Saturday, May 7, 2011

ஒரு வெயிற்பொழுதில்.....

ஒரு வெயிற்பொழுதில்.....



சரியா போன வருஷம் மே மாசத்தில் எழுதின பதிவு இது....இப்போ சும்மா ஒரு டெஸ்ட்க்கு மீள் பதிவா போடுறேன்......இப்போ வேலை செய்யுற இடத்திலே இன்டர்நெட் வந்தாச்சு... அதனால் அப்போ அப்போ பதிவு போட வாய்ப்பு இருக்கு....பார்ப்போம்... பேஸ்புக்ல எப்போதும் இருப்பேன்...!!

************************




நம்மில் பலர் மெரீனா பீச்சுக்கு ஆதவன் தன் சூட்டை தணித்த பின் காற்று வாங்கவோ, காதலியை சந்திக்கவோ, குழந்தைகளுடன் விளையாடவோ,
நடைபயிற்சி செய்யவோ, அங்கு கூட்டமாக வரும் பெண்களை சைட் அடிக்கவோ,நண்பர்களை சந்திக்கவோ,சுண்டல் வாங்கி தின்னவோ, அல்லது ஏதாவது ஒரு வோவு க்கு சென்று இருப்போம். ஆனால் மதியம் நேரம் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்து இருக்கிங்களா???






நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!.


பைக்கில் லைட் ஹவுஸ் அடைந்தவுடன் பச்சை பசேல் என்று
இருந்தது.சில பட்டாம்பூச்சிகள் என் மீது மோதியது.ஆனால் காந்தி
சிலை தாண்டிய பின் மரங்கள் அதிகமாக மரங்கள் இல்லை.
புல் கூட காய்ந்து இருந்தது, புல்லுக்கு தண்ணி அடிக்கும்
தானியங்கி கருவி நடைபாதையிலும் தண்ணி அடித்து வருவோர்
போவோர் மீதெல்லாம் தண்ணி அடித்தது.தண்ணி கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க ஆன இங்க தண்ணி வீணா போகுது!!.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் சில வேன்களை அதன்
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் துடைத்து கொண்டு இருந்தார்கள்.
பொது இடத்தில் வண்டி கழுவ கூடாது என்ற சட்டம் என்ன ஆனது
என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்???.தள்ளு வண்டி கடைக்கு
சிறிது காலம் தடை போட்டு இருந்தார்கள் ஆனால் மீண்டும் கடைகள் முன்பை விட அதிகமாவே வந்து விட்டது.


பீச்சில் எந்நேரமும் அலைகளுக்கு மட்டும் தான் ஓய்வில்லை
என்று நினைத்து இருந்தேன், ஆனால் அங்கு காதலர்கள் செய்யும்
சில்மிஷங்களுக்கும் ஓய்வில்லை என்று இன்று தான் புரிந்து
கொண்டேன். சில ஜோடி குடையுடன் வெயிலை சமாளித்து கொண்டு
தங்கள் வேலையை தொடர்ந்தனர், சிலர் தங்கள் துப்பட்டாவை
உபயோகித்து தங்களை மறைத்து கொண்டனர்.


பீச்சில் முக்கிய பிரச்சனையே மொபெட் ஒட்டி வரும் பெண்கள்
தான், கண்டிப்பாக அவர்கள் பின்னால் ஒரு ஆண்மகன் உட்கார்ந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வண்டி ஒட்டி கொண்டே பண்ணும் சில்மிஷத்தை பார்த்தால் நைட் தூக்கம் வராது. எப்பா என்னம்மா வண்டி ஒட்டுதுங்க(உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல).

பீச்சில் நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே நீச்சல்
குளம், ஆனால் அதை ஒழுங்காக கிளீன் செய்வதே இல்லை.
நான் அந்த நீச்சல் குளத்துக்கு போய் ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது,
காரணம் நான் அங்கு கடைசியாக போன போது ஒருத்தன் சொன்ன
செய்தி தான் அது "தண்ணீரில் எலி இருக்குது" என்றான்.








என்னை போல் நீங்களும் என்றைக்காவது தனியாக மதிய நேர பீச்சுக்கு செல்லலாம், அதனால் சில குறிப்புகள்:

# உங்க வண்டியை உங்கள் கண் முன் நிறுத்தி வைத்தால் நல்லது.

# நீங்க பாட்டுக்கு கடலை பார்த்து போகும் போது குடை அழகிகள் மத்தியில் சிக்காமல் இருக்க வேண்டும்.

# கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.


மேல உள்ள தகவல்கள் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
கமெண்ட் பண்ணாலும் சந்தோசம்...

