Thursday, September 10, 2009

கிரிவல விவாதம்...

கிரிவல விவாதம்...



தலைப்பை பார்த்த உடன் சிநேகா கிரிவல சர்ச்சையில் சிக்குன
விவாதம்னு தப்பா நினைச்சிக்காதிங்க இது வேற...

போன வாரம் நானும் நண்பர்கள் சித்து,நட்டு மற்றும் புறா
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சங்கரும்
திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமி இல்லாத நாளில்
சென்றோம்.அதிகாலை மூன்று மணிக்கு கிரிவலம் ஆரம்பித்தோம்,
சித்து அவர்கள் பர்ஸ்,கைப்பேசி அனைத்தையும் காரிலே வைத்து
விடும்படி கூறினார்.அப்போது நட்டு அவர்கள் "ஜூரம் வருவது
போல் உள்ளது நான் வரவில்லை நீங்கள் போங்க" என்றார்.
சங்கர் அவர்கள் நட்டுவை சமாதானம் பேசி வர வைத்தார்.

நான் எப்போதும் பௌர்ணமி நாள் அன்று போவேன், இப்போது
போவது மிகவும் வித்யாசமாக பட்டது.எங்கள் நால்வரை தவிர
ரோட்டில் வேறு யாரும் இல்லை.எனக்கு நெஞ்சின் ஓரத்தில் சிறு
பயம் ஒட்டி கொண்டது அதற்க்கு காரணம் தண்ணி வேறு இல்லை.
தண்ணி எப்படி காலி ஆச்சுன்னு சொல்ல விரும்பல....

எனக்கும் சரி சங்கர் மற்றும் நட்டுக்கும் சரி கடவுள் நம்பிக்கை
இல்லை என்றே சொல்ல வேண்டும்.சித்துவை பற்றி தெரியாது.
அப்புறம் ஏன் கிரிவலம் போறன்னு கேக்குறிங்களா?...
மனதை கட்டு படுத்த முடியுமா அல்லது ஒரு நிலை படுத்த முடியுமா என்று ஒரு சிறு முயற்சி அப்புறம் பல ரக மக்களை
சந்திக்கலாம்.நாங்கள் கிரிவலம் ஆரம்பத்தில் எடுத்த டாபிக் ரொம்ப
மட்டமானது,சில சமயம் நான் அவர்களிடம் "நாம கிரிவலம் போய்க்கிட்டு இருக்கோம்"என்பதை நினைவு படுத்த வேண்டி இருந்தது.

உபரி தகவல்: நட்டுவும்,சித்துவும் செருப்பு போட்டு தான் கிரிவலம்
சென்றார்கள்.... யாரவது வேணும்னா கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துங்க.

வழியில் சித்தர்கள் சமாதி இருக்கும் இடத்தில் என்னை யாரோ
பக்தா என்று அழைப்பது போல் கேட்டது. நான் நட்டுவிடம் சொன்னேன் அவன் "டேய் என்னை வீணா டென்ஷன் பண்ணாத,
நீயெல்லாம் பக்தானடா" என்று நக்கல் அடித்தான். இருந்தாலும்
நான் அப்போ அப்போ பின்னாடி திரும்பி பார்த்து பார்த்து நடந்தேன்.

எட்டாவது கிலோமீட்டரில் ஒரு டீக்கடையில் டீ குடித்தோம், அங்கே
சங்கர் அவர்கள் குட்டி தூக்கம் போட்டார்.ரைட் இதுக்கு மேல டாபிக்
போட்ட தான் கோவில் போய் சேர முடியும் என்று டாபிக் ஆரம்பித்தது.
நான் சங்கரிடம் "நீ ப்ளாக் உறிப்பினர், ஏதாவது எழுதுறது" என்றேன்.
அப்புறம் டாபிக் எங்கயோ போய் விட்டது.
"கோவிலுக்கு முட்டை சாப்பிட்டு போறது தப்பு இல்ல,
எனக்கு தப்பா படல" என்றான் நட்டு.மேலும் "உங்களுக்கு தப்பா
படறது எனக்கு தப்பா படல, ஆனா உங்களையும்
நான் செய்ய சொல்ல மாட்டேன்" என்றார்.

