Saturday, January 30, 2010

பதிவர் தருமிக்கு உதவி தேவை.




நேற்று எங்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் உங்களுக்கு நன்றே தெரியும், எந்த ஒரு Link Click செய்தாலும் அது எங்கயோ சென்றது. பிறகு அதை ஒரு மாதிரியாக சரி செய்தோம். இன்று பதிவர் தருமி (http://www.dharumi.blogspot.com/)   அவர்களின் பதிவும் hack செய்யப்பட்டுள்ளது,


 ஆனால் இது நேற்றை விட ரொம்ப மெருகேறி Sophisticated-a இருக்கு. நான் ஒரு சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவருக்கு உதவ ஆனால் எனக்கு இந்த அளவுக்கு Technical Brain இல்லை அதனால் விஷயம் தெரிந்த Computer சூறாவளிகள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை நீங்கள் dharumi2@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது நாளாக இது நடப்பதால் வயிற்றில் புளியை கரைக்கிறது அதனால் Template Backup எடுத்துவிட்டோம் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது பதிவுகளின் (Posts Backup) எடுப்பது எப்படி என்று சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும். 


நன்றி 

சித்து.

தமிழ் படம் - பார்வை

மச்சான் காக்க காக்க, பாட்ஷா மாமா, டேய் போக்கிரிடா, இது நாயகன், அது பில்லா. இதெல்லாம் தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, முன், பின் சைடு இருக்கைகளில் இருந்தவர்கள் பேசிய வாசகங்கள். நாடோடிகளுக்குப் பிறகு இவ்வளவு கொண்டாட்டங்களுடன் பார்த்த படம் இது தான்.




நம்ம ஊரிலிருந்து யாராவது சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போனா, அவுங்க குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைக்கணும், அவுங்களோட பழகுறவுங்க, அதுக்கு தண்டனையா, விரல் சுத்துற தம்பி படத்தை நூறு தடவை பார்க்கணும், என்ற நாட்டாமையின் தீர்ப்புடன் படம் தொடங்கும்போதே, அதகளம் ஆரம்பமாகிவிடுகிறது. அதன் பின் பாரபட்சமே பார்க்காமல் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

பல படங்களின் பிரபலமான காட்சிகளை அப்படியே எடுத்துக் கொண்டு, முடிவில் மட்டும் ஒரு வேட்டு வைத்திருக்கிறார்கள். ட்ரைலரில் பச்ச, மஞ்ச தமிழன் பாட்டுப் போடும்போது, இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா என்று போடுவார்கள், படத்தில், சில நொடிகளுக்குப் பின் அடுத்த வரி வருகிறது, என்று அவர் போடச் சொன்னதால் போடுகிறோம்.

சந்தானம் நடிச்சிருக்கலாமோன்னு சில இடங்களில் தோணினாலும் அவரோட நக்கலான உடல் மொழியும் குரலும் அதைக் கெடுத்துவிடும் என்றும் தோன்றியது. படத்தில் அங்கங்கே கொஞ்சம் லொள்ளு சபா வாசனை அடித்தாலும், ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் விதத்தில் சிரிப்பில் கண்களில் நீர் நிறைகிறது.

முதல் முதலாய் பார்க்கும் மகன், தந்தையின் உரையாடல்
அப்பா : மெட்ராசில என்ன பண்ற
சிவா : நான் பெரிய தளபதியா, ஸ்டாரா ஆயிட்டேன்,
அப்பா : இதுக்கு தான் அப்பவே சொன்னேன், கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடலாம்னு

சிவாவின் கல்லூரி நண்பர்களாய் வரும், வெ..மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும், ஒவ்வொரு காட்சியிலும், மச்சான், மச்சி என்று அழைத்துக் கொள்ளும்போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சமீபகாலத்து படங்களை கொத்துக்கறி போட்டவர்கள், ஏனோ சிவாஜி, எம்ஜியாரை விட்டுவிட்டார்கள். நாயகன், மவுன ராகம் தவிர்த்து எல்லாமே, கடந்த பதினைந்து ஆண்டுகளில் வந்த படங்கள் தான். இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் இருக்கும் போது, இன்னும் கொஞ்சம் காரம் தூவியிருக்கலாம் என்றும் தோன்றியது.

