Showing posts with label எங்க ஏரியா. Show all posts
Showing posts with label எங்க ஏரியா. Show all posts

Monday, December 14, 2009

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்)

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்) : பார்ட் 3.


சிறு தகவல்:

அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நந்தனம் டர்ன்புல்
மேம்பாலத்தில் அண்ணாசாலை செல்பவர்கள் ஏறும்
போதும் கோட்டூர்புரத்தில் இறங்கும் போதும் பார்த்து
நிதானமாக மெதுவாக ஒட்டவும் காரணம் அங்கு வளைவு
கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது....





எலியட்ஸ் பீச் சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு சொர்க்கபூமி
என்றே சொல்ல வேண்டும்.எலியட்ஸ் பீச் அமைந்திருக்கும்
பெசன்ட் நகருக்கு பல சிறப்புக்கள் உள்ளன என்பது உங்களுக்கு
தெரியாதது அல்ல,அதனால் அதை பற்றி சொல்லி மொக்கை
போட விரும்பவில்லை என்பதால் நான் சந்தித்த,சுவைத்த,
பார்த்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.


பெசன்ட் பாஸ்ட் புட்:

எலியட்ஸ் பீச்சுக்கு வந்து இந்த பாஸ்ட் புட்டில் சுவைக்காத
நாக்கு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து.
நான் ப்ளஸ் ஒன் படிக்கும் காலத்தில் இருந்து இங்கே
சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.பல பேரை இந்த கடைக்கு
அறிமுகமும் படுத்தியுள்ளேன் காரணம் சுவை.வறுத்த
அரிசி(fried rice) ,பீப், சிக்கன் மஞ்சுரியன் அருமையாக இருக்கும்.

இப்போது இந்த பாஸ்ட் புட்டை சிறு ரெஸ்டாரென்ட் ஆக்கி உள்ளார்கள்.அவர்கள் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(தொழிலில்) நானும் ஒரு சிறு காரணம் அதே போல் நானும் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(உடம்பில்) அவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதருக்கில்லை.



ஓரிரு மாதங்கள் முன் சென்று இருந்தேன் பழைய மாஸ்டர்களை
காணோம்.சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
அதன் பின் அங்கு செல்லவில்லை.யாராவது சமீபத்தில் போய்
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா....

karl Schmidt நினைவு சின்னம்:





பல படங்களில் இந்த நினைவுச்சின்னத்தை பார்த்து இருப்போம்.
நான் ஏதோ காதல் நினைவு சின்னம் என்று நினைத்தேன் ஆனால் கடந்த வாரம் நெட்டில் மேய்ந்த போது தான் உண்மை தெரிந்தது. டட்ச் மாலுமி karl Schmidt அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை காப்பாற்ற போகும் போது தன் உயிரை இழந்தார் அதன் நினைவாக இந்த நினைவு சின்னம் கட்டப்பட்டது.


ஆனா இப்போ இந்த நினைவு சின்னம் இருக்குற நிலைமையை
பார்த்து அவர் எலும்பு கூடோடு கடலில் இருந்து எழும்பி வந்து
நம் அரசிடம் "தயவு செய்து இடித்து விடுங்கள்" என்று மனு
கொடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை!
கிழே படங்களை பார்க்கவும்..




இப்போதைக்கு நம்ம ஆளுங்க இதை ஒரு உச்சா போகும் இடமாக
மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.













போனஸ் செய்தி:

நான் போட்டோ எடுக்கும் போது ஒருத்தர் அவசரமா பக்கத்தில்
வந்து நின்றார்..நாம படம் புடிக்கிறத கூட ஒருத்தன் வந்து
பார்க்குறனே என்று பீல் பண்ணி என் பாக்கெட்டில் செல்லை
வைத்தேன்..கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன்.
அப்போதான் தெரிஞ்சது அவனும் உச்சா போக தான்'
வந்திருக்கான் என்று.

காலையில் கிடைக்கும் மூலிகை ஜூஸ்,பிளானெட் யம்(planet yum),
முருகன் இட்லி ஷாப் என்று நிறைய இடங்கள் உள்ளன.
அதை எல்லாம் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.


முக்கிய அறிவிப்பு:

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பீச்சுக்கு போக நேர்ந்தால்
மணலில் உள்ள பஜ்ஜி கடை பக்கம் பார்க்காமல் போங்க இல்லனா
காலையிலேயே கண்ணு கேட்டு போய்டும்(லவ்வர்ஸ் தான்).
இதெல்லாம் நான் சொன்னா சில பேரு என்னை பார்த்து பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான் உனக்கென்ன என்பார்கள்.


