Saturday, October 31, 2009

விடை கொடு எங்கள் நாடே

கிபி 2100, ஜனவரி 5,

'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டுமென்று கொட்டிவைத்த உரங்களும் உயிர்கொல்லிகளும் விளைவிக்கவே தகுதியற்றதாய் மண்ணை மாற்றியதால், பல நூறடி ஆழ உழுது (தோண்டி) கிடைக்கும் மண்ணை வைத்து விவசாயம் செய்தோம், கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது பெய்யும் அமிலமழை அந்த பயிர்களையும் அழிக்க தொடங்கியதை கண்டபின் தான் முடிவெடுத்தோம், இந்த பூமியை விட்டு வேறு கிரகம் போவதென்று.


இந்த நிலை வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியால் மாற்று கிரகம் தேடும் வேலைகள் கடந்த அரை நூற்றாண்டாய் வேகமாய் நடந்துகொண்டிருக்கின்றன, இந்த சூரியக்குடும்பத்தில் இந்த பூமியை தவிர வாழ்வதற்குஏற்ற இடம் ஏதுமில்லை. நம் முன்னும் பின்னும் இருக்கும் கோள்களோ ஒன்றுகுளிரில் உறைந்து கிடக்கின்றன, அல்லது கொதித்துக்கொண்டிருக்கின்றன, அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்ந்து பார்த்ததில், சற்றேறக்குறைய இந்த பூமியை போன்ற கோள் ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம், நிலத்தில் நான்கில் மூன்று பங்கு நீரும், காற்றில்தேவையான அளவு ஆக்சிஜனும் உள்ளதாம். விசித்திர மிருகங்கள் பல வாழ்கின்றனவாம், இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.


மனிதர்களை தவிர மற்ற அனைத்தையும் இங்கேயே விட்டுசெல்வதாய் திட்டம். எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கலாம் என உலகத்தலைமை முடிவுசெய்துள்ளதால் இந்த ஏற்பாடு. விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியால் வந்த வினைதான் இதுவென்பதால், எந்த அறிவியல் சாதனமும் எடுத்து செல்லபோவதில்லை, இத்தனை துன்பங்கள் வந்த பின்பும் எல்லோரும் ஒன்றுசேரவிடாமல் குறுக்கே நிற்கும் மதங்களுக்கும், கடவுள்களுக்கும் கண்டிப்பாய்அனுமதி இல்லை, பழங்கதைகள் எல்லாம் மறந்து விடவும், அடுத்ததலைமுறைக்கு செல்லாமல் மறைத்துவிடவும் உத்தரவு, இயற்கையையே நம்பி, இயற்கையையே வணங்கி, இயற்கையையே
சரணடைந்து வாழத்தொடங்கவேண்டும், சுருக்கமாய் சொல்வதென்றால் மீண்டும் குகைக்கே திரும்புகிறோம். ஏழு ஆண்டுகளுக்கான உணவும், நீரும், காற்றும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டிருக்கும் விண்வெளி பயணத்தில், சிலர் கடவுள்களையும், கதைகளையும் மறைத்து எடுத்துவரப்போவதாய் கூறுகின்றனர்.


இன்னும் எத்தனை முறைதான் இடம் பெயர்வது? எந்த ஒரு இடத்திலும்மூவாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்த வழக்கமே இல்லை. செல்லுமிடத்தின்செல்வங்களையெல்லாம் அழித்து முடிப்பது, அடுத்த இடம் தேடிச்செல்வது, மனிதனால் மட்டுமே முடிந்த அற்புதச்செயல் இது. இதுநாள் வரை உணவும்உறைவிடமும் தந்து உயிர்கொடுத்த உலகே, நன்றி, விடைபெறுகிறோம்.'




