
தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமா
பைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனா
நான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்
ஆனா அதுக்குள்ள ராஜலீலை படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.
பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை.
சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்ச
படத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டேன்.
சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம் சுத்திச்சு...சீ சீ..மப்புல்ல இல்லங்க,சாதாரணமாவே தான்!முதல் சீனே விவேக் இன்ட்ரோ எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு,அதாவது படம் போடுறாங்களா இல்ல ஆதித்யா டி.வி. கட்டுராங்கலன்னு....படத்தில் விவேக்வோட அக்கபோர்
செம பிளேடு!!என்ன கதையா?? இருபது வருஷம் முன்னாடி உள்ள கதை...பயங்கரமான கதை...!!
இளைய,புரட்சி தளபதினு ரெண்டு பேருமே பன்ச் குறைச்சி
சும்மா இருக்கும் போது நம்ம சின்ன தளபதி மட்டும்
அறிமுக காட்சியில் இருந்து பஞ்ச் பஞ்சா உட்டு உடம்பை
பஞ்சர் ஆக்குகிறார்.பஞ்சர்னு சொன்ன உடனே இன்னொரு
விஷயம் நினைவுக்கு வருது......
நம்ம பரத் ஒரு பைட் சீன்ல நின்னுக்கிட்டு இருக்கிற பைக்கின்
டயரை சும்மா ஒரு கையில் இழுத்து எடுத்து வில்லன் மேல வீசுவாரு பாருங்க...சான்ஸ்ஏ இல்லை.எங்க வீட்டாண்ட உள்ள
பஞ்சர் கடையில் அவசரத்துக்கு வண்டியை விட்ட பஞ்சர் பார்க்க
அரை மணி நேரம் ஆகுது.அங்க மட்டும் நம்ம சின்ன தளபதி
இருந்தார்னு வைங்க அஞ்சு நிமிஷத்தில் பஞ்சர் பார்த்து
வண்டியை கொடுத்துடுவாங்க...சும்மாவா திருப்புழி,
ஸ்பேனர் இல்லாம வண்டி டயரை அழகா கழட்டுறார்.
ஒரே இழுப்பில் எந்த வித உபகரணமும் இல்லாமல்
டயரை கழட்டிய சின்ன தளபதி வாழ்க.....!!!
அடுத்த மொக்கையாக ஆந்திராகாரர் வேடத்தில் பாஸ்கர்.இவர் ஹோட்டல்லில் போடும் மொக்கைக்கு அளவே இல்லை.அப்புறம் பாட்டெல்லாம் செம....ஒரு ஒரு பாட்டுக்கும் தியேட்டர்ல இருக்கிற நாப்பது பேர்ல இருபது பேர் வெளியே போய்டுறாங்க....படத்தின் ஒரே ஆறுதல் சானாகான் மட்டுமே...!!சானாகான் இன்னும் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!
பிரபு வருகிறார் ஊறுமுகிறார் அப்புறம் என்ன ஆனார்னு
எனக்கு தெரியல....காரணம் படம் முடிய அரை மணி நேரம்
முன்னாடியே வெளியே வந்துட்டேன்!!வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன
நம்பவா போறீங்க....
தியேட்டர் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் இந்த வாக்கியத்தை
வைக்கணும்...மறந்துட்டாங்க போல....
WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)
தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா
ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு
ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....
கவுண்டர் கிட்ட இந்த படத்தை பத்தி கேட்டதுக்கு:
"அடங் கொன்னிய,இந்த காவியத்தை காண ரெண்டு கண்ணு
பத்தாது...அதனால மக்களே, இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர்
டி.வி வெள்ளி பரிசில் இந்த படத்தை போடுவாங்க....உங்களுக்கு
உயிர் மேல ஆசை இருந்தா...இந்த படம் போடும் போது
கரண்ட் இல்லாத ஊருக்கு ஓடிடுங்க.என்னா டகால்டி காட்றானுங்க"
ஜெட்லி பஞ்ச்:
தம்பிக்கு இந்த ஊரு : வெளியே சொல்லிடாத....!
பல பேர் இதை படித்து விழிப்புணர்வு பெற ஒட்டு போடுங்கள்...
இந்த காவியத்தை பற்றி விவாதிக்க பின்னூட்டத்தில் சந்திப்போம்.
ஜெட்லி....













