Thursday, January 7, 2010
இதுவும் ஒரு காதல் கதை
இது சமீபத்தில் டிவியில் பார்த்த Fastrack கண்கண்ணாடி விளம்பரம் (You tube லிங்க் கிடைக்கவில்லை, கிடைத்தால் அப்புறம் சேர்க்கிறேன்) பார்த்ததில் தோன்றிய யோசனை இது,
இது ஒரு மொக்கைக் கதை மட்டுமே இதற்குள் உள்குத்து, நுண்ணரசியல் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்
இதுவும் ஒரு காதல் கதை
என்னாச்சு, என்ன சொன்னார், உன்னை பொண்ணு பார்க்க வந்தவர்?
வந்தாரு, பார்த்தாரு, போயிட்டாரு,
அவரோட பேசினியா?
ம், பேசினேன், அரைமணிநேரம்,
என்ன சொன்னார்?
அவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,
உன்னைப் பத்தி என்ன சொன்னார்?
ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,
நீ என்ன சொன்னாய்?
நானும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்,
என்னது, பிடிச்சிருக்குன்னு சொன்னியா?
ஆமாம்,
சொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா?
வந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,
கொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா?
புரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,
நீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, "நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு",
உண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,
நிஜமாதான் சொல்றியா? இது தான் உன் முடிவா?
ஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,
சரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,
என்ன வேணும் உனக்கு? என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,
கவலைப்படாதே, உன்னையெல்லாம் கேட்கமாட்டேன்,
அப்புறம்,
ஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்கணும்.
பின்குறிப்பு
இதைக் கவிதையாக எழுதவே எண்ணியிருந்தேன், சரியான வார்த்தைகள் என்னிடம் சிக்காததால், நீங்கள் தப்பிவிட்டீர்கள், கவிஞர்கள் யாராவது இதனை கவிதையாக்க முயற்சிக்கலாம் (இங்கோ அல்லது உங்கள் பதிவிலோ).
நன்றி
சங்கர்
Saturday, July 4, 2009
நண்பனின் காதல்.

என் நண்பன் முத்து உண்மையிலே மிக அருமையான நபர்,
நட்பு என்றால் என்ன என்று அந்த ஊருக்கு நாங்கள் தான் எடுத்துக்காட்டாக இருந்து வந்தோம்.ஒரே தட்டில் சாப்பிடுவது,
ஒரே க்ளாசில் சரக்கு அடிப்பது, முக்கியமாய் விட்டு கொடுத்து
செல்வது என்று எங்கள் நட்பு நன்றாக போய் கொண்டிரிந்த
சமயம், முத்து காதல் வயபட்டான். பக்கத்துக்கு ஊரில் தான்
டாவு கட்டும் பெண் இருப்பதாக என்னிடம் கூறினான்.
காதல் வந்தாலும் வந்தது பேனாவும் கையுமாக அலைந்தான்.
"என்னடே பேப்பர் பேனாவுமா சுத்துற" கேட்டேன்.
"இல்ல பங்காளி நம்ம ஆளுக்கு கவிதை கிறுக்கிட்டு இருக்கேன்"
என்றான்.
"நீயெல்லாம் கவிதை எழுதுரியா, மக்க செத்தாங்க போ"
என்று கிண்டல் அடித்து விட்டு படித்து காட்ட சொன்னேன்.
ஹ்ம் தொண்டையை சரி செய்து விட்டு முத்து தொடர்ந்தான்
"நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை என் நெஞ்சம் மறப்பதில்லை
அதனால் என் இதயம் சிறகடித்து பறப்பதில்லை
ஏன் என்றால் என் இதயம் என்னிடம் இல்லை"
"பின்னிட்ட போ, ஆமாம் இதை எங்கயோ படிச்ச மாதிரி
இருக்குடே" என்றேன்.
*************************************
கள் குடிக்க முத்துவும் நண்பனும் சென்றோம், முத்து போதை
ஏறியவுடன்
"பங்காளி இன்னொரு கவிதை இருக்கு கேக்குறியா" என்றான்.
சும்மாவே விடமாட்டான் இப்போ வேற போதை "ஹ்ம்ம் சொல்லுடே" என்றேன்
"டயரும் டியுபும் சேர்ந்தால் தான்
வீல் ஓடும்....
அது போல்
நானும் நீயும் சேர்ந்தால் தான்
என் வாழ்க்கை எனும் சக்கரம் ஓடும்."
க்க் என்று காரி தூப்பினேன், அவன் போதையில் கண்டு கொள்ளவில்லை.
***************************************
என்னிடம் அடிக்கடி பேசும்போதெல்லாம் தன் காதல் மேலும்
மேலும் இருகுவதாக கூறினான்.
