சில பில்ட்-அப் படங்கள்:


நாம் இதுவரை வாழ்வில் சந்தித்த நபர்களில் எவரேனும்
ஒருவரையாவது, அதாவது பில்ட்-அப் பார்ட்டிகளை
சந்திக்கமால் இருந்திருக்க வாய்ப்பில்லை. பில்ட்-அப்
பார்ட்டிகளின் நோக்கம் தாங்கள் நண்பர்கள் மத்தியில்
மதிப்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தெரியாதவற்றை பயங்கர பில்ட்-அப் செய்து கூறுவதே
இவர்களின் வேலை.
அது என் வாழ்வில் நான் சந்தித்த என் நெருங்கிய நண்பனின்
சில பில்ட்-அப்கள் இங்கே,
எனக்கு கல்லூரியில் முதல் நாள் கிடைத்த முதல் நண்பன்
குமார்(பெயர் மாற்றபட்டுள்ளது).கல்லூரி காலத்தின்
ஆரம்பத்தில் அவன் எந்த ஒரு விஷயத்தையும் மிகையாக
தான் சொல்லுவான், அப்போது எங்களுக்கு தெரியாது அவன்
பில்ட்-அப் பார்ட்டி என்று.முதல் முதலில் அவன் சிக்கியது
விஜய் நடித்த பகவதி படத்தால். எனக்கு கொஞ்சம் சினிமா
நியூஸ் அத்துபடி. அந்த டைம் பகவதி டிரைலர் டி.வி.யில்
காண்பித்தார்கள்.ஆனா பாடல்கள் ரிலீஸ் ஆகவில்லை.
குமார்: மச்சி பகவதி பாட்டு கேட்டியா? செமையா இருக்குடா...
ஜெட்லி: ஆமாண்டா டிரைலர்ல பார்த்தேன்.
குமார்: டேய் நான் பகவதி பாட்டு சி.டி வாங்கிட்டேன் டா....
எல்லாமே சூப்பர் பாட்டு.
ஜெட்லி: உன்கிட்ட பகவதி பாட்டு சி.டி இருக்குதா மச்சான்?,
இல்ல விஜய் , தேவா உங்க மாமாவா?
குமார்: சீ..நேத்து தாண்ட நானும் வீட்டாண்ட பசங்களும் போய்
வாங்கிட்டு வந்தோம்.
ஜெட்லி: டேய் யார்கிட்ட கதை உடுற, இன்னைக்கு பேப்பர்ல
பாட்டு அடுத்த வாரம் தான் ரிலீஸ் ஆகும்னு
போட்டுருக்கான்.....
குமார்: மச்சான் எப்படிடா கண்டுபிடிச்ச.... ச்சே .சாரி ஸ்மால்
மிஸ்டேக்.
அன்னைக்கு மாட்டினவன் என் நண்பன். அவனை ஒட்டுரத
கேக்கவா வேணும்.
**************************************************
இன்னும் சில சாம்பிள்:
(கிட்ட தட்ட தலைநகரம் வடிவேலு மாதிரி ஆனா இது நடந்து ஆறு
வருடங்கள் மேல் ஆகி விட்டது)
குமார்: நாங்கெல்லாம் அசோக் நகர்ல பெரிய ரவுடி பிளஸ்2
படிக்கும் போதே சாரை(வாத்தியாரை) கிணத்துல கயிறி கட்டி
இறுக்கி விட்ருவோம்.
நாங்கள் நண்பர்கள் அனைவரும் அப்படியா என்று வியப்போம்.
குமார்: ஒரு வாட்டி இப்படி தான் மச்சி, ரோட்ல சின்ன பிரச்னை
ஆச்சி. வடபழனி சிக்னல்ல கல்ல விட்டு சிக்னலை உடைசிட்டோம்.
குமார் இதை கூறியது முதல் வருடத்தில், எனக்கு குமாரின்
நண்பன் அசோக் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கடைசி வருடத்தில்
தான் கிடைத்தது.அசோக்கும் குமாரும் ஒன்றாகவே பள்ளி படிப்பை முடித்தனர்.அவனிடம் இதை பற்றி கேட்டேன்
ஜெட்லி: என்ன +2 படிக்கும் போது சாரை கயித்துல கட்டி கிணத்துல விட்டானாமே?
அசோக்: நாங்க படிக்கும் போது சொன்னாங்க, எப்பவோ எங்க
ஸ்கூல்ல நடந்தது.
ஜெட்லி: அப்ப அவன் இல்லையா ஸ்பாட்ல?.... அவன் இருந்த மாதிரி
சொன்னான்.
அசோக்:யாரு அவனா, ஸ்கூல்க்கு வந்தா முடிட்டு உட்கார்ந்துட்டு
வீட்டுக்கு வந்துடுவான்.
ஜெட்லி: அப்புறம் ஏதோ பிரச்சனையில் வடபழனி சிக்னல் உடைச்சிடனாமே?
அசோக்: ஹ ஹ.. நல்ல காமெடி. இந்த மாதிரி கதையெல்லாம் உங்ககிட்ட வேற சொல்றானா. அந்த சிக்னல் உடைஞ்சது உண்மை
ஆனா அதை அவன் உடைக்கல.
இன்னும் பல விஷயங்கள் நண்பனை பற்றி சொல்லலாம்.
ஆனால் அவன் பழகுவதற்கு இனிமையனவான், அன்பனாவன்.
நட்புக்காக உயிர் கொடுப்பன் மேலும் நட்புக்காக படத்தை
பத்து தடவை மேல் பார்த்தவன்.(சிம்ரனுக்காக பார்க்கவில்லை).
இன்னும் சில பேர் இருக்காங்க படம் போஸ்டர்
பார்த்துட்டு படம் பார்த்த மாதிரி கதை சொல்வாங்க.
உங்களுக்கும் ஏதாவது இந்த மாதிரி அனுபவம் இருந்தா
கமெண்ட் பண்ணுங்க.....
பார்த்துட்டு படம் பார்த்த மாதிரி கதை சொல்வாங்க.
உங்களுக்கும் ஏதாவது இந்த மாதிரி அனுபவம் இருந்தா
கமெண்ட் பண்ணுங்க.....
உங்கள்
ஜெட்லி