Tuesday, June 2, 2009

ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்.


நன்றி : நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்.

"ஆஸ்திரேலியாவில் படித்து வரும் நம் இந்திய மாணவர்களின் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் வருந்தம் அளிக்கிறது" - மன்மோகன் சிங்க்.

இந்த மாதிரி ஒரு பேட்டியை நானோ அல்லது மற்றொரு பதிவுலக நண்பரோ கூறியிருந்தால் அது ஏற்கத் தக்கது, ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?? பிரதமர் Diplomacy Maintain பண்றாருனு நீங்க சொல்லலாம், உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது முதல் தாக்குதலா?? இந்த மாதிரி சில மாதங்களுக்குள் எத்தனை முறை நடந்துள்ளது?? அது சரி தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பொழுதும், மும்பை தாக்குதல் பொழுதும் கூட கீறல் விழுந்த ரெகார்ட் போல "இதை வண்மையாக கண்டிக்கிறேன், இனியும் இது போன்ற ஒரு தாக்குதலை இந்தியா பொறுமையாக ஏற்றுக் கொள்ளாது!!!!". விளைவு இன்று திரு.கசாப் சொல்றான் "நான் எந்த கொலையும் பண்ணல நீங்க பொய் சொல்றீங்க".

சரி அவரை விடுங்க நல்ல மனுஷன் பாவம் என்ன பண்ணுவாரு, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 93,000 சொச்சம் இந்தியா மாணவர்கள் படிக்கின்றனர் அதில் மெல்பர்ன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 பேர். ஒரு ஆண்டுக்கு இவர்களால் அந்த நாட்டுக்கு வரும் வருமானம் 4 Billion Dollars (ஆத்தாடி!!). வருமானம் மொத்தத்தையும் வாங்கி ஜோபிகுள்ள உட்டுகறாங்க ஆனா நம்மள புடிக்காதாம். அதை அந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இந்த சம்பவம் (Shravan Attack) நடந்து பத்து நாட்களுக்கு விஷயம் அந்த அரசாங்கத்தால் மூடி மறைக்கப் பட்டுள்ளது, மெல்பர்னில் வசிக்கும் என் நண்பர் பாலசந்தர் அவர்களுக்கே இந்த செய்தி TimesofIndia செய்தி வந்த பிறகு தான் தெரியுமாம். நேற்று கூட ஹைதராபாதை சேர்ந்த ஒரு நபர் தாக்க பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கூட அவர்கள் எவ்வளவு மூர்க்கமாக தரம்கெட்ட விமர்சனங்கள் கூறுவர் என்பதை நீங்கள் நன்று அறிவீர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பே இப்படி நடப்பவர்கள் ஆளில்லா இடங்களில் என்னவெல்லாம் செய்வர்??

நாம் செய்ய வேண்டியது என்ன??

அரசாங்கம் : நமது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் "ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை, அதனால் அங்கு படிக்கவும் சுற்றுலா செல்லவும் உகந்த சூழல் வரும் வரை யாரும் அங்கு செல்ல வேண்டாம்" இது அந்த அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் , இப்படி ஒரு எச்சரிக்கை வந்தால் அங்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். மற்ற நாடுகள் முன் இது ஒரு அவமானமாகும்.

காமன்வெல்த் அமைப்பு மூலமாக நம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். Diplomatic Tension குடுக்கலாம்.

கிரிக்கெட் : முதலில் IPL இல் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆட்டக்காரர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் இதை லலித் மோடி கண்டிப்பா செய்ய மாட்டாரு. அவருக்கு நாட்டை விட பணம் தான் பெருசு. நீங்கள் கூறலாம் விளையாட்டு நட்பை வளர்க்கும் அதனால் இது சரியான வழி இல்லை என்று. நான் கேட்கிறேன், எப்பொழுதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் பொழுது நீங்கள் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டா?? இல்லை மற்ற நாடுகளை கூட எடுத்துக்கோங்க. சரி அப்படியே வச்சுக்கலாம், ஏன் பாகிஸ்தான் போய் விளையாடல?? போக வேண்டியது தான?? ஏன் இப்ப தென் ஆப்ரிக்கா போனீங்க?? உங்க உயிரு தான் உயிரா?? அப்பா மதவங்களுது என்ன .........??

