Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts
Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts

Wednesday, July 28, 2010

சினிமா பேசுவோம்!!!

சினிமா பேசுவோம்!!!

சும்மா அரட்டை அடிப்போம்....சினிமா பத்தி ஏதாவது
பேசுவோம்....


நமக்கு பொழுது போவனும் அதுக்காக தான் நாம படத்துக்கு போறோம், வெளியே சுத்த போறோம்...வேற என்னலாமோ பண்றோம். சில பேருக்கு சினிமானாலே அலர்ஜியா இருக்கலாம்...சில பேருக்கு வெளியே சுத்துருது அலர்ஜியா இருக்கலாம்...நாம அவங்களை பத்தி பேச வேணாம்,அவங்களுக்கு பிடிக்கலைனா நாம ஏன் போய் கட்டாய படுத்திக்கிட்டு... அதனால அவங்களை விட்டுருவோம்....!!


அதுக்காக சினிமா பார்க்கறவன் எல்லாம் முட்டாள்னு சொல்றாங்க
பாருங்க அவங்களை விட முடியாது. யாரோ ஒருத்தர் நம்மை
பார்த்து வாரம் ஆனா போது சினிமாவுக்கு போயிருவாண்ட என்று
சொன்னால் சில பேருக்கு கோபம் வரலாம். ஆனா எனக்கு வராது...
காரணம் ஒருத்தர் சொன்னது தான் " வாரம் ஆனா சினிமாவுக்கு
போனமா படத்தை என்ஜாய் பண்ணினோமா...நம்மாளா யாருக்கும்
எந்த தொந்தரவும் இல்ல...". ஆனா அவனும் படத்துக்கு போகாம
நம்மையும் நோண்டிக்கிட்டு அடுத்தவனையும் நோண்டிக்கிட்டு இருக்கறவங்களை என்ன சொல்றது...??!!


அதே மாதிரி படத்தை பற்றி கருத்து சொல்றது....என் நண்பன்
எந்த படத்தை பார்த்தாலும் பார்க்காத மாதிரி அந்த படத்தின்
கருத்தை கேட்பான்... உதராணமாக பையா படம் வந்தப்ப கேட்டான்...
"நான் அதை டைம்பாஸ் படம்...ஓகே" என்றேன். உடனே நண்பன்
"என்னடா கதையே இல்லை அதை போய் நல்லா இருக்குனு"
நக்கல் அடித்தான். உடனே நான் "அங்காடி தெரு பார்த்தியா"
என்று கேட்டேன். "இன்னும் இல்லை...அழுவாச்சி படமாமே அது"
என்றான் சிரித்து கொண்டே. "ஆமாண்டா.. கதை உள்ள படத்தை
போய் பார்க்காதீங்க....ஆனா பொழுது போற படத்தை பத்தி
சொன்னால் மட்டும் கிண்டல் பண்ணுங்க..." என்று கொஞ்சம்
சீரியஸ்ஆகவே சொன்னேன்.

நான் எனக்கு பிடிக்காத படங்களை பலருக்கோ சிலருக்கோ பிடித்து
இருந்தால் நான் அந்த பலர் சிலர் பற்றி விமர்சிப்பதில்லை.படத்தை பற்றி மட்டுமே பேசுவேன். உங்க டேஸ்ட் வேற என் டேஸ்ட் வேற... உங்களுக்கு பிடிச்சு இருந்தா சந்தோசம் தான் என்றும் எனக்கு ஏதாவது டவுட் இருந்தா கேட்டுப்பேன் அவ்வளவு தான். ஆனா ஒரு சிலர் தங்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றால் படத்தை பற்றி திட்டுவது மட்டும் அல்லாமல் படம் நல்லா இருக்கு என்று சொன்னவனையும் சேர்த்து திட்டுவார்கள் கலாய்ப்பார்கள். அதில் என்ன திருப்தி அவர்களுக்கு என்று
தெரியவில்லை....!!


சரி...நம்ம தமிழ் சினிமா எப்படி போகுது....ஆரோக்யமா போகுதா
இல்ல வீக்ஆ போகுதானுலாம் பார்க்க எனக்கு தெரியாது. இந்த
ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்லா இருக்கு சூப்பர்னு
சொல்ற மாதிரி சில படங்களை மட்டுமே சொல்ல முடியும்
என்பது மட்டுமே உண்மை. வேலுபிரபாகரின் காதல் கதைக்கு
முன் , பின் என்று தமிழ் சினிமாவை பார்த்தால் இப்போ

வர்ற படங்களில் அட்டு காட்சிகள் வைத்து விளம்பரம்
செய்து துட்டு பார்க்கிறார்கள். புதிதாக சாந்தி என்று ஏதோ
ஒரு அட்டு படம் வேற வர போது போல.... அதற்கு ஏற்ற
மாதிரி வூட்லாண்ட்ஸ், கோபிகிருஷ்ணா தியேட்டர்கள்
இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தருகின்றன. ஏற்கனவே
சொன்ன மாதிரி அவளின் உணர்ச்சிகள் என்று ஒரு அட்டு
படம் வருகிறது....!! (படத்தோட பேர் மட்டும் தான் நல்லா
இருக்கும்....)


முக்கியமா இவ்வளவு நேரம் மொக்கை போட்டதே இதுக்கு தான்... நேற்று பேப்பரில் வந்த செய்தி இது...

" சென்னை சினிமா தியேட்டரில் நடனமாடி ரகளை.....
படம் பார்க்க விடாமல் தொல்லை கொடுத்த 4 மாணவர்கள்
உள்பட 6 பேர் கைது"


இது எந்த தியேட்டர்ல நடந்ததுனு சொன்ன நம்ப மாட்டீங்க...
சத்யம் சினிமாஸ்இல் தான் இந்த சம்பவம் நடந்தது.
சத்யம் மாதிரி தியேட்டர்களில் போனாலே ஒரு ரேன்ஜ்...
விசில் அடிக்க தோணினா கூட அடிக்க யோசிப்போம்...
ஆனா இப்படி ஆறு பேரு தண்ணியை போட்டுட்டு நல்லா
கூத்து அடிச்சு இருக்காங்க...இதெல்லாம் எங்க ஏரியா
தியேட்டரில் சகஜம்ங்க.. ஆனா இப்ப எல்லாம் இந்த மாதிரி
டான்ஸ் ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க....


சினிமா பார்க்கும் போது எப்படி கமெண்ட் வருதுனு நான்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பா ஒரு மொக்கை
படத்துக்கு கமெண்ட் மட்டுமே ஒரு சிறு இன்பம். பல நேரங்களில்
படத்தை விட வரும் கமெண்ட்கள் நன்றாக இருக்கும்.ஆனா
அதுவே நல்ல படத்துக்கு கமெண்ட் அடிக்கும் போது தான்
நமக்கு தொந்தரவு ஆயிடுது. துணை கமிஷ்னர் வாழ்க...!
அவர் தான் இந்த தொந்தரவு நடந்தப்ப படம் பார்த்துட்டு
இருந்தாராம். நல்ல வேளை அவர் முதல் நாள் கணபதிராமில்
சிங்கம் பார்க்க வரல, வந்து இருந்தார்னா இந்நேரம் பாதி பேர்
உள்ளே தான் இருந்து இருக்கணும்....!!


அடுத்து....இன்னைக்கு....

பட தயாரிப்பாளரிடம் 25 ஆயிரம் லஞ்சம்...
சென்னையில் சினிமா தணிக்கை அதிகாரி கைது..!!


நான் நினைச்சேன்ங்க....தணிக்கை குழுவில் ஏதோ உள்ளடி வேலை
நடக்குதுனு. எல்லாம் துரோகம் நடந்தது என்ன?? படத்தை
பத்தி தான். அந்த படத்துக்கு 'ஏ' தர சான்றிதழ் கொடுத்திருக்கும் போதே நினைச்சேன். ஒரு படத்தை ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி அதை பார்த்து மக்களுக்கு எது எல்லாம் தேவை, தேவையில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது...எவ்ளோ பெரிய வேலை இது.... அதை சிறப்ப செய்வாங்கனு பார்த்தா இங்கயும் லஞ்சமா.... மக்களே இதில் இருந்து என்ன கருத்து நாம கத்துக்கணும்னா....இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!


இந்த போஸ்ட் மொக்கையா, மரண மொக்கையா என்று
நீங்களே முடிவு செய்து...ஒரு முடிவுக்கு வாங்க....

ஜெட்லி...(சரவணா...)

Wednesday, April 14, 2010

வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!

வாடா - ஒரு முன்னோட்டம்.

"வாடா" அப்படின்னு ஒரு படம் வர்ற வெள்ளிக்கிழமை ரீலீஸ்
ஆக போகுதுங்க.கடந்த ரெண்டு வாரமாவே பேப்பர்இல் விளம்பரம்
வந்துகிட்டுருக்கு.என்னது வடைனு வச்சிருந்த டீ கடைக்கு வர்ற
கூட்டமாவது வந்திருக்குமா....??
ஹலோ படம் ரீலீஸ் ஆகட்டும், நைட் ஒன்பது மணிக்கு டாஸ்மாக்ல பின்னுர கூட்டம் மாதிரி பிச்சுக்க போகுது பாருங்க.....!!

(கிழே இருக்கும் படத்தை பார்த்து மெரசல் ஆனால் கம்பெனி
பொறுப்பல்ல.....எனக்கு ஒரு டவுட் தான் இந்த படத்தில் சுந்தர்.சி
அவர்கள் எத்தனாவது கிரில் வண்டி ஓட்டுகிறார்?? தெரிந்தவர்கள்
சொல்லவும்)



இந்த படத்தின் மீது எனக்கு எப்படி ஈர்ப்பு வந்ததுன்னா....மர்மதேசம் படம் பார்க்க வூட்லண்ட்ஸ் தியேட்டருக்கு போனேன்.படம் முடிஞ்சு வெளியே வரும் போது தான் வாடா படத்தின் ஸ்டில்லை வாசல்ல கவனிச்சேன்...
அப்பதான் முடிவு பண்ணேன் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாதுனு.உடனே அங்கே நின்ன செக்யூரிட்டியிடம் "அண்ணே வாடா படத்துக்கு எப்பணே ரிசர்வ் ஸ்டார்ட் பண்ணுவீங்க??" என்று கேட்டேன்.அவர் என்னை டெர்ரர்ஆக
பார்த்து வேறு பக்கம் திரும்பி கொண்டார்."இந்தாங்கணே 200 ரூவா எனக்கு வெள்ளிக்கிழமை ஒரு அஞ்சு டிக்கெட் எடுத்து வச்சிக்கிங்க,கண்டிப்பா வருவேன்"என்று அங்கிருந்து கிளம்பினேன்.


