Tuesday, July 19, 2011

ஹாரிபாட்டர் கதை முடிஞ்சுது.....!!

ஹாரிபாட்டர் கதை முடிஞ்சுது.....!!




நான் முதல் ஹாரிபாட்டர் பாகத்தை ஜெயந்தி தியேட்டர்ல தான் பார்த்தேன்.... அப்புறம் அடுத்த அடுத்த பார்ட் பைலட், மோட்சம்னு அப்படியே போச்சு...நடுவுல ஒண்ணு ரெண்டு கூட மிஸ் ஆகி இருக்கலாம்...என்ன பெரிய ஹாரிபாட்டர் படம் துடைப்பக்கட்டையில் பறப்பது, கம்பி மத்தாப்பு வச்சு மாயஜாலம் பண்றது அப்படின்னு நீங்க நினைக்கலாம்...ஆனா அதையெல்லாம் தாண்டி படத்துல நிறைய இருக்கு.

இந்த கடைசி பாகத்துல ஹாரியோட நண்பர்கள் ரெண்டு பேரும் ரோன்னும் ஹெர்மாயினியும் பிக் அப் ஆகி எஸ்கேப் ஆயிடுறாங்க. ஹாரியோட அப்பா யாருன்னு தெரிய வருது. கடைசியா ஒரு வேப்பங்குச்சி மாதிரி இருக்கிற ஒரு மந்திரகோளை ரெண்டா உடைச்சு ஆத்துல போட்டுராறு நம்ம ஹாரி கண்ணு...!!





நம்ம காசினோல தமிழ் 3-D தான் பார்த்தேன்...பக்கத்தில் கெயிட்டி தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆக உருவாகி வருகிறது...தினத்தந்தியில் கெயிட்டி தியேட்டர் பத்தி போட்டு இருந்தாங்க...ஆனா நான் படம் பார்க்கும் போது அந்த மாதிரிலாம் எதுவுமே இல்லை....!!


நான் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கிறுக்குன ஒரு பதிவை கிழே பேஸ்ட் பண்றேன்....படிச்சுட்டு சொல்லுங்க....



&&&&&&&&&&&&&&



ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.
****************************************************
னேனேன்னே....னேனேன்னே... என்ற பின்னணி இசையுடன்
நாட்டாமை விஜயகுமார் வந்து ஆலமரத்தடியில் இறங்குகிறார்.

நாட்டாமை: என்னடா பிராது இன்னைக்கு?

கவுண்டர்மணி: அய்யா நம்ம ஊர் ஹோவர்ட்ஸ் ஸ்கூல்ல
இந்த பானை மண்டையன் ஹாரிபாட்டர் ஒரு பெண்ணை கெடுத்துட்டான்ங்க......

நாட்டாமை: யாரது கண்ணு ஹாரிபாட்டர்.

ஹாரிபாட்டர்: நான் தாங்க அய்யா... என் மந்திரத்தால உங்க உடம்புல உள்ள சந்தனத்தை எடுத்துருலாம் அய்யா.... என்று மந்திர குச்சியை எடுக்கிறான்.

நாட்டாமை(கோபமாகிறார்): டாய்...ஹாரிபாட்டர் கண்ணு, நான்
இந்த சந்தனத்தை பூச ஒரு மணி நேரம் ஆகும்.இதுக்கு என்புள்ள சரத்குமாரும் குஷ்பூவும் உதவி செய்வாங்க... அத நீ எடுக்க போறியா கண்ணு. உன் குச்சை உள்ள வை.

ஹாரிபாட்டர் டர்ராகிறார்......

நாட்டாமை: ஏன் தம்பி! உன் குச்சியை(மந்திர) வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..... நீ ஏன்டா அந்த புள்ளையை கெடுத்த?

ஹாரிபாட்டர்: அய்யா...நான் அவ ரூமுக்கு போனது உண்மை, ஆனா
எனக்கு முன்னாடி யாரோ அவளை கெடுத்துட்டாங்க......

நாட்டாமை: அப்போ நீ அவளை கெடுக்கத்தான் போன கண்ணு.

ஹாரிபாட்டர்: ஐயோ இல்லைங்க... பாடத்துல ஒரு டவுட் அதான் போனேன்...இது ஏதோ ஒரு தீயசக்தியோட வேலைன்னு
நினைக்கிறேன்.இதெக்கெல்லாம் காரணம் அந்த வோல்டிமொர்ட்
தான் அய்யா.

நாட்டாமை: உனக்காக யாரும் சாட்சி சொல்ல வருவாங்களா?....