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் : குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும், தற்காப்புக்காக Pepper Spray எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். "Don't be Offensive, be Defensive" இது தான் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய யுக்தி. நாம் ஒன்னும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கு தான் நம் தயவு தேவை நமக்கு இல்லை.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

இதைப்பற்றி அதிக பதிவுகள் வராதது எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது!!!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி அவர்களின் வெறியை அறிந்துகொள்ளவும்.
http://www.news.com.au/heraldsun/comments/0,22023,25565946-2862,00.html


நன்றி
சித்து.

Monday, June 1, 2009

தோரணை என்ற அதிரடி ஏவுகணை.


நேற்று நண்பர்களுடன் தோரணை படத்துக்கு போனேன் அண்ணே, நம்ப ஜெட்லி அண்ணாச்சி ஏற்கனவே தெளிவா சொல்லிபுட்டாரு "வேண்டாம் வலிக்குது, அழுதுடுவேன்னு" ஆனாலும் நம்ம பய சைதன்யா ரொம்ப பாசமா Advance Booking பண்ணிட்டேன் மாப்ள வா போகலாம்னு சொல்லிட்டான். என்ன பண்றது பாசத்துக்கு கட்டு பட்டவிங்க நாம அதனால சொந்த செலவுல சூனியம் வச்சுக்க கெளம்பிட்டோம்., எப்ப?? 06:45 படத்துக்கு 07:15 மணிக்கு தான் போனோம். பொம்பள பிள்ளைங்க கூட வேகமா கெலம்பிடுக ஆனா நம்ப பயலுக சும்மா "அவிங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா வந்தானுங்க". அதனால எங்களுக்கு Opening Scene-laye அண்ணன் விஷால் ராமாவதாரம் தான், எதோ கொஞ்சம் காமெடி என்ற பேர்ல படம் நகர்ந்தது. இருந்தாலும் அந்த பொண்ணு ஆர்த்திய இந்த அளவுக்கு அசிங்கப் படுத்த கூடாது.

சந்தானம் "பரவை" முனியம்மா நகைச்சுவை காட்சி தாங்க முடியலடா சாமி. விஷால் கொஞ்சமா குறுந் தாடியுடன் வருகிறார் அது அவர் ஸ்டைல் என்று நினைத்து விட்டார் போல, ஏங்க உங்க யூனிட்ல மானிடர் மற்றும் கண்ணாடி இல்லையா?? சகிக்கவே இல்லை. நமக்கு எது வருமோ அத செய்ய வேண்டியது தான ஏன் இப்படி?? படத்தின் Costume Designer-kku ஏதும் பாக்கியா?? உங்கள இந்தளவுக்கு அசிங்கப் படுத்தி இருக்காரு?? மஞ்ச கலர் சிங்குச்சா பச்ச கலர் சிங்குச்சா என்று உங்கள வச்சி காமெடி பண்ணி இருக்காரு, ஒரு வேலை நீங்க இந்த படத்துல காமெடி ட்ரை பண்ண போறேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ??

அடுத்தது நம்ம பிரகாஷ் ராஜ் அண்ணாச்சி, உங்க கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும், முதல்ல மணி ரத்னம் ஸ்டைல்ல "ஏன் இப்படி??" அடுத்தது விவேக் ஸ்டைல்ல "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்". சும்மா படம் முழுவது ஒரு கருப்பு சட்டைய போட்டுட்டு கருப்பு கார்ல போய் காச்சு மூச்சுன்னு கத்துனா பெரிய தாதாவா? எனக்கு முந்தன நாள் பார்த்த சுள்ளான் படம் தான் ஞாபகம் வந்தது. சார் வேண்டாம் போதும் விட்டுடுங்க நீங்க ஒரு Range-kku போய்ட்டீங்க உங்களுக்கு இது வேண்டாம், இதை செய்ய நிறைய பேர் இருக்காங்க.

எல்லோரையும் போல் நானும் கிஷோர்-டம் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால் அவர் "Better Luck Next Time" என்று கூறி விட்டார். எம்.எஸ். பாஸ்கர் நல்ல கெட்-அப் மற்றும் டைமிங் காமெடி சூப்பர். ஆமா ஏன் படம் நெடுக அனைவரும் சும்மா தோரணை தோரனைனு கத்திக்கிட்டே இருந்தாங்க?? ஒரு வேலை அவனுங்களே படத்தோட பெயர் மறக்க கூடதுனோ??

