Saturday, March 31, 2012

3 - குற்றம் நடந்தது என்ன...????

3 - குற்றம் நடந்தது என்ன...????

மூணு படம் டிஸ்கசன் அப்போ என்ன நடந்திருக்கும்....!!

ஐஸ்வரியா : முதல் பாதி படத்தில நீங்க செம ஜாலியா வரீங்க... இன்டெர்வல்க்கு
அப்புறம் நீங்க சைக்கோ ஆயிடுறீங்க........

தனுஷ் : இப்ப தான் மயக்கம் என்ன படத்தில சைக்கோ சீன் ஒண்ணு எடுத்தாங்....க....

ஐஸ்வரியா: அதுல நீங்க மேல இருந்து கிழே விழுவீங்க..இதுல தானாவே ஆயிடுவிங்க ...
அப்புறம் சுந்தர் எப்பவுமே படம் பூரா உங்க கூட வருவார்...

தனுஷ் : ஹையோ...மயக்கம் என்ன ல கூட என் கூடவே தான் வருவான்...

ஐஸ்வரியா : ஷட் அப்... அதுல நீங்க சாகமாட்டீங்க...ஆனா நம்ம படத்துல செத்து போய்டுவிங்க...

தனுஷ் : (மனசுக்குள்) நான் மட்டுமா படம் பார்க்க வர்ரவனும் தானே....!!


ஒய் தீஸ் கொலைவெறி.......!!!

Sunday, January 15, 2012

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!


நண்பன் - டப்பிங் பண்ணி இருக்கலாம்...!!

வசனம் கூட மாத்தம்மா ஏன் ஷங்கர் இப்படி ஒரு படத்தை எடுத்தார்....னு தெரியல...திருக்குறள் வசனம் தவிர... விஜய் ஓகே...கடுப்பு அடிக்கல...



வேட்டை - கோட்டை விட்டுட்டாங்களே....!!


ஐயோ டபுள் ஹீரோ சப்ஜெக்ட்...லிங்கு சாமி டைரக்ட் பண்றாரு...யுவன் இசை னு போய் தியேட்டர் ல உட்கார்ந்தா....ஐயோ ஐயோ... என்னத்த சொல்றது... மேடி தவிர வேற யாரையும் புடிக்கல.. மீதி பிட் எல்லாம் பேஸ்புக் ல பார்த்துக்குங்க....!!

சரவணா...(ஜெட்லி...)

Friday, December 16, 2011

மௌனகுரு.... பேசப்படுவாரா...?

மௌனகுரு.... பேசப்படுவாரா...?



இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய் டி.வி.டில கூட பார்த்தது இல்ல...ஆனா மௌனகுரு ட்ரைலர் நல்லா இருந்தது... அதுவும் இல்லாம மகேஷ் முத்துசாமி கேமரா...தமன் இசைனு தெரியும் ஆனா பாட்டை கேட்குற வாய்ப்பு கிடைக்கல... சரி நாம தியேட்டருக்கு போவோம்...

திருவான்மியூர் ஜெயந்தி தான் போனேன்...இதுக்கு முன்னாடி எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி நடிச்ச வாடா படத்தை பார்த்து பாதியில் ஓடிவந்தது தான், நான் கடைசியா ஜெயந்தில பார்த்த படம்னு வரலாறு சொல்லுது...!! சென்னை சிட்டில 25 ரூவாய்க்கு படம் பார்க்கறத நினைச்சா சந்தோசமா இருக்கு என்ன பண்றது அந்த தியேட்டருக்கு அவ்ளோ தான் வொர்த்....


மௌனகுரு...நாலு கெட்ட போலீஸ் ஒரு பணத்தை லம்பா விபத்து நடந்த காரில் இருந்து அடிக்கிறார்கள்...அதற்கு எவிடன்ஸ் இல்லைனு பார்த்தா இருக்கு...அருள் நிதி கல்லூரி படிக்கிறார்...சந்தர்ப்பவசத்தால் அந்த எவிடன்ஸ் விஷயத்தில் நாலு பேரிடமும் சிக்கி..என்கவுண்டர் என்று போய்...அப்படியே கீர் போட்டு படம் போகுது....