உங்கள்
ஜெட்லி சரண்.

Saturday, April 23, 2011

கோ - செகண்ட் ஷோ விமர்சனம்.

கோ - செகண்ட் ஷோ விமர்சனம்.


ரொம்ப நாள் ஆச்சு எங்க ஏரியா தியாகராஜா தியேட்டருக்கு படத்துக்கு போய்...போன பிறகு தான் யோசிச்சேன் ஏன் அந்த தியேட்டருக்கு போனம்னு...தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிரவன்ல இருந்து எல்லாரும் புல் மப்பு....

சரி நாம கோ படத்தை பத்தி பார்ப்போம்...கண்டிப்பா இந்த படம் ஜீவாக்கு
நல்ல பெயரை வாங்கி தரும் . அப்படியே ஆள் மாறி இருக்கிறார். அப்புறம் அஜ்மல்
நல்லாவே பண்ணி இருக்கார்...அப்புறம் பியா நல்லாவே வெளிப்படுத்தி
இருக்காங்க, நடிப்பை கூட தான். பிரகாஷ் ராஜ் ஏதோ கெஸ்ட் ரோல் மாதிரி
வந்து போறார். கார்த்திகா சாரியில் நல்லா இருக்காங்க மத்தபடி பெருசா
சொல்றதுக்கு ஒண்ணும் புதுசா இல்ல.

பாட்டு எல்லாமே ஏற்கனவே ஹிட்...ஆனா வெண்பனியே பாட்டு வந்த
இடம் தான் நெருடல். அமளி துமளி லோகசன் எல்லாம் சூப்பர்.
படம் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்ஆ போச்சு அடுத்தது என்ன நடக்கும்
என்ன நடக்கும்னு. சில திருப்பங்கள் கணிக்க முடிஞ்சது சில திருப்பங்கள்
உண்மையிலே நல்லா இருந்தது.

கே.வி.ஆனந்த் நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கார்.
சுபா, ரெண்டு பேருமே படத்திலும் நடிச்சு இருக்காங்க...சில பல மாதங்களுக்கு
முன் அடையார் டாப் சீல பரோட்டா சாப்பிடும் போது இவங்க மூணு பேருமே டீ சாப்பிட வந்தாங்க....!!

ஆகமொத்தம் இந்த லீவ்க்கு ஒரு நல்ல படம் வந்திருக்கு தாரளமா ரசிச்சு சிரிச்சுட்டு வரலாம்....!!ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன்...


கோ - வெற்றி அரசன் !!

தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தில் ஒரு காட்சியில் பியா அவர்கள் ஜீவாவிடம் எனக்கு ஒரு நைட்க்கு என்ன ரேட் தருவ என்ற பொது அறிவு கேள்விக்கு...படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்...
50 ..50 .. 50 னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க....

# வெண்பனியே பாட்டு இன்ட்ரஸ்டிங்ஆ சீன் போய்ட்டு இருக்கும் போது வரும் ...அதனால் தியேட்டரில் பெரிய சலசலப்பு ஏற்ப்பட்டது ...எல்லாருமே சலிச்சுக்கிட்டாங்க ....

சரி டைம் அதிகமா இல்ல...வானம் அப்போ பார்ப்போம்.......

ஜெட்லி...(சரவணா...)

Saturday, April 2, 2011

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!


நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!




நஞ்சுபுரம் நான் ஏன் போனேன் அப்படின்னு பார்த்தீங்கனா படத்துக்கு போய் ரொம்ப நாள் ஆச்சே ஏதாவது படத்துக்கு போவோம்னு போனோம். உண்மையிலே செம படம். இது வரைக்கும் தமிழ் சினிமால இல்ல இந்தியா சினிமால இல்ல இல்ல உலக சினிமால கூட இப்படி ஒரு படம் வந்தது இல்ல..அப்படி என்ன படத்துல ஸ்பெஷல்னு கேட்குறீங்களா??
படத்தோட தயாரிப்பாளர் ப்ரீத்த.எஸ்(ஹீரோவின் மனைவி) அவங்களுக்கே OUR SINCERE
THANKS னு படம் ஆரம்பிக்கர முன்னாடி சொல்லிகீறாங்க...ரெண்டு மணி நேர
படத்துக்குள்ள தேங்க்ஸ் சொல்றதே பத்து நிமிஷம் ஓடுதுனா பாருங்க...அப்படியே
என் கூட பால்கனியில் படம் பார்த்த பதிமூணு பேருக்கும் தேங்க்ஸ் சொல்லிருந்தா
சந்தோசமா இருந்து இருக்கும்...!!


