுவது கண்டிப்பா விளம்பரம்ன்னு தான் நினைக்க தோணுது. ஆனா நம்ம தல அஜித் தான் ரியல் ஹீரோ விளம்பரமே இல்லாம செய்வார். அவரை பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.

**********************************
பொன்மொழிகள்:

# 'தாராள மனசு' என்பது வாரி கொடுப்பதில் இல்லை.
தேவையை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் கொடுப்பதில்
தான் இருக்கிறது.


-பருஎர்.

# கால் இல்லாத ஒருவன், மற்றவர்களுக்கு ஓட கற்று

கொடுப்பது போலத்தான் - விமர்சகரின் பணியும்.

- கேனிங் பெல்லோக்.

******************************
பிடித்தது:


இந்த வாரம் நமது வலைப்பதிவு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அனுபவமும், தலைவர் சுரேஷ்(பழனி) அவர்களின் சிறுகதையும், ப்ரியமுடன் வசந்தின் TOP 10 கனவுகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.... நீங்களும்
அவர்களது பேரை கிளிக் செய்து படித்து ரசிக்கவும்......

**************************



கடந்த சனிகிழமை பௌர்ணமி அன்று நான்,சித்து, நட்டு, யுவராஜ்,சுகுமார் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலம்
சென்று வந்தோம்.நான் அன்று தான் முதல் முறை
கிரிவலம் சென்றேன், அருமையாக இருந்தது.

சித்துவின் கார் ஓட்டும் திறமையை கண்டு நாங்கள்
அனைவரும் வி(ப)யந்தோம்(என்ன நட்டு, யுவராஜ் கரெக்ட் தானே!).அதுவும் அவர் ஷார்ப் கட் பண்ணும் போது எங்களுக்கு ஒரு கலக்கு கலக்கும் பாருங்க சான்சே இல்லை.சித்து அவர்கள் F-1 பந்தய ரேஸில் ஓட்டினால் நம் நாட்டுக்கு கோப்பை நிச்சயம், அடுத்த மைக்கல் ஷுமேக்கேர் ஆக வாழ்த்துக்கள் சித்து.

நண்பர் சுகுமாரை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்,
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், நல்ல எண்ணங்களை உடையவர். முன்பெல்லாம் பத்து ரவுண்டு அடித்தாலும் சும்மா கில்லி மாதிரி நிப்பாராம்(பி.கு: ராயபுரம் மைதானத்தில் அவர் ரன்னிங் ரவுண்டு போவதை சொன்னேங்க).

நான் ஒரு பத்து நிமிஷம் சித்துவிற்கு ஓய்வு கொடுப்பதற்கு சிறிது நேரம் காரை டிரைவ் செய்தேன், அப்போது நண்பர் நட்டு அவர்கள் தன் தாத்தா கண்ணுக்கு தெரிவதாக கூறியதால் அதோடு நான் கார் ஓட்டுவதை நிறுத்தி கொண்டேன்.

**********************************
பார்த்தது :


சமீபத்தில் டி.வி.யில் நான் மிகவும் ரசித்து பார்த்த விளம்பரம் ஹிந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் நடித்த ரிலையன்ஸ்
நெட்வொர்க் விளம்பரம். அந்த விளம்பரம் என் மனதை மிகவும்
கவர்ந்தது. அதில் ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தன் பழைய
நண்பர்களுக்கு போன் செய்து மகிழ்வார். எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்த உடன், ஒரு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குனருக்கு மனம் கனிந்த பாராட்டுகள்.

***************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள் JOHNNY DEPP.

இன்று ஜூன் 9 ஆம் தேதி ஜானி டேப் (johnny depp) அவர்கள் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜாக் ஸ்பரொவ் (jack sparrow) கதாபாத்திரம் மூலம் pirates of carribean படத்தில் நம் அனைவரது உள்ளதையும் கவர்ந்தவர்.இவர் மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆனால் இதுவரை அவருக்கு
கிடைக்கவில்லை.

இவர் ஆரம்ப காலத்தில் telemarketing வேலை செய்து கொண்டிரிந்தார்.பின் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மூலம் படங்களில் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் பல முறை போதை பொருள் வழக்கில் கைது ஆகிரிக்கிறார். ஒரு முறை பத்திரிகையாளரை தாக்கியதற்கும் கைதானார். ஆனா இதெல்லாம் அங்க சகஜம்,மேலும் இவர் நல்ல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவருக்கு 46 வயது என்று என்னால் நம்ப முடியவில்லை......

*******************


மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 4 , பொடிமாஸ் 3 , பொடிமாஸ் 2 , பொடிமாஸ் 1 .

************

உங்கள்

ஜெட்லி


Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)



நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.



எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.



அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

Wednesday, May 20, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ் ...............


