Sunday, May 10, 2009

சந்திரபாபு, இவரை மாதிரி வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை.


சந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் என்னை சிறு வயதிலிருந்து ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. நான் சிறு வயதில் இருந்து படுக்கைக்கு போகும் போது அவரின் பாடல்களை கேட்டு கொண்டே தூங்குவேன்,அவரின் பாட்டு எனக்கு தாலாட்டு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.

நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(எனக்கு எப்படி வீடியோவை பதிவு ஏற்றுவது என்று தெரியவில்லை.
அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)




**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,

சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...

"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு.
"நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .
சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"

"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974
ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.........

Friday, May 8, 2009

நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி

நியூட்டனின் 3ஆம் சதி

எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.





சதிகள்:

1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.

2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.

3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.

4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.

*********************************

சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:

நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?

நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?

(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)

*************************************

வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).





படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பா
தேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.



Saturday, May 2, 2009

பொடிமாஸ்.......

பொடிமாஸ்.......



அஜித் பேட்டி:

(ஆஞ்சநேயா படம் ரிலீஸ் ஆன டைம்)
(ஆன எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை ஒரு பதில் மட்டும் என் மனதில் ஆழமா பதிந்தது)


நிருபர்: நீங்கள் நடித்ததில் உங்களக்கு பிடித்த படம் எது?
அஜித்: நான் நடிச்ச படத்தில் பாதி படம் நான் பார்த்ததில்லை , என்னா எனக்கு டைம் கிடைக்கவில்லை.
நம்ம டச்:
நான் இந்த பேட்டியை படித்து விட்டு அன்று FDFS ஆஞ்சநேயா படம் சென்றேன், அப்புறம் அவர் ஏன் அவர் படத்த பாக்கரதில்லைனு எனக்கு புரிந்தது. அன்றிலிருந்து தல படம் நல்ல இருந்ததான் போய் பாக்கறதுன்னு முடிவு பண்ணேன். ஆதனால் நான் திருப்பதி, ஆழ்வார், ராஜா போன்ற கண்டத்தில் இருந்து தப்பித்தேன். ஆனாலும் பில்லா , ஏகன் போன்ற படங்களை FDFS சென்றேன். என்னா ஒரு ஈர்ப்பு அதான் தல.
********************************************************************************
பொது அறிவு கேள்வி:

பொது அறிவு கேள்வி:

டாக்டர் விஜயிம் நடிகை சங்கவியிம் எத்தனை படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்?

உங்கள் பொது அறிவை நிரூபிக்க பின்னூட்டத்தில் உங்கள் பதிலை தட்டுங்கள்.

சரியான விடை அனுப்புபவர்களுக்கு:

விஜய் நடித்த ஆதி மற்றும் குருவி படத்தின் DVD இலவசமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

(பி.கு: இதனால் உங்கள் வீட்டில் பிரச்னை வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.)


Friday, May 1, 2009

பயணங்களும் மனிதர்களும்

சற்றே பெரிய பதிவு தான் கொஞ்சம் பொறுமையுடன் படித்து தான் பாருங்களேன்.

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய சித்தரஞ்சன் பேசுகிறேன், முதல் முறையாக என்னுடைய ஒரு நாள் பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பயணங்கள் என்றைக்குமே எனக்கு சுகமானது தான் ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு இனிய சூழலில் அதிகம் வருத்திக் கொள்ளாமல் சுகமாக பயணம் செய்பவன் நான். ஆனால் நேற்றைய பயணம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை காட்டியது, உலகம் எவ்வளவு அழகானது என்பதை காட்டியது, இந்த அழகை இவ்வளவு வருடங்கள் காணாமல் குருடாய் இருந்ததை எண்ணி மிகவும் வேதனை கொள்கிறேன்.