இதன் பிந்தைய தேதியிட்ட பக்கங்களில் ஒன்றும் எழுதப்படவில்லை,

ஆண்ட்ரோமீடா காலக்ஸியில் உயிர் வாழ தகுதியுள்ளதாய் அறியப்பட்ட M31 இன் துணைகிரகத்தில், ஆளரவமற்றிருந்த வீடுகளில் ஒன்றில் கிடைத்த நாட்குறிப்பை படித்து முடித்து, தலைநிமிர்ந்து பார்த்தனர், ஆராய்வதற்கு பூமியிலிருந்து போன அந்த இரு விஞ்ஞானிகளும்


படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்

சங்கர்



சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Wednesday, October 28, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


நானே வருவேன் என்ற பேய் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை
செய்ய இருக்கிறார்கள் அதாவது படத்தில் பேய் வரும் காட்சிகளில்
மட்டும் தியேட்டரில் மல்லிகை வாசனை வருமாம்.இந்த படத்தின்
இயக்குனர்,நடிகர்,இசை அமைப்பாளர் மற்றும் பல அமைப்பாளர் திரு.பாபுகணேஷ் ஒரு அற்புதமான படைப்பாளி.இவரின் ஒரு படத்தை "இரவு பாடகன்" என்று நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தால் மலையாள அட்டு படம் பார்த்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.இந்த படத்தை அடிக்கடி ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி போடுவார்கள் பார்த்து ரசியுங்கள்.



நானே வருவேன் என்ற இந்த படத்திலும் நான்கு நாயகிகளாம்,
அப்போ குஜாலுக்கு குறைவு இருக்காது என்று தெரிகிறது.
அவன் அவன் தியேட்டரில் ஏற்கனவே படம் பார்த்த
கிளுகிளுப்பில் இருப்பான், இதுல மல்லி வாசனை வேற???
ஆண்டவா காப்பாத்து... !!

******************************

பேப்பரில் கந்தசாமி படம் விளம்பரத்தை பார்த்தாலே கடுப்பாக
வருகிறது. படம் மெகா ஹிட் நூறாவது நாளை நோக்கி என்று
தினம்தோறும் டார்ச்சர் பண்றாங்க.இதில் வேறு யாரவது தத்து
எடுத்தா அதுக்கு இவங்க தான் காரணம்னு வேற விளம்பரம்.
தயவு செய்து நாளைக்கே நூறாவது நாள் அப்படின்னு போட்டு
விளம்பரத்தை நிறுத்தினா மிக்க சந்தோசம் அடைவேன்.

********************************
முக்கியமான பொது அறிவு
அடுத்த மாநிலத்தில் என்ன நடக்குது:

கிரண் நடிக்கும்?? தெலுங்கு படம் "ஹை-ஸ்கூல்".படத்தை பார்த்தால் பல பேர்க்கு மோனிக்கா பெல்லுசி நடித்த "malena" படம் நினைவுக்கு வரும். இதே போல் சில வருடங்களுக்கு முன் மனிஷா நடித்த "ஏக் சொட்டி சி லவ் ஸ்டோரி" படம் ஒன்று வந்தது அதை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் பார்த்தவனில் நானும் ஒருத்தன் கூட சில நண்பர்களும் வந்து
வெறுத்து போனார்கள்.





ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியுல. ச்சே
காசு தான் தண்டம் ஆகுது(என் காசு தான்).மார்க்கெட் போச்சுனா
கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே ஏன்
இப்படி ஒரு படம் என்று தோன்றினாலும் கிரணின் சேவை
நாட்டுக்கு தேவை.

மச்சி நெல்லூர்க்கு ஒரு டிக்கெட் போடு.....

*****************************************

ஜெட்லி டவுட்:

நயன்தாரா நடிக்கிற படம் எல்லாம் மொக்கை ஆகுதா?

இல்ல

மொக்கை படத்தில் மட்டும் நயன்தாரா அக்கா நடிக்கிறாங்களா???.

*************************************

இந்த வாரம் குமுதத்தில் படித்தது:

"பொட்டு தூணி இல்லாம..ஆயிரம் பேர் இருப்பாங்க...பொம்பளையும்
ஆம்பளையுமா சேர்ந்து நியுடா நடு ரோட்டுல நடந்து போறாங்க சார்.
கேட்டா சுதந்திரம்னு சொல்றாங்க.கிளாமர் நடிகை என்னாலயே அந்த
காட்சியை அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க முடியல,உடம்பே கூச
ஆரம்பிச்சுடுது, என்ன தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரதோட
ரத்தம் தானே என் உடம்புலேயும் ஓடுது" என்று தன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று வந்த சோனா அவர்கள் கூறியுள்ளார்.

