Tuesday, December 14, 2010

அய்யனார் - மொக்கையா சக்கையா??

அய்யனார்....






நிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்
பார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்
வரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப
வர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்
அய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்
வாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது
தான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி !!

அய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.


சந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.

ஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.


இந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

Friday, December 10, 2010

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......


படத்துக்கு போறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...முன்னெல்லாம் மொக்கை
படம்னாலும் தெரிஞ்சே போவேன்...ஆனா இப்ப அப்படி போக முடியறது இல்லை.போன வாரம் ரத்த சரித்தரம் , சிக்கு புக்குனு வந்தாலும் போக தோணல...விருதகிரி வேற ரீலீஸ் ஆகுது, பாருங்க கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....



இப்போதைக்கு நான் பேஸ்புக்கில் அப்போ அப்போ அப்டேட் பண்றேன்...


பேஸ்புக் அப்டேட்ஸ்....


"நான் எதையும் தேடி போவதில்லை வருவதை ஏற்று கொள்கிறேன்..."
நடிகர் பிரபுதேவா பேட்டி!!

அட தினத்தந்தியில் ஹெட்லைன் படிச்சவுடன் நானும் நயன்தாரா, ஹன்சிகா
பத்தி தான் சொல்றாரோனு தப்பா நினைச்சிட்டேன்ப்பா....அவர் பட வாய்ப்பை
தான் சொல்றாருனு புல்லா படிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது...!!


*****************************************


டி.வி.நொறுக்ஸ்....

ட்ரைலரில் விஜயகாந்த் "பன்ச்" வசனம்...

"டேய் நான் விருதகிரிடா.... பஞ்சபூதத்தோட மொத்தம் உருவம்டா...."

"பார்த்தாலே தெரியுது..."

அருகில் ட்ரைலர் பார்த்து கொண்டிருந்த நண்பன் சொன்னது...

****************************************

செய்தி : டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் பீட் சாம்ப்ராஸ் வென்ற அனைத்து கோப்பைகளும் திருடு போயின.....தன் டென்னிஸ் வரலாறே திருடி போய் விட்டதாக சாம்ப்ராஸ் அதிருப்தி...!!

என் கருத்து :
இதுக்கு தான் நான் எந்த போட்டியிலும் கலந்துகிறது இல்ல....



**************************************

எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??



*********************************



வளரும் நடிகர்களுக்கு இணையாக இவங்களும் போட்டி போடுராங்களேப்பா......
பை தி வே இந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன்...




**************************************


யாத்தே யாத்தே யாத்தே என்னச்சோ....யாத்தே யாத்தே யாத்தே எதச்சோ....

செம பாட்டு....

ஆமா யாத்தே னா என்ன அர்த்தம்??



*************************

மழை செம காட்டு காட்டுது.....!!

வீட்டுக்குள்ள இல்லனா தெருக்குள்ள மழை தண்ணி வரலைனா கூட,,,,கண்டிப்பா இந்த வருஷம் நிவாரண தொகை கிடைக்கும்னுஎனக்கு நம்பிக்கை இருக்கு....

தேர்தல் வருதுடோய்....!!


*****************************

சமீபத்தில் மூணார் சென்று வந்தேன்....அங்கே க்ளிக் செய்த சில படங்கள்
உங்கள் பார்வைக்கு....

இதுவரை மலையாள அட்டு படங்களை மட்டும் பார்த்தவன்...

இப்போது மலையாள பேப்பர் படிக்கும் அரிய காட்சி....!!








********************************
மீண்டும் சந்திப்போம்.....
ஜெட்லி...(சரவணா...)

Monday, November 22, 2010

நகரம் என்பக்கம்.....

நகரம் என்பக்கம்.....


ஒரு மாசமா பதிவு எழுதல..கடைசியா எழுதினது நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர் நடிச்ச அகில உலக அதிரடி மெகா ஹிட் ஆன படம் வாடா பத்தி தான். அப்புறம் கல்யாண பிஸி...கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு தெரிவிக்க முடியல...ஒரு வழியாக 18 ஆம் தேதி திருமணம் முடிந்தது...நேரில் வந்து வாழ்த்திய பதிவுலக அண்ணன்களுக்கு நன்றி..கல்லூரி நண்பர்களுக்கு நன்றி...ஆர்குட் தமிழ் குடும்பம் குழுமம் மற்றும் நேரில் வந்து வாழ்த்திய ஜெயந்தி மேடத்துக்கு நன்றி....போன் மற்றும் மெயில் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.