ரொம்ப நாள் ஆச்சு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் பார்த்து...அடுத்தது என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று நல்லா போச்சு மௌனகுரு... அருள்நிதி நல்லா தான் பண்ணி இருக்கார்..இனியா ஓகே...அவ்வளவா வேலை இல்லை... ஜான் விஜய் வில்லனாக வருகிறார்..மொக்கை காமெடிலாம் பண்ணாமா நல்லாவே பண்ணி இருக்கிறார்... முக்கியமா உமா ரியாஸ் பத்தி சொல்லணும் ஷி டன் ஏ குட் ஜாப்...!!

படத்தில சில பல விஷயங்கள் புதுசா இருந்தது... முக்கியமா சில ஷாட்ஸ் சூப்பர்ஆ இருந்தது... அதே மாதிரி பின்னணி இசை குறிப்பா அந்த ஓட்டேரி நரி அதாங்க ஆடுகளம் படத்துல தனுஷ் கூட வருவாரே... அவர் பூட்டு சாவியை மனநல காப்பகத்தில் திறக்கும் சீன் ..உண்மையிலே செம... படத்தில ரெண்டு பாட்டு தான் வருது அதனால பெரிசா ஒண்ணும் பிரச்சனை இல்லை...ஆனா இந்த தமன் அவர் ஸ்டைல் பாட்டை விட மாட்டாரு போலையே...!!

முக்கியமான விஷயம் வசனம்... ஷார்ப் வசனங்கள்...கடைசியில் எதிர்ப்பாராத ட்விஸ்ட்னு நல்லா தான் போச்சு... ஆஹோ ஓஹோ னு சொல்ல முடியலைனாலும் கண்டிப்பா நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்... தியேட்டர்ளையும் நல்ல ரெஸ்பான்ஸ்.. ...ஆங்கங்கே வசனங்களுக்கு கைத்தட்டுக்கள்.... !!

ஒஸ்தி பாத்து நாஸ்தி ஆனவங்களுக்கு மௌனகுரு
மருந்தாக இருக்க வாய்ப்பு இருக்கு....!!


மௌனகுரு - பேசப்படுவார்....!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# எங்க வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கு...11 மணிக்கு போனேன்..கேட் கூட திறக்கல..கூட்டம் சேர சேர தான் டிக்கெட் கொடுக்கவே ஆரம்பிச்சாங்க.... அந்த கூண்டு உள்ள போய் டிக்கெட் வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு...

# நான் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது...

# இன்டெர்வல் டைம் ல ஸ்க்ரீன் பக்கத்தில ஒரு வெள்ளை நாய் ஒடிச்சு...!
இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே தியேட்டர் எங்க
ஜெயந்தி தான்...! :))

# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச்சு...ஒரு தடவை
படம் தெரிஞ்சுது சவுண்ட் வரல...அடுத்த தடவ படம் தெரியல சவுண்ட்
வந்தது என்பது குறிப்பிடதக்கது....!!


ஜெட்லி...(சரவணா...)

Friday, November 25, 2011

மயக்கம் என்ன... ஒரு பார்வை..





மயக்கம் என்ன...

என்னமோ தெரியல மயக்கம் என்ன படம் எனக்கு பிடிச்சு இருக்கு... இதை ஏன் நான் முதல்லே சொல்றேன்னா தியேட்டர்ல அவ்வளவா ரெஸ்பான்ஸ் இல்ல..காரணம் காலேஜ் பசங்க... படம் கொஞ்சம் மெதுவா தான் போச்சி....கமெண்ட் பண்றேன்னு சொல்லி வண்டை வண்டையா வாயிலே இருந்து எடுத்து விடுறானுங்க....அதனால சத்தியமாஅவங்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு இல்ல... அவங்க எதிர்ப்பார்த்தது மாப்பிளை
மாதிரி படமா இருந்து இருக்குமோ..??

