Friday, June 17, 2011

அவன் இவன் ... எவன்..??

அவன் இவன் ... எவன்..??





சில பல மாசங்கள் கழிச்சு மொத நா மொத ஷோ அவன் இவன் படத்துக்கு போற வாய்ப்பு கிடைச்சுடுச்சுடோய்னு கொஞ்சம் சந்தோசம். ஆனா சந்தோசம் படம் பார்த்த அப்புறம் இருந்ததா இல்லையான்னு தான் இப்ப முக்கியம். அதை பத்தி நாம பின்னாடி டிஸ்கஸ் பண்ணுவோம்.

அவன் இவன் என்ன கதை....

அவன் இவனின் அப்பாவாக சூப்பர் சிங்கர்ல ஒருத்தர் தாடி வச்சி வருவாரே அவரு....அண்ணனாக விஷால் அவர் அம்மாவாக அம்பிகா தம்பியாக ஆர்யா அவர் அம்மாவாக தெலுங்கு அம்மாயி ஒண்ணு. நொடிஞ்சு இடிஞ்ச ஜமீனாக ஜி.எம்.குமார் ஏதோ ஐநஸ்னு சொல்றாங்க....எப்படி கதையே சொல்றது....?? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் முதல்ல அடிச்சுப்பாங்க... குமார் ஒரு வேலையை ரெண்டு போரையும் செய்ய சொல்வார்...செய்வாங்க..
அப்போ அப்போ...ஹா அப்போதான் தீடிர்னு வில்லன் ஆர்.கே வருவார்...ரெண்டு பேரும் வில்லனை அடிப்பாங்க. அப்புறம் படம் முடிஞ்சு Film by bala னு கார்ட் வரும்.....!!


அவன் இவன் படத்துல என்ன ஸ்பெஷல்னு உங்களுக்கே தெரியும் அது ஒன்றை கண்ணாக வரும் நம்ம விஷால் தான்னு. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்கிறார். பயங்கரமான உழைப்பு. இந்த படத்தில விஷால்க்கு அப்புறம் நான் சொல்ல போறது ஆர்யானு நீங்க நினைக்கலாம் ஆனா அது தான் இல்லை...அவர் ஜி.எம்.குமார்... மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார். ஒரு காட்சியில் அம்மணமாக கூட வருகிறார். ஆர்யாவும் நல்லா தான் பண்ணி இருக்கிறார்.என்ன சில காட்சியில் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனா மாதிரி இருக்குது...சில பல
காட்சிகள் பிதாமகன் மாதிரி தான் இருந்தது.படம் முதலில் இருந்தே காமெடியில் டாப் கீர்ல தான் போச்சு. வசனங்கள் செம.விஷால் மற்றும் ஆர்யாவின் அறிமுக காட்சி சூப்பர்.


பாலாவோட படம் கண்டிப்பா வித்தியாசமான களமா இருக்கும்னு நம்பி போனேன்..இருந்துச்சு...ஆனா சில பல காட்சிகள் அப்படியே அவரோட பழைய படத்தை நினைவு படுத்தியது கொஞ்சம் போர் ஆக இருந்தது. அப்புறம் படத்தோட பல காட்சிகளில் ஒன்ற முடியலை. போலீஸ்காரரை முதலில் ஓட்டும் போது நன்றாக தான் இருந்தது ஆனால் அதற்கு அப்புறம் ஆர்யா ப்ளேட் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகும் காட்சி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இருந்தது.

நான் ரொம்ப ரசிச்சு கை தட்டி சிரிச்ச சீன் டுடோரியல் எக்ஸாம் காட்சி...ரெண்டாவது காந்தி யார் கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் வாத்தியார் சொல்லும் "ஏசப்பா".. வாக்கியம்.அப்புறம் நாடக மேடையில் பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும்னு? விஷால் கேட்கும் போது. ஆர்யா "அவனுக்கு என்ன வேணும்னே உனக்கு தெரியல என்னையா நீ கடவுள்..." னு கேட்கும் காட்சி.