"பங்காளி எனக்கு நீ தான் ஊரே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணி
வைக்கணும்டே, நான் நீ இருக்கிற நம்பிக்கையில் தான் பக்கத்துக்கு
ஊரு பொண்ணை லவ் பண்றேன்டே" என்றான்.
ஆஹா நம்மளை நம்பிட்டான் நாமதான் அவனை சேத்து வைக்கணும் என்று முடிவு பண்ணினேன்.
திரும்பவும் ஒரு கவிதை படிக்க ஆரம்பித்தான் கவிஞர் முத்து
"நான் ஒரு பித்தன்
உன் பின்னால் அலையும் சித்தன்
நீ ஒரு மல்கோவா
நாம் எப்போது போவோம் கோவா?..... "
என்னடே வர வர கேவலமா போகுது, நாம வேற நேத்து நாடோடிகள் படம் பார்த்தோம். எதுக்கும் அவன் காதலில்
ஸ்ட்ராங்காக இருக்கானானு பாப்போம்,அப்புறம் சேப்போம்.
என்று மனதில் நினைத்து விட்டு அன்று நடையை கட்டினேன்.
*********************
அன்று நான் நண்பர் கவிஞர் முத்து அவர்களின் கவிதை
என்று கிறுக்கிய புத்தகத்தை காண நேர்ந்தது, அதில் ஒரு
கவிதையை படித்த படித்த பின் புத்தகத்தை காரி தூப்பிவிட்டு, இனிமே அந்த நாய் சைடு தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.
அந்த கவிதையை நீங்களே படிங்கள்........
நீ எனக்கு
நான் உனக்கு
நடுவில் உன்
புருஷன் ஏதற்கு?
(டிஸ்கி:இதெல்லாம் கவிதைன்னு வேற சொல்ல வேண்டியதா இருக்கு, கள்ள காதல் பண்றவன் கூட கவிதை எழுத ஆரம்பிச்சிடானே! )
****************************************
புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க, பிடிக்கிலனாலும்
ஒட்டு போடுங்க அதனால ஒன்னும் தப்பு இல்ல.
உங்கள்
ஜெட்லி
Thursday, June 11, 2009
கிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....
(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.)
"உங்க அண்ணன் இந்த நேரம் அவர் ஆபீஸ்ல பிஸியா வேலை பார்த்துட்டு இருப்பார்,அவர் இந்த டைம்ல பீச்சுக்கு வந்து என்ன பண்ண போறார்" என்று தன் காதலிக்கு தெம்பு ஊட்டினான் குமார்.
இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னைக்கு தான் எப்படியோ அவளை தாஜா செய்து பீச்சுக்கு கூட்டி வந்திரிக்கிறான், எப்படியாவது அவளை முத்தமிட வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கணக்கு பண்ணி கொண்டிரிக்கிறான். குமாரின் நண்பன் பாலு வேறு ஏற்கனவே காதலியுடன் எப்படி கிளுகிளுப்பா இருக்கிறது என்று சில ஐடியாக்களை அள்ளி தந்துள்ளான்.
ரெண்டு பேரும் ஒளி இல்லாத இடத்தில தஞ்சம் அடைந்தனர்.குமாரின் இதயம் லப்டப் லப்டப் என்று வேகமாக அடித்து கொண்டது, எங்கே அவள் கோபித்து கொள்வாளோ என்று மிகவும் யோசித்தான்.
"நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன் தப்ப நினைக்கமாட்டியே?" என்று ஹேமா கேட்டாள்.
என்ன இவளும் அத தான் எதிர் பாக்குறாளா என்று மனதில் நினைத்து கொண்டே உற்சாகமாய் " சொல்லு என்ன செய்யணும்" என்று தோளில் கையை போட்டான்.
அவள் அவன் கையை தட்டி விட்டு "இல்லப்பா, மூடு சரியில்லை" என்றாள்.
"ஏன் என்ன ஆச்சு"? என்று கேட்டவாரே ஒரு உம்மா கொடுக்க ட்ரை பண்ணினான் குமார்.
"சீ சும்மா இரு இதுக்கு தான் நீ இருட்டுக்கு கூட்டிட்டு வந்தியா!" என்று அதட்டினாள் ஹேமா.
சிறிது நேர மௌனத்துக்கு பிறகு.....
"எனக்கு மொதல்ல ஒன்னு வாங்கி கொடு" என்றாள்.
"என்ன" என்று தன் கிளுகிளுப்பு நிறைவேறாத ஆசையில் கேட்டான்.
"என் அண்ணனுக்கு, பையன் பிறந்து ரெண்டு மாசம் ஆவுது இல்ல, அவன் கூட நான் விளையாடுறதுக்கு ஒரு கிலுகிலுப்பு வாங்கி தாயேன்" என்று கேட்டாள்......