குஸ்வந்த் சிங் ஜோக்:


"அப்பா உங்களக்கு இருட்டை கண்டால் பயமா ?" - குழந்தை கேட்டது


"இல்லையே. யார் சொன்னார்கள், எனக்கு இருட்டை கண்டால்
பயமென்று?" - அப்பா சொன்னார்


"யாரும் சொல்லவில்லை. பின்னே நீங்கள் ஏன் அம்மாவின் படுக்கையில் ஏறி அவளுடைய போர்வைக்குள் புகுந்து கொள்கிறிர்கள்?"
-குழந்தை மறுபடியும் கேட்டது.
(விவகாரமான புள்ள)

********************

பொன்மொழிகள்:


@ உன்னை நீ நாணயமானவனாக மாற்றி கொண்டால்,
உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்து விட்டான் என்று
நீ திடமாக நம்பலாம்.--தாமஸ் கார்லைல்.



@ ஞாயிற்றுக்கிழமை தவறாமல் பிரார்த்தனை கூட்டத்திற்கு
வருவதை வைத்து, ஒருவரை எடை போட கூடாது. அவர்
மற்ற கிழமைகளில் என்ன செய்கிறார் என்பதையும் கவனிக்க
வேண்டும்.--தாமஸ் புல்லர்.

********************


வரும் சனிகிழமை நான், சித்து, அருண் , இலக்கியம் மற்றும் பலர் ஏற்காடு
செல்வதால் ஒரு நாலு நாளைக்கு எங்களிடம் இருந்து உங்களுக்கு
விடுதலை. இது நாப்பத்தி எட்டாவது இடுகை..... ஏற்காடு போயிட்டு ரூம் போட்டு யோசிச்சு எங்களது அம்பதாவது இடுகையை மேலும் சிறப்பாக வெளியிடுவோம் என்று நம்புகிறேன் .


*******************



நீங்கள் எல்லாம் எந்த வயசில் குடிக்க ஆரம்பித்திர்கள் ....கிழே நம்ம
பய புள்ளைய பாருங்க ..........





என்ன கொடுமை சரவணன் இது!

*************************************

ஹிட்லரின் நல்ல குணங்கள்:

சர்வாதிகாரியான ஹிட்லர் பல விருதுகளை பெற்ற ஒரு சிறந்த
போர் வீரர். அவர் ஒரு vegetarian . புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத
அவர், எப்போதாவது பீர் மட்டும் அருந்துவார். தன மனைவியை தவிர, மற்ற பெண்களோடு, அவர் தொடர்பு வைத்து கொண்டதே கிடையாது. உலகிலேயே மிக பெரிய கார் உற்பத்தியாலராகிய ஹென்றி போர்ட், ஹிட்லரின் விசிறி. போர்டுடைய ஆபீஸ் மேசை மீது ஹிட்லர் உடைய போட்டோ வைக்கபட்டிருக்கும்.

***************************************


கேட்டது:


அண்மையில் பிக் F.M இல் பாஸ்கி அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு என்னை கவர்ந்தது. அதாவது ஜானி படம் ரீமேக் தொடர்பாக அவர் கூறியதாவது:

"வர வர நம்ம நாட்டுல கதைக்கு பஞ்சம் வந்துடிச்சி போல, எல்லோரும் ரீமேக் படம் எடுக்க ஆரம்பிச்சிடாங்க, அதுவும் பழைய ரஜினி படத்த எடுக்குறதுல ஆர்வமா இருக்காங்க.ஆனா இந்த பழைய படத்த ரீமேக் பண்ணும் போது அந்த originality போய்டுது. நான் என்ன சொல்ல வரானே ரீமேக் படம் எடுங்க ஆனா ரிலீஸ் பண்ணும் போது அதுக்கு பக்கத்துக்கு theatreல பழைய ரஜினி ஜானி படத்தையும் ரிலீஸ் பண்ணனும். அப்போ நாம பாப்போம் எந்த படத்துக்கு கூட்டம் போகுதுன்னு".

பாஸ்கி சொல்றதும் உண்மைதானே. ரீமேக் பண்ணுகிறேன் என்று சொல்லி படத்தை கெடுத்து விடுகிறார்கள்.

****************************


இந்த வார சிந்தனை:
-------------------------------


நம்முள் பல பேர் இதை பத்தி யோசிச்சி சிந்திச்சி சந்திச்சி இருப்போம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க. அதாவது விஜய் படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நூறு நாள் ஓடுதே அது எப்படின்னு. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க இப்போ பாருங்க கஜா,வல்லமை தாராயோ, சற்று முன் கிடைத்த தகவல் போன்ற உப்புமா படங்கள் நூறு நாளை தாண்டி ஓடுகிறது. ஆனால் வெண்ணிலா, பொம்மலாட்டம் போன்ற நல்ல படங்கள் நூறு நாளை நெருங்குவதில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது

" நூறு நாள் ஓடுற படமெல்லாம் நல்ல படமும் இல்ல,

இருபது நாள் ஓடுற படமெல்லாம் மொக்கை படமும் இல்ல."

