Friday, June 5, 2009

குளிர்100 டிகிரி --- விமர்சனம்

குளிர்100 டிகிரி


குளிர்100 டிகிரி, அனிதா உதீப் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.
குத்து பாட்டு,கவர்ச்சி, காட்டு கத்தல் இல்லாமல் வந்திருக்கும் இன்னொரு படம்.படத்தில் பெரிய ஸ்டார் வேல்யு என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். படத்தின் பெரிய பிளஸ் ஒளிப்பதிவு தான், விஜய் அவர்கள் அருமையாக ஒளிப்பதிவு செய்து ஏற்காடை நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டி விட்டார். அடுத்த பிளஸ் bob சசி இசையில் ஏற்கனவே மனசெல்லாம் பாடல் சூப்பர் ஹிட். அந்த ஒரு பாட்டு தான் படத்துக்கு மிக பெரிய விளம்பரம்.



சஞ்சீவ் தான் படத்தின் நாயகன் ரொம்ப அலட்டிகொள்ளாமல், இயல்பாக நடித்து உள்ளார்.சஞ்சீவின் அப்பாவும் அம்மாவும் சண்டையால் பிரிந்து வாழ்பவர்கள், அப்பா தாதா ஆதித்யா மேனன். அப்பாவின் ரௌடிதனம் பிள்ளைக்கு வாராமல் இருக்க சஞ்சீவை ஏர்காடு பள்ளியில் சேர்த்து விடுகிறார் அம்மா. பிறகு அங்கு எப்போதும் போல் மூணு பசங்கள் பள்ளியை ஆட்டி படைக்கிறார்கள். அந்த பள்ளியில் நடக்கும் நட்பு, காதல்,மோதல் மற்றும் ரவுடிதனம் செய்யாமல் அவர்களோடு சண்டை போடாமல் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா?.........என்பதே கதை.



படத்தின் நாயகன் சஞ்சீவ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,அவரின் பார்வையே அவருக்கு மிக பெரிய பிளஸ். தன் அம்மாவிடம் அன்பிலும், நண்பனிடம் நட்பிலும் மிக ஆழகாய் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நண்பனாக வரும் பப்லு ஆளும் வெயிட் தான், நம்மை சிரிக்கவும் வைக்கிறார், நட்புக்காக உயிரையும் குடுக்கிறார். இவரை போல் நமக்கு ஒரு நண்பன் கிடைக்க மாட்டானா என்று நினைக்க வைக்கிறார்.அது என்ன வர வர எல்லா படத்தலையும் கதாநாயகியை மெண்டல் மாதிரி காற்றங்கனு தெரியுல. ஏதோ முள்ளங்கிக்கு டிரஸ் போட்ட மாதிரி கதாநாயகி வருது போகுது அவ்வளவுதான்.படத்தின் இரண்டாம் பாதியில் கதாநாயகி எங்கே போனார் என்று தெரியவில்லை.பணம் பாக்கி தரள போல, கதாநாயகி என்ன ஆனாங்குன்னு நீங்க கேக்க கூடாது.

நான் திரும்பவும் சொல்றேன் இது மசாலா படம் இல்லை இது வேற.லாஜிக் பாக்காம இருந்த படம் சூப்பர் அப்படின்னு சொல்லலாம்.என்னடா ஸ்கூல் காட்றாங்க ஒரு வாத்தியார் இல்ல, ஸ்கூல் பெல் அடிக்களா அப்படின்னு நீங்க கேள்வி கேட்டிங்க அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. படிச்சா அந்த மாதிரி ஸ்கூல்ல படிக்கணும் அப்படின்னு நமக்கே ஆசை வரும், ஏன் என்றால் படிகிறத தவிர வேற எல்லாம் பண்றாங்க. படத்தின் திரைக்கதையில் சில சொதப்பல்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா, அப்படினா இந்த படத்துக்கு போங்க நல்ல பொழுதுபோக்கான படம். ரெண்டு மணி நேரம் தான் படம் ஓடும், நம்மை உள்ளே உட்கார வைத்து பிளேடு போட மாட்டார்கள். ஆனால் அந்த மூணு வில்லன்களாக வரும் பையன்களின் தமிழ்ஐ கேட்டால் ஐயோ வெரி சாரி. அதே போல் கதாநாயகி சில இடங்களில் ரசிக்க வைக்கிறார் பல இடங்களில் கொட்டாவி வர வைக்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மேற்கித்தியே இசை ஆதலால் C சென்டர் ரசிகர்களை கவரவில்லை. ஆனா இந்த படம் போன வாரம் நான் தோரணை படம் பார்த்ததற்கு எவ்வளவோ மேல் என்று நான் நினைக்கிறேன். நான் முதலில் கூறியது போல் ஏன் இந்த மாதிரி படங்களை வரவேற்க வேண்டும்? ஏன் என்றால் அப்பத்தான் சர்வம்,தோரணை போன்ற படங்கள் வருவது குறையும்,இல்லன இந்த வருஷம் இன்னும் பத்து படங்கள் தோரணை மாதிரி வந்தாலும் வரும்.

படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கியதோடு படம் முடிந்தது என்று நினைத்தால், தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..கடைசியாக சஞ்சீவ் பேசும் வசனம் சூப்பர்.குளிர்100 டிகிரி படத்தை மொக்கைன்னு சொல்ல முடியாது, சுமார் தாரளமாக சொல்லலாம்.ஏன்டா சுமாரான படத்துக்கே இந்த பில்ட் அப்ஆனு நீங்க கேக்கலாம், போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.

இப்படிக்கு

ஜெட்லி.











ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)



இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....

டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.

ஐடியா நெ.1:
----------------

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.


# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************

@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.


ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------

பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

---------------------

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

***********

ஜெட்லி பஞ்ச்:

# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.

உங்கள்

ஜெட்லி.

Tuesday, June 2, 2009

ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்.


நன்றி : நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்.

"ஆஸ்திரேலியாவில் படித்து வரும் நம் இந்திய மாணவர்களின் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் வருந்தம் அளிக்கிறது" - மன்மோகன் சிங்க்.

இந்த மாதிரி ஒரு பேட்டியை நானோ அல்லது மற்றொரு பதிவுலக நண்பரோ கூறியிருந்தால் அது ஏற்கத் தக்கது, ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?? பிரதமர் Diplomacy Maintain பண்றாருனு நீங்க சொல்லலாம், உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது முதல் தாக்குதலா?? இந்த மாதிரி சில மாதங்களுக்குள் எத்தனை முறை நடந்துள்ளது?? அது சரி தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பொழுதும், மும்பை தாக்குதல் பொழுதும் கூட கீறல் விழுந்த ரெகார்ட் போல "இதை வண்மையாக கண்டிக்கிறேன், இனியும் இது போன்ற ஒரு தாக்குதலை இந்தியா பொறுமையாக ஏற்றுக் கொள்ளாது!!!!". விளைவு இன்று திரு.கசாப் சொல்றான் "நான் எந்த கொலையும் பண்ணல நீங்க பொய் சொல்றீங்க".

சரி அவரை விடுங்க நல்ல மனுஷன் பாவம் என்ன பண்ணுவாரு, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 93,000 சொச்சம் இந்தியா மாணவர்கள் படிக்கின்றனர் அதில் மெல்பர்ன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 பேர். ஒரு ஆண்டுக்கு இவர்களால் அந்த நாட்டுக்கு வரும் வருமானம் 4 Billion Dollars (ஆத்தாடி!!). வருமானம் மொத்தத்தையும் வாங்கி ஜோபிகுள்ள உட்டுகறாங்க ஆனா நம்மள புடிக்காதாம். அதை அந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இந்த சம்பவம் (Shravan Attack) நடந்து பத்து நாட்களுக்கு விஷயம் அந்த அரசாங்கத்தால் மூடி மறைக்கப் பட்டுள்ளது, மெல்பர்னில் வசிக்கும் என் நண்பர் பாலசந்தர் அவர்களுக்கே இந்த செய்தி TimesofIndia செய்தி வந்த பிறகு தான் தெரியுமாம். நேற்று கூட ஹைதராபாதை சேர்ந்த ஒரு நபர் தாக்க பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கூட அவர்கள் எவ்வளவு மூர்க்கமாக தரம்கெட்ட விமர்சனங்கள் கூறுவர் என்பதை நீங்கள் நன்று அறிவீர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பே இப்படி நடப்பவர்கள் ஆளில்லா இடங்களில் என்னவெல்லாம் செய்வர்??

நாம் செய்ய வேண்டியது என்ன??

அரசாங்கம் : நமது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் "ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை, அதனால் அங்கு படிக்கவும் சுற்றுலா செல்லவும் உகந்த சூழல் வரும் வரை யாரும் அங்கு செல்ல வேண்டாம்" இது அந்த அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் , இப்படி ஒரு எச்சரிக்கை வந்தால் அங்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். மற்ற நாடுகள் முன் இது ஒரு அவமானமாகும்.

காமன்வெல்த் அமைப்பு மூலமாக நம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். Diplomatic Tension குடுக்கலாம்.