அடுத்தது பாடல்கள், மணி ஷர்மா அண்ணாச்சி மற்றும் பாடலாசிரியர்கள் அண்ணாச்சிகள் அனைவருக்கும் - படத்தில் உள்ள எல்லா பாட்டுமே "துப்பட்டா துப்பட்டா உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா....." இதை விட இரு படி சுமாராக தான் இருக்கிறது அணைத்து பாடல்களும். ஒரு பாட்டின் ஒரு வார்த்தை கூட எனக்கு நினைவு வரவில்லை.

இவ்வளவு சொல்லியபின் கூட படத்தின் நாயகி ஸ்ரேயா சரண் பற்றி கூறவில்லை என்றால் நீங்கள் எனக்கு ஓட்டு போடாமலே போய்விடுவீங்கள் அதனால் அவருக்கு ஒரு தனி பத்தியே போடுறேன். என்னை பொறுத்த வரையில் படத்தின் ஒரே ஆறுதல் இவர் தான், படக் காட்சிகளில் அல்ல பாடல் காட்சிகளில் தான். இதை உணர்ந்து தான் இயக்குனர் கிளைமாக்ஸ் நேரத்தில் கூட ஒரு பாட்டு வைத்து விட்டார். பாடல் காட்சிகளில் ஒலி இல்லாமல் ஒளி மட்டும் இருந்தால் ரொம்ப ஆறுதலாக இருக்கும். தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமையும் 'காட்டி இருக்கிறார்'. வாங்கிய கூலிக்கு ஒழுங்காக வேலை செய்திருப்பது இவர் ஒருவரே.

படத்தில் குறிப்பிட்டு கலாய்க்க வேண்டியது ஸ்டண்ட் மாஸ்டர் stun சிவா. ஒரே எத்து தான் அம்புட்டு பயலும் வானத்துல பறக்குரானுங்க, சும்மா விஷால் மட்டும் வடிவேல் மாதிரி "எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு". இதுக்கு ஒன்னு பண்ணிருக்கலாம், அவரு அப்படியே வந்து நம்மையும் ஒரு எத்து விட்ருக்கலாம் அப்படியே நிம்மதியா திரை அரங்கை விட்டு வெளிய போய் விழுந்திருக்கலாம்.

இப் படத்தின் தயாரிப்பாளர்கள் விக்ரம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தம்பியை வைத்து நீங்கள் அழகு!!!!!!!! பார்க்கலாம் அதற்காக ஒரு படம் கூட எடுக்கலாம் உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதையே ஒரு Handycam வைத்து நீங்கள் எடுத்து குடும்பமாக நீங்கள் பார்த்திருந்தால் எங்கள் பணமும் உங்கள் பணமும் மிச்சம் ஆகி இருக்கும்.

இயக்குனர் சபா ஐயப்பனை அந்த ஐயப்பன் தான் காப்பாத்த வேண்டும். விஷால் அண்ணே உங்க வீட்டு முகவரிய குடுங்க நான் ஒரு சில நல்ல படங்களின் DVD அனுப்பி வைக்கிறேன் பார்த்து விட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.

இப்ப எனக்கு நீங்க கேக்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன், "இவ்வளவு நொட்டி சொல்றியே பிறகு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு வச்ச??", நானு நேத்து ராத்திரி பூரா எப்படி எப்படியோ படுத்து யோசிச்சி பாத்தேங்க எல்லா பேரலையும் மத்த பதிவர்கள் இந்த படத்த கலாய்ச்சுட்டாங்க அதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேனு வச்சேன்.

சரி இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, இந்த விமர்சனம் தோரணை படம் மாதிரி ரொம்ப மொக்கையா இல்லாம ஏதோ பரவா இல்லாம இருந்தா ஒரு ஓட்டையும் போட்டுட்டு ஒரு பின்னூட்டமும் போடுங்க.

நன்றி
சித்து.

சுய'இன்பம்' காண்பது தவறா?

சுய 'இன்பம்' காண்பது தவறா?

இந்த கேள்வியை நான் சிவராஜ் சித்த வைத்தியர் கிட்ட கேட்டு இருந்தா அவர் அதை கண்டிப்பா தவறு என்று தான் சொல்வார். அவரின் டி.வி. நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அதை தவறு என்று தான் சொல்வார்கள்.ஆனா நீங்க நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எனக்கு தெரியும்ங்க.இது வேற வகையான இன்பம்ங்க ,வாங்க நமக்கு எது இன்பம்னு தெரிஞ்சிக்கலாம்.