ஜெட்லி கருத்து:

பகோடா சாப்பிடுங்க தப்பில்ல, அதுக்குன்னு இடம் நேரங்காலம்லாம் இருக்குனு தான் சொல்றேன்.

பழைய பாகங்களை படிக்கச் இங்கே கிளிக்அவும்

இது எங்க ஏரியாஅடர்த்தி பார்ட் 1

இது எங்க ஏரியா பார்ட் 2

நன்றி
உங்கள்

ஜெட்லி சரண்.

Monday, August 10, 2009

இது எங்க ஏரியா பார்ட்:2

இது எங்க ஏரியா பார்ட்:2

போன பகுதியில் எங்க திருவான்மியூர்
ஏரியாவில்
அமைந்துள்ள தியேட்டர் பற்றி சொன்னேன்,
இந்த வாரம் E.C.R ரோட்டில் உள்ள
தியேட்டர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரார்த்தனா மற்றும் ஆராதனா தியேட்டர்.

பிரார்த்தனா தென்னகத்தின் முதல் டிரைவ்-இன் தியேட்டர்.
இங்கே படம் பார்த்தால் தரையில் மெத்தை விரித்து கொண்டு
கூட பார்க்கலாம்(படத்தை சொன்னேன்!!).காருக்கு டிக்கெட்
அம்பது ரூபாய், ஒரு ஆளுக்கு 120 ரூபாய் கொஞ்சம் காஸ்ட்லி
தான்.நாம உன்னிப்பா படம் பார்த்துட்டு இருப்போம் தீடிர்னு
ஒரு நாய் உடால ஓடும் அதெல்லாம் நீங்க கண்டுக்கபிடாது.

சவுண்ட் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, ஓபன் தியேட்டர்
என்பதால் சவுண்ட் தரம் கம்மியாக தான் இருக்கும்.மிச்சபடி
நீங்க கார்ல உள்ள வந்துட்ட யாரும் உங்களை தொந்தரவு
செய்யமாட்டாங்க. நீங்க படம் பாக்கலாம் இல்லன என்ன

வேணா பண்ணலாம்.

கேலேரியில் உட்கார்ந்து பார்ப்பது சுத்த வேஸ்ட், டிக்கெட்

விலை அறுபது ரூபாய் தண்டம். பிளாஸ்டிக் நாற்காலி,
மொக்கை சவுண்ட் இது தான் கேலேரி. காரில் வந்து பார்ப்பதே
சால சிறந்தது, வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

ஆராதனா:

இந்த தியேட்டர் இது வரைக்கும் என் வாழ்வில் மர்மமாவே
இருக்கும் ஒரு புதிரான இடம். தியேட்டர் உள்ளே போன
கடைசியில் இருட்டாகவே இருக்கும் அந்த இடம் முழுவதும்
காதல் ஜோடிகள் தான்.

இங்கு இருக்கும் ஆபரேட்டர் கொஞ்சம் கல் நெஞ்சுகாரர், நான்
இது வரை பார்த்த படங்களில் ஒன்றிரண்டை தவிர அனைத்து படங்களையும் இருபது நிமிஷம் ஒருக்கா நிறுத்தி நிறுத்தி போடுவார்.

போனஸ் செய்தி:

ஒரு நாள் 11.30 படம்ன்னு டிக்கெட் எடுத்துட்டேன்,மணி

கரெக்ட்ஆ 11.30 ஆச்சு. செக்யூரிட்டி கிட்ட டிக்கெட் கொடுத்து
படம் போட்டாச்சா என்று கேட்டேன்.

அதற்கு அவர் " அதோ அங்கே லுங்கி கட்டிட்டு வெளியே
உட்கார்ந்து இருக்காரே அவர் தான் ஆபரேட்டர், அவர்
போய்த்தான் படம் போடுவார்" என்றார்

உள்ளே போய் உட்கார்ந்தேன் மணி 11.45 என்னடா இன்னும்
படம் போடல அப்படின்னு யோசிக்கும் போது ஆபரேட்டர்
உள்ளே வந்து சீட்இல் கொஞ்சம் நேரம் உட்கார்ந்தார். கொஞ்ச
நேரம் வெறும் ஸ்க்ரீனை மட்டும் பார்த்தார்.அப்புறம் ஒரு பத்து
நிமிஷம் கழிச்சு போய் படத்தை போட்டார். (என்ன ஒரு வில்லத்தனம்!!)

