
நண்பர்களே வணக்கம், எல்லோரும் சௌக்யம் தானே? சமீபத்தில் என்னை பாதித்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத என்னை தூண்டியது. அது என்னவென்றால், அலுவல் காரணமாக ஒரு முன் இரவு பொழுதில் நான் சைதாபேட்டை சென்றிருந்தேன். அலைச்சல் காரணமா மிகவும் களைப்புற்றிருந்தமையல் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம் என்று முடிவு செய்து ஒரு சின்ன ஆனால் சுகாதாரமான சூப் கடைக்கு சென்று ஒரு காளான் சூப் வாங்கி உட்கார்ந்து அருந்திக்கொண்டிருந்தேன். விலை பத்து ருபாய், பரவாயில்லை நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதில் அதிகபட்சம் அரை காளானுக்கு மேல் இருந்திருக்காது அதுவும் எவ்வளவு பொடியாக நறுக்கி போட்டிருந்தார்கள். சரி அதை விடுங்கள் இன்று காலம் அப்படி ஆகிவிட்டது. விஷயத்துக்கு வருவோம். எனக்கு எதிர் இருக்கையில் இரு சிறு பிள்ளைகள் அமர்திருந்தனர் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் 3 வயது மதிக்கத்தக்க அவனது தங்கையும் அமர்திருந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் மும்முரமாக ஏன் தலைக்கு மேல் தங்கள் பார்வையை செலுத்திக்கொண்டிருந்தனர் என்னடா அதுவென்று பார்த்தல் வேறு ஒன்றுமில்லை நம் கலைஞர் வழங்கிய இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி தான். நான் நல்ல ஆறு அடிக்கு மேல் வளர்ந்தவன் ஆதலால் அந்த சிறுமிக்கு நான் அமர்திருந்தாலும் ஒன்றும் தெரியவில்லை பாவம் தவியாய் தவித்து போனால். ஆனால் பெருந்தன்மையான அந்த பாலகன் தங்கைக்கு இருக்கையை மாற்றி கொடுத்தான். ஆஹா நாம் அனைவரும் குழைந்தளாகவே இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. பிறகு அந்த குழந்தைகள் அந்த கடைக்காரரின் குழந்தைகள் என்று தெரிய வந்தது.
அவர் தன் மகளை "வாமா செல்லம் சும்மா பைக்ல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்"னு கூப்பிடுகிறார் ஆனால் அந்த சிறுமியோ வைத்த கண் எடுக்காமல் இந்த பாழாய் போன தொலைக்காட்சியையே பார்க்கிறாள், அதுவும் எதோ குழந்தைகள் நிகழ்ச்சி என்று பார்த்தால் இசையருவி சானலில் தனுஷ் அவர்கள் தமன்னாவை அப்பம்மா வெளையாட்டு விளையாடுவோமா என்று கேட்கிறார்???? என்ன கொடும சார் இது?? குழந்தைகள் இயல்பாகவே பெற்றோருடன் வாகனத்தில் வெளியில் செல்ல பிரியப்படுவர் என்பதை பலமுறை முன்பு பார்த்திருக்கிறேன், சில காலங்களுக்கு முன்பெல்லாம் காலையில் அப்பாக்கள் வேளைக்கு செல்லும்முன் கண்டிப்பாக தங்கள் குழந்தையை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பிறகு கொஞ்சி விட்டு தான் செல்வர் ஆனால் இன்று?? இது ஒரு கொடுமை என்றால் இந்த அம்மாக்கள் நெடுந்தொடர் பார்த்துக்கொண்டு பன்னும் சலம்பல் இருக்கே அப்பப்பா பாவம் கணவர் வேலையில் இருந்து களைப்பாக வருவார் சரி மனைவியுடன் ஆசையாக நாலு வார்த்தை பேசிவிட்டு அவள் கைய்யால் ஏதாவது சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வருவர். ஆனால் நடப்பது என்ன?? அரசியும் அபியும் நடுவீட்டில் தாண்டவமாடும்போது இவர்களுக்கு எங்கு கணவர் வருவதோ குழந்தை அழுவதோ தெரிய போகிறது??
இப்பொழுது சில வருடங்களாக ஒரு புது தொல்லை வேறு, "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்கலேயான சூப்பர் ஹிட் திரைப்படம்" என்ன வென்று பார்த்தல் ஒரு வாரம் கூட திரையில் ஓடாத நமத்துப்போன ஏதாவது மொக்கை படம். சுதந்திர தினத்தன்று நமீதா பேட்டி வேறு, பாவம் சுதந்திரத்திற்காக ரொம்பதான் பாடு பட்டார்ல!!!!!!!! இந்த பாடலாசிரியர்கள் தொல்லை அதுக்கு மேல் இருக்கு, என்ன கருத்துள்ள பாட்டுக்கள், "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா........." "லோக் லோக் லோக்கலு நான் லோக்கலு............." அய்யா நீங்க லோக்கலுனு எல்லாருக்குமே தெரியுமே பெறவு ஏன் தம்பட்டம் அடிக்கறீங்க?? நமக்கு எது வருதோ அதோட நிறுத்திக்க வேண்டியது தானே??
அடுத்தது இந்த இயக்குனர்கள் தொல்லையை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும், கதைக்கு தேவை பட்டதால் தான் அந்த முத்த காட்சியை வைத்தேன், அதனால் தான் இந்த நிர்வாண காட்சியை வைத்தேன், மக்கள் என்ன எதிர்பார்கிரார்களோ அதை தான் நாங்கள் குடுக்கிறோம் என்று ஒரு இயக்குனர் சொன்னார். இதை பற்றி திரு.சிவகுமார் அவர்கள் ஒரு பேட்டியில் "வருகிறவர்கள் எதிர்பார்பதால் தான் இந்த தொழில் செய்கிறேன்" என்று ஒரு விலைமாது சொன்னால் அதே போன்று நீங்கள் சொல்லிக்கொண்டு இப்படி படம் எடுக்கிறீர்களே பிறகு அவர்களுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்??. மண்டையில் அடித்தார் போல் கேட்டாரே ஒரு கேள்வி?? உறைக்குமா இவர்களுக்கு??

நடிகைகளை பற்றி நாம் எதுவும் எழுதாமல் போனால் இந்த பதிவு முழுமை பெறாமல் போகும், இப்பொழுது அவர்களை பற்றி பார்போம். மேலே உள்ள படங்கள் எப்படி?? சும்மா ஆபாசதுல அதிருதுல இவர்களை கேட்டால் நாங்கள் ரொம்ப "Expose" பண்ணாம கிளாமரா நடிக்கிறதுல என்ன தப்புன்னு அப்பாவியா கேக்குதுங்க புள்ளைங்க. அதுல நீங்க இன்னும் என்ன எக்ஸ்போஸ் பண்ணலைனு நெனைக்கறீங்க??? ஏன் நீங்க இப்படி நடிச்சா தான் படம் பார்க்க வருவேன்னு எந்த மடையனாவது சொன்னானா??
அய்யா நல்லவங்களே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வியாபாரம் தான் ஆனா நமக்குன்னு ஒரு வாழ்கை முறை கலாசாரம் பண்பாடுன்னு இருக்குது (குத்துயிரும் குலையுயிருமா) அதை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விடாதீர். தரமான படங்களை மக்கள் என்றும் இருகரம் கூப்பி வரவேற்பர், இதற்க்கு சமீபத்தில் கூட எவ்வளவோ எடுத்துக்காட்டு இருக்க்கிறது. இப்படிக்கு நல்ல படங்களை எதிர்பார்க்கும் ஒரு ரசிகன். நன்றி.