மேலும் செக்ஸ் கல்வி, முறை தவறி நடக்கும் செக்ஸ் போன்றவற்றை நண்பர்கள் விவாதம் செய்தார்கள். நான் இந்த
விவாதத்தில் கலந்து
கொள்ளவில்லை காரணம் இந்த விவாதம் செய்ய அது
சரியான இடம் அல்ல என்பதே.
சங்கர் அவர்கள் "எனக்கு தப்பு செய்ய பிடிக்கும் ஆனா
செய்றது இல்ல அதுக்கு காரணம் நான் வளர்ந்த சமூகம் அப்படி" என்றார்.
நண்பர் சித்து அவர்கள் எதற்கெடுத்தாலும் "நான் இப்போ மடக்குரேன்
பாரு" என்று சங்கரை நோக்கி கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தார்,
அல்லது சங்கர் கூறும் அனைத்தையும் மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

கிரிவலம் முடித்து கோவிலுக்குள் போனால் செம கூட்டம்,
மூகர்த்த நாள் என்பதால் ஒரே கல்யாணம்தான்.அருணாச்ச்சலனை
பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றால் ரெண்டு
வினாடிகள் கூட பார்க்க விடவில்லை.சங்கர் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார்," எதுக்கு ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் இதுக்கு தான் நான் திருப்பதி கூட போவதில்லை" என்றார்."அப்புறம் எப்படி எல்லாத்துக்கும்
சம்பளம் கொடுப்பாங்க" என்று சித்து கேட்டார்.
"அதெல்லாம் நிறைய காசு வரும்" என்றார் சங்கர்.
"டைம் ஆச்சு கிளம்புவோம்" என்று சென்னைக்கு திரும்பினோம்.
உங்கள்
ஜெட்லி சரண்

Wednesday, September 9, 2009

முதல் தொடர் பதிவு.....



என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

*********
இனி...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஜெட்லி/சரவணன்.

2. B – Best friend? :சில நேரம் புத்தகங்கள்...

3. C – Cake or Pie? : american pie படம் தானே... சூப்பர் படம்....

4. D – Drink of choice?குறிபிட்ட brand எதுவும் இல்லை, எதுனாலும் ஓகே....
(அதாவது kinley,bisleri... தப்பா நினைக்காதிங்க)

5. E – Essential item you use every day? கை... கை இல்லை என்றால் ஒரு வேலையும் செய்ய முடியாது...

6. F – Favorite color? நீலம்(படங்கள் அல்ல)

7. G – Gummy Bears Or Worms : இதெல்லாம் சாப்ட்டது இல்லங்கோ...

8. H – Hometown? - சிங்கார சென்னை....

9. I – Indulgence? - அப்படின்னா..

10. J – January or February? - ஜனவரி(புது வருஷம் வருது இல்ல)

11. K – Kids & their names? நானே ஒரு சிறுவன்...

12. L – Life is incomplete without? திரைப்படங்கள்

13. M – Marriage date? - நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை

14. N – Number of siblings? 2...

15. O – Oranges or Apples? ஆரஞ்சு

16. P – Phobias/Fears? தமிலிஷ் ஒட்டு ..

17. Q – Quote for today? உன் வாழ்க்கை உன் கையில்..

18. R – Reason to smile? அப்பதான் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கும்.

19. S – Season? சத்யம் சீசன் தியேட்டர் தானே, இதுவரைக்கும் போனது இல்ல....


22. V – Vegetable you don't like? எல்லாமே பிடிக்கும்....


23. W – Worst habit? எல்லாத்துக்கும் நோ சொல்வேன்...


24. X – X-rays you've had? எப்போவோ எடுத்தது...


25. Y – Your favorite food? அடையார் கோரோநெட் ஹோட்டல்இல்
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி விலை நூறு ரூபாய் மட்டும்.


