Wednesday, October 7, 2009

வேட்டைக்காரன்vsயோகிvsபேராண்மை பாடல்கள் - ஒரு பார்வை.

வேட்டைக்காரன்vsயோகிvsபேராண்மை பாடல்கள் - ஒரு பார்வை.

வேட்டைக்காரன் - விஜய் அன்டனி


(நன்றி
கூகிள் ஆண்டவர்.(யார் செய்த கைவண்ணமோ))


வில்லு படத்தின் பாடல்கள் புஸ்ஸாகி போனதால், இந்த
முறை விஜய் அவர்கள் விஜய் ஆண்டனியிடம் கூட்டணி
வைத்துள்ளார்.பாடல்கள் அனைத்தும் சூப்பர்,என்னது
நம்ப மாட்டிங்களா நான் சொல்லல்ல சூரியன் எப்.எம்இல்
சொன்னாங்க.என் காதில் விஜய் அறிமுக பாடல் இப்படிதான்
விழுந்தது......

நான் நடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
என் படம் பார்த்துட்டு வீடு போய் சேரமாட்ட......

இந்த பாட்டு வரில எவ்ளோ உண்மை பாருங்க.... நாலு மாசம்
ஒருக்கா அவர் படம் வந்து நம்மளை மீளா துயரில் ஆழ்த்தி
விடுகிறது.

நமக்கு இசை பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது, ஆனா
நல்ல பாடல்களை கேட்க பிடிக்கும்.என்னை பொருத்த வரை
வேட்டைக்காரன் பாடல்கள் ஏதோ பதினைந்து வருடங்கள்
முன்பு வந்த தேவா பாட்டை கேட்பது போல் இருக்கிறது.

அதுவும் அந்த புலி வருது பாட்டு ஏதோ கோயில்களில்
பாடும் பாட்டு போல் இருக்கிறது. தங்க தாமரை பாட்டு
ஓகே ரகம், கரிகாலன் பாட்டு ரசிக்கும் ரகம், என் உச்சி
மண்டை பாட்டு கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களை
ஆடவைக்கும்(இதே பீட்டை வைத்து அ ஆ இ ஈ என்ற
படத்தில் மேனாமினுக்கி என்ற பாடல் இருக்கும்).

***********************************************************
யோகி - யுவன் ஷங்கர் ராஜா.

ப்ளாசி பாடி இருக்கும் வெடிக்காத எரிமலை யோகி பாடல்
நிச்சயமாக யுவன் ரசிகர்களுக்கு செம விருந்து.பல பேர் தங்கள் கைபேசியில் இதை ரிங்டோன்ஆக மாற்றும் வாய்ப்பு அதிகம்.

யுவன் பாடியிருக்கும் யாரோடு யாரு பாட்டு சொல்லவே வேணாம்
சூப்பர்ஒ சூப்பர்......

உஸ்தாத் சுல்தானின் வாய்ஸ் அருமையாக உள்ளது, யாரோடு
யார் மற்றும் யோகி தீம் இரண்டிலும் இவரின் வாய் வண்ணமே...

சீர்மேவும் கூவத்திலே என்று தொடங்கும் பாடல் ஒரு வித்தியாசமான பாடல் என்றே சொல்ல வேண்டும், சென்னை
தமிழ் பாஸையில் பிச்சு உதறி இருக்காங்க.
"போலீஸ் பிட்ச்சி போலீஸ் பிட்ச்சி நொங்கு நொங்கு......"

*******************************************

பேராண்மை - வித்யாசாகர்.

இயக்குனர் ஜனநாதன் அவர்களின் பேட்டி கடந்த வாரம்
ஆ.வி.யில் வந்தது அவர் டீ இலைகளின் வரலாறு பற்றி
கூறியது மிகவும் சுவாரசியம் ஆக இருந்தது. அவர் கூறிய
முருகவேல் எழுதிய "எரியும் பனிக்காடு" என்ற புத்தகத்தை
சில கடைகளில் தேடி பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை.
ஏற்கனவே அவர் ஆறு மாதத்துக்கு முன் கூறிய சுற்றுசுழல்
தகவல் கூட மிக அருமை. உண்மையிலே ஜனநாதன் சார்
சரக்கு உள்ளவர் தான்.