இன்பத்தை பல வகையாக பிரிக்கலாம்ங்க:

# சில பேருக்கு அலுவலக வேலை செய்வதே இன்பம்.

(உதாரணம்: கணிபொறியாளர், இவர் வேலை

செய்யலனாலும் செய்ய வச்சிருவாங்க)



# சில பேருக்கு அலுவலக வேலை செய்யாமல் இருப்பதே இன்பம்.


(இதுக்கெல்லாம் உதாரணம் தேவையா? கண்டிப்பா நம்ம வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்).



# சில பேருக்கு காதலி அல்லது காதலன் கூட இருக்கும் போது இன்பமா இருக்கும்.

(சும்மா இருக்கும் போது தாங்க!)



# சில பேருக்கு காதலியை அல்லது காதலனை மாற்றி கொண்டே இருப்பது இன்பமா இருக்கும்.

(இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க, ஈ.சி.ஆர் ரோட்ல வந்து ஒரு நாள் பாருங்க)


# சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).


# சில பேருக்கு ப்ளாக் படிப்பதில், எழுதவதில் இன்பம்.


# சில பேருக்கு பரபரப்பா ப்ளாக் டைட்டில் வைப்பதில் இன்பம்.

( ஹையோ! ஹையோ! என்ன பண்றது அப்பதானே வந்து பாக்குறாங்க)


# சில பேருக்கு சரக்கு அடித்து போதையில் பாதை மாறுவது இன்பம்.


# சில பேர் விதம் விதமா கைபேசியை மாற்றுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நண்பர் கௌரி மாசத்துக்கு இரண்டு கைபேசி மாற்றுவார்).

# பல பேருக்கு புகைப்பதில் , சில பேருக்கு இயலாதவர்களை பார்த்து நகைப்பதில் இன்பம்.

(நம்மால உதவி செய்ய முடியலன ஒதிங்கிரனும், அத உட்டுட்டு சிரிப்பாங்க).


# சில பேருக்கு புத்தகம் படிப்பதில் இன்பம், சில பேர் படித்த புத்தகத்தை பத்து தடவை படிப்பார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் சங்கர் தான் அந்த மனுஷன், உறுப்பினர்ன்னு தான் பேர் அய்யாவுக்கு ப்ளாக்க பாக்க கூட டைம் இல்ல)


# சில பேருக்கு அடுத்தவன் காலை வாரி விடுவதில் இன்பம்.

(பார்த்துங்க நீங்க வேலை செய்யுற இடத்திலேயே நிறைய பேர் இருப்பாங்க)


# சில பேர் பணத்தின் மூலம் நண்பர்களை பெருக்கி கொண்டு , உயிர் நட்பு என்று சொல்லி கொள்வதில் இன்பம்.



ச்சோ ச்சோ.... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார்த்திங்களா!
எப்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் ஒ,
அது மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமான
இன்பம்ங்க.


சில பேர் இருக்காங்க எப்பவும் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பாங்க,உதாரணத்துக்கு இப்போ ஒருத்தனுக்கு அலுவலக வேலை இன்பமாக இருக்கலாம் அதனால் அவன் அலுவலகமே கதி என்று இருப்பான், அவன் கிட்ட போய் நம்மாளு " டேய், ஏன்டா எப்பவும் வேலை வேலைன்னு ஆபீஸ்லயே இருக்க, உனக்கு என்ன தர போறாங்க" என்று மேதாவி தனமாக கேட்பதாய் எண்ணி கொள்வோரும் உண்டு.இது போல் பல உதாரணம் சொல்லலாம்.


அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடிக்கலனா விட்டுருங்க அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் இன்பத்தில் மூக்கை நுழைப்பது நியாயம் இல்லாத ஒரு ஈன செயல். உங்களால் அடுத்தவனுக்கு இன்பம் தான் கொடுக்க முடியலை தயவு செய்து துன்பத்தை கொடுக்காதிங்க.


உங்கள்
ஜெட்லி

Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)



நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.



எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.



அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

Friday, May 29, 2009

தோரணை -- புரட்சி தளபதிக்கு ஒரு கடிதம்.

வணக்கம் புரட்சி தளபதி விஷால் அவர்களே,



இப்பதான் உங்க தோரணை படம் பார்த்து விட்டு வந்தேன்,
பொதுவா நான் விமர்சனம் தான் எழுதுவேன் ஆனா என்னமோ தெரியுல இன்னிக்கு உங்களுக்கு கடிதம் எழுதுனும்னு தோணிச்சு. இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமான்னு எனக்கு தெரியாது ஆனா நம்ம ப்ளாக் படிக்கும் அனைவரையும் சென்று அடைந்தால் போதும்.



