Showing posts with label பார்த்தது. Show all posts
Showing posts with label பார்த்தது. Show all posts

Monday, September 13, 2010

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!


பாஸ் படத்தை வெள்ளிக்கிழமை நைட் ஷோவே பார்த்தாச்சு...ஆனா
அதை பத்தி எழுத நேரம் கிடைக்கல.... சந்தானம் மீண்டும் கலக்கி
இருக்கிறார். இந்நேரம் எல்லாரும் பார்த்து இருப்பீங்கனு நினைக்கிறேன்...
படம் செம டைம்பாஸ்...ஆர்யா கண்ணாடி மாட்டும் சீனே செம...
நயன்தாரா ஏன் இப்படி ஆகிட்டாங்கனு தெரியல...கொஞ்சம் கிழடு
தட்டிடுச்சுனு தான் சொல்லணும்....

சந்தானம் அண்ட் சுவாமிநாதன் அரியர் எக்ஸாம் காமெடி செம....
ஆர்யா அண்ணனாக வருபவர் பஞ்சு அருணச்சலம் அவர்களின் மகனாம்,
நல்லாவே பண்ணி இருக்கிறார். அதே போல் பால் பாண்டி பாத்திரம்
கூட இன்ட்ரஸ்டிங்....கடைசியில் ஜீவா வருவது லக லக காமெடி....!!
பாட்டு பத்தி சொல்லவே வேண்டாம்...அய்லா என்ற ஒரு பாட்டு தவிர
மீதி எல்லாமே சூப்பர்...


தியேட்டர் நொறுக்ஸ்:

மைனா படத்தின் ட்ரைலர் போட்டார்கள்.... கொஞ்சம் டரியலாக தான்
எனக்கு இருந்தது... கடைசியில் ஒரு வசனம் வரும்..அது...

"லவ் பண்ண லைப் அழகா ஆயிடும்..." என்று வரும்னு நினைக்கிறேன்...

ஆனா பின்னாடி இருந்த நம்ம ஆளு... லவ் பண்ண லைப் நாசமா போய்டும்
என்று கத்தினார்....ஹ்ம்..அவருக்கு என்ன பிரச்சனையோ...!!

துரோகி பார்க்காத கதை....!!


அப்புறம் நேத்து நைட் செம மழை....சரி ஜெயந்தி தியேட்டர்ல துரோகி
பார்க்கலாம்னு ஒரு ஆர்வத்துல போனேன்...செம கூட்டம்...கூட்டம்
எல்லாம் தியேட்டரில் வேலை செய்பவர்களின் கூட்டம் தான், மழையால்
படம் ரத்தானால் சீக்கரம் வீட்டுக்கு போலாம்னு வெளியே காத்துகிட்டு
இருந்தாங்க....பால்கனி டிக்கெட் வாங்க ஒரு ஆள் கூட இல்லை....
கிழே டிக்கெட் வாங்க ஒரு பத்து பேரு இருந்தாங்க அவங்களும் பாஸ்
படத்துக்கு டிக்கெட் கிடைக்காம வந்தவங்க தான்...எனக்கு என்னமோ
அவங்க படம் ஆரம்பிக்கிற மாதிரி தெரியல என்பதால் திரும்பவும்
வீட்டுக்கு வந்து விட்டேன்.....


சரி திங்கள் என்ன படம் போலாம்னு யோசிச்சு யோசிச்சு...துரோகி போலாம்னு தான் பார்த்தேன் ஆனா ஏற்கனவே துரோகம் நடந்தது என்ன?? படம் பார்த்தே பஞ்சர் ஆகி போனதுனாலே ப்ரீயா விட்டுடேன்....

ரெசிடண்ட் ஈவில்....!!


அப்படியே நம்ம பைலட் தியேட்டர் பக்கம் போன ரெசிடண்ட் ஈவில் படம்
ஸ்டில் பார்த்தேன்...அப்படியே வண்டியே நிறுத்திட்டு டிக்கெட் எடுத்து
உள்ளே போய்ட்டேன்...மூணாம் பாகம் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்ததாக நினைவு... ரெண்டாம் பாகம் சுத்தமா மறந்து போச்சு....இருந்தாலும் படம் செம ஸ்பீட்... மில்லா ஜோவிச் தான் நாயகி...சும்மா பறந்து பறந்து அடிக்கறாங்க...இதில் பத்து பேராக முதல் காட்சியில் வருகிறார்...ஏன் வர்றாங்க எப்படி வர்றாங்கனு எனக்கு புரியலை... இந்த பார்ட் ஜப்பான் டோக்யோவில் ஆரம்பம் ஆகிறது...முந்தைய பார்ட்டில் வந்த ஒரு பெண் இதிலும் வருகிறார் அவருக்கு பழசெல்லாம் மறந்து விடுகிறது....


இருவரும் சிறு விமானத்தில் மீண்டும் அமெரிக்காவை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்..அங்கு ஒரு ஐந்து பேர் உயிருடன் இருக்கிறார்கள்,...அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் என்பதே மீதி படம்... தமிழ் டப்பிங் என்பதால் நான் 3-D யில் பார்க்க வில்லை... அதில் எனக்கு விருப்பமும் இல்லை... எனக்கு ஒரு சந்தேகம் அது ஏன் இந்த படத்துக்கு தமிழில் பெயர் வைக்கவில்லை?? ஒரு வேளை வரி விலக்கு எல்லாம் இப்போது இல்லையா.... இல்லனா நம்ம ஆளுங்க ரத்த காட்டேரி...இல்ல ருத்ர காட்டேரினு ஏதாவது பேர் வச்சி இருப்பாங்களே......


இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர் வருவார் செம காமெடி வசனம்...எல்லாமே
டைமிங் காமெடி ஆனால் அவர் நல்லவர் அல்ல... மறதி பெண் அவள் அண்ணனை பார்த்ததும் அவள் அண்ணன் உருகுவான்...உடனே நம்ம தயாரிப்பாளர்...


"என்ன பாசமலர் ரீமிக்ஸ்ஆ...மொதல்ல இங்கே இருந்து தப்பிப்போம்..."


என்று காமெடி வசனத்துக்கு பலத்த கைத்தட்டு....அதே போல் மில்லாவின்
சண்டை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.... அந்த மாபெரும் பேய் ஒன்றை
அந்த பெண் வீழ்த்தும் போதும் தியேட்டரில் செம விசில்....


அநேகமா பார்ட் 5 , 6 கூட வரும் வாய்ப்பு இருக்கு... எத்தனை பார்ட் வந்தாலும் அதை நாம போய் பார்க்கிறோம்.... நான் ரெசிடண்ட் ஈவில் 4 கேமை நான் எனது play station இல் விளையாடி இருக்கிறேன் அது வேறு மாதிரியான கதை...படத்தில் வருவது வேறு கதை.... கேம் விளையாடுவது செம த்ரில்லிங்ஆக இருக்கும்.....!!


இந்த பதிவு பிடிச்சு இருந்தா உங்கள் பொன்னான வாக்கினை போடவும்....


ஜெட்லி...(சரவணா...)


Monday, August 23, 2010

எஸ்கேப் மாமே எஸ்கேப்.....!!

எஸ்கேப் சினிமாஸ்இல் ஒரு அனுபவம்.....




ராயபேட்டா மணிகூண்டு அருகே புதிதாக மலர்ந்து இருக்கும் எக்ஸ்பிரஸ்
அவின்யு மாலில் இன்று தான் சத்யம் சினிமாஸ்இன் அடுத்த மல்டிப்ளெக்ஸ்
பொது மக்களுக்கு திறந்து விட்டார்கள். சும்மானாச்சும் திங்கள்கிழமை
சத்தியத்தில் ஏதாவது படம் போலாம் என்று அவர்களின் வலையை
மேய்ந்த போது எஸ்கேப் என் கண்ணில்ப்பட்டது. உடனே எனக்கும்
நண்பனுக்கும் நான் மகான் அல்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.நான்
போன ஸ்க்ரீன் பேரு plush ஆம்... சத்தியமா தமிழ்ல எனக்கு என்ன
அர்த்தம்னு தெரியாதுங்கோ.....!!


அது என்ன தியேட்டர் பேரு எஸ்கேப்...?? ஒரு வேளை நாம போற படம்
மொக்கை படமா இருந்தா பாதியிலே எஸ்கேப் ஆக எதுவும் பதுங்கு
குழி வச்சி இருப்பாங்களோனு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.....
இன்று காலையில் வேறு ஒரு நண்பனிடம் எஸ்கேப் போகிறேன் என்று
சொன்னதற்கு அவனும் அதே கருத்தை தான் சொன்னான்.அதவாது
படம் புடிக்கலைனா பாதியிலேயே எஸ்கேப் ஆயிடலாம் போல என்றான்.

எஸ்கேப் போன கதை....

நான் மகான் இல்ல கண்டிப்பா ரெண்டாவது தடவை பார்க்கணும்னு முதல்
தடவை இன்டெர்வல்லே முடிவு பண்ணிட்டேன். அதுவும் புதுசா அன்னைக்கு
தொறக்க போற தியேட்டரில் பார்க்க போவது டபுள் சந்தோசமாக இருந்தது.
சரி அப்படியே நம்ம ஆஸ்தான வூட்லாண்ட்ஸ் தியேட்டர்ல என்ன படம்
போட்டு இருக்காங்கனு எட்டி பார்த்துட்டு போனேன்....தேவலீலை என்ற
பிட்டு படமும் மூன்று ஆவிகளின் அட்டகாசம் என்ற அட்டு படமும்
போட்டு இருந்தார்கள். அப்படியே அதை தாண்டி போய்கிட்டு இருக்கும்
போது என் கண்ணில் ஒரு போஸ்டர் பட்டது....



சானகானுக்கு கூட நம்ம ஊரில் பிறந்த நாள் கொண்டாட,போஸ்டர் ஒட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அப்படியே வானத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிஞ்சுது...அப்போ தான் நினைச்சேன் கூடிய விரைவில் இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆயிரும்னு.....!!


எக்ஸ்பிரஸ் அவின்யு....