சூர்யா வரும் காட்சி கூட எதுக்குனு நான் யோசிச்சப்ப அங்கே விஷாலோட ஆக்டிங் உண்மையிலே சூப்பர். அந்த காட்சியில் மட்டும் தான் கொஞ்சம் மண்டை கீர்னுச்சு....அப்புறம் கடைசில் ஜி.எம்.குமாரை பார்த்து விஷால் அழுகும் காட்சி ..மற்றபடி வேற எதுவும் மனசை தொடலை. ரெண்டு நாயகி..ஒண்ணும் சொல்லும் படியா பெருசா இல்லை..ஆனா ஆர்யா டாவு கட்டுற பொண்ணோட ஏட்டாக வரும் பெண்ணுக்கு வேலை அதிகம் தான். யுவன் மியூசிக் ராசாத்தி ஓகே...ஆர்.கே வை காட்டும் போது ஒரு மியூசிக் அடிக்கடி வரும் அதை எங்கையோ கேட்ட மாதிரி இருந்தது...எங்கனு சொல்லுங்கப்பு...

அது சரி படம் எப்படி...தேறுமானு கேட்டா...என்னத்த சொல்றது..தியேட்டர்ல
கலவையான விமர்சனம் தான். என்னை கேட்டா கஷ்டம்னு தான் சொல்வேன்...
ஒரு தடவை தாரளமா பார்க்கலாம். ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது ரொம்ப
கஷ்டம். ஆமா படத்தோட கதை என்னனே சரியா எனக்கு விளங்கல...ரெண்டு திருடங்க ஜாலிய காமெடி பண்றாங்க போலீஸ்காரனை கலாய்க்கிறாங்க.. .தீடிர்னு ஒரு வில்லன் வரான்... தீடிர்னு பழி வாங்குறாங்க.... ...டீடைல்லா பார்த்தா படத்துல பல விஷயங்கள் இருக்குனு மட்டும் புரியுது....என்னமோ போங்க..


அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன...!!





தியேட்டர் நொறுக்ஸ்:


# வழக்கம் போல நம்ம கணபதிராம்ல தான் படம் பார்த்தேன்...படுபாவிங்க ஏ.சி.யே போடல...ஆபரேட்டர் தான் பாவம் என்னா திட்டு...

# அம்பிகா ஆர்யாவை பார்த்து "அவனுக்கு குஞ்சுமணியை புடிச்சு ஒழுங்காவே ஒன்னுக்கு போக தெரியாது "என்ற காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்...

# ஆர்யாவும் அவர் அம்மாவும் ஆடும் கூத்து ஆட்டத்துக்கு தியேட்டரில் செம விசில்.....

# படம் முடிந்து வண்டி எடுக்கும் போது..ரெண்டு நண்பர்கள் பேசிகொண்டது..

படம் எப்படி...
எனக்கு புடிக்கல...
உனக்கு எப்பவுமே இப்படி தான்...
என்னா கதைன்னு சொல்லு பார்ப்போம்...
என்று பேசி கொண்டே சென்றார்கள்....


இந்த பதிவு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கினை செலுத்த மறவாதீர்....


உங்கள்
ஜெட்லி...(சரவணா...)



Saturday, June 11, 2011

ஆரண்ய காண்டம்...!!

ஆரண்ய காண்டம்...!!


இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை....பாட்டு இல்லை கமர்சியலா எதுவுமே இல்லை. கணபதிராம் தியேட்டர் புல்லா என்னை மாதிரி இளைஞர்கள் படை
எடுத்து வந்து இருந்தாங்க.இந்த படத்தோட விளம்பரத்தை ரெண்டு வருஷம்
முன்னாடி பார்த்ததா நினைவு.... ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷரப் நடிக்கிறார்னு
சொன்னாங்க... அவரை நான் சின்ன வயசில ரங்கீலா படத்தில ஊர்மிளாவை
மோப்பம் பிடிக்கும் போது பார்த்ததா நினைவு...இதுலயும் கிழட்டு சிங்கம்பெருமாள் ஆக நல்லாவே மோப்பமும் பிடிக்கிறார் நடிப்பிலும் அசத்துறார்.