இப்ப என்ன பிரச்சனைனா நண்பர்களை படத்துக்கு கூப்பிட்டா
ஒருத்தன் என்னனா எங்க ஆயா வுட்டுக்கு போறேன், இன்னொருத்தன் என் நட்பே வேணாம்னு போய்ட்டான்.....மச்சி நீ வாடா,மாமே நீ வாடா என்று யாரை கூப்பிட்டாலும் எஸ் ஆகி போகிறார்கள்.அதுக்கு அப்புறம் யாரையும் கூப்பிடல. நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்குங்க...கவுண்டர்லலாம் டிக்கெட் கிடைக்காது எல்லாமே பல்க் புக்கிங் பண்ணீட்டாங்க.அதனால யாருக்காவது இந்த காவியத்தை பார்க்கனும்னு தீடிர்னு தோணிச்சுனா என்னை காண்டக்ட் பண்ணுங்க.

வாடா அப்படின்னு மரியாதை இல்லாம டைட்டில் வச்சா எவன் தியேட்டருக்கு வருவான் அப்படின்னு நீங்க நினைக்கிறது தப்பு."வாடா"வின் அர்த்தம் நாயகி நாயகனை பார்த்து வாடா என்று அன்பாக கூப்பிடவதாக இருக்கும் என்று ஸ்டில்லை பார்த்து நினைத்தேன் ஆனால் ட்ரைலரை பார்த்தவுடன் தான் தெரிந்தது அப்படி இல்லை என்று.சுந்தர் அவர்கள் வில்லனை வாடா வாடா என்று பெண்டு எடுப்பார் என்று தெரிகிறது.


நிறைய நண்பர்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்த அன்னைக்கு தூக்கம் வரலன்னு சொன்னாங்க.நான் வாடா படத்தின் ட்ரைலரை பார்த்ததில் இருந்து தூக்கம் அடியோடு போச்சுங்க!!
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்!!
அதுவும் கடைசியில் பைக் மேல... முடியல....நீங்களும் முடிஞ்சா பாருங்க....



வாடா படத்தின் சிறப்பம்சங்கள் சில:


# படத்தை பார்க்காம நாம எந்த ஒரு தப்பான முடிவுக்கும் வர
கூடாது.ஆனா இந்த படத்தை பத்தி முடிவு பண்ண அந்த பைக்
சீன் ஒன்னு போதும்னு நினைக்கிறேன்.இந்த படம் குவாட்டர்
அடித்து செல்ல சிறந்த படம் என்று டாஸ்கர் குழுவால் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

# மேலும் வாடா படம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.வாடா படத்துக்கு இதை விட ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்காது என்று ஊருக்குள் பேசி கொல்கிறார்கள்.


# நீண்ட நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் வாடா படத்தில் தான் போட் சேசிங் காட்சிகள் வருகின்றனவாம்.அந்த காட்சியை கேரளாவில் உள்ள அளப்பியில் எடுத்து உள்ளனர்.அந்த காட்சிகளை பார்ப்பவர்களுக்கு மயிர் கூச்சரியலனாலும் வேற ஏதாவது கூச்சரிய வாயிப்பிருக்கு!! தலைவலியை சொன்னேன்ங்க....


# சுந்தர்.சி அவர்கள் இந்த படத்தில் கெட்-அப் மாற்றியுள்ளார்...
அட நீங்க வேற சூப்பர் பாக்கு கலரில் ப்ளீச் செய்து இருக்கிறார்னு
சொன்னேன்ங்க.

# மேல உள்ள ஸ்டில்லை பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான படம்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்...எப்படினா எப்பவும் தமிழ்சினிமாவில் ஹீரோ மட்டும் தான் கோலி மேல காலை வச்சி ஹீரோயினி மேல உழுவார் ஆனா இதில் கூடவே காமெடியனும் சேர்ந்து விழுவுது தான் படத்தின் சிறப்பு!!

# வாடா படம் உலகப்படங்களுக்கு இணையாக எடுத்து உள்ளனர் என்று ஏதோ ஒரு வட்டம் தெரிவிக்கிறது.அதிலும் மொக்கை போட
விவேக் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.நாயகி படம் முழுவதும்
தாராள கொள்கையை கடைப்பிடிப்பார் என்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.



திரும்பவும் சொல்றேன் போனா வராது வந்தா போகாது கடைசி நாலு டிக்கெட் தான் இருக்கு கடைசி நாலு டிக்கெட் தான் இருக்குது.வாடா என்ற மெகா அதிரடி காவியத்தின் நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்கு. விருப்பமுள்ளவர்கள்
மற்றும் வாழ்வில் வெறுப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு டிக்கெட் அளிக்கப்படும்.கடைசி நேரத்தில் டிக்கெட் கேட்பதை தவிர்க்கவும்.


வாடா படத்தை டாவா பார்க்க சீக்கிரம் அணுகவும்.....!!

வாருங்கள் வாடா படத்தை பார்ப்போம் சமாதி நிலையை அடைவோம்!!


வாடா படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்கு அளித்தது என் வாழ்நாள் பாக்கியமே. இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்.மேலும் இந்த உலகப்படத்தை பற்றி டவுட் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெளிவுப்படித்தி கொல்லவும்


ஜெட்லி.....

Tuesday, March 30, 2010

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!!

கோவா vs தமிழ்ப்படம் விளம்பர மோதல்!! இன்ன பிற விளம்பரங்களும்

சமீபத்தில் நான் ரசித்த மற்றும் சிரித்த சில விளம்பரங்களை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.நீங்க இந்த
விளம்பரத்தை பார்த்து இருக்கலாம் இருந்தாலும் வெளிநாட்டில்
உள்ளவர்களுக்கும் பேப்பர் படிக்காதவர்களுக்கும் என்னால்
முடிந்த சிறு உதவி!!

முதல்ல....

கோவா படத்தின் விளம்பரம்...கடந்த வெள்ளிக்கிழமை கோவா படத்தின் 9 வது வாரம் வெற்றி??? விளம்பரத்தில் சரோஜா சிவா ஸ்டில்லை போட்டு "எனக்கு தமிழ்ப்படம்- களிலேயே மிகவும் பிடித்த படம் கோவா" என்று தமிழ்ப்படத்தை நக்கல் அடித்தனர் கோவா குழுவினர்.தமிழ்ப்படம் விளம்பரத்தில் "ஊரறிய ஜெயிச்சவன் நான்தாண்டி,என்கிட்டே
காட்டாத பூச்சாண்டி" என்று அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில்
சிவா நடிக்கும் பூச்சாண்டி படத்தின் வாசகத்துடன் வெளம்பரம் வந்தது....









ஆஹா...சண்டையே ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தேன்...
சண்டே பேப்பரில் தமிழ்ப்படம் விளம்பரத்தில் வந்ததை
நீங்களே படத்தை கிளிக் பண்ணி பாருங்க....கோவா படத்தை
செமையா ஒட்டி இருக்காங்க!!





சிவா: அண்ணே கோவாக்கு டூர் போனீங்களே என்ன ஆச்சு??

சண்முகசுந்தரம்: ஊராப்பா அது? ஒரு மூஞ்சி கூட பார்க்குற
மாதிரி இல்ல.அதான் திரும்பி இங்கியே வந்துட்டேன்.




ஆனா ரெண்டு படத்துக்கும் மிக பெரிய ஊறுகாயாக சிவாவும் ஷண்முகசுந்தரமும் இருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!!




கண்டிப்பா இவங்க இதை ஜாலிக்கு தான் பண்றாங்கனு நினைக்கிறேன்.நாம் நண்பர்களை கலாய்ப்பது போல் அவர்கள் பேப்பர் விளம்பரத்தில் செய்கிறார்கள் போலும். ஏற்கனவே ndtv hands - up ஷோவில் மாற்றி மாற்றி கலாய்த்து இருக்கிறார்கள்.உங்களை யாராவது ஒட்டுனா நீங்க திருப்பி கலாய்க்க மாட்டீங்களா.... ஓட ஓட ஓட்டுறது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்!!



சில பேர் இதை நம்மை april fool பண்ணத்தான் செய்கிறார்கள்
என்று சொல்கிறார்கள்.அவுங்க மாத்தி மாத்தி கிண்டல் பண்றதை
நாம் ரசிக்கிறோம் அவ்ளோதான்...இதில் april fool பண்ண என்ன
இருக்கிறது...!


இன்னைக்கு கோவா விளம்பரம் பாருங்க.....கொஞ்சம் ஓவர்ஆ தான் இருக்கு....கோவா சூப்பர் படமாக இருந்தா அவர்கள் விளம்பரம் செய்வதை ரசிக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் விளம்பரத்தை பார்த்தால் "செத்த கிளிக்கு ஏன்டா சிங்காரம்" என்று தான் தோன்றுகிறது.....

(செவ்வாய்க்கிழமை(இன்றைய) கோவா விளம்பரம்)


நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....


**************************************

அசல் வெற்றி...

ஹேஹே....ஹேஹே.... எங்கே தல படம் நூறு நாள் ஓடிடுச்சு... ஸாரி அம்பது நாள் ஓடிடுச்சு....இது தான் அசல் வெற்றி..... எனக்கு ஒரு டவுட்ங்க ஏகன் படம் கூட சாந்தி தியேட்டர்ல தான் ஒடிச்சு! என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை.சொந்த தியேட்டர் சொந்த தயாரிப்பு மட்டுமே அசல் படம் ஓட காரணம் என்பது சின்ன குழந்தைக்கு கூட
தெரியும்.




இதை நான் ஏன் சொல்றேன்னா எனக்கு அஜித்தை இந்த விஷயத்தில் ரொம்ப பிடிக்கும் படம் நல்லா இல்லைன்னா காசு கொடுத்து நூறு நாட்கள் ஓட்டமாட்டார்.அஜித் இது போன்று விளம்பரங்களை வெறுப்பவர். என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி!!