இப்போ தான் முதல் முதலா எக்ஸ்பிரஸ் அவின்யு போறேன்...நண்பர் சித்து
சொன்னது போல் எக்ஸ்பிரஸ் அவின்யு எக்ஸ்பென்சிவ் அவின்யு தான்.
பூட் மால் எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுது. பானி பூரி ப்ளேட் நாப்பது
என்றாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்போ தான் பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக் தம்பியாய் வருவாரே ஒரு மொட்டை அவரை பார்த்தேன்.அவரும் யாராவது என்னை பார்ப்பாங்களா என்று பார்த்து கொண்டே போனார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்போம் என்று அவரை பார்த்து சிரித்து வைத்தேன் அவரும் ஒரு ஸ்மைல் செய்ஞ்சிட்டு போனார். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சேவை.



அதுக்கு அப்புறம் நேரா எஸ்கேப் உள்ளே பூந்தாச்சு.... உள்கட்டமைப்பு எல்லாம் பக்கா.... லைப்ரரி இருக்கு...வீடியோ பார்க்க டி.வி இருக்கு...செமையா

இருந்தது.முதல் நாள் என்பதால் யாரையும் செக் பண்ணி அனுப்பவில்லையா?? இல்லை ஆட்கள் பற்றாகுறையா என்று தெரியவில்லை. இங்கயும் ரெஸ்ட் ரூம் சான்ஸ்ஏ இல்லை.... இங்கே அருகில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பட்டையை தட்டினால் நீண்ட குழாவில் தண்ணி வருகிறது. வழக்கம் போல் சுத்தத்தில் அடிச்சிக்க முடியாது. முதல் நாள் என்பதால் இன்னும் சில பல வேலைகள் பாக்கி இருக்கிறது... அதே போல் வேலை செய்யாத லட்டின்களை கழட்டி ரிப்பேர் செய்து கொண்டு இருந்தனர்.




அப்புறம் இன்னொரு முக்கியமான நான் அதிசியத்து பார்த்த விஷயம்..
அது எஸ்கேப் சினிமாஸ்இல் உள்ள ப்ரொஜெக்டர்...எல்லாமே தியேட்டர்
வெளியே அந்தரத்தில் இருக்குங்க... படம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு....
வருங்காலத்தில் ஆபரேட்டர் என்று ஒருத்தர் இருக்க மாட்டார் போல...
நான் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது ஒரு பான்ட் போட்ட அக்கா
சாரி மேடம் வந்து போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுனு சொல்லிட்டு
போனாங்க...அதனால இதுக்கு மேல நோ போடோஸ்...


சரி இனிமே தியேட்டர் உள்ளே போவோம்....நான் போன ஸ்க்ரீன் பெயர்
plush ....இது தான் அங்கே இருப்பதிலே பெரிய ஸ்க்ரீன் என்று சொன்னார்கள்.
முதல் முறையா எனக்கு வந்த டிக்கெட் confirmation எஸ்.எம்.எஸ் மூலம்
உள்ளே சென்றது இப்போது தான். உள்ளே போனதும் அசந்துட்டேன்...
நன்றாகவே இருந்தது. ஓர சீட்கள் அனைத்தும் கபூல்(ஜோடி) சீட்தான்.
நல்லா தெளிவா தான் வடிவமைச்சு இருக்காங்க....பத்து ரூபாய் சீட்கள்
அனைத்தும் காலியாக தான் இருந்தது.


சீட்கள் நல்லா அகலமா சோபா போல இருந்தது. புஷ் பேக் வசதி இல்லாதது
குறையே. அப்புறம் சீட் நம்பர் பிளாஸ்டிக் ப்ளேட்கள் விழுந்து கிடந்தன.
என் சீட் மட்டும் தான் அப்படி இருக்குனு நினைச்சேன் படம் ஆரம்பிச்ச
நாலா புறமும் இருந்து அந்த தகர டப்பா சவுண்ட் கேட்டது. முதல் ஷோ
வந்தவங்களே அடிச்சு உடைச்சுட்டாங்கலோ என்று சந்தேகம் வந்தாலும்
அது தானாக கழுண்டு விழுகிறது என்று போக போக தெரிந்தது....!!


இன்னைக்கு தான் முதல் நாள் என்பதனால் அப்படி இருக்கலாம்...போக
போக நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா சவுண்ட் எல்லாம்
தாறு மாறு...சும்மா அதுருது... யுவனின் பின்னணி இசையை இந்த தடவை
மிகவும் ரசித்தேன்...அதே போல் மதி கேமராவையும்.... முதல் நாள்
சவுண்டில் விட்டு போன வசனங்களை தெள்ள தெளிவாக கேட்டேன்...


அப்புறம் ஒரு சின்ன பாப்கார்ன் விலை வெறும் அறுபத்தி அஞ்சு ரூபாய்
தான். ஒரு வெஜ் புப்ஸ் விலை வெறும் நாப்பது அஞ்சு ரூபாய் தான்.
பானி புரி, பேல் புரி போன்ற சாட் ஆயிட்டங்கள் கூட வெறும் அறுபது
ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் இந்த விலை பட்டியலை பார்த்ததே
சாப்பிட்டது மாதிரி இருந்ததால் அந்த பெரிய கியூவில் நிற்காமல் அப்படியே
திரும்பி விட்டேன்,இன்டெர்வெல் முடிந்து சரியாக படமும் ஆரம்பித்தார்கள்.


அப்புறம் நான் பார்க்கிங் எவ்வளவு ஆகும்னு ஒரு கணக்கு போட்டேன்...
ஏதோ பரவாயில்லை மூப்பது ரூபாய் தான் வந்தது. ஆனா ஒரு படத்துக்கு
மூப்பது ரூபாய் பார்க்கிங் கொஞ்சம் அதிகம் தான். மொத்தம் மூணு பேஸ்மென்ட் பார்க்கிங் இருக்கு....எனக்கு எந்த பேஸ்மென்ட்டில் வண்டி விட்டேன் என்றே மறந்து அதை எடுக்க ஒரு கால் மணி நேரம் ஆச்சு என்பது குறிப்பிடதக்கது.பைக் பார்க்கிங் ஏரியா ஒரே தண்ணியாய் இருந்தது....!!



இந்த இடுகை பல பேருக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்....
இப்போதைக்கு மீ எஸ்கேப்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, August 9, 2010

சாமுராய், எந்திரன் , டயலாக்.......!!

சாமுராய் :


நீண்ட நாட்கள் கழித்து டி.வி.யில் ஒரு படத்தை இன்டெர்வல்க்கு பிறகு படம் முடியும் வரை பார்த்தேன் என்றால் அது சாமுராய் தான். இன்டெர்வல்க்கு முன்னாடி ஏன் பார்க்கலைனா வேலை தான் காரணம். பல பேரு சொல்வாங்க சாமுராய் மொக்கை படம்னு.... ஆனா முழுசா மொக்கைனு சொல்ல முடியாது. படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சொல்ல வந்த கருத்து சரி என்றாலும்...வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்தாலும்... படத்தின் எடிட்டிங் ரொம்ப மோசம்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சாமுராய் நான் இளங்கலை படிக்கும் போது ரீலீஸ் ஆச்சு. எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் தான் படம் பார்த்தேன். படம் பார்க்கும் போதே கடைசி கட்ட காட்சிகளில் எனக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே போல் படத்தின் வசனங்கள் நச். படத்தின் மிக பெரிய பலம் ஹாரிஸ் தான். அவரின் பின்னணி இசையும் குறிப்பாக அந்த மூங்கில் காடுகளே பாட்டும் நோ சான்ஸ்.

படம் பார்த்த பிறகு என் கல்லூரியில் நண்பர்களை ஒட்ட அடிக்கடி இந்த படத்தில் வரும் ஜோசியர் காமெடி வசனத்தை மாற்றி மாற்றி சொல்லி கலாய்ப்போம்...அது " வெறும் அம்பு தான் நீ...அதை விட்ட வில்லன் யார்னு எனக்கு தெரியும்" என்பதே.படம் ஓடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முன் வந்த அஜித் நடித்த சிடிசன் படமும் ஒரு காரணம். ஆனா ரெண்டு படத்துக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கு அது ரெண்டுமே அவுட் என்பது மட்டுமே!!

இந்த படத்தில் வரும் சில பல சம்பவங்கள், வசனங்கள் நம் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றது ஆகும். தெய்வாவிடம் தியாகு கூறும் அனுபவ மொழிகள் நன்றாக இருக்கும். இந்த தடவை படம் பார்க்கும் போது கடைசியில் மிக பெரிய (ஆ)தப்பு ஒன்றை கண்டுபிடித்தேன் அது கடைசியில் எங்கோ காட்டில் நாசர் விக்ரம் அண்ட் கோ..வை விட போகும் போது தீடிர் என்று அனிதா வந்து நிற்பார்... என்ன கொடுமை சார் இது...!!

ஆனால் இன்னொரு தடவை இந்த படத்தை டி.வி.யில் போட்டாகூட திரும்பவும் நான் பார்ப்பேன். எனக்கு இந்த படத்தில் வரும் உயிரோட்டம் மிகவும் பிடிக்கும்.... உதராணமாக...விக்ரம் சின்னி,விக்ரம் நாசர், விக்ரம் ஜெயா ரே, விக்ரம் அனிதா இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் நன்றாக இருக்கும்.ஆனா இந்த படத்தில் அவங்க இயற்ற சொன்ன சட்டம் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.....

*******************************

டயலாக் :

எக்மோர் டாஸ்மாக் நண்பர்கள் கூட்டத்தில் இருவர்...

" மச்சி நாட்டுல என்ன என்னமோ கண்டுப்பிடிக்கிறாங்க...ஆனா சரக்கு அடிச்சா வாசனை வராத மாதிரி சரக்கு கண்டு பிடிக்க மாட்டறாங்களே"

"மாமே நம்ம ஊர்ல சரக்கு அடிச்சா போதை வராத மாதிரி வேணும்னா கண்டுப்பிடிப்பாங்க....வாசனை வராத மாதிரி எல்லாம் ஹுஹம் "

###################

ரெண்டு ப்ளாகர்ஸ் பேசி கொண்டது...

"நீங்க இன்னும் நல்லா ட்ரை பண்ணா முன்னாடி வரலாம்..."

" எதுக்கு முன்னால... ட்ரெயின் முன்னாடியா இல்ல லாரி முன்னாடியானு தெளிவா சொல்லுங்க ..."