நான் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தில் பேருந்தில் பிரயாணம் செய்வேன், அந்த வழித்தடம் எப்பொழுதும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வந்து கொண்டே இருக்கும் அதனால் அனேகமாக நான் ஏறியவுடன் அமர இருக்கை கிடைக்கும். உடனே காதில் Earphones மாட்டிக் கொண்டு ஏதாவது புத்தகம் படித்தபடியே எனது 45 KM தூர பயணத்தை நிறைவு செய்வேன் அல்லது அவர்கள் ஒளிபரப்பும் ஏதாவது மொக்கை படத்தை (நான் பார்த்தவரையில் நூற்றுக்கு 95% டாக்டர் அவர்களின் படத்தை தான் போட்டு மக்களை கொல்வர், ஏன் இந்த கொலைவெறியோ?????) பார்த்துக் கொண்டே செல்வேன். அதாவது என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பிரயாணம் செய்வேன்.

ஆனால் நேற்று நல்ல முகூர்த்தம் என்பதால் அந்த ஊரெங்கும் கல்யானமயம் அதனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் பேருந்துகளில் அதற்கு மேல் நெரிசல், நேரம் என்னை துரத்திக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி தள்ளாடிக் கொண்டு வந்த அந்த அரசுப் பேருந்தில் ஏறினேன், படிக்கட்டில் ஒரு கால் மட்டும் வைக்க தான் இடம் இருந்தது அதாவது ஒரு கால் மேல் இன்னொரு கால் வைத்து நின்று கொண்டிருந்தேன் (கல்லூரி படிக்கும் பொழுது குரங்கு போல் தொத்திக் கொண்டு சென்றது, அதற்குப் பிறகு இப்பொழுது தான்) நல்ல வேலை கதவு இருந்ததால் சற்றே ஆறுதல். தொடர்ந்து ஐந்து ஊர்களில் பேருந்து நிற்கவே இல்லை அவ்வளவு கூட்டம், சரி என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் நம்ம குருவி, யப்பா முடியலடா சாமி காமெடி என்ற பெயரில் அவர்கள் பண்ணும் தொல்லை பிறகு ஒரு காட்சியில் அவர் லிஃப்ட் ஒன்றில் மாடிக் கொள்கிறார் கடைசி மாடியில் இருந்து அந்த லிஃப்ட் அறுந்து கீழே விழுகிறது என்னடாவென்று பார்த்தால் அப்படியும் குருவிக்கு ஒன்னும் ஆகவில்லை, அடப் போங்கடா அவனவன் தொங்கிட்டு இருக்கான் இது வேற............

சரியென்று இந்த கன்றாவியெல்லாம் பார்க்கவேண்டாம் என்று வெளியில் என்னுடைய பார்வையை செலுத்தினேன், பருவ மங்கையர் காதில் அணிந்திருக்கும் லோலாக்கு போல பச்சை, இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில், மஞ்சள் ஆகிய நிறங்களில் மாமரங்களில் உள்ள மாங்கனிகள் குலுங்குவது, புகைப் படம் எடுக்க உயர வரிசையில் நிற்பது போல் நான்கு பனை மரங்கள், நடு நடுவே சிறிய குன்றுகள், கத்தாளை செடிகள், ஒரு அடியில் தொடங்கி நடுவில் இரண்டாக பிரிந்து வளர்ந்த தென்னை மரம், சில மைல்களுக்கு ஒன்றாக ஒரு செல்போன் கோபுரம், இடையிடையே சிறு சிறு கிராமங்கள் இளநரையை போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டின. கீழே குனிந்து பார்த்தால் சாலை என்னவோ நீர் போல இருந்தது, இப்படிப்பட்ட ஒரு நிலப் பரப்பில் நான் சென்ற பேருந்து உறுமியவாறே அமைதியை கிழித்துக் கொண்டு சென்றது. நம்மைச் சுற்றி இருக்கும் இடம் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறது அதை பார்க்கும் நம் கண்கள் தான் வேறுபடுகின்றன, இந்த உன்னதமான உண்மையை நான் புரிந்து கொண்டேன். விவசாயம் செய்ய இயலாத செம்மண் நிலம் தான் வழி நெடுக இருந்தாலும் அந்த நிலப் பரப்பு ஏனோ என் கண்களுக்கு விருந்தாகத் தான் இருந்தது. அந்த பிரயாணத்தின் ஒரு கரும் புள்ளியாக ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருந்தது, நான்கு நண்பர்கள் அதில் ஒருவர் நல்ல போதையில் இருந்தார், அவர் தனது நண்பர்களுடன் பேசிய உரையாடல்களை இங்கு எழுத முடியாது அவ்வளவு தரம் தாழ்ந்தவை மற்ற மூன்று நபர்களும் தலையை தூக்க முடியாமல் வெட்கினர்.