அவரே ஈ படத்தின் போது தனக்கு இசை அவ்வளவாக தெரியாது
என்றார்.ஜனநாதன் கதையில் மட்டுமே அக்கறை காட்டும்
இயக்குனர், அதை கொஞ்சம் இசையில் காட்டினால் படம்
சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு அமைந்திருக்கும்.

பேராண்மை படத்திலும் பாடல்கள் சொல்லி கொள்ளும் படி
இல்லை என்பது வருத்தமான விஷயம்.காட்டு புலி அடித்து
என்ற பாடல் சுமார் ரகம் அதில் கே.கே குரல் நச், தூப்பாக்கி
பெண்ணே என்ற பாடல் சுமார் தான் வேற எதுவும் சொல்ற
மாதிரி இல்ல.இந்த படத்தை நான் தீபாவளிக்கு மிகவும்
எதிர்பார்க்கிறேன். படத்தோடு பாடல்களை கேக்கும் மற்றும் பார்க்கும் போது ஒரு வேளை நன்றாக இருக்கலாம்.

யாருப்பா அது பேராண்மை படத்துக்கு டிக்கெட் போடுப்பா....
ட்ரைலர் சூப்பர் வசனமும் தான்.

***********************************************

இது போன்ற தகவல்கள் அனைத்து மக்களையும் சேர ஒட்டு
போடுங்கள்.

நன்றி
ஜெட்லி சரண்.

Tuesday, October 6, 2009

டிப்ஸ்????

டிப்ஸ் -- எவன்யா கண்டுபிடிச்சான்???

நாம் சர்வருக்கு தரும் டிப்ஸின் விரிவாக்கம்:

TIPS - TO INSURE PROMPT SERVICE

நான் ரொம்ப பணக்கார தனமான ஹோட்டல்க்கு போய்
பழக்கம் இல்லை, எப்போதாவது முனியாண்டி விலாஸ், உடுப்பி ஹோட்டல்களில் சாப்பிட்டு காலத்தை ஒட்டி கொண்டிரிக்கிறேன்.
நான் டிப்ஸ் வைப்பது என் மூடு பொருத்து இருக்கு,அது எப்படின்னா
நான் கேக்காமல் சர்வர் அதிக சால்னா கொண்டு வந்தாலோ,
நான் கேக்காமல் ஆப்பாயிலில் அதிகமாக பேப்பர் போட்டு கொண்டு
வந்தாலோ கொடுப்பேங்க,முக்கியமா சீக்கரமா வந்த கொடுப்பேன்.


தினமும் ஹோட்டலில் சாப்பிடும் என் பாச்சிலர் நண்பர்கள் டிப்ஸ்
வைப்பது மிகவும் குறைவு.மூணு வேளையும் டிப்ஸ் வைக்கிற
காசில் ஒரு வேளை சாப்பிட்டு விடலாம் என்பதே காரணம்.

ஏதோ ஒரு பவனில் அன்றாடும் நடக்கும் நிகழ்ச்சி.
ரெண்டு கேரக்டர் ரெண்டு பேருமே அந்த பவனுக்கு தினமும்
செல்பவர்கள் ஒருவன் டிப்ஸ் கொடுப்பவன் மற்றவன்
டிப்ஸ் கொடுக்க மாட்டான்.டிப்ஸ் கொடுப்பவனுக்கு நீல நிற
எழுத்தும் டிப்ஸ் கொடுக்கதவனுக்கு சிகப்பு நிற எழுத்தும்....

1) ஹோட்டல் உள்ளே போகும் போதே எப்போதும் பரிமாறும்
சர்வர் உங்களை தான் கண்காணிக்கும் இடத்தில் உட்கார
சொல்வார்.

1) ஹோட்டல் முதலாளி தவிர வேறு யாருமே உங்களை
கண்டு கொள்ள மாட்டார்கள்.எங்கே இடம் காலியாக இருக்கோ
அங்கே போய் உட்கார வேண்டியதுதான்.

2) சர்வர் நீங்கள் உட்காரும் முன்னே தண்ணீர் வைப்பார்,
எப்போதும் கூட வருபவர் வரவில்லை என்றால் அவர் வரலையா
என்று அக்கறையாக விசாரிப்பார்.