அடுத்து பசுபதியாக சம்பத்....எனக்கு என்னவோ இவர் தான் படத்தோட ஹீரோ
மாதிரி தெரியிறார். காரணம் நான் பார்த்த இருபது வருஷ சினிமாலா கடைசில ஜெய்ச்சவங்க தானே ஹீரோ. சப்பையாக ரவிகிருஷ்ணா...அல்வா மாதிரி
சாப்டுறார்..யாரைன்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க...யாஸ்மின் மற்றும்
ரவி கிருஷ்ணா வரும் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது...சீக்கரம் சீனை
முடிச்சுட்டு அடுத்ததை போடுங்கனு சில பேர் கத்தவும் செய்ஞ்சாங்க.
ஒரு வேளை அதுக்கு காரணம் ரவிகிருஷ்ணாவோட இனிமையான குரலா
இருக்குமோ....??


கதை ஒரு நாள்ல நடக்குது. படத்தில ஸ்பெஷல் என்னனு பார்த்தா தெளிவான
வேகமான திரைக்கதை தான். முக்கியமானது யுவனின் பின்னணி இசை.
அப்புறம் வசனம் ரொம்ப இயல்பா இருக்கு...சம்பத்தும் கஜபதியும் நடக்கும் போது வரும் பின்னணி இசையும் காட்சியும் என்னை கவர்ந்தது. வெயில் படத்தில் நடித்த அந்த பையனும் அவன் அப்பாவுக்கும் ஆனா காட்சிகள் நல்லா இருந்தது... பையன் பேசும் வசனம் ஒவ்வொன்றும் நச்...அஜய்ராஜ் அவர் பங்குக்கு நன்றாக பண்ணி இருக்கிறார்.


காமெடிக்குனு தனி ஆள் இல்லை அவங்க பேசுற சில வசனங்களே காமெடிஆ
இருக்கும். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் செக்போஸ்டில் போலீஸ் செக் பண்ணும் காட்சியும் வசனமும் உதாரணம். குறி சொல்பவராக ஒரே காட்சியில் வரும் பைவ் ஸ்டார் கிருஷ்ணா காமெடி நன்றாக இருந்தது.ஜாக்கி மனேரிசம்னு பேர்ல அப்ப அப்ப இளிக்கிறார்.

ஆரண்ய காண்டம் கண்டிப்பா டைம்பாஸ் படம் தான். ஆனா குடும்பத்தோட போறதுக்கு ஏத்த படமில்லை. காரணம் ரத்தம், அசிங்க வார்த்தைகள். தியேட்டர் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மிக்சிங்ஆ தான் இருந்தது. எனக்கு படம் பிடிச்சுருக்கு ஒரு சில சீன்கள் தவிர. வித்தியாசமான மேகிங் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.


தியேட்டர் நொறுக்ஸ்:

# ஒரு காட்சியில் ரவிகிருஷ்ணாவும் யாஸ்மினும் கொஞ்சம் நேரம் படுக்கையில் உட்கார்ந்து அமைதியாக இருப்பார்கள்....இங்கே பொறுமை தாங்க முடியாத நம்ம ஆள்..."ஏதாவது பண்ணுங்க இல்லை கதையாவது சொல்லுங்க..."னு டென்சன் ஆயிட்டாரு.....



உங்கள்
ஜெட்லி...(சரவணா...)


Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை....

அழகர்சாமியின் குதிரை....???