கிரிக்கெட் : முதலில் IPL இல் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆட்டக்காரர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் இதை லலித் மோடி கண்டிப்பா செய்ய மாட்டாரு. அவருக்கு நாட்டை விட பணம் தான் பெருசு. நீங்கள் கூறலாம் விளையாட்டு நட்பை வளர்க்கும் அதனால் இது சரியான வழி இல்லை என்று. நான் கேட்கிறேன், எப்பொழுதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் பொழுது நீங்கள் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டா?? இல்லை மற்ற நாடுகளை கூட எடுத்துக்கோங்க. சரி அப்படியே வச்சுக்கலாம், ஏன் பாகிஸ்தான் போய் விளையாடல?? போக வேண்டியது தான?? ஏன் இப்ப தென் ஆப்ரிக்கா போனீங்க?? உங்க உயிரு தான் உயிரா?? அப்பா மதவங்களுது என்ன .........??

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் : குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும், தற்காப்புக்காக Pepper Spray எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். "Don't be Offensive, be Defensive" இது தான் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய யுக்தி. நாம் ஒன்னும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கு தான் நம் தயவு தேவை நமக்கு இல்லை.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

இதைப்பற்றி அதிக பதிவுகள் வராதது எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது!!!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி அவர்களின் வெறியை அறிந்துகொள்ளவும்.
http://www.news.com.au/heraldsun/comments/0,22023,25565946-2862,00.html


நன்றி
சித்து.

Monday, June 1, 2009

தோரணை என்ற அதிரடி ஏவுகணை.


நேற்று நண்பர்களுடன் தோரணை படத்துக்கு போனேன் அண்ணே, நம்ப ஜெட்லி அண்ணாச்சி ஏற்கனவே தெளிவா சொல்லிபுட்டாரு "வேண்டாம் வலிக்குது, அழுதுடுவேன்னு" ஆனாலும் நம்ம பய சைதன்யா ரொம்ப பாசமா Advance Booking பண்ணிட்டேன் மாப்ள வா போகலாம்னு சொல்லிட்டான். என்ன பண்றது பாசத்துக்கு கட்டு பட்டவிங்க நாம அதனால சொந்த செலவுல சூனியம் வச்சுக்க கெளம்பிட்டோம்., எப்ப?? 06:45 படத்துக்கு 07:15 மணிக்கு தான் போனோம். பொம்பள பிள்ளைங்க கூட வேகமா கெலம்பிடுக ஆனா நம்ப பயலுக சும்மா "அவிங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா வந்தானுங்க". அதனால எங்களுக்கு Opening Scene-laye அண்ணன் விஷால் ராமாவதாரம் தான், எதோ கொஞ்சம் காமெடி என்ற பேர்ல படம் நகர்ந்தது. இருந்தாலும் அந்த பொண்ணு ஆர்த்திய இந்த அளவுக்கு அசிங்கப் படுத்த கூடாது.

சந்தானம் "பரவை" முனியம்மா நகைச்சுவை காட்சி தாங்க முடியலடா சாமி. விஷால் கொஞ்சமா குறுந் தாடியுடன் வருகிறார் அது அவர் ஸ்டைல் என்று நினைத்து விட்டார் போல, ஏங்க உங்க யூனிட்ல மானிடர் மற்றும் கண்ணாடி இல்லையா?? சகிக்கவே இல்லை. நமக்கு எது வருமோ அத செய்ய வேண்டியது தான ஏன் இப்படி?? படத்தின் Costume Designer-kku ஏதும் பாக்கியா?? உங்கள இந்தளவுக்கு அசிங்கப் படுத்தி இருக்காரு?? மஞ்ச கலர் சிங்குச்சா பச்ச கலர் சிங்குச்சா என்று உங்கள வச்சி காமெடி பண்ணி இருக்காரு, ஒரு வேலை நீங்க இந்த படத்துல காமெடி ட்ரை பண்ண போறேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ??

அடுத்தது நம்ம பிரகாஷ் ராஜ் அண்ணாச்சி, உங்க கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும், முதல்ல மணி ரத்னம் ஸ்டைல்ல "ஏன் இப்படி??" அடுத்தது விவேக் ஸ்டைல்ல "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்". சும்மா படம் முழுவது ஒரு கருப்பு சட்டைய போட்டுட்டு கருப்பு கார்ல போய் காச்சு மூச்சுன்னு கத்துனா பெரிய தாதாவா? எனக்கு முந்தன நாள் பார்த்த சுள்ளான் படம் தான் ஞாபகம் வந்தது. சார் வேண்டாம் போதும் விட்டுடுங்க நீங்க ஒரு Range-kku போய்ட்டீங்க உங்களுக்கு இது வேண்டாம், இதை செய்ய நிறைய பேர் இருக்காங்க.