பிறகு அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு ரயில் நிலையம் வந்தேன்,ஒரு சரக்கு ரயில் உள்ளே நுழைந்தது, அப்பப்பா எவ்வளவு விதமான ஒலிகளை தன்னுடன் இழுத்து வந்தது, கிரீச், தடக் தடக் போன்று ஒவ்வொரு பெட்டியும் என்னை கடந்து சென்ற பொழுது ஏதோ காணாததை கண்டவன் போலவும் கேட்காததை கேட்டவன் போலவும் நின்று கொண்டிருந்தேன், ஒரு வழியாக அது நின்றவுடன் அங்கு நிலவிய அமைதி?? அது தான் மயான அமைதியோ??. அங்கும் நான் கண்ட காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு அந்நிய நாட்டுக்கு சென்ற மாதிரி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். ஒரு மழைத் தொடர் அதன் அடிவாரத்தில் இந்த ரயில் நிலையம், சூரியனின் கதிர்களை மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைக்க முற்பட்டதால் அந்த மலைப்பரப்பில் சில இடங்களில் பொன் நிறமாகவும் சில இடங்களில் இருளாகவும் காட்சி அளித்தது. குரங்குகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை, அப்பொழுது தான் வந்து சென்ற காகிநாடா எக்ஸ்பிரஸ் வண்டியில் இருந்த மக்கள் வீசிச் சென்ற ஆரஞ்சு பல தோல், ஆப்பில் ஜூஸ் டப்பாக்கள், உணவு பொட்டலங்கள் இன்னும் என்னன்ன குப்பை போட முடியுமோ அவ்வளவும் அந்த இடத்தில் கிடந்தது. இவற்றை அந்த குரங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன, காட்டில் நிஜ பழங்களை தின்று கொண்டிருந்த வானரப் படை இந்த ஜூஸ் டப்பாகளை பிய்த்து அந்த ஜூஸ் நக்குவதை பார்க்கும் பொழுது நாம் அவைகளுக்கு செய்யும் அநீதியை எண்ணி வெட்கினேன்.

இந்த இடத்தில் நான் ரயில் பயணிகள் மீது கோபம் கொள்கிறேன், இப்பொழுதெல்லாம் பகல் ரயில்களில் கண்டிப்பாக கதவருகே ஒரு குப்பை கூடை வைத்திருக்கின்றனர் அதே போல் ரயில் நிலையங்களிலும் நிறைய இடங்களில் குப்பை கூடைகள் இருக்கிறது உங்களுக்கு அதில் போடுவதில் அவ்வளவு சிரமமாக இருக்கிறதா?? ஒவ்வொரு ரயில் வந்து செல்லும் பொழுதும் அங்கே அந்த துப்புரவு தொழிலாளர்கள் அந்த குப்பையை சுத்தம் செய்ய படும் பாடு தான் எத்தனை?? பிறகு என் அருகில் ஒரு ஐந்து நபர் குழு வந்தது, அதில் இருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் சரி ஏதோ நண்பர்களுக்குள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பார்த்தால் தங்களின் சில்மிஷங்களை துவங்கினார். ஒரு பெண் வந்து கொண்டிருந்தார் இவர்கள் இருவரும் அந்த பெண் வரும் வழியில நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிறிய இடம் விட்டு நின்று அந்த பெண்ணையே வெறித்து பார்த்து இவர்களுக்குள் ஏதோ பேசினார் பாவம் அவர் மிகவும் பயந்து போனார், ஏன்டா நாய்களா உங்கள் வீட்டு பெண்களை யாராவ்து இவ்வாறு செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?? மனிதர்கள் பல நேரங்களில் ஆறாவது அறிவை பயன்படுத்துவதே இல்லை.