**************************************

எந்திரன் :

முதல் தடவை கேட்கும் போது பாட்டு கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது...ஆனா இப்போ திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்... முக்கியமா புதிய மனிதாவும்...,அரிமா அரிமாவும்.... இப்பவே படம் பார்க்கும் ஆர்வம் வந்தாலும்...இவ்ளோ பெரிய பில்ட் அப் வோட படம் வருதே என்று ஒரு ஓரமா அரிக்குது... படம் வந்ததுக்கு அப்புறம் ரஜினி சன் மியூசிக்ல லைவ்ல வர்ற நாளை ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கேன்...அதே மாதிரி தியேட்டர் தியேட்டரா போவரோ என்று சந்தேகமும் இருக்கு...ஆனா ஒரே சந்தோசம் ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்...!!

ஜெட்லி... (சரவணா...)

Thursday, July 22, 2010

கனவு வேட்டையும் போஸ்டர் வேட்டையும்!!!

கனவு வேட்டை:





கனவு வேட்டை (INCEPTION) படத்திற்கு கடந்த வெள்ளியே போய்
இருக்க வேண்டியது கூர்க் செல்ல வேண்டிய காரணத்தால் இன்று
தான் பார்த்தேன். பைலட் தியேட்டரில் இன்று தான் கனவு வேட்டை கடைசி நாள் என்பதால் சுமார் நுப்பது பேர் இருந்ததே அதிசியம். அதுவும் தியேட்டர்க்காரன் படம் முழுவதும் ஏ.சி. போட்டது மிக பெரிய அதிசியம்.



வேட்டை ஆரம்பம்டோய்.....!!


கனவு வேட்டை பற்றி ஒரு தமிழ் நாளிதழில் படித்த நினைவு...
கதாநாயகன் வேறு லியோநார்டா என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு
என்னுள் இருந்தது. படம் போட்டவுடனே அப்போ அப்போ கொஞ்சம்
சவுண்ட் கட் பண்ண ஆரம்பிச்சான் நம்ம ஆராதனா தியேட்டர்
மாதிரி. அதிலே எனக்கு கண்ணு சொக்க ஆரம்பிச்சுருச்சு... கண்
அசந்த நேரத்தில ரெண்டு மூணு கனவு வேற வந்திருச்சிங்க.
ஒரு வேளை இது தான் கனவு வேட்டையோ....??


படத்தில் நான் பார்த்த வரைக்கும் எனக்கு புரிஞ்சுது இது தாங்க..
நம்ம ஹீரோ ஒரு குழுவா அடுத்தவங்க கனவுக்குள் போய்
களவாடுராறு. சில சமயம் கனவுக்குள் போய் கனவுக்குள்ளயே
கனவுக்குள்ளும் போறாங்க. அதாவது நம்ம தமிழ் சினிமாலா
சில படத்தில் வருமே பிளாஷ்பேக் உள்ளயே பிளாஷ்பேக் அந்த
மாதிரி.... ஆனா இந்த கனவு வேட்டை வேற... ஆக மொத்தத்தில்
எனக்கும் ஒன்னுமே புரியலைன்னு சொல்ல முடியாது...ஏதோ
கொஞ்சம் புரிஞ்சுது...ஆனா புரியல....!! சரி ரைட் விடுவோம்..

***********************************

போஸ்டர் வேட்டை :


நானா தேடி போய் இப்படிப்பட்ட போஸ்டரை படம் பிடிக்கறது
இல்லைங்க...அப்படியே போகும் போதும் கண்ணில் பட்டா
எடுக்கறது உண்டு...நாம ரசிச்சதை மற்றவர்களும் ரசிக்கட்டுமே
என்ற ஒரே காரணம் தாங்க...

சின்ன தளபதி பரத்:



எங்கள் அண்ணன் சின்ன தளபதி பிறந்தநாள் போஸ்டரை
பார்த்ததும் அசந்துட்டேன்.... இப்படியெல்லாம் கூட காமெடி
பண்ணுவாங்களானு ஒரே சிரிப்பு...ஏற்கனவே facebook , ஓர்குட்
என்று இந்த போட்டோவை அப்டேட் பண்ணாலும்... அதை
பார்க்கதவங்களுக்கு இங்கே...... சின்ன தளபதியை யாரும்
நக்கல் பண்ண கூடாது...சொல்லிப்புட்டேன் ஆமாம்....



அவளின் உணர்ச்சிகள் :




இப்ப நம்ம தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் கஷ்ட காலம்னு நினைக்கிறேன்.... அட்டு படத்துக்கு தான் இப்போ விளம்பரம் அதிகமா வருது... அவளின் உணர்ச்சிகள் போறதுக்கு முன்னாடி அந்தரங்கம் பற்றி கொஞ்சம் பேசுவோம்....


உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை.எங்க பக்கத்துக்கு வுட்டு பொக்கை வாய் தாத்தா "நான் எப்போ அந்தரங்கம் படம் போவேன்" னு கேட்டு, நான் பார்த்துட்டு வந்து அவர்க்கிட்ட சீன் இருக்கா இல்லையானு சொன்ன பிறகு தான் அவர் போவேன்னு ஒத்தகாலில் நிக்குறார்.... நான் என்ன பண்றது சொல்லுங்க... எனக்கு என்னமோ அந்த படம் நல்லா இருக்காதுனு தான் தோணுது..... என் நண்பன் ஒருவன் சிவப்பு விளக்கு பார்த்து நொந்து விட்டான்..காரணம் கேட்டதற்கு படத்தில் சிவப்பு விளக்கை கூட காட்டவில்லையாம்.....!!


சரி அவளின் உணர்ச்சிகள் படத்துக்கு வருவோம்... இந்த படம்
போஸ்டர் பார்த்தவுடன் அடுத்த அட்டு படம் ரெடி ஆயிடுச்சு
டோய் என்று மகிழ்ந்தாலும். இந்த மாதிரி அட்டு படங்கள்
மக்கள் காசை வீணடிக்கிறது. இந்த மாதிரி படத்தால் மக்கள்
காசை ஒரு சில கும்பல்கள் நாமம் போட்டு விடுகிறார்கள்
என்பதே உண்மை.

காதலர் கட்சி :



கொஞ்ச நாள் முன்பு பெசன்ட் நகர் பீச்க்கு போகும் போது இந்த
போஸ்டர் கண்ணில்ப்பட்டது. சில வருடங்களுக்கு முன் இது
போல் ஒரு கட்சி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால்
இப்போது தான் அதன் தலைவரை பார்க்கிறேன். ஒரு தடவை
தேர்தலில் நின்றதாக கூட நினைவு...ஆனா எத்தனை ஓட்டு
வாங்கினார்னு தெரியலை...... ஆனா ஒண்ணு கடைசி வரி...
காதலர்களின் புரட்சி தலைவர் குமார்...ஹி ஹி...!!
யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.


இந்த இடுகை பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, May 10, 2010

ஒரு விபத்தும் ஒரு மரணமும் சில செய்திகளும்

ஒரு விபத்தும் ஒரு மரணமும் சில செய்திகளும்





கடந்த வாரம் ரெண்டாம் தேதி அடையாறை சேர்ந்த மஞ்சித் சிங் அவர்களின் குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஓர் அதிர்ச்சியான செய்தி, அது பெசன்ட் நகரில் ஆல்காட் பள்ளி அருகே கொஞ்சம் ரோட்டின் நடுவே இருக்கும் மரத்தில் மோதி அவர்களது மகன் பவித் சிங் இறந்து விட்டார் என்பதே....

இருபத்தொரு வயதான இளைஞர் பவித் சிங்கின் மரணம் அவரது
குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.ஆனால் பவித்சிங்கின்
குடும்பத்தினரும் நண்பர்களும் சோகத்திலும் மனம் தளராமல் தங்கள் மகன் ,நண்பன் மற்றவர்களுக்கு ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளார் என்று அதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று நடத்தினார்கள். பவித்சிங் விட்டு சென்ற செய்தி "சீட் பெல்ட் அணிந்து கார் ஒட்டவும்" WEAR A SEATBELT !!















__________________________________________________


நேற்று பெசன்ட் நகரில் பவித்சிங் சீட் பெல்ட் விழிப்புணர்வு பிரசாரத்தில் அடையார் காவல் நிலைய டி.சி. செந்தாமரை கண்ணன்
அவர்கள் கலந்து கொண்டு பவித்சிங் படத்துக்கு மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து காரில் வருவோருக்கு சீட் பெல்ட் அணிவதின்
அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும் பல காவல்துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.பவித்சிங்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களும்
பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் மற்றும் காரில் ஸ்டிக்கர்
ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.













___________________________________________



இதில் பாராட்டபட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மகன் இறந்த ஒரு வாரத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு பிரசாரம்
வைத்து அதை பொதுமக்களுக்கு எடுத்து சென்றதுக்கு ஒரு ராயல்
சல்யுட்!! மேலும் அவர்கள் பவித்சிங் சாலை பாதுகாப்பு டிரஸ்ட்
ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போகிறார்கள் என்று நோட்டீஸ்சில்
போட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


****************************************************


அப்புறம் நான் நேற்று விழிப்புணர்வு பிரசாரத்துக்கு சென்றபோது அங்கே பந்தபஸ்துக்கு வந்த ஒரு கான்ஸ்டபில் கூறிய செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைக்கவில்லை என்றாலும் அவர் கூறியது உண்மையாக இருந்தால் அந்த விபத்துக்கும் மரணத்துக்கும் அந்த ஒற்றை மரம் மட்டும் காரணமல்ல என்பதை தவிர இங்கு வேறு எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை.....





சரி அந்த ரோட்டின் நடுவே இருந்த மரத்தை என்ன பண்ணாங்க??
அந்த மரத்தை விபத்து நடந்த அடுத்த நாளே வெட்டி விட்டனர்.
ஒரு உயிர் போறதுக்கு முன்னாடியே வெட்டி இருக்கலாம்....
சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்று அறிய ஆசை...
காரணம் அடையாரில் பழமுதிர் நிலையம் முன்னே இருக்கும்
ஒரு மரத்தை பார்க்கிங்காக வெட்டினார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அந்த மரம் பாதி வெட்டப்பட்ட நிலையிலே தான் உள்ளது....எதுவும் கேஸ் இருக்கா இல்லை திரும்பவும் அந்த மரம் வளர வாய்ப்பு இருக்கானு எனக்கு தெரியல....