26. Z – Zodiac sign? கும்பம்
***************************


1. அன்புக்குரியவர்கள் : எல்லா உயிர்களும்...

2. ஆசைக்குரியவர் : அப்படி யாரும் இல்லை...


3. இலவசமாய் கிடைப்பது : மொக்கை படம் பார்க்கும் போது வரும்
தலைவலி.....

4. ஈதலில் சிறந்தது : காக்காவுக்கு சோறு வைப்பது,..

5. உலகத்தில் பயப்படுவது : டாஸ்மாக் கடையில் வாங்கும் சரக்கு
ஒரிஜினல்லா என்று....

6. ஊமை கண்ட கனவு : கனவு கண்டவன் கிட்ட கேளுங்க அப்பு....

7. எப்போதும் உடனிருப்பது : என் கைப்பேசி....

8. ஏன் இந்த பதிவு : தெரியுல....

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா கூட பழக்கம் இல்லங்க..

10.ஒரு ரகசியம் : ரகசியாவுக்கு சாரி போட பிடிக்காதாம்....

11.ஓசையில் பிடித்தது :
சரக்கு பாட்டிலை திறந்து க்ளாசில் ஊத்தும் ஓசை.


12.ஔவை மொழி ஒன்று : கந்தலானாலும் கசக்கி கட்டு...

13.()ஃறிணையில் பிடித்தது: பைரவன்


மேலே கூறியுள்ள பதில்கள் சிலவை பொய்கள்....
சும்மா ரசிக்க மட்டுமே கூறிய பதிகள்

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, September 8, 2009

மதுரை சம்பவம்

மதுரை சம்பவம் - சும்மா டைம் பாஸ்.


மூன்று மாதங்களாக காட்டப்படும் படத்தின் ட்ரைலர் என்னை
ஈர்க்கவில்லை. அதுவும் ஹரிகுமார் சொல்ற அந்த வடக்கே
திண்டுக்கல் என்று சொல்லும் வசனத்தை கேட்டாலே ரிமோட்
எடுத்து வேற சேனல்க்கு போய் விடுவேன்.அப்புறம் ஏன்டா இந்த
படத்துக்கு போனேன்னு கேக்குறிங்களா???...

நேத்து 5 மணி வரைக்கும் எனக்கு இந்த படத்துக்கு போகுனும்னு
ஐடியா இல்லை.நம்ம அண்ணன் உண்மை தமிழன் அவர்கள்
தனது விமர்சனத்தில் படம் பார்க்கிற மாதிரி இருக்குது என்று
சொன்னதால் போனேன் , ஆனா காரணம் அது மட்டும் இல்ல.
அந்த காரணம் அனுயா, என் நண்பர்கள் சில பேர் என்னிடமும்
நான் சில பேரிடமும் கேட்ட கேள்வி "அது எப்படி மச்சான்
sms படத்துல வர பாட்ல ப்ளூ கலர் டிரஸ்ல அனுயா கால்
வெண்ணை மாதிரி இருக்கு?".


இதுல வேற படத்துல்ல லிப் கிஸ் வேற இருக்குன்னு
சொல்லிடாங்க.அப்புறம் எப்படி படத்துக்கு போகாம இருக்கறது
என்று நானும் நண்பனும் பைலட்க்கு கிளம்பி விட்டோம்.
என்னுடன் என் நண்பனையும் சேர்த்து நாற்பது ரூபாய்
டிக்கெட்இல் 15 பேர், அம்பது ரூபாய் டிக்கெட்இல் பத்து பேர்
பிளஸ் ஒரு கசமுசா ஜோடி, நூப்பது ரூபாய் டிக்கெட்இல்
ஒரு அளவுக்கு கூட்டம் இருந்தது.