பிறகு அரை மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் ஏறி அமர்ந்தேன், எப்பொழுதுமே இந்த பிரயாணங்களில் நான் காணும் இந்த Vendor's எனப்படும் உணவு வகை விற்கும் நபர்கள் ஒரு நாளைக்கு விடியற் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு அந்த ரயில் கோயம்புத்தூர் அல்லது பெங்களூரு சென்று இரவு சென்னை திரும்பும் வரை அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக எத்தனை முறை தான் செல்வரோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ரயிலில் நடை பயணம் தான்.




பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதாவிலாசம் புத்தகம் படிக்க எடுத்தேன், அதில் சரியாக "நிலா பார்த்தல்" கதை வந்தது, நான் காலையில் என்ன ஒரு அனுபவத்தை பெற்றேனோ அதே போல் ஆசிரியர் இரவில் நிலவை வைத்து பெற்றுள்ளார். மிக அருமையாக இருந்தது, அதுவும் உற்சாகமாக இருந்தது. அப்பொழுது நான் சிறுவனாக இருக்கையில் ரிக்ஷாவில் செல்கையில் வானத்தில் அந்த நிலவை பார்த்து எத்தனையோ நாட்கள் ஆனந்தம் அடைந்திருக்கிறேன் அதை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் இன்றைய சிறுவர்கள் பொழுதுக்கும் TV கணினி என்று நேரத்தை வீனடிக்கிறனர். இப்படி நான் நினைவுகளில் மூழ்கியிருக்கும் பொழுது ஒரு சம்பவம் என் நிம்மதியை கெடுத்தது.

நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு 38-40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார் அவரது இரு சிறுவயது (ஒருவர் 8 மற்றொருவர் 5) பெண் குழைந்தைகள் அதற்கு முன் இருக்கையில் அமர்திருந்தனர். அந்த பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் அவர் அணிந்திருந்த உடையை பார்க்கும் பொழுது அவர் ஒரு நவநாகரீக மங்கை என்று புரிந்து கொண்டேன். (ஆமாம் அதென்ன பாண்ட் சட்டை போட்டால் நவநாகரீகமா? அப்ப சேலைக் கட்டினா??? எவன்யா இந்த வார்த்தைய கண்டுபிடிச்சான்??) இப்படி ஒரு கோபம் எனக்கு அந்த பெண்ணின் நடவடிக்கையால் ஏற்பட்டது, தன் பௌர்ணமி நிலவு போன்ற முகமும் ஒளி பொருந்திய கண்களையும் ஓட்டை பல்லு சிரிப்புடன் விளங்கிய அந்த சிறு குழந்தையை அவர் படுத்திய கொடுமையில் எனக்கு மட்டுமல்ல அவரை சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் பளார் என்று ஒரு அரை விடனும் போல் தான் இருந்தது. குழந்தை சிரிக்காதா அதை கானமாட்டோமா என்று அனைவரும் ஏங்குவர் ஆனால் இந்த அம்மணியோ அந்த குழந்தை சிரிக்கின்றது என்று சதா அதை போட்டு திட்டியும் அடித்தும் துன்புறுத்தினார், அந்த குழந்தை சிரிப்பது இவருக்கு மானம் போகிறதாம் அதனால் நல்வழிப் படுத்துகிறாராம், உன்னை தானம்மா நல்வழிப் படுத்த வேண்டும். வாழ்நாள் பூராவும் அந்த குழந்தை படப்போகும் இன்னல்களை நினைத்து என் உள்ளம் கனத்தது.

இதைக் காண முடியாதவனாக நான் இருக்கையை விட்டு வந்து கதவருகே நின்று கொண்டேன், Walkmanil பாட்டு கேட்போமென்று போட்டேன். முதலில் சூர்யா சமீராவுடன் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமலை......." பட்டை அவர்களுடன் சேர்ந்து பாடியவாறே தலையசைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை......" என்று சூர்யாவுடன் அழுதுகொண்டிருந்தேன். ஒரு நொடி இன்பம் மறு நொடி சோகம் என்னடா வாழ்கை இது என்று நொந்தவாறே அன்றைய நிகழ்வுகள் மனிதர்களை திரும்பிப் பார்த்தேன், வந்து சேர்ந்தது க்ரிஷ் குரலில் "நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு......." எவ்வளவு சரியான வரிகள். இவ்வாறாக ஒரு கலவையான நினைவுகளுடன் இனிதே வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த பதிவை பற்றிய உங்கள் பொன்னான இடுக்கைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். இன்னொரு பயணத்தில் சந்திப்போம். நன்றி.

