Monday, October 31, 2011

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???





அட சுறாக்கு அப்புறம் தள படத்தை பார்க்க கூடாது அப்படின்னு உறுதியா இருந்தேன்...ஆனா இன்னைக்கு ரெம்பா வெட்டியா இருந்தேன் அதனால நம்ம ஆஸ்தான தியேட்டர் பைலட்க்கு போய் வேலாயுதம் படத்தை பார்த்துட்டேன்....

ஏழாம் அறிவு படத்தை நான் மொக்கைனு சொன்னதுக்கு சில பல பேரு ஏதோ
எனக்கு படம் புரியல அவங்களுக்கு எல்லாம் நல்லா விளங்கடிச்சு அப்படின்னு
நினைச்சுட்டாங்க....அட ஏழாம் அறிவுல புரிய என்ன இருக்கு...அந்த ரெண்டு
நிமிஷ ட்ரைலர் பார்த்தாலே படத்தோட மொத்த கதை, திரைக்கதை, எடிட்டிங்
எல்லாமே புரியுமே...இது தெரியாம அவங்க மொக்கைனு சொல்றவங்களை
வெளுத்து வாங்குறாங்க.... இதுல வேற யுடியுப் ல வேற வந்து அந்த படத்துக்கு
வக்காலத்து வாங்குறாங்க....நான் இப்போ வரைக்கும் ஆயிரத்தில் ஒருவன்
படத்துக்கு சொம்பு தூக்குறேன்..தூக்குவேன்... ஆனா ஏழாம் அறிவு செம மொக்கை
தான்... முருகதாஸ் எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர் பார்க்குரிங்களோ அவ்ளோ
மேல மேல மேல இருக்கும்னு சொன்னாரோ அந்த அளவுக்கு படம் செம மொக்கையா போச்சு.....!!!



வேலாயுதத்துக்கு வருவோம்.... ஹ்ம்... தெலுங்கு ஆசாத் படத்தை ஜெமினி டி.வியில சில காட்சிகள் பார்த்ததா நினைவு... சவுந்தர்யா, ஷில்பா ஷெட்டினு படம் களை கட்டும்.தமிழ்ல விஜய் கரெக்ட் சாய்ஸ் தான். விஜய்க்கு ஒண்ணும் அவ்வளவா பன்ச் அடிச்சு டிஞ்சர் ஆக்குற வசனம்லாம் இல்லை...அதனால் விஜய் ரசிகர் இல்லாதவங்களுக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை.


அஸ்ஸாசின் கேம் டிரஸ் போட்டது எரிச்சலா இருந்தாலும் படம் பார்க்கும் போது
ஒண்ணும் பெரிசா தெர்ல. ஆனா ஜெனீலியா கூட மாயம் செய்தாயோ பாட்டுக்கு
அவர் ஹேர் ஸ்டைல் ரசிக்க முடியல....ஹன்சிகா ஊறுகாய்...சந்தானம் காமெடி
ஓகே...

ஆஹோ ஓஹ்ஹோ னு சொல்லாம வந்த வேலாயுதம் கண்டிப்பா ஒரு டைம்பாஸ் படம். சுறா படத்துக்கு பத்து மடங்கு தேவலாம். வழக்கமா வர்ற விஜய் மசாலா படம் தான் என்றாலும் கொடுத்த அம்பது ரூபாய்க்கு கண்டிப்பா வொர்த்....

ஆனா கடைசியில் தள வோட மூஞ்சு மைதானத்தில் தெரிவது கொஞ்சம் ஓவர்
தான்... அதை பார்த்து வெளியே ஓடி வந்தவன்...திருவெல்லிக்கேணி பிரியாணி
கடையில் தான் வண்டி நிறுத்தினேன்...என்ன ஆச்சரியம் கடைசி ஹாப் பிரியாணி
மட்டும் தான் இருந்தது...டக்குனு டோக்கன் கொடுத்து வாங்கிட்டேன்...அதுக்கும்
வேலாயுதம் தான் காரணம்...இல்லனா 9.30 மணிக்கெல்லாம் பிரியாணி காலி
ஆகுமா....!!


வாழ்க வேலாயுதம்....!!

ஜெட்லி...(சரவணா...)



ஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)



இது ஒரு மீள் பதிவு ஆனால் பூனை படங்கள் புதுசு....
கிட்டதட்ட ரெண்டு வருடங்கள் ஆக போகுது இந்த பதிவு எழுதி..
உங்களுக்கும் இது போல் உதவிகள் செய்யணும்னு ஆசை
இருந்தா... தேவிதாஸ் ஐயா அவர்களை தொடர்பு கொள்ளலாம்...
cell : 9380961428


படிக்க கிளிக்கவும்

ஜாய் ஆப் பீடிங்









ஜெட்லி...(சரவணா...)

Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ரெண்டு நாள் முன்னாடி என்னோட FaceBook அப்டேட் இது....

//என்ன கொடுமை சார் இது...ஏழாம் அறிவுக்கு மொதல்ல தீபாவளி அன்னைக்கு ஸ்பெஷல் ஷோனு சொன்னாங்க...அதையும் புக் பண்ணேன்...அப்புறம் 25 தேதி ஸ்பெஷல் ஷோனு
சொன்னாங்க..அதுக்கும் நைட் ஷோ புக் பண்ணேன்....இப்ப என்னடானா ரெண்டு மணிக்கே படத்தை போடுறாங்களாம்.... அதுக்கு பேசாம நாளைக்கு படத்தை ரீலீஸ் பண்ணத்தான் என்ன???//


படம் பார்த்த அப்புறம் தான் புரியுது ஏன் படத்தை ஒரு ஒரு ஷோவா
முன்னாடியே விட்டங்கான்னு....கொய்யலா வெளியே உண்மை
தெரிஞ்சா தீபாவளி அன்னைக்கு மட்டும் தான் படம் ஓடும்னு
முன்னாடியே ரீலீஸ் பண்ணிட்டானுவோ....கதை என்னன்னா
ட்ரைலர் பார்த்தீங்க ல அதே எடிட்டிங் தான் படத்தோட முழு
திரைக்கதையும்...இப்படி ஒரு படத்தை முருகதாஸ் கிட்ட இருந்து
நினைச்சு கூட பார்க்கல...

போதி தர்மர் பத்தி இருபது நிமிஷம் சொல்றாங்க ...பல நூற்ற்றண்டுகள்
முன்னாடியே காஞ்சிபுரத்தில் இருந்து சைனா போய் அங்க மருந்து எல்லாம் கண்டுபிடிக்காரு, குங்பூ கத்து கொடுக்காரு...இதில இருந்து என்ன தெரியுது....
ஒண்ணும் தெரியலையா....சரி விடுங்க...!!அப்புறம் தீடிர்னு முத பாட்டு வருது....
இன்னொரு சூர்யா சர்கஸ்ல வேலை செய்யுறாரு...அங்க சுருதி வாராங்க...
சூர்யாக்கு பார்த்த உடனே லவ் ஆவுது...செல்போன் திருடுராறு...
ஹோட்டல்ல மொக்கை வாங்குறாருனு...முதல் பாதி படம் மொக்கையா போச்சு...

ச்சே...முருகதாஸ் எப்படி இப்படி ஒரு சுவாரசியம் இல்லாத திரைக்கதையை
பண்ணார்னு தெரியலையேப்பா....படம் எப்ப விடும் எப்ப போலாம்னு தான்
இருந்தது... ஏதோ சில சில காட்சிகள் ஓகே... அந்த சீனாக்காரன் வர்ற சீன்ஸ்
ஓகே...ஆனா சூர்யாவையும் ஸ்ருதியையும் சேஸ் பண்ணி கார்,பைக்
மூலமா கொலை பண்ண ட்ரை பண்றது ஏதோ சுட்டி டி.வி பார்த்த எபக்ட்
கொடுத்தது.....

தமிழன் தமிழன்னு சொன்னா போதுமா...அப்படியே மண்டைல நிக்குற மாதிரி
சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும்... ஆனா சில காட்சிகள் ஓகே...
சுருதி ஹாசன் தான் ஹீரோவா இல்ல அந்த சைனா க்காரன் ஹீரோவானு சில
டைம் கன்புசன் வருது... பாவம் சூர்யா ஆறு நாள் தண்ணீல ஊற போட்டுருறாங்க....

ஏழாம் அறிவு - எட்டாத அறிவு....!!

என்னடா இவன் இப்படியெல்லாம் எழுதுறானே....இவன் தமிழனே
இல்லன்னு சொன்னாலும் சொல்வாங்க ...க்கும்...கவுண்டர் ஸ்டைல
ஒண்ணும் மட்டும் சொல்ல ஆசைப்படுறேன்.... நான் தமிழ்ங்கோ நான்
தமிழ்ங்கோ பச்சை தமிழ்ங்கோ....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# ஆராதனா நைட் ஷோ போனேன்....அங்கே மட்டும் டிக்கெட் ரேட் கொஞ்சம் சீப்...எழுபது
ரூபாய்....இது மட்டும் தான் படம் பார்த்ததிலே கிடைச்ச ஒரே சந்தோசம்...

# முன் அந்தி சாரலே பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்....

# இன்டெர்வல் டைம்ல மூன்று ஆட்டோகார நண்பர்கள் பேசி கொண்டது...
டேய் போதி தர்மா?? அவரது நண்பர்...டேய் அவன் போதை தர்மர் டா..என்று
கூறியது செம டைமிங் காமெடி...