சுவாரஸ்யமான காட்சிகள் பற்றி அதிகம் சொல்ல ஆரம்பித்தால் முழுத் திரைக்கதையையும் சொல்ல வேண்டிவரும் என்பதால்கடைசியாக ஒன்றே ஒன்று, இவர்களிடம் ஆற்காடு வீராசாமியும் தப்பவில்லை (காட்சி எது என்பதை படம் பார்த்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்)

முக்கிய குறிப்பு
படம் பார்க்க தனியாக செல்ல வேண்டாம், சிரித்து வயிற்று வலி வந்தால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடிய தக்க நண்பர்கள் துணையுடன் படத்தை பார்க்கவும்

பின்குறிப்பு
இதுவரை சினிமா விமர்சனம் எழுதிப் பழக்கம் இல்லை, எனவே கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

கடைசிக் காட்சி : படம் முடிந்து வரும்போது நண்பன் கேட்டான், இதுக்கு அப்புறமும் தல,தளபதி எல்லாம்  இப்படி படம் எடுப்பாங்கன்னு நினைக்கிறியா? நான் கேட்டேன், எடுத்தால் நீ போய் முதல் நாள் முதல் காட்சி பார்க்காமல் இருக்கப்போறியா?

நன்றி
சங்கர்

Friday, January 29, 2010

கோவா - பால்கோவா வா??

கோவா - பால்கோவா வா??


இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபுவின்
மூன்றாவது படைப்பு கோவா.யுவனுக்கு முன்னாடி இளைய
இசைஞானி என்று அறிமுகத்தோடு படம் கிராமத்தில்
தொடங்குகிறது.





பல கிராம படத்தில் பார்த்த பஞ்சயாத்து காட்சியை நக்கல்
செய்து இருக்கிறார்கள்.குறிப்பாக அந்த ஆனந்த்ராஜ்
பிளாஷ்பேக் செம நக்கல் அதுக்கு அடுத்து பிரேம்ஜியின்
பிறப்பு பற்றி கூறுவது செம....விஜயகுமார்,சந்திரசேகர்
சண்முக சுந்தரம் எல்லோருமே சீரியஸ்ஆக காமெடியா
நடிச்சு இருக்காங்க.



ஜெய்,வைபவ்,பிரேம்ஜி மூணு சுப்ஜெக்ட் ஹீரோ என்றாலும்,
படத்தை தனித்து ஆளுவது பிரேம்ஜி தான்.அவருக்கு ஒரு
பைட் வேற இருக்கு அதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு
காப்பு ஏறுவது போல் இவருக்கும் ஏறும்.பிரேம்ஜி ஒவ்வொரு
தடவையும் அந்த இங்கிலீஷ்காரியை பார்த்து கண்கள் இரண்டால்
பாட்டுக்கு தலையாட்டுவது பல தடவை சிரிப்பு வந்தாலும்
சில நேரங்களில் அலுப்பு வருகிறது.

ஜெய், ஓட்டை இங்கிலீஷ் வைத்து கொண்டு மனுஷன்
சலம்பி இருக்கிறார். exampel : u believeO notO......,
two coffee one no sugar one yes sugar....,அப்புறம் முக்கியமா
பிரேம்ஜி கண்ணை சாமி குத்தியிடுச்சு என்று வைபவ்விடம்
சொல்லும் காட்சி சூப்பர்.வைபவ், இந்த படத்தில் இவர்
மூஞ்சில் லைட் அடிச்சா பழைய பாட்டு.தன் பங்கை
கரெக்ட்ஆக செய்து இருக்கிறார்.ஆனா இவருக்கு கொஞ்சம்
வாய்ப்பு கம்மி.

