ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.
கடந்த மாதம் டிஸ்கவர் புக் பேலஸ் சென்ற போது என் கண்களில்
ப்பட்டது "கம்போடியா - இந்திய தொன்மங்களை நோக்கி" என்ற
பயணகுறிப்பு புத்தகம்.ஆசிரியர் கானா பிரபா. இவரும் ஒரு
வலைப்பதிவாளர் என்று எனக்கு புத்தகம் வாங்கி படித்தபின்
தான் தெரிந்தது. வலைப்பதிவில் எழுதிய பயண அனுபவங்கள்
தான் இந்த புத்தகம்.எனக்கு பயணகுறிப்பு புத்தகங்களை படிக்க மிகவும் பிடிக்கும் காரணம் நாம தான் போவல, போனவங்க அனுபவத்தையாவது படிப்போம் என்று தான். இந்த புத்தகத்தை வாங்க இன்னொரு காரணமும் இருக்கு...அது ஏன் ஏன் ஏன்....
**************************
நான் முதுகலை பட்டம் படித்து?? கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவன் முதல் வருடத்தில் எனக்கு ஏதாவது பட்ட பெயர் வைத்தே ஆக வேண்டும் என்று சேலத்தில் இருந்தே சபதம் செய்து வந்திருப்பான் போல... அவன் வைத்த அந்த பட்ட பெயர் தான் கம்போடியா...அது ரொம்ப நீளமா இருக்குனு கம்போட்ஸ் என்று சில நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.
ஏன் மாமே இந்த பெயர் வச்ச... என்று கேட்டதற்கு நான் கம்போடியாவில் இருப்பவர்கள் போல் இருக்கிறேன் என்றான்.கம்போடியாகாரங்க எல்லாம் உன்னை மாதிரி தான் இருப்பாங்க,கம்போடியா எங்கோ ஆப்ரிக்காவில் இருக்கிறது என்று இன்னொரு நண்பனிடம் சொன்னதாய் நினைவு. நண்பன் அறிவாளி அவன் சொன்ன சரியாதான் இருக்கும் என்று அப்போது நினைத்தேன்.ஆனா இந்த பட்டபெயர்க்கு மட்டும் பெயர் சூட்டு விழாவே
எடுக்காம ஊரெல்லாம் பரவுது.
***********************
எனக்கும் இந்த புத்தகத்தை படிக்கும் வரை கம்போடியா எந்த
பக்கம் இருக்குனு கூட தெரியாது. புத்தகத்தை படிக்க ஆரம்பித்த
பின் தான் தெரிந்தது அது தாய்லாந்து மற்றும் வியட்நாம் அருகில்
இருக்கிறது என்று. கம்போடியா நாட்டுக்காரங்களும் தாய்லாந்து
மக்கள் போலேவே முக அமைப்பு உடையவர்கள் தான் என்பதை
என் நண்பர்களுக்கு இங்கு உரக்க சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு பெயர் வைத்த நண்பர் இப்போது தன் பெயரை பாதி தான் போட்டு கொல்கிறார் "னேஷ்" என்று..... !!நண்பர் பெயரின் முதல் ரெண்டு எழுத்தை தனியாக எழுதினால் வேறு அர்த்தம் வரும் என்பதால் ப்ரீயா விட்டுவிடுவோம்!!
இந்த புத்தகத்தை படித்த போது எனக்கும் கானா பிரபா அண்ணனுடன்
கம்போடியா சென்றது போன்று அனுபவம் கிடைத்தது. பல விஷயங்களை சுவாரிசியமாக சொல்லி இருந்தார். அங்கோர்வாட்
சிற்பங்கள், டுக் டுக் வண்டி, பன்டே கெடே ஆலயம், பாற்கடல் கடைந்த தேவர்கள் சிலை என்று புத்தகம் படித்த என்னால் மறக்க முடியாது. கம்போடியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற ஒரு புத்தகம் இந்த "கம்போடியா-இந்திய தொன்மங்களை தேடி".
>>>>>>>>>>>>>>>>>>
ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.