ஹரிகுமார், ஏன் உங்களுக்கு இந்த பில்ட்-அப்?. ஏதோ அடிதடி
காட்சிகளில் தேறுகிறார்.படத்தின் உயிர் நாடி ரெண்டே விஷயம்
தான் ஒன்று ராதாரவி அடுத்து அனுயா(ஜொள்ளு!!). ராதாரவி
பத்தி நமக்கு எல்லாம் தெரியும் அதனால நாம அனுயா பக்கம்
வருவோம். அனுயா, இதுல கொஞ்சம் ரப் அண்ட் டப் கேரக்டர்.
போலீஸ் உடையில் அனுயாவை ஹரிகுமார் சைட் அடிக்கும்
போது இங்கே நமக்கும் ஒரு பீலிங்க்ஸ் வருது.ஒரு முட்டு
சந்துல போய் அனுயாவை கிஸ் அடிக்கிறார் ஹரிகுமார், கொஞ்சம்
தெளிவா காட்டி இருக்குலாம்(நான் ஹரிகுமார் கேரக்டர் பத்தி சொன்னேன்).

எப்போவும் இளிச்சிக்கிட்டே ஒரு பொண்ணு இருக்குமே, அதாங்க
கார்த்திகா ஒரு பாட்டுக்கு வழக்கம் போல இளிக்கிறாங்க அவளோ
தான் வேற ஒன்னும் இல்ல.படம் கொஞ்சம் சுவாரசியமாதான்
போது.போர் அடிக்கிற மாதிரி சீன் எதுவும் இல்ல.எனக்கு ஒரு
குறை தான் அனுயாக்கு டூயட் சாங் இல்லாம போச்சே என்பது
தான் அது.ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடிற மாதிரி
கிளைமாக்ஸ் முன்னாடி செம ட்ரீட்.ஆமாம் அது ஏன் அனுயாக்கு
மட்டும் கிளைமாக்ஸ் முன்னாடி படுக்கை அறை காட்சிகள்
வந்துடுது???என்னமோ போடா 40 ரூபாய்க்கு படம் ஓகே.


ஜெட்லி கவுஜ:

அனுயா, நீ விண்ணில் இருந்து வந்தாயா
அல்லது டயானா தோட்டத்தில் பூத்தாயா
நீ முனியாண்டி விலாசில் போட்ட வீச்சு
உன்னால படமோ சூப்பர் பேச்சு.

புடிச்சா ஒட்டு போடுங்க அப்பதான் பலதரபட்ட மக்களை போய் சேரும்.

உங்கள்

ஜெட்லி.

Friday, September 4, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்.

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்.


முன்னுரை: உங்களால் படமே பார்க்காம இருக்க முடியாதா என்று என்னை பார்த்து கேட்ட வால் பையன் அவர்களுக்கு இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்....



நினைத்தாலே இனிக்கும், மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கல்லூரி களம்.ப்ரிதிவிராஜ்,ஷக்தி,ப்ரியாமணி,கார்த்திக் குமார்
நடிப்பில் சன் டி.வி வெளியிட்டுர்க்கும் படம்.மலையாள படமான
கிளாஸ் மேட்ஸ் படத்தின் தழுவல் தான் நினைத்தாலே இனிக்கும்.இயக்குனர் குமாரவேலன் அவர்கள் மலையாள படத்தில் இருந்து வெறும் அஞ்சு காட்சிகளை மட்டும் தான் அப்படியே எடுத்து இருக்கோம் மற்றவை அனைத்தும் புதியவை என்றார்.பேசாம சீன் பை சீன் அப்படியே எடுத்து இருக்கலாம்.


ப்ரிதிவ்ராஜ் 8 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் நடக்கும் get-to-gether விழாவுக்கு வரும் வழியிலே கதை சொல்லி வருகிறார் .
கல்லூரியில் ப்ரிதிவிராஜ்க்கும் கார்த்திக் குமார்க்கும் அடிக்கடி
சண்டை நடக்கும்.சக்தி இருவருக்குமே நல்ல நண்பன்.வழக்கமா
வர காலேஜ் தேர்தல்ல பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது(எத்தனை படத்துல பாக்கறது).நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது,
ப்ரியாமணியும் ப்ரிதிவிராசும் ஒன்றாக இணைவார்களா?
இது தான் நினைத்தாலே இனிக்கும். பிளஸ் சஸ்பென்ஸ்(இதான் முக்கியம்).