உடம்பே கூசுதாம் .. ஐயோ ஐயோ... நம்ம ஊர்ல பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்மணி போட்டு வந்த டிரஸ்ஸை பார்த்தாலே நம்ம
கலாச்சாரம் பிச்சிக்கிட்டு வெளிய வருது என்று தெளிவாக தெரிகிறது.
அம்மணியின் கலாச்சார ரத்தம் ரொம்ப பித்தம்.!!


இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று
அடைய ஒட்டு போடுவிங்க அப்படின்னு நம்புறேன்....முக்கியமா
கமெண்ட் போடுங்க...


நன்றி:
சுலேகா
பாரத்வேவ்ஸ்

அன்புடன்
ஜெட்லி சரண்

Monday, October 26, 2009

உஷாரு மாமே உஷாரு!!

உஷாரு மாமே உஷாரு!!

************************
நன்றிகள் பல:

ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த இடுகையை எங்களது நூறாவது
பாலோயர்க்கு சமர்ப்பணம்.


************************
"பஜார்ல உஷாரா இல்லனா நிஜார உருவிடுவானுங்க" அப்படின்னு
சென்னை பழமொழி ஒன்னு இருக்கு அது நூறு சதவிதம் உண்மை.
இந்த இடுகையில் சென்னையில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்
என்பதை பற்றி சில விஷயத்தை பார்ப்போம், பின்வரும் அனைத்தும்
பேப்பரில் படித்ததும் மற்றும் சொந்த அனுபவம் மட்டுமே.




இன்றைய ஹாட் இது தான்:

உங்களுக்கு பணம் தரவேண்டிய நபர் அல்லது தெரியாத நபரிடம் இருந்து பணத்தை பெறும்போது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாளாக இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.கள்ள நோட்டுக்கள் தாராள புழக்கத்தில் இருப்பது தான் காரணம்.பல பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதில்லை.அதனால் கொஞ்சம் உஷாரா இருங்கோ மக்களே......


போனஸ் செய்தி:

நேற்று ஒருத்தன் கடைக்கு வந்து அரை லிட்டர் பெப்சிக்கு
ஆயிரம் ரூபாய் நீட்டறான், இன்னொருத்தன் ஆயிரம் ரூபாய்
நீட்டி அரை கிலோ சர்க்கரை கேக்குறான்......

பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதி :

தனிநபர்கள் ஏமாற்றும் விதம் :

நீங்க பஸ் ஸ்டாண்ட்ல பஸ்க்கு காத்திருக்கும் நேரத்தில் ஒரு
டிப் டாப் ஆசாமி உங்களிடம் வந்து "பர்ஸ் மிஸ் பண்ணிட்டேன்
ஊருக்கு போக காசில்ல" என்று நம்மை உருகும் அளவுக்கு சோகமாக
பேசுவார், அது அல்லாமல் தான் ஊர் போய் சென்றவுடன் மணிஆர்டர் செய்வதாக உங்கள் வீடு முகவரி கேட்பார்.நீங்கள் பணம் கொடுக்காமல் நகர்ந்து சென்றாலே நல்லது, பணம் கொடுத்து வீட்டு முகவரியும் கொடுத்தால் மொத்தமாக அபேஸ் செய்து விடுவார்கள்.

சிலர் பேசுவது உண்மையில் நெஞ்சை தொடுவது போல் இருக்கும்,
உண்மையிலே சில பேர் ஊருக்கு போக காசில்லாமல் இருப்பார்கள்
ஏமாற்று பேர்வழி என்று இதனால் அவர்களுக்கும் காசு கிடைக்காமல்
போகும். இது போல் காசு கேட்பவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எங்கள் புலனாய்வு குழு கூறுகிறது.

குடும்பமாக ஏமாற்றும் விதம்:

இதுவும் மேல கூறியது போலதான்.என்ன இவர்கள் கைகுழந்தை
மற்றும் பொண்டாட்டியுடன் ஏமாற்றுவார்கள். இவர்களும் ஊருக்கு
போக காசில்லை என்று தான் கேட்பார்கள்.சிறு பிள்ளைகள் இருந்தால் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கேட்பார்கள்,பால் வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பால் வாங்க பணம் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அவர்கள் பிச்சை மற்றும் ஏமாற்றுவதை தட்டி கொடுத்த மாதிரி ஆகிவிடும். நாட்டுல வேலைக்கு ஆள் கிடைக்காம நிறைய பேர் கஷ்டப்படுறாங்க!!.