பாஸ்கர் சக்தியோட அழகர்சாமியின் குதிரை கதையை படிக்கும் போது அதை திரையில் பார்க்க அப்பவே ஆர்வம் இருந்தது...காரணம் சுசீந்திரன் இயக்குனர் என்பதே.. இந்த படத்தை நான் நேரத்தே பார்க்கவேண்டியது மிஸ் ஆகிடுச்சு. சரி இன்னைக்கு 12 மணி ஷோ மாயாஜால் போலாம்னு நண்பனோட அவசர அவசரமா அங்க போய் டிக்கெட் கேட்டா அந்த காட்சியை ரத்து செய்ஞ்சுட்டாங்க,காரணம் கேட்டதுக்கு ஒரு டிக்கெட் கூட யாரும்
வாங்கலையாம்...அதான் நாங்க ரெண்டு டிக்கெட் வாங்குரோமேனு கேட்டா... ரெண்டு பேருக்கு எல்லாம் படம் போட்ட கட்டுப்படியாகாதுனு புதுசா வசனம் எல்லாம் பேசினாரு. மாயாஜால் கூட திருத்தி போச்சேன்னு 1.40 ஷோ க்கு டிக்கெட் எடுத்தோம்....

சரி ஒரு வழியா அப்படி இப்படி டைம் பண்ணி உள்ளே போய் உட்கார்ந்த.....
படம் ஆரம்பிச்ச உடனே அப்புக்குட்டியை கட்டை அவுத்து விட்டு ஒரு அம்மா தண்ணி கொடுத்தாங்க...அப்பு குட்டி மூஞ்செல்லாம் ரத்தம் வேற. ஆஹா படத்தை இன்டர்வல்ல இருந்து போட்டுடாங்க போலன்னு வெளியே போய் சொன்ன பிறகு முதல்ல இருந்து படத்தை போட்டாங்க..






அழகர்சாமியின் குதிரை படத்துக்கு ஹீரோனு எல்லாம் யாரும் கிடையாது... கதையை நம்பி எடுத்து இருக்காங்க...கதையில் படித்ததை திரையில் பார்க்கும் போது ஒரு உற்சாகம் வருது...குறிப்பா குதிரை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்குற சீன்...அதே மாதிரி அந்த சின்ன பையன் காட்சிகள் எல்லாம் நல்லா இருந்தது. படம் ரெண்டு மணிநேரம் தான் ஓடுது. முதல் பாதியில் வரும் பாட்டு வேகத்தடைகள்....அப்புறம் முக்கியமா படத்தில விறுவிறுப்பு ரொம்ப கம்மி ...

போலீஸ்காரராக வருபவர், சூரி , மலையாள மாந்திரிகர், வாத்தியார், னு நிறைய
கேரக்டர். அவர்கள் அடிக்கும் டைமிங் காமெடிகள் நன்றாக இருந்தது.ஆனா
அழகர்சாமி படம் என்னமோ எனக்கு அவ்வளவா புடிக்கல.படம் ரெண்டு மணி நேரம் தான் ஓடினாலும் ஏதோ ரொம்ப நேரம் ஓடின மாதிரி ஒரு அலுப்பு...அதுவும் முதல் பாதி கொஞ்சம் இழுப்பு...படம் டைம்பாஸ் ஆச்சா இல்லையானு கேட்டா...ஆச்சுனு தான் சொல்லணும்... கதைலே படிச்சுது எல்லாமே இன்னும் மேம்படுத்தி அற்புதமா திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். ஆனா எனக்கு தான் அவ்வளவா ஒன்ற முடியல படத்தோட.

ரெண்டாவது பாதியில் அப்புகுட்டியின் பிளாஷ்பேக் யூகிக்க முடிந்ததே...அதை கொஞ்சம் சீக்கரம் முடிச்சு இருக்கலாம். சரண்யா மோகன் எல்லாம் ரெண்டு மூணு சீன் தான் வராங்க.அதே மாதிரி படம் சில டைம் ஏதோ நாடகம் பார்க்கிற மாதிரி இருந்தது...அழகர்சாமியின் குதிரை படத்தோட ப்ளஸ் பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மற்றும் கேமரா மேன் கைவண்ணமும் தான். வெண்ணிலா கபடி குழு படத்தை நான் ஒரே வாரத்தில் ரெண்டு தடவை தியேட்டரில் சென்று
பார்த்தேன்... ஆனா அழகர்சாமியின் குதிரையில் ஒரு தடவை பவனி வரலாம்....!!



தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தோட இன்டெர்வல்ல இருந்து படம் போட்டவுடன் நான் வெளியே சொல்ல போகும் போது மப்டியில் வந்த போலீஸ்காரர்..."எப்படி கண்டுபிடிச்சீங்கனு..." கேட்டார்... இல்ல சார் கதையை படிச்சு இருக்கேன்
அதனால ஒரு யுகம் தான்னு சொன்னேன்....


# சரண்யா மோகன் அப்பு குட்டி கிட்ட குதிரையோட வந்துடுங்க அப்ப நம்ம கல்யாணம்னு சொன்னவுடன் பின் சீட்டில் இருந்தவர்..."நாளையில் இருந்து நானும் குதிரை வழக்க போறேன்னு" அவர் நண்பரிடம் உற்சாகமா சொன்னார்....


# அப்புக்குட்டி பொண்ணு பார்க்க கிளம்பும் முன் தொப்பையை மூச்சு நிறுத்தி எல்லாம் பார்ப்பார்...இதை கண்ட ஒருத்தர்.... "அதுவே பேமிலி பேக்...ஏதோ சிக்ஸ் பேக் வச்சி இருக்கிற மாதிரி மூச்செல்லாம் புடிக்கிறார்..."னு கலாய்த்தார்...




# படம் போடுறதுக்கு முன்னாடி வழக்கம் போல நம்ம ரேவதி ஹோட்டல் போய் பரோட்டா சாப்பிட்டு அப்படியே ஒரு முட்டை லாபாவும் உள்ளே தள்ளியாச்சு...!!


ஜெட்லி...(சரவணா...)






Tuesday, May 10, 2011

பாஸ்ட் பைவ் - (FAST FIVE)

பாஸ்ட் பைவ் - (FAST FIVE)



சில மாதங்களாகவே ஆங்கில டப்பிங் படங்களை அதிகமா மிஸ் பண்ணேன். அதுவும் பைலட் தியேட்டரை ரொம்பவே மிஸ் பண்ணேன். அப்படி பீல் பண்ற அளவுக்கு பைலட் தியேட்டர் என்ன பெரிய அப்பாடக்கர் தியேட்டர்ரா?? நீங்க கேட்கலாம். என்னை மாதிரி ஆங்கில டப்பிங் படம் பார்ப்பவர்களுக்கு பைலட் தியேட்டர் ஒரு வரபிரசாதம் தான். கண்டிப்பா எல்லாம் ஆங்கில டப்பிங் படங்களும் ரீலீஸ் ஆகும் அதிகபட்ச விலையே அம்பது ரூபாய் தான். ஏ.சி.யம் ஓரளவுக்கு இருக்கும். ஆனா பைலட்க்கு குடும்பத்தோட
போறதுக்கு ஏத்த தியேட்டர் இல்லை...!!

சரி நாம வேகம் அஞ்சுக்கு போவோம்.சரியா பத்து ஆண்டுகள் ஆச்சு fast and furious படத்தோட முதல் பாகம் வந்து . நான் டி.வி.டி.யில் தான் பார்த்தேன். அந்த பாகத்தில் வின் டீசல் விடவும் என்னை அதிகமா கவர்ந்தவர் பால் வாக்கர் தான். அசால்ட்டா நடிப்பார். அதே மாதிரி பால் வாக்கர் நடித்த eight below என்ற படத்துக்கும் நான் ரசிகன். eight below படத்தை மோட்சத்தில் பார்த்ததாக நினைவு.

இந்த படம் fast and furious படத்தோட அஞ்சாம் பாகமா நினைச்சா அது உங்க தப்பு. வேணும்னா மூணாம் பாகம்னு சொல்லலாம். நடுவில் ஜப்பான் படம் கூட fast and furious என்ற தலைப்பில் வந்தது அது பத்தி எனக்கு எதுவும் தெரியல. இந்த படத்தில் வின் டீசல், பால் வாக்கர், ராக்னு செம கூட்டணி.படம் கிட்ட தட்ட ரெண்டு ஹவர் ஓடுது. இந்த தடவை கதை ரியோவில் நடக்குது ரியோவில் இருக்குற ஒரு பெரிய டான் கிட்ட இருந்து கொள்ளை அடிக்க ப்ளான் போடுறாங்க....