மறுபடியும் ஒரு அதிகாலை பயணம் இந்த தடவை ஸ்ரீபெரும்பத்தூர்
போவோம் என்று நானும் நண்பனும் காலை 5.30 மணிக்கு கிளம்பினோம். இந்த தடவையும் கோவில் நோக்கி தான் பயணம். என்னடா இவன் ஆன்மிக பழமா இருப்பான் போல என்று நீங்கள் நினைச்சா அது உங்க தப்பு. நமக்கு தேவை பயணம் அது கோவில்னு சொன்ன வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கும் அவ்வளவுதான். அப்படியே ஊர் சுத்தின மாதிரியும் ஆச்சி சாமியையும் பார்த்த மாதிரி ஆச்சி.இதை தான் ஒரு குவாட்டரில் ரெண்டு கட்டின்னு சாரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்னு சொல்றோம்.
பூந்தமல்லி தாண்டியவுடன் அந்த காலையில் ரோட்டின் மீடியனில்
மாடுகள் கூட்டம். அது எப்போ கிழே இறங்கும் என்று யாருக்கும்
தெரியாது...விபத்து நடக்காமல் இருந்தால் சரி என்று வண்டியை
மாடுகளை கவனித்தே ஒட்டி சென்றான் நண்பன்.
ஒரு மூடிய கல்லூரியின் முன்னாடி பிரமாண்ட செட் ஒன்று
போடப்பட்டிருந்தது...அப்படியே ஒரு அரண்மனையை கவுத்தி
போட்ட மாதிரி இருந்தது...எந்த படத்துக்கு அப்படின்னு தெரியல...
பக்கத்தில் ஒரு நரகம் போன்ற போன்ற செட் போட்டிருந்தார்கள்...
ஸ்ரீபெரும்பத்தூர் அடைந்தவுடன் ராமானுஜர் கோவிலுக்கு சென்று
அப்படியே வணங்கி விட்டு கோவிலை ஒரு ரவுண்ட் அடித்தோம்.
மிக பழமையான கோவில்...எனக்கு ஒரே குறை தான் சாயங்காலம்
வந்தா இங்கே புளியோதரை சூடா கிடைக்கும்..காலையிலே வந்து
அந்த தாத்தா விக்க மாட்டாரு போல...!!
அடுத்தது என்ன பசிக்க ஆரம்பிச்சுடிச்சு அதனால அப்படியே
ஹோட்டல் தேடுனோம் எதுவும் கிடைக்கில...ஆனா என்
கண்ணுல இது தான் சிக்கிச்சி,,,, சிவ சிவா...
பாருங்க எப்படி வளந்து இருக்குனு,,..ஹலோ நான் விஞ்ஞானத்தை
சொன்னேன்ங்க... டிஜிட்டல்ல அட்டு பிட்டு படத்தை காமிக்கிற
அளவுக்கு நம்ம நாடு முன்னேற்றம் அடைஞ்சுருக்கு...எவ்ளோ
பெருமையான விஷயம் இது...!!(அடுத்த தடவை சாயங்காலம்
போகும் போது டிஜிட்டல்ல ட்ரை பண்ணி பார்க்கணும்)
இருங்காட்டுகோட்டையில் காலை உணவு முடித்தோம்...
கல்தோசை, ரெண்டு இட்லி தான்.. நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பின் அந்த கடையில் ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. அது அந்த சின்ன பையன் சுடும் நைஸ் தோசையை சேதம் செய்யாமல் திருப்ப வேண்டும் என்பதே. மாஸ்டர்க்கும் பையனுக்கும் பத்து ரூபாய் பந்தயம். பையன் நிறைய எண்ணெய் ஊற்றினான்...ஜெயித்து விடுவான் என்று நினைத்தேன்..ஆனால்
கோட்டை விட்டுவிட்டான்....!!
செம்பரபாக்கம் ஏரியை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, அது அன்று தான் நிறைவேறியது. ஆனா அதை அடையும் ரோட் தான் பயங்கரமா இருந்தது.ஏரியின் அழகை ரசித்தவாறு வண்டியில் சென்றோம். செம சீனாக இருந்தது.அங்கே சிலர் மீன் விற்று கொண்டும் சிலர் ஒரு சின்ன துடுப்பில் ஏரியில் மீன் பிடித்து கொண்டும் இருந்தனர். இயற்கை அழகை ரசித்தப்படியே வீடு வந்து சேர்ந்தோம்....
அடுத்ததா வல்லக்கோட்டை போற பிளான் போட்டிருக்கோம்...
போயிட்டு வந்து பதிவு போடுறேன்...!! இந்த பதிவுக்கு உங்கள்
ஆதரவை எதிர்ப்பார்க்கும்....
ஜெட்லி...(சரவணா...)