Tuesday, April 14, 2009

Lasik Laser அறுவை சிகிச்சை



நண்பர்களே வணக்கம், இந்த பதிவு என்னை போன்று மூக்குகண்ணாடி (spectacles) மற்றும் காண்டாக்ட் லென்ஸ் (contact lens) அனிந்து சிரமப்படும் அன்பர்களுக்காக. நான் கடந்த 14 வருடங்களாக இந்த கண்ணாடிய போட்டுட்டு பட்ட பாடு சொல்லி மாளாது, அப்பப்பா நிம்மதியா ஒரு கூலர்ஸ் போட்டுட்டு சீன் போட முடியல நீச்சல் அடிக்க முடியல (நமக்கு தான் கண்ணாடிய போடலைனா கண்ணு ஒரு எளவும் தெரியாதே). இப்போ இரண்டு வாரம் தான் ஒரு சுதந்திர பறவையை போல் இருக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருவோம், நான் இரண்டு வாரத்துக்கு முன்பு தான் இந்த அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை மேற்கொண்டேன். அப்பாடா இந்த மருத்துவ உலகம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று எண்ணி வாயடைந்து நிற்கிறேன். என்னோட இத்தனை வருட தொல்லையை வெறும் 8 நிமிடங்களுக்குள் மறைய செய்துவிட்டது. 

பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது.

நான் மேற்கொண்ட Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea)  ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.
 
முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள்.  நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.





தேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்

சரத்பாபு அவர்கள் இளம் தொழிலதிபர் ஆவார் இவர் பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றவர். இவர் புகழ் பெற்ற கல்லூரி மற்றும் ஆபீஸ்களில் கான்டீன் நடத்துகிறார் இவரிடம் பல பேர் பணிபுரிகிறார்கள். திரு.சரத்பாபு அவர்கள் நம் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர். இவரின் அம்மா இட்லி கடை நடத்தி தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். தற்போது வரும் தேர்தலில் சரத்பாபு அவர்கள் சுயட்சையாக தென்சென்னை பகுதியில் நிற்கிறார்.

தற்போதுள்ள இளைஞர்கள் அரசியலை சாக்கடை என்று ஒதுங்கும் நேரத்தில் சரத்பாபு ஒரு நம்பிக்கையான முடிவு எடுத்துள்ளார். சரத்பாபு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை தருமா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். சரத்பாபு வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.

Sunday, April 12, 2009

திரை அரங்கினில் சில இம்சைகள்

பொதுவாக நாம் ஏன் படத்துக்கு போறோம், ஒரு டைம் பாஸ்க்கு போவோம் இல்லன நண்பர்கள் அழைத்ததின் பேரில் செல்வோம். படம் ஓடற அந்த மூன்று மணி நேரம் எந்த பிரச்சனை இருந்தாலும் அதை மறந்து நாம் படத்தை ரசிக்க முக்கியமா போறோம். ஆனால் நாம திரை அரங்குக்கு சென்றால் படம் பார்க்க வருபவர்களை இம்சிக்க ஒரு கூட்டம் அலையுது. சில பேர் திரை அரங்கை லாட்ஜ்அக எண்ணுகிறார்கள் அவர்கள் தங்கள் வேலையை அமைதியாய் செய்தாலும் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தருகிறார்கள்.

சமீபத்தில் நானும் என் நண்பனும் சத்யம் சினிமாஸ்க்கு யாவரம் நலம் முதல் முதல் காட்சி சென்றோம். எங்களுக்கு மூன்று, நான்கு இருக்கைகள் ஒதுக்க பட்டன . எனக்கு பக்கத்தில் உள்ள ஒன்று , இரண்டு இருக்கைக்கு படம் ஆரம்பித்தும் ஆள் வரவில்லை. சுமார் முப்பது நிமிடங்கள் கழித்து ஒரு ஆணும் பெண்ணும் வந்தார்கள். படம் முதல் பாதி கொஞ்சம் வீறுவீறுபாய் சென்றது. படம் இடைவெளியில் நான் அவர்களை பார்த்தேன் "சத்யமா அவங்களுக்கு தமிழ் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை ". படம் தொடங்கியது இரண்டாம் பாதி திகில் உடன் சென்றது. சும்மா பக்கத்துல எதொச்சையாக திரும்பினால் அந்த வாலிபன் அவள் மேல் படுத்து இருக்குற மாதிரி இருந்தது... ஆஹா கைய போட்டுட்டு இருக்கான் போலன்னு பார்த்த அவன் வேற என்னமோ பண்றான்னு மட்டும் தெரியுது , இன்னும் உட்ட என்னவெல்லாம் செயவோன்களோ. இந்த செய்கை எனக்கு தொந்தராவாக இருந்தது. அப்புறம் படம் முடியறதுக்கு முப்பது நிமிடங்கள் முன்னதவே கிளம்பிடங்கா. அந்த வாலிபன் வந்த வேலை முடித்து விட்டு கிளம்பி விட்டான் என்று எனக்கு புரிந்தது.