மறுபடியும் சொல்றேன் நான் அஜித் எதிர்ப்பாளன் கிடையாது, அவரின் கோடான கோடி நலவிரும்பிகளில் நானும் ஒருவன், ரசிகனாக அல்ல!!




குறிப்பு: சைடில் உள்ள படங்களை(வடிவேலு,சின்ன பையன்) பார்த்து தவறாக நீங்களே எதுவும் எண்ணி கொள்ள வேண்டாம்!!

***********************************************************

ஆயிரத்தில் ஒருவன்:



நாம எப்போவும் நேர்மையா இருக்கணும்....
ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்
என்பதில் இதுவரை எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!!
ஆனால் இவர்களின் 75 நாள் விளம்பரம் கொஞ்சம் எரிச்சலை
ஏற்படித்தியது, காரணம் படம் பேபி ஆல்பர்ட்இல் இருந்து
தூக்கி ஒரு வாரம் ஆச்சி!! கண்டிப்பா கார்த்தியின் செல்வாக்கை
உயர்த்த தான் இந்த நூறு நாள் மோகம்....!
வேண்டாம் கார்த்தி காமெடி ஆயிடும்.....
என்ன ஏற்கனவே ஆயிடுச்சா?? மீ எஸ்கேப்.....

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டும் விவாதிக்க பின்னூட்டமும்
போடுங்கள்!!




ஜெட்லி

Friday, February 19, 2010

ராஜலீலையும் தேவலீலையும்!!

ராஜலீலை-நமக்கு கற்று தரும் பாடம் என்ன??

நம்ம நாட்டுல குண்டு வெடிக்குது,காலேஜ்ல பசங்க
சண்டை போடுறாங்க,பெட்ரோல்,காஸ் விலை ஏத்த
போறாங்க,விலைவாசி உயர்வு,பல கோடி ஊழல்,
தனி மாநில பிரச்சனைகள்னு பல சாதாரண விஷயங்கள்
இருந்தாலும்.இப்போது நான் கையில் எடுத்திருக்கும்
இந்த சப்ஜெக்ட்ஐ யாருமே தொட தயங்குவார்கள்.
ஆம் அது தான் நம் நாட்டு மக்களுக்கு தேவையான
அதிமுக்கிய விஷயமான "ராஜலீலை-வெற்றியின்
ரகசியம்
"(இன்னைக்கு 50 வது நாள்!!)




நாலைந்து நாட்களாக என்ன பதிவு போடுவது என்று
யோசித்து திணறி போய் விட்டேன்,காரணம் நாம
போடுற பதிவு நாலு பேருக்காவது நல்லதாக அமைய
வேண்டும் என்று வழக்கம் போல் நினைத்தேன்.அது
போல் இந்த பதிவு மக்களின் சிந்தனையை தூண்டி
விடுவதாக அமைந்ததில் எனக்கு பேரின்பம்.

ராஜலீலை, சத்தியமா நான் இந்த படத்தை பார்க்கலாங்க....
படத்தில் பெருசா ஒன்னும் இல்லைன்னு பார்த்தவங்க
சில பேரு சொன்னாங்க அதான் போல!! நான் எப்பவுமே
பாக்காத படத்தை பற்றி தப்பாக பேசுவதில்லை.ஆனால்
ராஜலீலை பற்றி பேச காரணம் அவர்களின் விளம்பரம்.


ஒரு பேய் படத்தை ஏதோ தபு நடித்த அட்டு படம்
போல் விளம்பரம் செய்து காசு பண்றாங்க.இதை
நம்பி போறவன் காசு வேஸ்ட்தான்.இந்த விஷயம்
பல பேருக்கு தெரிஞ்சாலும் சில பேர் சபலப்பட்டு
இந்த மாதிரி படத்துக்கு போய்டுறாங்க.


ராஜலீலை-இளசுகளின் இன்ப எல்லை....

இந்த மாதிரி விளம்பரம் போட்டு என்னை மாதிரி
சிறுவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள்.
அடுத்த மாசம் வேற பரீட்சை வருது இந்த மாதிரி
நேரத்தில் இப்படியான விளம்பரத்தை போட்டு
எங்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

எங்கே போகும் இந்த பாதை??

ஒரு அட்டு படத்துக்கு இது போல் விளம்பரம் அளித்து
ஓட வைப்பதால் வரலாறு கொஞ்சம் தப்பா ஆயிடும்.
இது குறித்து நான் ஏற்கனவே யார் விதைத்த விதை?
என்ற இடுகையில் விலாவரியாக எழுதியுள்ளேன்.
"இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல்
வெற்றி" என்று ஹிந்தி டப்பிங் படத்துக்கு விளம்பரம்
செய்வதை யார் கேட்பார்கள்.....

கூடிய விரைவில் இது குறித்து ச.ம.கட்சியுடன்
பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த எங்கள் தெருமுனையில் கூட்டம்
போடலாம் என்று இருக்கிறோம்.இதுல ஒரு
பிரச்சனை என்னனா, எங்கள் தெருமுனையில்
வடை சுடும் ஆயா எங்களுக்கு இடம் கொடுக்க
மறுக்கிறார்.இந்த ஆயாவிடம் ஒரு அரைமணி
நேரம் அனுமதி வாங்கி தர அரசுக்கு கூடிய
விரைவில் மனு அளிக்க உள்ளோம்.


இந்த படத்தை பார்த்து அடுத்ததாக "தேவலீலை"னு
பேர் போட்டு அடுத்த படத்தை ஆரம்பிச்சாச்சு.....
ஸ்டில் எல்லாம் படுபயங்கரமா?? இருக்கு.சாம்பிள்
கிழே.....



ஒரு நிமிஷம்.. போன் கால் வருது....

ஜெட்லி: சொல்லு மாமே...

ராஜேஷ்: எப்படிடா இருக்கே...இன்னைக்கு என்ன படம்
பார்த்தே??

ஜெட்லி : இன்னைக்கு எதுவும் படம் வரலடா...

ராஜேஷ் : ரசிக்கும் சீமானே விமர்சனம் போடலையா??

ஜெட்லி : டேய்...என்ன கலாய்க்கிரியா??

ராஜேஷ் :என்னமோ மொக்கை படமே பார்க்காத மாதிரி
கேக்குற!!!

ஜெட்லி : சரி உடு...என்ன படம் புதுசா டவுன்லோட் பண்ணே??

ராஜேஷ் : புது படம் பிரிண்ட் சரியில்லைடா அதனால
பண்ணலா...ஏதோ ராஜலீலைனு ஒரு படம்
டவுன்லோட் பண்ணிருக்கேன்.

ஜெட்லி : சூப்பர்டா...ரைட் பண்ணி வை.அந்த பக்கம்
வரும் போது வாங்கிகிறேன்...bye டா...!!

ரைட்...எங்கே விட்டேன்...ஹ்ம்.இந்த மாதிரி படங்களை
முதலில் தடை செய்யனும்ங்க...நம்ம தமிழ் படத்தில்
A சான்றிதழ் வாங்கி இருந்ததுனா விளம்பரத்தில் ரொம்ப
சின்னதா போடுவாங்க...ஆனா ராஜலீலை மாதிரி
படத்தில் A தான் ரொம்ப பெருசா போடுவாங்க...


சரிங்க...நாம சொல்லி அவங்க இந்த மாதிரி
விளம்பரம் போடுறதை நிறுத்த போறதில்லை.
என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா இந்த
அம்பது நாள் விளம்பரத்தில் மூணே மூணு
தபு ஸ்டில் மட்டும் தான் வந்திருக்கு....
அட்லீஸ்ட் அதையாவது டெய்லியும் வேற
வேற ஸ்டில் போட்டால் நல்லா இருக்கும்!!


எந்த வித கொள்கையும் இல்லாமல் நாட்டு மக்கள்
நலனுக்காக சிந்தித்து கொண்டிருக்கும்....



ஜெட்லி.....


இந்த இடுகை பற்றி உங்கள் கமெண்ட்(பின்னூட்டம்)
மற்றும் ஓட்டை போடுமாறு கேட்டுகொள்கிறோம்.

Wednesday, January 20, 2010

பொங்கல் டாப் படம் எது???

பொங்கல் டாப் படம் எது???

பின்வரும் தரவரிசை என் மனதுக்கு பிடித்தவை மட்டுமே...

4. குட்டி:

இந்த படத்தை பார்த்துட்டு வந்து எனக்கு விமர்சனம்
எழுதுவே தோணல காரணம் படத்தில் ஒரு சீன் கூட எனக்கு
வீட்டுக்கு வந்தவுடன் நினைவுக்கு வரவில்லை.கடைசி அரை
மணி நேரம் எழுந்து வந்துவிடலாம் என்று நினைத்தேன்....
ஆனால் சகிப்பு தன்மை வளர முழு படத்தையும் கண்டேன்
என்பது குறிப்பிடத்தக்கது.



3. போர்க்களம்:




வித்தியாசமான ஷாட்ஸ்,கிஷோர் நடிப்பு
மற்றும் பிஜு மேனனின் அலட்டல் இல்லாத நடிப்பு இருந்தும்
படம் தொய்வு காரணமாக பிடிக்கவில்லை......


2. நாணயம்:

முதலில் கொஞ்சம் மெதுவாக ஸ்டார்ட் ஆனாலும்
நல்ல டைம் பாஸ் படம்....பிரசன்னா வழக்கம் போல் நன்றாகவே
பண்ணியிருந்தார்....கடைசியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்...

1. ஆயிரத்தில் ஒருவன்:

படத்தை பத்தி எவ்ளோ கேள்விகள்....
படத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும்
பல கேள்விகள்....எப்பா...எப்பவுமே நல்லா இல்லைன்னு சொன்னா
தான் கேள்வி வரும் ஆனா ஆயிரத்தில் ஒருவனுக்கு viceversa
ஆகிவிட்டது.....


பல பேர் சொன்னது மாதிரியே படத்தில் லாஜிக் ஓட்டைகள்
அதிகமாகவே இருக்கின்றன....இரண்டாவது பாதியில் என்ன
சொல்ல வருகிறார்கள் என்று கேள்வியும் எழாமல் இல்லை...
ஆனால் நான் படம் பார்க்கும் போது அதையெல்லாம்
பார்க்கவில்லை...எனக்கு நல்ல டைம் பாஸ் ஆச்சு..அவ்ளோ தான்.