டிஸ்கி: ஆக மொத்தம் ஹேமாவுக்கு கிலுகிலுப்பு கிடைச்சிருச்சி. நம்ம கதையின் நாயகனுக்கு?.... சாரிங்க நான் டைட்டில்ல இந்த கிலுகிலுப்பு தான் போடணும்னு நினைச்சேன். ஆனா சும்மா ஒரு கிளுகிளுப்புக்குதான் இதை போட்டேன். நீங்க முடிஞ்சா ஓட்டையும் போடுங்க.....
(இது பேர் தான் கிலுகிலுப்பு)

உங்கள்
ஜெட்லி
Monday, June 8, 2009
குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்...............
---------------------------------------------------
அன்றைக்கு செவ்வாய்கிழமை, வழக்கம் போல் நான் குளித்து முடித்து என் கைப்பேசி விற்கும் கடையை திறக்க போனேன். எங்கள் வளாகத்தில் மொத்தம் மூன்று கடைகள் உள்ளன. நான் தான் எங்கள் மூணு பேரில் முதலில் கடையை திறப்பேன், மீதி இரண்டு கடைகாரர்களும் என்னை விட ஒரு மணி நேரம் கழித்து தான் கடை திறக்க வருவார்கள். அதில் கடைசி கடைகாரர் ஊருக்கு போய்விட்டதால் அவர் அடுத்த வாரம் தான் கடை திறப்பார் என்று தெரிகிறது.
நான் கடைக்கு வந்த சமயம் அவரின் கடையின் முன்னாடி ஒரு நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர், கிழே ஒருவன் படுத்து கொண்டிருந்தான். காலையிலே போதை என்று நினைத்து நான் என் கடையை திறந்து, கண்ணாடிகளை துடைத்து கொண்டிருந்தேன். அப்போது வளாகத்தின் வாட்ச்மன் கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார்.அந்த கூட்டத்தை பார்த்த படி யாரோ ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார்.
நான் அவரிடம் சென்று "என்ன அண்ணே காலையிலே போதைல படுத்துட்டான் போல" என்றேன்.

உடனே அவர் புன்னகையுடன் "ஆள் காலி தம்பி".
"என்னணே சொல்றிங்க, என்ன ஆச்சு எதுவும் ஆக்சிடென்ட்ஆ?" பதட்டத்துடன் கேட்டேன்.
"யார்னே தெரியுல பா, குடிச்சி நாக்கு வறண்டு செத்து போய்ட்டான் அதிகமா குடிச்ச இப்படிதான் ஆவும்"என்று எனக்கு பாடம் எடுத்தார்.
எனக்கு அப்பதான் தெரியும் இப்படி கூட சாவங்களா என்று, ஒரு உயிரற்ற உடல் கடை முன் இருக்கு. கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விடலாமா என்று யோசித்தேன். எனக்கு என்னவோ போல் இருந்தது எல்லோரும் பொருள்காட்சியை பார்ப்பது போல் அந்த உடலை பார்த்து சென்றனர். எனக்கும் என்ன செய்ரதன்னு தெரியல. கொஞ்சம் நேரம் கழித்து போலீஸ் வந்தார்கள். வாட்ச்மனிடம் விசாரித்தார்கள் அப்புறம் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
அடுத்து போலீஸ் என்னை தேடி வந்தார்கள். என்னிடம் ஒரு பேப்பர் நீட்டி கையெழுத்து போட சொன்னார்கள்.
நான் முழித்துகொண்டே "ஏன் சார் நான் கையெழுத்து போடணும்?" என்று கேட்டேன் .
உடனே எஸ்.ஐ "அது ஒண்ணும் இல்ல தம்பி, சும்மா ஒரு சாட்சி கையெழுத்துதான்" என்றார்.
நான் திரும்பவும் யோசித்தேன்,
"உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை வராது தம்பி, சும்மா போர்மளிட்டி
தான்" என்று கூறினார்.
என் அடி மனசில் ஒரு பட்சி சொல்லிச்சி ஆஹா இன்னும் என்ன என்ன கேக்க போறாங்களோ என்று.
அடுத்து எஸ்.ஐ தொடந்தார் "தம்பி ஆம்புலன்ஸ் சொல்லிருக்கோம், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க"
நான் ஒன்றும் புரியாமல் தலையை அசைத்தேன்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த உடலை அரசு ஆம்புலன்ஸ் வாங்கி கொண்டு போனது.நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
திரும்பவும் அந்த எஸ்.ஐ வந்தார் "தம்பி எல்லாம் சரி பண்ணியாச்சு, ஆம்புலன்ஸ் காசு குடுப்பா" என்றார்.