வங்கியின் வெளியே :

வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும் போது யாரவது ஒரு சிறுவன்
"சார் பத்து ரூபாய் கிழே விழுந்துடுச்சு" என்பான். நீங்கள் குனிந்து எடுத்தால் உங்கள் பை அபேஸ் செய்து பைக்கில் தப்பி விடுவார்கள். இந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்துள்ளேன்...ஆனால் பைக் ஆசாமியை யாராலும் பிடிக்க முடியவில்லை.ஜஸ்ட் ஒரு செகண்ட் தான் ஆள் எஸ்கேப்.


இது தான் ரொம்ப முக்கியம்:

நீங்க கார்லயோ இல்ல பைக்லயோ போகும் போது ஒருத்தர் உங்களை வழிமறைக்கலாம், உங்கள் வாகனத்தின் சாவியை எடுக்கலாம், உங்களை மரியாதை குறைவாக பேசலாம், அவங்க கிட்ட தூப்பாக்கி கூட இருக்கலாம், அவங்க கும்பலாவோ ரெண்டு பேர் ஆகாவோ கூட இருக்கலாம்,நீங்க காசில்லை அப்படின்னு கெஞ்சின கூட உங்களை விடமாட்டங்க,உங்களை
மடக்கி விட்டாலே நீங்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் அம்பது ரூபாயாவது தண்டம் ஆழாமல் போக முடியாது.நாம ஒன்னும் பண்ண முடியாது அவர்கள் தான் நம் ஊர் டிராபிக் போலீஸ். இவர்களிடம் தப்பிக்க ஒரே வழி எங்கே போனாலும் நடந்து அல்லது அரசு பேருந்தில் செல்ல வேண்டும்.


இது போல் உங்களுக்கோ உங்கள் நண்பர்க்கோ ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

முடிஞ்ச ஓட்டும் போடுங்க....

நன்றி
ஜெட்லி சரண்.

Sunday, October 25, 2009

காமம் - ஒரு பரிசோதனை - சில பார்வைகள் - 2

இரண்டாம் பாகத்தை சற்று வேறுவிதமாய் தான் எழுத இருந்தேன், அதை மாற்றியது முதல் பாகத்தை வலையேற்றிய சில மணி நேரங்களில் தோழி ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. அவர் மூச்சு விடாமல் பேசிய அந்த பதினைந்து நிமிடங்களின் சுருக்கம் இதோ,

* காமம் என்பது இயல்பான ஒன்று அதனை இப்படி எழுதிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை
* காமம் என்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய விஷயம், அதனை பொது இடத்தில் எதிர்கொள்ளும் சராசரி மனிதனின் எதிர்வினை அருவெருப்பாகவோ அசட்டு சிரிப்பாகவோ தான் இருக்கும் (இருக்க வேண்டும்)
* மகுடேஸ்வரனுக்கும், உனக்கும் (சங்கராகிய எனக்கு) இது புதிதாய் தோன்ற காரணம் உன் பார்வையில் இருக்கும் குறைதான் (வக்கிரம் என்று நேரடியாய் சொல்லவில்லை எனினும்)
* மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன் என்று காட்டிக்கொள்ளவே இதை எழுதி இருக்கிறாய்,
* காதல் என்பது காமம் மட்டுமல்ல, காமத்தையும் தாண்டி வேறொன்று இருந்தால் தான் அது காதல், காமம் மட்டுமே என்றால் நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்
* கடைசியாக, இந்த காதல், பாசம், உறவுகள், நாகரிகம் அனைத்தும் வெளிவேஷங்கள் தான், உரித்துப் பார்த்தால் கடைசியில் பல்லிளிப்பது சுயநலம் மட்டும் தான். இதை உணராமலேயே சந்தோஷமாய் தான் வாழ்ந்து வருகிறோம், அப்படியே வாழலாமே

இந்த பேச்சுக்கு (சொற்பொழிவுக்கு) பின், மிக அவசியம் என்றாலொழிய, என் கருத்துக்களை மறுப்பவர்களோடு விவாதம் செய்வதோ, அவர்கள் கருத்துக்களை விமர்சிப்பதோ என் இயல்பாய் இல்லாத காரணத்தால், சில வாக்கியங்களே பேசி அழைப்பை துண்டித்தேன்.