மீண்டும் நான் ஆயிரத்தில் ஒருவனை திங்களன்று இரண்டாவது முறையாக பார்த்தேன்.காரணம் முதல் பாதிக்காக கண்டிப்பாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று முதல் தடவை இடைவெளியில் முடிவு செய்து விட்டேன்..........

பின்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்
ஒரு பயம் என்ன கொடுமை இது!! தமிழ் படத்துக்கு subtitleலா
என்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......!!

இந்த தடவை பார்க்கும் போதும் முதல் பாதி சலிக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாதியில் சில காட்சிகளை எடுத்து
இருந்தனர்.முக்கியமாக அந்த கிழவர் சொல்லும் வாக்கியம்
"தஞ்சை சென்றதும் இந்த அடியோனை நினையிங்கோ"
என்பாரே அது இல்லாதது வருத்தமே......இந்த தடவை பார்க்கும்
போதும் ரீமாவின் துரோகம் தாங்காமல் பார்த்திபன் அழுது
கொண்டே வரும் காட்சி நெகிழ வைத்தது....

நான் திரும்பவும் சொல்றேன் படத்தில் லாஜிக் ஓட்டை இருக்கு...
ஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......
நான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ
கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்
என்று தான் சொல்கிறேன்........

பின்னூட்டத்தில் ஏதோ பிரச்சனை
இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்....
உங்கள் கருத்தை மெயில்க்கு அனுப்பவும்
jetliidli@gmail.com

இப்படிக்கு
தமிழ் சினிமா ரசிகன்.
(ஜெட்லி)

Monday, January 4, 2010

போர்க்களம் - ஒரு பார்வை.

போர்க்களம் - ஒரு பார்வை.





இப்படி ஒரு படம் வர போகுதுனு பல பேருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதுல என்ன ஸ்பெஷல்னு கேட்டா? நம்ம பொல்லாதவன் கிஷோர் இதில் ஹீரோவாக வருகிறார். ட்ரைலர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு கண்டிப்பா படத்தை பார்க்கணும்.புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மியூசிக் பண்ணியிருக்கார்.பண்டி சரோஜ்குமார் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.


பண்டிசரோஜ்குமார் அவர்கள் இந்த படம் ஒரு புது முயற்சியாக
இருக்கும் என்கிறார்...தமிழக மக்கள் எப்போதும் புது முயற்சியை
வரவேற்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.கிஷோருக்கு பொல்லாதவன்
மற்றும் வெண்ணிலாக்கு பிறகு சொல்லி கொள்ளும் படி எதுவும்
அமையவில்லை....பொருத்து இருந்து பார்ப்போம் போர்க்களத்தில்
கிஷோரை......


பாடல்கள் அனைத்தையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரே தீம்மாக இருக்கிறது,
இருந்தாலும் கேக்க நன்றாக தான் இருக்கிறது.இந்த பட
பாடலை எனக்கு அறிமுகப்படுத்திய பெங்களூரை சேர்ந்த
நண்பர் ஹசனுக்கு நன்றி.....

படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன அனைத்துமே
ஆண்குரல் தான் பெண்குரல் பாடல் எதுவும் இல்லை
என்பதே ஒரு வித்தியாசமான விஷயம்.




# போர்க்களம் தீம் மியூசிக்

இந்த மியூசிக் ட்ரைலரில் வருமே அதே மியூசிக் தான் கேக்க
நன்றாக தான் இருக்கிறது.ஒரு ரிச்நெஸ் தெரிகிறது...


# அரண் திறன்

தீம் மியூசிக்கின் மெட்டுக்கு பாடல் இது.இதில் ஸ்பெஷல் கே.கேவின் வாய்ஸ் தான்.ஆள் சும்மா பின்னி எடுத்து இருக்கிறார்.
பாட்டை கேட்டாலே ஹீரோவின் கேரக்டர் பற்றி தெரிந்து
கொள்ளலாம்.கொஞ்சம் ஓவர் ஆக தான் இருக்கு இருந்தாலும்
படம் வந்தவுடன் தான் தெரியும்....

# இந்த பூமியில் :

ஷான் அவர்கள் பாடியுள்ள இந்த பாடல் நன்றாக தான் இருக்கு...
ஷானின் ஷார்ப்பான வாய்ஸ் இதில் ப்ளஸ்.....


# உன்னாலே: (இது தான் என் பேவரைட்).

நம்ம எஸ்.பி.பி.சரண் பாடியுள்ள இந்த பாடல் தேஞ்சு போன
சி.டி யில் குரல் கேட்டால் எப்படி இருக்கும் அந்த மாதிரி
வித்தியாசமா இருக்கும்.(கிண்டலுக்கு சொல்லல நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன் ,எனக்கு அவங்க என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணாங்கன்னு தெரியாது).

# யாரோ இவன் யாரோ:

முதலில் வரும் trumphet மியூசிக்கை கேட்டலே உற்சாகம் பொங்கும்.
இதுவும் ஹீரோவை தூதி பாடும் பாடல் தான்.கார்த்திக்கின் குரல்
இந்த பாட்டுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வாரம் முன்னாடி எழுதியது:

((என் எண்ணமெல்லாம் இது தான்... ஸ்ரீகாந்த் நடித்த ரசிக்கும்
சீமானே போல் ட்ரைலாரை இருநூறு நாட்கள் ஒட்டாமல்
படத்தை சீக்கரம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....))


நேற்று பேப்பர்இல் பொங்கல் ரிலீஸ் என்று போட்டிருந்தார்கள்..
பார்ப்போம்...அங்காடி தெரு கூட பொங்கல் ரிலீஸ் என்று முதலில்
போட்டார்கள் அப்புறம் நேத்து பிப்ரவரி ரிலீஸ் என்று போட்டு விட்டார்கள்......


ஓட்டை குத்துங்க....பின்னூட்டம் போடுங்க !!

உங்கள்
ஜெட்லிசரண்.

Monday, December 28, 2009

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்



இந்த ஆண்டு இதுவரை 125 நேரடி தமிழ் திரைப்படங்கள்
வெளியாகியுள்ளது.இதில் நான் பார்த்தது வெறும் 44 தமிழ்
படங்கள் மட்டுமே,அதாவது மூன்றில் ஒரு பங்கு.ஆனால்
அந்த 44 படத்தில் பல சூர மொக்கை படங்களை பார்த்துள்ளேன்
என்பது குறிப்பிடத்தக்கது.


மொக்கை படத்தை பற்றி தப்பா எடை போட்டுட கூடாது...
அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.


என்னை பொருத்த வரை மொக்கை படம் என்பது பொறுமையை
சோதிப்பதாக அமைய வேண்டும்...இன்றும் பலராலும் மொக்கை
படம் என்று அறியப்பட்டு வரும் குளிர் நூறு,மதுரை சம்பவம்(ஹீரோவை விட்டுடுங்க!!),சிந்தனை செய் போன்ற படங்கள் என்னை பொருத்தவரை நல்ல டைம் பாஸ் படம் ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் என்பேன்...... இந்த லிஸ்ட் நான் பார்த்த மொக்கை படங்களின் வரிசையே அப்புறம் எங்கப்பா அழகர் மலை,சிவகிரி,மரியாதை, ஆறுமுகம் படம்னு எல்லாம் கேக்க கூடாது நான் அந்த படங்களை பார்க்கவில்லை என்பது தான்
உண்மை(நம்புங்க!!).


10. குரு என் ஆளு - ஆளை உடு சாமி!!

நான் இந்த படத்தை ப்ளாக் எழுத வந்த பின்னர் தான் பார்த்தேன்
என்றாலும் இந்த படத்தை பற்றி விமர்சனம் வேற போட
வேண்டுமா என்று எண்ணி விமர்சனம் எழுதுவதை கைவிட்டு
விட்டேன்....விவேக் காமெடி செம மொக்கை.


9.இந்திர விழா: ஆண்டவா...

மொக்கை படமென்று தெரிந்தாலும் நமீதா இருக்கிறார் என்ற ஒரு காரணத்துக்காக தெரியாம தியேட்டருக்குள் போய்ட்டேன்...உள்ளே போன அங்கே விவேக் பெரிய மொக்கை போட்டாரு....

8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்: பறந்து போச்சே....

இந்த படத்தில் டைட்டில் மற்றும் பாடல்கள் மட்டும் தான் நன்றாக இருந்தது.....ஹீரோவை கண்டால் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


7.யோகி: போகி புகை...!

அமீரை நாங்கள் இயக்குனராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்...
படத்தை பற்றி வேறு எதுவும் சொல்ல விருப்பமில்லை...


6.மாசிலாமணி: மொக்கை மணி!!

அருமையான மொக்கை படம்... நகுலுக்கு முக பாவனைகள்
பயங்கரமா வருது.....அவரு சில காட்சிகளில் என்ன பீலிங்க்ஸ்
பண்ராருனே புரிய மாட்டிக்குது...(அதனாலதான் நான் இன்னும்
கந்தகோட்டை படம் பார்க்கவில்லை)


5. வாமணன்: கோமணம் கிளிஞ்சது!!

படத்தில் பெயர் மட்டும் தான் நல்லா இருந்தது...சந்தானம் காமெடி
ஒ.கே....மற்றபடி வாமணன் பற்றி சொல்வதருக்கு ஒன்னும்
இல்லை...

4.நான் அவனில்லை பார்ட்-2 : பார்ட்-3 வருமோ??

இந்த படத்தில் நான் என்ன எதிர்ப்பார்த்துட்டு போனேன்னோ அது
கொஞ்சம் கம்மி...மற்றபடி கதை திரைக்கதையெல்லாம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் அந்த கடைசி சீன்லா ஜீவன் போப் டிரஸ்இல் வருவது மகா கொடுமைடா சாமி.....


3.மதுரை டூ தேனி : பஸ்க்கு டையரை காணோம்...

வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹீரோ விஜயகாந்த் அளவுக்கு
பேசியே பிரச்சனையை தீர்ப்பதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே
ஓவர்....படத்தின் கதை ஆரம்பிக்கும் போது நான் தியேட்டரில் இல்லை....(படம் முடியும் போது தான் கதை ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டேன்).


இரண்டாவது இடத்தை பிடிக்க மூன்று படங்கள் அடித்து கொள்கின்றன...