நான் உடனே ஒரு அம்பது ரூபாய் எடுத்து கொடுத்தேன்.
அதற்கு அவர் "என்ன தம்பி இது அம்பது ரூபாய் தரிங்க, உங்க பக்கத்துக்கு கடைகாரர் ஐநூறு
ரூபாய் கொடுத்தாரு, பார்த்து கொடுங்க" என்றார்.
"சார் இப்போ என் நிலைமை சரி இல்லை சார் , இதான் சார் என்னால முடியும்" என்றேன்.
என் மனதில் உள்ளது என்ன என்றால், அவன் அடிபட்டு செத்து இருந்தால் காசு கொடுப்பதில் தவறில்லை, குடிச்சு செத்தவனுக்கு நான் ஏன் காசு தர வேண்டும்.
"சரி மூன்னுறு குடு" என்றார்
"அம்பதுக்கு மேல முடியாது சார்" என்றேன் காட்டமாக.
அதற்குள் ஒரு கஸ்டமர் ரிச்சார்ஜ் செய்ய வந்தார்.கொஞ்ச நேரம்
எஸ்.ஐ பார்த்தார், நான் பணம் தருவதாக அவருக்கு தெரியவில்லை,
உடனே அவர் "அப்போ நீ கோர்ட்ல வந்து சாட்சி சொல்ல வேண்டி வரும், சாட்சி கையெழுத்து போட்டிரிக்கிங்க இல்ல... கூப்பிடும் போது வாங்க" என்று கோபத்தில் சென்று விட்டார்.
இன்று:
நான் இப்போ இந்த கதையை எங்க இருந்து எழுதிட்டு இருக்கேன் தெரியுமா? புழல் ஜெயிலில் இருந்து. ஆமாங்க நான் மேல சொன்ன விஷயம் ஒரு மாசம் முன்னால நடந்தது.
முந்தா நேத்து அந்த எஸ்.ஐ கடைக்கு திரும்பி வந்தார். யாரோ போட்டியில் நான் விற்கும் கைப்பேசிகள் போலி என்று கூறி பொய் கம்ப்ளைன்ட் மூலம் என்னை வசமாக சதி செய்து மாட்டிவிட்டார்கள்.இதற்கு என் கடையில் இருக்கும்
ஊழியரும் துணை, அசைக்க முடியாத சாட்சியாக வைத்து என்னை களி தின்ன வைத்து விட்டனர். அதில் அந்த எஸ்.ஐக்கும் பெரிய பங்கு உண்டு. என்ன பண்றது எல்லாம் விதி, அன்னிக்கு மட்டும் அந்த குடிகாரன் குடிக்காம இருந்தா நான் இப்போ இங்க இருக்க மாட்டேன். அதாங்க சொன்னேன் குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.
முற்றும்.
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
உங்கள்
ஜெட்லி
Thursday, May 21, 2009
நான் அவள் அது...............
(குறிப்பு: இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக
கொண்டு எழுதப்பட்டுள்ளது)
________________________________
முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம் . சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை, அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்த இடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

டால்பின் நோஸ் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள், மரங்கள் சூழ்ந்துள்ள ஒரு இயற்கையான இடம். அங்கு நானும் நண்பர்களும் சென்று மரத்தின் மீது ஏறுவதும் குதிப்பதமாக சேட்டை செய்து எங்கள் பொழுதை கழித்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜா கொண்டு வந்த டிஜிட்டல் கேமெராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம் . நான் படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த போட்டோவை preview பார்க்கவில்லை,
ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம் . அந்த படத்தில் என் நண்பர்களுக்கு கீழ் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் உட்கார்ந்து இருந்து எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள். ஆனால் அந்த சிறுமி நேரில் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம் , ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம் . ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம் . டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.
சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்
"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.
அவன் முகம் வெளிறி போய் இருந்தது. என்னடா என்றேன், அதற்க்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று
புலம்பி தள்ளினான்.
"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.
டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .
"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.
டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.
மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான். நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.

"சரி அவன் போன போரண்ட நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.
அன்று நாங்கள் suicide point மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம் . மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான் . அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.
நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம் . அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து
"நேத்து காலையில போட்டோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.
எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த போட்டோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.
அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அந்த சிறுமி எங்களிடம்
'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள்.
நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர் . நான் அந்த போட்டோவை அழித்து விட்டதாக கூறினேன் .
அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள். நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். அறையில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.
மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு ஒலராதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை. அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து
"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.
"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .
உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்அ பாருங்க" என்றார்.
நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.
அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.
முற்றும்.
(இதை சிறுகதைன்னு சொல்லலாமா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.)