படத்தை ரசித்து பார்ப்பவர்கள் இங்கே வந்தால் கண்டிப்பாக
டென்ஷன் ஆவார்கள். படத்தை அடிக்கடி நிறுத்தி அல்லது

சவுண்ட் சரியில்லாமல் போடுவதை திருத்தி கொண்டால்
கோடி புண்ணியமாக போகும்.

காதலர்களுக்கு எச்சரிக்கை:

படம் ஓடிட்டு இருக்கும் போது தீடிரென்று செக்யூரிட்டி டார்ச்
லைட் அடித்து அப்போ அப்போ செக் பண்ணுவார்... அதனால
கொஞ்சம் காதலர்கள் உஷாராக இருப்பது நல்லது.

மாயாஜால்:

காதலர்களின் சொர்க்க பூமி என்று
சொல்லப்படும் மாயாஜாலில் இருப்பது
பத்து தியேட்டர்கள். ஸ்க்ரீன் ஆறுக்கு மேல் அனைத்தும் கொஞ்சம் புதியவை.
சீட்கள் எல்லாம் நல்ல இருக்கும்.படத்தை ரசித்து பார்க்கவேண்டும்
என்றால் மாயாஜால் தான் வர வேண்டும்.ஏன் என்றால் ஒரு
பத்து பேர் தான் படம் பார்ப்பாங்க,யாரும் யாரையும் தொந்தரவு
செய்ய மாட்டாங்க,கத்த மாட்டங்க, காதலர்கள் அவர்களின் வேலையில்
குறியுடன் இருப்பதால் படத்தை ரசித்து பார்க்கலாம்.


கிழே உணவாக தளம் இருக்கிறது இரண்டு பேருக்கு குறைந்தது
நானுறு ரூபாய் இருந்தால் அரை வயிறு சாப்பிடலாம். படத்துக்கே
இரண்டு பேரின் டிக்கெட் 240 வாங்கி விடுவதால் அரை வயிறு
தான் சாப்பிட முடியும்.


மிச்ச படி சவுண்ட், ஏ.சி எதையும் குறை சொல்ல முடியாது.
இன்டெர்வல் டைம் வெறும் அஞ்சு நிமிஷம் தான், இந்த ஒரு
விஷயம் மட்டும் தான் எனக்கு அவர்களை பிடித்ததற்கு காரணம்.
கந்தசாமி இங்கே தான் போலாம் என்று ப்ளானில் இருக்கிறேன்.
ஏன் என்றால் வேறு எங்கையும் எளிதாக டிக்கெட் கிடைக்காது.

போனஸ் செய்தி:

மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும்
விலையும் குறைவு சிக்கன் குழம்பும் சுவையாக இருக்கும்.
அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க......

இது எங்க ஏரியா பார்ட்:ஒன்று படிக்க கிளிக் செய்யவும்.


முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை கூட போடலாம்.

உங்கள்
ஜெட்லி

Thursday, June 25, 2009

இது எங்க ஏரியா.......

இது எங்க ஏரியா.......


நம்ம சென்னை குறித்து பல்வேறு தகவல்களை
உங்களுடுன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில்
எங்க ஏரியா திருவான்மியூர் அமைந்து உள்ள தியேட்டர்கள்
குறித்து கூறுகிறேன்.


(திருவான்மியூர் சிக்னல்)

தியாகராஜா தியேட்டர்:

திருவான்மியுரின் பெரிய அடையாளம் இந்த தியேட்டர், பல
வருடங்கள் முன்னாடி கட்டப்பட்டது. ஆனால் DTS, A/C,
QUBE போன்று அனைத்து வசதிகளும் கொண்டுள்ள ஒரு
நடுத்தர மக்களுக்கு ஏற்ற தியேட்டர்.கிழே கட்டணம் 28
ரூபாய் பால்கனி 50 ரூபாய்.

முன்னணி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்களுக்கு
கண்டிப்பாக முதல் மூன்று நாட்கள் பால்கனி கவுண்டரில்
டிக்கெட் தர மாட்டர்கள்.தியேட்டர் ஊழியர்களே ப்ளாக் டிக்கெட்
விற்ப்பார்கள்.அட்வான்ஸ் BOOKING என்றால் என்னவென்று
கேட்பார்கள். தயவு செய்து பேப்பர் பார்த்து விட்டு யாரும்
முன் பதிவுக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.