2)பத்து நிமிஷம் உங்க பக்கம் சர்வர் வரவே மாட்டார்.
முன்னாடி கவனிப்பார் பின்னாடி கவனிப்பார் அப்புறம் தீடிர்னு
வந்து அடிப்பதை போல் "என்ன வேணும்" என்று கேட்பார், நாம்
தட்டு தடுமாறி இரண்டு இட்லி என்பதுக்குள் போய் விடுவார்.
(என்னது தண்ணியா?? அதெல்லாம் இட்லி வந்ததுக்கு அப்புறம்
தான் வரும்
)

3) இரண்டு இட்லிக்கு கொஞ்சம் சட்னி அதிகமாவே இருக்கும்.
"வடை வேணுமா சார் சூட இருக்கு" என்று கேட்பார்.

3) நம்ம இட்லி ப்ளேட்இல் ஏதோ பெண்ணின் முகத்தில் பொட்டு
வைத்து போல் சட்னி இருக்கும்.சாம்பார் பாதி கிண்ணம் தான்
இருக்கும்.


4) நடுநடுவில் வந்து சாம்பார் போதும் என்றாலும் ஊத்து ஊத்து என்று ஊத்துவார், தட்டு சாம்பாரில் நிரம்பி வழியும்.

4) நம் கிண்ணத்தில் சாம்பார் காலியாகி விட்டாலும் சர்வர் நம்ம பக்கமே வரமாட்டார்.நாம கடுப்புல இருக்கும் போது வந்து "சார் சாம்பார் வேணுமா??" என்பார்.

5) தோசை சொல்லிடவா சார் இல்லை பூரியா என்று பயங்கரமா
கவனிப்பார்.

5) வேற ஏதாவது வேணுமா?? என்று அவர் கேட்பது நமக்கு
எழுந்து சீக்கரம் போட என்பது போல் இருக்கும்
.

6) பில் கொண்டு வரும்போது "போதுமா சார் காப்பி வேணுமா"
என்று கேட்பார்.பில் என்பது ரூபாய் ஆச்சுனா கண்டிப்பா மீதி
இருபது ரூபாயில் ரெண்டு அஞ்சு ரூபாய் காயின் இருக்கும்.


6) பில்லை நாமே காஷ் கவுண்டரில் கட்ட வேண்டியது தான்.

நான் அனைத்து சர்வர்களையும் சொல்லவில்லை சில பேர்
அப்படி இருக்கின்றனர்.வர வர டிப்ஸ்இன் அர்த்தம் லஞ்சம்
கொடுப்பது போல் ஆகிவிட்டது....

கொசுறு செய்தி 1:

முன்னால் நடிகை ஸ்ரீதேவிக்கு ஹோட்டலில் டிப்ஸ் வைக்கும்
பழக்கம் இல்லை.

கொசுறு செய்தி 2:

pirates of carribean புகழ் ஜானி டேப் அவர்கள் சமீபத்தில் சிகாகோ
உணவகத்தில் 4,000 டாலர்கள் டிப்ஸ் அளித்துள்ளார்.

என் நெருங்கிய நண்பன் எப்போதும் கூறுவான் ஆங்கிலத்தில்
தனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை டிப்ஸ் என்று.

உங்களுக்கு இது போல் ஹோட்டல் மற்றும் டிப்ஸ் அனுபவம்
இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்வோம்
.....

புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க மக்களே.....

நன்றி

ஜெட்லி சரண்.

Friday, October 2, 2009

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, என்ற அறிவிப்புடன் நமது இளையதளபதி நடித்த பகவதி படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, எவ்வளவோ யோசித்தும் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என விளங்கவில்லை. அப்போது ஒரு காட்சி, தலைவர், நாயகியிடம் கொடுக்கும் ஐந்து ரூபாய் நோட்டில் காந்தி படம் மறைந்து இளையதளபதி முகம் தோன்றியது, நமது நெடுநேர சந்தேகத்துக்கும் விடை கிடைத்தது. இதை விட பெரிய சம்பந்தம் எதுவும் தேவையில்லை என மனதை சமாதானப்படுத்திக்(நொந்து) கொண்டே சானலை மாற்றி வந்தபோது, மக்கள் தொலைக்காட்சியில், (எதிர்பார்த்தது போலவே) மகாத்மாவின் லண்டன் பயணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அந்த அரையாடை மனிதரின், பொக்கைவாய் சிரிப்பையும் எளிமையையும் பார்த்தபோது, மனதில் தோன்றிய ஒரே உணர்வு, இனி எப்போது இதுபோன்ற ஒருவரை காண்போம் என்ற ஏக்கம் தான்.

ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது காந்தி மற்றும் கோட்சே பற்றி நண்பனிடம் கூறிய கருத்து வகுப்பாசிரியர் காதுக்கு எட்டி, சில அடிகளும், சிறு அறிவுரையும் பெற்ற சம்பவம் என்றும் மறக்க இயலாத ஒன்று. சுதந்திரத்திற்குப்பின் அரியணை ஏறமறுத்த அவரின் முடிவை பற்றிய வருத்தமும், அவர் அதை ஏற்றிருந்தால், நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதோ என்ற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இன்றும் உண்டு. ஆகாசவாணியில் வெள்ளிகிழமைகளில் ஒலிபரப்பாகிவந்த சத்தியசோதனை வாசிப்பை, வாரம் தவறாமல் கேட்பது வழக்கமாக இருந்து வந்தாலும், படிக்கக் கிடைத்த சில புத்தகங்களும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களும், கம்யுனிஸ்ட் கூட்டங்களுக்கு செல்லும் (கல்லூரியில் படித்து வந்த) நண்பனுடன் மணிக்கணக்கில் நிகழ்த்திய விவாதங்களும், காந்தி குறித்தும் அவருடைய கொள்கைகள் (குறிப்பாக அஹிம்சை மற்றும் சத்தியாகிரகம்) குறித்தும், எதிர்மறையான (மிகக் கடுமையான) கருத்துக்கள் கொண்டதாகவே என் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியாண்டுகள் கழிந்தன.

'மாற்றம் ஒன்றே நிரந்தரம்' எனும் மாபெரும் நிதர்சனம் மீண்டும் நிஜமானது, 2005 புத்தக கண்காட்சியில் வாங்கிய சத்தியசோதனை நீண்டகாலம் படிக்கப்படாமலே இருந்தது, திடிரென்று ஒருநாள் ஞானோதயம் பிறந்து படிக்க ஆரம்பித்தேன், முதலில் சுவாரசியமில்லாததாக தோன்றிய வரிகள், வாசிப்பை 30 பக்கங்களோடு நிறுத்திவிட்டன. மனந்தளராத விக்க்ரமாதித்தனாக மீண்டும் முதலிலிருந்து தொடங்கினேன், இந்தமுறை சில புதிய விஷயங்கள் புலப்படத் தொடங்கின, சொந்த வாழ்வில் தோன்றிய நெருக்கடிகளை அவர் கையாண்ட விதமும், பொதுவாழ்வில் அவரின் நேர்மையும், பொது நிதி வசூல் மற்றும் கணக்கு வழக்கு விவகாரங்களில் காட்டிய கண்டிப்பும், ஒழுங்கும் நிகழ்காலத்தை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க இயலாமல் செய்து மனதை கனக்க செய்தன. நடந்த சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் எழுதியவிதம் அவர் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்தியது.

சத்தியசோதனையை ஒவ்வொரு முறை கையில் எடுக்கும்போதும் மனதில் தோன்றும் ஒரே உணர்வு ஏக்கம் தான். நல்ல புத்தகம் நண்பர்களே, சற்றும் நெருடாத மொழிபெயர்ப்பு (ரா வேங்கடராஜலு), நீங்களும் படியுங்கள், விலையும் அதிகமில்லை, மலிவுப் பதிப்பாக நவ ஜீவன் பிரசுரத்திலிருந்து வெளியிட்டிருக்கிறார்கள், முப்பதே ரூபாய் தான்.

நன்றி
சங்கர்

நாட்டு நடப்பு நல்லாத்தானே இருக்கு

இன்று காலை ஒரு வேலையாக நங்கநல்லூர் சென்றிருந்தேன், வழக்கமாக ஆள் நடமாட்டமே இருக்காத அந்த சாலையில் திடிரென்று ஒரு குவாலிஸ் வந்தது, முகப்பில் கட்சிக் கொடி, அதற்கு பின்னால ஒரு கூட்டம் ஆரவாரமாக வந்தது, ஒவ்வொருவர் கையிலும் கட்சி கொடி, வாயில் வாழ்க, வளர்க, ஜே என்றெல்லாம் கோஷம், இரு ஆட்டோக்கள் சில பைக்குகள், ஒரு ஸ்கார்பியோ பின்தொடர ஊர்வலம் சென்றது, அதன் பின் சென்ற மற்றொரு கும்பலில் இருந்த தெரிந்த முகம் ஒன்றை கேட்டேன், "என்ன ஊர்வலம் சார்" அவர் சொன்னார் "காந்தி ஜெயந்தி அமைதி ஊர்வலம்", முதலில் சரியாக புரியாத வாழ்த்து கோஷம் இப்போது புரிந்தது, "தலைவர் வாழ்க", "வாழும் காந்தி வாழ்க" மற்றும் தமிழ்நாட்டின் நிரந்தர ஊர்வல கோஷமான "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா"

செய்யுங்கடா, செய்ங்க

நன்றி
சங்கர்

Thursday, October 1, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

என்னிடம் கேள்வி கேட்ட ட்ராபிக் சார்ஜன்ட்.