என்ன கதை...


நஞ்சுபுரம்னு ஒரு ஊர்.... அங்க பண்ணையார் பையனா ராகவ் படத்தின் இசை அமைப்பாளரும் இவரே... மோனிக்கா தாழ்ந்த ஜாதி பெண்... அப்புறம் என்ன லவ்.... மேட்டர்னு படம் போகுது...மோனிக்கா குளிக்கிறத ராகவ் எட்டி பார்த்துட்டு சாரி ரசிச்சு பார்த்துட்டு இருக்கும் போது ஒரு நல்ல பாம்பு மோனிகாவை மட்டும் எதுக்கோ சேஸ் பண்ணுது அங்க வந்து ராகவ் பாம்பை மிதிச்சி ஹீரோயிசம் பண்றனு பாம்பை தப்பிக்க விட்டுறார்.... அடிச்ச பாம்பு பழி வாங்க வரும்னு நாப்பது நாள் ராகவை ஒரு பரண் போட்டு ஏத்தி விட்டுறாங்க....அப்புறம் என்னாச்சுனு நீங்க எங்கே வேணும்னாலும் பார்த்துக்குங்க... பார்ப்பீங்க..??


இந்த படத்தோட சில காட்சிகள் டி.வி.யில் பார்த்தப்ப இந்த படத்துக்கு போகனுமானு
யோசிச்சேன்....ஒளிப்பதிவு எல்லாம் ஒரு மாதிரி இருந்தது...ஏதோ தனியா ஒட்டி வச்ச
மாதிரி...ஆர்.ஆர்ல ராகவ் கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தாலும் காட்சிக்கும்
இடத்துக்கும் ஒத்து வரல...ஒரு பாட்டு நல்லா இருந்தது அவர் அந்த பரண் மேல ஏறும்
போது வரும் பாட்டு...



படத்தோட சில வசனங்கள் ரொம்ப கேவலமா இருந்தது...சில காட்சிகளும் கூட...நாம
தின்க் பண்றது ஸ்க்ரீன்ல வரும்...ராகவ் நடிகரா நல்லா பண்ணி இருக்கார்..கடைசியில்
பாம்பை பார்த்து பயப்படும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.அப்புறம் அந்த பாம்பு கடி
வைத்தியர் சொல்லும் ராஜா கதை எல்லாம் கொஞ்சம் இண்டரஸ்ட்ஆ இருந்தது...
படம் பார்க்கும் போது நிறைய கேள்வி வந்துக்கிட்டே இருக்கு...அதுக்கெல்லாம் இடம்
கொடுக்காம இன்னும் சுவாரசியமா பண்ணி இருந்தா நல்லா இருந்து இருக்கலாம்...



படத்துல பாம்பை காட்டறேன்னு சொல்லி என்னை மாதிரி சின்ன பசங்களை ஏமாத்தி
புட்டாங்க மக்கா... நானும் பரிசல்ல ஏறும் போது அப்ப பாம்பு இப்ப பாம்பு கூட்டம் வரும்னு பார்த்தா ஒரு புண்ணாக்கும் வரல...போஸ்டர்ல பண்ண கிராபிக்ஸ் வேலையே படத்திலும் பண்ணிருந்தா தான் என்ன......


நஞ்சுபுரம் - நஞ்சபுரம்.



தியேட்டர் நொறுக்ஸ் :

# கணபதிராம் தியேட்டர்ல தான் இந்த படத்தை பார்த்தேன்....பால்கனியில் ஒரு பதிமூணு பேர் இருந்து இருப்போம் ...கிழே ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...

# படத்தில ஒரு மியூசிக் அப்போ அப்போ பாம்பு போது வரும் ஏதோ சமோசா...சமோசானு பயங்கரமா...அந்த மியூசிக் இன்டர்வல் விடும் போது போட்டப்ப தான் லைட்டா கண்ணு கட்டனது முழிப்பு தட்டிச்சு !!

# கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தா FAMILY AUDIENCE கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருந்தாங்க...

பாம்பு கடிக்க வரும்னு சொல்ற நாப்பது நாள் வேற ஊருக்கு போக வேண்டியது தானே..??

ஏன் அவங்க வீட்டாண்ட பரண் கட்ட வேண்டியது தானே எதுக்கு காட்டு பக்கத்தில் கட்டுறாங்க..??னு

சரமாரி கேள்வி...


