சனிக்கிழமை பதிவர் சந்திப்பு முடிந்து, ஒன்பதரை மணிக்கு தான் கிளம்பினேன். நண்பர் ஒருவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு நான் வீடுவந்து சேர்ந்தபோது மணி பன்னிரண்டு. கொட்டும் பனியில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்ததால், காலையில் எழும்போதே தலைவலி தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே போனாலும் நிச்சயம் புத்தகக் காட்சிக்கு சென்றே தீர வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது, சுஜாதா புத்தகங்கள் குறித்து சொல்லியி ருந்த ஜாக்கி அண்ணனின் பதிவு. ஒன்பது மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து கணிணியில் அமர்ந்த நான், சந்திப்பு குறித்த பதிவை எழுதி முடித்து, எழும் போது மணி ஒன்று. குளியலை போட்டு, சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கத்துக்கு பின் கிளம்பிய போது மணி நான்கு.
நண்பர் குறும்பன் கடந்த வாரமே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார், தலைவலி மண்டையை பிளந்தாலும், சு
போகும் வழியில் கண்ணில் பட்டது (என்ன கொடுமை சார் இது)
ஏற்கனவே வாங்கி முடித்துவிட்ட குறும்பனுடன், மீண்டும் ஒரு உலா தொடங்கியது. நண்பர் ஒருவர் வாங்கித்தர சொல்லியிருந்த குழந்தைகளுக்கான கதைப் புத்தகங் களும், பிரபாவுக்கான சிந்தாமணியும் பட்டியலில் இருந்தது, குழந்தைகள் புத்தகங்கள் பழனியப் பாவிலும், பிரேமா பிரசுரத்திலும் கிடைத் தன, சிந்தாமணி வேட்டையில், பாரி நிலையத்தில் கொஞ்சம் ஒளி தெரிவது போல் இருந்தது, கடைசியில் கையிருப்பு இல்லை என்று, கைவிரித்து விட்டனர், அடுத்த வாரம் நேரே பதிப்பகத்தின் பாரிமுனை அலுவலகம் செல்ல உத்தேசம்.
வரும் வழியில், மாம்பலத்தில் பார்த்த கூட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாதது போல் தோன்றியது உள்ளே இருந்த கடைசிநாள் கூட்டம். இத்தனை நாள் இல்லாத (அல்லது தெரியாத), புழுக்கமும் வெக்கையும் உள்ளே நிலவியது. ஜாக்கி அண்ணன் சொன்ன பாரதி பதிப்பகம் தேடிச் சென்று பார்த்தபோது, மூன்றே மூன்று புத்தகங்கள் தான் மிஞ்சி இருந்தன, கண் முன்னே 'காகித சங்கிலிகளின்' கடைசி பிரதியை ஒருவர் வாங்கி செல்ல, வேடிக்கை பார்த்திருந்தேன், உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பக அலுவலகத்திற்கும் படையெடுக்க உத்தேசம்.
எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்
இடம் பெயர்ந்த கடற்கரை வியாபாரம்
ஐந்து ரூபாய்க்கு அருமையான இஞ்சி டீ
ஜெட்லி கேட்ட ராஜீவ் புத்தகத்தை வாங்க கிழக்கில் நுழைந்தோம், புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிரே கவிதா பதிப்பகம் கண்ணில் பட உள்ளே நுழைந்தேன், அப்போது "பதிவர் யாராவது அலுவலகம் வரவும்" என அறிவிப்பு வந்தது, அடடா, நம்மைத் தான் கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே என்று வேகமாய் சென்று விசாரித்த போது, அவர்கள் சொன்னது "பாஸ்கர் என்பவர் அலுவலகம் வரவும்" என்று தெரிந்தது. கடைசி நாளில் இவ்வளவு பெரிய மொக்கை வாங்கியதால், நான் மொக்கைப் பதிவர் தான் என்பது உறுதியாகிவிட, சந்தோஷத்தோடு கிழக்குக்கு திரும்பி வந்தால், குறும்பன் புத்தகத்தை வாங்கி விட்டிருந்தார். பணம் தர முயன்றபோது அன்புப்பரிசு என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு மோகன் குமார் போல் ஒருவரை பார்த்ததாக குறும்பன் சொல்ல அவரிடம் சென்று கேட்டு இன்னுமொரு மொக்கை வாங்கினேன்.
இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும்
தொடங்கியவரிடம் தான் முடிக்க வேண்டும் என்ற தமிழ் பட்டிமன்ற மரபை உத்தேசித்து, தமிழினியில் கல்லா கட்டிக்கொண்டிருந்த அண்ணன் சிவராமனிடம் சென்று விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். வேறு எந்த பதிவரும் கண்ணில்படவில்லை. வெளியில் வரும்போது, காட்சி அலுவலகம் கண்ணில் பட, மூளை குறுக்கே வேளை செய்தது. "தமிழ் பதிவர்கள் யாராவது இருந்தால் அலுவலகத்திற்கு வரவும், இங்கு இரண்டு பதிவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என்று அறிவிப்பு ஒன்று செய்யலாம் என எண்ணி விசாரித்தபோது, புத்தகக் காட்சி கையேடு (ரூ 100) விற்பனை குறித்த அறிவிப்பில் மூழ்கி இருந்ததால் "பதினைஞ்சு நிமிஷத்திற்கு அறிவிப்பு ஏதும் செய முடியாது" என்றார்கள். இன்னும் ஒரு மொக்கை வாங்கிய திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினோம்.