இங்கே முதல் நாள் முதல் படம் பார்ப்பது போருக்கு சென்று
திரும்புவது போல. ஒரு சின்ன கேட் வழியாக 400 பேரை
உள்ளே தள்ளுவார்கள்.நான் கடைசியாக அஜித்தின் பில்லா படம்
முதல் நாள் பார்க்க சென்றேன்.உள்ளே போகுபவர் போலீஸ் லத்தி அடியுடன் தான் படம் பார்க்க வேண்டும், ஏன் என்றால் அவளோ
தள்ளு முள்ளு.நான் படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து சென்றதால் லத்தி அடியில் இருந்து தப்பி விட்டேன். இல்லன பழுத்து இருக்கும்.பார்க்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான்.

ஜெட்லியின் பரிந்துரை:

குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக தான்
போக வேண்டும்.ஏன் என்றால் பக்கத்திலயே டாஸ்மாக்
கடை உள்ளது.

**********************
ஜெயந்தி தியேட்டர்:

இதுவும் பழமையான தியேட்டர் தான். இன்னும் பழமையாகவே
இருப்பது தான் கொடுமையான விஷயம்.ஏதோ தர்மத்துக்கு
நடத்துவது போல் இயங்கி கொண்டிரிக்கிறது. இந்த தியேட்டரில்
A/C,AIR,QUBE,DTS போன்று எதுவுமே இல்லை. பால்கனி டிக்கெட்
விலை 25 ரூபாய் தான், கிழே இருபது ரூபாய் தான்.

நான் இந்த தியேட்டரில் கடைசியாக ஜெயம்கொண்டான் படம்
பார்த்தேன்.பொதுவாக நான் ஜெயந்தி பக்கம் தலை வைத்து படுப்பது கூட இல்லை சூழ்நிலை காரணமாக சென்றோம், பால்கனி
மாட்டு கொட்டாய் போன்று இருந்தது.மின் விசிறி ஓடியும் காத்து
வரவில்லை, இருக்கை அருகே முழுவதும் பாக்கு தூப்பி கொடுமையாக இருந்தது.


படத்தின் போது சவுண்ட் ஸ்க்ரீன் அருகே இருந்து வருவதால்
ஒன்றும் தெளிவாக விழவில்லை,முக்கியமா ஸ்க்ரீன்
மஞ்சள் கலரில் தெரிந்தது. இங்கே படம் பார்த்தால் கண்
கெட்டுவிடும் அது மட்டும் தான் புரிந்தது. தியேட்டர் என்று
சொல்லமுடியாத ஒரு புரியாத புதிர் தான் ஜெயந்தி தியேட்டர்.


ஜெட்லியின் பரிந்துரை:

இங்கே படம் பார்த்தால் நல்ல படம் கூட உங்களுக்கு
பிடிக்கமால் போய் விடும்.நீங்கள் குளித்து விட்டு வர
வேண்டிய அவசியம் இல்லை தியேட்டரில் உள்ள
புழுக்கமே உங்களை வியர்வையால் குளிப்பாட்டி விடும்.

**********************


கணபதிராம்:

இந்த தியேட்டர் இப்போதைக்கு ஒரு அளவு பரவாயில்லை.
நல்ல விசாலமான பார்க்கிங், முன் பதிவு வசதி உண்டு.
நான் தற்போது பார்த்த சில படங்கள் இந்த தியேட்டரில்
இருந்து தான் பார்த்தேன்.பால்கனி டிக்கெட் அம்பது ரூபாய்
கிழே சரியாக தெரியவில்லை.

சீட் வசதி நன்றாக இருக்கிறது, ஆனால் பல சீட்கள் உடைக்க
பட்டிரிக்கின்றன. மொக்கை படம் பார்த்த ரசிகர்கள் வெறியில்
உடைத்திருக்கலாம் என தெரிகிறது.மிச்ச படி சவுண்ட்,A/C
எல்லாம் அருமையாக இருக்கும்.

ஜெட்லியின் பரிந்துரை:

கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
ஏன் என்றால் நிறையே மொக்கை படங்கள் ரிலீஸ்
செய்கிறார்கள்.

போனஸ் செய்தி:

சில காலங்களுக்கு முன் ஷகீலா படங்களை மக்களுக்கு
அளித்த பெருமை கணபதிராம் தியேட்டர்க்கு இருக்கிறது.


உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டையும் போட்டு போங்க.
வேற ஏதாவது தியேட்டர் பத்தி தெரியும்னா கமெண்ட் பண்ணுங்க......

உங்கள்
ஜெட்லி