# படம் முடிச்சுட்டு வரும் போது ..." ஒரு வாரம் சீரியல்க்கு எடுத்ததை மொத்தமா படமா ரீலீஸ் பண்ணிட்டாங்க" னு பொலம்பிட்டு போனார்....



மேலும் பல பேருக்கு இந்த விழிப்புணர்வு சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கை அளிக்குமாறு

தாறு மாறாக கேட்டு கொள்கிறேன்....


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)


Monday, March 14, 2011

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!


(முன்குறிப்பு :இந்த கட்டுரையில் இருக்கும் படங்களை பார்த்து உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் சத்தியமா நான் பொறுப்பல்ல....!!)



வணக்கம்ங்க...ரொம்ப நாள் ஆச்சு ப்ளாக் பக்கம் வந்து...படம் பார்க்கறது கொஞ்சம்
குறைஞ்சு போச்சு... முன்னாடியெல்லாம் FDFS பாக்கும் போது படம் மொக்கையா
இருந்தா பிரச்சனை இல்லை, ஆனா இப்போ மொக்கை படம்னு தெரிஞ்ச பிறகு
எப்படி போறதுனு போறது இல்லைங்க."டேய் நீ மொக்கை படம்னு தெரிஞ்சா
போக மாட்டியா??" அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது...ப்ரீயா விடுங்க..
அது அப்போ இது இப்போ...



வாடா படத்துக்கு அப்புறம் எந்த படத்துக்கும் ப்ளாக்ல விளம்பரம் பண்ணல...
அந்த அதிஷ்டம் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் நடிச்ச லத்திகா படத்துக்கு
கிடைச்சுருக்கு. இந்த படம் கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்
காரணம் அபிராமி ராமநாதன் ரீலீஸ் பண்றாரே...ஹீ ஹீ...

படத்துல நம்ம பவர் ஸ்டார் போலீஸ்காரரா வர்றார். சண்டை கட்சிகள்
எல்லாம் பயங்கரமா இருக்க வாய்ப்பிருக்கு. ச்சே என்ன கொடுமை பார்த்தீங்களா
படத்தோட ட்ரைலர் எங்கையுமே கிடைக்கில..கிடைச்சு இருந்தா இன்னும்
நல்லா இருந்து இருக்கும்....


நமக்காக கண்ணீர் விடுவது ரகுமான் தான், பாவம் படம் பார்க்க வரவங்க
கதி என்னனு நினைச்சு கண் கலங்குரரா இல்லை நம்ம பவர் ஸ்டார்
performance பாத்து ஆனந்த கண்ணீர் விடுரரானு படம் பார்த்தா தான்
தெரியும்...அதுக்காகவே நாம படத்துக்கு போறோம்.


இந்த படத்துக்கு வர்ற 18 அலை அலையா திரண்டு வாருங்கள்...மறக்காம
வீட்ல சொல்லிட்டு வந்துருங்க.பாக்கெட்ல வீட்டு அட்ரெஸ் எல்லாம் வச்சுக்குங்க...ஏன்னா பவர் ஸ்டார் performance பாத்துட்டு மயங்கிட்டீங்கனா உங்களை வீட்ல கொண்டு போய் விடனும்ல அதுக்கு தான்.


படம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோனு பல நாட்டு ரசிகர்கள் தலையை
பிக்க வச்சதே லத்திகா படத்தோட வெற்றியை ஊறுதி செய்ஞ்சுஇருக்கு.
படத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய முகநூலை அடிக்கடி செக்
பண்ணவும்....!!


மாஸ் ஸ்டில்....




நம்ம ஊர்ல கிங் காங் படம் வரலேனு இருக்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்குமா
லத்திகா??




கரடிக்கு இணையாக....




செமையா இருக்கு ஹலோ நான் சொல்றது பவர் ஸ்டாரோட face expression பத்தி.







விரைவில் அடுத்து ரீலீசாகும் ஆனந்ததொல்லை படத்துக்கு காத்திருக்கும்
கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவன்....


ஜெட்லி...(சரவணா...)