# இன்னொருவர் தன் நண்பருக்கு போன் மூலம் அப்டேட் கொடுத்தார் இப்படி....
"மாமா கஜினி அளவுக்கு கூட இல்லடா... செம மொக்கையா போது...பஸ்ட் இருபது
நிமிஷம் டிஸ்கவரி சானல் போட்டாங்க டா..அதுல போதி தர்மர் யார்னு ரெண்டு மூணு
சிலையை காமிச்சி"....என்று போனது....

# என் வரிசையிலும் முன் வரிசையிலும் கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் அஞ்சு அஞ்சாக பிரிந்து உட்கார்ந்து இருந்தனர்.... ரெண்டாவது பாதியில் வந்த ஒரு மொக்கை காட்சிக்கு முன் வரிசையில் இருந்த நண்பர் அவனின் நண்பனை திரும்பி பார்த்தார்..உடனே இவர்..."டேய் நாந்தாண்ட உன்னை பார்க்கணும்...சும்மா உட்கார்ந்து இருந்தவனை கடத்தி கூட்டு வந்துட்டு...லுக்கை பாரு..."என்றார்....

# விரைவில் எங்க பவருதர்மர் நடிக்கும் "எட்டாத அறிவு " படம் திரைக்கு
வந்து பிச்சுக்கிட்டு போகும்னு தென்சென்னை ரசிகர் மன்றம் சார்பா வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்...





# இன்று 225 நாள் காணும் எங்கள் லத்திக்கா படத்தை காண வருபவர்களுக்கு
பிரியாணி பொட்டலமும் பஞ்சும் வழங்கப்படும்...!!


ஜெட்லி...


Friday, September 30, 2011

முரண் , வாகை சூட வா, வெடி , உளவாளி ஜானி...!!

முரண் , வாகை சூட வா, வெடி , உளவாளி ஜானி...!!




இந்த வீக்கென்ட் என்ன படத்துக்கு போலாம்னு முடிவு பண்ண இன்னும் கொஞ்ச நேரத்தில் மேல உள்ள படங்களோட ரிசல்ட் உங்களுக்கு தெரிஞ்சுரும். அது சரி நீ ஏன்டா படம் பார்க்காம பதிவு எழுதுறேன்னு கேட்டா.... வேற ஒண்ணும் இல்ல சும்மா தான். இன்னைக்கு ரீலீஸ் ஆக போற படங்களோட என்னோட என்னோட கருத்துக்களை சொல்லலாம்னு ஆசைப்பட்டுடேன்...வேற ஒண்ணும் இல்ல...யாருக்கு தெரியும் காலையில் ஷோ ஏதாவது தியேட்டர்இல் போய் உட்காரவும் வாய்ப்பு இருக்கு...!!


நான் இன்னைக்கு முரண் போலாம்னு நினைச்சேன் ஆனா எங்க ஏரியா பக்கம் எங்கையும் வரல...ஆராதனாவில் மாலை காட்சி தான்.மாயாஜால் போக எல்லாம் இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல.முரண் மேல ஏன் அவ்ளோ ஆர்வம் எனக்கு சேரன் தான் பிடிக்காதேனு நீங்க நினைக்கலாம்..சேரன் புடிக்காதுதான் ஏன் புடிக்காது அந்த ஆள் அழுதுட்டு, லவ்வர் கிட்ட டேய் டேய் என்னடானு வசனம் பேசும் போது எல்லாம் பயங்கர கடுப்பா இருக்கும் எனக்கு... ஆனா அவர் நடிச்ச ராமன் தேடிய சீதை படத்தில் சேரனை ரசிக்கவே செய்தேன். மேலும் முரணில் பிரசன்னா இருக்கிறார்.பிரசன்னா நடிச்ச நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன்..இயல்பான நடிகர். முரண் ஒரு ரோட் படம் இல்லனாலும் ஏதோ பார்க்கணும் அப்படின்னு ஆர்வம் இருக்கு..ரெண்டு மூணு பாட்டு கூட நல்லா தான் இருக்கு... பார்ப்போம்...


போன வருஷம் களவாணி படத்தை FDFS மாயாஜால்ல பார்த்தேன்...ஆனா வாகை சூட வா படத்தை பார்க்கணும்னு தோணல...ஹிட்னு சொன்னாங்கனா போய்க்கலாம்னு இருக்கேன். ரொம்ப ஹார்ட் ஆனா சப்ஜக்ட்ஆ இருக்கும்னு பீலிங்...எனக்கு பாட்டு கூட அவ்வளவா பிடிக்கல...பார்க்கலாம்...