ரோன்(பாட்டரின் நண்பன்): அய்யா நான் பார்த்தேங்க.....

நாட்டாமை: யாரு கண்ணு நீ...

ரோன்: நான் ஹாரிபாட்டர் நண்பங்க...

நாட்டாமை: செல்லாது கண்ணு.

ஹெர்மாயினி (பாட்டரின் தோழி): அய்யா நான் பார்த்தேங்க...

நாட்டாமை: நீ யாரு கண்ணு.

ஹெர்மாயினி: பாட்டர் என் பெஸ்ட் பிரண்டு....

நாட்டாமை: செல்லாது செல்லாது....

அப்போது அங்கே ஹோவர்ட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர்
டம்ப்ல்டோர் வருகிறார்.

கவுண்டர்மணி: நாட்டாமை அய்யா.. இந்த செம்மறி ஆட்டு மண்டையன் தான்ங்க டம்ப்ல்டோர்.

நாட்டாமை: என்னடா பேர் இது. டபுள்டோர், சிங்கள்டோர்ன்னு.
[Image]
டம்ப்ல்டோர்: நாட்டாமை நியாயம் செத்து போச்சு, நீதி தொத்து போச்சுஹாரிபாட்டர் சின்ன பையன் அவன் இத செய்ஞ்சு இருக்க மாட்டான்.

கவுண்டமணி: சின்ன பையன் செய்யல, அப்ப பெரிய மனுஷன் நீ
செய்ஞ்சியா? என்று டம்ப்ல்டோரிடம் ஏறுகிறார்.

டம்ப்ல்டோர்: கெடுக்கப்பட்ட அந்த பெண்ணோட ரூம்ல சந்தன
வாசம் அடித்தது, அது மட்டும் இல்ல அவ உடம்பு மேலையும்
சந்தனம் இருக்கிறது. இதில் இருந்து யார் காரணம்னு தெரியுலேயே
நாட்டாமை.இது தீயசக்திகளின் வேலை. அவங்களை எதிர்க்கிற
நேரம் வந்துடிச்சு.

கவுண்டமணி: யோ..அப்ப நீ என்ன நாட்டாமைதான் இந்த
காரியத்தை செய்ஞ்சார் அப்படின்னு சொல்றியா....

அதற்குள் நாட்டாமை சுதாரித்து

என்னடா சொல்லிபோட்ட நீ...
உன்னை இந்த எட்டுப்பட்டி கிராமத்தை விட்டு
ஒதுக்கி வைக்கிறன்டா....
இனிமே சுத்துபட்டியிலே எந்த டாஸ்மாக்
கடைலயும் உனக்கு சரக்கு தர மாட்டங்கடா.
இதாண்டா இந்த நாட்டமை தீர்ப்பு.


பசுபதி வண்டியை உடுறா.....

நாட்டாமை(தனக்குள்): இனிமே இந்த மாதிரி தப்பு காரியம்
செய்யும் போது சந்தனத்தை தடவாம போனும்......

நாட்டாமை பாதம் பட்ட இந்த வெள்ளமாய் விளையுமடி
நம்ம நாட்டாமை கை அசைச்சா....................



நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Friday, July 15, 2011

தெய்வதிருமக(ன்)ள்!!

தெய்வதிருமக(ன்)ள்!!






இதுவரைக்கும் நான் கணபதிராம் தியேட்டர்ல பார்த்த படங்களிலே தெய்வதிருமகள் படத்துக்கு பார்த்த கூட்டத்தை வேற எந்த படத்துக்கும் பார்த்தது இல்லை....தியேட்டர் உள்ளே என்ட்ரி கொடுக்கும் போதே ஒரு டப்பால மிச்சர், ஸ்வீட் லாம் கொடுத்தாங்க...ரைட் நாம படத்துக்கு
போவோம்...!!

விக்ரம் மன நல குன்றியவர்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும்,அதுக்கு அப்புறம் வேற எதுவும் சொல்றதா இல்லை. ஏன்னா நாம படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி சில பல கற்பனைகள் வச்சிரிப்போம். அதை ஏன் நாம லீக் பண்ணனும். உதாரணாம அமலா பால் யார்?? விக்ரம்க்கு ஜோடி யாரு??....






கிருஷ்ணாவாக விக்ரம்... சான்சே இல்லை. செம ஆக்டிங். கண்டிப்பா இப்ப உள்ள எந்த ஹீவும் நடிக்க தயங்குற கேரக்டர். சண்டை இல்லை, ரோமென்ஸ் சாங்
இல்லை...விக்ரம் நடிப்புக்கு பல இடங்களில் தியேட்டரில் செம கைத்தட்டு. நிலாவாக வரும் விக்ரம் பெண் கூட செம அழகு குட்டி. தன் குழந்தை அப்பா சொல்லும் காட்சியில், இன்னும் நிறைய சொல்லணும் மறந்துட்டேன்.