சம்பத் குமார், இதுவரை நடிக்காத ஒரு வேடம் நமக்கும்
புதுசு.தொண்டை கிழியே கத்தியே இவரை பார்த்த நமக்கு
இதில் ஒரு அட்டு கேரக்டர்இல் வருகிறார்.அரவிந்த்,சிக்ஸ்
பேக் உடன் சுத்திகொண்டு இருக்கிறார் இவர் தான் வில்லன்
என்று பார்த்தால் இவரும் சம்பத்தும்....ஐயோ சொல்லவே
கூச்சமா இருக்குங்க.....!நைஸ் ஜாப் அரவிந்த்.

பியா, சின்ன பொண்ணுன்னு பார்த்தா முக்காவாசி பாதி
டவுசரில் தான் பொண்ணு வருது, கிஸ் அடிக்குது....
நல்ல முன்னேற்றம் நடிப்பில் தான்!!சிநேகா, கடைசில
வராங்க வைபவ் ஏதோ கதை சொல்றாரு.
சிநேகா அவங்ககிட்ட உள்ள திறமையை காட்டுறாங்க.

வெங்கட் பிரபு சின்ன சின்ன விஷயம் கூட சூப்பர்ஆ பண்ணியிருக்கார்.குறிப்பா சொல்லணும்னா ஒரு காட்சியில்
பியா ஒரு பார்ட்டி மேடையில் இங்கிலீஷ் பாட்டு பாடிட்டு
இருக்கும் அப்போ கிழே நம்ம பிரேம்ஜியின் வெள்ளைக்கார
காதலி அவள் நண்பர்களுடன் இங்கிலீஷ்இல் பேசுவாள்...
அப்போ தீடிர்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி மேடையில்
பியா ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் பாடுவது
மாதிரியும் கிழே வெள்ளைக்காரிகள் தமிழில் பேசுவார்கள்.

பல விஷயங்கள் இருந்தும் படத்தில் சில இடங்களில் தேக்கம்
காணப்படுகிறது.முதல் பாதி கலகலப்பு என்றாலும் அதிலும்
சில காட்சிகள் போர் அடிக்கிறது.பின் பாதியில் பல காட்சிகளில்
போர் அடிக்கிறது என்பது உண்மை.வெங்கட் சில காட்சிகளை
சீரியஸ்ஆக எடுதுட்டாரோ......முக்கியமா பிரேம்ஜியின்
வெள்ளைக்கார காதலி,சம்பத் அரவிந்த்,ஜெய் பியா பேசும்
காட்சிகள் அலுப்பு தட்டுகிறது.அப்புறம் சின்ன எரிச்சல் அந்த
கோவா தீம் மியூசிக் அடிக்கடி போட்டு நாங்க மலேசியாவில்
இல்ல கோவாவில் இருக்கோம்னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

படத்தில் சீரியல் நடிகர் ஒருத்தர் பல காட்சிகளில் பல
தோற்றங்களில் வருகிறார்...ஏன்னு காரணம் சொல்லி
இருந்தா நல்ல இருந்துருக்கும்,கடைசி வரைக்கும் சொன்ன
மாதிரி தெரியல.முக்கியமா அந்த சிநேகா வைபவ் காட்சிகள்
சுத்தம்....செம போர்...அந்த பாடல் காட்சி கிட்டத்தட்ட
ரெண்டாவது இன்டெர்வல் மாதிரித்தான்.....


கடைசியில் கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சு காரணம் கடைசியில் வரும் முக்கிய ஸ்டார்கள்.அவுங்க யார்லாம்னு சொல்லவேணாம்னு நினைக்கிறேன்.....கடைசியில் பேர் போடும் முன் தியேட்டரை விட்டு போய் விட வேண்டாம்...... அது தான் அவுங்க ரெண்டாவது பாதிக்கு போட்ட மொக்கைக்கு ஆறுதல் தரும்
விஷயம் என்பது குறிப்பிடதக்கது.