எல்லோரையும் போல் நானும் கிஷோர்-டம் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால் அவர் "Better Luck Next Time" என்று கூறி விட்டார். எம்.எஸ். பாஸ்கர் நல்ல கெட்-அப் மற்றும் டைமிங் காமெடி சூப்பர். ஆமா ஏன் படம் நெடுக அனைவரும் சும்மா தோரணை தோரனைனு கத்திக்கிட்டே இருந்தாங்க?? ஒரு வேலை அவனுங்களே படத்தோட பெயர் மறக்க கூடதுனோ??

அடுத்தது பாடல்கள், மணி ஷர்மா அண்ணாச்சி மற்றும் பாடலாசிரியர்கள் அண்ணாச்சிகள் அனைவருக்கும் - படத்தில் உள்ள எல்லா பாட்டுமே "துப்பட்டா துப்பட்டா உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா....." இதை விட இரு படி சுமாராக தான் இருக்கிறது அணைத்து பாடல்களும். ஒரு பாட்டின் ஒரு வார்த்தை கூட எனக்கு நினைவு வரவில்லை.

இவ்வளவு சொல்லியபின் கூட படத்தின் நாயகி ஸ்ரேயா சரண் பற்றி கூறவில்லை என்றால் நீங்கள் எனக்கு ஓட்டு போடாமலே போய்விடுவீங்கள் அதனால் அவருக்கு ஒரு தனி பத்தியே போடுறேன். என்னை பொறுத்த வரையில் படத்தின் ஒரே ஆறுதல் இவர் தான், படக் காட்சிகளில் அல்ல பாடல் காட்சிகளில் தான். இதை உணர்ந்து தான் இயக்குனர் கிளைமாக்ஸ் நேரத்தில் கூட ஒரு பாட்டு வைத்து விட்டார். பாடல் காட்சிகளில் ஒலி இல்லாமல் ஒளி மட்டும் இருந்தால் ரொம்ப ஆறுதலாக இருக்கும். தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமையும் 'காட்டி இருக்கிறார்'. வாங்கிய கூலிக்கு ஒழுங்காக வேலை செய்திருப்பது இவர் ஒருவரே.

படத்தில் குறிப்பிட்டு கலாய்க்க வேண்டியது ஸ்டண்ட் மாஸ்டர் stun சிவா. ஒரே எத்து தான் அம்புட்டு பயலும் வானத்துல பறக்குரானுங்க, சும்மா விஷால் மட்டும் வடிவேல் மாதிரி "எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு". இதுக்கு ஒன்னு பண்ணிருக்கலாம், அவரு அப்படியே வந்து நம்மையும் ஒரு எத்து விட்ருக்கலாம் அப்படியே நிம்மதியா திரை அரங்கை விட்டு வெளிய போய் விழுந்திருக்கலாம்.

இப் படத்தின் தயாரிப்பாளர்கள் விக்ரம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தம்பியை வைத்து நீங்கள் அழகு!!!!!!!! பார்க்கலாம் அதற்காக ஒரு படம் கூட எடுக்கலாம் உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதையே ஒரு Handycam வைத்து நீங்கள் எடுத்து குடும்பமாக நீங்கள் பார்த்திருந்தால் எங்கள் பணமும் உங்கள் பணமும் மிச்சம் ஆகி இருக்கும்.

இயக்குனர் சபா ஐயப்பனை அந்த ஐயப்பன் தான் காப்பாத்த வேண்டும். விஷால் அண்ணே உங்க வீட்டு முகவரிய குடுங்க நான் ஒரு சில நல்ல படங்களின் DVD அனுப்பி வைக்கிறேன் பார்த்து விட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.

இப்ப எனக்கு நீங்க கேக்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன், "இவ்வளவு நொட்டி சொல்றியே பிறகு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு வச்ச??", நானு நேத்து ராத்திரி பூரா எப்படி எப்படியோ படுத்து யோசிச்சி பாத்தேங்க எல்லா பேரலையும் மத்த பதிவர்கள் இந்த படத்த கலாய்ச்சுட்டாங்க அதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேனு வச்சேன்.

சரி இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, இந்த விமர்சனம் தோரணை படம் மாதிரி ரொம்ப மொக்கையா இல்லாம ஏதோ பரவா இல்லாம இருந்தா ஒரு ஓட்டையும் போட்டுட்டு ஒரு பின்னூட்டமும் போடுங்க.

நன்றி
சித்து.

