Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Tuesday, April 14, 2009

தேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்

சரத்பாபு அவர்கள் இளம் தொழிலதிபர் ஆவார் இவர் பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றவர். இவர் புகழ் பெற்ற கல்லூரி மற்றும் ஆபீஸ்களில் கான்டீன் நடத்துகிறார் இவரிடம் பல பேர் பணிபுரிகிறார்கள். திரு.சரத்பாபு அவர்கள் நம் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர். இவரின் அம்மா இட்லி கடை நடத்தி தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். தற்போது வரும் தேர்தலில் சரத்பாபு அவர்கள் சுயட்சையாக தென்சென்னை பகுதியில் நிற்கிறார்.

தற்போதுள்ள இளைஞர்கள் அரசியலை சாக்கடை என்று ஒதுங்கும் நேரத்தில் சரத்பாபு ஒரு நம்பிக்கையான முடிவு எடுத்துள்ளார். சரத்பாபு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை தருமா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். சரத்பாபு வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.