அதன் பின் யோசித்தபோது தோன்றிய சில காரணங்கள், தோழி நன்கு படித்தவர் (வழக்கறிஞர்), சென்னை மாநகரில் நவநாகரிக சூழலில் பிறந்து வளர்ந்தவர், பரந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர், அதனால் காமத்தை இயல்பாக பார்க்கும் மனமுதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட, அக்கட்டுரையும், கவிதைகள் அனைத்தும் ஓர் ஆணின் பார்வையில் அமைந்திருப்பதும் முக்கிய காரணம், எனக்கு பெண்களின் மனவுலகம் பற்றி தெரியாது, ஆண்களின் எண்ணவோட்டங்கள் பற்றிய புரிதலிலேயே பல சந்தேகங்கள் உண்டு. சுருக்கமாய் சொல்வதென்றால் இவையனைத்தும் என் தனிப்பட்ட கருதுக்களன்றி வேறில்லை.

காதலும் காமமும் வேறில்லை என்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. இதை காதலில் இருந்தபோது 'உன்னை என்னிடம் ஈர்ப்பது எது' எனக் கேட்ட என் காதலியிடமும் கூறி இருக்கிறேன். 'அப்படியென்றால் காமம் தீர்ந்தபின் என்னை விட்டு சென்று விடுவாயா' என்ற அடுத்த கேள்விக்கு நான் சொன்ன பதில் 'காமம் தீரும் தினம் என் கடைசி தினமாகத்தான்இருக்கும்'

ஆனால் இதுபோன்ற சூழலில் வளரும் எல்லோரும் தோழியை போன்ற மனமுதிர்வுடன் இருப்பார்கள் என கூற இயலாது, செக்ஸ் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது "என் குழந்தைகளுக்கு, அவர்கள் பதின்வயதில் நிச்சயமாக காமத்தை கற்பிப்பேன்" என நான் கூறியதற்கு "நீயும் உன் மனைவியும் லைவ் டெமோ செய்து காட்டுவீர்களா?" என நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது, நண்பரின் தந்தை ஒரு மருத்துவர், தருமமிகு சென்னையில் நவநாகரிக சூழலில் உயர்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவருடைய புரிதலே 'செக்ஸ் கல்வி என்றால் உடலுறவு மட்டும்தான்' என்ற அளவில் இருக்கும்போது கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றவர்களின் கதியை என்ன சொல்ல,

தூர்தர்ஷனும், தினமலர், தினத்தந்தியும் மட்டுமே சாத்தியமான கிராமத்தில் (இன்று வரை எங்கள் ஊரில் சாட்டிலைட் சானல் இல்லை, இது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்) கழிந்த பதினேழு வருடங்களில் காமத்தை / உடலை அறிய சந்தர்ப்பங்களே ஏற்பட்டதில்லை, போதாதற்கு உயர்நிலை வகுப்புகளில் 'படிக்கிற புள்ள' என்ற பட்டத்தால், நண்பர்களின் கலந்துரையாடல்களிலும், கடைசி வரிசை கதை வாசிப்புகளிலும் எனக்கு இடமில்லாமல் போனது. வாசிக்க கிடைத்த வாரமலரும், குமுதமும் உதட்டு முத்ததிற்கு கொடுத்த முக்கியத்துவம், குழந்தை பிறப்புக்கே அதுதான் காரணம் என்ற எண்ணத்திலேயே பதின்வயதுகளை கழிக்க செய்தது,

விந்துவெனும் விந்தை இருப்பதே தெரியாததாய் வினோத வளர்இளம் பருவத்தில், சென்னை வாழ்க்கை உண்டாக்கிய தலைகீழ் மாற்றங்கள் குறித்து அடுத்த பாகத்தில் சொல்கிறேன்

முடிக்கும் முன், மீண்டும் மகுடேஸ்வரன்

உறவு சொல்லி அழைப்பது
பண்பாடாக இருக்கிறது

ஏன்,
எளிமையாக இல்லை
உறவுக்கு அழைப்பது



நன்றி
சங்கர்

Friday, October 23, 2009

சபலம்.