சுய'இன்பம்' காண்பது தவறா?

சுய 'இன்பம்' காண்பது தவறா?

இந்த கேள்வியை நான் சிவராஜ் சித்த வைத்தியர் கிட்ட கேட்டு இருந்தா அவர் அதை கண்டிப்பா தவறு என்று தான் சொல்வார். அவரின் டி.வி. நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அதை தவறு என்று தான் சொல்வார்கள்.ஆனா நீங்க நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எனக்கு தெரியும்ங்க.இது வேற வகையான இன்பம்ங்க ,வாங்க நமக்கு எது இன்பம்னு தெரிஞ்சிக்கலாம்.


இன்பத்தை பல வகையாக பிரிக்கலாம்ங்க:

# சில பேருக்கு அலுவலக வேலை செய்வதே இன்பம்.

(உதாரணம்: கணிபொறியாளர், இவர் வேலை

செய்யலனாலும் செய்ய வச்சிருவாங்க)



# சில பேருக்கு அலுவலக வேலை செய்யாமல் இருப்பதே இன்பம்.


(இதுக்கெல்லாம் உதாரணம் தேவையா? கண்டிப்பா நம்ம வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்).



# சில பேருக்கு காதலி அல்லது காதலன் கூட இருக்கும் போது இன்பமா இருக்கும்.

(சும்மா இருக்கும் போது தாங்க!)



# சில பேருக்கு காதலியை அல்லது காதலனை மாற்றி கொண்டே இருப்பது இன்பமா இருக்கும்.

(இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க, ஈ.சி.ஆர் ரோட்ல வந்து ஒரு நாள் பாருங்க)


# சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).


# சில பேருக்கு ப்ளாக் படிப்பதில், எழுதவதில் இன்பம்.


# சில பேருக்கு பரபரப்பா ப்ளாக் டைட்டில் வைப்பதில் இன்பம்.

( ஹையோ! ஹையோ! என்ன பண்றது அப்பதானே வந்து பாக்குறாங்க)


# சில பேருக்கு சரக்கு அடித்து போதையில் பாதை மாறுவது இன்பம்.


# சில பேர் விதம் விதமா கைபேசியை மாற்றுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நண்பர் கௌரி மாசத்துக்கு இரண்டு கைபேசி மாற்றுவார்).

# பல பேருக்கு புகைப்பதில் , சில பேருக்கு இயலாதவர்களை பார்த்து நகைப்பதில் இன்பம்.

(நம்மால உதவி செய்ய முடியலன ஒதிங்கிரனும், அத உட்டுட்டு சிரிப்பாங்க).


# சில பேருக்கு புத்தகம் படிப்பதில் இன்பம், சில பேர் படித்த புத்தகத்தை பத்து தடவை படிப்பார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் சங்கர் தான் அந்த மனுஷன், உறுப்பினர்ன்னு தான் பேர் அய்யாவுக்கு ப்ளாக்க பாக்க கூட டைம் இல்ல)


# சில பேருக்கு அடுத்தவன் காலை வாரி விடுவதில் இன்பம்.

(பார்த்துங்க நீங்க வேலை செய்யுற இடத்திலேயே நிறைய பேர் இருப்பாங்க)


# சில பேர் பணத்தின் மூலம் நண்பர்களை பெருக்கி கொண்டு , உயிர் நட்பு என்று சொல்லி கொள்வதில் இன்பம்.



ச்சோ ச்சோ.... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார்த்திங்களா!
எப்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் ஒ,
அது மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமான
இன்பம்ங்க.


சில பேர் இருக்காங்க எப்பவும் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பாங்க,உதாரணத்துக்கு இப்போ ஒருத்தனுக்கு அலுவலக வேலை இன்பமாக இருக்கலாம் அதனால் அவன் அலுவலகமே கதி என்று இருப்பான், அவன் கிட்ட போய் நம்மாளு " டேய், ஏன்டா எப்பவும் வேலை வேலைன்னு ஆபீஸ்லயே இருக்க, உனக்கு என்ன தர போறாங்க" என்று மேதாவி தனமாக கேட்பதாய் எண்ணி கொள்வோரும் உண்டு.இது போல் பல உதாரணம் சொல்லலாம்.


அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடிக்கலனா விட்டுருங்க அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் இன்பத்தில் மூக்கை நுழைப்பது நியாயம் இல்லாத ஒரு ஈன செயல். உங்களால் அடுத்தவனுக்கு இன்பம் தான் கொடுக்க முடியலை தயவு செய்து துன்பத்தை கொடுக்காதிங்க.


உங்கள்
ஜெட்லி