தியேட்டர் நொறுக்ஸ்:

# முதல் இன்டர்வலில் காண்டீனில் பப்ஸ் வரவில்லை....
சரி சிநேகா வைபவ் பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்.
ஆனா அப்போவும் பப்ஸ் வரல....என்ன கொடுமை சார் இது!!

# மினி இன்டெர்வல்லின் போது டாய்லட் வந்த மூன்று நண்பர்கள்..

"டேய் தமிழ் படத்துக்கு போலாம்னு சொன்னேன் கேட்டிங்களா?"
என்றான் ஒருவன்,,,,

"ஏன் இதுவும் தமிழ் படம்தானே..." என்று மரண மொக்கை
போட்டான்.....

அடேய் உள்ள தான் மொக்கை தாங்கல டாய்லட் கூட நிம்மதியா போக விட மாற்றங்களே என்று மீண்டும் படம் பார்க்க சென்றேன்......


ஜெட்லி பஞ்ச்:

கோவா - சர்க்கரை இல்லாத பால்"கோவா"!!

இந்த விமர்சனம் எல்லோரையும் சென்று அடைய ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடுமாறு கேட்டு கொள்கிறேன்.....

உங்கள்


ஜெட்லி......
நன்றி: indiaglitz

Monday, January 25, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள் (25.1.10)

*************************************************
டிஸ்கி:

ஒரு வேளை நீங்கள் இதை படித்து முகம் சுளித்தால்,
நான் பொறுப்பல்ல...நான் படித்த காலை நாளிதழ்களில்
வந்த செய்திகள் இவை....விஜய் மேட்டர் தவிர!!
நீல கலர் எழுத்து மட்டும் என் கைவண்ணம்.....

***********************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:


அரை நிர்வாணமாக நடித்த கொல்கத்தா அழகி பரப்பரப்பு பேட்டி:



அந்தரங்கம் என்ற படத்தில் புதிதாக அறிமுகமாகும் கொல்கத்தா
அழகி கமலிகா ஒரு காட்சியில் துணிச்சலுடன் அரை நிர்வாணமாக
நடித்துள்ளார்....

(முழு படத்தை போட்டால் என்னை போன்ற சின்ன பசங்க
கெட்டு விடுவார்கள் என்ற காரணத்தால் எடிட் செய்யப்பட்ட
படம் கிழே.... முழு படத்தில் சொல்ற மாதிரி ஒன்னும் பெரிசா
எதுவும் இல்லை என்பது வேறு விஷயம்!!)




இதை பற்றி நடிகை கூறியது....

"கதைக்கு தேவைனு தான் அரை நிர்வாணமா நடிக்க
ஒத்துகிட்டேன்,படத்தில் 2 வினாடிகள் மட்டுமே இந்த
காட்சி வரும்.இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண்,
அரை நிர்வாணமாக நடித்ததற்கு நான் வெட்கப்படவில்லை.
அதே சமயம்,எத்தனை கோடி கொடுத்தாலும் முழு
நிர்வாணமாக நடிக்க மாட்டேன்" என்று அவர் கூறியது
நெஞ்சை நெகிழ வைத்தது.

"நமது எதிர்ப்பார்ப்பெல்லாம் அரை நிர்வாணமாக துணிச்சலாக
நடித்த கமலிகாவுக்கு இந்த வருடம் ஏதும் வீர் சக்ரா விருது
கிடைக்குமா என்பது தான்"...

ஜெட்லி செய்திகளுக்காக வடபழனி முட்டு சந்திலிருந்து இருந்து உங்கள் கட்டிங் குமார்.......


*******************************************
பொது அறிவு கேள்வி:

சமீபத்தில் மதுரவாயிலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின்
அங்கீகாரத்தை ரத்து செய்வதாக செய்தி வந்தது, உங்களுக்கு
தெரிந்ததே.......