பொதுவா ஒவ்வொரு மனுசனுக்கும் அவனோட காலேஜ் லைப்

கண்டிப்பா நினைத்தாலே இனிக்கும் .நான் பார்த்த
ஆராதனா தியேட்டரில் மட்டும் முதல் பாதி மட்டும் நாலு
வாட்டி நிறுத்தி நிறுத்தி போட்டான்.அந்த தியேட்டரே அப்படிதான் என்ன பண்றது , கணபதிராம் ஹவுஸ் புல் ஆயிடுச்சு.


அது என்னமோ தெரியுல விஜய் அன்டனி குரல் கேட்டாலே ஒரு red bull energy drink குடிச்ச மாதிரி ஒரு பீலிங்க்ஸ் ...படத்தின் பாட்டை பற்றி சொல்ல வேண்டாம் ஏற்கனவே ஹிட். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு நல்லா இருக்கு.

படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே இயக்குனர் கொஞ்சம் சொதப்பி
இருக்கிறார் , முக்கியமா இந்த கார்த்திக் குமார் கேரக்டர் முதல் காட்சியில் அவரை காட்டுவதோடு சரி அடுத்து முக்கா மணி நேரம் கழித்து தான் ஸ்க்ரீன் உள்ளே வருவார்.
(ஏன் payment பாக்கியா ??).


ஷக்தி , நீங்க சொன்ன நம்ப மாட்டிங்க நான் இவரோட
மகேஷ் ,சரண்யா மற்றும் பலர் படம் பார்த்தேன் அதில் இருந்து
ஒரு படி உயர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிரிதிவிராஜ் இவரு என்ன பண்றாரு ரவுடியா இல்ல படிப்ஸ்ஆ ஒன்னும் புரியல (அதான் ஹீரோவோ !!).ப்ரியாமணிக்கு ஒன்னும் பெருசா இல்ல (நான் நடிக்கிற வாய்ப்பை சொன்னேன் ).அட்வைஸ் பண்றதுக்குன்னு ஒருத்தர் அவர் தான் பாக்யராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திரிக்கிறார்.


லொள்ளு சபா ஜீவா ஒபெநிங் நல்ல காமெடி , காலேஜ் கேம்பஸ் காமெடி கொஞ்சம் கம்மி . ப்ரியாமணிக்கு அடிப்பட்டவுடன் பிரிதிவிராஜ் chemistry லேப்க்குள் அவரே மருந்து தயாரிப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான். படம் போர் அடிக்காம போது , சஸ்பென்ஸ் இருப்பதால் இதுவா
அதுவா என்று கதை போகிறது . ஷக்தியின் காதலியாக வரும் பெண்ணை க்ளோஸ் அப்பில் பார்க்க சகிக்க வில்லை , அந்த பெண் ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் hostel வருவதாக கூறுவது 10 முழம் பூவை காதில் சூற்றியதுக்கு சமம்.
படம் சுமார் தான் மோசமில்லை .


ஜெட்லி பஞ்ச் :

லாஜிக் மற்றும் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் நினைத்தாலே இனிக்கும் கண்டிப்பாக இனித்திருக்கும் .

இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் சேர ஒட்டு போடவும் ....

உங்கள்
ஜெட்லி

Tuesday, September 1, 2009

சென்னை டூ ஆத்தூர்

சென்னை டூ ஆத்தூர் - பயண குறிப்பு

ஆஸ்திரேலியா நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்
அவர்களின் அண்ணன் திருமணத்திற்கு வழக்கம் போல்
ஒரு நாள் முன்னாடியே சென்றோம்.பத்து பேர் போவதாக
இருந்த பயணம் நாள் நெருங்க நெருங்க நாலு பேர் ஆனது
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் எனக்கு எதிர்பாராத
அதிர்ச்சி கந்தசாமி படத்தை இரண்டாவது தடவை என்னை

கட்டாயப்படுத்தி பார்க்க வைத்தார்கள்.