கல்யாணத்துக்கு அப்புறம் நாம பார்க்கிற மொத படம் எங்க தலைவர் சூப்பர்
பாக்கு தல சுந்தர்.சி படமா தான் இருக்கணும்னு..அவ கிட்ட சொன்னப்ப...
நீங்க மட்டும் போயிட்டு வாங்கனு சொல்லிட்டா...மொத தடவை படத்துக்கு போறோம்னு அப்புறம் நகரம் பாத்துட்டு என் வாழ்க்கை நரகம் ஆயிட கூடாதேனு சொல்லி நானே என்னை தேத்திக்கிட்டு மைனா போலாம்னு யோசிச்சேன்..ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்ததால் போகவில்லை....மந்திர புன்னகை ரெட்ஹில்ஸ் சைட் ஓடுற மாதிரி தெரியலை.அப்புறம் வடிவேல் ஜோக் இருக்கும், சுந்தர்.சி டைரக்ட் பண்ணி இருக்கிறார், தமன் மியூசிக் போட்டு இருக்கிறார்... என்று சொல்லி நகரம் படத்துக்கு கூட்டிட்டு போனேன்...(அனுயா பற்றி எதுவும் சொல்லவில்லை...!!)



ரெட்ஹில்ஸ் லட்சமி தியேட்டர்க்கு தான் போனோம்....செம கூட்டம்....
நான் சொல்றது தியேட்டர் வெளியே இருக்கிற கடைங்கள்ல என்பதை நோட் பண்ணிக்குங்க....70 ரூபாய் டிக்கெட்..கொஞ்சம் அதிகம் தான்...தியேட்டர்
வெளியே கேவலமா இருந்தது ஆனா உள்ளே சூப்பர்ஆ இருந்தது...என்ன
ஏ.சி மட்டும் தான் போடல....எங்களையும் சேர்த்து மொத்தம் ஒரு பத்து
பேர் பால்கனியில் இருந்து இருப்போம்...



நகரம்....நரகமா??


அதே திருந்தி வாழ நினைக்கிற ரவுடி தலைநகரம் கதை தான்னாலும்...
படம் போர் அடிக்காம தான் போச்சு...வடிவேல் சில இடங்களில் சிரிக்க
வைக்கிறார். குறிப்பா அந்த பம்ப் செட் காமெடி....ஆனா அவரு இன்னும்
வின்னர், தலைநகரம் ஸ்டைல் தான் பொல்லொவ் பண்றார்....மாத்துங்க
ஜி....இல்லனா விவேக் மாதிரி மரண பிளேடு ஆக வாய்ப்பு இருக்கு....



அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..தமன் மியூசிக் ஓகே...
அந்த திக்கி திக்கி பாட்டை ரேடியோவில் கேட்டவுடன் கண்டுபிடித்து விட்டேன் அது தமன் மியூசிக் என்று....படம் மொக்கை இல்லாம டைம் பாஸ் ஆச்சு நாங்க தியேட்டர்குள்ள இருந்த வரைக்கும்....ஆமா வேலைகள் காரணமாக , மற்றும் படத்தின் நீளம் காரணமாக கிளம்பி விட்டோம்.நல்ல வேளை படத்தை பார்த்துட்டு வீட்டுக்காரம்மா எதுவும் பீல் பண்ணலை... அடுத்தது எந்திரனுக்கு பிறகு உலகம் முழுவதும் அதிக பரபரப்பை ஏற்ப்படுத்த போகும் ராமராஜனின் மேதை படத்துக்கும் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.... எதிர் ரியாக்சன் பற்றி சொல்ல விரும்பவில்லை....:))

இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்...தியேட்டர் நொறுக்ஸ்ஆ?? அட
நீங்க வேற பத்து பேரு தான் இருந்தாங்க அப்படி ஒரு சைலன்ட்....அப்பறம்
எங்கே இருந்து எழுதறது....இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்கிறேன்...
படம் பார்த்தா கண்டிப்பா அதை பத்தி பதிவு போடுவேன். வேற பொது அறிவு
செய்திகள் எல்லாம் வேற அப்டேட் பண்ணனும்....பார்ப்போம்...மீண்டும்
சந்திப்போம்...


அதுவரைக்கும் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் படத்தோட ஸ்டில்லை
பார்த்து ரசிங்க...




உங்கள்

ஜெட்லி... (சரவணா...)

Monday, October 18, 2010

வாடா - ஒலக பட விமர்சனம்!!