வெடி... ஹி ஹி.. விஷால், விவேக், பிரபு தேவானு பேரே கேட்டாலே சும்மா பகிருது,... தெலுகு படம் ரீமேக் என்பதால் படம் டைம் பாஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது பார்ப்போம்..


உளவாளி ஜானி...பீன் நடிச்ச படம்...கண்டிப்பா இந்த படத்தை பார்ப்பேன்... சிம்போனில போட்டு இருக்காங்க... முடிஞ்சா வரைக்கும் பார்த்துட்டு சொல்றேன்....




ஜெட்லி...(சரவணா...)

Thursday, September 29, 2011

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!



நேத்து தான் அபாச்சி ரெண்டாவது சர்வீஸ். முதல் சர்வீஸ்க்கு அப்புறம் தான் என் வண்டிக்கு நிறைய ப்ராப்ளம் வந்தது. ஒரு ஹோர்ன் தான் அடிச்சுது, பின்னாடி சீட்ல இருந்து ஒரே சவுண்ட் , கியர் ஷிப்ட் ரொம்ப ஹார்ட்ஆ இருந்தது. கியர் ஷிப்ட் மட்டும் தான் முதலில் தெரிந்து திரும்பவும் போய் நானே சரி செய்தேன். எத்தனை தடவை தான் போய் போய் சரி பண்றது அப்படின்னு ரெண்டாவது தடவை சர்வீஸ் பண்ணும்போது
பார்த்துக்கலாம்னு விட்டுடேன்.

இந்த தடவை வண்டி எடுக்கும் போது ரெண்டு ப்ரேக் அடிச்சாலும் கிரீச் கிரீச்னு சவுண்ட்... முன்னாடி போர்க்கில் இருந்து ஒரு மாதிரி சவுண்ட்....நேத்தே திரும்பவும் சரி செய்ய சொல்லி வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் ஓரளவுக்கு சவுண்ட் கம்மி ஆச்சு... நாளைக்கு சரி ஆயிடும் ஆயில் ஸ்ப்ரே பண்ணதால அப்படி சவுண்ட் வருதுனு சொன்னான்...நான் நம்பல, இருந்தாலும் கடைக்கு லேட் ஆயிடுச்சுனு வந்துட்டேன்...


அடையார் ராம்கேல தான் வண்டியை எடுத்தேன்.... ரெண்டு நாள்ல வண்டியை கொடுத்துட்டாங்க. ஆனா சர்வீஸ் தான் மோசம்... அங்க இருக்குற ஆளுங்க கிட்ட கேட்டாலும் எங்களுக்கு தெரியாது அப்படின்னு சொல்றாங்க.... இங்க மட்டும் இல்ல எல்லாம் சர்வீஸ் சென்டர்களும் அப்படி தான்.
மொத மொத எங்க பைக் பஜாஜ் கலிபர்... அங்க வண்டியை கொடுத்து சர்விஸ் பண்ற அவஸ்தை இருக்கே...அய்யோயோ... அதனால தான் பல்சர் பக்கமே தலை வச்சி படுக்கல..அப்புறம் பேசன் ப்ளஸ்...ப்ரீ சர்வீஸ் வரைக்கும் கூட அங்க நான் பண்ணல...அவ்வளவு கடுப்பு ஏத்துவாங்க.


அப்புறம் நண்பர் ராம்ப்ரசாத் சைதாபேட்டையில் ஒரு மெக் கடையை அறிமுகப்படுத்தினார். செமையா சர்வீஸ் பண்ணுவாரு...ஒரு நாளைக்கு சில வண்டிகளை மட்டும் தான் எடுப்பார். காசு ஆனாலும் சர்வீஸ் பக்காவாக இருக்கும். இப்படியே சில வருஷங்கள் அவர்கிட்ட சர்வீஸ்
விட்டுட்டு வந்தேன். அப்புறம் வேலையால் அங்க போறது இல்லை...இங்க இருக்குற லோக்கல் கடைல ரெண்டு தடவை வண்டியை விட்டேன்....எப்பா அதுக்கு ஷோரூம் சர்வீஸ் சென்டர்ஏ மேல்...அப்புறம் சர்வீஸ் பண்றது விட்டுட்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை என்ஜின் ஆயில்
மட்டும் மாத்தினேன்..அதுவும் பிடிக்காம எவனோ வண்டியை லவட்டிட்டு போய்ட்டான்...!!

திரும்பவும் சர்வீஸ் சென்டர் போறேன்... இன்னைக்கு விட்றதா இல்லை....என்ன காலைல பெய்ஞ்ச மழைல வாட்டர் வாஷ் பண்ண வண்டி தான் சேர் ஆயிடும்...என்ன பண்றது... சர்வேஸ் விட்டு எடுத்து அடுத்த நாளே மழை பெய்யறது கொஞ்சம் கொடுமையான விஷயம் தான்... !!

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)