இதான் கேள்வி,

அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்குன நம்ம இளையதளபதி
விஜய் இப்போ டாக்டரா
??

A.ஆம்


B.இல்லை

உங்கள் பதிலை யாருக்கு வேணும்னாலும் அனுப்புங்கள்,
சத்தியமா எந்த பரிசும் தர மாட்டோம்.(சங்கம் கடன்ல
போதுங்க!!)

**********************************************
விளம்பர இடைவேளை:

நெப்போலியன் குடி மட்டை ஆவு மப்பு போட்டி ஆரம்பம்....


நீங்க ரெடியா...நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்,எங்க நெப்போலியன் கலாட்டா குழு உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்கள் நெப்போலியன் குடித்து மட்டையாகி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.....
(குறிப்பு: நெப்போலியன் காலி பாட்டில் அருகில் இருக்க வேண்டும்).


**********************************************

பி(அ)ட்டு செய்திகள் தொடர்கிறது........

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாகிறது:

கோவில் கருவறைக்குள் பெண்களை மயக்கி உல்லாசம்
அனுபவித்த அர்ச்சகர் தேவநாதனின் கதையை மையமாக
வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்.

இது குறித்து இயக்குனரிடம் கேட்டதற்கு

"நான் எடுக்கும் படத்தில் அர்ச்சகர் பாத்திரம் தான் ஹீரோ,
ஆனால் நான் தேவநாதனின் கதையை எடுக்க வில்லை".

இதை பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு
"தேவநாதன் எடுத்த வீடியோ காட்சி அவ்வளவு தெளிவு இல்லை
அதனால இந்த இயக்குனர் எடுக்கும் படமாவது நல்லா தெளிவா
இருக்கானு பார்ப்போம்"...என்று ஏக்க பெருமூச்சு விட்டார்......

ஜெட்லி செய்திகளுக்காக மணலி டாஸ்மாக் பார் டாய்லட் பக்கத்தில் இருந்து அதே ஏக்கத்தோடு குவாட்டர் கோவிந்தன்.

**********************************
சிறப்பு பார்வை :

மனிஷா கொய்ராலா அவர்கள் மாப்பிள்ளை படத்தில்
தனுஷின் மாமியாராக நடிக்கிறாராம் அது குறித்து
சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!!)

மும்பை படவுலகை சுமார் இருபது வருடங்கள் முன்
கலக்கிய மனிஷா அவர்கள் நம் தமிழ் திரையுலகில்
இந்தியன் படத்தில் அளவில்லா திறமை காட்டி
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதினோரு வருடங்கள் முன் நடித்த முதல்வன்
படத்திலேயே மனிஷா அவர்கள் கிழவி போல் இருப்பதாக
சர்ச்சை கிளம்பியது பின் பாபாவில் அது உறுதியானது
என்றால் அது மிகையல்ல.இப்போது அவர் தனுசின்
மாமியராக நடிப்பது எந்த அளவுக்கு செட் ஆகும் என்று
மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.....

மனிஷா கிழவியா இல்ல மாமியாரா என்று பொறுத்திருந்து
பார்ப்போம்!!!.

********************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்

ஜெட்லி....


மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Saturday, January 23, 2010

புத்தக வாசனை - கானல் தெரு

"நட்புக்கும், காதலுக்கும் நடுவுல இருக்கிறது சின்னக் கோடுதான்"


"கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இடையில இருக்கிறது சின்ன இடைவெளி தான்"


இதெல்லாம் தமிழ் சினிமாவிலும், பிரபலங்களின் பேட்டிகளிலும் கேட்கக் கிடைக்கும் புளித்துப்போன வாக்கியங்கள், என நீங்கள் கூறுவது காதில் விழுகிறது. ஆனால், கவிதைக்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட கோட்டில் பயணிக்கும் எழுத்து எப்படி இருக்கும் என அறிய ஆசையா? உங்களுக்காகவே இதோ க.சீ. சிவக்குமார்.