இன்னொரு வகை தொந்தரவு தருபவர்கள் இருக்கிறார்கள், அது இருக்கை மாறும் பிரச்சனை. சில பேர் தன் மனைவி துணைவியோடு வருவார்கள் அவர்களக்கு ஒதுக்க பட்ட சீட் பல ஆண்கள் இருந்தால் தள்ளி உட்கார சொல்லி இம்சை அளிப்பார்கள். இப்பொது உள்ள நடைமுறையில் நமக்கு என்ன சீட் வேண்டுமோ நாம் கேட்டு பெற்று கொள்ளல்லாம் அதை விட்டு விட்டு நமக்கு தொந்தரவு தருவார்கள். கடைசியில் நான் சொல்வதெல்லாம் நீங்க கை போடுங்க வாய் போடுங்க அத காலியாக இருக்கும் மொக்கை படத்துக்கு போய் பண்ணுங்க தயவு செய்து நல்ல படத்துக்கு வந்து தொந்தரவு தராதிங்க.

இப்படிக்கு
உங்கள் ஜெட்லி

Wednesday, April 8, 2009

மன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி



தமிழ்ப் பேரரசு'
என்ற கட்சியை ஆரம்பிக்கிறார் நடிகர் மன்சூர் அலி கான்.


இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

ஈழதமிழர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் வரை நடை பயணம் நடத்தப்பட்டது. நானும் அதில் பங்கேற்றேன். இப்போது காங்கிரஸ் வாழ்க என்று விடுதலை சிறுத்தைகள் கூறிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள். மக்களை ஏமாற்றி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இலங்கை  தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், பாமகவுக்கும் முழு பொறுப்பு உண்டு.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நான் சில தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்கள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தார்கள். அவர்கள் ஊழல் காண்டாமிருகமாக மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை.

எவ்வித ஆதாயத்தை எதிர்ப் பாக்காமல் மக்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய 'தமிழ்ப் பேரரசு' என்ற அரசியல் கட்சியை இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்குவேன்.

வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன். திமுக, பாமக, தேமுதிக போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் 


நம் கமெண்ட்.: இவரே ஒரு பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சிறை சென்று வந்த தியாகி இவர் இலங்கையில் நடக்கும் கற்பழிப்பு கொடுமையை பற்றி பேசுகிறார். உண்மையான தமிழன் ஏமாற மாட்டன் அப்புறமா உங்களுக்கு இவ்வளவு தைரியம்?? இதில் கருத்து கணிப்பு நடத்தி மக்கள் எண்ணங்களை புரிந்து கொண்டாராம்!!! இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது....... தனி ஆளாக போட்டி இடுவதெல்லாம் சரி தான் உங்கள் சொந்த தொகுதியில் போட்டி இடுங்கள் அப்படியே உங்கள் ஓட்டை உங்களுக்கே போடுங்கள் இல்லையேல் ஒரு ஒட்டு கூட வாங்காமல் வரலாறு படைத்தது விடுவீர்கள். எனக்கு அந்த ஊழல் காண்டாமிருகம் மேட்டர் தான் நெம்ப பிடிச்சிருக்கு.

அழகிரி உயிருக்கு ஆபத்து..........














சென்னை: அழகிரியை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ தெரியாது. அவர் எந்தத் தியாகத்துக்கும் தயாராக உள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட், பார்வர்டு பிளாக், பாமக, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தேசிய லீக், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (எங்கே
ஆ.இ.ச.ம.கமற்றும் ஆ.இ.ந.ம.க.??)

இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரை:
நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள். அழகிரி; பாவம் (????) அந்தப் பிள்ளையைக் (பிள்ளையா???) கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?.அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா, பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!.அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்."இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' (இங்கே நல்ல காரியம் என்று எதை குறிப்பிகிறார் இவர் போன பிறகு மதுரை மக்களுக்கு ஏற்படும் நன்மையையா??) என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமங்கலத்தில் நடந்ததை நமது தலைவர் மறந்து விட்டார் போலும், மக்கள் மரப்பார்களோ?

மேலே உள்ள படத்தில் கலைஞர் மக்களை பார்த்து சிரிப்பதாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

நன்றி : தட்ஸ்தமிழ்.