வாடா....வந்துரிச்சுடோய்....!!


அன்பான சுந்தர்.சி ரசிகர்களே வெள்ளிக்கிழமை நீங்க வாடா படம் பார்க்க
போய் இருந்தா பெட்டி வந்திருக்காது....சனிக்கிழமை தான் பெட்டி வந்ததுனு
சொன்னாங்க, என்னது சவபெட்டியா??னு எல்லாம் கேட்க கூடாது.நான்
சொல்லிட்டு இருக்கிறது வாடா படத்தோட பெட்டி பத்தி. நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி. அவர்களை பற்றி ஊரில் அவர் இத்தனை படத்தில் நடிச்சு என்னத்த 'கலட்டிடாறுனு கேட்கருவங்களுக்கு என்கிட்ட சில பதில் இருக்கு....
அதாவது இந்த படத்தில் கலெக்டர்ஆ வந்து கண்ணாடியை அடிக்கடி
கலட்டுராறு,,, ஒரு சீன்ல நாயகியோட பான்ட்டை கூட கலட்டுராறுனா
பாருங்க...


அகில கெரக சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பில் இந்த பதிவை வெளியிடுவிதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நான் சனிக்கிழமை நைட் ஷோ ஜெயந்தி தியேட்டர்ல படம் பார்த்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு ஏன்னா சென்னை சிட்டியில் அங்கே தான் டிக்கெட் விலை கம்மி. எப்படியும் படம் டம்மினு உலகத்துக்கே தெரியும் அதை ஏன் அதிக காசு கொடுத்து பார்த்துக்கிட்டுனு அங்கேயே இந்த மகா காவியத்தை பார்த்துட்டேன்.இந்த ஊரே ஏன் உலகமே நீ ஏன்ப்பா வாடா படத்தை பார்க்க துடிக்கிற அப்படின்னு கேட்டாங்க....அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.... எல்லாம் கெரகம்....


வாடா என்ன கதை??


சரி நாம படத்தோட கதைக்கு வருவோம்....என்னது அப்படி ஒண்ணு இருக்கா??னு நீங்க மெரசல் ஆகாதீங்க...ஆனா இருக்கு படு பயங்கரமான கதை...விஜய் நடிச்ச மதுர படம் பார்த்து இருக்கீங்களா?? அந்த மாதிரி இருக்கும்...என்ன இந்த படத்துல கொஞ்சம் நேரம் ரிஷிகேஷ் ஊரை காட்டுறாங்க....முதல் காட்சியில் இருந்து அப்படியே அனல் பறக்குது காரணம் தியேட்டர்ல சுத்தமா காத்து வரல என்பது மட்டுமே என்று இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்.

விவேக் பத்தி என்னத்த சொல்றது போங்க.சுருளிராஜன் கெட்டப் போட்டுட்டு
காமெடி அப்படின்னு ஏதோ பண்ணிட்டு இருந்தார். ஒரு காட்சியில் மட்டுமே
சிரிப்பு வந்தது. நல்ல வேளை இந்த கொடுமையெல்லாம் பார்க்க சுருளிராஜன்
இல்ல. சுருளிராஜனோட கஞ்சன் காமெடி எப்போதுமே என் ஆள் டைம் பேவரைட்.இமான் பத்தி ஏற்கனவே சொன்னது தான் அவர் பாட்டே ரீமிக்ஸ் மாதிரி தான் இருக்கும் இதுல தனியா ரீமிக்ஸ்னு சொல்லி ஆட்களை கொல்லுகிறார்.

ஷெர்லின் நம்ம மசாலா பட நாயகியாக வந்து மூஞ்சில ரியாக்சன் தவிர வேற எல்லாத்தையும் நல்லாவே காட்டுறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் அந்த சீரியல் நடிகர் அதாங்க நேபாளி படத்தில் கூட போலீஸ்க்காரர வருவாரே அவர் வந்து அப்போ அப்போ சாவல் விட்டுட்டு போறார்.


FACE TO FACE


படத்தோட உயிர்நாடி காட்சியே அந்த பைக் மேல நின்னு சுந்தர்.சி சுட் பண்றது தான் ஏன்னா அந்த காட்சி தான் இன்டெர்வல் ப்ளாக்...பல பேரு தியேட்டரை விட்டு தப்பிச்சு உயிர் பிழைக்க அந்த காட்சி ரொம்ப உதவிச்சு. ஆனா பாருங்க அப்பமும் நான் போகலை....நம்ம தல பரமசிவன் படத்தில பைக்ல கிழே நின்னு சுட்டார் ஆனா எங்க சூப்பர் பாக்கு தல பைக் மேல நின்னு சுட்டு அரிசி கடத்துரவனை பிடிக்கிறேன்னு சொல்லி மூணு லாரியோட டீஸல் டாங்கை சுட்டு அந்த அரிசியை யாருக்கும்
கிடைக்காத படி செய்ஞ்சுடுறார்.