நான் அதற்காக ரோட்டில் இடையுறாக நிற்கும் மரத்திற்கும்,
ரோட்டின் ஓரத்தில் சாய்ந்து விழ போகும் மரத்திற்கும் வக்காலத்து
வாங்கவில்லை. ஓரமாக இருக்கும் மரங்கள் அப்படியே இருக்கட்டும்
ஆனால் அதுவே விழும் நிலையில் இருந்தால் உயிர் பலிக்கு முன் உடனடியாக வெட்டுவது நல்லது தான்.சில பல மாதங்களுக்கு முன்
அசோக் நகரில் ஒரு உதவி இயக்குனர் மரம் விழுந்து பலியானதை
நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.


**************************************

மரணம் எப்போ வரும்னு யாராலும் சொல்லமுடியாது...வீட்டை
விட்டு வெளியே போனால் திரும்பி வீட்டுக்கு வருவதே இப்போதுள்ள
நடைமுறையில் பெரிய விஷயம்.....இதுக்கு டிராபிக் மற்றும்
அதிக போக்குவரத்து தான் காரணமா?? சத்தியமா இல்லை.
ரேஷ் டிரைவிங் தான் மிக முக்கிய காரணம்.ரேஷ் டிரைவிங்கால்
ஒழுங்கா போற அடுத்தவனையும் வண்டியை விட்டு ஏத்தி விடுகிறார்கள் என்பது தான் கொடுமை.....


இன்னைக்கு காலையில் கூட ஒரு நல்லவர் ப்ளஸ் வல்லவர்
காரில் செல்போன் பேசியப்படியே டிராபிக் போலீஸ் இருந்தும்
அவர் செய்கையை பார்க்காமல் போனில் பேசியப்படியே ஒரு
சைட் மட்டும் பார்த்த கொண்டு முன்னேறி வந்ததை என்னனு
சொல்றது.....இந்த அல்லு கிளம்ப காரணம் அவர் பாக்காத சைடில் நானில்லை பைக்கில் ரைட் எடுக்க நின்னுக்கிட்டு இருந்தேன்...!!


இதனால சொல்ல வரது என்னன்னா காரில் போறவங்க சீட்
பெல்ட்டை போடுங்க, பைக்கில் போறவங்க ஹெல்மெட்டை போடுங்க,தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் கணக்கு
இருப்பவர்கள் ஓட்டை போடுங்க..... நன்றி....


ஜெட்லி...(சரவணா...)



Saturday, July 25, 2009

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

இப்பவும் என் நெஞ்சை விட்டு நீங்காத சில படங்கள்
உள்ளன, அவற்றில் சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடையாதவை(சில உண்மையாகவே மொக்கை படங்கள்).

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு
பிடித்த ஓடாத படங்கள் பற்றி நீங்கள் கமெண்ட் அனுப்பலாம்

சாமுராய்:

காதல் படத்தின் டைரக்டர் பாலாஜியின் முதல் படம் இது.
தன் குருவை(ஷங்கர்) போல சர்ச்சையான மற்றும் அதிக
பட்ஜெட்டில் எடுத்த படம். பல பிரச்சனையால் படம் மிக
தாமதமாக வெளிவந்தது. படத்தின் தோல்விக்கு காரணங்கள்
திரைக்கதை, எடிட்டிங், மற்றும் அதே சமயத்தில் வெளிவந்த
அதே கதையை உடைய சிட்டிசன் படமும் ஆகும்.
எனக்கு இந்த படத்தில் விக்ரமின் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்,
பிளஸ் பாடல்கள் அதுவும் மூங்கில் காடுகளே பாட்டுக்கு நான்
அடிமை. முக்கியான விஷயம் வசனம் சூப்பர்.

கற்றது தமிழ்:

ஜீவாவிற்கு இந்த படம் கண்டிப்பா ஒரு மைல்கல் தான் படம்
வெற்றி அடைந்து இருந்தால். நல்ல உழைப்பு, தமிழ் உச்சரிப்பு
இருந்தாலும் இந்த படம் மென்பொருள் வேலைக்கு செல்பவர்களையும் பி.பி.ஒ வேலைக்கு செல்பவர்களையும்
தாக்கி நிறைய வசனம் இருந்ததால் அதுவே படத்தின் தோல்விக்கும் வழி வகுத்தது. நான் இந்த படத்தை சாந்தம்
தியேட்டரில் பார்க்கும் போது பாதி பேர் இடைவெளியிலே
சென்று விட்டனர் அவர்கள் அனைவரும் பி.பி.ஒ,மென்பொருள்
வேலை செய்பவர்களே. படத்தில் என்னை கவர்ந்தவை
பாடல்கள், வசனம், ஜீவாவின் வாய்ஸ் மொடுலேசின்
போன்று சொல்லி கொண்டே போகலாம்.


பட்டியல்:

இந்த படம் வெளி வந்த சமயத்தில் டி.வி களுக்கு காட்சிகள்
மற்றும் பாடல்கள் கொடுக்க கூடாது என்று தடை போட்டு
இருந்தனர், அந்த தடையே இந்த படத்தின் தோல்விக்கு
முக்கிய காரணம்(உண்மை தாங்கோ).மிச்ச படி படம் சூப்பர்
பாடல்கள் ஹிட்.

நேபாளி:

துரை எனக்கு பிடிக்காத இயக்குனர்களில் ஒருவர், ஏன்
என்றால் ஓவர் பந்தா பார்ட்டி.(நான் அந்நியன் படம்
பார்க்க ஆல்பர்ட் தியேட்டர் சென்ற போது என் முன்
இருக்கையில்(பாக்ஸ்) துரை இருந்தார். அவரோட
உதவியாளர் அப்படின்னு நினைக்கிறேன், அவரை
புடிச்சு என்ன வேலை வாங்குறாரு, திட்றாரு. உதவியாளர்
காண்டு ஆனானோ இல்லையோ நான் காண்டுயிட்டன்.
இதுல வேற துரை அந்நியன் படத்தை நக்கல் செய்தார்).

நேபாளி பல குறைகள் இருந்தாலும் படத்தின் திரைக்கதை
என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் ஓவர் வன்முறையால்
மக்கள் இடைய சேராமல் போய்விட்டது.

காதல்னா சும்மா இல்லை:

இந்த படத்தை பார்த்தது ஒரு விபத்து, வேறு படங்களுக்கு
டிக்கெட் கிடைக்காததால் இந்த படத்துக்கு போக நேர்ந்தது.
படம் உண்மையிலே நல்லா இருந்தது(என்னை பொறுத்தவரை
போர் அடிக்காம டைம் பாஸ் ஆனா போதும்
). ஓரிரு பாடல்கள்
கூட நன்றாக இருந்தது, அருமையான ஒரு பயண படம்.
கூடிய விரைவில் ராஜ் டி.வி யில் போடுவாங்க டைம் கிடைச்சா பாருங்க.


பொம்மலாட்டம்:

நானா படேகர், இவரின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன்.
படம் டப்பிங் தான் என்றாலும் அந்த குறை அவ்வளவாக
தெரியவில்லை.அதவும் நானாவுக்கு நிழல்கள் ரவியின்
குரல் கனகச்சிதம். பாரதிராஜாவா இயக்குனர் என்று வியக்கும்
அளவுக்கு படம் சூப்பர். படத்தின் உயிரே அந்த கிளைமாக்ஸ்
காட்சி தான். சரியான விளம்பரம் இல்லாததால் படம் பெட்டியில்
படுத்து கொண்டது.

ஏகன்:

நான் முன்னாடியே சொன்னேன் என்னை பொருத்தவரைக்கும்
மொக்கை போடாம டைம் பாஸ் ஆகுதா அது போதும் அது
படம். அந்த வகையில் ஏகன் படம் எனக்கு பிடிக்கும். மொத்தமே
இரண்டு மணி நேரம் தான் படம் ஓடும். நல்ல காமெடி, பாட்டு.
அஜித் இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பா இருப்பார்.
(பரமசிவன், ஆழ்வார் போன்ற படங்களை நினைத்தால்...?)


எவனோ ஒருவன்:

நல்ல கருத்து சொல்ல வந்த படம், ஆனால் திரைக்கதை
பயங்கர சொதப்பல். பாடல்கள் இல்லாத படமென்பதால்
இந்த படம் பிடிக்கும்.


அலிபாபா:

அருமையான திரைக்கதை + பிரகாஷ் ராஜ் இருந்தும் ஏன்
இந்த படம் ஒடலைன்னு எனக்கு டவுட். ஆனா அப்புறம்
தான் தெரிஞ்சது ஹீரோன்னு ஒருத்தன் எப்படி இருக்கான்
அப்படின்னு நம்ம மக்கள் பார்த்துட்டு தான் உள்ளே வாருவாங்கன்னு...!.

மிச்ச படி பாடல்கள் செம மொக்கை
ஆனா படத்தில் உண்மையா கடைசியில் செம ட்விஸ்ட்.


குளிர் 100 டிகிரி:

பாட்டு ஒன்னு போதுங்க இந்த படத்துக்கு, அப்புறம் கேமரா
சூப்பர். படம் கொஞ்சம் மெதுவா தான் போகும். மிச்ச படி
ஹீரோ சஞ்சீவ் நல்லா ஸ்மார்ட் ஆக இருக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் நச்.


நன்றி
indiaglitz

உங்கள் ஓட்டை தமிழிஷ்யில் போட்டு விட்டு செல்லுங்கள்.

பாசமுடன்
உங்கள்
ஜெட்லி.

Monday, July 20, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு!

இவங்க எப்போ திருந்துவாங்க.....

நேத்து காலையில பேப்பர் வாங்க போகும் போது ஒரு போஸ்டர் என் கண்ல பட்டுச்சு.வேற ஒன்னும் இல்லைங்க
நம்ம புரட்சி தளபதி(என்ன புரட்சி செய்தாரோ???) விஷால்
அவர்களின் தோரணை படம் 50வது நாள் வெற்றி போஸ்டர்
தான் அது.