Tuesday, January 18, 2011

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

போன வருஷம் இந்நேரம் பொங்கல் பட ரீலீஸ்ல எந்த படம் டாப்னு
பதிவு போட்டிருந்தேன். ஆனா இந்த வருஷ பொங்கலுக்கு ஒரு படம்
தான் பார்த்தேன் ஆடுகளம் தான் அது. சிறுத்தை தான் மிஸ் ஆயிருச்சு.
ஆடுகளம் படம் சூப்பர் தான். என்ன ரெண்டாவது பாதி தான் கொஞ்சம்
போர் ஆச்சு... துரோகம், விசுவாசம்னு நல்லா இருந்தது. அந்த போலீஸ்
கேரக்டர் தான் வில்லன்னு நினைச்சேன் ஆனா இன்டெர்வல்க்கு அப்புறம்
மாறிடுச்சு. இந்த படத்திலும் கிஷோர் கேரக்டர் எனக்கு பிடிச்சு இருந்தது.
கிஷோர் குரலே நல்லா தானே இருக்கும் ஏன் சமுத்ரகனி குரல் கொடுத்தார்னு தெரியல....!!




பொங்கல்க்கு முன்னாடி ஒரு நாலு நாள் ஊருக்க போயிட்டு வந்தேன்...
உடன்குடி பக்கத்தில் இருக்கிற தண்டுபத்து தான் சொந்த ஊரு. அப்புறம்
அப்படியே உவரி தாண்டி சாமிதோப்பு அப்புறம் கன்னியாகுமரினு ஒரு
ரவுண்ட் அடிச்சுட்டு வந்தேன்...



மாட்டு பொங்கலுக்கு queensland போனோம். மொத்தம் இருபது பேர்க்கு
மேல இருந்தோம். செம கூட்டம். 350 கொடுத்து மூணு ரைட் தான் போனோம்.
ஒரு ஒரு ரைட்க்கும் ரெண்டு மணி நேரம் மேல காக்க வேண்டியது இருந்தது.பஞ்சு மிட்டாய் வாங்க கூட அரை மணி நேரம் ஆச்சுனா பாருங்க...
எங்க வீட்டம்மா centrox அப்படின்னு ஒரு ரைட் சூப்பர்ஆ இருக்கும்னு
சொன்னாங்க. பெரிய லைன்ல நின்னு அதை பார்த்தாலே தலை சுத்திச்சு..
இருந்தாலும் ஒரு கெத்தோட போனேன்... போய்ட்டு வந்த பிறகு ஒரு அரை
மணி நேரம் செம தலை சுத்தல்...




ஒகேனக்கல் ப்ளான் தீடிர்னு அன்னைக்கு தான் பிக்ஸ் பண்ணோம்...
காலையில் சாரி நைட் மூணு மணிக்கு எழுந்துரிச்சு நாலு மணிக்கு
கிளம்பினோம். நாங்க, அக்கா ,அண்ணா , மச்சான் , குட்டீஸ் மொத்தம்
மூணு கார்ல போனோம்.நான் என் காரை கிருஷ்ணகிரி வரைக்கும்
ஓட்டினேன் அப்புறம் எங்க அண்ணன் ஒகேனக்கல் வரைக்கும் ஓட்டினார்.
பத்து மணிக்கு சேர்ந்தோம்.


அங்கே போன பிறகு பரிசல்க்கு பேசி ரவுண்ட் அடித்தோம்..ஒரு இடத்தில்
குளிக்க நிறுத்தினார்கள். மணல் தீவு என்ற இடம் இப்போது தண்ணியில்
இருப்பதாக பரிசல்காரர் தெரிவித்தார். இந்த இடம் நான் ஒண்டிக்கட்டையா
இருக்கும் போது தெரியாம போச்சேனு பீல் பண்ணேன்...அப்புறம் காசு
கொடுத்து அடி வாங்கினோம் அட அதாங்க மசாஜ்னு சொல்வாங்களே
அது தான். என்னா அடி ஒரு ஒரு அடியும் இடி மாதிரி ல இருந்தது...
வீட்ல பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு அந்த கோவத்தை எங்க
மேல காட்டிடாரோனு பீல் பண்ணேன்.அப்புறம் அங்கே பரிசல்லயே கடைகள் இருக்கு...எல்லாமே அங்கையே கிடைக்கும் கொஞ்சம் விலை அதிகமா...



3.30 க்கு சென்னைக்கு கிளம்ப தயாரானோம். நாங்க ஒகேனக்கல்ல சாப்பிடல..
நேரா 6.30 ஆம்பூர் வந்து ஸ்டார் பிரியாணியில் சாப்பிட்டோம்...மசாலாலாம்
அரைச்சு போட்டிருந்தாங்க...நல்லாவே இருந்தது. குடும்பத்தோட சூப்பர்
ட்ரிப் போயிட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்....



ஜெட்லி... (சரவணா...)