இரண்டாயிரத்தின் இறுதியில் கல்கியில் வெளிவந்த குறுநாவல் கானல் தெரு. பொன்னியின் செல்வனை பத்மவாசனின் படங்களுடன் சேகரிப்பதில் மும்மரமாக இருந்த நான், கானல் தெருவைக்  கவனிக்காமலேயே கடந்து வந்து வந்துவிட்டேன். ஆனாலும் தொடராய் வந்த எதையும், விடாமல் சேர்த்து வைத்தால், அடுத்து வந்த பள்ளியிறுதிக் கோடை விடுமுறையில் கானல் தெருவில் அடியெடுத்து வைத்தேன், இன்று வரை வெளியே வர இயலவில்லை.

கிராமமும் நகரமும் அல்லாத ஓர் ஊரில், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் சிலரின் வாழ்வில் வரும் நட்பும், எதிர் பால் ஈர்ப்பும் அதை சுற்றிச் சுழலும் சம்பவங்களும் தான் கதை. கேட்பதற்கு புதிதாய் ஏதுமில்லாதது போல் தோன்றும் இந்த கதையை இன்றளவும் மறக்க முடியாத படி செய்தது, சிவகுமாரின் கவிதையொத்த நடையும், எழுத்தில் எப்போதும் விரவிக் கிடக்கும் நகைச்சுவைதான்.


உதாரணமாக சில வரிகள்,


"நூலகம், பன்னீராயிரம் புத்தகங்களும், அதற்குத் துணையாக நூலகரும் உறங்கிக்கொண்டிருந்தன"


"ஸ்கூல் மைதானத்தின் விளிம்புகளில் வேப்பங்கன்றுகள் நடப்பட்டன. மந்திரிகள் யாரும் மரம் நடும் வைபவத்தைத் துவக்கி வைக்கவில்லையாதலால் அவை மகிழ்வுடன் வளர்ந்தன"


"வருடம் தவறாமல் இலக்கிய மன்ற நிறைவு விழாவுக்கு மறுதினம் 'ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதை 'ஆண்டிறுதி உடற்றிறப் போட்டி' என தமிழ் நோட்டீஸ் அறிவித்தது. இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்கு பலமான பயிற்சி"


"வெளியூர் ஒற்றையர்களை அடித்து நொறுக்குவதற்குப் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் காலி மனை ஒன்று இருக்கிறது. அந்தத் தொடக்கப் பள்ளியில் காலையில் குழந்தைகள் 'இந்தியர் அனைவரும் சகோதரர்' என உறுதி அளித்தனர்".

கதையின் சுருக்கத்தைச் சொல்லும் நான்கு வரிகள்,


" 'அனிதா-பார்த்திபன் காதல்',

சுவரில், கரியால் பன்னிரண்டு எழுத்துக்கள்,
ஒரு பெண் பள்ளி மாறுகிறாள்,
தமிழ் வலிமையான மொழி தான்"


என்னால் என்றும் மறக்க முடியாததாய் தோன்றும் இந்தப் புத்தகத்தில், மாணவர்களின் நண்பனாய் பழகும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும், காதல் கடிதங்களும் உதட்டோரம் பூக்கும் சிறு சிறு புன்னகைகளுடன், உங்கள் பள்ளிக்கால நினைவுகளை உயிர்ப்பிக்கலாம்.


கானல் தெரு
சந்தியா பதிப்பகம்
எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர்,சென்னை - 83

விலை 50


பின்குறிப்பு:


வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை பூ வாசனையைப் போல், மனம் விரும்பும் பண்டத்தின் ருசி போன்றதொரு உணர்வு தான். உணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்துவது ஏறக்குறைய இயலாத விஷயம், என்றாலும் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.

நன்றி
சங்கர்