கார்த்திக்...அதாங்க நம்ம தனுஷ்... போட்டோகிராபர் ஆக வருகிறார்... அவங்க நண்பர் கூட்டம் அப்புறம் யாமினியாக நம்ம ரிச்சா... ரிச்சா உண்மையிலே ரிச்சாதான் இருக்காங்க...கதை இது தான் நண்பனின் காதலி ரிச்சா ஆனா ரிச்சா தனுஸ் மேல லவ்வு... கல்யாணம் பண்றாங்க... தனுஷ் எடுத்த போட்டோவை ஒருத்தன் லவட்டிட்டு அவார்ட் வாங்குறான்...அப்போ தனுஷ்க்கு ஒரு விபத்து...அதற்கு அப்புறம் அவர் கொஞ்சம் மனநிலை
பாதிக்கப்படுகிறார்... அதற்கு அப்புறம் நீங்க தியேட்டர் ல பாருங்க....


பிடிக்காதது.. காதல் என் காதல் பாட்டு வந்த இடம் பொருள் எனக்கு என்னமோ சரியா வரலை.... லிரிக்ஸ் கூட அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி இல்ல... அது ஒன்னியும் தான்.

பிடிச்சது....நிறைய இருக்கு.... போட்டோகிராபர் கேரக்டர்... தனுஷ் காட்டில் படம்
எடுக்கும் காட்சிகள்... படத்தில நிறைய இடத்தில பின்னணி இசை இல்லாமல்
வரும் காட்சிகள் நன்றாக இருந்தது. இண்டர்வலும் சரி படம் முடிஞ்சதும் சரி
அவங்க பேரு போட்டாத்தான் தெரியுது.....!!

தனுஷ் தனுஷ்....கார்த்திக்காக வாழ்ந்து இருக்கிறார் மனுஷன்.... அந்த டூபாகூர்
நாய் மாதிரி வேலை செய்ஞ்சு காட்டு என்று சொல்லும் காட்சியில் தனுஷ்
செம... ஏக்கம், சோகம், காதல், என்று மனிதர் பிரித்தும் பிரிக்காமலும் மேய்ந்து
இருக்கிறார்...


நண்பனின் காதலியை லவட்டிய பிறகு நண்பனின் அப்பா ரெண்டு பேருக்கும்
சரக்கு ஊற்றி கொடுத்து பிரச்சனையை தீர்ப்பது புதுசு..... ரிச்சா உண்மையிலே
செம ஆக்டிங் கொடுத்து இருக்காங்க...

எனக்கு ஏனோ இந்த படம் பிடிச்சு இருக்கு...இன்னும் நிறைய சொல்லணும்னு
ஆசை தான் ஆனா டைம் இல்ல....!!


ஜெட்லி...)சரவணா...

Monday, November 21, 2011

திருவான்மியூர் டூ கோவளம்....!!

திருவான்மியூர் டூ கோவளம்....!!






அட அது ஒண்ணும் இல்லைங்க...டிஜி கேமரா ஒண்ணு வாங்குனேன்... எங்க ஏரியாவை சுத்தி காக்க, பூனை தான் கண்ணுக்கு சிக்குது அதனால அப்படியே முட்டுக்காடு போயிட்டு கோவளம் வரைக்கும் சும்மா படம் எடுத்துட்டு திரும்பிட்டேன்....!! சில படங்கள் கொஞ்சம் சேக் ஆயிருக்கு...அதே மாதிரி ஜூம் பண்ண குவாலிட்டி கொஞ்சம் சரி இல்ல...இருந்தாலும்
போடுறேன்...










ஆபத்தான ஈ.சி.ஆர் பயணம்....








கடைசியா ரிட்டன் வரும் போது சோளிங்கநல்லூர் கட்டிங் முன்னாடி ஒரே கையேந்தி
பவனில் ஆப்பம் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தாச்சு.... அட ஆப்பத்தை பத்தி ஒண்ணும்
சொல்லலயேனு யாராவது கேட்டா என் பதில்...என் வாழ்க்கையில் இப்படி ஒரு
ஆபத்தை சாப்பிட்டதே இல்லைங்க...ஆப்பத்துக்கான ஒரு அறிகுறியும் அதில் இல்லை..!!
நெக்ஸ்ட் வேடதாங்கல் போலாம்னு ப்ளான் வச்சிருக்கேன்...பார்ப்போம்...!!


ஜெட்லி...(சரவணா...)