2.அதே நேரம் அதே இடம் : அதே அடி அதே வலி!!

இந்த படத்தை அலசி அலசி சோர்வு அடைஞ்சாச்சு....கடவுள்கிட்ட
வேண்டி கொள்வது இது ஒன்று தான்...இனிமே அதே நேரம்
அதே இடம் போன்ற படங்களை வெளிவரமால் மக்களை காப்பாற்று..


2.முத்திரை-நல்லா குத்துனாங்கயா!!


எப்படி படம் எடுக்க கூடாது என்று இந்த படத்தை பார்த்தால்
கற்று கொள்ளலாம்...ரொம்ப பெரிய லாஜிக் ஓட்டையை உள்ளடக்கிய
படம் முத்திரை......


2.தோரணை - செம ரோதணை.

விஷாலிடம் இருந்து மொக்கை படத்தை எதிர்பார்த்தேன் ஆனால்
இது மரண மொக்கைடா சாமி...எதோ சந்தானம் இருந்ததால்
தப்பிச்சேன்....

லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்கள் முந்துகிறது...


1. வில்லு - செம டல்லு

இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....

1.கந்தசாமி: போதும்டா சாமி..

படத்தில் சில விஷயங்கள் புதுசாக இருந்தாலும் கதை பழசு என்பதாலும் சொன்ன விதத்தாலும் கந்தசாமி ஈர்க்கவில்லை.ஆனா ஒன்னு மட்டும் உண்மை இனிமே "என் பேரு மீனாகுமாரி" பாட்டில் வரும் முகேஷ் திவாரியின் pole ஆட்டத்தை எந்த நாயகனும் பீட் பண்ண முடியாது.....


1.சர்வம்: நாசம்!!

நான் மிகவும் எதிர்பார்த்த படம்...ஆனால் பயங்கர மொக்கை
திரைக்கதை...கதையும் கூட....ஒளிப்பதிவெல்லாம் குறை
சொல்ல முடியாது....விஷ்ணுவர்தனிடம் இருந்து 2010 இல்
நல்ல சுவாரசியமான படத்தை எதிர்பார்க்கிறேன் ....


என்னப்பா பத்துக்கு மேல லிஸ்ட் இருக்குனு நினைக்கிறிங்களா....அட விடுங்க சார் நானே நிறைய படத்தை பத்தி எழுத மறுந்துட்டேன்...

டிஸ்கி: நான் பல மரண மொக்கை படங்களை பார்த்து மக்களை
காப்பாற்றியுள்ளேன் என்று கருதி எனக்கு யாராவது தியாக செம்மல் விருது தருவாங்கன்னு பார்த்தா வீடு திரும்பல் மோகன்குமார் அண்ணே எனக்கு சிறந்த வில்லன் விருது கொடுத்துட்டாரு.... என்ன கொடுமை சார் இது!!

(மொக்கை படத்தை மொக்கைனு தான் சொல்லமுடியும்,
அதே போல் நல்ல படத்தை நான் கிண்டல் அடிப்பதில்லை!)

'

நீங்கள் இந்த ஆண்டு பார்த்த சிறந்த மொக்கை படங்களை கமெண்ட்இல் பகிர்ந்து கொள்ளுங்கள்...முடிஞ்சா ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

நன்றி : indiaglitz

Monday, November 16, 2009

யார் விதைத்த விதை??.

யார் விதைத்த விதை??.


"எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு,எனக்கு தலையே வெடிச்சிரும்
போல இருக்கு" என்று கடந்த வாரம் தினத்தந்தி பேப்பரை பார்த்ததிலிருந்து
எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருந்தேன்.(செயலில் அல்ல அவர் வசனம் மட்டும் தான்).காரணம் ஒன்றல்ல இரண்டு விஷயம்

#
அந்தோனி யார்?? என்ற திரைப்படத்தின் 101 வது நாள் விளம்பரம்,
அப்புறம் நாலு நாள் கழித்து 105 வது நாள் விளம்பரம்
.

#
மலை மலை (சுமாரான )படத்தின் நூறாவது நாள் விளம்பரம்.

அந்த படத்தின் விளம்பரத்தால் உனக்கு என்ன பிரச்சனைன்னு

கேக்குறிங்களா?? வரலாறு தப்பா போய்டும்ங்க.நமக்கு அடுத்த
தலைமுறை வந்து நாம பார்த்த நூறாவது நாள் படத்தை பார்க்க
ஆசைப்பட்டு அந்தோனி யார்,அழகர் மலை,தோரணை(50),சிவகிரி(50)
போன்ற படங்களை நம் அடுத்த தலைமுறை பார்த்தால் நம்மை
பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிறிது யோசித்து பாருங்கள்.




கடந்த மாதம் நான் சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை என்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
அங்கே திரு.ஆனந்தன் அவர்கள் தமிழ் திரைப்படங்கள் பற்றி
ஒரு அரங்கு அமைத்து இருந்தார் அதில் நம் முதல் சினிமா படத்திலிருந்து இன்று வரை ஓடிய மற்றும் வெளியான படங்களின்
தொகுப்புகளை மிக அழகாக அமைத்திருந்தனர்.அதெல்லாம் நம்
தமிழ் சினிமா வரலாறின் தொகுப்பு.இன்னும் ஒரு நூப்பது வருடம்
கழித்து அதில் அந்தோணி யார்??, சிவகிரி,அழகர் மலை, குருவி,
தோரணை,சத்யம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற படங்களாக
கண்டிப்பாக இடம்பெறும்.


பதினைந்து வருடங்கள் முன்பு நம் தமிழில் நல்ல படங்கள் இருநூறு
நாள் கூட ஓடியுள்ளது,அது மக்கள் கொடுத்த வெற்றி.அதன் பின்
இப்போதெல்லாம் நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவதே கடினமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்போது நூறு நாள் என்று சொல்லி கொள்ளும் மலை மலை,
அந்தோணி யார் போன்ற படங்கள் நாடோடிகள்,ஈரம்,வெண்ணிலா, யாவரும் நலம் போன்ற படங்களின் வெற்றியின் அருகில் கூட வரமுடியாது.


இந்த ஓடாத அட்டு படங்களை நூறு நாள் விளம்பரம் செய்து ஓட
வைத்தது யார்?? யார் விதைத்த விதை??

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் அருணாச்சலம் படம் ரொம்ப
சுமார்தான் என்று அனைவருக்கும் தெரிந்ததே...இருந்தாலும் அந்த
படத்தை நூறு நாள் ஒட்டினார்கள்.அதே போல் பாபா நம் மனசை
கவரதாதால் அதையும் நூறு நாட்கள் ஒட்டினார்கள்.கிட்டத்தட்ட
150 படத்திற்கு மேல் நடித்தவர் அவர் ஓட்டலாம் ஆனால் அவர்கூட
போட்டிபோட்டு சச்சின் என்ற படத்தை இருநூறு நாட்கள் ஓட வைத்தது யார்?? ரஜினி அவர்கள் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான். ரஜினி என்ற பெயருக்கே படத்தை நூறு நாள் ஓட்டலாம் என்பது என் கருத்து.



சச்சின் படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தாலும் உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல!!. சச்சின் படத்த விடுங்க குருவி என்ற படத்தை 150 ஒட்டினார்கள்,குருவி படத்தின் தரம் நமக்கு தெரியாதது அல்ல.அந்த மாபெரும் காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது காலத்தின் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.இது போல் வீண் ஜம்பம் அடித்து தங்கள் பெயரை திரைப்பட வரலாற்றில் பதித்து கொள்கிறார்கள்.இதுக்காக என்னை விஜய் எதிர்ப்பாளன் என்று நினைக்க வேண்டாம்!!.நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் அவ்வளவே.


இனிமே வர போகிற நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவது கடினம்,
சில படங்கள் தவிர.ஏன் என்றால் ரிபீட் ஆடியன்ஸ் கிடைப்பது
இப்போது கஷ்டம் ஆகிவிட்டது.ஒரு ஷோ போட்டு நூறு நாள் இருநூறு

நாள் ஓட்டும் படங்களின் தியேட்டர்கள்,காதலர்களின் கூடாரமாக
மட்டுமே இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே.


கடைசியா ஒன்னு ஏற்கனவே சொன்னது தான்...

நூறு நாள் ஓடுவதெல்லாம் நல்ல படமும் அல்ல
முப்பது நாள் ஓடுவதெல்லாம் மொக்கை படமும் அல்ல....

உங்க கருத்து குத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்....
முடிஞ்ச ஓட்டும் போட்டு போங்க
.

உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, September 14, 2009

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...

சுசியும் சேரனும் மற்றும் பலரும்...



கந்தசாமி வெற்றி படத்தின் இயக்குனர் சுசிகணேசனின்
ஆதங்கத்தை இந்த வார குமுதத்தில் படித்தேன்.அதன் பின் எழுதியது.படத்தை ஒருவரும் விடாமல் அனைவரும் கிழித்து
விட்டார்கள்.நம்ம டாக்டர் சுரேஷ் அவர்கள் வாரத்துக்கு
ஒரு கந்தசாமி பதிவு போட்டு விடுகிறார்(பாவம் ரொம்ப
நஷ்டம் போல).சுசி அவர்கள் கந்தசாமி படத்தை வசூலை
வைத்து மட்டும் வெற்றி படம் என்கிறார், அந்த படம்
ரசிகர்களை கவர்ந்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல
வேண்டும். இதையெல்லாம் நீ சொல்ல உனக்கு என்ன
தகுதி என்று கேட்டால் படத்தை இரண்டு வாட்டி பார்த்து
இருக்கிறேன்(வேறு வழி இல்லாமல் ரெண்டாவது வாட்டி
பார்க்க வேண்டியது ஆச்சு).அது சரி படம் பார்த்துட்டா நீ
என்ன வேணா எழுதலாமா? என்று கேட்டால், ஒரு படைப்பு
என்றாலே விமர்சனம் இல்லாமல் அது முழுமை அடையாது.
விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாதவன் கண்டிப்பாக
ஒரு நல்ல படைப்பாளியாக முடியாது அவ்வளவு தான்.