கலெக்டர்னு சொன்னவுடனே அப்படியே பக்கவா முடி வெட்டிட்டு இருப்பார்னு மட்டும் நீங்க நினைக்காதீங்க...ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான் மாட்டி இருப்பார் என்ன தலையில சூப்பர் பாக்கு பிளீச் மட்டும் இருக்காது அவ்வளவுதான். படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வசன காட்சி ஒன்னு இருக்கு... கலெக்டர் நண்பரிடம் போய் நாயகி...


நாயகி : எங்கையா உங்க கலெக்டர்...நான் அவர் வருவார்னு எவளோ நேரம்
வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...


நண்பன் : நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க...நீங்க யாரு??


நாயகி : ஐட்டம்...


நண்பன் : ஹலோ என்ன சொல்றீங்க...


நாயகி : இல்ல நான் கலெக்டர்ஆ லவ் பண்றேன்னு சொன்னேன்...


இந்த மாதிரி வசனமெல்லாம் வாடா உலக படத்தில் மட்டுமே வருகிறது...
இதற்க்காகவே நீங்க இந்த படத்துக்கு போகணும்.அது மட்டுமில்ல வாடா
படம் பார்ப்பதனால் மனவலிமை, பொறுமை , தைரியம் என எல்லாமே
கண்டமேனிக்கு வளரும். வாடா பட பெயருக்கு வரிவிலக்கு கொடுத்தாங்களா
இல்லையானு நமக்கு தெரியாது...ஆனா வாடா படம் பார்க்க போறவங்களுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ஏதோ ஒரு அமௌன்ட் கொடுத்தால் தேவலை!!

வாடா - காஞ்சி போன பேடா....


பாருங்கள் வாடா படத்தை அடையுங்கள் சமாதி நிலையை..!!
ஹே கில்மா கி ரவா...!!


வாடா படத்தை நம்ம கவுண்டர் பார்த்தார்னா என்ன சொல்லி இருப்பார்....


" அடேய் சூப்பர் பாக்கு மண்டையா உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா...அது ஏன்டா எப்பவுமே கழுத்துல ஒரு துண்டை சுத்திட்டு வர்ற..?? ஹா..எனக்கு புரிஞ்சு போச்சி..கோவில்ல உண்டக்கட்டி தருவாங்க அதை வாங்கி துண்டுல கட்டிக்கிட்டு ஒரு வாரம் திங்கலாம்னு தானே....நல்லா காட்ட்ரிங்கப்பா டகால்டி..."



தியேட்டர் நொறுக்ஸ்..


# படத்தோட முதல் இருபது நிமிஷம் பார்த்துட்டு நான் ரமணா, கஜினி ரேன்ஜ்க்கு பீல் பண்ணிட்டு இருந்தேன் ஆனா பக்கத்தில் இருந்த நண்பர் "அநேகமா இது தான் சுந்தர்க்கு கடைசி படமா இருக்கும்"னு சொல்லி நம்மை போன்ற ரசிகர்களை ஆப் பண்ண நினைக்கிறார்கள்...நாம கவலை பட வேணாம் வரிசயா நமக்கு தலைவலி கொடுக்க ஸாரி குதுகலம் கொடுக்க சுந்தர் படங்கள் வந்து கொண்டே இருக்குது....

# இன்டெர்வல் அப்போ சில பேரு விட்டா போதும்னு எஸ்கேப் ஆகிட்டாங்க..
சில பேரு அடிச்ச சரக்கில் மட்டை ஆகி இருந்தாங்க....


# படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...என் கலேரியில் ஒரு பதினைந்து பேர் இருந்தோம்...ஆனா இன்டர்வல்க்கு பிறகு அது ஆறாகி போச்சி...இந்த படத்தை நான் இன்டர்வல்க்கு பிறகும் நான் ஏன் பார்த்தேன்னா... படத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருந்தது...அதுவும் மொக்கையா தான் இருந்தது ஆனா இந்த இமான் பையன் இருக்கானே ரீமிக்ஸ் பண்றேன்னு சொல்லி "என்னடி ராக்கமா" பாட்டை கொலை பண்ணி காதை செவடாக்கிட்டாறுப்பா...அப்போ எஸ்கேப் ஆகி வந்தவன் தான்....