ஆல் இன் ஆல் என்று அன்புடன் அழைக்கப்படும் அருணாசலம்
அவர்கள் என்னை இந்த படத்திற்கு கண்டிப்பாக வந்து ஆக வேண்டும் என்று என்னை இழுத்து கொண்டு போய் விட்டார்.
(காரணம்: இந்த படம் மட்டும் தான் லேட் ஆக முடியும் ,
அப்புறம் கிளம்பினால், காலையில் ஆறு மணிக்கு தலைவாசல் சேர கரெக்ட் ஆக இருக்கும் என்பது தான்
)

"மச்சி நீங்க படம் பார்த்துட்டு வாங்க, நான் தியேட்டர்
வெளியில் படுத்துக்கிறேன்" என்று நான் கூறினாலும்
நண்பர்கள் கேட்பதாக இல்லை. ஆல் இன் ஆல் கூறிய
இன்னொரு காரணம் ஸ்ரேயாக்குகாக பத்து வாட்டி கூட பார்க்கலாம் என்றார்.


அருமை நண்பர் ஜீத் அவர்கள் வழக்கம் போல் ஒரு சரம் சூப்பர் பாக்கை வாங்கி ஸ்டாக் செய்து கொண்டார். அன்பு நண்பர் கார்த்தி

முக்கா பாண்ட் போட்டு கொண்டு வந்து சேர்ந்தார், கார்த்தி
தடவை கந்தசாமி படம் பார்ப்பதால் அமைதியாக படம் பார்த்து ரசித்தார்.
எனக்கு முதல் பாடல் வந்த உடன் உச்சா செல்ல எழுந்து
நடந்தேன், என் செருப்பு வழுக்கியது. ஜீத்தை அப்போது தான்

கவனித்தேன் பின்பு தான் புரிந்தது செருப்பு வழுக்கியதற்கு
காரணம் ஜீத்தின் வாய்ஜாலம் என்று.

மெலடி தியேட்டரில் ஒட்டப்பட்ட ஒரு ஸ்டிலில் சந்தானம்
விக்ரம் உடன் நின்று கொண்டு இருப்பது போல் விளம்பரம்
இருந்தது, அப்பதான் நினைத்தேன் சந்தானம் இருந்திருந்தால்
படம் ஓரளவுக்கு நல்லா இருந்துருக்குமே என்று....




படம் இனிதே 1.15 மணிக்கு முடிந்தது, ஆல் இன் ஆல் அவர்கள்
கார் ஓட்ட நாங்கள் மூவரும் ஏறி அமர்ந்து அடுத்து வண்டி நின்ற
இடம் திண்டிவனம் ஹை வேய்ஸ் இல் உள்ள கடையில் தான்.
ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டு கிளம்பினோம்.

காலையில் 6.45 மணிக்கெல்லாம் தலைவாசல் வந்து விட்டோம்.
எங்களை வரவேற்க ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா காத்து கொண்டு
இருந்தார். பாலா அவர்களின் வாயில் தமிழை விட ஆங்கிலம்
தான் அதிகமாக விளையாடியது.சும்மா ஒரு


கார்த்தி: எங்க மச்சான் உங்க வீடு இருக்கு?


பாலா: இங்க இருந்து ஒரு two minutes தான் மச்சி...

பாலா வீட்டுக்கு போனவுடன் டீ கொடுத்தார்கள், நண்பர் கார்த்தி
அவர்களின் வாய் புண்ணாகி போனதால் அவர் tender cocanut தான்
தனக்கு வேண்டும் என்று பாலாவின் பண்ணையில் உள்ள மரத்தில்
இருந்து ரெண்டு மூன்று இளநீரை அடித்து தாக்கினார்.
அருணாச்சலத்தின் காரை விடிந்த உடன் பார்த்த போது ஜீத் உட்கார்ந்த சைடு வெள்ளை காரின் நிறம் சிகப்பாய் போனது அதற்கு
காரணம் சூப்பர்.