அனுஷ்கா, வக்கீலாக வருகிறார். பொட்டுக்கு கிழே அந்த விபூதி அனுஷ்காக்கு
கொள்ளை அழகு. அனுஷ்கா அப்பாவாக மகேந்திரன். அனுஷ்கா அசிஸ்டன்ட்
ஆக சந்தானம். வழக்கம் போல் டைமிங் காமெடியில் பின்னுகிறார்.
அமலா பால் எப்படி சொல்றது...

அமலா பாலை விட அனுஷ்காக்கு தான் அதிகம் நடிக்கிற வாய்ப்பை தான்
சொல்றேன். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் கலகலக்க வைக்கிறார்.
ஆனால் முதல் பாதியில் இவரும் பாண்டியும் வர சில காட்சிகள் மொக்கையாக இருக்கு. நாசர் பெரிய வக்கீலாக வருகிறார். பாட்டு பத்தி சொல்லவே வேணாம் ஆரிரோ பாட்டு செம... அப்புறம் கதை சொல்ல போறேன் பாட்டு பிரமாதமா Visualize பண்ணி இருக்காங்க....

படம் எப்படிப்பா...?

படம் கொஞ்சம் பெருசுதான் கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுது...அதே மாதிரி
சில காட்சிகள் நாடகத்தனமா கூட இருந்தது. முக்கியமா நிறைய கொட்டாவி
கூட வந்தது. ஆனா இதையெல்லாம் மீறி கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா?? என்ற பாசத்தில் மேல உள்ளதை கொஞ்சம் ப்ரீயா விட்ரலாம். அட எத்தனை நாள்ங்க கமர்சியல் சினிமா பார்க்கறது... இந்த படத்தையும் பாருங்க... அழகான பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

கமர்சியல் இல்லாம படம் வந்திருக்கு. அப்ப ரொம்ப போர் அடிக்குமேனு நீங்க
கேட்கலாம் அப்படியெல்லாம் இல்லை..ஆனா கொஞ்சம் அடிக்கும். அதுவும் சில சமயம் சந்தானம் வந்து சரி பண்ணிடுவார். கண்டிப்பா விக்ரம் இயக்குனர் விஜய் அந்த சின்ன பெண், அப்புறம் அனுஷ்காக்காக கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் தெய்வதிருமகள்.

தெய்வதிருமகள் - வெற்றி திருமகள்!!

தியேட்டர் நொறுக்ஸ்:





# சந்தானம் ஒரு காட்சியில் கோர்ட்க்கு கேஸ் தான் வரும்னு நினைச்சேன்
இவனை மாதிரி லூஸ் வரும்னு எனக்கு எப்படி தெரியும்" அப்படின்னு விக்ரமை பார்த்து அனுச்காவிடம் சொல்லுவார்... இந்த வசனத்துக்கு தியேட்டரில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது....

#கோர்ட் சீனில் ரெண்டு பேரு அடிக்கடி அப்பப்பா...அம்மம்மா..னு சொல்வாங்க...
சில சீனில் காமெடியா இருந்தது ஆனா ஒரு காட்சியில் வெறுப்பான ரசிகர்
ஒருவர்...."யார்ட இவனுங்க..." என்று டென்ஷன் ஆயிட்டார்.

# படம் முக்கா வாசி ஓடி கொண்டிருந்த போது பின்னாடி இருந்த ஒருவர்
அவர் நண்பரிடம் "என்ன மச்சி நாடகம் பார்க்கிற மாதிரி இருக்கு..?"னு
கேட்டார்.

# நாசர் வீட்டில் ஒரு வயதான பெண் டாக்டர் வருவார்...அவரோட வாய் கொஞ்சம் வீங்கி இருந்தது...உடனே கிழே இருந்த ரசிகர்கள்..."மச்சான் மாவா போட்டிருக்குடா..." என்று கத்த ஆரம்பித்தனர்.

#நம்ம அமலா பால் நடிச்ச சிந்து சமவெளி படத்தை திரும்பவும் ரீலீஸ் பண்றாங்க...




இந்த பதிவு பல பேரை சென்று அடைய நீங்க செய்ய வேண்டியதை மறக்காம செய்யுங்க...


நன்றி

ஜெட்லி...(சரவணா...)