# என் வாழ்நாளில் நான் பார்த்த மொக்கை படத்துக்கு இந்த படத்துக்கு
மட்டும் தான் யாருமே கத்தலை....அதனால நொறுக்ஸ் அவ்வளவா தேரல...


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கு முக்கியம் நண்பர்களே....!!


ஜெட்லி...(சரவணா...)

Tuesday, October 12, 2010

எந்திரன்.... கலீஜா....

எந்திரன், கலீஜா மற்றும் வாடா....


கம்ப்யூட்டர் கொஞ்ச நாளா வேலை செய்யலை ...நான் எந்திரன் படத்துக்கு
விமர்சனம் எழுத கூடாதுனு யாரோ செய்ஞ்ச வெளிகிரக சதினு நினைக்கிறேன். இதை கண்டிச்சு கூடிய விரைவில் நாமா ஏதாவது ஒரு முட்டு சந்தில் நின்னு ஒரு போராட்டம் நடத்துவோம்..நீங்களும் வருவீங்கனு நம்புறேன்...



எந்திரன் :


எந்திரன் படத்துக்கு எங்க ஏரியா தியேட்டரில் டிக்கெட் ரேட் 150,300,500 னு சொன்னாங்க...அதனால கொஞ்சம் ஒதுங்கி தான் இருந்தேன். அப்புறம் ஆல்பர்ட் தியேட்டரில் கவுன்டர் ரேட் விலையில் டிக்கெட் கிடைத்தது.எனக்கு படம் ஓகே. ஆனா ரெண்டாவது தடவை அபிராமியில் டிக்கெட் கிடைச்சும் நான் போகல...காரணம் ரெண்டாவது பாதி. சுவாரிசியம் இல்லாத ரெண்டாவது பாதியை ஷங்கரிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்கல...


ஆனா ரஜினி இந்த மாதிரி science fiction படத்தில் எந்த ஒரு ஹீரோ பில்ட்
அப் இல்லாமல் நடித்தது பெரிய விஷயம். ஐஸ்வர்யா ராய் அந்த சாரியில்
கொள்ளை அழகு...ரெண்டாவது தடவை பார்க்க வந்த என் நண்பன்
அந்த காட்சியை மட்டும் விழித்து கொண்டு பார்த்தான். அப்புறம் வில்லன்
டோனி, என்ன ஒரு பில்ட் அப் இவருக்கு....ஆனா புஸ் ஆக்கிட்டாங்க...
படத்தோட நீளமும் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!



எந்திரனாக வரும் ரஜினியின் வசனங்கள் நச்... மே மே...கத்துவாரே
உண்மையிலே செம...சந்தானத்தை மொக்கை பண்ணிட்டாங்க..
கடைசி கிராபிக்ஸ் காட்சிகள் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...


அப்புறம் இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா....மொதல்ல சன் டி.வி.யில்
ட்ரைலர் போடும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி பேர் தான் முதல்ல வரும்...
ஆனா இப்போ ரெண்டு நாளா சன் பிக்சர்ஸ் கலாநிதி பேர் தான் முதலில்
வருகிறது.... என்னனு தெரியல....??


kaleja :


எந்திரன் படம் வந்தாலும் வந்தது வேற எந்த தமிழ் படமும் ரீலீஸ் ஆகல...
சரி இன்னொரு science fiction படத்தோட விளம்பரம் பார்த்தேன்..அது உலக
படமும் கூட தான்...





ஆனா எனக்கு ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் எங்கே இருக்குனு சரியா தெரியல..அதனால அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டு நேரா நம்ம மகேஷ் பாபு நடிச்ச கலீஜா படத்தை பார்க்க காசினோ போய்ட்டேன்...படம் சுமார், இல்லை மொக்கைனும் தெரிஞ்சு தான் போனேன். ஏன் விஜய் இப்படி கெட்டு போனார்னு மகேஷ் பாபு படத்தை பார்த்தவுடன் தான் தெரிஞ்சுது. என்னா பில்ட் அப்... இருந்தாலும் ஓகே ஓரளவுக்கு டைம் பாஸ் ஆச்சு...ஆனா படத்தோட நீளம் ரொம்ப ஜாஸ்தி...வர வர படத்தோட நீளம் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது...