அப்புறம் ஏற்கனவே புக் செய்துள்ள லாட்ஜ்க்கு பாலா அவர்கள்
அழைத்து போனார் அந்த லாட்ஜ் ஆத்தூரில் உள்ளது. அங்கு
பாலாவின் உறவினர் கார்த்தி அவர்கள் எங்களுக்கு தங்க
உதவிகளை செய்து கொடுத்தார்.

காரில் செல்லும் போது வழியில் பஸ்கள் நின்று இருப்பதை
பார்த்து பாலா அவர்கள் "எப்படி டா இங்க இருக்கீங்க பிளடி
இண்டியா" என்றார். "நீ எப்படி 21 வயசு வரைக்கும் இங்க
இருந்தியோ அதே மாதிரி தான் மச்சி இருக்கோம்" என்றேன் நான்.
இன்னும் ஊர்களில் இரண்டு மணி நேரம் மின்சார நிறுத்தம்
அமலில் இருப்பது அன்று தான் எங்களுக்கு தெரிந்தது.

*****************************************

மதியம் நண்பர் கார்த்தி அவர்கள் சீட்டு கட்டு விளையாட அழைத்தார்.எனக்கு தூக்கம் வருது அப்புறம் விளையாடலாம்
என்றேன் அவர் கேக்காமல் "i want to see , who is the ass?"
என்றவாறு சீட்டை குலுக்கி போட்டார்.இந்த ஆங்கிலம்
எல்லாம் பாலாவை பார்த்த உடன் கார்த்தியையும் தொத்தி கொண்டது என்று எண்ண வேண்டாம். முதல் ass விளையாட்டில்
கார்த்தி தான் தோத்தார் அதற்கு அப்புறம் வாயையும் அதையும்
பொத்தி கொண்டு விளையாடினார்.ஒரு சமயத்தில் கார்த்தி
அவர்கள் நாலு ass களையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

ரம்மி விளையாட்டில் தான் கில்லி என்று கார்த்தி நிரூபித்தார்,
கார்த்திக்கு மட்டும் பாயிண்ட் ஏற வில்லை. ஜீத் அவர்கள்
மூணு 80 தொடர்ந்து கைப்பற்றி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

***********************************************

நைட் பொறித்த மீன் மற்றும் பொறித்த வேகாத சிக்கன் கால் தூண்டு போன்றவற்றை வாங்கி எங்களின் அன்றைய பொழுதை
முடித்தோம். காலையில் 4.30 மணிக்கே மூகூர்த்தம் என்பதால்
நாங்கள் மூணு மணிக்கே எழுந்து குளித்து கோவிலுக்கு கிளம்பி
விட்டோம்.

கோவிலில் அனைவரும் பொண்ணும் மாப்பிளையும் போட்டோ
எடுத்து கொண்டு இருந்தனர். பாலா அவர்கள் தன்னை போட்டோ
எடுக்குமாறு கூறியும் யாரும் பாலாவை போட்டோ எடுக்க
முன் வராததால் பாலா கொஞ்சம் டேமேஜ் ஆயிட்டார். அப்புறம்
நான் ஏதோ பார்த்து என்னோட 1.3 m.p கைபேசி கேமராவில் படம்
பிடித்தேன். இதோ உங்களுக்காக அந்த படம்.......