(உங்கள் வாய்ஸ்: வேலை எதுவும் இல்லன இப்படிதான் சிந்திக்க தோணும்)

****************************************


Saturday, May 2, 2009

பொடிமாஸ்.......

பொடிமாஸ்.......



அஜித் பேட்டி:

(ஆஞ்சநேயா படம் ரிலீஸ் ஆன டைம்)
(ஆன எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை ஒரு பதில் மட்டும் என் மனதில் ஆழமா பதிந்தது)


நிருபர்: நீங்கள் நடித்ததில் உங்களக்கு பிடித்த படம் எது?
அஜித்: நான் நடிச்ச படத்தில் பாதி படம் நான் பார்த்ததில்லை , என்னா எனக்கு டைம் கிடைக்கவில்லை.
நம்ம டச்:
நான் இந்த பேட்டியை படித்து விட்டு அன்று FDFS ஆஞ்சநேயா படம் சென்றேன், அப்புறம் அவர் ஏன் அவர் படத்த பாக்கரதில்லைனு எனக்கு புரிந்தது. அன்றிலிருந்து தல படம் நல்ல இருந்ததான் போய் பாக்கறதுன்னு முடிவு பண்ணேன். ஆதனால் நான் திருப்பதி, ஆழ்வார், ராஜா போன்ற கண்டத்தில் இருந்து தப்பித்தேன். ஆனாலும் பில்லா , ஏகன் போன்ற படங்களை FDFS சென்றேன். என்னா ஒரு ஈர்ப்பு அதான் தல.
********************************************************************************
பொது அறிவு கேள்வி:

பொது அறிவு கேள்வி:

டாக்டர் விஜயிம் நடிகை சங்கவியிம் எத்தனை படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்?

உங்கள் பொது அறிவை நிரூபிக்க பின்னூட்டத்தில் உங்கள் பதிலை தட்டுங்கள்.

சரியான விடை அனுப்புபவர்களுக்கு:

விஜய் நடித்த ஆதி மற்றும் குருவி படத்தின் DVD இலவசமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

(பி.கு: இதனால் உங்கள் வீட்டில் பிரச்னை வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.)


Sunday, April 26, 2009

பொடிமாஸ்..........

***************************************************************************************

எப்போதோ படித்தது:


ஒரு வீட்டில் கணவன் ரெண்டு சைக்கிள் tube உடன் உள்ளே நுழைகிறார்.

மனைவி: என்னங்க கையுல?

கணவன்: ஒரு சைக்கிள் கடையுல சைக்கிள் tube ஒண்ணு வாங்கன ஒண்ணு இலவசம்
அதான் வாங்கிட்டு வந்தேன்.

மனைவி: ஏங்க நீங்க என்ன பைத்தியிம்மா, நம்ம கிட்டதான் சைக்கிள் இல்லையே.

கணவன்: நீ கூடத்தான் நேத்து ரெண்டு பிரா வாங்கின நான் எதாவது கேட்டனா!!!!
***************************************************************************************
எப்போதோ படித்தது:

ரோட்டில் இருவர் சண்டை போட்டு கொண்டுஇருந்தனர், அவர்களுக்கு
பக்கத்தில் ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான் இதை கண்ட ஒரு வழிப்போக்கன்.

அந்த சிறுவனிடம் சென்று

வழிப்போக்கன்: ஏன்ப்பா அழுவுற?

சிறுவன்: எங்கப்பா சண்டை போட்டுட்டு இருக்காரு.....

வழிப்போக்கன்: இந்த ரெண்டு பேர்ல யாரு உங்க அப்பா?

சிறுவன்: அதுக்காகத்தான் சண்டையே நடக்குது.

***************************************************************************************
சமீபத்தில் ரசித்த பாடல் குளிர்100 degree படத்தில் Bobo Sashi அவர்கள்
இசை அமைத்த மனசெல்லாம் பாடல், இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாட்டை கேட்டால் அனைவருக்கும் தங்கள் நண்பனின் நினைவுகள் வந்து போகும்..... டைம் இருந்த கேட்டு பாருங்க .....

***************************************************************************************
கந்தசாமி ரசிகன்

டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டில்க்கு ரெண்டு அல்லது மூணு ரூபாய் அதிகமாக வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்...ஒரு கடையில் ஒரு நாள் சராசரியாக 5000 பாட்டில் விற்றால் 15,000 ரூபாய் லாபம் பார்க்கிறார்கள்... ...இதில் போலீஸ்க்கும் சரி பங்கு போய்விடும்.
இந்த மாதிரி சின்ன சின்ன ஊழலை நம்மால் நிறுத்த முடியவில்லை. 69 ரூபாய் கொடுத்தால் தான் குளிருட்டியா ஸ்ட்ராங் பீர் கிடைக்கும் இல்லையேல் ஸ்டாக் இல்லை சில் இல்லை என்பார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.


இதையெல்லாம் தட்டி கேட்க வருவாரா நம்ம கந்தசாமி.........