மகேஷ் பாபு அப்போ அப்போ ஒரு கிழிஞ்ச துணியை கழுத்தை சுத்திக்கிட்டு
வர்றார்...இந்த மாதிரி ஸ்டைலை எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி அவர்கள்
குரு சிஷ்யன் படத்திலே செய்ஞ்சிட்டார். லாஜிக் அப்படின்னு நீங்க பார்த்தீங்கனா சுத்தமா இல்லைன்னு தான் சொல்லணும்..



சரி கலீஜா அப்போ கலீஜ்ஆ??னு நீங்க கேட்டா அப்படின்னு சொல்ல முடியாது... காரணம் அனுஷ்கா... நல்லா வெளிப்படுத்தி இருக்காங்க திறமையை தான் சொல்றேன். பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லனா வர்றார்... படம் எப்போ முடியும் எப்போ கிளம்பலாம்னு காத்துகிட்டு இருந்தேன்... ஏற்கனவே அனுஷ்கா நடித்த வேதம் படத்தை பார்த்து இருக்கிறேன்... இப்போது சிம்பு அதை வானமாக நடித்து கொண்டிருக்கிறார். எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் வேதம் தெலுங்கு படத்தை போட்டிருந்தார்கள்...கிழே விளம்பரத்தை பாருங்க...



நான் ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்க்க முடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது....ஏரியா புல்லா தெரிஞ்சவங்க தான் இருக்காங்க...இந்த நாடு என்னை பத்தி என்ன நினைக்கும்...என்க்கிட்ட சொல்லாம வீட்டு பக்கத்தில் இருக்கிற கல்லூரி மாணவர் ஒருத்தர் தொப்பி எல்லாம் போட்டு போய் படத்துக்கு போயிட்டு வந்தார். பயங்கர கூட்டமாம்....முக்கா வாசி பேர் சீன் இல்லாமல் பாதியிலே போய்ட்டாங்களாம்... ஆனா அவன் ரோவில் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த ஒரு பொக்கை தாத்தா மட்டும் கடைசி வரைக்கும் பார்த்தாராம்...முதல்ல இந்த மாதிரி ஒரு நல்ல படத்துக்கு
இப்படி விளம்பரம் போடுறதை தடை செய்யணும்.... அப்புறம் எத்தனை பேரு பிட் போடுவாங்கன்னு ஆசையா வந்து இருப்பாங்க...ச்சே.....


பிட் படம் பார்க்குறவங்க மனுசு பிட் படம் பார்க்குரவனுக்கு தான்
புரியும்னு சொல்வாங்க......உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்....



வாடா....!! <--GET READY FOLKS -->


அதோ இதோ என்று நம்மை வாட வைத்த வாடா படம் மீண்டும் வருகிறது....
வரும் 15 ரெடி ஆகுங்க....முதல் காட்சி போவோம்...வீட்ல சொல்லிட்டு வந்துருங்க... நமது அண்ணன் சூப்பர் பாக்கு தல நடிக்கும் வாடா படத்தை வாடாமல் வதங்காமல் பார்க்க இப்போதே படை எடுங்கள்....
வாடா படத்தை ஏற்கனவே நாம முன்னோட்டம் கொடுத்து இருக்கோம்...
கிழே கிளிக் பண்ணி படிச்சு பார்த்துட்டு தெளிவா இருங்க...


வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!



வாடா படம் ஏற்கனவே ரீலீஸ் தள்ளி போனதில் இருந்து அமெரிக்கா நாட்டு
அதிபர் ஒபாமா தினமும் நைட் ஆனா மிஸ்ட் கால் கொடுத்து படம் எப்போ ரீலீஸ் ஆகும்னு கேட்டு ஒரே தொல்லை கொடுக்கிறார். ஒரு வேளை இந்த தடவையும் ரீலீஸ் தள்ளி போனா நாம வாடா படம் மீட்பு குழுனு ஒண்ணு ஆரம்பிச்சு அதற்கான வேலையில் இறங்குவோம் நண்பர்களே....

வாடா வாடா னா வர மாட்டான்டா...
போட போட னா போக மாட்டான்டா...
அவன் தான்டா எம தர்மன்....
( பாடல் இடம் பெற்ற படம் கோல்மால்...)



நல்லதை நாலு பேருக்கு தெரிவிக்க நீங்க ஆசைப்பட்டா உங்க வாக்கை
போடுங்க....
ஜெட்லி...(சரவணா...)