ராக் போலீஸ் ஆக வருகிறார் கொஞ்ச சீன் வந்தாலும் இவர் வர்ற சீன்ல தான் தியேட்டர்ல செம கைத்தட்டு. இவருக்கும் வின் டீசல் க்கும் நடக்கும் சண்டை காட்சி செம. பால் வாக்கர் வழக்கம் போல் நல்லாவே பண்ணி இருக்கிறார். பாகம் ரெண்டில் வந்த நீக்ரோ நடிகர் இதிலும் வருவார். கிட்ட தட்ட OCEANS படம் மாதிரி இருந்தாலும் இதில் அக்சன் காட்சிகள் செம. கடைசியில் அவர்கள் லாக்கரை லவட்டிட்டு போகும் காட்சி சூப்பர் .

விறுவிறுப்பா...அனல் பறக்கும் சண்டை காட்சிகள்.. இந்த விடுமுறையை கழிக்க கண்டிப்பா இந்த படத்துக்கு போங்க . என்டர்டைன்மன்ட் கியாரண்டி...!!

தியேட்டர் நொறுக்ஸ் :

# நான் போனது திங்கள்க்கிழமை என்பதால் ஓரளவுக்கு தான் கூட்டம் இருந்தது. இன்டர்வல் அப்ப ஒருத்தரை பார்த்தப்போ எங்கையோ பார்த்த மாதிரி இருந்ததுனு பார்த்தா நம்ம வடிவேலு புகழ் சிங்கமுத்து பையன்.

# சிக்காத சிறுத்தைகள் அப்படின்னு வேற ஒரு டைட்டில் இந்த படத்துக்கு...
ரூம் போட்டு யோசிப்பாங்களோ....!!

# ராக் அறிமுக காட்சியில் தியேட்டர்ல செம விசில் பறந்தது....

# படம் முடிஞ்சவுடன் நேர பர்மா பஜார் பக்கம் போய் அத்தோ சாப்பிட போயாச்சு....


ஜெட்லி...(சரவணா...)

Monday, May 9, 2011

இதுதான்டா எங்க பவரு ....!!

இதுதான்டா எங்க பவரு ....!!


வெளியீடு : பவர் ஸ்டார் அகில கெரகம் ரசிகர் மன்றம்.






வெற்றி வெற்றி...லத்திகா வெற்றிகரமாக அம்பதாவது நாள் ஓடி அதையும் தாண்டி எப்படியாவது காசு கொடுத்து நூறு நாள் கூட வெற்றிகரமாக கண்டிப்பா ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... நம்ம பவரு ஸ்டார்க்கு கிடைத்த வெற்றி தமிழனுக்கு கிடைத்த வெற்றி.... இந்த படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன அனைத்து பவர் ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகிறோம்.....

ஆனந்த தொல்லை....





அடுத்து நமக்கு தொல்லை கொடுக்க மன்னிக்கவும் தூக்கத்தை கெடுக்க வரபோகும் படம் தான் ஆனந்த தொல்லை நம்ம பவர் நடித்தது....நம்ம அண்ணன் பவர் ஸ்டார்க்கு ஏத்த மாதிரி நாயகி, முன்னால் அழகி இந்நாள் கிழவி வாணி விஸ்வநாத் நடித்து இருக்கிறார். கூடவே கவர்ச்சி அணுகுண்டு பாபிலோனா கூட பவர் கூத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தை அனைவரும் பார்த்து தங்கள் வாழ்நாள் பாக்கியத்தை கிட்ட வேண்டும்
என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


மன்னவன்:


ரஜினி மூன்று முகம், சூர்யாக்கு காக்க காக்க,விஜய்க்கு போக்கிரி மாதிரி நம்ம தல பவருக்கு மன்னவன்.இந்த படமும் கூடிய விரைவில் வெளி வந்து மக்களை மகிழ்விக்க வேண்டும்...!!


.
ஜெட்லி...(சரவணா...)