சபலம்.

"மச்சான் எத்தனை நாள்டா வீட்டிலியே....,," என்று இழுத்தான் சுரேஷ்.

"டேய்! வெளியே எல்லாம் வேணாம்டா, கண்ட கண்ட நோயெல்லாம்
வருதாம்" என்றான் அமுதன்.

"என்னடா டெய்லியும் ஒரே இதை பண்ண போர் அடிக்கும்டா,
வெளியே வா விதம்விதமா இருக்கும்" என்று அமுதனை
ஆசைப்படுத்தினான் சுரேஷ்.

"விதம்விதமா இருக்கும்,உள்ளே போகும் போது நல்லா தான் இருக்கும்,ஆனா எத்தனை பேர் பண்ணிட்டு போன எச்சையோ!"
என்று சுரேஷை எச்சரித்தான் அமுதன்.

"மச்சி டி.நகர்ல குஜராத்தி ஒன்னு இருக்குடா, ரேட் 600 ரூபாய் தான்டா"என்று ரேட்டை சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ்.

அமுதன் உதட்டை பிதுக்கினான்.

"அப்படி நம்ம ஊரு வேணாம்னா, அடையார்ல சைனீஸ் எப்படிடா?
ரேட் கொஞ்சம் அதிகம்டா ஆயிரம் ரூபாய்" அமுதனை
பொருட்படுத்தமால் நச்சரித்தான் சுரேஷ்.

"வேணாம் மச்சான், என் பொண்டாட்டி அவுங்க அப்பா வீட்டுக்கு போன டைம்ல என்னை யாரவது வெளிய பார்த்து அவகிட்ட சொன்னாங்க வை அவ்வளவுதான்"என்றான் பயத்தில் அமுதன்.


"ரைட் இதான் மேட்டர்ஆ!! கால் பண்ணா item வீட்டுக்கே வர போகுது....." சுரேஷ் வாய் மூடுவதற்க்குள்

"மச்சி அக்கம் பக்கத்தில் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்காட"
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்த அமுதன் சொன்னான்.

"சைனீஸ் item வாசலுக்கு வந்த உடனே கதவை மூடிடாலம் மச்சி, அப்புறம் யாருக்கு தெரிய போகுது?" என்று கிளுகிளுப்பில் கூறினான் சுரேஷ்.

"மச்சான் அந்த டைம்ல யாரவது கதவை தட்டின பிரச்சனை தாண்ட,பக்கத்தில் எல்லாம் ஐயர் ஆளுங்கடா அப்புறம் உடனே வீட்டை காலி பண்ண சொல்வாங்க"வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினான் அமுதன்.


"டேய் டோமர் !!நீயும் ஒரு வாரமா உன் பொண்டாட்டி வீட்ல இல்லாம வெறும் சப்பாத்தி, தோசை மட்டும் சாப்புடுற.சரி சைனீஸ் ஹோட்டல்க்கு போலாம்னு கூப்பிட்டா ரொம்ப
ஓவர்ஆ பண்ற. நீ சப்பாத்தியை சாப்பிட்டு தொலை. நான்
குஜராத்தி ஹோட்டல்க்கு போறேன். இன்னொரு தடவை நான் உன்னை வெளியே சாப்பிட கூப்பிட்டா என்னை செருப்பால அடிடா" என்று கோபத்தில் குஜராத்தி ஹோட்டலை நோக்கி நடந்தான் சுரேஷ்.

டிஸ்கி: இவ்ளோ நேரம் இவங்க பேசினது வெளியே போய் சாப்பிடறத பத்தி மட்டும் தான், வேணும்னா முதலில் இருந்து படிச்சு பாருங்க.

மக்களே கதை பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, கமெண்ட் போட்ட கொஞ்சம் உற்சாகமா இருக்கும்.பார்த்து பண்ணுங்க.


உங்கள்
ஜெட்லி சரண்.