நான் சிவனேன்னு கடைல இருந்தேன், நம் நண்பர் ஒருவர்
வேலை முடித்து களைத்து வந்து என்னிடம் கொஞ்சம் கதை
பேசுவார்(அவர் யூத் இல்லை).அவர் உன்னை போல் ஒருவன்
படத்தை பத்தி ரொம்ப சிலாகித்து பேசினார்.அப்போ தான் அந்த
சம்பவம் நடந்தது......

ஒரு ட்ராபிக் சார்ஜன்ட் வந்து என்னிடம் காலண்டர் இருக்கா??
என்று கேட்டார்.

நான் ஓசியில் ஒரு காலண்டர் கேக்குறாரு போல நினைத்து
"அடிச்ச காலண்டர் தீர்ந்து போய் ஏழு மாசம் ஆச்சுங்க" என்றேன்
அப்பாவியாய்...

ரொம்ப டென்ஷன் ஆகி போனார் ட்ராபிக் சார்ஜன்ட்.

ஒரு வேளை நாளைக்கு அவர் ராசிக்கு என்ன போட்டு இருக்கு என்று பார்ப்பதற்கு கேக்குறாரு என்று நினைத்து

"நான் யூஸ் பண்ற காலண்டர் இருக்கு" என்றேன் நான்.

உடனே சார்ஜன்ட் "நாளைக்கு என்னப்பா??" என்றார்.

"நாளைக்கு காந்தி ஜெயந்தி" என்றேன்.

"ஹோ அப்படியா" என்று விறுவிறு என்று ரோட்டை நோக்கி
நடந்தார்.

என்னிடம் பேசிகொண்டிரிந்த நண்பர்" நாளைக்கு காந்தி பொறந்த
நாள், வைன் ஷாப் எல்லாம் லீவ்" என்று அவர் காதில் விழும்
படி கூறினார்.

ஆனா ட்ராபிக் சார்ஜன்ட் திரும்பி பார்க்கவே இல்லை,,

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியின்
பிறந்த நாளை கூட நினைவில் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி
முதல் நாள் இரவு எட்டு மணிக்கு வந்து நாளைக்கு என்ன

நாள் என்று கேக்கும் அளவுக்கு நாம் நாடு இருக்கிறது......

என்னத்த சொல்றது.... நாட்டு நடப்பு ரொம்ப கேவலமா இருக்கு!!

**********************************************

என்று தீரும் இந்த மந்தைவெளி பிரச்சனை:

மயிலாப்பூர் மற்றும் அடையார் நடுவில் இருக்கும் இடம் தான்
மந்தைவெளி.நான் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில்
இளநிலை படிக்கும் காலத்தில் இருந்தே ரோட்டை நொண்டி
நொங்கு எடுத்து விடுவார்கள். அந்த ரோட் சைடு போனாலே
புழுதி பறக்கும்.நான் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு ஆனா
இன்னும் அந்த சாலைகள் சரியாகவில்லை.


இப்போ திரும்பவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.மயிலாப்பூர்

போனும்னா சுத்து சுத்துக்கிட்டு தான் போகணும்.இதை ஒரு
டைம் பாஸாக நம்ம குடிநீர் அல்லது கழிவு நீர் வாரியம்
பண்ணுதா என்று எனக்கு தெரியவில்லை.

பாவம் மந்தைவெளி மக்கள் வாகனம் போகும் தூசியே
அவர்களுக்கு பாதி நோயை கொண்டு வந்துவிடும்.எனக்கு
தெரிஞ்சு ஒரு ஆறு வருஷமா இந்த மாதிரி தொடர்ந்து நடந்துட்டு
வருது.இதற்கு எப்போது விடிவுகாலம் என்று தெரியவில்லை??

**************************************************

உங்கள்
ஜெட்லி சரண்.