அப்புறம் ஒரு 6.30 மணிக்கு பாலா வீட்டுக்கு வந்த உடன்
டிபன் வர ரொம்ப லேட் ஆச்சு. ஒரு வழியாக டிபன் பந்தி போட
ஆரம்பிச்சாங்க. கார்த்தி அவர்கள் சின்ன பசங்க கூட பேசுற
மாதிரி அப்படியே சீட் புடிச்சிட்டார் ரைட் அப்படின்னு சொல்லி
நானும் கார்த்தி பக்கத்தில் ஒரு சீட்டை போட்டேன். கேசரி,
வடை, இட்லி , பொங்கல் என்று மாறி மாறி பரிமாறினார்கள்.
ஆஸ்திரேலியா ரிட்டன் பாலா அவர்கள் கையில் வெள்ளை சட்னியுடன் அலைந்து கொண்டு இருந்தார்....

"ஹே chutney... poor indian white சட்னி" என்று பாலாவை கொஞ்ச
நேரம் ஓட்டினோம்.

ஒரு சமயத்தில் நான் கொஞ்சம் ஓவர்ஆக பேசிவிட பாலா
என்னை மேலும் கீழும் என்னை பார்க்க ஆரம்பித்தார்.
அந்த வேளையில் கார்த்தி இலையில் இருந்து ஜீத் அவர்கள்
வடையை திருடிவிட்டதாக ஒரு பஞ்சயாத்து நடந்தது.
ஒரு வழியாக சாப்பிட்டு கிளம்பும் முன் பாலாவிடம் சில
வார்த்தைகள் பேசினோம்....

நான்: உன் கல்யாணம் எப்படி மச்சி இங்கையா? இல்லை
ஆஸ்திரேலியாவிலா?ஆஸ்திரேலியாவில் கல்யாணம் வச்சா நீயே டிக்கெட் போட்டு கூப்டுவியா மச்சி?

பாலா: எங்க வச்சாலும் உங்களை கூப்பிட மாட்டேன் டா...

அருணாசலம்: டேய்! இதெல்லாம் கம்மி, என் கல்யாணத்தில
பண்ணாததா?.....இதுக்கே நீ டென்ஷன் ஆயிட்ட...

நான்: ஆஸ்திரேலியா வந்தா உங்க வீட்ல தங்கலாமா மச்சி?

பாலா வாயே திறக்கவில்லை...

நான் : என்னடா...

பாலா: ஒரு அரை நாள் தங்கலாம் மச்சி...

கார்த்தி: உன்னை வராதேன்னு சொல்றான் போதுமா..

விடை பெற்று கிளம்பினோம்...
*********************************************************

கார் மீண்டும் சென்னையை நோக்கி பறந்தது நான் ஒரு
குட்டி தூக்கம் போட்டேன். பிறகு ஜீத் அவர்களுக்கு வேலை
காரணமாக நேரிய போன் கால் வந்தது, ஜீத் அவர்கள்
credit card பணம் வசூல் செய்யும் டார்கெட் இன்னும்
முடிக்கவில்லை என்று டென்ஷன் ஆனார்,ரொம்ப கஷ்டமான
வேலை தான்.....

ஆல் இன் ஆல் அவர்களின் பணம் ஸ்டாக் மார்க்கெட்இல்
மாட்டி கொண்டதாக கூறினார்..

நான்: என்ன கம்பெனி ஸ்டாக் வாங்குன மச்சி...

ஆல் இன் ஆல்: rrs, raymonds .....

நான்: அப்போ நீயும் raymondsல ஒரு ஓனர் தானே

ஆல் இன் ஆல்: ஆமாண்டா

நான்: அப்போ நீ போன உனக்கு பாண்ட் பிட் ப்ரீயா?

ஆல் இன் ஆல்: ஜட்டி கூட தரமாட்டாங்க...

நான்: raymondsல ஜட்டி வரது இல்ல மச்சி.

கார்த்தி: talk me .... yae talk me என்று அருணாச்சலத்தை ஓட்டினார்.

இன்னும் நெறைய மொக்கைகள் போட்டு பேசிக்கொண்டு 11.30
மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். அருமையான பயணம்,
இந்த பயணத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை கற்று
கொண்டேன்(சும்மா ஒரு பில்ட் அப்).

நன்றி
ஜெட்லி