பசங்க விமர்சனம்

பசங்க விமர்சனம் தமிழ் திரையுலகில் அஞ்சலிக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து குழந்தைகளை மையப்படுத்தி வந்துள்ள படம் பசங்க. முதலில் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்ததற்கு தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்கும் ஒரு சபாஷ் போடலாம். படத்தில் நடித்த அனைத்து
குழந்தை நட்சத்திரங்களும் மிகவும் இயல்பாக தங்கள் நடிப்பை வெளிபடித்தியுள்ளனர், முக்கியமா அந்த புஜ்ஜி ஆக வரும் சின்ன பையன் செய்யும் குறும்புதனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன அவர் அடிக்கடி கூறும் வசனம் "எப்புடி" சூப்பர்ஒ சூப்பர்.

நான் படத்தின் PROMOS டி.வி.யில் பார்த்த உடன் என்னடா திரும்பவும் ஒரு வன்முறை படமா என்று நினைத்தேன் ஆனால் ஒரு வன்முறை கூட இல்லை. இந்த படம் கண்டிப்பாக மசாலா படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை படத்தில் ஒரு பைட் கூட இல்லை எல்லாம் சின்ன பசங்க சண்டைதான். ஆனா அந்த சண்டை காட்சிக்கே ரொம்ப பில்டப் குடுக்குறாங்க.



புதிதாக பள்ளிக்கு வரும் அன்பரசன் அங்கு ஏற்கனவே பள்ளியில் படிக்கும் ஜீவா இருவருக்கும் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகிறது. அதே பள்ளியில் ஜீவாவின் அப்பாவும் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஜீவா வால்தனம் மிக்கவன் ஆனால் அறிவு நல்ல புத்திசாலி, ஜீவா கடந்த ஐந்து வருடங்களாக கிளாஸ் லீடர் பதவியில் இருப்பவர் ஆனால் அன்பரசன் வந்த உடன் அந்த பதவியை பெறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து அடிக்கடி அடித்து கொள்கிறார்கள். அன்பரசன் சித்தப்பாக்கும் ஜீவாவின் அக்காவுக்கும் காதல் மலர்கிறது, அப்புறம் நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் சண்டை வருகிறது இதையெல்லாம் மீறி அவர்கள் இருவரும் நட்பனார்களா? என்பதே கதை.

படம் ஆரம்பத்தில் விமல்(சித்தப்பா) பேர் முதலில் போட்டாலும் அவுருக்கு பெருசா ஒண்ணும் வேலையில்லை. வேகாவும் விமலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. ஜீவாவின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ் ஆசிரியராக நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ஜீவா கூட வரும் பக்கட(பகோடா இல்லை), குட்டிமணி இருவரும் நம்மை சிரிக்கவைகிறார்கள். அதுவும் அந்த பக்கட பையன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் அனைவரும் தங்கள்
நடிப்பை மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார், எப்படின்ன ஒரு REALITY இருக்கு.

படத்தின் முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்கிறது, சின்ன பசங்க படம்னாலும் பில்டப்க்கு குறைவில்லை. முதல் பாதியில் நம்மை ரொம்பவே சோதிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் வாழ்கைக்கான அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் சில அறிவுரைகள் நம்மை சலிப்படைய செய்கின்றன. இந்த படத்தை கண்டிப்பாக
பசங்க பாக்கறாங்களோ இல்லையோ ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.இந்த படம் கண்டிப்பாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு தரமான படம். இந்த மாதிரி புது முயற்சிகள் வரவேற்க படவேண்டும்... மக்கள் வரவேற்பார்களா?