படத்துக்கு வருவோம், முதல் பாதி படம் உங்களுக்கு காமெடி
வரும்னு தூள் கிளப்பிட்டிங்க. நீங்களும் சந்தானமும் அடிக்கும்
லூட்டியில் என் வயிறு வலிக்கும் அளவுக்கு நான் சிறிது மகிழ்ந்தேன், திரைஅரங்கம் முழவதும் சிரிப்பு சரவெடி தான் போங்க. அதுவும் மயில்சாமியும் சந்தானுமும் பறவை முனியம்மாவிடம் அந்த புது பில்டிங்கில் நடக்கும் கூத்து சூப்பர் சூப்பர் சூப்பர்.



படத்தில உங்க ஒபெநிங் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது,
ஆனால் அதுக்கு அடுத்த காட்சியே உங்களுக்கு ஒரு ஒபெநிங் சாங், நீங்களே உங்களுக்கு பில்ட் அப் கொடுத்துட்டு அதை நீங்களே கிண்டல் பண்ணிகிரிங்க( எங்களுக்கு முன்னால நீங்களே முந்திகிட்டிங்க). உங்க தோரணை படத்தோட போஸ்டர் எல்லாம் சண்டைகோழி ஸ்டில் மாதிரி இருந்தது, படத்தை பார்த்த தான் தெரியுது தோரணை உங்கள் எல்லா படத்தையும் சேர்த்த ஒரு கலவை என்று.





ஸ்ரேயா, இவரின் தாராள மனம் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை, பாடல் காட்சிகள் தவிர இவருக்கு ஒண்ணும் பெருசா வேலை இல்லை. படத்தின் பின் பாதியில் நீங்களும் ஸ்ரேயாவும் போடும் மொக்கை தாங்க முடியவில்லை.


நீங்க வேற படத்துல உங்க அண்ணனை தேடிட்டு சென்னைக்கு வரிங்க, நான் படம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் ஒண்ணு பிரகாஷ்ராஜ் அல்லது கிஷோர் தான் உங்கள் அண்ணன் என்று. நீங்க நடுவுல ஸ்ரீமனை காட்டி என்னை குழப்பிவிட்டதாய் எண்ண வேண்டாம். அதுவும் திடிர்னு நீங்க ஆந்திரா காரை காட்டுவதும், ஆந்திரா எழுத்தில் உள்ள கடைகளை காட்டுவதை
உங்கள் குழுவின் அலட்சியத்தை காட்டுகிறது.




இரண்டாம் பாதி முழுவதும் மனதில் ஒட்டாத காட்சிகள், உங்க அம்மா , அண்ணன் செண்டிமெண்ட் எதுவும் எடுபடவில்லை. நான் நீங்கள் நடித்த சத்யம் படத்தை பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் நடித்த அனைத்து படங்களும் சிவப்பதிகாரம் தவிர எனக்கு மிகவும் பிடிக்கும்.




அப்புறம் சார் உங்க படத்துல என் சார் அரைச்ச மாவையே ஏன் அரைக்கிரிங்க, பைட் காட்சிகள் ரொம்ப பில்ட் அப். நான் இந்த படத்தை பாக்கறதுக்கு முக்கிய காரணம் பொல்லாதவன் புகழ் கிஷோர். அவரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனால் அவர பேச விடாம அவரை மருத்துவமனையில் படுக்க வச்சிடிங்க. சரி, அவர் தான் பேசல ஆனா நீங்க பேசியே உங்க அண்ணன் அடியாட்களை திருத்திரிங்க. பேசாம நீங்க எதாவது ஒரு கல்லூரியில் விசிடிங் பேராசிரியாராக போக உங்களுக்கு நல்ல திறமை இருக்கு.அப்புறம் அது எப்படி சார் நீங்களும் கிஷோரும் கார்ல மாட்டிகிரிங்க, போலீஸ் உங்க காரை சல்லடையாக துப்பாக்கியால் துளைத்து விடுகிறார்கள் அப்புறமும் நீங்க காரை எடுத்துக்கிட்டு போறீங்க, என்கிட்டே மட்டும் சொல்லுங்க சார் "நீங்க கார்ல எந்த இடத்துல்ல ஒளிஞ்சி இருந்திங்க". இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்க கேக்கலாம் முதல் நாள் உங்கள் படத்தை பார்த்த ஒரு தகுதி போதும்ன்னு நினைக்கிறேன்.


உங்கள்

ஜெட்லி.