அந்த போஸ்டர்ஆ பாக்குனுமே என்னமோ பெருசா சாதிச்ச
மாதிரி ஒரு ஸ்டில் குடுத்திரிக்கிறார்.ஒரு நிமிஷம், என்ன
சொன்னேன் பெருசா சாதிச்சிடாரான்னு கேட்டேன்ல.
கண்டிப்பா இது பெரிய சாதனை தான். தோரணை என்ன
மாதிரி படம்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
இந்த உலகத்துக்கே தெரியும்.அந்த மாதிரி படமெல்லாம்
50 நாள் ஓடுன கண்டிப்பா பெரிய சாதனை தான்.

அது சரி என் கேள்வியெல்லாம் இது ஒன்னு தான் மொக்கை
படம்னு உலகத்துக்கே தெரியும் அதை இரண்டு வாரம்
ஓட்டிட்டு விட வேண்டியது தானே. ஏன் அதை காசு
கொடுத்து ஒட்டி அப்புறம் ஒரு போஸ்டர் வேற அடிச்சு?.
இந்த இடத்தில் அஜித் பத்தி சொல்லி ஆகணும் அவர்
தன் படங்கள் மொக்கை ஆனால் காசு கொடுத்து ஓட
வைப்பதில்லை.அது போல் எல்லோரும் இருந்தால்
என்ன? இவங்கெல்லாம் எப்போ திருந்துவாங்க? என்று
ஏக்கத்துடன் இருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்...!!!!

***********************************

இரண்டு மாதங்களுக்கு முன்:

நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் "ஏன்டா நீ ப்ளாக்ல
சீரியஸ் ஆன விஷயமே எழுதமாட்டியா, சமுதாயத்தை
பத்தி இல்லன நம்மள சுத்தி நடக்குறத பத்தி" என்று
கேட்டார்.

"அதெல்லாம் எதுக்கு மச்சி, சும்மா ஜாலியா எழுதுனமோ
அவ்ளோதான்... ஆனா எனக்கும் ஒரு விஷயத்தை பத்தி
எழுதுனும்னு தோணுது..."என்றேன் நான்.

"என்ன"?

"நம்ம ஊர்ல இளைஞர்கள் நிறைய பேர் வேலைக்கு போகாம கொலை,கொள்ளை,வழிப்பறி....." நான் முடிக்கும்
முன்பே

"ப்ளாக் எழுதுறது!.." அப்படின்னு தீடிர்னு சொன்னான்,
அந்த சமயம் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியுல.
அப்போது நான் அதை சீரியஸ் ஆக எடுத்து கொண்டாலும்,
இப்போது அதையெல்லாம் ஒரு மேட்டர்ஆக எடுத்து
கொள்வதில்லை.(கேட்டு கேட்டு புளித்து விட்டது).


************************
புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....

உங்கள்
ஜெட்லி

Tuesday, July 7, 2009

எனக்கா (பிரியா)மணி உனக்கா.

எனக்கா மணி உனக்கா.

நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கடந்த வாரம் பேப்பரில் நீங்கள் ஒரு பட விளம்பரத்தை
கண்டிப்பாக பார்த்திருக்கலாம். எனக்கா மணி உனக்கா
இதாங்க படம் டைட்டில்.நம்ம அக்கா ப்ரியாமணி நீச்சல்
உடையில் ஒரு ஸ்டில் போட்டிருந்தாங்க. இந்த படம்
தெலுங்கில் துரோனா என்ற பெயரில் வெளியாகி திரும்பவும்
பெட்டிக்குள் போன மொக்கை படம். அதை இப்போது தமிழ்
ரசிகர்களுக்கு மொழிமாற்றம் செய்து ஒரு கேவலமான
விளம்பரத்தால் நம்மை தியேட்டர் பக்கம் இழுக்க
நினைக்கிறார்கள்.



(இந்த ரெண்டு படத்துல்ல எது போட்டங்கனு சரியா
நினைவு இல்லை.அதனால் இரண்டு படங்களும்
உங்கள் பார்வைக்கு. முடிந்தால் ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிக்கவும்.)






















படம் பெயரை பார்த்திங்களா, எனக்கா மணி உனக்கா.
இந்த மாதிரி படம் பேர் வைக்கவே 11 பேர் கொண்ட குழுவ
வச்சிருப்பாங்க போல?. துபாய் ராணி, காம சதி லீலாவதி,
பெயர் சந்தியா தொழில் தாசி இந்த மாதிரி டைட்டில் வச்சி
நம்மை போல் உள்ள ரசிகர்களை ,தியேட்டர் பக்கம்
இழுக்க பார்க்கிறார்கள் சில கயவர்கள்.




# சரி இந்த மாதிரி டைட்டில் வச்சா கூட்டம் பிச்சுகுமா என்ன?

# ஏன் இது போல் பட டைட்டில் வைத்து திரைப்படங்களை
கேவலப்படுத்துகிறார்கள்?


# வெறும் கவர்ச்சியை மையமாக வைத்து டப்பிங் படத்தை
வெளியிட்டால் நம் தமிழ் ரசிகர்கள் வந்து பார்த்து விடுவார்களா?

#தயவு செய்து இந்த மாதிரி டைட்டில் வைத்து மற்ற
படங்களை கெடுப்பதை நிறுத்தி கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?

ஒரு நிமிஷம் இருங்க போன் வருது பேசிட்டு வரேன்......
****************************************************

ஜெட்லி: சொல்லு பாலா...

பாலா: மச்சான் பல்லாவரம் லட்சுமில மரியா,ரேஷ்மா நடிச்ச வண்ணகிளிகள் படம் ஓடுது மச்சி.

ஜெட்லி: ஹோ அப்படியா, இப்பவே மணி பன்னிரண்டு ஆச்சி.. சீக்கரம் வா அப்பத்தான் படம் ஸ்டார்ட் பண்ணும் போது போக முடியும்.

*********************************************************
சாரிங்க நடுவுல போன் வந்துடுச்சு, எங்கே உட்டேன்

# இவனுங்கள திருத்த முடியாதுங்க.(யாரை???), இந்த மாதிரி
டைட்டில் வச்சி மயக்க பாக்குறாங்க.....

சரிங்க டைம் ஆச்சு நண்பன் வந்துரவான் லேட்ஆ போன
சில நல்ல காட்சிகள் மிஸ் ஆயிடும்.அதனால நெக்ஸ்ட்
டைம் மீட் பண்றேன்.....


(சும்மா ஒரு உதாரணதுக்காகத்தான் மேற்கொண்ட போன்
பேசும் நிகழ்ச்சி, யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள
வேண்டாம். எனக்கு பல்லாவரம் எந்த பக்கம் இருக்குன்னு
கூட தெரியாது, நான் இதுவரைக்கும் ஜோதி தியேட்டர் பக்கம்
கூட போனதில்லங்க. நம்பினால் நம்புங்க)





முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த நல்ல
விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.

உங்கள்

ஜெட்லி.

Friday, July 3, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....
*******************************************
நம் ஊர்களில் பேருந்துகளின் அவல நிலை....

கடந்த வாரம் நானும் எனது நண்பர்களும் ஒரு மினி பயணமாக மாம்மலபுரம் தாண்டி கடலூர்க்கு முன் இருக்கும் ஒரு இடத்துக்கு சென்றோம்.

(நாங்கள் இந்த பஸ்சில் செல்லவில்லை, வேற பஸ் படம் கிடைக்கவில்லை)


நாங்கள் ஏறிய பேருந்தில் இருக்கைகள் நிறைந்துவிட்டதால்
நாங்கள் அனைவரும் நின்று கொண்டே பயணித்தோம்.
அன்பு நண்பர் சின்ன தம்பி எனப்படும் சரவணன் அவர்கள்
பயண கழிப்பால் கண்டக்டர் அவர்களிடம் அனுமதி வாங்கி
டிரைவர் அருகே உக்காந்து கொண்டு வந்தார்.

நாங்கள் நின்று கொண்டே வந்தோம், E.C.R ரோட்டில் பஸ்
பறக்கும் என்று பார்த்தால். ஷேர் ஆட்டோகாரன் கூட எங்களை ஓவர்டேக் செய்து விட்டு போனான். எங்கள் பின்னாடி வந்த
அனைத்து பஸ்களும் எங்களை ஓவர்டேக் செய்து கொண்டு முன்னால் போனது.தீடிரென்று சரவணனிடம் இருந்து நண்பர் ராம் அவர்களுக்கு ஒரு sms ,

"டேய் டிரைவர்க்கு பஸ்ல ஆறாவது கீர் இருக்கிறது இப்பதாண்டா தெரியுது. இவ்வளவு நேரம் அஞ்சாவது கீர்லதான் வண்டி ஓட்டிட்டு வந்துருக்கார், அதை வேற டிரைவர் சிரிச்சிகிட்டே சொல்லி மாத்துறார் டா".

அவன் sms வந்த அஞ்சாவது நிமிஷத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

போனஸ் செய்தி:

பாவம் டிரைவர் இதுவரை ஐந்து கீர் உள்ள வண்டிதான் ஒட்டி
பழக்கமாம், அவரிடம் தீடிரென்று இந்த வண்டியை கொடுத்து உள்ளனர். அதுவும் இல்லாமல் வண்டி அடிக்கடி ஹீட் ஆகுதாம்.

(உங்க(டிரைவர்) குத்தமா அரசு குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல)

******************************

டிராபிக் போலீஸ்

(இன்னைக்கு எவனும் சிக்கலையே.....சுழ்நிலை பாட்டு:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி)


நீங்கள் பைக்கிலோ அல்லது காரிலோ போகும் போது உங்கள்
முன் ஆறு அல்லது எட்டு சக்கரம் கொண்ட லாரி சென்று
கொண்டிரிக்கலாம், அப்படினா அப்படியே பிரேக் போட்டு மெதுவா போங்க.தயவு செய்து அந்த லாரி பின்னால் போகாதிங்க, அது ஆட்டோ பின்னால் போவதற்கு சமம்.


ஏன்னா கண்டிப்பா அந்த ஸ்பீடாக வரும் லாரியை டிராபிக்
போலீஸ்காரர் கடமை உணர்ச்சியோடு கண்டிப்பாக நிறுத்துவார்.
ஆம் சென்னை நகரத்தில் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அந்த லாரிகளுக்கு உள்ளே வர அனுமதியில்லை.


சரி அந்த போலீஸ்காரர் நிறுத்தி பைன் போடுவார்ன்னு மட்டும்
நினைக்காதிங்க, எல்லாம் இருபது,முப்பது வாங்கத்தான் நிறுத்துவார். இந்த மாதிரி லாரி ஓட்டுனர்கள் காசை கொடுப்பதை
நான் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கேன். முக்காவாசி
காலையில் தான் இது நடக்கும், டிராபிக் போலீஸ்காரர் அந்த
லாரி பின்னால் எந்த வண்டி வருகிறது அல்லது சைடில் எந்த
வண்டி வருகிறது என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை.
அந்த லாரியை பார்த்தாலே கை போட்டு விடுவார்கள் பின்னாடி
வரவன் எவ்வளவு பாஸ்ட் வரான் என்றெல்லாம் பார்க்காமல்
அவர்கள் பாட்டுக்கு நிறுத்துவதால் பல விபத்துக்கள் நடப்பதற்கு
டிராபிக் போலீஸாரே காரணம் ஆகி விடுகின்றனர் என்பது
கசப்பான உண்மை.அவர்கள் அந்த லாரியை மடக்கி நிறுத்தும்
கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம் ஆகி விடும்.


(நம்புங்க... இவங்க லாரியை மடக்க நிற்கவில்லை)


நான் அனைவரையும் சொல்லவில்லை, சில நல் உள்ளம் கொண்ட டிராபிக் போலீசாரும் நம் ஊரில் உள்ளனர். இந்த மாதிரி லாரியை
கண்டால் தூரத்தி கொண்டு போய் பணம் பிடிங்கிவிட்டு தான்
மறு வேலை பார்க்கும் போலீஸாரும் உள்ளனர்.

சரி மக்களே பார்த்து வண்டி ஒட்டுங்கோ......

(ராஜா வசூல் ராஜா, மாமூல் வாங்க போவது யாரு... நீதான்).

இது போல் உங்களுக்கும் அனுபவம் இருந்தால், கமெண்ட்ல
எழுதி எங்க கூட பகிர்ந்துக்கலாம்.

உங்கள்
ஜெட்லி.

Friday, June 26, 2009

நாடோடிகள்.....விமர்சனம்

நாடோடிகள்

நண்பனின் காதலுக்கு உதவ போய் தங்கள் வாழ்க்கையை
தொலைத்த மூன்று நண்பர்களின் கதை.பிறகு அந்த
நண்பன் தங்களுக்கு துரோகம் செய்ததை எண்ணி என்ன செய்றாங்க அப்படின்னு நீங்க தியேட்டர்ல பாருங்க.....
படத்தின் திரைக்கதை மிக அருமை. படம் ஓடும்
நேரம் அதிகம் என்றாலும் (2:45 minutes) போர் அடிக்காமல்
செல்கிறது.

சசிகுமார் நட்புக்காக உயிரையும் தரும் பாத்திரம்.
ஆள் இதில் கொஞ்சம் கலகலப்பாகவே திரிகிறார்.
காதல் செய்கிறார், டான்ஸ் ஆடுகிறார். தன் நண்பன்
துரோகம் செய்து விட்டான் என்று தெரிந்தவுடன்
தன் கண்களில் கோப அனலை கக்குகிறார். இந்த
மாதிரி நமக்கு ஒரு நண்பன் இல்லையே என்றும்
ஏங்கும் அளவுக்கு.



அடுத்து பரணி கல்லூரி படத்தில் வந்த பையன், இவரின் காமெடி
சான்ஸ்ஏ இல்லை.இவருக்கு நடுவுல காது கேக்காம போய்டும்,
அப்போ கூட ஆள் பின்னுவார். கடைசியில் நண்பனை கொல்ல
துடிக்கும் அந்த காட்சிகளில் உண்மையிலே செம.


விஜய் செ-28 புகழ், தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக
செய்திரிக்கிறார். இவரின் அப்பாவாக வரும் புதுமுகம்
நச்சென்று மனதில் நிற்கிறார்.பையனின் காதலுக்கு அவரே
தூது போகிறார்.விஜய்க்கு கால் போனவுடன் தன்னம்பிக்கையாக
அவர் கூறும் வசனங்கள் டச்சிங்.

படத்தின் முதல் பாதியே ஒரு படத்தை பார்த்த திருப்தி
கிடைத்து விடும். இடைவேளை முன்னால் வரும் சேஸ்
காட்சிகள் அருமை.தன் நண்பனின் லவ் ஜெயிக்க சசி
அண்ட் கோ பண்ணும் தியாகங்கள் நட்பின் அருமையை
நமக்கு உணர்த்துகிறது.படத்துக்கு ஒளிப்பதிவு மிக பெரிய
பிளஸ். அந்த விளம்பர பிரியர் வரும் காட்சிகளில் தியேட்டர்
அதிர்கிறது , சும்மா கலக்குறாரு. கஞ்சா கருப்பு தன்
பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.


படத்தில் நாயகிகளுக்கு அவ்வளவு வேலை இல்லை.
அந்த சிவா சம்போ பாடல் காட்சிக்கு விறுவிறுப்பு தருகிறது.
ஆகா மொத்தத்தில் படம் சூப்பர். கடைசியில் கொஞ்சம்
சுப்ரமணியபுரம் வாசம் அடித்தாலும் படம் நச்.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல சினிமா பார்த்த
திருப்தி கிடைத்தது.இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.



ஜெட்லி டவுட்:

சசி அண்ணே தன் நண்பனின் காதலை எத்தனை பேர்
அடித்தாலும் தூரத்தினாலும் சேர்த்து வைக்கிறார்.
(நண்பனின் அம்மா M.P, நண்பனின் காதலியின் அப்பன்
பெரிய தொழிலதிபர்.)

ஆனா சசி அவர்கள் அடுத்த தெருவுல இருக்கிற தன்
காதலி அத்தை பெண்ணை விட்டு கொடுப்பது, கொஞ்சம்
இடிக்குது. (இருந்தாலும் சசி அண்ணே உங்க நேர்மை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

ஜெட்லி பஞ்ச்:

நாடோடிகள் படம் பார்த்த பின் நண்பனின் காதலை சேர்த்து
வைக்க பல நண்பர்கள் தயங்குவார்கள்.


நீங்கள் பெற்ற விவரம் அனைத்து மக்களையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

Tuesday, June 9, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....

************


படித்தது

சைவ ஜோக்:

ஒருவன்:"கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதுல என்ன
சௌகரியம்?"

இன்னொருவன்:"படுக்குற கட்டில்ல இருந்து ரெண்டு

பக்கமும் கிழே இறங்கலாம்".

************************
பார்த்தது:

இப்போலாம் புது விதமான பேஷன் நம்மூர் நடிகர் நடிகைகளிடம் தொற்றி கொண்டுள்ளது. அதாவது இப்போது நடிகர் நடிகைகள் அவர்கள் பிறந்த நாளை எதாவது ஒரு அநாதை இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சரி அவுங்க கொண்டாடருது நல்ல விஷயம் தான். ஆனா அதை அடுத்த நாள் காலையில் பேப்பரில் படம் பிடித்து போடுவது கண்டிப்பா விளம்பரம்ன்னு தான் நினைக்க தோணுது. ஆனா நம்ம தல அஜித் தான் ரியல் ஹீரோ விளம்பரமே இல்லாம செய்வார். அவரை பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.

**********************************
பொன்மொழிகள்:

# 'தாராள மனசு' என்பது வாரி கொடுப்பதில் இல்லை.
தேவையை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் கொடுப்பதில்
தான் இருக்கிறது.


-பருஎர்.

# கால் இல்லாத ஒருவன், மற்றவர்களுக்கு ஓட கற்று

கொடுப்பது போலத்தான் - விமர்சகரின் பணியும்.

- கேனிங் பெல்லோக்.

******************************
பிடித்தது:


இந்த வாரம் நமது வலைப்பதிவு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அனுபவமும், தலைவர் சுரேஷ்(பழனி) அவர்களின் சிறுகதையும், ப்ரியமுடன் வசந்தின் TOP 10 கனவுகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.... நீங்களும்
அவர்களது பேரை கிளிக் செய்து படித்து ரசிக்கவும்......

**************************



கடந்த சனிகிழமை பௌர்ணமி அன்று நான்,சித்து, நட்டு, யுவராஜ்,சுகுமார் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலம்
சென்று வந்தோம்.நான் அன்று தான் முதல் முறை
கிரிவலம் சென்றேன், அருமையாக இருந்தது.

சித்துவின் கார் ஓட்டும் திறமையை கண்டு நாங்கள்
அனைவரும் வி(ப)யந்தோம்(என்ன நட்டு, யுவராஜ் கரெக்ட் தானே!).அதுவும் அவர் ஷார்ப் கட் பண்ணும் போது எங்களுக்கு ஒரு கலக்கு கலக்கும் பாருங்க சான்சே இல்லை.சித்து அவர்கள் F-1 பந்தய ரேஸில் ஓட்டினால் நம் நாட்டுக்கு கோப்பை நிச்சயம், அடுத்த மைக்கல் ஷுமேக்கேர் ஆக வாழ்த்துக்கள் சித்து.

நண்பர் சுகுமாரை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்,
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், நல்ல எண்ணங்களை உடையவர். முன்பெல்லாம் பத்து ரவுண்டு அடித்தாலும் சும்மா கில்லி மாதிரி நிப்பாராம்(பி.கு: ராயபுரம் மைதானத்தில் அவர் ரன்னிங் ரவுண்டு போவதை சொன்னேங்க).

நான் ஒரு பத்து நிமிஷம் சித்துவிற்கு ஓய்வு கொடுப்பதற்கு சிறிது நேரம் காரை டிரைவ் செய்தேன், அப்போது நண்பர் நட்டு அவர்கள் தன் தாத்தா கண்ணுக்கு தெரிவதாக கூறியதால் அதோடு நான் கார் ஓட்டுவதை நிறுத்தி கொண்டேன்.

**********************************
பார்த்தது :


சமீபத்தில் டி.வி.யில் நான் மிகவும் ரசித்து பார்த்த விளம்பரம் ஹிந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் நடித்த ரிலையன்ஸ்
நெட்வொர்க் விளம்பரம். அந்த விளம்பரம் என் மனதை மிகவும்
கவர்ந்தது. அதில் ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தன் பழைய
நண்பர்களுக்கு போன் செய்து மகிழ்வார். எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்த உடன், ஒரு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குனருக்கு மனம் கனிந்த பாராட்டுகள்.

***************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள் JOHNNY DEPP.

இன்று ஜூன் 9 ஆம் தேதி ஜானி டேப் (johnny depp) அவர்கள் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜாக் ஸ்பரொவ் (jack sparrow) கதாபாத்திரம் மூலம் pirates of carribean படத்தில் நம் அனைவரது உள்ளதையும் கவர்ந்தவர்.இவர் மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆனால் இதுவரை அவருக்கு
கிடைக்கவில்லை.

இவர் ஆரம்ப காலத்தில் telemarketing வேலை செய்து கொண்டிரிந்தார்.பின் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மூலம் படங்களில் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் பல முறை போதை பொருள் வழக்கில் கைது ஆகிரிக்கிறார். ஒரு முறை பத்திரிகையாளரை தாக்கியதற்கும் கைதானார். ஆனா இதெல்லாம் அங்க சகஜம்,மேலும் இவர் நல்ல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவருக்கு 46 வயது என்று என்னால் நம்ப முடியவில்லை......

*******************


மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 4 , பொடிமாஸ் 3 , பொடிமாஸ் 2 , பொடிமாஸ் 1 .

************

உங்கள்

ஜெட்லி


Friday, June 5, 2009

குளிர்100 டிகிரி --- விமர்சனம்

குளிர்100 டிகிரி


குளிர்100 டிகிரி, அனிதா உதீப் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.
குத்து பாட்டு,கவர்ச்சி, காட்டு கத்தல் இல்லாமல் வந்திருக்கும் இன்னொரு படம்.படத்தில் பெரிய ஸ்டார் வேல்யு என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். படத்தின் பெரிய பிளஸ் ஒளிப்பதிவு தான், விஜய் அவர்கள் அருமையாக ஒளிப்பதிவு செய்து ஏற்காடை நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டி விட்டார். அடுத்த பிளஸ் bob சசி இசையில் ஏற்கனவே மனசெல்லாம் பாடல் சூப்பர் ஹிட். அந்த ஒரு பாட்டு தான் படத்துக்கு மிக பெரிய விளம்பரம்.



சஞ்சீவ் தான் படத்தின் நாயகன் ரொம்ப அலட்டிகொள்ளாமல், இயல்பாக நடித்து உள்ளார்.சஞ்சீவின் அப்பாவும் அம்மாவும் சண்டையால் பிரிந்து வாழ்பவர்கள், அப்பா தாதா ஆதித்யா மேனன். அப்பாவின் ரௌடிதனம் பிள்ளைக்கு வாராமல் இருக்க சஞ்சீவை ஏர்காடு பள்ளியில் சேர்த்து விடுகிறார் அம்மா. பிறகு அங்கு எப்போதும் போல் மூணு பசங்கள் பள்ளியை ஆட்டி படைக்கிறார்கள். அந்த பள்ளியில் நடக்கும் நட்பு, காதல்,மோதல் மற்றும் ரவுடிதனம் செய்யாமல் அவர்களோடு சண்டை போடாமல் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா?.........என்பதே கதை.



படத்தின் நாயகன் சஞ்சீவ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,அவரின் பார்வையே அவருக்கு மிக பெரிய பிளஸ். தன் அம்மாவிடம் அன்பிலும், நண்பனிடம் நட்பிலும் மிக ஆழகாய் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நண்பனாக வரும் பப்லு ஆளும் வெயிட் தான், நம்மை சிரிக்கவும் வைக்கிறார், நட்புக்காக உயிரையும் குடுக்கிறார். இவரை போல் நமக்கு ஒரு நண்பன் கிடைக்க மாட்டானா என்று நினைக்க வைக்கிறார்.அது என்ன வர வர எல்லா படத்தலையும் கதாநாயகியை மெண்டல் மாதிரி காற்றங்கனு தெரியுல. ஏதோ முள்ளங்கிக்கு டிரஸ் போட்ட மாதிரி கதாநாயகி வருது போகுது அவ்வளவுதான்.படத்தின் இரண்டாம் பாதியில் கதாநாயகி எங்கே போனார் என்று தெரியவில்லை.பணம் பாக்கி தரள போல, கதாநாயகி என்ன ஆனாங்குன்னு நீங்க கேக்க கூடாது.

நான் திரும்பவும் சொல்றேன் இது மசாலா படம் இல்லை இது வேற.லாஜிக் பாக்காம இருந்த படம் சூப்பர் அப்படின்னு சொல்லலாம்.என்னடா ஸ்கூல் காட்றாங்க ஒரு வாத்தியார் இல்ல, ஸ்கூல் பெல் அடிக்களா அப்படின்னு நீங்க கேள்வி கேட்டிங்க அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. படிச்சா அந்த மாதிரி ஸ்கூல்ல படிக்கணும் அப்படின்னு நமக்கே ஆசை வரும், ஏன் என்றால் படிகிறத தவிர வேற எல்லாம் பண்றாங்க. படத்தின் திரைக்கதையில் சில சொதப்பல்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா, அப்படினா இந்த படத்துக்கு போங்க நல்ல பொழுதுபோக்கான படம். ரெண்டு மணி நேரம் தான் படம் ஓடும், நம்மை உள்ளே உட்கார வைத்து பிளேடு போட மாட்டார்கள். ஆனால் அந்த மூணு வில்லன்களாக வரும் பையன்களின் தமிழ்ஐ கேட்டால் ஐயோ வெரி சாரி. அதே போல் கதாநாயகி சில இடங்களில் ரசிக்க வைக்கிறார் பல இடங்களில் கொட்டாவி வர வைக்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மேற்கித்தியே இசை ஆதலால் C சென்டர் ரசிகர்களை கவரவில்லை. ஆனா இந்த படம் போன வாரம் நான் தோரணை படம் பார்த்ததற்கு எவ்வளவோ மேல் என்று நான் நினைக்கிறேன். நான் முதலில் கூறியது போல் ஏன் இந்த மாதிரி படங்களை வரவேற்க வேண்டும்? ஏன் என்றால் அப்பத்தான் சர்வம்,தோரணை போன்ற படங்கள் வருவது குறையும்,இல்லன இந்த வருஷம் இன்னும் பத்து படங்கள் தோரணை மாதிரி வந்தாலும் வரும்.

படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கியதோடு படம் முடிந்தது என்று நினைத்தால், தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..கடைசியாக சஞ்சீவ் பேசும் வசனம் சூப்பர்.குளிர்100 டிகிரி படத்தை மொக்கைன்னு சொல்ல முடியாது, சுமார் தாரளமாக சொல்லலாம்.ஏன்டா சுமாரான படத்துக்கே இந்த பில்ட் அப்ஆனு நீங்க கேக்கலாம், போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.

இப்படிக்கு

ஜெட்லி.











Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)



நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.



எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.



அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

Friday, May 29, 2009

தோரணை -- புரட்சி தளபதிக்கு ஒரு கடிதம்.

வணக்கம் புரட்சி தளபதி விஷால் அவர்களே,



இப்பதான் உங்க தோரணை படம் பார்த்து விட்டு வந்தேன்,
பொதுவா நான் விமர்சனம் தான் எழுதுவேன் ஆனா என்னமோ தெரியுல இன்னிக்கு உங்களுக்கு கடிதம் எழுதுனும்னு தோணிச்சு. இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமான்னு எனக்கு தெரியாது ஆனா நம்ம ப்ளாக் படிக்கும் அனைவரையும் சென்று அடைந்தால் போதும்.



படத்துக்கு வருவோம், முதல் பாதி படம் உங்களுக்கு காமெடி
வரும்னு தூள் கிளப்பிட்டிங்க. நீங்களும் சந்தானமும் அடிக்கும்
லூட்டியில் என் வயிறு வலிக்கும் அளவுக்கு நான் சிறிது மகிழ்ந்தேன், திரைஅரங்கம் முழவதும் சிரிப்பு சரவெடி தான் போங்க. அதுவும் மயில்சாமியும் சந்தானுமும் பறவை முனியம்மாவிடம் அந்த புது பில்டிங்கில் நடக்கும் கூத்து சூப்பர் சூப்பர் சூப்பர்.



படத்தில உங்க ஒபெநிங் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது,
ஆனால் அதுக்கு அடுத்த காட்சியே உங்களுக்கு ஒரு ஒபெநிங் சாங், நீங்களே உங்களுக்கு பில்ட் அப் கொடுத்துட்டு அதை நீங்களே கிண்டல் பண்ணிகிரிங்க( எங்களுக்கு முன்னால நீங்களே முந்திகிட்டிங்க). உங்க தோரணை படத்தோட போஸ்டர் எல்லாம் சண்டைகோழி ஸ்டில் மாதிரி இருந்தது, படத்தை பார்த்த தான் தெரியுது தோரணை உங்கள் எல்லா படத்தையும் சேர்த்த ஒரு கலவை என்று.





ஸ்ரேயா, இவரின் தாராள மனம் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை, பாடல் காட்சிகள் தவிர இவருக்கு ஒண்ணும் பெருசா வேலை இல்லை. படத்தின் பின் பாதியில் நீங்களும் ஸ்ரேயாவும் போடும் மொக்கை தாங்க முடியவில்லை.


நீங்க வேற படத்துல உங்க அண்ணனை தேடிட்டு சென்னைக்கு வரிங்க, நான் படம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் ஒண்ணு பிரகாஷ்ராஜ் அல்லது கிஷோர் தான் உங்கள் அண்ணன் என்று. நீங்க நடுவுல ஸ்ரீமனை காட்டி என்னை குழப்பிவிட்டதாய் எண்ண வேண்டாம். அதுவும் திடிர்னு நீங்க ஆந்திரா காரை காட்டுவதும், ஆந்திரா எழுத்தில் உள்ள கடைகளை காட்டுவதை
உங்கள் குழுவின் அலட்சியத்தை காட்டுகிறது.




இரண்டாம் பாதி முழுவதும் மனதில் ஒட்டாத காட்சிகள், உங்க அம்மா , அண்ணன் செண்டிமெண்ட் எதுவும் எடுபடவில்லை. நான் நீங்கள் நடித்த சத்யம் படத்தை பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் நடித்த அனைத்து படங்களும் சிவப்பதிகாரம் தவிர எனக்கு மிகவும் பிடிக்கும்.




அப்புறம் சார் உங்க படத்துல என் சார் அரைச்ச மாவையே ஏன் அரைக்கிரிங்க, பைட் காட்சிகள் ரொம்ப பில்ட் அப். நான் இந்த படத்தை பாக்கறதுக்கு முக்கிய காரணம் பொல்லாதவன் புகழ் கிஷோர். அவரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனால் அவர பேச விடாம அவரை மருத்துவமனையில் படுக்க வச்சிடிங்க. சரி, அவர் தான் பேசல ஆனா நீங்க பேசியே உங்க அண்ணன் அடியாட்களை திருத்திரிங்க. பேசாம நீங்க எதாவது ஒரு கல்லூரியில் விசிடிங் பேராசிரியாராக போக உங்களுக்கு நல்ல திறமை இருக்கு.அப்புறம் அது எப்படி சார் நீங்களும் கிஷோரும் கார்ல மாட்டிகிரிங்க, போலீஸ் உங்க காரை சல்லடையாக துப்பாக்கியால் துளைத்து விடுகிறார்கள் அப்புறமும் நீங்க காரை எடுத்துக்கிட்டு போறீங்க, என்கிட்டே மட்டும் சொல்லுங்க சார் "நீங்க கார்ல எந்த இடத்துல்ல ஒளிஞ்சி இருந்திங்க". இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்க கேக்கலாம் முதல் நாள் உங்கள் படத்தை பார்த்த ஒரு தகுதி போதும்ன்னு நினைக்கிறேன்.


உங்கள்

ஜெட்லி.

Tuesday, May 19, 2009

கல் ஹோ நா ஹோ



Tomorrow may never come.

நான் இதுவரை பார்த்து ரசித்து, திரும்ப திரும்ப பார்த்தும் ஒரு முறையேனும் சலிக்காத மிக சில படங்களுள் இந்த படமும் ஒன்று, எப்படியும் ஒரு பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன். இப்படி தான் நேற்றும் பார்த்தேன், அந்த சுகமான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

கதை என்னவோ காதல் கதை தான், அதை சொன்ன விதம் தான் அழகு. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், கலாச்சார மாற்றங்களால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் படும் துயர் மற்றும் இன்ன பிற விஷயங்களை கலந்து நவரசங்கள் பொங்கி வழியும் படமாக தந்துள்ளார் இயக்குனர் நிக்கில் அத்வானி. இது இவரின் முதல் படமாம், அப்பாடா நம்பவே முடியல. ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து செதிக்கியிருக்கிறார் மனிதர். கதைக்குள் புகாமல் மேலோட்டமாக பார்ப்போம் அப்பொழுது தான் நீங்கள் படம் பார்க்கும் பொழுது சுவையாக இருக்கும்.



நியூ யார்க் நகரம் அப்படியே நம் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கிறது, ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான இந்த photography க்காகவே படம் பார்க்கலாம். ஒரு காட்சியில் ப்ரீத்தி ஜிந்தா ஒரு இடத்தில அமர்ந்திருப்பார் அப்பொழுது Long Shot'il இருந்து அவரை காண்பிப்பார்கள் அப்பொழுது அவர் நம் அருகில் வருவார் ஆனால் அவர் பின்பு உள்ள கட்டிடங்கள் தூரம் செல்லும், இப்படி நிறைய இடங்களில் Camera விளையாடியுள்ளது.

அடுத்தது இசை ஷங்கர், ஈஷான் மற்றும் லாய் கூட்டணி சும்மா கலக்கி இருப்பாங்க ஒவ்வொரு பாட்டும் அருமை, படம் முடிந்த பின்பு கூட அந்த பின்னணி இசை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நம்ம S.A. ராஜ்குமார் படங்களில் வருவது போல் அந்த ஒரே இசை தான் பின்னணி முழுவதும் ஆனால் ரசிக்க முடிகிறது.

படத்தின் கதாபாத்திரங்களின் உடைகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு, இதற்க்கு நாம் மனிஷ் மல்ஹொத்ரா அவர்களை தான் பாராட்ட வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக உடை வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து தான் நிறைய விஷயங்கள் நம் உன்னாலே உன்னாலே படத்தில் பயன் படுத்தியுள்ளனர் (குறிப்பாக அந்த Day 1, 2........ அந்த காட்சிகள்) உடை விஷயத்திலும் இந்த படத்தில் சாயல் அதில் நிறையவே தெரிந்தது.



இவ்வளவு பேசிவிட்டு கதையின் நாயகன் மற்றும் நாயகி பற்றி கூறவில்லையென்றால் ஏன் மனசாட்சியே என்னை சும்மா விடாது. ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பை பார்க்க வேண்டுமானால் இந்த படம் தான் சிறந்த சாட்சி, இருவரும் போட்டி போட்டு நடிக்கின்றனர். அப்பாடா ஷாருக் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் என்றார் அதற்கு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறாரு, "Wow, sema cool attidude".

ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்யப்பட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகள் வாங்கி குவித்துள்ளது இந்த படம்.

நீங்கள் அனைவரும் அவசியம் இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும், ரசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி.

நன்றி : Wikipedia, Google.

Tuesday, May 12, 2009

சர்வம்..... 60 ரூபாய் போச்சே.....

சர்வம்..... 60 ரூபாய் போச்சே.....
(குறிப்பு: என் கணினி தாய் பலகை(mother board) பிரச்சனையால் இயங்க வில்லை. அதனால் internet centreIL இருந்து டைப் பண்ணுவதற்கு மிகவும் சிரமம் ஆக உள்ளது. எழுத்தில் தவறு இருந்தால் சகித்து கொள்ளவும்)

சர்வம் திரைப்படத்தை இன்று fdfs woodlands திரையரங்கில் பார்த்தேன். சர்வம் நான் மிகவும் எதிர்ப்பார்த்த படம் பில்லாவுக்கு அப்புறம் விஷ்ணுவர்தன் இயக்கும் படம். சர்வம் படத்தின் பாடல்கள் பற்றி சொல்ல வேண்டாம் சூப்பர் ஹிட். ஆனால் படம்?

ஆர்யா த்ரிஷாவை துரத்தி துரத்தி லவ்வுகிறார். இன்னொரு ட்ராக்கில் இந்தரஜித் மகனை கொள்ள தூடுக்கிறார் சக்கரவர்த்தி காரணம் இந்தரஜித் சக்கரவர்த்யின் மகனையும் மனைவியயும் கார் விபத்தில் தெரியாமல் ஏத்தி கொன்றுவிடுகிறார்.
இதனால் சக்கரவர்த்தி இந்த்ரஜித் மகனை பழிவாங்கி அதன் வலியை இந்த்ரஜித் அனுபுவிக்க வேண்டும் என்று மகனை கொலைவெறியோடு தொடர்கிறார். ஆர்யா இங்கே த்ரிஷாவை கரெக்ட் செய்து திருமணம் முடியும் தறுவாயில் விபத்தில் இறந்துவிடுகிறார். த்ரிஷாவின் இதயம் இந்த்ரஜித் மகனுக்கு பொறுத்த படுகிறது. இதன் பின் என்ன ஆர்யா இந்த்ரஜித் மகனை சக்கரவர்த்தியிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

படத்தின் மிகபெரிய பலவீனம் திரைக்கதை, நம்மால் எளிதில் யூகிக்க முடிந்த சப்பை திரைக்கதை. படம் ஸ்டார்டிங் சூப்பர்ஆ இருந்தது ஆனா போக போக மொக்கை தாங்கலப்பா. முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளன சில காட்சிகள் மொக்கை தான்.
முதல் பாதியில் த்ரிஷா உயிரை விட்டு விடுவார். சரி இனிமே படம் சூப்பர்ஆ இருக்கும்னு நம்பி உக்காந்தோம் இரண்டாம் பாதி படம் பாதி பார்த்ததில் முதல் பாதி எவ்வளவோ பராவில்லை என்று தோன்றியது. த்ரிஷா படத்தில் அழகாக இருக்கிறார்.

இந்த இரண்டாம் பாதி படத்தில் த்ரில்லர் என்று நம்மை கொல்கிறார்கள். இரண்டாம் பாதி ஆரம்பித்து பத்தாவது நிமிஷத்திலே படத்தின் கதை புரிந்து விட்டது திரைக்கதையும் புரிந்து விட்டது . அதுக்கு அப்புறம் நாம நினைக்கிறது ஸ்க்ரீன்ல நடக்கும். அதுவும் அந்த சின்ன பையன் இம்சை தாங்க
முடியுல, படமே மொக்கை அதுல அவன் வேற வந்து மொக்கை போடுறான். விஷ்ணுவர்தன் இந்த மாதிரி ஒரு படம் எடுப்பார்னு நினைச்சி பாக்கல.


இதுல வேற சிம்புவை கிண்டல் செய்வார்கள் ஒரு காட்சியில் த்ரிஷாவை மடக்க ஆர்யா ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறதா சொல்வார்.
அப்போது அவர் நண்பர் கிருஷ்ணா போன் செய்து "டேய் சிம்பு படத்துக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் எங்கட இருக்க ?" உடனே ஆர்யா "நான் ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறேன்" உடனே கிருஷ்ணா பதறி "சிம்பு படம் வேணாம்டா அப்போ அஜித் படத்துக்கு போலம்ட" என்பார். இந்த காட்சியில் திரைஅரங்கில் பயங்கர கைதட்டு. அஜித் படத்துக்கு போறதுக்கு ஆர்யா
எதோ சொல்வார் என் காதில் விழவில்லை. நண்பனிடம் இடைவெளியில் கேட்டேன் அவன் அதற்க்கு "ஆர்யா பத்தாவது மாடியில் இருந்தது குதிக்க போறேன்னு சொன்னண்ட" சொன்னான். அப்ப இந்த படம் பார்த்ததுக்கு எங்க இருந்து குதிக்கறது ...........


நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பில்லை படம் எடுக்குறவன் தப்பு. அப்புறம் இன்னொன்னு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் உங்களக்கு படம் பிடிச்சி இருக்கலாம் ஆனா இதுதான் நம்ம விமர்சனம்.

Friday, May 8, 2009

நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி

நியூட்டனின் 3ஆம் சதி

எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.





சதிகள்:

1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.

2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.

3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.

4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.

*********************************

சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:

நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?

நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?

(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)

*************************************

வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).





படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பா
தேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.