சுசி அவர்களின் திருட்டு பயலே படத்தை நான் இப்போது
டி.வி.யில் போட்டாலும் ரசித்து பார்ப்பேன். மிக அருமையான
திரைக்கதை , சுவாரிசியம் உள்ள காட்சிகள், சமூகத்தில் நடக்கும்
கள்ள காதலை வெட்ட வெளிச்சமாக கூறவது இது போல் பல.
ஏன் சுசியால் கந்தசாமியின் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை, சுசி சார் நாங்க ரெண்டு வருஷுமா எடுத்த படம்
எப்போ வரும் எப்போ வரும் அப்படின்னு ஆவலோட பார்த்த படத்தில் வெறும் பிரமாண்டம் மட்டுமே உள்ளது, திரைக்கதை எங்கே??.

கந்தசாமியின் வெற்றி மந்திரம் இது தான் "படம் நல்லா இல்லன்னு சொன்னாலும் அப்படி என்னதான் நல்லா இல்லன்னு போய் எல்லோரும் பாக்குறாங்க, அது ஸ்ரேயாவுக்கு ஆக கூட இருக்கலாம்".......

இன்னைக்கு குமுதம் புக்ல உங்க பேட்டியை பார்த்த உடன்
சிரிப்பு தான் வந்தது.போன இதழில் உங்களை ஞாநி தாக்கியவுடன்
இந்த இதழில் நீங்கள் அவரை தாக்கி எழுதி பிரமாண்டம் என்பது
ஒருவருக்கு மட்டும் தான் சொந்தமா? நாங்கெல்லாம் எடுக்க
கூடாதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே, ஆனா
படத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விஷயம் ஒன்னுமே இல்லை சுசி.

********************************************

அடுத்து சேரன், நான் சேரன் இயக்கி நடிக்காத படங்களின் ரசிகன்.
எனக்கு ஆட்டோகிராப் படம் கூட பிடிக்காது, நான் பொக்கிஷம்
படம் கூட பார்க்கவில்லை.ஆனால் ஜெயா டி.வி.யில் ஒரு பேட்டியில்
இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களை "தான்தோன்றிகள்" என்று
கூறிப்பிட்டு பேசியதாக ஒரு வலைப்பூவில் படித்தேன்.



பொக்கிஷம் படம் எடுத்து பொக்கிஷம் இழந்து காணப்படும் சேரன்
அவர்களே யாருதான் தான்தோன்றிகள் இல்லை இந்த உலகில்??.
உங்களை விட வேறு யார் நல்ல எடுத்துகாட்டு?.


நான் எடுத்ததான் படம் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஈகோ
இருக்கு.படம் எடுங்க சார் வெற்றி கோடி கட்டு மாதிரி கமர்சியல்
பிளஸ் கருத்து சொல்ற மாதிரி எடுங்க, சரி லவ் படம் தான்
எடுப்பேன் அப்படின்னு நீங்க சொன்ன எடுங்க ஆனா நீங்க
நடிக்காதிங்க.எனக்கு இப்போவும் உங்க மேல நம்பிக்கை இருக்கு
நீங்க ஒரு நல்ல சமூக படம் தருவிங்க அப்படின்னு.உங்க பாண்டவர்
பூமி படத்தை நான் முதல் நாள் முதல் காட்சி போய் பார்த்தேன்
யாருக்காக?? உங்கள் இயக்கத்துக்காக மட்டும்...


கடைசியா ஒரு விஷயம் புரியுல...

சுசி மற்றும் சேரன் இருவருக்கும் ஒரே கேள்வி:

ஆமாம்,அப்புறம் நீங்க ரெண்டு பேருமே படத்தின் நீளத்தை ஏன்
குறைச்சிங்க?.... ஏன் அப்படியே ஓட விட வேண்டியது தானே
அதில் என்ன தயக்கம் உங்களுக்கு....

இப்படிக்கு
ஜெட்லி சரண்.

Thursday, May 28, 2009

கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




( இது எங்களது 50 வது இடுகை, இந்த இடுகையை அவரது பிறந்த நாளான மே 25 ஆம் தேதி போட முடியாததால் இன்று போடுகிறேன்,காரணம் நண்பர்களோடு ஏற்காடு பயணம். உங்கள் பேராதரவை எங்களுக்கு தொடர்ந்து வழங்கும் படி கேட்டு கொள்கிறோம் )

belated birthday wishes to கவுண்டமணி.




கவுண்டமணி, என்றதும் நம் மனதும், உதடும் நம்மை அறியாமலேயே
பூத்து குலுங்கும்.தற்போது கவுண்டமணி அவர்கள் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் என்பது நம் போல் ரசிகர்களுக்கு இன்பமான செய்தியாகும்.



கவுண்டமணி ஓவர் சவுண்ட் விடுவார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு, ஆனால் அந்த சவுண்ட் தான் அவரை 1978 முதல் இன்று வரை அவர் தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பெற காரணமாக அமைந்தது. நம்ம சராசரி வாழ்க்கையில் கவுண்டமணி பேச்சுகள், நடவடிக்கைகள் நம்முள் சில சமயம் வெளிப்படும் ஏன் என்றால் அவரின் நக்கல் பேச்சுகள் நம்முள் கலந்தது தான் காரணம்.


நாங்கள் ஏற்காடு கிள்ளியூர் பால்ஸ் செல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு கவர்ந்த கவுண்டமணி வசனம் மற்றும் காட்சிகளை பேசி கொண்டே கிழே சென்றோம். அப்போது நான் அவர்களிடம் உங்களுக்கு நம் சென்னை பாஷையின் முக்கிய வார்த்தை இதை போட்டு தான் தொடங்குவார்கள் **த்த இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமான்னு கேட்டேன், அவர்கள் தெரியாது என்றார்கள். இதன் அர்த்தம் எனக்கும் முதலில் தெரியாது அப்புறம் கவுண்டமணி நடித்த படம் தாலாட்டு கேக்குதும்மா அதில் செந்தில் புலிபாண்டியாக வருவார். அந்த காட்சியை நீங்களே பாருங்க...............







செந்தில் எந்த நேரமும் கவுண்டமணியிடம் அடி வாங்கி கொண்டிரிப்பார் இதெல்லாம் ஒரு காமெடிஆ என்ற கேட்பவர்களும் நம் ஊரில் இல்லாமல் இல்லை. செந்தில் இல்லாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி கலக்கு கலக்கு என்று கலக்குவார் உதாரணம்: நடிகன், பிரம்மா,புது மனிதன் , சூரியன். எனக்கு புடிச்ச காம்பினேஷன் என்றால் அது சத்யராஜும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த அத்தனை படங்களும் எனக்கு பிடிக்கும். பிரம்மா படமெல்லாம் சான்சே இல்லை.அதுவும் அந்த ஹோட்டல் காட்சியில் தனக்கு பேப்பர் ரோஸ்ட் வேண்டும் என்று அவர் அடிக்கும் லூட்டி இன்னும் ஏன் கண் முன்னே இருக்கிறது. என் பல நடவடிக்கையில் கவுண்டமணி அவர்கள் நக்கல் பேச்சு என்னுள்ளும் வெளிபட்டிரிக்கிறது. உங்கள் நடவடிக்கையிலும் அவரின் நக்கல் இருக்கலாம், ஏன் என்றால் அவர் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்டார்.






இப்போ இந்த ஆதித்யா, சிரிப்பொலி போன்ற காமெடி டி.வி யில் கவுண்டமணி காமெடி அவ்வளவாக ஒளிபரப்புவதில்லை அது ஏன் என்று நண்பனிடம் கேட்டதுக்கு மிச்சவன் "எல்லாம் காசு கொடுத்து போட சொல்வாண்ட" என்றான். இந்த காமெடி டி.வி களுக்கு ஒரு வேண்டுகோள் கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமா காமெடி இல்லை என்பதை புரிந்து மக்களின் மனம் அறிந்து கவுண்டரின் காமெடியை தயவு செய்து ஒளிபரப்புவும்.


கவுண்டமணி சிம்பு மோதல்:

சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தது அவருக்கு மிகுந்த மனகசப்பை தந்தது அதற்க்கு காரணம் கவுண்டமணி நடிச்ச பல காட்சிகளை சிம்பு படத்தில் சேர்க்கவில்லை. இதை ஆதங்கமாக கவுண்டர் அவர்கள் குமுதத்தில் படம் வெளியான பின் பேட்டி கொடுத்தார்.தான் அந்த படத்தில் நடிப்பதில் இஷ்டம் இல்லை என்று கூறிய பின் சிம்பு தொடர்ந்து நீங்கள் நடித்தால் தான் நல்ல இருக்கும் என்று அடம்பிடித்தார் அதனால் தான் ஒத்து கொண்டேன்
என்றார் கவுண்டர்.

ஆனால் ஒரு சீனியர் நடிகர் என்ற மரியாதை கூட சிம்பு பின் பற்றாமல் கவுண்டரக்கு எதிராக பேட்டி அளித்தார். அதாவது கவுண்டமணியால் மன்மதன் படம் ஓட வில்லை என் திறமைக்கு படம் ஓடுகிறது என்று கவுண்டர் மேல் வாரி இறைத்தார்.


இதனால் டென்ஷன் ஆன கவுண்டமணி " இந்த வயசுல இவ்ளோ தலைகனம் கூடாது" என்று எகிறினார். மன்மதன் படம் தந்த பாடமோ என்னவோ அதில் இருந்து அவர் சின்ன பசங்க படத்தில் நடிக்க அழைத்தாலும் அவர் நடிக்க போவதில்லை.
***********





இப்போது கவுண்டமணியின் நக்கல் , அந்த டைமிங் எல்லாத்தையும் சந்தானம் பின்பற்றுகிறார். அவரும் கவுண்டமணி மாதிரி harrypotter வாயா போன்ற வசனங்களை கூறி நம்மளை சிரிக்க வைக்கிறார். ஆனாலும் கவுண்டமணி இடத்தை யாராலும் பிடிக்கமுடியாது.கவுண்டமணி அவர்கள் பத்து படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்,பல படங்களில் அவர் இரண்டாவது ஹீரோவாக வருவார். இடையில் அவரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் மெலிந்து காணப்பட்டார்,அவரை மீண்டும் ஜக்குபாயில் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.