பதிவர் கொண்டாட்ட மயக்கத்தில், முந்தைய பதிவில் எழுத மறந்து போன, இந்த வருட புத்தகக் காட்சிக்கான, கடைசி புத்தகப்பட்டியல்
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - கி ரா - அன்னம் - Rs 700
வேட்டி - கி ரா - அன்னம் - Rs 60
அந்தமான் நாயக்கர் - கி ரா - அன்னம் - Rs 50
காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா - பாரதி - Rs 120
கொலையுதிர் காலம் - சுஜாதா - பாரதி - Rs 120
பூக்குட்டி - சுஜாதா - பாரதி - Rs 15
அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - பாரதி - Rs 12
மனைவி கிடைத்தாள் - சுஜாதா - பாரதி - Rs 18
நைலான் கயிறு - சுஜாதா - விசா - Rs 41
ராயர் காபி கிளப் - இரா முருகன் - கிழக்கு - Rs 65
என்னை எழுதிய தேவதைக்கு - குகன் - நாகரத்னா - Rs 55
நீளும் றெக்கை - வேல ராமமூர்த்தி - நடைபாதை - Rs 10
சென்னைக்கு குடிபெயர்ந்த இந்த ஒன்பது வருடங்களில், கடந்த ஆறு வருடமாக புத்தகக்காட்சிக்கு சென்று வருகிறேன். என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. வழக்கமாய் இரண்டு நாட்கள் செல்லும் நான், இந்த முறை தான் ஒன்பது நாட்கள் சென்றேன். புத்தகம் வாங்குவதை விடவும், பதிவர்களை சந்திப்பதே, இந்த விஜயங்களின் முக்கிய நோக்கமாய் இருந்தது. பதிவர்களாய் சந்தித்து, நண்பர்களாய் விடைபெற்ற ஒவ்வொரு மாலையும் மறக்க முடியாதது.
"வைபவங்கள் அனைத்தும் களைப்பில் தான் முடிவடைகின்றன". ஒவ்வொரு தீபாவளியும், பொங்கலும் முடிவுக்கு வரும்போது எனக்குள் தோன்றுவது கசீ சிவகுமாரின் 'கானல் தெரு'வில் வரும் இந்த வரிதான். இந்த மனக்களைப்பும், வெறுமையும் குறைந்தது இரண்டு நாட்களாவது நீடிக்கும். சமீபகாலமாய், கொண்டாட்டங்கள் குறைந்து போன, இந்த ஒரு நாள் பண்டிகைகள் உண்டாக்கும் தாக்கமே இரு நாள் நீடிக்குமென்றால், பன்னிரண்டு நாட்கள் பெரும் கொண்டாட்டங்களுடன் கழிந்த, இந்தத் திருவிழா ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாயிருக்கும் என்று நினைக்கவும் முடியவில்லை.
இடைக்கால நிவாரணம்
கீற்று அரங்கில் வாங்கிய, பாரதி காலண்டர் வழியே எடுத்த, சில படங்கள் இதோ
பலா பட்டறை சங்கர்
தண்டோரா
DR அசோக்
புத்தகக் காட்சி குறித்த பிற பதிவுகள்
ஜாக்கி சேகர்
Romeo Boy
DR அசோக்
தண்டோரா
பத்ரிசேஷாத்ரி
எறும்பு
அவிங்க ராசா
மாதவராஜ்
கேபிள் சங்கர்
தராசு
TV ராதாகிருஷ்ணன்
கசீ சிவகுமார்
ரவிபிரகாஷ்
அத்திரி
ஜ்யோவ்ராம் சுந்தர்
கிருஷ்ணப்பிரபு
சுரேஷ்கண்ணன்
லேகா
ஆதி
ஊர்சுற்றி
பலா பட்டறை
குகன்
அக்னி பார்வை
Romeo Boy
DR அசோக்
தண்டோரா
பத்ரிசேஷாத்ரி
எறும்பு
அவிங்க ராசா
மாதவராஜ்
கேபிள் சங்கர்
தராசு
TV ராதாகிருஷ்ணன்
கசீ சிவகுமார்
ரவிபிரகாஷ்
அத்திரி
ஜ்யோவ்ராம் சுந்தர்
கிருஷ்ணப்பிரபு
சுரேஷ்கண்ணன்
லேகா
ஆதி
ஊர்சுற்றி
பலா பட்டறை
குகன்
அக்னி பார்வை
நன்றி
சங்கர்




















