எனக்கு பிடித்த சில கவுண்டமணியின் வசனங்கள்:


# ஏன்டா எப்ப பார்த்தாலும் எருமை சாணியே மூஞ்சிலே அப்புன மாதிரியே திரியிற......



# செந்தில்: உங்க தாத்தா புட்டுகிட்டரா?

கவுண்டர்: இல்ல நேட்டுகிட்டார்!


# கவுண்டமணி: உக்காருங்க, நான் எப்பவும் படிப்பு சொல்லி தரவங்களுக்கு ரொம்ப மரியாதையை கொடுப்பன்.


குமரிமுத்து: நான் எங்க தங்கறது?


கவுண்டமணி: ஏன் வீட்ல தங்குங்க, இல்லன ரூம்ல தங்குங்க
ஆமாம், எத்தனாவது பசங்களுக்கு பாடம் எடுக்க போறீங்க?


குமரிமுத்து: இல்லங்க நான் வாட்ச்மேன்.


கவுண்டமணி: அப்புறம் ஏன் உக்காந்து இருக்கே...!


குமரிமுத்து: நீங்கதானே உட்காரா சொன்னிங்கே


கவுண்டமணி: நான் கரண்ட் கம்பி மேல உட்காரா சொல்லுவேன்,
அதுல போய் உட்காந்துருவியா ?




இன்னும் நிறைய வசனங்கள் இருக்கு அதை எல்லாம் போட்டால் இடுகை ரொம்ப ரொம்ப பெருசா ஆயிடும். அதனால் உங்களுக்கு பிடித்த வசனத்தை பின்னூட்டமாக(கமெண்ட்) போடவும்.


உங்கள்

ஜெட்லி.

Tuesday, May 19, 2009

ஒரு பாடல்... 100 ஸ்டைல்...


எந்திரன் படத்தில் ஒரே காட்சியில் 100 விதவிதமான ஸ்டைல்களில் ரஜினி ஆடிப் பாடுகிறார்.

ஹைதராபாத், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து ரஜினி, ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடும் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். இந்த பாடல் காட்சி ரஜினி படங்களில் இதுவரை வராத அளவு வித்தியாசமாக படமாக்கப்படுகிறது. அதாவது ஒரே பாடலில் ரஜினியின் 100 விதமான ஸ்டைல்கள் இடம் பெறுகின்றன. 22 நாட்கள் இந்த பாடல் காட்சியைப் படமாக்கினர்.

ரஜினி ஒவ்வொரு ஸ்டைலிலும் வெவ்வேறு ஆடைகள் அணிந்தார். பிரபுதேவா நடனம் அமைத்து கொடுத்தார். 100 விதமான ஸ்டைல்களை இப்பாட்டில் ரஜினி வெளிப்படுத்தியது பிரமாதமாக இருந்தது என்று படக்குழுவினர் பாராட்டினர்.

ஐஸ்வர்யாராயும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ரஜினியுடன் இப்பாடலுக்கு ஆடினார். அப்போது ரஜினியின் 100 ஸ்டைல்களை பார்த்து அவரும் வியந்தார். சிவாஜி படத்தில் முதல்பாதி சிவாஜி கேரக்டரில் நடித்தார். கிளைமாக்சில் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் அறிமுகமாகி அதிரடி செய்வார். ரசிகர்களை அந்த கெட்டப் மிகவும் கவர்ந்தது. அதே போன்று இப்பாடலில் ரஜினி வெளிப்படுத்திய 100 ஸ்டைல்களும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

source : rajinifans.com

Wednesday, April 22, 2009

இந்திய மக்களின் அபிமான நட்சத்திரம்!


ஐபிஎன் லைவ் இணைய தளத்தில் (வெப் 18 குழும தளம் in.com) இப்போது நடைபெற்று வரும் ஓட்டெடுப்பு இது. இந்திய அளவில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம் யார் என்ற ஓட்டெடுப்பில் அமிதாப் உள்ளிட்ட 161 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்களில் முதலிடம்... சந்தேகமே இல்லாமல் நம்ம சூப்பர் ஸ்டாருக்குதான்.

இதுவரை 197817 வாக்குகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்தில் மட்டும் 9000 பேர் ரஜினியை தங்கள் விருப்ப நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிக்கு எதிராகப் பதிவாகியுள்ள வாக்குகள் 3288.

அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 133247. எதிர்ப்பு வாக்குகள் 239. அமிதாப்புக்கு மூன்றாவது இடம். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் 69268. எதிர்ப்பு வாக்குகள் 2527.

ஷாரூக்கானுக்கு ஐந்தாவது இடம். இவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகளை விட எதிராகக் கிடைத்துள்ள வாக்குகளே அதிகம். 52942 பேர் ஆதரித்தும் 71218 எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

கமல்ஹாசனுக்கு 3255 பேர்தான் வாக்களித்துள்ளனர். அவருக்கு எதிராக 615 பேர் வாக்களித்துள்ளனர். இவருக்கு கிடைத்துள்ள இடம் 29.

இந்தப் பட்டியலில் 10 வது இடத்திலிருக்கிறார் அஜீத் (ஆதரவு 43394 , எதிர்ப்பு 1219). சூர்யாவுக்கு 13வது இடம் (ஆதரவு 17930 , எதிர்ப்பு 725) .

இது ஒரு ஒப்பீடல்ல. முழுக்க முழுக்க ரசிகர்களின், நடுநிலை பார்வையாளர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பே இது.


உலகமெங்கிலும் உள்ள தமிழ், இந்தி திரைப்பட ரசிகர்களும் வாக்களித்திருப்பார்கள்.

நடிகர்கள் தவிர, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரிவினரில் மக்களின் அபிமானம் பெற்றவர்கள், எதிர்ப்பைப் பெற்றவர்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

நீங்கள் செய்யவேண்டியது.... கீழே உள்ள லிங்க்-ஐ சொடுக்கி உங்கள் வாக்குகளை செலுத்தவும்...

Tuesday, April 21, 2009

ரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது! - சூர்யா

அயன் பட பிரஸ் மீட்டில் நடிகர் சூர்யா நமது நிருபரிடம் கூறியது:

எல்லோரும் எம்ஜிஆர் அல்லது ரஜினியை தங்கள் ரோல்மாடலாக சொல்வார்கள். ஆனால் நீங்கள் அப்படி யாரையும் குறிப்பிடவில்லை. கமலிடமிருந்து, விக்ரமிடமிருந்து, தனுஷிடமிருந்து, ஆர்யாவிடமெருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொண்டதாகச் சொன்னீர்கள். எனில் எம்ஜிஆர் - ரஜினி போன்ற இமயங்கள் உங்களைக் கவரவில்லையா... இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவும் இல்லையா உங்களுக்கு?

(இந்தக் கேள்வியை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது!)

"ஓ... நீங்கள் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா... நல்லது... எனக்கு மட்டுமல்ல... சினிமாவுக்குள் வரும் எல்லாருக்குமே, எம்ஜிஆர், ரஜினி சார் உயரங்கள் மீது ஒரு கண் இருக்கும். காரணம் அவர்கள்தான் சினிமாவின் உச்சம்.

ஆனால், நான் வெளிப்படையாக சொல்லாமல் விட்டது, ரஜினியை இமிடேட் செய்து ஒருவரால் உயரத்துக்கு வந்துவிட முடியாது என்பதைத்தான்.

ரஜினியின் ஸ்டைல் அவருக்கு மட்டும் சொந்தமானது. அதை கற்றுக் கொள்ள முயற்சிப்பது சரியாகுமா...

அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு, நடை, உடை என எல்லாமே ஸ்டைல்தான். எனவே திரையில் அவரைப் பார்த்து கற்றுக் கொள்வது என்றால் அது காப்பியடிப்பதுதான். அதைச் செய்தால் யாரும் எடுபட மாட்டார்கள். ஒரு எம்ஜிஆர்தான்... ஒரு ரஜினிதான்.

ஆனால் திரைக்கு பின்னால் அவர்தான் சினிமாக்காரர்களுக்கு வழிகாட்டி. என் தந்தை அடிக்கடி ரஜினியின் கடந்த காலம், அவர் பட்ட கஷ்டங்கள், அவரது நிகழ்காலம்... அதில் அவர் கடைப்பிடிக்கும் எளிமை பற்றியெல்லாம் பேசுவார்.

நான் ஒருபோதும் அவரைக் திரையில் அவரைக் காப்பியடிக்க மாட்டேன். ஆனால் நிஜத்தில் அவரைப் போல சின்ஸியராக இருக்கவே விரும்புகிறேன் என்றார்.

Monday, April 20, 2009

அஜித்தின் அசல் ஒரு கற்பனை







வணக்கம் பதிவர்களே...நீங்கள் வேட்டைக்காரன் கதைக்கு தந்த ஆதரவு அஜித்தின் அசல் படத்துக்கும் தொடர வேண்டுகிறேன்.
நடிகர்கள்: அஜித், ஸ்ரீமன், சந்தானம், கவுண்டர்மணி

அசத்தலான அசல் கதை.

காட்சி 1:
(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)
Amsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.
அவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது  முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்
வில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று
கவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.

காட்சி 2:
சில நாட்களுக்கு முன்பு:
(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)
SRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி
அங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

காட்சி 3:
(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )

கேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.
அப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான்  நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்
உள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .

கவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்

கவுன்சிலர்: டேய் யாருடா  அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.

தல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.

கவுன்சிலர்: ஓ! முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP ?

தல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன?

கவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன  உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.

காட்சி 4:
( சந்தானம் உள்ளே நுழைகிறார்)

சந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல
நாலு வருஷம் முன்னாடி "SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு" சொன்னவர்டா.

கவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா?

(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)

சந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.

தல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள!!!!!! contract எனக்கு திரும்பி குடுக்கணும்.

சந்தானம்: மழை பெய்யல  தல

தல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது!!!!!!!!!!!!!!!.

இப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.
ஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி
அது ஒரு தனி TRACK.

காட்சி 5:
(இடம்: AMSTERDAM COURT)
தல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.

கவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன?

தல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க

நீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு?

தல: CITIZEN என்று உறுமுகிறார்.

நீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க?

தல: நோ நான் கலக்கலா MY LORD

கவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.

தல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL
சார்.

கவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam
narayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....

தல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்

கவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா?

தல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்

கவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....

தல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அசல் PHENOYILnu நீங்க சொல்விங்க.

கடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்
இருப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

தல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான். 

Saturday, April 18, 2009

இளைய தளபதியின் வேட்டைக்காரன்




வணக்கம் நண்பர்களே விஜயின் வேட்டைக்காரன் படத்தின் இந்த காட்சிகள் என் சொந்த கற்பனையில் உருவானது எதாவது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

காட்சி 1:
(இடம்: சென்னை விமான நிலையம்)
விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிரிக்கிறது. தலைமை விமான நிலைய அதிகாரியாக S.P.B அவர்களும், டெல்லி கணேஷ் அவருக்கு உதவியாளராக பணிபுரிகிறார். தீடிர்யென்று விமான நிலையம் பதட்ட சூழ்நிலைக்கு செல்கிறது இதை கவனித்த S.P.B, டெல்லி கணேஷ் விறுவிறு என்று s.p.b அறைக்கு செல்கிறார்.

S.P.B: என்ன சார் problem, ஏன் இப்படி பதட்டம் ஆகுரிங்க?

கணேஷ்: சார் நம்ம மலேசியா போற flight ஏதோ terrorist கும்பல் hijack பண்ணிடாங்க?

S.P.B: oh my god! இப்ப என்ன பண்றது அந்த flightla 100 பேருக்கு மேல இருப்பாங்களே.

கணேஷ்: "நாம இனிமே என்ன பண்றது" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ரன்வேயில் ஒரு GLIDER விமானம் அனுமதி இல்லாமல் டேக் ஆப் ஆகிறது.

காட்சி 2:
(இடம்: GLIDER பறக்கும் பொழுது)

அப்படியே GLIDER விமானத்த SIDEla,CORNERla விதம் விதமா கேமரா மூலம் காட்டுகிறார்கள்.கடைசியில் 5 நிமிடம் அப்புறம் தலைவர் இளைய தளபதி விஜயின் புன்னகை முகத்தை காட்டுகிறார்கள். இப்பொழுது தளபதி HIJACK ஆன FLIGHTi பின்தொடர போகிறார். தன் glider ஒரே SECONDil பல அடிகள் மேல போகிறது. விஜயின் GLIDER விமானம் hijack ஆன FLIGHTi துரத்தி கொண்டு போகிறது. HIJACK ஆன விமானத்தில் சிலர் தளபதி வருவதை பார்கிறார்கள் உடனே சிலர் "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று விஜயை பார்த்து ஓலமிடுகிறார்கள். ஒரு சின்ன குழந்தை விஜயை பார்த்து "அங்கிள் எங்களை காப்பாத்துங்க"என்று சொன்ன உடனே நம் தளபதி வெறி கொண்டு தீவிரவாதிகளை வேட்டையாடா கிளம்புகிறார்.

GLIDER STEERINGil தன் வெள்ளி அருணாகயிறை கட்டி பின்னாடி ஒரு இடத்தில முடிச்சு போட்டு glider நேராக பறக்கும் படி செய்கிறார். இப்பொழுது FLIGHTkku நேர GLIDER வருகிறது உடனே நம் ஹீரோ GLIDER ரக்கையில் ஏறி விமானத்துக்கு தாவுகிறார்(இந்த கிராபிக்ஸ் காட்சியை முன்று முறை காட்டுவார்கள்). விமானத்தின் முன்னே சென்று கண்ணாடியை காலால் உடைத்து விமானத்தின் உள்ளே செல்கிறார். அங்கே நம் போண்டா மணியும் கஞ்சா கருப்பும் PILOTaga வண்டி ஒட்டி வருகிறார்கள். நேராக உள்ளே பூந்த விஜய் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

விஜய்: டேய் உங்களக்கு என்னடா வேணும்?

தீ.வாதி: நீங்க யாரு சார்?

விஜய்: அது அவங்களுக்கு தெரியும் என்று(படம் பார்க்கும் நம்மை காட்டுகிறார்)

தீ.வாதி : டேய் மொக்கை போடாதடா.... ரொம்ப overA SCENE போடுற.

விஜய்: ஏய் யார்ருகிட்ட பேசுற... நான் வேட்டைகாரண்ட இப்போ உங்களை எல்லாம் வேட்டை ஆட போற வேட்டைக்காரன். நீ GUNla சுட்டவனே பார்த்திருப்பே , MACHINEGUNla சுட்டவனே பார்த்திருப்பே, AK47la சுட்டவனே பார்த்திருப்பே , MAGNUMla சுட்டவனே பார்த்திருப்பே ஆன எங்களுக்கு எல்லாம் இது போதும் என்று உண்டிவில்லை எடுத்து காட்டுகிறார் தளபதி. background musicA HEI HEI ஹெஇன்னு சௌன்ட் வருது.

காட்சி 3:
(இடம் : விமானத்தினுள் சண்டை)

விஜய் தன்னை நோக்கி சுடும் தீவிரவாதிகளை தன் உண்டிவில்லால் அடித்து நொறுக்குகிறார், அந்த உண்டிவில்லில் இருந்து கல் புறப்படும் சீனை SLOWMOTIONla காட்றோம். எல்லா தீவிரவாதிகளையும் அடித்து அப்பளம் ஆக்குகிறார் விஜய். இதே flightIL நாயகி அனுஷ்காவும் இருக்கிறார் விஜயை லவ்வ ஆரம்பிக்கிறார்.

படம் முழுவதும் விஜய் வில்லன்களையும் மற்றும் நாயகி அனுஷ்காவையும் வேட்டையாடுகிறார்...........

Friday, April 17, 2009

நானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்


சினிமா, இந்த மூன்றுஎழுத்து மந்திர சொல் நம் அனைவரது வாழ்விலும் நீங்காத ஒரு இடம் உண்டு. நமக்கான ஒரு பொழுதுபோக்குஆக இல்லாமல் சில படங்கள் நல்ல கருத்தையும் சொல்வதுண்டு. எந்த ஒரு விசயம்னாலும் அதற்கு எதிர்வினையும் உண்டு ஏன் என்றால் திரைப்படங்களை பார்த்து வன்முறையில் ஈடுபடுவோரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை சினிமாவை விட சிறந்த பொழுதுபோக்கு எதுவுமில்லை,முக்கியமா ஒரு விஷயம் அது நாம எந்த படத்துக்கு போறம்னு அத பொறுத்து இருக்கு,இல்லன தலைவலி தான்.

என்னோட சில நண்பர்களிடம் அருந்ததி படம் பார்த்ததாக கூறினேன் நண்பர்களில் பாதி பேர் "ஏன்டா அந்த படத்துக்கு போன" என்று என்னை எதிர் கேள்வி கேட்டார்கள் "நீ இன்னும் படத்துக்கு போறதா உடலையானு" கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நாம டைம்பாஸ்க்கு படத்துக்கு போறோம் எதுக்கு அதை போய் அவர்களிடம் சொல்லி ,ஒரு வேலை நம்ம ஊருல ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படம் மட்டும் தான் பார்க்கணும் போலன்னு நினைத்தேன். அருந்ததி படம் ஓரளவுக்கு சில காட்சிகள் மொக்கையாக இருந்தது தான் ஒத்துக்குறேன் ஆனா அந்த மாதிரி ஒரு படம் தமிழில் வந்ததில்லை அதை டப் செய்து தமிழுக்கு வரும் பொது அதை பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.

நான் பி.சி.ஏ. படிக்கும் பொது நேரிய மொக்க படம் பார்த்து இருக்கேன் அதை எல்லாம் வெளிய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கும். சில படங்கள் பாட்டுகாக சில படங்கள் கேமராகாக சில படங்கள் நடிகர்களுக்காக ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றம். "சூரி"நு ஒரு படம் விக்னேஷ்,பார்த்திபன் நடிச்சது டைரக்டர் வந்து ஷங்கர் உதவியாளர், அப்புறம் படத்துல ஒரு பெண்களுக்கு எதிர ஒரு பாட்டு. கண்டிப்பா இந்த படம் பாக்கனும்னு நான் முடிவு பண்ணினேன், வூட்லண்ட்ஸ் திரைஅரங்கில் படம் ரிலீஸ் ரிசர்வ் செய்தோமா என்று நினைவில் இல்லை. இதெல்ல வேற என் நண்பர்கள் சிலர் மருகம்மால் படத்துக்கு வந்தனர் படம் பாத்து நொந்தனர். சூரி மாதிரி பல படங்களை நான் நம்பி பாத்துஉள்ளேன். சரி நான் பார்ப்பது இந்த மாதிரி மொக்கை படம் மட்டும் தான? இல்லை நானும் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை முதல் நாள் பார்ப்பேன். ஏன் ரஜினி கமல் விஜய் அஜித்(ஐயோ) போன்றவர்கள் மொக்கை படத்தை நமக்கு தந்தது இல்லையா? பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் , குசேலன், குருவி, வில்லு. அஜித் படத்த பத்தி சொல்லவே வேணாம். ஆனா இப்பவும் நல்ல தரமான படங்கள் வந்து கொண்டு இருக்கிறது வெண்ணிலா கபடி, பொம்மலாட்டம்(இது நேரடி படமாக இருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்கும்), யாவரும் நலம், நான் கடவுள் போன்று நேரிய படங்கள் வருகின்றன.

எதுக்காக இதெல்லாம் சொல்லி நான் மொக்கை போட்றன்னு நீங்க கேக்கலாம். நான் முடிஞ்ச வரைக்கும் படம் ரிலீஸ் ஆனா ஒரு வாரத்துக்குள் பார்த்து விடுவேன் ஏன் என்றால் படம் பார்ப்பது எனக்கு பிடிக்கும் அதுக்குன்னு மொக்கைநு தெரிஞ்ச நான் போகமாட்டேன். எப்படி அடுத்தவர்கள் கிரிக்கெட் மேட்ச் தொலைகாட்சியில் கண்டு ரசிபார்கோல அது போல் நான் சினிமாவை பார்த்து ரசிக்கிறேன். நான் சினிமா பார்ப்பதை குறை கூறுபவர்களுக்கு (நண்பர்கள், என் வீட்டில் உள்ளவர்கள் ) ஒன்றை மட்டும் சொல்ல ஆசை படுகிறேன் " சினிமா என் முக்கியமான பொழுதுபோக்கு, நான் சினிமா பார்பதனால் யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லை. மொக்கை படம் பார்க்கிறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு".